முகப்பு தினதியானம் கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களை மன்னித்தார்

கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களை மன்னித்தார்

யூன் 12

“கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களை மன்னித்தார்.” எபேசி. 4:32

ஆசீர்வதாங்களிலே மிகவும் முக்கியமான ஒன்று தேவன் கொடுக்கும் பாவ மன்னிப்பு. நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு போயிற்றென்று அறிந்து உணருவது நமக்குக் கிடைத்த பெரிய சிலாக்கியம். நம் தேவன் மன்னிக்கிறவர். இலவசமாய் மன்னிக்கிறவர். அடிக்கடி மன்னிக்கிறவர். மனதார மன்னிக்கிறவர். சந்தோஷமாய் மன்னிக்கிறவர். நியாயப்படி மன்னிக்கிறவர். அவர் மன்னிக்கிறதால் மன்னிக்கப்பட்ட பாவம் மறைக்கப்பட்டுப் போகிறது. இந்த மன்னிப்பு கிறிஸ்துவினால் மட்டுமே கிடைத்த ஒன்றாகும். இது மனந்திரும்புதல், விசுவாசம், நற்கிரியைகள், இவைகளினால் நாம் பெற்றவைகளல்ல. கிறிஸ்துவின் நிமித்தம்மட்டுமே நாம் மன்னிக்கப்படுகிறோம்.

இயேசுவானவர் நம்மை தேவனிடம் சேர்க்கும்படி அக்கிரமகாரருக்காய் நீதிமானால் ஒருதரம் நம்முடைய பாவங்களுக்காகப் பாடுபட்டார். அவர் நம்முடைய பாவங்களுக்காக நிறைவும், பூரணமும் நித்தியமுமான பிராயச்சித்தத்தை உண்டுபண்ணி, தம்மைத்தாமே பலியாக ஒப்புக்கொடுத்து பாவத்தைத் தொலைத்தார். ஆகவே நாம் இயேசுவை விசுவாசித்து, தேவன் தம் குமாரனை குறித்து கொடுத்த சாட்சியை ஏற்றுக்கொண்டு, கிருபாசனத்தைக் கிட்டிச்சேர்ந்து, அவர் நாமத்தைச் சொல்லி பாவ மன்னிப்புக்காக கெஞ்சும்போது தேவன் நமக்கு மன்னிப்பளித்து, தம் குமாரனை மகிமைப்படுத்துகிறார். எந்த விசுவாசிக்கும் மன்கிக்கிறார். எந்த அக்கிரமத்தையும் மன்னிக்கிறார். அவர் பாவங்களையெல்லாம் குலைத்துப்போடுகிறார். எல்லா குற்றங்கக்கும் பாவியை நிரபராதியாக்குகிறார். தேவன் மன்னித்தவரை ஆக்கினைக்குள்ளாக்குகிறவன் யார்? தேவன் தம்மை நீதிமானாக்கினாரே? கிறிஸ்து மனதார நமக்காக மரித்தார். நித்திய மீட்பைச் சம்பாதித்தார். அவர் நிமித்தம் இன்று நாம் தேவனுக்கு முன்பாக மன்னிப்புப் பெற்று அங்கீகரிக்கப்பட்ட பாவிகளாக நிற்கிறோம்.

என் பாவம் மன்னிக்கப்பட்டதை
என் நேசத்தால் ரூபிப்பேன்
எனக்குரியது யாவையும்
அவருக்கே படைப்பேன்.