முகப்பு தினதியானம் ஏப்ரல் விசுவாசத்துக்குக் கீழ்ப்படியும்படிக்கு

விசுவாசத்துக்குக் கீழ்ப்படியும்படிக்கு

ஏப்ரல் 03

“விசுவாசத்துக்குக் கீழ்ப்படியும்படிக்கு.” ரோமர் 16:25

நமது மனதும் அறிவும் நடத்தையும், தேவனுக்கு மழுவதும் கீழ்ப்படிய வேண்டுமென்று விசுவாசம் விரும்புகிறது. சுவிசேஷம் விசுவாசம் வைக்கும் சட்டம். தேவன் அன்பாகவே இருக்குpறார் என்று பாவிகளாகிய நமக்குப் பதிலாக கிறிஸ்து மரித்தார் என்றும் விசுவாசப் பிரமாணம் நம்மை நம்பச் செய்கிறது. நமக்கு இரக்கத்தையும் மன்னிப்பையும் கொடுக்கிற ஈவாக ஏற்றுக்கொள்ளச் சொல்கிறது. கிறிஸ்துவின் புண்ணியங்களை ஏற்றுக்கொண்டு அதையே நம்பி, நமக்குத் தேவையான யாவற்றிற்கும் அதையே சொல்லி கேட்கவேண்டும் என்கிறது. நமது தேவைகளை இயேசுவில் தினந்தோறும் கேட்கவும், அவர் வாக்களித்த யாவையும் அவரிடத்தில் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கவும் வேண்டுமென்றும், தேவனுக்காய், தேவனுக்கென்று, தேவனைப்போல் ஜீவிக்கவேண்டுமென்று கற்பிக்கிறது.

ஓரே வார்த்தையில் தேவன்தான் பெரியவர். மனிதன் ஒன்றுமில்லை என்று ஜீவிக்க கற்பிக்கிறது. நமது இதயம் விசுவாசித்து கீழ்ப்படியவேண்டுமென்று தேவன் கேட்குpறார். அவர் சொல்வதை நம்பி, அவர் வாக்குகளை எதிர்ப்பார்த்து, அவர் சொன்னபடி செய்வது நமது கடமை. இது நாம் விசுவாசித்து வாழ உதவுகிறது. சாத்தான் இதற்கு விரோதமாக செய்வான். பரம சிந்தை பலவிதமாய் இதைத் தடுக்கப் பார்க்கும். உலக சிநேகம் தன்னால் ஆனதை செய்யும். ஆனால் நானோ போராடி யுத்தம் செய்து அதை மேற்கொண்டு என் தேவன் சொல்வதை நம்புவேன். என் கர்த்தருக்குக் கீழ்ப்படிவேன். என் இரட்சகரைப்போல் இருக்கப் பார்ப்பேன். விசுவாசத்தால் பொறுமையுடன் வாக்குத்தத்தத்தைச் சுதந்தரித்துக்கொள்கிறவர்களைப் பின் செல்லுவேன் என்று தீர்மானிக்க வேண்டும்.

ஆவியானவரே என்னை உயிர்ப்பியும்,
என் இதயத்தை நிரப்பும்
என் மனதில் தேவசட்டம்
எழுதி கீழ்ப்படியப்பண்ணும்.