ஏப்ரல்

முகப்பு தினதியானம் ஏப்ரல்

ஒன்று செய்கிறேன்

ஏப்ரல் 07

“ஒன்று செய்கிறேன்.” பிலி. 3:13

உலகத்தில் நாம் வைக்கப்பட்டிருக்கிற விசேஷித்த நோக்கத்தின் மேல், நமது விருப்பங்கைளயும், நினைவுகளையும், எண்ணங்களையும் வைப்பது மிகவும் முக்கியம். தாவீது கர்த்தருடைய வீட்டில் வாசம்பண்ணவேண்டுமென்கிற ஒரே ஒரு காரியத்தையே விரும்பினான். மரியாள் தன்னைவிட்டு எடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துக்கொண்டாள். பவுல் பரம அழைப்பின் பந்தயப்பொருளின்மேல் நோக்கமுள்ளவனாயிருந்தான். கடந்து போனதை மறந்து மேலானவைகளை, இனிமையான பரம காரியங்களை, அதிக பயனுள்ளவைகளை நாடினான். கடந்து போனதும் நிகழ் காலத்திலுள்ளதும் போதுமென்று நினைக்கவில்லை. அவர் விருப்பம், விரிவானது. அவன் நம்பிக்கை மேலானது. தேவனுக்காக செய்ய வேண்டியதெல்லாம் செய்ய வேண்டும். தேவனிடத்திலிருந்து பெற்றுக்கொள்ளக்கூடிதெல்லாம் பெற்றுக் கொள்ள Nவுண்டும். கூடியமட்டும் இயேசுவைப்போல மாறவேண்டும். இதுவே அவனுடைய பெரிய விருப்பமாய் இருந்தது.

அன்பானவர்களே, இது எவ்வளவாய் நம்மைக் கடிந்துக்கொள்ள வேண்டும்? தீர்மானித்தவைகளினின்று நமது மனம் எத்தனை முறை பின்வாங்கி போயிருக்கிறது? நமது இருதயம் முன்னானவைகளை மறந்துவிட்டிருக்கிறது? இயேசுவானவர் தமக்கு முன்வைக்கப்பட்ட சந்தோஷத்தின் மேலேயே நோக்கமாயிருந்தார். மோசே இனிவரும் பலனின்மேல் நோக்கமாயிருந்தான். பவுல் உலகின் காரியங்களைப் பாராமல் நித்திய காரியங்களைNயு நாடினான். அந்த ஒரே காரியத்தின்மேல் நமது மனதையும் குறியையும் உறுதியாய் வைக்கவேண்டியது அவசியம். தம்முடைய மக்களை உற்சாகப்படுத்த இயேசு கிறிஸ்து காப்பிக்கிறதும், அந்த நாளில் அவர்களுக்குக் கொடுக்கப்போகிறதுமான காரியந்தான் அது.

பந்தயத்தை இலக்காக
வைப்பதொன்றே தேவை
பின்னானதை மறந்து
இயேசுவில் மோட்சம் காண்பேன்.

நம்மை இரட்சித்தார்

ஏப்ரல் 08

“நம்மை இரட்சித்தார்” 2.தீமோ. 1:9

இரட்சிப்பு இம்மையிலும் கிடைக்கும் நன்மை. நாம் கிறிஸ்துவுக்குள் வந்தால் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். தேவன் நம்முடைய பாவங்களை மன்னித்து நம்மை நீதிமான்களாக்கி நம்முடைய பாவத்தை மாற்றி நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார். இப்போதும் விசுவாசத்தின் பலனாக ஆத்தும இரட்சிப்பைப் பெற்றிருக்கிறோம். ஆனால் இன்னும் நாம் பொல்லாப்பினின்றும், சத்துருக்களினின்றும், பயங்களினின்றும் முற்றிலும், நீங்கலானவர்களல்ல. என்றாலும் நமது இரட்சிப்பு நிச்சயந்தான். நாம் இப்பொழுது பூரணமாய் கிறிஸ்துவைப்போல் இல்லை. ஆனால் அவர் இருக்கிற வண்ணமாய் அவரைப் பார்ப்போம். ஆதலால் அவரைப் போலிருப்போம்.

ஒவ்வொரு விசுவாசியும் நீதிமானாக்கப்பட்ட நிலைமையில் இருக்கிறபடியால், தேவனோடு நடந்து தேவனுக்காக வேலை செய்து, தேவ சித்தத்துக்கு ஏற்றபடி வாழ வேண்டும். கிறி;ஸ்து நம்முடையவர். அவருடையதெல்லாம் நமக்குச் சொந்தம். தேவன் நம்முடையவர். அவருடைய குணாதிசயங்களுக்கும், ஆளுகைக்கும் குறைவுவராமல் அவர் நமக்காகச் செய்யக்கூடியதையெல்லாம் செய்வார். இந்த நிச்சயத்தை அறிந்தவர்ப்போல நாம் வாழ வேண்டும். அப்போஸ்தனாகிய பவுல் அப்படித்தான் ஜீவித்தான். இந்த நிச்சயம்தான் வேலைக்கு நம்மைப் பலப்படுத்தி, போராட்டத்தில் நம்மைத் தைரியப்படுத்தி, அடிமைக்குரிய பயத்தையெல்லாம் நீக்கி, கர்த்தருக்கென்று முற்றிலும் நம்மை அர்ப்பணிக்க உதவும். நமக்கு உறக்கம் வரும் வரையிலும் படுக்கையிலே இதைப்பற்றியே தியானிப்போம். தேவன் என்னை இரட்சித்திருக்கிறவர். எனக்கு அவர் சுகத்தையும், ஐசுவரியத்தையும் பட்சமுள்ள உறவினர்களையும், வீட்டு வசதிகளையும் ஓருவேளை கொடாதிருப்பினும், நித்திய இரட்சிப்பினால் என்னை இரட்சித்துள்ளார்.

கிறிஸ்துவால் மீட்கப்பட்டேன்
மேலானதையே நாடுவேன்,
ஸ்தோத்தரித்துப் போற்றுவேன்
அன்பின் சிந்தையில் நடப்பேன்.

நீதிமான்களின் உயிர்த்தெழுதல்

ஏப்ரல் 06

“நீதிமான்களின் உயிர்த்தெழுதல்.” லூக்கா 14:14

கிறிஸ்துவுக்குள்  மரித்தவர்கள் முதலாவது உயிர்த்தெழுந்திருப்பார்கள். அழியாமையுள்ளவர்களாய்ப் பலத்தோடும் ஆவிக்குரிய மகிமையோடும் எழுந்திருப்பார்கள். கிறிஸ்துவின் மகிமையான சரீரத்துக்கு ஒப்பான சரீரம் அவர்களுக்கு இருக்கும். அவருடைய சத்தம் அவர்களை உயிர்ப்பித்து, அவருடைய வல்லமை அவர்களை எழுப்பும். அவரின் மகிமை அவர்களைச் சூழ அலங்காரமாயிருக்கும். அவர்கள் அவரைப்போலவே இருப்பார்கள். காரணம் அவர் இருக்கிறவண்ணமாகவே அவரைப் பார்ப்பார்கள். அந்த உயிர்த்தெழுதலின் வேளை எவ்வளவு ஒரு மகிழ்ச்சியாய் இருக்கும்.

நாமும் அதோடு சம்மந்தப்பட்டவர்களாயிருந்தும் அதைப்பற்றி அதிகம் நினைக்கிறதில்லை. அந்த நேரத்தை ஆவலாய் எதிர்ப்பார்க்கிறதில்லை. ஒருவேளை தூக்கத்தில் நாம் மரித்து அடுத்த காலை உயிர்த்தெழுதலின் காலையாய் இருக்கலாம். அல்லது இருக்கிறோமா? நீதிமான்களுடைய உயிர்த்தெழுதல் மகிமை நிறைந்தவர்களாய்ப் புறப்பட்டு வருவார்கள். ‘இயேசுவோடு ஐக்கியப்பட்டு, அவர் மகிமையில் பங்கடைந்து, அவர் இருக்கும் இடத்தில் அவரோடுகூட தியானிக்க வேண்டும். தினந்தோறும் அதற்கு ஆயத்தமாக வேண்டும். அவர் சமீபித்திருக்கிறதாக அறிந்து நடக்க வேண்டும். உயிர்த்தெழுதல் அடையும்படி, பிரயாசப்பட்டு துன்பத்தை சகித்து ஜெபித்த பவுலைப்போல் நாமும் இருக்கவேண்டும். முதலாம் உயிர்த்தெழுதலில் பங்குடையவன் பாக்கியவான்.

விண்மண்ணிலுள்ளோர் யாவரும்
மகா கர்த்தாவைப் போற்றுங்கள்
இயேசு இராஜன் தோன்றுவார்
இரட்சிப்பளிக்க வருவார்.

எசேக்கியா மனமேட்டிமையானான்

ஏப்ரல் 26

“எசேக்கியா மனமேட்டிமையானான்” 2.நாளா. 32:25

எசேக்கியா மனமேட்டிமையில் அதிகம் வளர்ந்து விட்டான். அவன் நல்லவன்தான். சற்று நேரத்துக்கு முன்னே தேவன்புக்குரிய சாட்சி பெற்றான். நாம் மாம்சத்தின்படி பெருமை வாய்ந்தவர்களானபடியால் தேவன் நமக்குத் தயவு காட்டும்போது நாம் வெகு அதிகமாய் இன்னும் மனமாட்டிமை கொள்கிறோம். தேவன் சோதிக்கும்போது  முறுமுறுக்கிறோம். தேவன் அதிகமாய் தம்மை நமக்கு வெளிப்படுத்தும்போதுதான் டிடிடிடிடி அதிகம் சோதிப்பார். ஆகவே நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். பெருமையைப் பகைக்கிறது போல் வேறெதையும் அவ்வளவு அதிகம் பகைக்கிறதில்லை. அடிகனநநந445வர் அதைச் சகிக்க அவ்வளவு அதிகம் பகைக்கிறதில்லை. அவர் அதைச் சகிக்க மாட்டார். ஆனாலும் நாம் பெருமையில்தான் அதிகம் விழுந்து விடுகிறோம்.

பெருமையுள்ள இருதயம் நல்ல கனிகளைக் கொடாது. தாழ்மையுள்ள இருதயம் ஆவியின் கனிகளைக் கொடுக்கும். பெருமையால், பகையும் விரோதமும், பாகுபாடும், இருதய கடினமும், அடையாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். பெருமைப்பட்டால் தேவன் நம்மை கீழேத் தள்ளி எசேக்கியாவின் விஷயத்தில் செய்ததுப்போல் நமக்கும் செய்ததுப்போல் நமக்கும் செய்துவிடலாம். சாத்தான் நாம் பெருமையில் வளர வேண்டும் என்பதால் நாம் ஜெபம்பண்ணுவதை விட்டுவிடச் செய்வான். ஜெபம்செய்வதை நிறுத்துவோமானால் சாத்தானுடைய ஆதிக்கத்திற்குக் கீழே இருப்போம். அவனோடிருந்தால் பெருமை வந்துவிடும். ஆகவே கிருபை பெறுமுன் எப்படி இருந்தோம். கிருபையை பெறாவிட்டால் எப்படி இருப்போம். கிருபையினால் தேவன் நம்மை இரட்சிக்காவிட்டால் நம்முடைய நிலைமை எப்படி இருக்குமென்று எண்ணி தாழ்மையாய் இருப்போமாக.

இயேசுவே உம்மைப்போல் நான்
தாழ்மையுள்ளோன் சுத்தவான்
சாந்தம் உள்ளவனாக
இருக்கச் செய்யும் தேவன்.

அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன்

ஏப்ரல் 22

“அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன்” சங்கீதம் 116:12

ஒவ்வொரு நாளும் முடியும்போது இப்படி கேட்பது நல்லதல்லோ? இன்று மாலை துதி செலுத்த வேண்டியதாயிருந்தாலும் இந்த நாளில் கடந்த காரியங்களை மட்டும் நினைக்கக் கூடாது. கர்த்தர் நமக்கு செய்தது என்ன என்று நம்மை நாமே கேட்க வேண்டும். அவர் எண்ணிலா நன்மைகளைச் செய்திருக்கிறார். இல்லாவிட்டால் நன்மையுள்ளவர்களாய், ஆசீர்வாதமுள்ளவர்களாய் நாம் இருக்க மாட்டோம். அவர் கிருபைகளைத் தந்து பயங்களைப் போக்கி, விடுதலையளித்துத் தேவைகளைச் சந்தித்து விசுவாசத்தை உறுதிப்படுத்தி மகிமைப்படுத்துவேன் என்று வாக்களித்திருக்கிறார். நாம் பெற்றுக்கொள்வதெல்லாம் உபகாரந்தான். அது சுத்தக் கிருபையிலிருந்துப் பிறந்து, அபாத்திரருக்கு நன்மையை அளிப்பதாய் உள்ளது.

பிதா நமக்கு தமது குமாரனைக் கொடுத்தார். நாம் நிறைவேற்றின கிருபைகளைக் கொடுத்தார். ஆவியானவர் தமது ஜீவனைத் தந்து நம் இருதயத்தில் குடிகொண்டுள்ளார். ஆகவே அவருக்கு என்னத்தைச் செலுத்துவோம்? நாம் என்ன செலுத்தக்கூடும்? என்ன செலுத்த மனதாய் இருக்கிறோம்? நாம் வரங்கள் பெற்றிருக்கிறோமென்றால், அதை அவர் புகழ்ச்சிக்கென்று பிரயோகிப்போமாக. அவர் திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்து, அவர் சத்துருக்களுக்கு விரோதமாய் போராடுவோமாக. அவர் ஊழியத்தில் துன்பங்களைச் சகித்து, ஏழைகளுக்கு நம்முடைய பொருளைக் கொடுப்போமாக. அவரோடு நெருங்கி சஞ்சரிக்கிறதுதான் அவருக்குப் பிரியம். அவர் சுவிசேஷத்தை உலகிற்கு அறிவித்து வியாதியுள்ளவர்களைச் சந்தித்து, அவருடைய எளியவர்களுக்கு உதவிசெய். உன் சம்பத்துக்குத்தக்கபடி உன் நன்றியறிதலைக் காட்டு. ஓரே வாழ்க்கையைக் கிறிஸ்துவுக்காய் பிரதிஷ்டைப்பண்ணி ஜீவியம்பண்ணு. தேவனுக்காய் பிரதிஷ்டை செய்யப்பட்ட சீஷனாக ஜீவனம்பண்ணு.

கர்த்தர் காட்டும் தயவுக்கு
பதில் என்ன செய்வேன்
அவர் வழிகளைக் காத்து
அவர் சொற்படி நடப்பேன்.

சமாதானம் சமாதானம்

ஏப்ரல் 05

“சமாதானம் சமாதானம்.” ஏசாயா 57:19

இவ்விதமான மிருதுவான அமைதி தரும் வார்த்தைகளைத்தான் சுவிசேஷம் நமக்குச் சொல்லுகிறது. நமக்கு வரும் எத்துன்ப நேரத்திலும், சோதனையிலும், வியாதியிலும், வருத்தத்திலும் அது நம்மிடம் சமாதானம் சமாதானம் என்றே சொல்லுகிறது.

பாவத்தைப் பரிகரிக்க இயேசு மரித்ததால் சமாதானம், மோட்சத்தில் உனக்காகப் பரிந்து பேச இயேசு உயிர்த்ததால் சமாதானம், சகலத்தையும் ஆளும் இயேசுவின் கரத்தில் உன் பிரச்சனைகள் இருப்பதால் உனக்குச் சமாதானம். கிறிஸ்து உன்னை நேசிக்கிறதினால் உனக்குச் சமாதானம். அவரின் மரணத்தில் நீ ஒப்புரவாக்கப்பட்டபடியினால் உனக்குச் சமாதானம். மனம் கலங்கவேண்டாம், உன்னைப்பற்றி தேவன் கொண்டிருக்கும் எண்ணம் எல்லாமே சமாதானம். உன்னைக் குறித்துத் தேவனால் தீர்மானிக்கப்பட்டதெல்லாம் சமாதானம். பரலோகமும் உன்னோடு சமாதான உறவை ஏற்படுத்திக் கொள்கிறது.

கிறிஸ்து உனக்காக மரித்தபோதும், உன் பாவம் தொலைந்தபோதும் உன் சமாதானம் நிறைவேறி முடிந்தது. உனக்குச் சமாதானம் உண்டாக்குகிற அவரையே நோக்கிப்பார். கெத்செமனே கொல்கொதா இவைகளை அடிக்கடி நினைத்துக்கொள். தேவனைச் சமாதானத்தின் தேவனாகவும் பரலோகத்தைச் சமாதானத்தின் வீடாகவும் சிந்தனை செய். உம்மை உறுதியாய் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால் நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர் என்கிற வாக்கை அடிக்கடி தியானி. உன் மனதில் கர்த்தரின் சமாதானம் தங்கட்டும்.

விசுவாசம் வர்த்திக்கப்பண்ணும்
சமாதானம் அளித்திடும்
உமது பெலனை நம்புவேன்
பாவத்தால் கலங்கிடேனே.

தம்மைத்தாமே தாழ்த்தினார்

ஏப்ரல் 15

“தம்மைத்தாமே தாழ்த்தினார்” பிலி. 2:8

இவ்வாறு தம்மைத் தாழ்த்தினவர் யார்? மகிமையின் பிரகாசமானவர், பிதாவின் அச்சடையாளமானவர் தேவனோடிருந்தவர். தேவனாயிருந்தவர். வல்லமையுள்ள தேவனும், நித்திய சமாதானப் பிரபுவுமானவர், எப்படி அவர் தம்மைத் தாழ்த்தினார்? நம்முடைய தன்மையை எடுத்து அடிமையின் ரூபம் எடுத்து, மரண பரியந்தம் கீழ்ப்படிந்து தம்மைத் தாழ்த்தினார்.

மாட்டு தொழுவத்தைப் பார், தச்சுப் பட்டரையைப் பார், நாசரேத்தூர் குடிசையைப் பார், யோர்தான் நதியைப் பார், தலை சாய்க்க இடமின்றி அலைந்தவரைப் பார். கெத்செமனேயைப் பார், கொல்கொதாவைப் பார், யோசேப்பின் கல்லறையைப் பார், இவைகயையெல்லாம் பார்த்தான் அவர் எவ்வளவாய் தன்னைத் தாழ்த்தினார் என்பது விபரிக்க வேண்டி இராது. எல்லாம் உனக்குத் தெரிந்ததே. ஏன் இப்படி தன்னை தாழ்த்தினார் என யோசி. அவர் நம்மை நேசித்தபடியினால் தம்மைத் தாழ்த்தினார். அளவற்ற அன்பினால் ஏவப்பட்டு மகத்துவமானவர் தம்மைத் தாழ்த்தினார். மனுஷரோடு பழகி, நமது குறைகளையும், பெலவீனங்களையும் அறிந்ததினால், நமக்கு பெலன் தர தம்மைத்தாழ்த்தினார். நமக்கு உதவிடும்படி மரணம் மட்டும் பணிந்து தாழ்த்தினார். நமக்கு உயர்த்த தம்மைத் தாழ்த்தினார். நம்மை மேன்மைப்படுத்த தம்மைச் சாபமாக்கினார். நாம் மகிழ்ந்து பாட அவர் பெருமூச்சு விட்டார். சாபமாக்கினார். நாம் மகிழ்ந்து பாட அவர் பெருமூச்சு விட்டார். நாம் பிழைக்க அவர் மரித்தார். நாம் சிங்காசனம் ஏற அவர் சிலுவையில் ஏறினார். ஆச்சரியமான தாழ்மை. அதிசயமான அன்பு.

பாவிக்காய் மனதுருகி
தேவன் இரத்தம் சிந்தினார்
இது என்ன அதிசயம்
எவர்க்கும் விளங்கா இரகசியம்.

நீ என்னை மகிமைப்படுத்துவாய்

ஏப்ரல் 10

“நீ என்னை மகிமைப்படுத்துவாய்” சங். 50:15

துன்பங்கள் கர்த்தரை நோக்கி ஜெபிக்கும்படி நம்மை ஏவிவிடும்போது அவர் நமக்கு அன்பாய் செவி கொடுத்து தயவாய் உத்தரவருள்வார். ஜெபத்திற்கு உத்தரவு கொடுத்து நம்மை விடுவிக்கும்போது நாம் அவரைத் துதித்துப் போற்றுவோம் என்று அவர் எதிர்பார்க்கிறார். அபாத்திரராகிய நமக்கு அவர் காட்டும் தயவைத் துதிக்கும்போது அவர் வார்த்தைகள் உண்மையாகிறது. ‘தேவன் உண்மையுள்ளவர்” என்று அவரைக்குறித்து அவர் சிங்காசனத்தண்டைக்குப் போகிற யாவருக்கும் இதை நாம் சொல்லும்போது அவரை மகிமைப்படுத்துகிறோம். வேத வசனத்தை நம்பி, அவர் பிள்ளைகள்போல் வாழந்து, அவர் சொன்னபடியே செய்வாரென்று எதிர்பார்த்து, சோதனையிலும், வேதனையிலும் அவர் பாதத்தண்டையில் சேர்ந்து அமர்ந்து அவரைத் தொழும்போது அவரை மகிமைப்படுத்துகிறோம்.

நஷ்டங்களில் அவருக்குக் கீழ்ப்படிந்து, சோதனைகளில் அவருக்கு நம்மை அர்ப்பணித்து, தினமும் நமது இருதயத்தை அவருக்குப் பலியாக சமர்ப்பித்து அவரை மகிமைப்படுத்த வேண்டுமென்று ஆசைக்கொண்டு, அவர் ஊழியத்தை கருத்தாய் செய்து, அவரின் ஜனங்களை மனமார நேசித்து, நம் விருப்பப்படியல்ல, அவர் சித்தப்படி என்று நடக்கும்போது அவரை உண்மையாய் மகிமைப்படுத்துகிறோம். இது ஒன்Nறு நமது தலையான கடமையாகட்டும். ஒவ்வொரு காலையிலும் நாம் நமது ஆத்துமாவைப் பார்த்து, ஆத்துமாவே, நீ இன்றைக்கு உன் தேவனை மகிமைப்படுத்த வேண்டுமென்று திட்டமாய் கற்பித்து ஒவ்வொரு மாலையிலும் அந்நாள் முழுவதும் கர்த்தருடைய மகிமையையே முக்கியமாகக் கருதி வாழந்தோமா என்று நம்மையே சோதித்துப் பார்ப்போமாக.

தேவ நாமத்தைப் போற்று
அவர் துதியை என்றும் சாற்று
அவர் சொல்லையே தியானித்து
உன் நடையைச் சீர்ப்படுத்து.

கர்த்தருடைய சித்தம் ஆகக்கடவது

ஏப்ரல் 12

“கர்த்தருடைய சித்தம் ஆகக்கடவது” அப். 21:14

தேவன் அன்பாகவே இருக்கிறார். அவர் வாக்கு உண்மையானால் அவர் சொன்னபடி செய்கிறவரானால், அன்போடும் நீதியோடும் இரக்கம் பரிசுத்தம் இவைகளால் அவர் நடத்துவாரானால், நமக்கு மகிமையையும், நன்மையையும் உண்டாக்குவது அவர் சித்தமானால், நாமும் இப்படியே அனுதினமும் சொல்ல வேண்டாமா? இந்த விருப்பம் நமது இருதயத்திலும் வளர விட வேண்டாமா? அவர் ஞானம் அளவற்றது. அவர் ஞானமுள்ளதை விரும்புகிறார். அவர் நமது ஷேமத்தையே விரும்புகிறார். நோக்கம் வைத்தே தேவன் கிரியை செய்கிறார். அவர் என்னதான் நமக்குச் செய்தாலும் நாம் நமது சொந்த சித்தப்படியே நடக்கப் பார்க்கிறோம். இப்பொழுது இருக்பிற நிலைமையிலும் வேறுவிதமாய் இருந்தால் நல்லது என்கிறோம். நமது தேவனுடைய சாமர்த்தியம், உண்மை, தயவு இவைகளில் குறைவுபடுகிறோம். எத்தனை மதியுPனம் இது. சில வேளைகளில் யோசனை இல்லாமைதான் இதற்குக் காரணம். விசுவாசக் குறைவினாலும் இது உண்டாகலாம். ஆனால் தன்னயப் பிரியமாகிய பாவந்தான் இதற்கு முக்கிய காரணம். இதற்குக் காரணம் சுய இஷ்டமே. அதனால் வருத்தமும் அடைகிறோம்.

தேவனை எதிர்க்கிறதுpனால் நம்மை வருத்தப்படுத்திக்கொள்கிறோம். உம்முடைய சித்தம் செய்யப்படுவதாக என்று ஜெபிக்கிறோம். தேவனுடைய சித்தம் நிறைவுள்ளதென்றும் மேன்மையானது என்றும் சொல்கிறோம். ஆனால் நம் பிரியப்படி நடவாவிட்டால், தேவன் நம்மை சோதித்தால், நம்மை பரீட்சித்தால், நாம் முறுமுறுக்கிறோம் அல்லது சோர்ந்து விடுகிறோம். விசுவாசியே, நீ பரிசுத்தமாய் இருக்கவேண்டும். பாக்கியவானாய் இருக்கவேண்டும். நித்திய நன்மையை அடைய வேண்டும் என்று விரும்புகிறார். ஆகவே உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் சுய இஷ்டத்தை உடனே உதறித் தள்ளி எப்பொழுதும் அவர் சித்தம் ஆகக்கடவது என்று சொல்லிப்பார்.

என் ஜீவ காலமெல்லாம்
தேவை எதுவோ தருவீர்
உமது சித்தமே நலம்
அதுவே என் பாக்கியம்..

கிறிஸ்துவின் அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது

ஏப்ரல் 17

“கிறிஸ்துவின் அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது” 2.கொரி. 5:14

நேசிக்கிறவர்களுடைய குணத்துக்கும் தன்மைக்கும் தக்கபடியே அவர்களின் நேசமும் இருக்கும். இயேசு கிறிஸ்து நிறைவுள்ளவரானபடியால் மேலான குணங்கள் எல்லாம் அவரிடத்தில் இருந்தது. அவருடைய அன்பு அதிசயமானது, மகிமையானது. அதில் பாவிகளுக்காக உருகும் உருக்கமும் நீதிமான்களுக்கா மகிழும் மகிழ்ச்சியும் இருக்கிறது. பிதா அவரை நேசிக்கிறதுபோலவே நம்மை அவர் நேசிக்கிறார். பிதா அவர்மேல் வைக்கும் அன்பு எவ்வளவு அதிகமென்று நமக்குத் தெரியாததுப்போலவே அவர் நம்மேல் வைக்கும் அன்பின் அளவு தெரிந்துக்கொள்ள முடியாது.

அன்பு அவர் இருதயத்தில் வாசம்பண்ணி அவர் கண்களில் விளங்கி, தமது கைகளினால் கிரியை செய்து, அவர் நாவில் பேசி அவரால் சகலத்தையும் சம்பாதிக்கிறது. இயேசு எந்த நிலைமையும் தாழ்வாக எண்ணவில்லை. எந்தச் செயலையும் கேவலமாய் நினைக்கவில்லை. எந்தக் குறைவையும் பார்த்துவிட்டுப் போகவில்லை. எந்த ஈவையும் பெரியதாக எண்ணவில்லை. எந்தத் துன்பத்தையும் சகிக்கக் கூடாதென்று சொல்லவில்லை. தமது ஜனத்தின் மத்தியில் கண்ட எந்த நன்மையையும் அற்பமாய் எண்ணவில்லை. அவர்களுக்கு நன்மை செய்ய எந்தப் பேதமும் பார்க்கவில்லை. கிறிஸ்துவின் அன்பு, சொல்லுக்கும் நினைவுக்கும் அடங்காதது. இந்த அன்பால் ஏவப்பட்டு நான் அப்போஸ்தலர்கள் உழைத்தார்கள். துன்பத்தைச் சகித்தார்கள். இரத்த சாட்சிகளாய் மரித்தார்கள். கிறிஸ்துவின் அன்பை நாம் உணருவோமானால் நம்மை அவருக்கு ஒப்புக்கொடுத்து சகலத்தையும் வீணென்று தள்ளுவோம். அவருக்காக எதையும் சகிக்க, உழைக்க, மரிக்க கொடுக்க அவரின் அன்பே நன்மை ஏவிவிடுகிறது. கிறிஸ்துவின் அன்பு ஜாக்கிரதைக்கும், வைராக்கியத்துக்கும், உதாரகுணத்துக்கும் உன்னை ஏவி விடுகிறதா?

பாவம் விட்டொழிக்க
கிறிஸ்துவின் அன்பு ஏவுது
அவருக்கு என்னை ஒப்புவிக்க
அது என்னை நெருக்குது.

Popular Posts

My Favorites

அவர் நெறிந்த நாணலை முறியார்

அக்டோபர் 29 "அவர் நெறிந்த நாணலை முறியார்" மத்.12:20 அருள் நாதர் இயேசுவின் மனம் எத்தனை மென்மையானது. அவர் குணம் சாந்தமானது. ஆகையால் எவராயினும் அவரிடம் வர அச்சங்கொள்ள வேண்டாம். எந்தப் பெலவீனனும், எந்நேரத்திலும், எப்பிரச்சனையுடனும்...