முகப்பு தினதியானம் மன்னிக்கிறவர்

மன்னிக்கிறவர்

மார்ச் 23

“மன்னிக்கிறவர்.” சங். 86:5

கர்த்தர் இரக்கத்தில் பிரியப்படுகிறவராகவும், கோபத்திற்கு ஆத்தரப்படாதவராகவும், மன்னிக்கிற தேவனாகவும் வெளிப்படுகிறார். இது உண்மையானபடியால் இதை எப்போதும் நாம் விசுவாசிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் மன்னிப்பைத்தேடி எதிர்நோக்கிப் பெற்றுக்கொள்ள வேண்டும். அவரை நம்பி துக்கப்பட்டு அறிக்கையிடுகிற யாவருக்கும் கர்த்தர், அதை மன்னிக்க மனதுள்ளவரும், பின்வாங்காதவரும் ஆவார். ஆண்டவரின் நாமத்தில் அவரிடத்தில் வருகிற ஒவ்வொருவருக்கம் மன்னிப்பளிக்கும்போது தம்முடைய வசனத்துக்கு உண்மையுள்ளவராகவும், தமது குமாரனுடைய இரக்கத்தின்படி நியாயஞ்செய்கிறவராகவும் வெளிப்படுகிறார். அவன் மன்னிக்கிறவரானதால் நாம் பயப்படதேவையில்லை. மனம் கலங்க அவசியமில்லை. இந்த விஷயத்தில் கிறிஸ்துவைச் சந்தேகிப்பது பாவமாகிவிடும். ஆகையால் மகாபாவியையும் குறைவின்றி மன்னிக்க ஒரு வழியை ஏற்படுத்தியுள்ளார். பாவிகளாம் நம்மை மன்னித்து சேர்த்துக்கொள்ள, தம் அன்புள்ள ஒரே பேறான குமாரனைப் பிராயச்சித்த பலியாய் ஒப்புக்கொடுத்ததால் மன்னிக்க ஆயத்தமுள்ளவர் என்பதைக் காட்டினார்.

பிராயச்சித்தமின்றி மன்னிப்பு கிடையாது. அவர் செய்யக் கூடியதை எவ்விதமும் செய்வார். இயேசுவின் பிராயச் சித்தத்தின்படி தேவன் எவ்விதப் பாவிக்கும் பூரணமாய், சுலபமாக அனுதினமும் மன்னிப்பு அளிக்கு முடியாது. இந்த இரவிலும் இந்த நாளின் பாவங்களையும் முந்தின எல்லாப் பாவங்களையும் நமக்கு மன்னித்து, இந்த நேரத்திலேயே தர ஆயத்தமாய் இருக்கிறார். இது எவ்வளவு பெரிய சத்தியம்.

மரித்துயிர்த்த இயேசுவை
விசுவாசத்தால் நோக்குவோம்
அப்போது நீதிமான்களாகி
பரத்தில் சேர்ந்து களிகூறுவோம்.