முகப்பு தினதியானம் தேவனுடைய வாக்குத்தத்தங்கள் எல்லாம் இயேசு கிறிஸ்துவுக்குள்… ஆமென் என்றும் இருக்கிறது

தேவனுடைய வாக்குத்தத்தங்கள் எல்லாம் இயேசு கிறிஸ்துவுக்குள்… ஆமென் என்றும் இருக்கிறது

யூலை 23

“தேவனுடைய வாக்குத்தத்தங்கள் எல்லாம் இயேசு கிறிஸ்துவுக்குள்… ஆமென் என்றும் இருக்கிறதே” 2.கொரி. 1:20

சூரியனில் வெளிச்சம் எல்லாம் இருப்பதுப்போல கிருபை எல்லாம் கிறிஸ்துவுக்குள் இருக்கிறது. வேதத்தில் உள்ள வாக்குத்தத்தங்கள் எல்லாம் இயேசுவில் ஒன்று சேர்கின்றன. வாக்குத்தத்தங்கள் தேவனுடைய தன்மைகளையும் அவரின் மகத்துவங்களையும் வெளிப்படுத்துகின்றன. அவை கிருபையிலிருந்துத் தோன்றி அளவற்ற தயவுக்கு அத்தாட்சி ஆகின்றன. அவை அளவற்ற இரக்கத்தை வெளிப்படுத்தி நம்முடைய விசுவாசத்தையும் நம்பிக்கையையும் பலப்படுத்துகிறனது. அவை கிறிஸ்துவில் இருக்கின்றன. உண்மையான சாட்சியாக அவருடைய வாயிலும், உடன்படிக்கைக்கு அவர் கையிலும், சபையில் மணவாளனாக அவருடைய மனதிலும், சகலத்திற்கும் சுதந்தரவாளியாக அவருடைய சுதந்திரத்திலும் அவை இருக்கின்றன.

சகலமும் நம்முடைய முற்பிதாக்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட இரக்கமாக அவரில் அடங்கியிருக்கிறது. தீர்க்கதரிசியாக அவைகளை வெளிப்படுத்தி, ஆசாரியனாக அவைகளை உறுதிப்படுத்தி, இராஜாவாக அவைகளை இயேசு நிறைவேற்றுகிறார். இவைகளில் சில உலகத்திற்கு அடுத்தது. சில சபைக்கு மட்டும் உரியது. சில சரீரத்துக்கும் ஆத்துமாவுக்கும் அடுத்தது. எந்தக் காலத்திற்கும் உதவும், நித்தியத்திற்கும் ஏற்றது. கிறிஸ்துவில் எந்த வாக்குத்தத்தமும் கிரேக்கனுக்கு ஆம் என்றும், யூதனுக்கு ஆமென் என்றும் இருக்கிறது. அதாவது யூதனானாலும், கிரேக்கரானாலும் விசுவாசிகள் யாவருக்கு அவை உறுதிப்படுத்தப்பட்டு இருக்கின்றன. அன்பர்களே, அவைகளை விசுவாசித்து, ஜெபத்தில் பயன்படுத்தி நம் ஆத்துமாக்கள் அவைகளின் மேல் இளைப்பாறும்படி செய்வோமாக. அவை நமக்காகக் கொடுக்கப்பட்டவை. அதை அவர் நமக்காக நிறைவற்றுவார். ஏனெனினில் தேவன் உண்மையுள்ளவர்.

இதுவே என் நம்பிக்கை
இதன்மேல் நிற்பேன்
உமது வாக்கு உண்மை
உமது வார்த்தை சத்தியம்.