திட அஸ்திபாரம்

மே 30

“திட அஸ்திபாரம்.” ஏசாயா 28:16

மகிமை நிறைந்த இயேசு இரட்சகர் நிறைவேற்றின பூரண கிருபையானது பாவிகளின் நம்பிக்கைக்கு அஸ்திபாரம். மற்ற வேறு ஏதாவது ஒன்றின் பேரில் கட்டுவோமானால் நாம் நாசம் அடைந்துவிடுவோம். நமது நம்பிக்கைக்கு ஆதாரமாக கிறிஸ்துவோடு வேறெதையாவது சேர்ப்போமானால், அவரால் நமக்கு எவ்வித பயனும் இராது. கிறிஸ்து மட்டும்போதும். அவர் நமக்காக் கீழ்ப்படிந்து சம்பாதித்த புண்ணியம், அவர் பிராயச்சித்த பலி, காரிய சித்தியான அவர் மன்றாட்டு ஆகியவைகள்மேல் நித்தியத்திற்காக நாம் கட்ட வேண்டும். இவைகள் எல்லாம் ஒரே அஸ்திபாரம். இவைகளின்மேல் கட்டுவோமானால் பயம் இல்லை. இதுதான் உறுதியான அஸ்திபாரம்.

இரட்சகருடைய மகத்துவமும், அவருடைய குறைவற்ற குணாதிசயங்களும், அவர் செய்த புண்ணியமும், அவர் வாக்கின் உண்மையும் அஸ்திபாரத்தை இன்னும் பலமுள்ளதாக்குகிறது. கடந்த காலத்தில் அது உறுதியாய் நின்றது. இப்போதும் உறுதியாய் நிற்கிறது எப்போதும் அப்படியே நிற்கும். இயேசுவே அஸ்திபாரம். அவர்மேல் கட்டின எந்தப் பாவியும், எந்தக் குறையையும் கண்டதில்லை. எந்தப் புயலும் அதை அழிக்காது. எந்த வெள்ளமும் அதைக் கரைக்காது. பூமியதிர்ச்சியும் அதைச் சேதப்படுத்தாது. தேவனைப்போன்று அது உறுதியானது. நித்தியத்தைப்போல் நிலையுள்ளது. அதன்பேரில் மட்டும் கட்டுவோமாக. அப்படிக் கட்டி நம்முடைய அஸ்திபாரத்தைப் பார்த்து மகிழக்கடவோம். தீயமனிதரும் கேடு செய்கிறவர்களும் திரும்பத் திரும்ப தாக்கலாம். சாத்தான் அதை இடிக்க முயற்சிக்கலாம். ஆனால் தேவன்மேல் கட்டிய உறுதியான அஸ்திபாரம் நிலைத்திருக்கும். கர்த்தர் தம்முடையவர்களை அறிவார் என்பதற்கு இது முத்திரையாகிறது. போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசு கிறிஸ்துவையல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது.

எல்லாம் ஒழிந்துப் போனாலும்
இயேசு கன்மலை நிற்கும்
இதன்மேல் நிற்போம் எல்லோரும்
வாழ்வதென்றும் நிலைக்கும்.

உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தாரும்

மே 31

“உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தாரும்.” சங் 51:12

தாவீது ஒரு காரியத்தில் நஷ்டம் அடைந்தான். அதற்குக் காரணம் அவர் செய்த பாவம். அதைத் திருத்திக் கொள்ளப் பார்க்கிறான். நாம் இரட்சிப்பை இழந்துப் போகாவிட்டாலும், இரட்சிப்பினால் வரும் சந்தோஷத்தை இழந்துப் போகலாம். சந்தோஷம் சுவிசேஷத்திலிருந்து உண்டாகிறது. சுவிசேஷம் நல்ல செய்தி. சுப செய்தி. அதை விசுவாசித்தால் ஏறறுக்கொள்ளும்போது அது நம்மைச் சந்தோஷத்தாலும் சமாதானத்தாலும் நிரப்புகிறது. விசுவாசிக்கிற ஒவ்வொரு பாவிக்கும் அது நித்திய ஜீவனைக் கொடுப்பதாக அது உறுதி தருகிறது. தேவனிடமிருந்துப் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையைப் பெற்றுக்கொள்ளும்போது அந்த உறுதி நமக்குக் கொடுக்கப்படுகிறது. கிறிஸ்துவில் நமக்கு உள்ள நன்மையை அறிந்து, குற்றம் என்ற சுமை நம்மைவிட்டு நீங்கினதை உணர்ந்து, வாக்குத்தத்தங்களுக்;குள் நமக்கு இருக்கும் பாக்கியத்தைப் பார்க்கும்போது மகிழ்ச்சியால் நிரப்பப்படுகிறது.

இந்தச் சந்தோஷம் முன்னே கிடைத்தது. ஆனால் அதை இழந்துவிட்டோம். நமது தவறை உணர்ந்தும், சுவிசேஷத்தின் தன்மையை அறிந்தும் அதைச் சொந்தமாக்கிச் கொள்ளுகிற விசுவாசம் இல்லாமற்போகும்போது நாம் அந்தச் சந்தோஷத்தை இழந்துவிடுகிறோம். நாமாய் அடைய முடியாத சந்தோஷத்தைத் தேவனிடம் கேட்கலாம். நாமாய் சம்பாதிக்கக் கூடாததைக் கொடுக்கும்படி தேவனிடத்தில் கெஞ்சலாம். சந்தோஷத்தைத் திரும்பவும் தாரும் என்று கேட்பது நமது பெலவீனத்தைக் காட்டுகிறது. நம்முடைய புத்தியீனத்தை ரூபிக்கிறது. பாவத்தால் நாம் இழந்துவிட்டோம். தேவ ஒத்தாசை தேவை என்று அது காட்டுகிறது. அவர்தாம் நம்மை பாக்கியவான்களாக்கக் கூடும். இனி விழாதபடி நம்மை அது எச்சரிக்கிறது. நமது பாவங்களைக் குறித்துத் துக்கித்து, சோதனையில் விழாதபடி விழித்திருப்போமாக. அவநம்பிக்கைக்கும் இடங்கொடாதிருப்போமாக.

நான் முன்னறிந்த சந்தோஷம்
திரும்ப எனக்குத் தாரும்
உம்மைவிட்டு மறுபடியும்
பின் வாங்காதபடி தாரும்.

எக்காலமும் அவரை நம்புங்கள்

மே 27

“எக்காலமும் அவரை நம்புங்கள்.” சங் 62:8

எப்பொழுதும் தேவனை நம்பலாமென்று நமக்குத் தேவனே தைரியம் கொடுக்கிறது மட்டுமல்ல¸ எக்காலத்திலும் நம்முடைய நம்பிக்கைக்கு அவர் பாத்திரர்தான். இப்படி எப்போதும் அவரை நம்பச் சொல்லியும் நாம் அவரை எப்போதும் நம்பாமல் போகிறோம். நாம் அவரை நம்புவது மிக அவசியம். சிருஷ்டியானது நம்பாமல் இருக்கலாமோ? அவரைச் சார்ந்திருக்கிறோம் எப்பதற்கு அது அத்தாட்சியானதால் அந்த நம்பிக்கையைப்பெற முயற்சி செய்ய வேண்டும். வேலைக்காரன் எஜமானை நம்ப வேண்டும். சிநேகிதன் சிநேகிதனை நம்ப வேண்டும். பிள்ளை தகப்பனை நம்பவேண்டும். விசுவாசி தேவனை நம்ப வேண்டும். அவருடைய வார்த்தை உண்மையானதால் அதை நம்ப வேண்டும். இரட்சகர் செய்த கிரியை பூரணமானதால் அதை நம்ப வேண்டும். தெய்வ செயலை நம்புவது நியாயமானதே.

அவர்மேல் நாம் வைக்கும் நம்பிக்கையை ஒன்றும் கலைக்கக்கூடாது. அவுருடைய தன்மை அன்பு. அன்புகூற அவர் உடன்பட்டுள்ளார். அவர் பொக்கிஷம் குறையாதது. அவர் இரக்கம் என்றுமுள்ளது. ஆகையால் துக்கத்திலும்¸ சந்தோஷத்திலும்¸ அந்த காரத்திலும்¸ வெளிச்சத்திலும்¸ நிறைவிலும்¸ குறைவிலும்¸ சோதனையிலும்¸ அமைதியிலும் அவரை நாம் நம்புவோமாக. அவரை நம்பினால் பயங்களை ஜெயிப்போம். துன்பங்களைச் சகிப்போம். வேலையில் காரியசித்திப் பெறுவோம். கவலைகளை ஒழித்து சத்துருக்களை விழத்தாக்குவோம். நாம் அவரை நம்பும்படிக்குதான் தம்முடைய குணாதிசயங்களை வெளிப்படுத்தி¸ தம்முடைய வாக்கையருளியுள்ளார். நம்மீது கோபமாய் இரேன் என்று சொல்லி¸ தாம் மாறாதவர் என்று உறுதிமொழி சொல்லியிருக்கிறார். ஆகையால் என்றைக்கும் கர்த்தரை நம்புவோமாக.

எக்காலமும் கர்த்தாவே
உம்மையே நம்புவேன்
நீரே எனக்கு எல்லாம்
என்றும் உம்மில் மகிழுவேன்.

உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்கும்.

மே 29

“உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்கும்.” யாக் 1:3

தேவனை விசுவாசிக்கிறேன் என்கிறவன் தன் விசுவாசம் பரீட்சிக்கப்படமனதாயிருப்பான். ஒவ்வொரு விசுவாசியும் சோதிக்கப்படுகிறான். சாத்தானாலாவது, உலகத்தினாலாவது, பேர் கிறிஸ்தவர்களாலாவது நாம் சோதிக்கப்படுவோம். நம்முடைய சோதனையைப் பார்க்கிறவர் தேவன். தமது வசனத்தில் நாம் வைக்கும் விசுவாசம் உத்தமமானதா என்றும், அவருடைய அன்பில் நாம் வைக்கும் விசுவாசம் உத்தமமானதா என்றும், அவருடைய அன்பில் குமாரனில் மட்டும் பூரண இரட்சிப்படைய நாம் விசுவாசிக்கிறோமா என்றும், அவருடைய வாக்கை நிறைவேற்றுவார் என்றும் அவருடைய உண்மையில் விசுவாசம் வைத்து எதிர்பார்க்கிறோமா என்றும் நம்மை அவர் சோதிக்கிறார். நம்முடைய விசுவாசம் தேவனால் உண்டானதா, அது வேர் கொண்டதா என்று சோதித்தறிகிறார். நமது நம்பிக்கையின் துவக்கத்தை உறுதியாய்ப் பிடித்திருக்கிறோமா என்று நம் உறுதியை சோதித்தறிகிறார். இப்படி சோதிப்பது நமது சொந்த நன்மைக்கும் நலனுக்கும். அவரின் சொந்த மகிமைக்கும் ஆகும். நம்மை கவனிக்கிற மற்றவர்களுக்காகவும், நமது அனுபவத்தின் பிரயோஜனத்திற்காகவும் இப்படிச் சோதித்தறிகிறார்.

இப்படிச் சோதிப்பது பொறுமையை உண்டாக்கும். இத்தகைய சோதனை பொறுமையை உண்டாக்கும். அடிக்கடி வருத்தமில்லாமல் இருக்கிறதற்குப் பதிலாக பொறுமையையும், ஐசுவரியத்திற்குப் பதிலாக மனதிருப்தியையும் நமது சொந்த பெலனுக்குப் பதிலாக கிறிஸ்துவின் பெலனை நம்பவும் செய்யும். ஆகவே விசுவாசம் பரீட்சிக்கப்பட வேண்டும். துன்பங்கள் விசுவாசத்தைச் சோதிக்கும். தேவாசீர்வாதம் பெற்ற துன்பங்கள் நம்மைப் பொறுமையுள்ளவர்களாக்கும். பொறுமை நிறைவாகும்போது சோதனைகள் அற்றுபோம் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்வோமாக. ஆகையால் நீங்கள் பொறுமையுள்ளவர்களாய் இருங்கள்.

சோதனை வரும் அப்போ
என் பக்கம் வந்திடும்
சாந்தம் பொறுமை அளியுமே
உமக்கடங்கச் செய்யுமே.

Popular Posts

My Favorites

என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும்

ஜனவரி 13 "என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும்" மாற்கு 9:24 நம்முடைய விசுவாசம் பலவீனமுள்ளது. அவிசுவாசமோ மிகவும் பலமுள்ளது. தேவன் சொல்வதை நம்பாமல்போவது பாவத்தின் இயல்பு. வேத வாக்கியங்களை ஒரு கிறிஸ்தவன் முற்றிலும் நம்புகிறது நல்லது....