முகப்பு வலைப்பதிவு பக்கம் 28

எக்காலமும் அவரை நம்புங்கள்

மே 27

“எக்காலமும் அவரை நம்புங்கள்.” சங் 62:8

எப்பொழுதும் தேவனை நம்பலாமென்று நமக்குத் தேவனே தைரியம் கொடுக்கிறது மட்டுமல்ல¸ எக்காலத்திலும் நம்முடைய நம்பிக்கைக்கு அவர் பாத்திரர்தான். இப்படி எப்போதும் அவரை நம்பச் சொல்லியும் நாம் அவரை எப்போதும் நம்பாமல் போகிறோம். நாம் அவரை நம்புவது மிக அவசியம். சிருஷ்டியானது நம்பாமல் இருக்கலாமோ? அவரைச் சார்ந்திருக்கிறோம் எப்பதற்கு அது அத்தாட்சியானதால் அந்த நம்பிக்கையைப்பெற முயற்சி செய்ய வேண்டும். வேலைக்காரன் எஜமானை நம்ப வேண்டும். சிநேகிதன் சிநேகிதனை நம்ப வேண்டும். பிள்ளை தகப்பனை நம்பவேண்டும். விசுவாசி தேவனை நம்ப வேண்டும். அவருடைய வார்த்தை உண்மையானதால் அதை நம்ப வேண்டும். இரட்சகர் செய்த கிரியை பூரணமானதால் அதை நம்ப வேண்டும். தெய்வ செயலை நம்புவது நியாயமானதே.

அவர்மேல் நாம் வைக்கும் நம்பிக்கையை ஒன்றும் கலைக்கக்கூடாது. அவுருடைய தன்மை அன்பு. அன்புகூற அவர் உடன்பட்டுள்ளார். அவர் பொக்கிஷம் குறையாதது. அவர் இரக்கம் என்றுமுள்ளது. ஆகையால் துக்கத்திலும்¸ சந்தோஷத்திலும்¸ அந்த காரத்திலும்¸ வெளிச்சத்திலும்¸ நிறைவிலும்¸ குறைவிலும்¸ சோதனையிலும்¸ அமைதியிலும் அவரை நாம் நம்புவோமாக. அவரை நம்பினால் பயங்களை ஜெயிப்போம். துன்பங்களைச் சகிப்போம். வேலையில் காரியசித்திப் பெறுவோம். கவலைகளை ஒழித்து சத்துருக்களை விழத்தாக்குவோம். நாம் அவரை நம்பும்படிக்குதான் தம்முடைய குணாதிசயங்களை வெளிப்படுத்தி¸ தம்முடைய வாக்கையருளியுள்ளார். நம்மீது கோபமாய் இரேன் என்று சொல்லி¸ தாம் மாறாதவர் என்று உறுதிமொழி சொல்லியிருக்கிறார். ஆகையால் என்றைக்கும் கர்த்தரை நம்புவோமாக.

எக்காலமும் கர்த்தாவே
உம்மையே நம்புவேன்
நீரே எனக்கு எல்லாம்
என்றும் உம்மில் மகிழுவேன்.

நேசம் மரணத்தைப்போல் வலிது

மே 26

“நேசம் மரணத்தைப்போல் வலிது.” உன். 8:6

மரணம் யாவரையும் சந்திக்கக் கூடியது. ஞானமுள்ளவனும்¸ பலசாலியும்¸ தைரியஸ்தனும்¸ பரிசுத்தன் யாவருமே மரணத்தின் வாசலைத் தாண்டியர்வகள். அது எல்லாரையும் கொன்று உலகத்தைப் பெரிய கல்லறையாக்கி விட்டர். அன்பும் மரணத்தைப்போல் வலியதுதான். இது சகலத்தையும் வென்று விடுகிறது. இயேசுவின் நேசமோ அனைத்திலும் பெரியது. இது மரணத்தை ஜெயித்துப் போட்டது. இயேசு நமது பேரிலும் அப்படிப்பட்ட அன்பை வைத்திருக்கிறார். நான் உங்களை நேசிக்கிறேன் என்கிறார். ஒருவன் தன் சிநேகிதனுக்காக தன் ஜீவனைக் கொடுக்கும் அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலும் இல்லை.

அவர் நமக்கு ஈந்த ஈவுகளாலும்¸ நம்மைச் சந்திக்க வந்தாலும்¸ நமக்காக அவர் விட்ட கண்ணீராலும்¸ அவர் செய்த கிரியையாலும் நமக்காக அவர் சகித்த துன்பங்களாலும்¸ அடைந்த மரணத்தினாலும்¸ நமக்காக அவர் கொண்ட வாஞ்சையினாலும்¸ எப்பொழுதும் நமக்காக அவர் செய்யும் வேண்டுதலினாலும் அவருடைய அன்பு எவ்வளவு வலமையுள்ளதென்று காண்பித்திருக்கிறார். அவருடைய அன்பு அனைத்து வருத்தங்களையும் மேற்கொண்டு¸ எல்லா விரோதங்களையும் ஜெயித்து¸ எல்லா சத்துருக்களையும் அழித்து¸ தெய்வீகத்துக்குரிய மகிமை நிறைந்த விளக்காகப் பிரகாசிக்கிறது. அவருடைய அன்பு அழிந்துப்போகாது. நம்முடைய அறிவுக்கு எட்டாதது. கிறிஸ்துவின் அன்பு இவ்வாறு ஆச்சரியமுடையதாயிருப்பினும்¸ வலிதும் மகிமையுள்ளதாயிருப்பினும்¸ அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமாயிருக்கிற நம்மீது மறவாமல் இருக்கிறதென்று நினைவோடு இந்த இராத்திரி படுக்கப்போவோமாக.

கர்த்தாவே ஏழை என்னையும்
எவ்வளவாய் நேசித்தீர்
என் இதயம்¸ அன்பு¸ ஜீவன்
யாவையும் அங்கீகரிப்பீர்.

நீங்கள் எல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்

மே 25

‘நீங்கள் எல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.” கலா. 3:28

கிறிஸ்தவர்கள் எல்லாரும் கிறிஸ்துவில் ஒன்றாய் இருக்கிறார்கள். தேவ பிள்ளைகளின் ஐக்கியத்திற்கு அவர்தான் மையம். நாம் எல்லாரும் அவரில் தெரிந்துக்கொள்ளப்பட்டோம். அவர் ஒருவரே நம் எல்லாருக்கும் தெய்வம். அவரோடு ஐக்கியப்பட்டு ஜீவனுள்ளவர்களாய் இருக்கிறோம். ஏனெனில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைத் தரித்துக் கொண்டோம். இனம்¸ வயது¸ அந்தஸ்து என்ற வேறுபாடுகளே இல்லை. எல்லாரும் வரப்போகிற அதே சிலாக்கியங்களை¸ இன்பங்களை¸ நன்மைகளைச் சுதந்தரிக்கப் போவதால் கிறிஸ்துவில் ஒன்றால் இருக்கிறோம். வயதிலே வித்தியாசம் இருந்தாலும் ஒரே குடும்பம்தான். பலவைத் தொழுவங்களிருந்தாலும் மந்தை ஒன்றுதான். வௌ;வேறு கற்களாக இருந்தாலும் கட்டப்படும் கட்டடம் ஒன்றுதான். பலவித ஆலயங்களும் அலுவல்களும் இருந்தாலும் ஒரெ சரீரம்தான். பல இடங்களில் சிதறிக்கிடந்தாலும் சபை ஒன்றுதான். இயேசு தம் சொந்த இரத்தத்தால் சம்பாதித்த ஒரே மணவாட்டிதான்.

ஆகவே நாம் எல்லாரும் கிறிஸ்துவுகள் ஒன்றாய் இருக்கிறது உண்மையானால்¸ சகோதரரைப்போல் ஒருவரை ஒருவர் நேசித்து சில வேளைகளிலாவது ஒன்று கூடி உணவருந்தி¸ உத்தம அன்பால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருக்க வேண்டும். சரீரத்தின் அவயவங்களைப்போல் ஒன்றுபட்டிருப்போம். எவ்விதத்திலும் வித்தியாசமி;ன்றி அனைத்திலுமே ஏக சிந்தையாய் இருக்க வேண்டும். இட வித்தியாசமானாலும்¸ காரிய போதனைகளினாலும் வேறு பட்டிருந்தாலும் கிறிஸ்துவுகள் அனைவரும் ஒன்றாய் இருக்க வேண்டும். நம்முடைய மேன்மையிலும்¸ நற்காரியங்களிலும் ஒருவரிலொருவர் சந்தோஷப்பட வேண்டும். அன்பர்களே¸ நாம் ஒவ்வொரு கிறிஸ்தவனையும்¸ கிறிஸ்துவிலிருக்கிறவனாக எண்ணி கிறிஸ்துவின் சரீரத்தின் அவயவமாகப் பாவித்து¸ அதற்கேற்றவாறு நடந்துகொள்ளுவோமாக.

கர்த்தாவே எங்கள் இதயத்தை
ஒன்றித்து வளர்ப்பியும்
உம்மைப்போல் இருப்போம்
அன்பில் வளருவோம்.

விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்

மே 24

“‘விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்.” கலா. 3:11

விசுவாசத்தினால்தான் அவர்கள் நீதிமான்களாகிறார்கள். பாவத்தைப்பற்றி உணர்வடைந்தவர்களானதால் தங்கள் பெலவீனத்தை உணர்ந்து¸ சுவிசேஷத்தை அறிந்து¸ கிறிஸ்துவின் கிரியைகளைப் பற்றி பிடித்து கொள்ளுகிறார்கள். அவரின் நீதி அவர்களுடையதானபடியால் எல்லா குற்றத்திற்கும் நீங்கலாகுகிறார்கள். நீதிமான்களாக்கப்பட்டு பிழைத்திருக்கிறார்கள். அதாவது ஆக்கினையினின்று விடுவிக்கப்பட்டு¸ சகல ஞான நன்மைகளுக்கும் உரியவர்களாகி சுயாதீனராய் நடக்கிறார்கள். விசுவாசத்தினால் அவர்கள் பிழைக்கிறார்கள். விசுவாசத்தினால் தங்கள் சத்துருக்களை மேற்கொள்ளுகிறார்கள். விசுவாசத்தினால் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுகிறார்கள். விசுவாசத்தினால் தேவனோடு சஞ்சரிக்கிறார்கள்.

தேவ குமாரன்மீதுள்ள விசுவாசத்தினாலேதான் அவர்கள் இவ்வுலகத்தில் ஜீவிக்கிறார்கள். அவர்கள் வேதத்தின் வார்த்தைகளைப் பற்றிப்பிடித்து அவருடைய கிரியையின்மேல் மட்டும் சாய்நது¸ அவர் சத்தியத்தின் பேரில் நம்பிக்கை வைத்து அவரின் நிறைவிலிருந்து தங்களுக்கு வேண்டியதெல்லாம் பெற்றுக்கொள்கிறார்கள். வருவாய்க்காக அல்ல¸ அன்பினால் ஊழியம் செய்கிறார்கள். கூலி வாங்கும் வேலைக்காரர்கள் போலல்லாமல் பிதாவின் வீட்டில் உள்ள பிள்ளைகளாய் வேலை செய்கிறார்கள். இவர்கள் தேவனை நம்பிப் பெற்றுக்கொள்ளாதபோதும் கொடுப்பாரென்று எதிர்ப்பார்த்து¸ வாக்களிக்கப்பட்டது தாமதிக்கும்போதும் அதற்காக காத்திருக்கிறார்கள். எல்லாம் இருளானாலும்¸ மனதுக்கு வருத்தமானாலும் இவர்கள் முன்னேறி செல்கிறார்கள். சில வேளைகளில் அவர்களுக்கு இருக்கிறதெல்லாம் அவருடைய வாக்குத்தத்தம்தான். எல்லாம் குளிர்ந்து விறைத்து செத்துப்போனதுபோல உள்ளே காணப்பட்டாலும் புறம்பே எல்லாம் அவர்களுக்கு மாறாகக் காணப்பட்டாலும்¸ அச்சூழ்நிலையிலும் அவர்கள் தேவனை நம்பி¸ தங்கள் ஆண்டவரை உறுதியாய்ப் பிடிக்கிறார்கள்.

யாரை விசுவாகித்தேனென்று
நான் அறிவேன் அது நல்லது
நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை
பாதுகாத்திடுவார் எந்நாளும்.

கர்த்தர் தம்முடையவர்களை அறிவார்.

மே 23

“கர்த்தர் தம்முடையவர்களை அறிவார்.” 2.தீமோ.2:19

தகப்பனுக்கு தன் பிள்ளை தெரியும். அன்பு கணவன் தன் ஆசை மனைவியை அறிவான். அப்படியே கர்த்தர் தம்முடையவர்களை அறிவார். தம் நேசமான பொருளாக¸ தம் குமாரன் இரத்தத்தினால் வாங்கப்பட்டவர்களாகவும்¸ பரிசுத்த ஆவியின் ஆலயமாகவும் அவர்களை அறிவார். பூமியிலே அவர்கள் பரதேசிகளும் அந்நியருமானவர்கள். ஆகவே அவர்களை அறிவார். தம்முடைய பிள்ளைகளை தேவன் ஆராய்ந்து அறிந்திருக்கிறார். உலகத்தார்¸ அவர்கள் தலைமேல் ஏறும்படி அனுமதித்தாலும்¸ தீய்க்கும் தண்ணீருக்கும் அவர்களை உள்ளாக்கினாலும் அவர்களை அறிவார்.

தம்மை யாரெல்லாம் நேசிக்கிறார்கள் என்றும்¸ இன்னும் அதிகம் நேசிக்க முடியவில்லையே என்று ஏங்குகிறவர்களையும் அவர் அறிவார். விசுவாசத்தால் போராடி¸ விசுவாசம் பெலவீனமாய் இருக்கிறதே என்று மனவேதனைப்படுகிறவர்களையும் அவர் அறிவார். பயமும்¸ திகிலும் அலைக்கழித்து கொந்தளித்தாலும்¸ தம்மை அவர்கள் நம்பியிருக்கிறார்களே என்று அவர் அறிவார். தம்முடைய வழிகளுக்குக் கீழ்ப்படிந்து கற்பனைகளை எப்போதும் கைக்கொண்டால் நலம் என்று பெருமூச்சு விடுகிறவர்கள் என்று அவர்களை அறிவார்.

அன்பர்களே¸ கர்த்தர் உங்களைத் தம்முடையவர்கள் என்று அறிந்து¸ தமது சொந்தப் பிள்ளைகளென்று நேசித்து¸ தாம் தெரிந்துக் கொண்ட மணவாட்டியாக உங்களுக்காக கவலைப்பட்டு¸ தம் மந்தையின் ஆடுகளாக உங்களை மேய்த்து¸ கண்ணின் கருவிழிப்போல் புடமிட்டு நல் ஆபரணங்களாக உங்களைப் பத்திரப்படுத்தி தம்முடைய கிரீடத்தின் இரத்தின கற்களாக உங்களைப் பூரணமாய் அறிந்திருக்கிறார்.

தேவனே உமது பக்தரெல்லாம்
உமக்கே எவ்வளவு அருமை
உமது நாமம் தரிசித்தோர்
பெற்றுக் கொள்வார் மகிமை.

என் நாவு உம்முடைய வசனத்தை விவரித்துச் சொல்லும்.

மே 22

“என் நாவு உம்முடைய வசனத்தை விவரித்துச் சொல்லும்.” சங் 119:172

எல்லா கிறிஸ்தவர்களும் இப்படிச் செய்வார்களானால் உலகில் அறியாமை குறையும். தேவனுடைய வசனம் ஒன்றுதான் பெருமையாய்ப் பேச தகுதியுடையது. நாம் அதை வாசித்து¸ விசுவாசித்து¸ நேசித்து¸ அதன்படி செய்து அதை அனுபவித்து¸ மற்றவர்களுக்கும் சொல்லும்படித்தான் அது நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அது பாவிகளைச் சீர்ப்படுத்தும். ஆகவே அதை அவர்களுக்குச் சொல்ல வேண்டும். அது விசுவாசிகளை ஊன்றக் கட்டும். ஆகவே அதை அவர்களுக்குப் போதிக்க வேண்டும். அது பின் வாங்கிப் போனவர்களை செவ்வையான பாதைக்குத் திரும்பப்பண்ணும். ஆகவே அதை அவர்களுக்கு விளக்க வேண்டும். நம்முடைய ஆத்துமாக்களுக்கு அது ஆறுதலைக் கொடுக்கும். ஆகவே நாம் அதைத் தியானித்து மற்றவர்களுக்கும் விளக்க வேண்டும்.

அது தேவனை மகிமைப்படுத்தி இரட்சகரை உயர்த்தும். ஆகையால் நாம் தேவனை¸ நேசிக்கிறதினால் ஏவப்பட்டு அதை விளக்கிச் சொல்லவேண்டும். தகுந்த நேரத்தில் அன்போடும்¸ அறிவோடும்¸ நன்மை உண்டாக அதைச் சொல்ல வேண்டும். வசனம் விதைப்போன்றது. ஆத்திரக்காரனை பொறுமையுள்ளவனாக்கி¸ துக்கமுள்ளவனை ஆற்றி¸ அலைந்து திரிகிறவனை நல்வழிப்படுத்தி¸ மனம் வருந்துகிறவனுக்குச் சமாதானம் அளிக்கும். பசியுள்ளவனுக்கு அது போஜனம்¸ அறிவீனனுக்கு வெளிச்சம். பலவீனனுக்குக் கைத்தடி¸ யுத்த வீரனுக்கு பட்டயம்¸ களைத்துப் போனவனுக்கு மென்மையான தலையணை. ஆகவே கர்த்தருடைய ஒத்தாசையால் அவருடைய வசனத்தை விவரித்துச் சொல்ல தீர்மானிப்போமாக.

சத்தியத்தைப் போதியும்
உம்மைத் துதித்துப் போற்றுவேன்
சுவிசேஷ நற்செய்தியை
எங்கும் பிரஸ்தாபிப்பேன்.

Tamil Christian Traditional Songs – Golden Hits Vol-1

  • Tamil-Christian-Traditional-Songs
❚❚

சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்

ஏப்ரல் 30

“சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்”  மத். 5:5

சாந்தகுணம் மனப்பெலவீனமல்ல. பல சமயம் நாம் தவறாய் இரண்டையும் ஒன்றாக்கி விடுகிறோம். கல்மனமுள்ளவர்களிடமும் சாந்த குணம் இருக்கிறது. சாந்த குணம் உள்ளவர்கள் தேவ சித்தத்திற்குக் கீழ்ப்படிந்து அவர் வார்த்தையை மதித்து நடுங்குகிறார்கள். இவர்கள் தேவன் சொல்லும் எல்லாவற்றையும் முறுமுறுக்காமல் காற்றுக்குச் செடி வளைகிறதுப்போல வணங்கி கர்த்தரின் சித்தம் ஆகக்கடவது என்பார்கள்.

சாந்த குணமுள்ளவர்கள் மௌனமாய்த் தேவ கட்டளைகளுக்கு அர்ப்பணித்து இயேசுவைப்போல் பொறுமையாய் நடந்து, பரிசுத்தாவியின் நடத்துதல்படி நடப்பார்கள். அவர்கள் தேவனிடம் தாழ்மையோடும், பிறரிடம் விவேகத்தோடு நடந்து தங்களுக்குப் புகழைத் தேடாமல் கர்த்தருக்கு மகிமையைத் தேடுவார்கள். இவர்கள் சாந்த குணமுள்ள ஆட்டுக்குட்டிகள். கெர்ச்சிக்கிற சிங்கங்கள் அல்ல. சாதுவான புறாக்கள். கொல்லுகிற கழுதுகளல்ல. ஆட்டைப்போல உபகாரிகள். ஓநாய்போல கொலையாளிகளல்ல. இவர்கள் கிறிஸ்துவைப்போல் நடந்து அவரைப்போல் பாக்கியராயிருப்பார்கள். இப்போது அவர்களுக்கு இருப்பது எல்லாம் கொஞ்சந்தான். ஆனால் பூமியைச் சீக்கிரத்தில் சுத்திகரித்துக் கொள்வார்கள். அவர்களுடைய மனநிலையே பெரிய பாக்கியம். ஒன்றுமற்றவர்களைக் கலங்கடிக்கும் பூசலுக்கு விலகி இருக்கிறார்கள். மற்றவர்கள் சேதப்படும்போது இவர்கள் தப்பி சுகமாய் காக்கப்படுகிறார்கள். மற்றவர்கள் கோபமாய் இருக்கும்போது இவர்கள் சாந்தமாய் இருக்கிறார்கள். மற்றவர்கள் கோபமாய் இருக்கும்போது இவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். மற்றவர்கள் எதிர்த்து நிற்கும்போது இவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். மற்றவர்கள் எதிர்த்து நிற்கும்போது இவர்கள் பொறுமையாய் இருக்கிறார்கள். மற்றவர்கள் கலங்கி இருக்கும்போது இவர்கள் அமர்ந்து இருக்கிறார்கள். மற்றவர்கள் சாபமாகும்போது இவர்கள் ஆசீர்வாதமாகிறார்கள்.

ஏழைப்பாவி நான்
சாந்தம் எனக்களியும்
ஏழை பலவீனன் நான்
தாழ்மையை எனக்கருளும்.

நான் ஐசுவரியவான் என்று சொல்லுகிறாய்

ஏப்ரல் 29

“நான் ஐசுவரியவான் என்று சொல்லுகிறாய்”  வெளி 3:17

கர்த்தர் தமது ஏழை மக்களைப் பார்த்து உங்களுக்காக நான் சவதரித்து வைத்திருக்கிற காரியங்களைப்பற்றி, நீங்கள் ஐசுவரியமுள்ளவர்கள் என்று சொல்வது வேறு. பெருமைக்கொண்ட பேர் கிறிஸ்தவன் தான் ஐசுவரியவானென்று சொல்லிக்கொள்வது வேறு என்கிறார். ஆவியின் சிந்தையுள்ளவர்கள் எப்போதும் தங்களுடைய வறுமையை உணருகிறபடியால் தங்களை வெறுத்து தங்களுக்கு வேண்டியதையெல்லாம் கிறிஸ்துவின் நிறைவிலிருந்து பெற்றுக்கொள்ள கற்றுக்கொள்ளுகிறார்கள். நம்முடைய பக்தியயும், செய்கையையும், ஐசுவரியத்தையும்பற்றி நாமே மெச்சிக்கொள்வது நல்லதல்ல. அப்படி செய்தால் இயேசுவைவிட்டு நம் கண்களைத் திருப்பிவிட்டோம் என்றே பொருள். சாத்தானும் நம்மேல் ஜெயமடைவான். இரட்சகர் பாதத்தில் விழுந்து நமது குறைவுகளை உணர்ந்து அவருடைய நிறைவிலிருந்து எதையும் செய்யவும் எந்தச் சிலாக்கியத்தையும் அனுபவிக்கத்தக்கதாக தேடும்போதுதான் நாம் சுகமுடன் இருப்போம்.

தங்களை ஐசுவரியவான்களென்று நினைத்துக் கொண்டிருக்கிறவர்களைப் பார்த்து ஆண்டவர் நிர்ப்பாக்கியமுள்ளவரும், பரிதபிக்கத்தக்கவரும், தரித்திரரும், குருடரும், நிர்வாணியுமானவர்கள் என்று சொல்லுகிறார். இவர்கள் தம்மிடம் வந்து நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், வெண் வஸ்திரத்தையும் பார்வையடையும்படிக்கு கண்ணுக்குத் கலிக்கத்தையும்  வாங்கிக்கொள்ளச் சொல்கிறார். நம்மிடம் இருக்கும் எதையும்பற்றியும் நாம் பெருமை அடையாதிருப்போமாக. தரித்திரராகிய நீங்கள் பாக்கியவான்கள், பரலோக இராஜ்யம் உங்களுடையது. ஐசுவரியவான்களாகிய உங்களுக்கு ஐயோ என்கிறார். நீங்கள் ஒருபோதும் எதிலும் பெருமையடையாமல் உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்.

என் நிர்ப்பந்தத்தைப் பாருமேன்
நான் நிர்வாணி, குருடன்
ஒன்றுமற்ற பாவி நான்
முற்றிலும் அபாத்திரன்
உமது பாதம் நம்பினேன்
இல்லையேல் கெடுவேன்.

Popular Posts

My Favorites

எசேக்கியா மனமேட்டிமையானான்

ஏப்ரல் 26 "எசேக்கியா மனமேட்டிமையானான்" 2.நாளா. 32:25 எசேக்கியா மனமேட்டிமையில் அதிகம் வளர்ந்து விட்டான். அவன் நல்லவன்தான். சற்று நேரத்துக்கு முன்னே தேவன்புக்குரிய சாட்சி பெற்றான். நாம் மாம்சத்தின்படி பெருமை வாய்ந்தவர்களானபடியால் தேவன் நமக்குத் தயவு...