நீங்கள் எல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்

மே 25

‘நீங்கள் எல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.” கலா. 3:28

கிறிஸ்தவர்கள் எல்லாரும் கிறிஸ்துவில் ஒன்றாய் இருக்கிறார்கள். தேவ பிள்ளைகளின் ஐக்கியத்திற்கு அவர்தான் மையம். நாம் எல்லாரும் அவரில் தெரிந்துக்கொள்ளப்பட்டோம். அவர் ஒருவரே நம் எல்லாருக்கும் தெய்வம். அவரோடு ஐக்கியப்பட்டு ஜீவனுள்ளவர்களாய் இருக்கிறோம். ஏனெனில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைத் தரித்துக் கொண்டோம். இனம்¸ வயது¸ அந்தஸ்து என்ற வேறுபாடுகளே இல்லை. எல்லாரும் வரப்போகிற அதே சிலாக்கியங்களை¸ இன்பங்களை¸ நன்மைகளைச் சுதந்தரிக்கப் போவதால் கிறிஸ்துவில் ஒன்றால் இருக்கிறோம். வயதிலே வித்தியாசம் இருந்தாலும் ஒரே குடும்பம்தான். பலவைத் தொழுவங்களிருந்தாலும் மந்தை ஒன்றுதான். வௌ;வேறு கற்களாக இருந்தாலும் கட்டப்படும் கட்டடம் ஒன்றுதான். பலவித ஆலயங்களும் அலுவல்களும் இருந்தாலும் ஒரெ சரீரம்தான். பல இடங்களில் சிதறிக்கிடந்தாலும் சபை ஒன்றுதான். இயேசு தம் சொந்த இரத்தத்தால் சம்பாதித்த ஒரே மணவாட்டிதான்.

ஆகவே நாம் எல்லாரும் கிறிஸ்துவுகள் ஒன்றாய் இருக்கிறது உண்மையானால்¸ சகோதரரைப்போல் ஒருவரை ஒருவர் நேசித்து சில வேளைகளிலாவது ஒன்று கூடி உணவருந்தி¸ உத்தம அன்பால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருக்க வேண்டும். சரீரத்தின் அவயவங்களைப்போல் ஒன்றுபட்டிருப்போம். எவ்விதத்திலும் வித்தியாசமி;ன்றி அனைத்திலுமே ஏக சிந்தையாய் இருக்க வேண்டும். இட வித்தியாசமானாலும்¸ காரிய போதனைகளினாலும் வேறு பட்டிருந்தாலும் கிறிஸ்துவுகள் அனைவரும் ஒன்றாய் இருக்க வேண்டும். நம்முடைய மேன்மையிலும்¸ நற்காரியங்களிலும் ஒருவரிலொருவர் சந்தோஷப்பட வேண்டும். அன்பர்களே¸ நாம் ஒவ்வொரு கிறிஸ்தவனையும்¸ கிறிஸ்துவிலிருக்கிறவனாக எண்ணி கிறிஸ்துவின் சரீரத்தின் அவயவமாகப் பாவித்து¸ அதற்கேற்றவாறு நடந்துகொள்ளுவோமாக.

கர்த்தாவே எங்கள் இதயத்தை
ஒன்றித்து வளர்ப்பியும்
உம்மைப்போல் இருப்போம்
அன்பில் வளருவோம்.

விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்

மே 24

“‘விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்.” கலா. 3:11

விசுவாசத்தினால்தான் அவர்கள் நீதிமான்களாகிறார்கள். பாவத்தைப்பற்றி உணர்வடைந்தவர்களானதால் தங்கள் பெலவீனத்தை உணர்ந்து¸ சுவிசேஷத்தை அறிந்து¸ கிறிஸ்துவின் கிரியைகளைப் பற்றி பிடித்து கொள்ளுகிறார்கள். அவரின் நீதி அவர்களுடையதானபடியால் எல்லா குற்றத்திற்கும் நீங்கலாகுகிறார்கள். நீதிமான்களாக்கப்பட்டு பிழைத்திருக்கிறார்கள். அதாவது ஆக்கினையினின்று விடுவிக்கப்பட்டு¸ சகல ஞான நன்மைகளுக்கும் உரியவர்களாகி சுயாதீனராய் நடக்கிறார்கள். விசுவாசத்தினால் அவர்கள் பிழைக்கிறார்கள். விசுவாசத்தினால் தங்கள் சத்துருக்களை மேற்கொள்ளுகிறார்கள். விசுவாசத்தினால் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுகிறார்கள். விசுவாசத்தினால் தேவனோடு சஞ்சரிக்கிறார்கள்.

தேவ குமாரன்மீதுள்ள விசுவாசத்தினாலேதான் அவர்கள் இவ்வுலகத்தில் ஜீவிக்கிறார்கள். அவர்கள் வேதத்தின் வார்த்தைகளைப் பற்றிப்பிடித்து அவருடைய கிரியையின்மேல் மட்டும் சாய்நது¸ அவர் சத்தியத்தின் பேரில் நம்பிக்கை வைத்து அவரின் நிறைவிலிருந்து தங்களுக்கு வேண்டியதெல்லாம் பெற்றுக்கொள்கிறார்கள். வருவாய்க்காக அல்ல¸ அன்பினால் ஊழியம் செய்கிறார்கள். கூலி வாங்கும் வேலைக்காரர்கள் போலல்லாமல் பிதாவின் வீட்டில் உள்ள பிள்ளைகளாய் வேலை செய்கிறார்கள். இவர்கள் தேவனை நம்பிப் பெற்றுக்கொள்ளாதபோதும் கொடுப்பாரென்று எதிர்ப்பார்த்து¸ வாக்களிக்கப்பட்டது தாமதிக்கும்போதும் அதற்காக காத்திருக்கிறார்கள். எல்லாம் இருளானாலும்¸ மனதுக்கு வருத்தமானாலும் இவர்கள் முன்னேறி செல்கிறார்கள். சில வேளைகளில் அவர்களுக்கு இருக்கிறதெல்லாம் அவருடைய வாக்குத்தத்தம்தான். எல்லாம் குளிர்ந்து விறைத்து செத்துப்போனதுபோல உள்ளே காணப்பட்டாலும் புறம்பே எல்லாம் அவர்களுக்கு மாறாகக் காணப்பட்டாலும்¸ அச்சூழ்நிலையிலும் அவர்கள் தேவனை நம்பி¸ தங்கள் ஆண்டவரை உறுதியாய்ப் பிடிக்கிறார்கள்.

யாரை விசுவாகித்தேனென்று
நான் அறிவேன் அது நல்லது
நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை
பாதுகாத்திடுவார் எந்நாளும்.

எக்காலமும் அவரை நம்புங்கள்

மே 27

“எக்காலமும் அவரை நம்புங்கள்.” சங் 62:8

எப்பொழுதும் தேவனை நம்பலாமென்று நமக்குத் தேவனே தைரியம் கொடுக்கிறது மட்டுமல்ல¸ எக்காலத்திலும் நம்முடைய நம்பிக்கைக்கு அவர் பாத்திரர்தான். இப்படி எப்போதும் அவரை நம்பச் சொல்லியும் நாம் அவரை எப்போதும் நம்பாமல் போகிறோம். நாம் அவரை நம்புவது மிக அவசியம். சிருஷ்டியானது நம்பாமல் இருக்கலாமோ? அவரைச் சார்ந்திருக்கிறோம் எப்பதற்கு அது அத்தாட்சியானதால் அந்த நம்பிக்கையைப்பெற முயற்சி செய்ய வேண்டும். வேலைக்காரன் எஜமானை நம்ப வேண்டும். சிநேகிதன் சிநேகிதனை நம்ப வேண்டும். பிள்ளை தகப்பனை நம்பவேண்டும். விசுவாசி தேவனை நம்ப வேண்டும். அவருடைய வார்த்தை உண்மையானதால் அதை நம்ப வேண்டும். இரட்சகர் செய்த கிரியை பூரணமானதால் அதை நம்ப வேண்டும். தெய்வ செயலை நம்புவது நியாயமானதே.

அவர்மேல் நாம் வைக்கும் நம்பிக்கையை ஒன்றும் கலைக்கக்கூடாது. அவுருடைய தன்மை அன்பு. அன்புகூற அவர் உடன்பட்டுள்ளார். அவர் பொக்கிஷம் குறையாதது. அவர் இரக்கம் என்றுமுள்ளது. ஆகையால் துக்கத்திலும்¸ சந்தோஷத்திலும்¸ அந்த காரத்திலும்¸ வெளிச்சத்திலும்¸ நிறைவிலும்¸ குறைவிலும்¸ சோதனையிலும்¸ அமைதியிலும் அவரை நாம் நம்புவோமாக. அவரை நம்பினால் பயங்களை ஜெயிப்போம். துன்பங்களைச் சகிப்போம். வேலையில் காரியசித்திப் பெறுவோம். கவலைகளை ஒழித்து சத்துருக்களை விழத்தாக்குவோம். நாம் அவரை நம்பும்படிக்குதான் தம்முடைய குணாதிசயங்களை வெளிப்படுத்தி¸ தம்முடைய வாக்கையருளியுள்ளார். நம்மீது கோபமாய் இரேன் என்று சொல்லி¸ தாம் மாறாதவர் என்று உறுதிமொழி சொல்லியிருக்கிறார். ஆகையால் என்றைக்கும் கர்த்தரை நம்புவோமாக.

எக்காலமும் கர்த்தாவே
உம்மையே நம்புவேன்
நீரே எனக்கு எல்லாம்
என்றும் உம்மில் மகிழுவேன்.

உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தாரும்

மே 31

“உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தாரும்.” சங் 51:12

தாவீது ஒரு காரியத்தில் நஷ்டம் அடைந்தான். அதற்குக் காரணம் அவர் செய்த பாவம். அதைத் திருத்திக் கொள்ளப் பார்க்கிறான். நாம் இரட்சிப்பை இழந்துப் போகாவிட்டாலும், இரட்சிப்பினால் வரும் சந்தோஷத்தை இழந்துப் போகலாம். சந்தோஷம் சுவிசேஷத்திலிருந்து உண்டாகிறது. சுவிசேஷம் நல்ல செய்தி. சுப செய்தி. அதை விசுவாசித்தால் ஏறறுக்கொள்ளும்போது அது நம்மைச் சந்தோஷத்தாலும் சமாதானத்தாலும் நிரப்புகிறது. விசுவாசிக்கிற ஒவ்வொரு பாவிக்கும் அது நித்திய ஜீவனைக் கொடுப்பதாக அது உறுதி தருகிறது. தேவனிடமிருந்துப் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையைப் பெற்றுக்கொள்ளும்போது அந்த உறுதி நமக்குக் கொடுக்கப்படுகிறது. கிறிஸ்துவில் நமக்கு உள்ள நன்மையை அறிந்து, குற்றம் என்ற சுமை நம்மைவிட்டு நீங்கினதை உணர்ந்து, வாக்குத்தத்தங்களுக்;குள் நமக்கு இருக்கும் பாக்கியத்தைப் பார்க்கும்போது மகிழ்ச்சியால் நிரப்பப்படுகிறது.

இந்தச் சந்தோஷம் முன்னே கிடைத்தது. ஆனால் அதை இழந்துவிட்டோம். நமது தவறை உணர்ந்தும், சுவிசேஷத்தின் தன்மையை அறிந்தும் அதைச் சொந்தமாக்கிச் கொள்ளுகிற விசுவாசம் இல்லாமற்போகும்போது நாம் அந்தச் சந்தோஷத்தை இழந்துவிடுகிறோம். நாமாய் அடைய முடியாத சந்தோஷத்தைத் தேவனிடம் கேட்கலாம். நாமாய் சம்பாதிக்கக் கூடாததைக் கொடுக்கும்படி தேவனிடத்தில் கெஞ்சலாம். சந்தோஷத்தைத் திரும்பவும் தாரும் என்று கேட்பது நமது பெலவீனத்தைக் காட்டுகிறது. நம்முடைய புத்தியீனத்தை ரூபிக்கிறது. பாவத்தால் நாம் இழந்துவிட்டோம். தேவ ஒத்தாசை தேவை என்று அது காட்டுகிறது. அவர்தாம் நம்மை பாக்கியவான்களாக்கக் கூடும். இனி விழாதபடி நம்மை அது எச்சரிக்கிறது. நமது பாவங்களைக் குறித்துத் துக்கித்து, சோதனையில் விழாதபடி விழித்திருப்போமாக. அவநம்பிக்கைக்கும் இடங்கொடாதிருப்போமாக.

நான் முன்னறிந்த சந்தோஷம்
திரும்ப எனக்குத் தாரும்
உம்மைவிட்டு மறுபடியும்
பின் வாங்காதபடி தாரும்.

Popular Posts

My Favorites

மனுஷனுக்கு இந்த ஜீவனில் நன்மை இன்னதென்று அறிந்தவன் யார்?

அக்டோபர் 22 "மனுஷனுக்கு இந்த ஜீவனில் நன்மை இன்னதென்று அறிந்தவன் யார்?" பிர. 6:12 உலகக்காரியங்களில் மூழ்கியிருப்போருக்கு இக்கேள்வி வருத்தத்தைக் கொடுக்கும். தேவனுடைய செயல்கள்தான், இதற்கும் பதில் அளிக்கக்கூடும். சில நேரங்களில் வாழ்வும், சில நேரங்களில்...

நானே வழி