முகப்பு தினதியானம் ஜனவரி கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுக்கு நலம்

கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுக்கு நலம்

ஜனவரி 31

“கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுக்கு நலம்.” நெகே. 8:10

பயமும் துக்கமும் நம்மை பெலவீனப்படுத்தும். விசுவாசமும் சந்தோஷமும் நம்மைப் பெலப்படுத்தும். அதுவே நமக்கு ஜீவனைக் கொடுத்து, நம்மை தைரியப்படுத்தி உற்சாகப்படுத்துகிறது. நமது தேவனைப் பாக்கியமுள்ள தேவனென்றும் ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவனென்றும் சொல்லுச் செய்கிறது. அவர் நம்மை பாக்கியவான்களாக்குகிறார். அவர் சகலத்துக்கும் ஆறுதலில் தேவனாயிருக்கிறார். ஆகவே நம்மை ஆறுதல்படுத்தி மகிழ்ச்சியாக்குகிறார். இரட்சிப்பின் கிணறுகள் நமக்குண்டு, அதனிடத்திலிருந்து மகிழ்ச்சியோடே தண்ணீர் மொண்டும் கொள்ள வேண்டும். அந்த நிறைவான ஊற்றிலிருந்து எந்த அவசரத்திற்கும் தேவையானதை நாம் அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

அடிக்கடிப்போய் கேட்கிறோமே என்று அச்சப்படத் தேவையில்லை. உங்கள் சந்தோ}ம் நிறைவாயிருக்கும்படிக்குக் கேட்டுப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று ஆண்டவர் சொல்பதைக் கேளுங்கள். நம்மை நாமே வெறுத்து இயேசுவின் சிலுவையைச் சுமந்துக்கெர்டு வாழ்க்கை நடத்தினால்தான் நாம் பாக்கியசாலிகளாவோம். சந்தோஷமுள்ள கிறிஸ்தவன் தான் பெலமுள்ள கிறிஸ்தவன். தேவனுக்கு அதிக மகிமையை அவனால் தான் கொடுக்க முடியும். நாம் பரிசுத்தராய் இருப்பதுபோல் மகிழ்ச்சியாய் இருப்பதும் நமது கடமை. இரண்டும் தேவையானதே. முக்கியமானதே. நாம் எப்போதும் மன மகிழ்ச்சியாயிருக்கக் கற்றுக்கொள்வோம்.

நமக்குப் பரம நேசருண்டு
அவர் தயவில் மகிழ
அவர் மகிமை அளிப்பார்
பரம இராஜ்யமும் தருவார்.