முகப்பு தினதியானம் அக்டோபர் நான் என்னை அருவருக்கிறேன்

நான் என்னை அருவருக்கிறேன்

அக்டோபர் 24

“நான் என்னை அருவருக்கிறேன்” யோபு 42:6

தேவன் எவ்வளவாக தம்மை தெரியப்படுத்துகிறாரோ, அவருடைய ஆவியானவர் எவ்வளாக நம்மில் கிரியை செய்கிறாரோ, அவ்வளவாக நாம் நம்மைத் தாழ்த்த வேண்டும். தங்களைத் தாங்களே மெச்சிக்கொள்ளுகிறவர்கள், தேவனோடு நெருங்கி வாழ்வது என்பதை உணராதவர்கள். நாம் தேவனோடு நெருங்கி வாழ்ந்தால், நம்முடைய சரியான நிலையை அறிந்து கொள்வோம். தேவனுக்குத் தூரமாய் இருக்கும்பொழுது நாம் நம்மைக் குறித்தே மிகப்பெருமையாக யோசித்துக்கொள்ளலாம். ஆனால், அவரின் முன்னிலையில் வந்தடைந்தால், நாம் அழகானவை என்றெண்ணியதெல்லாம் அவலட்சணமாக நமக்குத் தோன்றும். நாம் அழுக்கானவர்கள் என்று உள்ளபடியே உணருவோம். நாம் ஒன்றுமில்லை என்று தெரிந்துகொள்வோம்.

யோபு தற்பெருமை பாராட்டித் தேவனோடு வழக்காடினான். அவன் தேவனுக்கு அருகில் வந்தவுடன் அவனுடைய சிந்தனைகள் முற்றிலும் மாறி, என் காதினால் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டேன், இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது. ஆகையால், நான் என்னை அருவருத்து, தூளிலும், சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன் என்றான். நாம் நம்மைப் பாவிகள் என்றும், தீய வழியில் நடப்பவர்கள் என்றும் எண்ணி நம்மையே அருவருக்கலாம். நம் நேசர் நம்மை இரட்சிக்க வலிமையற்றவர். விருப்பமில்லாதவர் என்றும் நாம் கூறலாம். ஆனாலும், தேவனுக்குமுன் நம்மை நாமே வெறுத்துத் தாழ்த்தும்போதுதான் தேவகிருபை நமக்கு மேன்மையாகத் தோன்றும். கிறிஸ்துவை நாம் ஒப்பற்றவராய் எண்ணுவோம். நாம் நம்மை வெறுத்து, தாழ்த்தி தேவனை உயர்த்துவோம்.

நான் என்னை வெறுக்க
உம்மாட்சி எனக்குக் காட்டும்,
உம்மைப் பார்த்து நான்
என் தாழ் நிலை அறிவேன்.