முகப்பு தினதியானம் டிசம்பர் தன் காலத்தை மனுஷன் அறியான்

தன் காலத்தை மனுஷன் அறியான்

டிசம்பர் 16

“தன் காலத்தை மனுஷன் அறியான்” (பிர.9:12)

வருங்காலத்தில் நேரிடப்போவது யாதென்று நாம் அறியோம். வருங்காலம் ஓர் இருண்ட நேரம் மறைவதைப்போன்று நமக்கு மறைக்கப்பட்டிருக்கிறது. இனி நடக்க இருப்பதென்னவென்று நாம் அறிய முடியாது. நமது எதிர்காலம் நமக்கு மறைக்கப்பட்டுள்ளதால், நாம் அது குறித்து யாதும் செய்ய முடியாது. சாத்தான் நம்மிடம் வரும் நேரத்தையும், நமக்குச் சோதனைகள் வரும் காலத்தையும் நாம் அறியோம். நமது வீழ்ச்சியும், எதிரிகளின் வெற்றியும், எதிரியின் திட்டமும் நமக்குத் தெரியாதவை. நமது மரண நாளும் நம் அறிவிற்கு அப்பாற்பட்டதுதான். வெகு அண்மையிலேயே நமது மரணம் இருப்பினும் நாம் அதை அறிய மாட்டோம்.

இதனால் நாம் தேவனையே சார்ந்திருக்க வேண்டும். அவருடைய காரியங்களை அறிய நாம் இன்னும் தாழ்மையைக் கற்கவேண்டும். அவரையே முழு மனதோடு நேசிக்க வேண்டும். அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும், எதிர்த்து நிற்கக் கூடாது. நாமிருக்கும் இந்நிலை நமக்கு எச்சரிப்பையும், பயத்தையும் கொடுக்கிறபடியால், நாம் மனமேட்டிமை அடையாமல் அவருக்குப் பயந்து இருக்கவேண்டும். அவருடைய பணிகளைக் கருத்தாகச் செய்ய வேண்டும். நமது வாழ்க்கையில் அவரது நோக்கங்கள் நிறைவேறுமாறு ஜெபிக்கவேண்டும். தேவனுடைய திட்டத்தை நாம் அறிந்துகொள்ள நாம் துதிகளோடும், ஜெபங்களேயாடும் எப்போதும் கருத்தாயிருக்க வேண்டும். பயம், கவலை, வெறுப்பு, ஆகிய பெலவீனங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். நம் கால்கள் சாத்தானின் கண்களில் அகப்பட்டிருந்தாலும், சீக்கிரம் அவர் வந்து விடுவிப்பார். நம்மை நித்திய காலத்திற்குமாகத் தம்மிடம் சேர்த்துக்கொள்ள, சீக்கிரம் இரண்டாம் முறை வரப்போகிறார். அதுமட்டும் வழித்திருந்து ஜெபம் செய்வோம்.

எங்கள் நாமம் உமது கரங்களில்
எங்கள் நாட்களை நாங்கள்
அறியோமாதலால் எங்கள் நாட்களை
அறியும் அறிவைத் தாரும், கர்த்தாவே.