முகப்பு வலைப்பதிவு பக்கம் 34

நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ?

மார்ச் 08

“நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ?.” யோவான் 6:67

ஆண்டவர் இயேசு இந்தப் பூமியில் இருந்தபோது, அவருடைய சீஷர்கள் அவரை விட்டுப் பின்வாங்கி போய்விட்டார்கள். அதேப் போல பலர் இந்நாளிலும் அவரை விட்டுப்போய்விட மனதுள்ளவர்களாயிருக்கிறார்கள். அநேகர் லோத்தின் மனைவிப்போல திரும்பிப் பார்க்கிறார்கள். பெத்தேலிலிருந்து வந்த தீர்க்கதரிசியைப்போல் சோதனைக்கு இடங்கொடுத்து விடுகிறார்கள். எத்தனைப் பேர் தோமைவைப்போல ஆண்டவரை நேசித்து பிறகு விசுவாசத்தை விட்டு போய்விடுகிறார்கள். ஆனால் நீங்களோ இளைப்பாறுதலில் பிரவேசிக்கும்வரை அவரை விட்டு பின் வாங்கவே கூடாது என்று தீர்மானியுங்கள்.

இயேசுவை விட்டுப் போகிறது பின்மாறிப்போகிறது ஆகும். இது ஒளியைவிட்டு இருளுக்கும், நிறைவை விட்டு குறைவுக்கும், பாக்கியத்தை விட்டு நிர்ப்பந்தத்துக்கும், ஜீவனை விட்டு மரணத்திற்கும் செல்வதாகும். கிறிஸ்துவை விட்டு போனால், வேறு யாரிடம் போவோம்? உலகமும் அதில் உள்ள பொருள்களும், நிலையான ஆத்துமாவுக்கு சமமாகாது. நம்மில் சிலர் நான் தேவ பிள்ளை என்று சொல்லி உலகத்தை இச்சித்து அதன்பின் சென்று விடுவதால் பின்வாங்கிப் போகிறோம் என்று அறியாதிருக்கிறோம். எச்சரிக்கையாயிருங்கள். எப்போதும் நாம் விழித்திருக்க வேண்டும். தேவனைவிட்டு விலகுகிறோமா என்று எல்லா காரியங்களிலும் சோதித்துப் பார்க்க வேண்டும். தன்னை நிற்கிறவன் என்று சொல்லுகிறவன், தான் விழாதபடி எச்சரிக்கையாயிருக்கடவன்.

ஒரு நிமிஷமாவது இரட்சகரை விட்டு பரிந்து போவதற்கு வழியே இல்லை. அவரை விட்டு பின் வாங்கிப் போவது புத்தியீனம். அவருடைய நியமங்களை அசட்டை செய்வது தவறு. அவருக்கு முதுகைக் காட்டுவது துரோகம். ஆத்துமாவே உன்னையும் பார்த்து, நீ என்னை விட்டுப் போகிறாயா என்று அவர் கேட்கிறார்.

ஒன்றை தேவை என்றீரே
அதை எனக்குத் தாருமே
நான் உம்மை விட்டு,
ஒருபோதும் விலகாதிருக்கட்டும்.

அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா

மார்ச் 07

“அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா.” மத். 6:6

கர்த்தருக்குத் தெரியாமல் யாராவது தன்னை இரகசியமான இடங்களில் மறைத்துக்கொள்ளக்கூடுமோ? ஒரு கிறிஸ்தவன் எந்த வகையிலாவது தன்னை அவரிடமிருந்து ஒளித்துக்கொள்ள முடியாது. எப்போதும் கர்த்தருடைய கண்கள் என்மேல் வைக்கப்பட்டிருக்கிறது. இப்போதும் அவர் என்னை நன்றாய்ப் பார்க்கிறார். அது என் தகப்பனுடைய கண்கள். என் பிதா என்னை அந்தரங்கத்திலிருந்துப் பார்க்கிறார். என் சத்துருக்களின் இரகசிய கண்ணிகளுக்கு என்னைத் தப்புவிப்பார். என்னைச் சேதப்படுத்தவிருக்கும் தீங்கிற்கு என்னை அருமையாய்த் தப்புவிப்பார்.

என் இதயத்தின் போராட்டங்களையும், என் அந்தரங்க சோதனைகளையும், அவர் பார்த்து அறிந்துக்கொள்கிறார். நான் ஜெபிக்கக்கூடாதபோது அவரை நோக்கிப் பார்ப்பதை அவர் பார்த்தறிவார். என் குறைவுகளையும், நிர்பந்தங்களையும் அவர் கண்ணோக்குகிறார். என் இரகசியமான பாவங்களையும் பொல்லாத சிந்தனைகளையும், தகாத தீய செயல்களையும் அவர் கவனிக்காமலில்லை. எத்தனை பயங்கரமான ஒரு காரியம் இது. இப்படி கண்ணோக்குகிற ஒரு தேவன் நமக்கிரு;கிறபடியால், இனி சோதனைக்கு இடங்கொடாமல், அவர் வழிகளுக்கு மாறாய் செய்யாமல் நம்மை நாமே காத்துக்கொள்ள வேண்டும். என் பரமபிதா என்னைப் பார்க்கிறார். ஒவ்வொரு நிமிடமும் இந்த நிமிடமும், என்னைப் பார்க்கிறார். என் உள்ளிந்திரியங்களையும் பார்க்கிறார். என் யோசனைகளையும் விருப்பங்களையும் அவர் பார்க்கிறார். இப்படிப் பார்க்கிறவர் எந்தப் பாவத்தையும் அளவற்ற பகையாய்ப் பார்க்கிறார்.

நான் எங்கே இருந்தாலும்
தேவ சிந்தை என்னை காணும்
நீர் என்னைக் காணும் தேவன்
பாவத்தை வெறுப்பேன் நான்.

இப்பொழுது ஆக்கினைத்தீர்ப்பில்லை

மார்ச் 06

“இப்பொழுது ஆக்கினைத்தீர்ப்பில்லை.” ரோமர் 8:1

ஒவ்வொரு விசுவாசியும் கிறிஸ்துவில் இருக்கிறான். அவரோடு ஐக்கியப்பட்டு அவருடைய செயல்களுக்குப் பிரயோஜனப்பட்டு அவருடைய நீதியால் உந்தப்பட்டு அவருடைய ஆவியால் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறான். இப்படிப்பட்ட மனிதருக்கு ஆக்கினைத்தீர்ப்பு இல்லை. பாவம் பெருத்திருக்கலாம். சந்தேகங்கள் அதிகம் இருக்கலாம். நமக்குள் பாவசிந்தை இருந்;தாலும் அது நம்மை மேற்கொள்ள முடியாது. விசுவாசி எவனும் தேவனால் கைவிடப்படுவதில்லை. அவன் கிறிஸ்துவுக்குள் ஒன்றாய் இருப்பதினால் குற்றத்திலிருந்து விடுதலையாகி தேவனோடு நீதிமானாயிருக்கிறான். தனது சொந்தப்பிள்ளை என்று தேவனால் அங்கீகரிக்கப்படுகிறான். கிருபைக்கம் மகிமைக்கும் சுதந்தரவாளியாகிறான். பாவம் செய்தால் தேவனால் தண்டிக்கப்படுகிறான். தண்டனைப் பெற்றால் தன் குற்றங்களை அறிக்கை செய்கிறான். அப்படி செய்வதால் உண்மையும் நீதியுமுள்ள தேவன் அவனுக்கு மன்னிப்பளித்து, கிறிஸ்துவானவர் நிறைவேற்றின கிரியை தன்னுடையது என்று சொல்லி விடுதலையடைகிறான். ஒருவனும் அவனைக் குற்றவாளி என்று தீர்க்க முடியாது. கிறிஸ்து ஒருவர்தான் அவனுக்காக மரித்தபடியால், அவர் மட்டும்தான் அவனைக் குற்றவாளியாக தீர்க்க முடியும்.

அவரே அவனுக்குப் பரிகாரியாய் உயிர்த்தெழுந்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருந்து அவனுக்காய்ப் பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார். அவர் அவனைக் குற்றவாளியென்று தீர்க்கிறதில்லை. இது பாக்கியமான கிருபை. நீ குற்றவாளியாக தீர்ப்பு பெறுகிற பாவியல்ல. குற்றமற்றவன் என்றும் விடுதலையடைந்த தேவ பிள்ளை என்றும் நினைத்துக் கொண்டே உறங்கச்செல். இது தேவன் தன் பிள்ளைகளுக்குத் தந்த அதிசயமான கிருபை.

ஆக்கினை உனக்கில்லை
தேவன் தாமே சொன்னாரே
கிறிஸ்து மகிமையுள்ளவர்
உன்னையும் மகிமைப்படுத்துவார்.

இடைவிடாமல் உன் தேவனை நம்பிக்கொண்டிரு

மார்ச் 05

“இடைவிடாமல் உன் தேவனை நம்பிக்கொண்டிரு.” ஓசியா 12:16

உன் தேவனை நம்பிக்கொண்டிரு அல்லது உன் தேவனுக்காகக் காத்துக்கொண்டிரு. தேவனிடம் காத்திருப்பதே நம்மை பரம சிந்தைக்கு வழி நடத்துகிறது. அவருடைய சிங்காசனத்துக்கு முன் நிறுத்தி அவர் வார்த்தையில் விசுவாசம் தந்து, அவர் இரத்தத்தை நம்ப வைத்து அவரின் சித்தத்திற்கு நேராய் நம்மை நடத்துகிறது. அவர் பாதத்தில் அமர்ந்திருக்கும்போதுதான் அவருக்குப் பிரியமானதை செய்ய நமது மனம் நினைக்கும். காத்திருக்கும் ஆத்துமாதான் சகலத்திலும் தேவனைக் காண்கிறது. எவ்விடத்திலும் தேவன் இருக்கிறார் என்றே உணருகிறது. எந்தக் காரியத்தையும் தேவன் நடத்துகிறார் என்று ஒத்துக்கொள்கிறது. உன் தேவனிடத்தில் எப்போதும் காத்திரு. அப்போதூன் எக்காலத்திலும் மோசத்திற்குத் தப்பி சுகித்திருப்பாய். எந்தச் சோதனையிலும் வெற்றிப் பெறுவாய். கர்த்தர் தம்முடைய நியமங்களின்மூலம் உன்னை மேன்மைப் படுத்துகிறதைக் காண்பாய்.

ஜாக்கிரதையுள்ள ஊழியக்காரன் தன் பட்சமுள்ள எஜமானிடத்திலும், உத்தம வேலைக்கரி தன் எஜமாட்டியிடத்திலும் பட்சமுள்ள பிள்ளை தன் பிரிய தகப்பனிடத்திலும் காத்திருப்பது போல காத்திரு. நீ காத்திருப்பது அவருக்குப் பிரியமானபடியால் அவரிடத்தில் காத்திரு. காத்திரு என்று உன்னிடம் அவர் சொன்னதால் காத்திரு. அவர் இரக்கம் காண்பிக்கும் நேரத்திற்காக காத்திரு. அவருக்காக காத்திருப்பவர்கள் வெட்கப்படமாட்டார்கள். கர்த்தரிடம் காத்திரு. திடமனதாயிரு. அதுவே பெலன். இனி ஆத்துமாவே, இன்று தேவனிடத்தில் காத்திருந்தாயா? இந்த இராத்திரியிலே அவரோடு அமர்ந்து காத்திருக்கிற சிந்தை உன்னிடத்தில் உண்டா? கர்த்தருக்குக் காத்திருக்கிறேன் என்று தைரியமாய் உன்னால் சொல்ல முடியுமா? இல்லையென்றால் இனிமேலாவது காத்திருக்க தீர்மானி.

விசுவாசித்து காத்திரு
திடமாய் நிலைத்திரு
அவர் வார்த்தை உண்மையே
அவர் பெலன் அளிப்பாரே.

இஸ்ரவேலின் ஜெயபலமானவர் பொய் சொல்லுகிறதில்லை

மார்ச் 04

“இஸ்ரவேலின் ஜெயபலமானவர் பொய் சொல்லுகிறதில்லை.” 1.சாமு. 15:29

கர்த்தர் பொய் சொல்லாதவரானபடியால் நாம் அவருக்கு உண்மையாக இருந்து அவரை நம்பவேண்டும். இது நமது கடமை. அவருக்கு முன்னால் பொய்யற்றவர்களாக நிற்க வேண்டும். அவருடைய பொய் சொல்லா வாக்குகளெல்லாம் அவர் அன்பிலிருந்து பிறக்கும் கனிகள். அவர் சர்வ வல்லவரானபடியால் தமது வார்த்தைகளை எவ்விதமும் நிறைவேற்ற வல்லவராயிருக்கிறார். அவர் உண்மையுள்ளவராய் இருக்கிறபடியால் எவ்விதத்தினாலும் அதை நிறைவேற்றுவார். தமது ஜனங்களை ஆற்றித்தேற்ற அவர் வல்லமை உள்ளவர். அவர் தமது வசனத்தின்மூலம், நம்மோடு பேசுகிறார். பாவிகளாகிய நம்மைப் பார்த்து பேசுகிறார். சோதனையிலும், துன்பத்திலுமிருக்கிற உங்களைப் பார்த்து இந்த நாளில் இருக்கிறவிதமாய் பேசுகிறார்.

நம் பயங்களைப் போக்க, நம்முடைய துன்பங்களில் நம்மை மகிழ்ச்சியாக்க, நம்முடைய வருத்தங்களில் நமக்கு ஆறுதல் அளிக்க நம்மைப் பார்த்துப் பேசுகிறார். அவர் உண்மையுள்ள வார்த்தையை நாம் உண்மையாய் நம்புகிறோமா? தேவன் உண்மையையே பேசுகிறார் என்று நினைக்கிறோமா? அவர் நமக்கு உண்மையாய் இருக்கிறதுபோல நாமும் அவருக்கு உண்மையாய் இருக்கிறோமா? அவர் சொல்லைப்பற்றி பிடித்திருக்கிறோமா? எப்போதும் உண்மை தேவனை நோக்குகிறோமா? எப்போதுமே நமது பரமபிதா உண்மை வார்த்தைகளைத்தான் பேசுகிறார் என்று விசுவாசிக்கிறோமா? வானமும் பூமியும் ஓழிந்தாலும் என் வார்த்தைகளோ ஒழிந்து போகாது என்று இயேசு சொன்னதை உண்மையானது என்று உண்மையாய் நம்புங்கள். அவரை நம்பி நடவுங்கள். அவருடைய வார்த்தையை நோக்குங்கள். அப்படி நோக்கும்போது பின் வருகிற பிரகாரம் சொல்லலாம்.

தேவனே சொன்னதால்
அவர் உண்மையுள்ளவராதலால்
வாக்கை நிறைவேற்றுவார்
எதையும் செய்து முடிப்பார்.

கீழ்ப்படிகிற பிள்ளையாய் இருங்கள்

மார்ச் 03

“கீழ்ப்படிகிற பிள்ளையாய் இருங்கள்.” 1.பேதுரு 1:14

தேவன் என் தகப்பன், நான் அவரின் பிள்ளை என்று ஒவ்வொரு விசுவாசியும் அனுதினமும் பிரியத்தோடு உணரவேண்டும். அவர் ஒரு பிள்ளையைப்போல் அவனை நடத்துகிறார். என் பரமபிதா எனக்கு வேண்டியதெல்லாம் சுதந்தரித்து வைத்திருக்கிறார். பாவியான ஒருவன் பக்தனானபோது இயேசுவிடமிருந்து எல்லாம் கிடைக்கிறது. இயேசுவிலுள்ளதெல்லாம் அவனுக்காகதான். இயேசுவின் நிறைவிலிருந்து கிருபை மேல் கிருபையைப் பெற்றுக்கொள்ளவேண்டும்.

நீயோ அவர் பிள்ளைப்போல் பிதாவின் சத்தத்திற்குச் செவிகொடுக்க வேண்டும். அவர் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து அவர் சித்தத்திற்கு அடிபணிய வேண்டும். கீழ்ப்படிவதுதான் உன் கடமை. உனக்கு வேண்டியதெல்லாம் உன் பிதா தருவார். அவர் சொல்படி செய்வதுதான் உன் வேலை. பின்னால் நடக்கப்போவதைப்பற்றி கவலைப்படாதே. எந்த விஷயத்திலும் பிதாவின் சித்தம் மட்டும் தெரிந்து கொண்டால் அதுவே அவர் திட்டப்படி செய்ய சுலபமாயிருக்கும். உனக்கு இருக்கும் nரிய கௌரவம் தேவன் உனக்கு தகப்பனாயிருப்பதுதான். உன்னை சொல்லமுடியா அன்பினால் ஒருவர் நேசிக்கிறார். அதுவே உனக்குப் பாக்கியம். அவர் பாதம் அமர்ந்து காத்திருக்கும்போது இன்னும் உன்னை நேசிக்கும் பிதா, சகல ஞானத்திலும் அறிவிலும் வல்லமையாலும் நிறைந்த பிதா உனக்கு இருக்கிறார் என்று நினை. இதுவே உனது மகிழ்ச்சி. பிள்ளையைப்போல உன் மனதை அவருக்கு ஒப்புவி. உன் கவலைகளையெல்லாம் அவர் மேல் போட்டுவிடு. அப்போது உனக்கு ஆசீர்வாதமும், ஆறுதலும் நிச்சயமாய் கிடைக்கும். உனக்கு வேண்டியதெல்லாம் தாராளமாய்ப் பெற்றுக்கொள்வாய்.

கர்த்தாவே எனக்கிரங்கி
எனக்குத் தயை காட்டி
குறைவையெல்லாம் நீக்கி
என்மேல் நேசம் வைத்திடும்.

கர்த்தர் சமீபமாயிருக்கிறார்

மார்ச் 02

“கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.” பிலி. 4:5

இயேசு கிறிஸ்து வரப்போகிறார். அவர் வருகிற நாள் தெரியாது. ஆகையால் நாம் எப்போதும் ஆயத்தமாய் இருக்க வேண்டும். அவர் சீக்கிரம் வருவார். உண்மையாய் வரத்தான் போகிறார் என்று உணர்ந்தோமானால், சாம் இப்போது இருக்கிறதுபோல் அடிப்படி உலக காரியங்களில் சிக்கிக்கொள்ள மாட்டோம். உலகத்துக்குரியவைகளைச் சிந்திக்காமல் தினமும் பரலோகத்தை நினைத்து ஏங்குகிறவர்களாய் இருப்போம். உலகை நியாயந்தீர்க்கவும், நமது பிள்ளைகளை ஒன்று சேர்க்கவும், அவனவன் செய்த கிரியைகளுக்குத் தக்க பலன் தரவும், அவர் சீக்கிரம் வரப்போகிறார்.

அந்த நாள் சமீபமாயிருக்கிறதென்று உணர்ந்தோமானால் சோதனையில் அது நம்மைப் பாதுகாக்கும். பின்மாறாதபடி தடுக்கும். நமது பயபக்தியையும் பரம சிந்தையையும் அதிகமாக்கும். அவரையே Nநூக்கியிருக்க செய்யும்: அவருக்காக நம்மை ஆயத்தப்படுத்தும்.

நாமோ! அவரை வாரும் இயேசுவே என்று அழைத்து அவரின் வருகைக்காய் வாஞ்சையோடு காத்திருக்க வேண்டும். அவர் வரும் போது கிருபையை தம்முடன் கொண்டு வருவார். நம்மை தம்முடன் சேர்த்துக்கொள்வார். சத்துருக்களை நாசம்பண்ணுவார். நம்மைத் தமது சாயலுக்கொப்பாய் மாற்றுவார். இயேசுவானவர் வரும்போது அவரின் ஜனங்கள் பூரண பாக்கியவான்களாய் இருப்பார்கள். அழுகை இன்பமாயும், துயரங்கள் ஸ்தோத்திர கீதங்களாயும் மாறும். ஆமென், கர்த்தராகிய இயேசுவே வாரும். சீக்கிரம் வாரும் என்று அழைப்போம்.

வாரும் இயேசுவே வாரும்
உமது மகிமையைக் காட்டும்
அதை நாங்கள் கண்ணாய் கண்டு
கையில் பொற் கின்னரம் கொண்டு
ஜெயம் ஜெயம் என்று
வாழ்த்திப் போற்றிப் பாடுவோம்.

உம்முடைய அதிசயமான கிருபையை விளங்கப்பண்ணும்

மார்ச் 01

“உம்முடைய அதிசயமான கிருபையை விளங்கப்பண்ணும்.” சங். 17:7

நம்மை மிகவும் அன்பான உறவில், தம்மோடு ஜக்கியப்படுத்திக்கொண்டதினால், இந்தப் பெரிய கிருபையை விளங்கப்பண்ணியிருக்கிறார். ஒரு புழுவைத் தம் பிள்ளையென்று அழைப்பது எத்தனை கிருபை. பாவம் நிறைந்த தீட்டுள்ள ஒரு புழுவைத் தன் மணவாட்டி என்று அழைப்பது எவ்வளவு பெரிய கிருபை. நமது பங்களை நீக்கி, நமக்குள் நம்பிக்கை தந்து, விருப்பங்களை உண்டாக்கி, நம்மோடு இணைந்து விடுகிற தேவனின் கிருபைதான் எவ்வளவு பெரியது. இந்த அன்பை எப்படி சொல்வது.

அதிசயமான கிருபை என்பது அதிகமாய் நம்மை எழுப்பிவிடத்தக்க அன்புதான். இது உருக்கம் கொள்ளுகிற, பட்சம் காட்டுகிறது அன்பு. இது தாழ்ந்த சிந்தையால் அலங்கரிக்கப்பட்ட அன்பு. அதிசயமான கிருபையைக் காண்பிப்பது. அதிக தயவைப் பாராட்டுவதாகும். வழக்கத்திற்கு மாறான தயை. அறிவுக்க விளங்காத கருணை. விசுவாசம் மட்டும் எதிர்பார்க்கிற தேவ அன்பு. இதை விசுவாசத்தோடு கேட்டால் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். அன்பதே, நன்மை செய்வதே தேவனுக்குப் பரியம் என்பதை நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது. தமது ஊழியக்காரனுடைய சுகத்தைத்தான் அவர் விரும்புகிறார். நமக்கு நன்மை செய்வதில் அவர் ஆநன்தப்படுகிறார். நாம் தாழ்மையோடு, மனந்திருப்தியாய் விசுவாசத்தைத் தினமும் முயற்சிப்போமானால், நமக்கு ஒன்றையும் மறுக்கவும் மாட்டார். நாம் கேளாததினால்தான் பெற்றுக்கொள்ளுகிறதில்லை. கேட்டாலும், தகாதவிதமாய் கேட்பதினாலும் பெற்றுக்கொள்ளாமல் போகிறோம்.

தேவனே நான் உம்மையே
நம்பி இருக்கிறேன்.
என் விண்ணப்பம் கேளும்
எனக்குத் துணையாய் வாரும்
புவியில் இருக்கும் எனக்க
இரங்கி தயை காட்டுமே.

நான் பிழைக்கிறபடியினால் நீங்களும் பிழைப்பீர்கள்

பெப்ரவரி 28

“நான் பிழைக்கிறபடியினால் நீங்களும் பிழைப்பீர்கள்.” யோவான் 14:19

கிறிஸ்துவும் அவர் ஜனங்களும் ஒன்றுதான். அவர் தலை, அவர்கள் அவயங்கள். அவரிடத்திலிருந்தே ஜீவனையும், யோசனையையும், வல்லமையையும், பரிசுத்தத்தையும் மற்றெந்த கிருபையையும் பெற்றனுபவிக்கிறார்கள். அவர்களுக்குக் கொடுக்கத்தக்கதான நிறைவு அவரிடத்தில் உண்டு. அந்தப் பரிபூரணத்திலிருந்து அவர் தினந்தோறும் வேண்டியதைக் கொடுக்கிறார். இந்நாள் வரையிலும் நமக்கு வேண்டிய கிருபையை இரட்சகர் கொடுத்து வந்தார். இனிமேலும் கொடுத்து வருவார். தேவனாக அவர் இருக்கிறார். தேவனுடைய மக்களுக்கு அவரின் செல்வாக்கைக் கொடுத்துதவுகிறார்.

தமது வார்த்தையை நிறைவேற்றி, தமது கிரியையைப் பூரணப்படுத்தி நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளத்தக்கதாக அவர்களை அவுர் பிழைப்பூட்டுகிறார். அவர்களும் உயிரடைகிறார்கள். உயிரோடிருக்கம் கிறிஸ்து அவர்கள் ஜீவனும் அவர்கள் பிரதிநிதியும் அவர்கள் பிணியாளியுமாய் இருப்பதால் அவர்கள் பிழைப்பார்கள். அவர் காத்து முடிவு பரியந்தமும் வழி நடத்துவதால் அவர்கள் பிழைத்திருப்பார்பள். அவரே அவர்களை ஆண்டு நடத்தி பாதுகாத்து நேசித்து அவர்களை நடத்துகிறார். அவர் பிழைத்திருக்கிறார். தம்முடையவர்களையும் பிழைப்பூட்டுகிறார். அவர்களில் ஜீவன் அவரோடு மறைந்திருக்கிறது.

அன்பர்களே! உங்கள் சந்தோஷத்துகு;கு ஊற்று தேவ ஞானத்தான். உங்களுடைய ஜீவனும் சுகமும், கிறிஸ்துவினுடைய ஜீவனோடும் சுகத்தோடும் ஒன்றுபட்டிருக்கிறது. உங்கள் ஜீவனாகிய கிறிஸ்து சீக்கிரம் வருவார். அவரோடு நீங்களும் பிழைத்து என்றென்றும் அவரோடிருப்பீர்கள்.

இயேசு என்றும் ஜீவிக்கிறார்
நானும் என்றும் ஜீவிப்பேன்
அவர் வாக்களிக்கிறார்
நான் அதன்மேல் கட்டுவேன்.

கர்த்தருக்கே காத்திரு

பெப்ரவரி 27

“கர்த்தருக்கே காத்திரு.” சங். 37:7

எப்பொழுதுமே பாவியானவன் அமைதலற்றவன். அவன் இருக்க வேண்டிய இடத்தை விட்டுவிட்டபடியால் அவன் ஆவை அவனை நிலையற்றவனாக்குகிறது. கிறிஸ்து அவனைப் பார்த்து என்னிடத்தில் வா, நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன் என்கிறார். விசுவாசி இளைப்பாறுதல் பெற்றிருந்தாலும், சோதனைகளிலும், கவலைகளிலும், அவிசுவாசத்தாலும் அடிக்கடி இழுக்கப்பட்டு, பின்னும் அமைதலய்யவனாகிறான்.

அன்பானவர்களே, உங்களில் கவலைக்குரிய காரியம் இவைகளாய் இருக்கக்கூடாது. நீ கர்த்தரில் இளைப்பாற்றி காத்திருக்க வேண்டும். தேவ சமுகமே உனக்கு ஆனந்தமாய் இருக்க வேண்டும். தேவ சித்தத்திற்குக் காத்திருக்க வேண்டும். அவர் திட்டமிடுகிறதெல்லாம் உன் நன்மைக்காகத்தான் இருக்கும். நீங்கள் பரிசுத்தமாய் வாழவேண்டுமென்பதே தேவசித்தம். தேவ அன்பில் இளைப்பாற்றிக் காத்திருக்கவேண்டும். அவர் சமுகத்தில் அமர்ந்து அவரைப்பற்றி தியானம் பண்ணவேண்டும். தேவ இரக்கத்திற்குக் காத்திருந்தால் இளைப்பாறிக்காத்திரு. அது உண்மையுள்ளது, மாறாததது, தேவனுக்கும் உனக்கும் ஐக்கியம் தேவை. இந்த ஐக்கியத்தில் இளைப்பாறு. அவர் உன் பிதா. கரிசனையுள்ள பிதா. ஞானமுள்ள பிதா. சகாயஞ் செய்யும் பிதா. தேவன் இருக்கிறவிதமாய் அவரைத் தரிச்சிக்க அவரில் காத்திரு. அவர் சகலத்தையும் உன் நன்மைக்காகவும் தன் மகிமைக்காகவும் நேர்ப்படுத்துவார். கர்த்தருக்குக் காத்திரு, பாக்கியமுள்ளவனாயிரு.

தேவ தாசர் தேவ சித்தம்
காத்திருந்து அறிவர்
சோதிக்கப்பட்டும் நித்தம்
அவர் கடாட்சம் பெறுவர்.

Popular Posts

My Favorites