கன்மலையில் என்னைக் கொண்டுபோய் விடும்

யூன் 24

“கன்மலையில் என்னைக் கொண்டுபோய் விடும்.” சங். 61:2

இந்த வசனத்தில் சொல்லப்பட்டிருக்கும் அந்தக் கன்மலை கிறிஸ்துதான். முன்பு வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பிறகு முன்னடையாளங்களால் முத்தரிக்கப்பட்டு பிரசன்னமானவர் இவரே. தாகம் தீர்ப்பதற்காகவே அடிக்கப்பட்ட கன்மலை இவர். களைத்துப்போனவர்களுக்கு இளைப்பை அருளும் கன்மலை இவர். துன்பப்படுகிறவர்களை ஆதரிக்கும் கன்மலை இவர். பயந்து கலங்கினவர்கள் ஒதுங்கி நிற்கும் பிளவுண்ட கன்மலை இவர். இந்த கன்மலையின்மேல் நாம் சுகமாய்த் தங்கலாம். இந்தக் கன்மலையின்மேல் நின்று தூரத்திலுள்ள சியோனைப் பார்க்கலாம். இந்தக் கன்மலையில் இருந்தால் பூயலுக்கு பாதுகாக்கப்படலாம். சூரிய வெப்பத்துக்கு நிழலாய் தங்கலாம். ஆனால் நாமோ, இதன் அருமையை தெரிந்துக்கொள்ளாமல் அலைந்து திரிகிறோம். தூரத்தில் இருக்கும்போது இதன் பயனை உணர்ந்து இதனால் கிடைக்கும் சிலாக்கியத்துக்காக பெருமூச்சு விடுகிறோம்.

நாம் எங்கே இருந்தாலும் இந்தக் கன்மலையிடம் வரலாம். நம்மை நடத்த உள்ள துணையும் உதவி செய்யும் சிநேகிதனும் நமக்குத் தேவை. ஆகவே நாம் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் சங்கீதக்காரனைப்போல் என் இருதயம் தொய்யும்போது பூமியின் கடையாந்தரங்களிலிருந்து உம்மை நோக்கி கூப்பிடுவேன். எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய் விடும் என்று சொல்லுவோமாக. இயேசுவானவர் நமக்கு எல்லாமுமாய் இருக்கிறார். நமக்கு வேண்டியதெல்லாம் அவரிடம் உண்டு. எப்பொழுதும் ஜெபம் பண்ணலாம். தேவன் ஜெபத்தை ஏற்று தைரியப்படுத்தி, பதில் அளிக்கிறார். அவரிடத்தில் போவோமானால் பயங்களை வென்று சத்துருக்களை ஜெயித்து, நாம் எதிர்பார்க்கிறதிலும், அதிகம் பெறுவோம். நாம் கேட்கிறதற்கும் நினைப்பதற்கும் அதிகமாக அவர் செய்ய வல்லவர்.

சேர்ந்துப்போகும் தருணம்
இயேசுவினிடம் செல்லுவோம்
எந்தத் துன்பம் வந்தாலும்
கன்மலையை விடோம்.

நான் இரக்கம் பெற்றேன்

யூன் 19

“நான் இரக்கம் பெற்றேன்.” 1.தீமோ. 1:13

அப்போஸ்தலனாகிய பவுல் கிறிஸ்துவைத் தூஷித்து அவரைத் துன்பப்படுத்தி, அவருடைய ஊழியத்திற்குச் சேதம் உண்டாக்குகிறவனாய் இருந்தான். கர்த்தரோ இனி விசுவாசிக்க போகிறவர்களுக்கு மாதிரியாக அவனுக்கு இரக்கம் காட்டினார். இதனால் நிர்ப்பந்தனுக்கும் இரக்கம் கிடைக்குமென்றும், அவர் தமது சித்தத்தின்படி பாவிகளுக்கு இரக்கம் காட்டுகிறவர் என்றும் நாம் அறிந்துக்கொள்கிறோம். இரக்கத்தைத் தேடாத பவுலுக்கே இரக்கம் கிடைக்கும்போது இதைத் தேடுகிற எவருக்கும் கிடைக்கும் என்பது எத்தனை நிச்சயம். கர்த்தர் காட்டினதும், பவுல் பெற்றுக்கொண்டதுமான இரக்கம், கொடுமையான எண்ணிக்கைக்கு அடங்காததான எல்லா பாவத்தையும் பூரணமாக மன்னித்துவிடுமென்று காட்டுகிறது.

மனசாட்சி எவ்வளவாய்க் கலக்கப்பட்டாலும் இந்த இரக்கம் பூரண சமாதானத்தைக் கொடுக்கிறது. அது உள்ளான பரிசுத்தத்தைத் தந்து நமது நடக்கையைச் சுத்தம்பண்ணுகிறது. அது கிறிஸ்துவைப் பற்றின அறிவைச் சகலத்துக்கும் மேலாக எண்ணி அதை நாடித்தேடவும் மற்ற எல்லாவற்றையும் குப்பையென்று உதறி தள்ளவும் செய்கிறது. அது வியாகுலத்தைச் சகித்து ஆத்துமாவைப் பெலன் பெற செய்கிறது. அது தேவ நேசத்துக்கும் ஆத்தும இரட்சிப்பைப்பற்றின கவலைக்கும் நம்மை நடத்தி இயேசுவின் சபையோடு பலவித பாசத்தால் நம்மை சேர்த்து கட்டுகிறது. அன்பரே, நீ இரக்கம் பெற்றவனா? அந்த இரக்கம் பவுலுக்குச் செய்ததை உனக்கும் செய்திருக்கிறதா? எங்கே இரக்கம் இருக்கிறதோ அங்கே கனிகள் இருக்கும். இத்தனை நம்மைகளுக்கும் காரணமாகிய இரக்கம் எவ்வளவு விலையேறப்பெற்றது.

இரக்கத்திற்கு அபாத்திரன்
நீரோ இரக்கமுள்ளவர்
எல்லாரிலும் நான் நிர்ப்பந்தன்
ஏழைக்கிரங்குவீர் தேவா.

தேவனுடைய இராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறது

யூன் 17

“தேவனுடைய இராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறது.” லூக்கா 17:21

தேவன் தமது சிங்காசனத்தை மனிதனுடைய இருதயங்களில் வைக்கிறார். அவர் பூமியின்மேல் ஆளுகை செய்தாலும் அவர்களுக்குள் அரசாளுகிறார். ஒரு தேவனுடைய பிள்ளை ஒரே சமயத்தில், தேவ வாசஸ்தலமாயும், அவர் ஆலயமாயும், அவரின் இராஜ்யமாயும் இருக்கிறான். அவர் நமக்குள் வாசம் செய்து அரசாளுகிறார். மறு பிறப்பில் அவர் நம்மைச் சொந்தமாக்கி, நம்மை முற்றும்முடிய அவரின் ஊழிய மகிமைக்கும், புகழ்ச்சிக்கும் ஒப்புக்கொடுக்கும்போது நமக்குள் அரசாளுகிறார். அவர் இப்படி அரசாளுகிறதினால், தேவனோடு ஒப்புரவாகுதலும், தேவனாடு நேசமாகுதலும், தேவசித்தத்திற்கு முற்றும் கீழ்ப்படிதலும் அடங்கியிருக்கிறது.

இவையெல்லாம் அவரின் கிரியைகளினாலும், தயவினாலும், ஆவியானவரின் தேற்றுதலினாலும் உண்டாகிறது. கர்த்தர் ஆளுகைச் செய்யும் இடத்தில், ஆத்துமா குற்றம் நீங்கி, தேவ சமாதானத்தை அனுபவித்து, பிதாவின் மகிமையை உணர்ந்து ஆனந்தங்கொள்ளுகிறது. ஒருவன் ஆண்டவரின் ஆளுகைக்குள் வரும்போது இருதயத்தில் பகை கொல்லப்பட்டு மனதில் இருள் நீங்க மாய்மாலம் நீங்கி, தேவனுக்குக் கீழ்ப்படிய வேண்டுமென்ற சிந்தைப் பிறக்கிறது. தேவ சித்தமே அவனுக்குப் பிரமாணம். கிறிஸ்து முடித்த கிரியை அவனுக்கு அருமை. தேவ மகிமை அவன் நாடும் மகிமை. அவன் விரோதி அவனுக்கு சிநேகிதனாகிறான். இராஜதுரோகி உத்தம குடிமகனாகிறான். அந்நியன் அருமையான பிள்ளையாகிறான். தேவ இராஜ்யம் நமக்குள் இருந்தால், தேவ வாக்குகளைப் பிடித்தவர்களாய் தேவனுக்கு பிரியமாய் நடக்கப் பார்க்க வேண்டும்.

கர்த்தாவே என்னை ஆளும்,
என் பாவம் கழுவும்,
சமாதானத்தை அளியும்,
தேவ மகிழ்ச்சியாய் நிரப்பும்.

சிலுவையைப்பற்றி வரும் இடறல்

யூன் 06

“சிலுவையைப்பற்றி வரும் இடறல்.” கலா. 5:11

சிலுவையில் அறையப்பட்ட ஒரு யூதனாலே இரட்சிப்பு உண்டு என்கிற உபதேசம் பவுல் அப்போஸ்தலனுடைய காலத்தில் பெரிய இடறலாய் இருந்தது. அதனால் அநேகர் இடறி விழுந்து கெட்டுப்போனார்கள். கிறிஸ்துவை விசுவாசிப்பதினால்மட்டும் நிறைவான இரட்சிப்பு உண்டு என்கிற உபதேசம் இன்னும் அநேகருக்கு இடறலாய்த்தான் இருக்கிறது. சுபாவ மனுஷன் தான் விசேஷத்தவன் என்றும் தான் ஏதாவது சாதிக்க வேண்டுமென்றும், தன்னை எல்லாரும் மேன்மையாக எண்ணவேண்டுமென்றும் ஆசைக்கொள்ளுகிறான். ஆனால் கிருபையினால் உண்டாகும் இரட்சிப்பைக் குறித்த உபதேசத்திற்கு முன்பாக மனுஷன் ஒன்றுமில்லை.

என்றும் கிறிஸ்துதான் எல்லாவற்றிற்கும் எல்லாம் என்றும், சிலுவையில் அறையப்பட்டவர்தான் நாம் விசுவாசிக்க தக்க இலக்கு என்றும், இது நம்முடைய நம்பிக்கைக்கு ஆதாரம் என்றும், இதுவே எல்லாம் ஆசீர்வாதமும் பாய்கிறதற்கு வாய்க்கால் என்றும் நமக்கு முன்னிருத்துகிறது. தேவ அன்பு நம்மை சிலுவையைப் பார்ம:மு கவனித்து, அதையே வாஞ்சிக்கும்படி செய்கிறது. இச்சிலுவை யோக்கியனையும், அயோக்கியனையும், ஞானியையும், வைத்தியக்காரனையும், ஏழையையும், ஐசுவரியவானையும் ஓரே வகையாய் இரட்சித்து ஆண்டவர் முடித்த கிரியைகளை எல்லாரும் ஒன்றுபோல் பற்றிப்பிடிக்கச் செய்து தேவ சமுகத்தில் எந்த மனிதனும் மேன்மைப் பாராட்ட கூடாதென்றே போதிக்கிறனது. சிலுவை மனிதனுடைய பெருமைக்கு பெரிய இடறல். மனுஷீகத்தின்படி சுவிசேஷம் ஒருவனையும் நிதானியாமல் இயேசுவைச் சுட்டிக்காட்டி, நெருக்கமான வாசல் வழியாய், இடுக்கமான பாதையில் நடத்தி, இரட்சிப்புக்குத் தன்னை வெறுத்தல், ஒழித்தல் அவசியமென்று போதித்து, ஒன்று கிறிஸ்துவை விசுவாசி, அல்லது கெட்டுப்போ என்கிறது. இதுவே சிலுவையின் இடறல்.

எவ்வசை நல் ஈவும்
இயேசுவாலே வரும்
அவர் சிந்தின இரத்தம்
நீங்கா தேவ வருத்தம்.

அவர்கள் தேவனுடைய புத்திரராய் இருக்கிறார்கள்

யூன் 15

“அவர்கள் தேவனுடைய புத்திரராய் இருக்கிறார்கள்.” ரோமர் 8:14

தேவனுடைய ஆவியானவரால் நடத்தப்படுகிறவர்கள்தான், தேவனுடைய புத்திரர், தேவ பிள்ளைகளை ஆவியானவர் எந்த இலக்கை நோக்கி நடத்துகிறார்? தங்களுக்கு இரட்சகர் தேவையென்று அறியவும், கிறிஸ்து இயேசு தங்களுக்கு மிகவும் ஏற்றவர் என்று காணவும், அவர் நிறைவேற்றின கிரியை போதுமென்று பிடிக்கவும், அவரின் ஜீவனையும் வெளிச்சத்தையும் பெற்றுக்கொள்ளவுமே அவர்களை நடத்துகிறார். சுருங்கக் கூறினால், தங்களை வெறுத்து, பாவத்தை விட்டு மனந்திரும்பி, உலகைவிட்டு பரிசுத்தத்தை வாஞ்சித்து கர்த்தருக்கு ஊழியம் செய்து, மகிமைக்கு தங்களை ஒப்புக்கொடுக்கவே அவர்களை நடத்துகிறார்.

இப்படி தேவாவியினால் நடத்தப்படுகிறவர்கள்தான் தேவபுத்திரர். இவர்கள் உலகத் தோற்றத்திற்கு முன்பே முன் குறிக்கப்பட்டவர்கள். இப்போது இவர்கள் உன்னதமான தேவனுடைய பிள்ளைகளென்று அறிவிக்கப்படுகிறார்கள். அவர்கள் தேவனால் பிறந்தவர்கள். தேவனால் போதிக்கப்பட்டவர்கள். பிள்ளைகளாக நடத்தப்படுகிறவர்கள். தேவனுக்குச் சுதந்தரவாளிகள். கிறிஸ்துவின் கூட்டாளிகள். மேலான கனத்தில் பங்கு பெறவும், பரலோக ஆனந்தத்தை அனுபவிக்கவும் அழைக்கப்பட்டவர்கள்.

அன்பர்களே! நாம் ஆவியானவரால் நடத்தப்படுகிறவர்களா? அவர் இன்று நம்மை கிறிஸ்துவினிடம் நடத்தினாரா? நமக்குத் தாழ்மையைக் கற்றுக்கொடுத்தாரா? கிறிஸ்து நமக்கு அருமையானவரா? நாம் தேவபுத்திரரானால் பயமில்லை. நமக்கு வேண்டியதெல்லாம் கிடைக்கும்.

குமாரனுடய ஆவி
அடையட்டும் பாவி
உம்மைவிட்டு விலகேன்
ஓருக்காலும் உம்மை விடேன்.

என் நேசர் என்னுடையவர், நான் அவருடையவள்

யூன் 27

“என் நேசர் என்னுடையவர், நான் அவருடையவள்.” உன். 2:16

பரிசுத்த நிச்சயம் கொண்ட எவரும் இப்படித்தான் சொல்லுவர். கிறிஸ்து பிதாவினால் பாவிகளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறார். அவர் தான் தேவன் கொடுத்த சொல்லி முடியாத ஈவு. விசுவாசம் அதை ஏற்று அங்கிகரிக்கிறது. கிறிஸ்துவை ஏற்றுக்கொள்கிறது பயபக்தியான அர்ப்பணிப்பால் உறுதிப்படுகிறது. அப்படி ஏற்றுக்கொள்கிறவர்கள் அவருடையவர்களாயிருப்பர். அவருடையவராக மட்டும் இருப்பேன் என்று வாக்குக் கொடுக்கின்றனர். இது பரிசுத்த ஐக்கியத்தால் உறுதிப்படுகிறது. கிறிஸ்து தன்னுடையவர் என்று சொல்லுகிறவன் அவரோடு ஐக்கியப்பட்டவனாய் ஜீவிக்கிறான். என் நேசர் நாம் விசுவாசித்து நம்கும் இரட்சகர். நான் மதித்து நேசிக்கிற தெய்வம். நான் வணங்கி கீழ்ப்படிகிற ஆண்டவர். என் மனமும், யோசனையும் பற்றிப் பிடித்துக்கொள்ளும் அவருமையானவர். நான் என் நேசருடையவள். அவர் என்னைத் தெரிந்துகொள்ளாமல் போயிருந்தால் நான் அவரைத் தெரிந்துக் கொள்ளாமல் இருந்திருப்பேன்.

அவர் என்னை மீட்டார். இல்லாவிட்டால் நான் இன்னும் அடிமையாகவே இருப்பேன். அவர் என்னை அழைத்தார். இல்லாவிட்டால் தேவனை விட்டு இன்னும் அலைந்து திரிகிறவனாயிருப்பேன். அவர் என்னைப் பரிசுத்தப்படுத்தினார். இல்லாவிட்டால் அவர் மகிமையை இன்னும் காணாதிருப்பேன். நான் என் நேசருக்கு மனையாட்டியின் தோழி. நான் அவரின் பங்கு. அவரின் மகிழ்ச்சி. அவரில் வெற்றி பெற்று கொண்டு வந்த கொள்ளைப் பொருள்களில் மிமையான கிரீடம். அன்பர்வளே! இந்த நிச்சயத்தைப் பெற்றுக்கொள்ளப்பாருங்கள். அவர் என்னுடையவர், நான் அவருடையவன் என்று உண்மையாகச் சொல்லும்வரைக்கும் ஓயாதேயுங்கள்.

இயேசுவே என் சொந்தம்
அவரில் சுகம், ஜீவன் அடைவேன்
நான் அவருடையோன் ஆகவே
மணவாட்டிப்போல் களிப்பேன்.

தேவனுடைய வாக்குத்தத்தங்கள்

யூன் 05

“தேவனுடைய வாக்குத்தத்தங்கள்” 2.கொரி. 1:20

கர்த்தருடைய வாக்குத்தத்தங்கள், அவர் தம்முடைய ஜனங்களை ஆசீர்வதித்து, அவர்களுக்கு இரக்கம் காட்டுவேன் என்று கொடுத்த உறுதி மொழிகள் ஆகும். அவர் சுயாதிபதியான தேவனானபடியால் அவரிடத்திலிருந்து வரும் வாக்குத்தத்தங்கள் அவருடைய அன்புக்கு அடையாளங்கள். அவைகள் வாக்குப்பண்ணினவரை ஒரு கட்டுக்குள்ளாக்குகிற திவ்ய தயவான செய்கைகள். அவர் பிதாவின் அன்பால் நமக்காக கவலை;படுகிறார். அவருடைய உண்மையும் உத்தமுமாகிய மாறாத அஸ்திபாரத்தின்மேல் அவைகள் நிற்கின்றன.

வாக்குத்தத்தங்கள் அவர் ஜனங்களி;ன் சொத்தாகவே இயேசுவில் பத்திரப்பட்டிருக்கின்றன. இம்மைக்கும் மறுமைக்கும் உரிய சகலமும் அவைகளுக்குள் அடங்கி நமக்கு ஏற்றவைகளாய் இருக்கின்றன. இது தேவனுடைய இருதயத்தை அவைகள் திறந்து, விசுவாசியினுடைய விசுவாசத்தை வளர்த்து, பாவியின் நம்பிக்கையை உயிர்ப்பிக்கின்றன. கிறிஸ்துவின் மத்தியஸ்த ஊழியத்தை அவை அதிகப்படுத்துகின்றன. ஏனென்றால் தீர்க்கதரிசியாக அவைகளை முன்னுரைக்கிறார். ஆசாரியராக அவைகளை உறுதிப்படுத்துகிறார். அரசனாக அவைகளை நிறைவேற்றுகிறார். அவைகளெல்லாம் விசுவாசத்திற்குச் சொந்தம். நம்முடைய நன்மைக்காகத்தான் அவைகள் கொடுக்கப்பட்டன. யோகோவாவின் கிருபையைத் துதிப்பதே அவைகளி; முடிவு. அவைகளெல்லாம் கிறிஸ்துவின் ஊற்றாகிய நிறைவுக்கு நம்மை நடத்தி எச்சரிப்பு, நன்றியறிதல், துதி ஆகியவற்றைப் பிறப்பிக்கும்.

தேவவாக்கு உறுதியானது
இதுவே என் நம்பிக்கை
அவர் சொன்னது எல்லாம்
நிறைவேற்றுவார் அன்றோ.

ஜீவ வசனத்தைப் பிடித்துக்கொண்டு

யூன் 22

“ஜீவ வசனத்தைப் பிடித்துக்கொண்டு.” பிலி. 2:14

சுவிசேஷத்தைப் பிடித்துக்கொண்டு கிறிஸ்துவானவரைக் குறித்த வாக்குத்தத்தத்திலும் அவருடைய கிரியையிலும் உள்ள ஜீவனை இது வெளிப்படுத்துகிறது. குற்றவாளிகளாகத் தீர்க்கப்பட்டவர்களுக்கு ஜீவனை தேவனுடைய இலவச ஈவாகக் கொடுக்கிறது. வசனம் ஆவியானவரின் வல்லமையினால் ஜீவனை அளிக்கப் பயன்படுகிறது. இந்த ஜீவ வசனம்தான் தேவ தயவிலும், கிறிஸ்துவின் ஐக்கியத்திலும், ஆவியானவரைப் பெறுவதிலும், ஜீவ வழியில் சேர்ப்பதிலும், ஆக்கினைத் தீர்ப்புக்கு விலக்குவதிலும், நித்திய மகிமைக்கு சேர்ப்பதிலும் நம்மை நடத்துகிறது. இந்தச் சுவிசேஷம் நமக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிறது. மற்றவர்களுக்காக நம்மிடம் ஒப்புவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த வசனத்தை நாம் அந்தகாரத்தில் வெளிச்சத்தைப்போலவும், பசியினால் வருந்தும் பாவிக்கு உணவுப்போலவும், ஆயுள் குற்றவாளிக்கு மன்னிப்புப்போலவும், மீட்கப்பட்டவர்களுக்கு சட்ட நூலாகவும் தூக்கிப் பிடிக்க வேண்டும். தேவ ஊழியத்தில் பரிசுத்த நடத்தையாலும், கனியுள்ள வாழ்க்கையினாலும், அதைத் தூக்கிப் பிடிக்க வேண்டும். அன்பர்களே, சுவிசேஷத்தை ஜீவனுள்ள வசனமாக ஏற்றுக்கொள்வோமாக. அதைப் பிறர்க்குச் சொல்லுவது நம்முடைய கடமையென்று எண்ணுவோமாக. அந்தக் கடமையைச் சரியானபடி நிறைவேற்றுகிறோமா என்று நம்மை நாமே கேட்போமாக. அச்சிட்டுள்ள அவர் வசனத்தை வாங்கிப் பிறர்க்குக் கொடுப்பதினாலும் அவ்வாறு செய்பவர்களுக்கு உதவி செய்வதினாலும் ஜீவ வசனத்தைத் தூக்கிப் பிடிப்போமாக.

நன்றி உள்ளவர்களாய் என்றும்
சேவை செய்வோம் அவருக்கு
நம் இயேசுவைப் புகழ்ந்து
நம்மையே அவருக்குக் கொடுப்போம்.

கர்த்தருடைய ஜனமே அவருடைய பங்கு

யூன் 20

“‘கர்த்தருடைய ஜனமே அவருடைய பங்கு.” உபா. 32:9

தேவன் என் பங்கு என்று சொல்லும்போது நாம் நன்றியறிதலாலும், சந்தோஷத்தாலும் நிரப்பப்படுகிறோம். தேவன் தம் ஜனங்களுடைய பங்கென்பதே நம்மை அதிசயத்தினாலும், ஆச்சரியத்தினாலும், நிரப்பத்தக்கது. அவர் எவ்வளவோ பெரியவர். இவர்கள் எவ்வளவோ அற்பர். அவர் எவ்வளவோ பரிசுத்தர். மகிமை நிறைந்தவர். இவர்கள் எவ்வளவோ கொடியவர்கள். ஆனால் பூமியில் எல்லாரயும் பார்க்கிறவர் இந்த ஜனத்தை மட்டும் தனக்காகத் தெரிந்துகொண்டார். கொடுர பகைவன் வலையிலிருந்து மீட்டு தம் பக்கம் இழுத்து, தமது நேசத்தை அவர்கள்மேல் வைத்து, தமக்குச் சொந்தம் பாராட்டுகிறார். தம்முடைய ஆலயமாக அவர்களில் வாசம்செய்து அவர்களைத் தம் பிள்ளைகளாக ஆதரித்து, அவர்களை மோட்சகரை சேர்ப்பார். அவர்கள் கர்த்தருடைய பங்கு. அவருடைய சுதந்தரம். அவருடைய திராட்சத்தோட்டம். அவருடைய பூங்கா.

விசுவாசியே! கர்த்தர் உன்னைத் தம் பங்கென்று நினைத்து உன்மேல் கவனம் வைத்ததை நினைத்துப்பார். முன்னே நீ திரிந்து அலைந்த ஆடாய் இருந்தாய். இப்போது உன் ஆத்தும மேய்ப்பனும், கண்காணியுமானவரிடத்தில் வந்து சேர்ந்திருக்கிறாய். தேவதூதர்களையே அவர் தம் பங்கென்றும் ஆபரணங்களென்றும் சொல்லவில்லை. ஆனால் உன்னை அப்படி சொல்லி அழைத்திருக்கிறார். ஆகவே அவரோடு உண்மையான மணவாட்டியாக அவருடன் ஐக்கியப்பட்டு நடந்து பரமவீடு போய்ச்சேர கவனமாயிரு. அவரின் கிருபைக்குச் செலுத்தவேண்டியதைச் செலுத்து. ஏனென்றால் தேவனின் சுத்த தயவால் நீ மற்றவர்களிலிருந்து வித்தியாசப்பட்டு இருக்கிறாய்.

தேவ பக்தர்கள் அவர் பங்கு
இராப்பகல் அவர்களைக் காப்பார்
அதே இயேசுவின் களிப்பு
அதில் அவர் மகிழ்வார்.

விசுவாசம் அன்பு என்னும் மார்கவசம்

யூன் 07

“விசுவாசம் அன்பு என்னும் மார்கவசம்.” 1.தெச.5:8

எப்பொழுதுமே நாம் போராடிக்கொண்டிருக்கிறோம். சத்துருக்கள் நம்மைச் சூழ்ந்திருந்தார்கள். இரட்சிப்பின் அதிபதி நமக்கு ஆயுதங்களைச் சவதரித்து தந்திருக்கிறார். அந்த ஆயுதங்கள் முழுவதையும் எடுத்து அதைக் கொண்டு நம்மைத் தற்காக்க வேண்டும். அன்பு விசுவாசம் இவைகளால் செய்யப்பட்ட மார்க்கவசத்தை எடுத்து இருதயத்தைக் காத்துக்கொள்ள வேண்டும். இவ்விரண்டும் ஆவியானவருடைய சிறப்பான கிருபைகள். விசுவாசம் என்பது தேவன் பேரில் வைக்கும் நம்பிக்கை. அன்பென்பது தேவனைப்பற்றும் பாசம். இவை வெவ்வேறானாலும் ஒன்றாய் சேர்ந்திருக்கிறது. தம்மையில் வேறுபட்டாலும் இணைந்திருக்கிறது.

விசுவாசம் எப்போதும் அன்பைப் பிறப்பிக்கும். அன்பு விசுவாசத்தை உறுதிப்படுத்தும். இவ்விரண்டும் இருந்தால் ஒரு கிறிஸ்தவன் எந்தச் சத்துருவையும் எதிர்க்கலாம். விசுவாசம் எப்போதும் கர்த்தராகிய இயேசுவைப் பாவிகளின் இரட்சகராகவும் சிநேகிதனாகவும் ஆண்டவராகவும் பிடித்துக்கொள்கிறது. அன்போ கண்பளுக்குத் தோன்றின தேவனாகவும் கிருபை ஊற்றாகவும் பிடித்துக்கொள்ளுகிறது. விசுவாசம் வாக்குத்தத்தங்களை ஏற்றுக்கொண்டு அவைகளை நம்புகிறது. அன்பு அதிசயத்து அவைகளுக்காய் துதி செலுத்துகிறது. விசுவாசம் நீதிமானாக்கிக் கொள்ள கிறிஸ்துவின் நீதியைத் தரித்துக் கொள்ளுகிறது. அன்போ மகா மகிமை நிறைந்ததாகக் கிறிஸ்துவில் களிகூறுகிறது. விசுவாசம் அனுதின சுத்திகரிப்பாக திறந்த ஊற்றண்டைக்கு நம்மை நடத்திச் செல்லுகிறது. அன்போ ஐக்கியப்பட்ட நம்மை அவர் சிங்காசனத்தண்டை நடத்துகிறது. விசுவாசம் ஆதரவுக்காகக் கிறிஸ்துவை நோக்குகிறது. அன்போ, அவருக்காய் உழைக்கவோ துன்பப்படவோ ஆயத்தமாயிருக்கிறது. விசுவாசம், மோட்சம் நம்முடைய வீடு என்று நமடக்குச் சுட்டிக்காட்டுகிறது. அன்போ அங்கே சீக்கிரம் போக நம்மை ஏவிவிடுகிறது.

விசுவாசம் அன்பும்
எனக்கிருந்தால் போதும்
அப்போது வெற்றி பெற்ற
மோட்ச இன்பம் அடைவேன்.

Popular Posts

My Favorites

திட அஸ்திபாரம்

மே 30 "திட அஸ்திபாரம்." ஏசாயா 28:16 மகிமை நிறைந்த இயேசு இரட்சகர் நிறைவேற்றின பூரண கிருபையானது பாவிகளின் நம்பிக்கைக்கு அஸ்திபாரம். மற்ற வேறு ஏதாவது ஒன்றின் பேரில் கட்டுவோமானால் நாம் நாசம் அடைந்துவிடுவோம். நமது நம்பிக்கைக்கு...