முகப்பு தினதியானம் என் நேசர் என்னுடையவர், நான் அவருடையவள்

என் நேசர் என்னுடையவர், நான் அவருடையவள்

யூன் 27

“என் நேசர் என்னுடையவர், நான் அவருடையவள்.” உன். 2:16

பரிசுத்த நிச்சயம் கொண்ட எவரும் இப்படித்தான் சொல்லுவர். கிறிஸ்து பிதாவினால் பாவிகளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறார். அவர் தான் தேவன் கொடுத்த சொல்லி முடியாத ஈவு. விசுவாசம் அதை ஏற்று அங்கிகரிக்கிறது. கிறிஸ்துவை ஏற்றுக்கொள்கிறது பயபக்தியான அர்ப்பணிப்பால் உறுதிப்படுகிறது. அப்படி ஏற்றுக்கொள்கிறவர்கள் அவருடையவர்களாயிருப்பர். அவருடையவராக மட்டும் இருப்பேன் என்று வாக்குக் கொடுக்கின்றனர். இது பரிசுத்த ஐக்கியத்தால் உறுதிப்படுகிறது. கிறிஸ்து தன்னுடையவர் என்று சொல்லுகிறவன் அவரோடு ஐக்கியப்பட்டவனாய் ஜீவிக்கிறான். என் நேசர் நாம் விசுவாசித்து நம்கும் இரட்சகர். நான் மதித்து நேசிக்கிற தெய்வம். நான் வணங்கி கீழ்ப்படிகிற ஆண்டவர். என் மனமும், யோசனையும் பற்றிப் பிடித்துக்கொள்ளும் அவருமையானவர். நான் என் நேசருடையவள். அவர் என்னைத் தெரிந்துகொள்ளாமல் போயிருந்தால் நான் அவரைத் தெரிந்துக் கொள்ளாமல் இருந்திருப்பேன்.

அவர் என்னை மீட்டார். இல்லாவிட்டால் நான் இன்னும் அடிமையாகவே இருப்பேன். அவர் என்னை அழைத்தார். இல்லாவிட்டால் தேவனை விட்டு இன்னும் அலைந்து திரிகிறவனாயிருப்பேன். அவர் என்னைப் பரிசுத்தப்படுத்தினார். இல்லாவிட்டால் அவர் மகிமையை இன்னும் காணாதிருப்பேன். நான் என் நேசருக்கு மனையாட்டியின் தோழி. நான் அவரின் பங்கு. அவரின் மகிழ்ச்சி. அவரில் வெற்றி பெற்று கொண்டு வந்த கொள்ளைப் பொருள்களில் மிமையான கிரீடம். அன்பர்வளே! இந்த நிச்சயத்தைப் பெற்றுக்கொள்ளப்பாருங்கள். அவர் என்னுடையவர், நான் அவருடையவன் என்று உண்மையாகச் சொல்லும்வரைக்கும் ஓயாதேயுங்கள்.

இயேசுவே என் சொந்தம்
அவரில் சுகம், ஜீவன் அடைவேன்
நான் அவருடையோன் ஆகவே
மணவாட்டிப்போல் களிப்பேன்.