முகப்பு தினதியானம் தேவனிடத்தில் சேருங்கள்

தேவனிடத்தில் சேருங்கள்

மார்ச் 13

“தேவனிடத்தில் சேருங்கள்.” யாக். 4:8

பாவமானது நம்மைத் தேவனைவிட்டு வெகுதூரம் கொண்டுபோய்விடும். அவிசுவாசம் நம்மை அங்கேயே நிறுத்தி வைத்துவிடும். ஆனால் கிருபையோ சிலுவையில் இரத்தத்தைக் கொண்டு நம்மைத் திரும்ப தேவனண்டைக்குக் கொண்டு வருகிறது. நாம் பாவம் செய்யும்போது தேவனைவிட்டு திரிந்தலைகிறோம். தேவனுக்குச் சமீபமாய் வரவேண்டும் என்பதே அவரது பிரியம். அவர் கிருபாசனத்தண்டையில் வீற்றிருக்கிறார். நமக்காகப் பரிந்து பேச இயேசுவானவர் சி;ம்மாசனத்துக்குமுன் நிற்று நம்மை அழைக்கிறார். தேவ சந்நிதியைக்காண இயேசுவின்மூலமாய் அவரின் நம்பிக்கை வைக்க நம்முடைய இருதயங்களை அவருக்கு முன்பாக ஊற்ற நாம் சிங்காசனத்தண்டைக்கு போகவேண்டும்.

நம்மைப் பயப்படுத்துகிற சகலத்தையும் நாம்விரும்புகிற சகலத்தையும் நமக்குத் தேவையான சகலத்தையும் அவருக்குச் சொல்ல, நமக்கு இருக்கிற எல்லாவற்றிற்காகவும், கடந்த காலத்தில் பெற்றுக்கொண்ட நன்மைக்காகவும், இனி வேண்டிய தேவைகளுக்காகவும் சிம்மாசனத்தண்டை சேர வேண்டும். நாம் கூச்சப்படாமல் பயபக்தியாய் சகலத்தையும் அவருக்கு அறிவிக்கலாம். தேவன் சித்தத்தை அறிந்துகொள்ள அவரின் அன்பை ருசிக்க, மனகவலை நீங்க, அவரை சொந்தமாக்கிக்கொள்ள, தேவ சமுகம் தேடி, அவரிடத்தில் வந்து சேருங்கள். அவரும் உங்களுக்குச் சமீபமாய் வருவார்.

இயேசுவே வழியாம்
அவரால் மோட்சம் சேர்வோம்
அவரால் பிதாவின் சமுகம்
கண்டென்றும் ஆனந்திப்போம்.