முகப்பு தினதியானம் இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு

இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு

யூலை 27

“இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு” லூக்கா 15:2

இதுதான் நமது இரட்சகருக்கு விரோதமாய் சொல்லப்பட்ட வழக்கு. அவர் பாவிகளை ஏற்றுக்கொண்டார் என்ற வார்த்தை நமக்கு எவ்வளவோ ஆறுதலைத் தருகிறது. அவர் பாவிகளாகவே நம்மை ஏற்றுக்கொண்டார். இன்றும் அவர் பாவிகளை ஏற்றுக்கொள்கிறார். அவர்கள் பாவங்கள் நிமித்தமே அவர்களை ஏற்றுக்கொள்கிறார். அவர்கள் எவ்வளவு கெட்ட பாவிகயாய் இருந்தாலும், எவ்வளவு அற்பரும் மற்றவர்களால் புறக்கணக்கப்பட்டவர்களாய் இருந்தாலும், அவர்கள் எவ்வளவு தாழ்வானவர்களாய் இருந்தாலும் இன்னும் அவர்களை ஏற்றுக்கொள்கிறார். எந்த இடத்திலும் எக்காலத்திலும் பாவிகளை வித்தியாசமின்றி ஏற்றுக்கொள்கிறார். எவ்வளவு தீட்டுள்ள கெட்டப் பாவியாய் இருந்தாலும் அவர்கள் ஏற்றுக்கொள்ள எந்தத் தகுதியும் இல்லாதிருந்தும் அவர்களைக் கிருபையாய் ஏற்றுக்கொள்கிறார்.

அவர்களின் பாவங்களை மன்னித்து அசுத்தத்திலிருந்து கழுவி, குற்றங்களைப் பரிகரித்து, நீதிமான்களாக்கி, காயங்களைக் கட்டி, புது சிருஷ்டிகளாய் மாற்றி, தமது மகிமைக்கென்று உபயோகப்படுத்த அவர்களை ஏற்றுக்கொள்கிறார். விசேஷித்த ஜனங்களாய் பூமியில் நற்கிரியைக் குறித்து வைராக்கியராகவும், தம்மோடு மோட்சத்தில் என்றைக்கும் மகிமைப்படுத்தவும் அவர்களை ஏற்றுக்கொள்கிறார். பிரியமானவேர, தேவனிடத்தில் பரிசுத்தனாய் போக முடியாதென்று கண்டால் இயேசுவினிடத்தில் பாவி என்று போ. இந்த நிமிடமே அவர் உன்னை ஆசீர்வதிக்கக் காத்து நிற்கிறார். ஆகையால் போ.

இயேசுவின் இரத்தம் கழுவி
குற்றம் நீக்கிடும்
ஆத்துமாவை அலங்கரித்து
பேரின்பத்தில் சேர்த்திடும்.