முகப்பு தினதியானம் நீங்கள் சந்தேகமப்படாமல் இருங்கள்

நீங்கள் சந்தேகமப்படாமல் இருங்கள்

மார்ச் 10

“நீங்கள் சந்தேகமப்படாமல் இருங்கள்.” லூக்கா 12:29

நாம் எல்லாரும் சந்தேகங்கொள்ள ஏதுவானவர்கள், சந்தேகிக்கக்காரணம் இல்லாததையே முக்கியமாய் சந்தேகிக்கிறோம். சிலரோ சந்தேகம் மார்க்கத்திற்கு உரியதுப்போல் அதை அதிகப்படுத்திக் கொள்கிறார்கள். இது தவறு. பாவமும்கூட இரட்சகர் நம்மைப் பார்த்து விசுவாசியுங்கள் என்று சொல்லுகிறார். சந்தேகம் கர்த்தரைக் கனவீனப்படுத்தி, நமக்கு வருத்தமுண்டாக்கி, சாத்தானும் நம்மை எளிதாய் மேற்கொள்ள செய்கிறது. அவருடைய செயலைக் குறித்து நாம் சந்தேகங்கொள்ளக்கூடாது. அது உண்மையுள்ள வார்த்தை. கண்டு விசுவாசிப்பது சரியல்ல. ஒருபோதும் மாறாததும் மோசம் போகாததுமான நிச்திய வாக்குகளைப் பிடித்துக்கொள்வோமாக.

நமது தருமங்களையும் திறமைகளையும் நாம் அதிகம் நினைக்காமல், கர்த்தரையும் அவர் வல்லமையைப் பார்த்து நாம் கலங்கவேண்டியதில்லை. சுகபோகமாய் வாழ்வதைவிட தரித்திரராய் தேவனுக்கு வாழ்வதில் அதிக பாக்கியவான்களாகலாம். மனிதன் மனத் மாறுகிறதைப் பார்த்து நாம் கலங்க வேண்டாம். ஏனென்றால் தேவன் மனம் மாறாதவர். ஒரே மனதுள்ளவர். அவர் மனதை மாற்ற யாராலும் முடியாது. நமது மனதைச் சந்தேகிக்க இடங்கொடுத்தால் அது நம்முடைய தற்கால சந்தோஷத்தைக் கெடுத்து, பக்திக்கரிய கடமைகளைத் தடுத்து நம்பிக்கை என்னும் பார்வையை மங்கச் செய்து, நமது பயங்களைப் பெரிதாக்கிவிடும். பின்னும் கிருபை நிறைந்த தேவனுடைய பட்சத்தையும், நமது பேரில அவர் வைத்திருக்கும் அக்கரையும் சந்தேகிக்கும். ஆகவே சந்தேகம் வேண்டாம். விசுவாசிப்போம்.

கர்த்தர்மேல் பாரத்தை
வைத்து அவர் கரத்தை
நோக்கி அமர்ந்திரு,
இரட்சிப்பாரென்று காத்திரு
சிலுவையில் தொங்கி மீட்டாரே
உன்னை இரட்சிக்காமல் போகாரே.