முகப்பு வலைப்பதிவு பக்கம் 33

அவர் என் ஆத்துமாவைத் தேற்றுகிறார்

மார்ச் 19

“அவர் என் ஆத்துமாவைத் தேற்றுகிறார்.” சங். 23:3

காணாமற் போன ஆட்டைப்போல் விழி தப்பினோன். நாம் எப்போதும் அலைந்து திரிய ஏதுவானவர்கள். அப்படி அலைந்துதிரியும்போது அந்த நல்ல மேய்ப்பர் நம்மைத் தேடி கண்டுபிடிக்குகும் வரையில், நாம் சரியான பாதைக்குத் திரும்புகிறதேயில்லை. அவருடைய பார்வையோ, அலைந்து தரிகிற ஆட்டின்மேல்தான் இருக்கிறது. அவருடைய உள்ளமோ காணாமற்போன ஆட்டின்மேலே இருக்கிறது. அதைக் கண்டு அதன்மேல் அன்புகாட்ட தகுந்த நேரம் வரும் என்றே காத்திருக்கிறார். நயமாயும், பயமாயும், கண்டித்தும், போபித்தும் அதைப்பின் தொடர்ந்து போய் கண்டுபிடித்து வருகிறார்.

தொழுவத்தைவிட்டு அலைந்து திரிவது, புத்தியீனமென்று அந்த ஆத்துமா உணரும்போது, அலைந்து திரிகிறதினால் மனவருத்தமடைந்து, உள்ளுக்குள்ளே ஜெபித்து, எப்போது திரும்பலாமென்று கவலைப்பட்டு மேய்ப்பனின் அடிகளைத் தேடி வந்து, தன் பாவத்தையும், அறியாமையையும் அறிக்கையிட்டு, இரக்கத்திற்காக கெஞ்சி, உம்முடைய இரட்சிப்பின் சந்தோஷத்தை எனக்குத் திரும்ப கட்டளையிடும் என்று சத்தமிடும். மேய்ப்பனோ தன் கரத்தினால் அதைத் தூக்கி, தோளின்மேல் போட்டு அன்பாய்க் கண்டித்து தொழுவத்திற்குக் கொண்டு போகிறான். கிருபையால்தான் இப்படி திருப்ப ஏதுவுண்டு.

மேய்ப்பனுடைய கரிசனையில்தான் அலைந்து திரிகிற ஆத்துமா சீரடையும். சீர்ப்பட்டவன் மேய்ப்பனால் சுத்தமாக்கப்படுகிறார். அவன் மனம் மிருதுவாகிறது. பாவத்தின்மேல் பகை ஏற்படுகிறது. தன்னைத்தான் வெறுத்து தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறான். மேய்ப்பனின் இரக்கமே நம்மை இப்படி நடத்துகிறது. நம்மை மீட்டு மேய்ப்பனின் இரக்கத்தை அனுதினமும் நினைப்போமாக.

வழி தப்பி திரிய
என் இருதயம் பார்க்கிறது
உமக்கே அதைப் படைக்கிறேன்
அதை நீரே திருத்துமேன்.

பயப்படாமலும் கலங்காமலும் இரு

மார்ச் 18

“பயப்படாமலும் கலங்காமலும் இரு.” உபா. 1:21

கர்த்தர் நம்மை சோதித்தாலும் நமக்குத் தைரியம் கொடுக்கிறார். அவர் தமது வசனத்தில் முன்னூற்று அறுபத்தாறு முறைக்குமேல் பயப்படாதே என்கிறார். ஆனால் நாமோ அடிக்கடி பயப்படுகிறோம். இதை ஆண்டவர் அறிந்துதான் நம்மைச் சந்தோஷப்படுத்தவும், நமக்கு உற்சாகம் அளிக்கவும் இத்தனை முறை சொல்லியிருக்கிறார். தேவன் நல்ல தேசத்தை நமக்கு முன்பாக வைத்து அதை நமக்கத் தருவேன் என்று வாக்களித்து அதைச் சுதந்தரித்துக்கொள்ளப் போங்கள் என்று கற்பித்தபடியால் நாம் அதைரியப்படக்கூடாது. நமது சத்துருக்கள் பலத்திருக்கலாம். ஆனால் நமது சர்வ வல்லவரான தேவன் நமக்காக யுத்தம்பண்ணுவார். நமது சத்துருக்கள் தந்திரக்காரராய் இருக்கலாம். ஞானமுள்ள ஒரே தேவன் நமது பட்சத்தில் இருக்கிறார். தேவக்கோபம் நம்மீது இருப்பதுப்போல தோன்றலாம். நமது ஜெபங்களுக்கு பதில் அளிக்காமல், காரியங்கள் மோசப்பட்டு போவதாய்க் காணலாம். ஆனால் நமது நற்குணங்களை அதிகப்படுத்த, நமது உத்தமத்தைச் சோதிக்க, கருத்தான ஜெபத்தை ஏறெடுக்க இப்படிப்பட்ட காரியங்களைத் தேவன் அனுமதிக்கிறார் என்று அறிய வேண்டும்.

அன்பர்களே, ஆகவே நம்பிக்கையில் உறுதிப்பட்டு விசுவாசத்தில் விடாப்பிடியாய் இருக்க வேண்டும். கர்த்தர் நமக்காக வெளிப்படுவார். நமது அனுபவத்தால் அவர் வசனம் உண்மையுள்ளது என்று கண்டறிவோம். இப்போது எந்தப் பதிலும் அவர் சொல்லாவிட்டாலும் நமது இருதயம் விரும்புகிறபடி சீக்கிரம் செய்வார். ஆதலால் பயப்பட அவசியமில்லை. பயம், விசுவாசத்தைப் பெலவீனப்படுத்தி, தேவனைக் கனவீனப்படுத்தி, நமது சத்துருக்களை சந்தோஷப்படுத்தும். உங்களோடு தேவன் இருக்கிறார். அவர் உனக்கானவர்.

உமது சமுகம் தேடி
உம்மில் மகிழ்ந்திருப்போம்
உமது வாக்கை நம்பி
பயத்தை அகற்றுவோம்
விக்கினங்கள் பெருகினும்
உம்மால் வெற்றிபெறுவோம்.

கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்து

மார்ச் 17

“கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்து.” 1.நாளா. 16:29

தேவன் தமது நாமத்தை அவருடைய வல்லமையான கிரியைகள் எல்லாவற்றின் மேலும், அன்பான ஈவுகள் எல்லாவற்றின் மேலும் தயவாய் மாட்சிமையாய் வரைந்திருக்கிறார். தேவ நாமத்தை நாம் நன்கறிய வேண்டும். அதிலும் சுவிசேஷத்தை ஆராய்ந்தறிய வேண்டும். தேவன் தமது நாமத்தை, பாவங்களைக் குணமாக்குதலிலும், நீதிமான்களாக்கப்படுவதிலும், பரிசுத்தவான்களாக்கப்படுவதிலும், மகிமைப்படுத்துவதிலும் வரைந்திருக்கிறார். தமது மகிமையான தன்மைகளையும், குணநலன்களையும் விளக்கி வெளிப்படுத்துகிறார். தேவன் தமது நாமத்தை தம்முடைய வசனத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார். அதை உபதேசங்களிலும், வாக்குத்தத்தங்களிலும், கட்டளைகளிலும், இனி வெளிப்படப்போகிற காரியங்களிலும் நாம் வாசிக்கிறோம்.

யேகோவாவின் நாமத்தை நாம் சரியானபடி வாசித்து அறிவோமானால், ஆச்சரியத்தோடும் நிரப்பப்படுவோம். அப்படி நிரப்பப்படும்போது நமது ஜெபங்களிலும், துதிகளிலும், நடக்கைகளிலும் அவரை மகிமைப்படுத்துவோம். அவருடைய நாமத்திற்குரிய பிரகாரம் அவரை மகிமைப்படுத்த நமது திறமைகளும், காலமும் போதவே போதாது. அவரை மகிமைப்படுத்துவது நமது கடமை. இருதயம் மட்டும் சுத்தமாய் இருக்குமானால் அது நமக்கு இனிமையாய் இருக்கம். நாம் அடிக்கடி தேவமகிமையை அசட்டை செய்கிறோம். தேவனுக்குரியதை நாம் செலுத்தாமல் போவதால் ஆத்துமாவுக்கரிய ஆறுதலை நாம் அனுபவிக்க முடியாமல் இருக்கிறோம். அவரு நாமத்திற்கரிய மகிமையை அவருக்குச் செலுத்த நாம் கற்றுக்கொள்வோமாக.

வான் கடல் பூமி யாவும்
உம் நாமம் துதித்து போற்றும்
உமது நாமம் கற்போம்
அப்போது ஞானிகள் ஆவோம்

நீர் என்னை ஆசீர்வதித்துக் காத்தருளும்

மார்ச் 16

“நீர் என்னை ஆசீர்வதித்துக் காத்தருளும்.” 1.நாளா. 4:10

இது யாபேஸ் பண்ணின ஜெபம். எந்தக் கிறிஸ்தவனும் இப்படித்தான் ஜெபிப்பான். கர்த்தருடைய ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும். அதனோடு அவர் வேதனையைக் கூட்டார் என்றே அவன் அறிவான். கர்த்தர் ஆசீர்வதித்தால் அது பலிக்கும். அவர் கிறிஸ்துவில் எல்லா ஞான நன்மைகளாலும் பரமண்டலங்களில் இருந்து ஆசீர்வதிக்கிறார். சகலமும் நமக்கு இயேசுவில் பொக்கிஷமாகச் சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது. விசுவாசத்தினாலும் ஜெபத்தினாலும் அவருடைய நிறைவிலிருந்து நாம் கிருபைமேல் கிருபையைப் பெற்றுக்கொள்ளுகிறோம்.  அவர் இன்னும் நம்மை ஆசீர்வதித்து வருகிறார். உன் அப்பத்தையும் தண்ணீரையும் அவருடைய அன்பால் சாரம் ஏற்றப்படும்போது வெகு இனிமையாய் இருக்கும். புதியதாக்கும் கிருபையினாலும், சீர்ப்படுத்தும் கிருபையினாலும் முன் செல்லும் கிருபையினாலும் அவர் நம்மை ஆசீர்வதிக்கிறார்.

நம்முடைய ஆத்துமாவைப்போல் என்றும் உள்ளதுமான விலையேறப்பெற்ற ஆசீர்வாதங்களால் நம்மை ஆசீர்வதிக்கிறார். நம்மை ஆசீர்வதிப்பதே அவருக்குச் சந்தோஷம். நம்மை  மகிமையாய், நித்தியமாய் ஆசீர்வதிக்கும்படி, நமக்காக மரிக்கும்படி தமது குமாரனைக் கொடுத்தார். நம்மை ஆசீர்வதித்து ஆசீர்வாதமாக்குவேன் என்றே வாக்களித்திருக்கிறார். அவர் நம்மை ஆசீர்வதிக்க வேண்டும் என்று உணருவதே ஓர் ஆசீர்வாதம். அதை உணருகிற ஒவ்வொருவனும் அதைக் கருத்தாய் தேடுகிறான். ஆகவே நாமும்கூட அவர் வசனத்தை வாசித்து, அவர் அன்பை விசுவாசித்து, அவர் ஆசீர்வாதத்திற்காகக் கெஞ்சி யாபேசைப்போல் நல்வாக்கைப் பெற்றுக்கொள்வோமாக.

முடிந்தது என்று சொன்னாரே
அவ்வாக்கைக் கேள்
அது கடைசி வார்த்தை ஆனதே
அதனால் திடன் கொள்.

நித்திய ஜீவனைக் குறித்த நம்பிக்கையைப்பற்றி

மார்ச் 15

“நித்திய ஜீவனைக் குறித்த நம்பிக்கையைப்பற்றி.” தீத்து 1:3

உத்தம கிறிஸ்தவன் ஒருவன் இப்படித்தான் ஜீவியம் செய்ய வேண்டும். அவன் இருதயம் கீழான உலக காரியத்தைப்பற்றாமல் நித்திய ஜீவனுக்கென்று இயேசுவின் இரக்கத்தையே நோக்கிக்கொண்டிருக்கிறது. கிறிஸ்தவனின் முழு நம்பிக்கைதான் அவன் ஆத்துமாவுக்கத் தைலமாகவும் மருந்தாகவும் இருக்கிறது. அவன் மறுமையில் தேவனோடு பூரண வாழ்வுள்ளவனாய் இருப்பேன் என்றே நம்பியிருக்கிறான். தான் நித்திய நித்தியமாய் மகிழ்ச்சி, சமாதானம் இவைகளை அனுபவிப்பான். தனக்கு நித்திய ஜீவன் நிச்சயமாகவே கிடைக்குமென்று நம்புகிறான்.

பொய்யுரையாத தேவன் வாக்களித்திருக்கிறார். உலகம் உண்டாகுமுன்னே அநாதியாய் முன் குறித்திருக்கிறார். விசுவாச சபைக்குக் கீரீடமான இயேசுவுக்கு வாக்களித்திருக்கிறார். சுவிசேஷமும் அதற்கு சாட்சியிடுகிறது. தேவன் நித்திய ஜீவனைக் கொடுத்திருக்கிறார். அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்குpறது. கிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொண்டருக்கு இந்த நித்திய ஜீவன் உண்டு. முற்கனி நமக்குக் கிடைத்திருக்கிறது. மகிமையான அறுப்பு கிடைக்கும். நம்பிக்கையில் வளர்ந்தே நாம் தனிந்தோறும் ஜீவித்து வருகிறோம். இந்த நம்பிக்கை துன்பத்தில் வழிநடத்தி நித்திய போராட்டத்தில் நம்மை உயிர்ப்பித்து மோசம் வரும்போது நம்மைக் காக்கிறது. இரட்சிப்பு என்னும் தலைச்சீரா இதுவே. விசுவாசியே மரணத்தையல்ல, நித்திய ஜீவனுக்காக நீ எதிர்நோக்க வேண்டியது, பரம தேசத்தையே அதை அனுபவிப்போம் என்ற நம்பிக்கையும் அதை நிச்சயித்துக் கொள்வோம் என்ற எதிர்பார்த்தலும்தான் விசுவாசம்.

எது வந்தாலும் எது போனாலும்
எது மாறிக் கெட்டாலும்
பேரின்பத்தை நோக்குவேன்
மோட்ச நம்பிக்கைப் பிடிப்பேன்.

தேவனிடத்தில் சேருங்கள்

மார்ச் 13

“தேவனிடத்தில் சேருங்கள்.” யாக். 4:8

பாவமானது நம்மைத் தேவனைவிட்டு வெகுதூரம் கொண்டுபோய்விடும். அவிசுவாசம் நம்மை அங்கேயே நிறுத்தி வைத்துவிடும். ஆனால் கிருபையோ சிலுவையில் இரத்தத்தைக் கொண்டு நம்மைத் திரும்ப தேவனண்டைக்குக் கொண்டு வருகிறது. நாம் பாவம் செய்யும்போது தேவனைவிட்டு திரிந்தலைகிறோம். தேவனுக்குச் சமீபமாய் வரவேண்டும் என்பதே அவரது பிரியம். அவர் கிருபாசனத்தண்டையில் வீற்றிருக்கிறார். நமக்காகப் பரிந்து பேச இயேசுவானவர் சி;ம்மாசனத்துக்குமுன் நிற்று நம்மை அழைக்கிறார். தேவ சந்நிதியைக்காண இயேசுவின்மூலமாய் அவரின் நம்பிக்கை வைக்க நம்முடைய இருதயங்களை அவருக்கு முன்பாக ஊற்ற நாம் சிங்காசனத்தண்டைக்கு போகவேண்டும்.

நம்மைப் பயப்படுத்துகிற சகலத்தையும் நாம்விரும்புகிற சகலத்தையும் நமக்குத் தேவையான சகலத்தையும் அவருக்குச் சொல்ல, நமக்கு இருக்கிற எல்லாவற்றிற்காகவும், கடந்த காலத்தில் பெற்றுக்கொண்ட நன்மைக்காகவும், இனி வேண்டிய தேவைகளுக்காகவும் சிம்மாசனத்தண்டை சேர வேண்டும். நாம் கூச்சப்படாமல் பயபக்தியாய் சகலத்தையும் அவருக்கு அறிவிக்கலாம். தேவன் சித்தத்தை அறிந்துகொள்ள அவரின் அன்பை ருசிக்க, மனகவலை நீங்க, அவரை சொந்தமாக்கிக்கொள்ள, தேவ சமுகம் தேடி, அவரிடத்தில் வந்து சேருங்கள். அவரும் உங்களுக்குச் சமீபமாய் வருவார்.

இயேசுவே வழியாம்
அவரால் மோட்சம் சேர்வோம்
அவரால் பிதாவின் சமுகம்
கண்டென்றும் ஆனந்திப்போம்.

எப்போதும் கர்த்தருடனே கூட இருப்போம்

மார்ச் 12

“எப்போதும் கர்த்தருடனே கூட இருப்போம்.” 1.தெச. 4:17

தேவன் உலகத்தாருக்குத் தம்மை வெளிப்படுத்துவது போலில்லாமல், தமது ஜனத்திற்கு வேறுவிதமாய் வெளிப்படுத்துகிறார். இப்படி அவர் தமது ஜனங்களைச் சந்திப்பது எத்தனை இனிமையாயிருக்கிறது. அப்படி அவர் நமக்கு வெளிப்படுத்துவது நமது விசுவாசத்தை உறுதிப்படுத்துகிறதாயிருக்கிறது. சந்தோஷத்தை வளர்க்கிறதாயுமிருக்கிறது. இன்னும் கொஞ்ச காலத்தில் நம்மை தமது பரம வீட்டிற்கு கொண்டு போக திரும்ப வருவார். ஒருவேளை அதற்கு முன்னே நமக்கு மரணத்தை அனுப்பினாலும் அனுப்பலாம். நாம் சரீரத்தை விட்டு பிரிந்து போய் கிறிஸ்துடன் இருக்க வேண்டியது வரும். நமது நிகழ்காலத்தைவிட அதுவே மிகவும் நல்லது. அப்படியேயானாலும் அவர் சீக்கிரம் வந்து நம்முடைய சரீரங்களைக் கல்லறையினின்று எழுப்பி நமது ஆத்துமாவையும், சரீரத்தையும் அவருடைய சாயலுக்கு ஒப்பாக்கும்போது, நாம் ஆகாயத்தில் அவரைச் சந்திக்கக் கொண்டுபோகப்பட்டு எப்போதும் கர்த்தரோடிருப்போம். இதுதான் நமக்கு மோட்சம். இதுதான் நமது பங்கு. நாம் அவரைப்போல அவராடிருப்போம். நமது இப்போதைய நிலைக்கு அது வித்தியாசமானது. இது அதிக மகிமையான காட்சி.

என்றைக்கும் கர்த்தரோடிருப்பதில் அடங்கா மகிமை உண்டு. எப்போதும் அவரோடிருப்பதில் துன்பமும் இல்லை. மகிமையைக் குறித்து தியானித்து, சந்தோஷம் நிறைந்த இந்த மாறுதலை நோக்கி பார்த்துக்கொண்டே இந்த நாளை முடிப்போமாக. இனி வருத்தத்தையும் துன்பத்தையும் பார்ப்பது சரியல்ல. நான் சீக்கிரம் கர்த்தரோடிருப்பேன் என்று சொல்லுவோம்.

என்றும் தேவனோடிருப்பது
ஆனந்த மகிழ்ச்ச
அதுவே பேரின்ப வாழ்வு
இதுவே நித்திய பேறு.

அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரில் அன்புகூருகிறோம்

மார்ச் 11

“அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரில் அன்புகூருகிறோம்.”
1.யோவான் 4:19

நாம் தேவனை நேசிக்கும் நேசம் அவர் நமதுபேரில் வைத்த நேசத்தின் தயைதான். நாம் இந்த ஜீவகாலத்தில் அவரை நேசிக்கும்படி, அவர் நித்திய காலமாய் நம்மை நேசித்தார். நேசிக்க வேண்டிய தகுதி ஒன்றும் நம்மில் இல்லாதிருந்தும் நம்மை அவர் நேசித்தார். அவர் அளவற்ற அன்பு நிறைந்தவரானபடியால், நாம் அவரை நேசிப்பது நம்முடைய கடமை. அவரின் அன்பு நமக்கு வெளிப்பட்டபடியினாலே தான் அவரை நாம் நேசிக்க ஏவப்படுகிறோம். அவரின் அன்பு நமது இருதயத்தில் ஊற்றப்பட்டபடியால்தான் நாம் அவரை நேசிக்கிறோம் சாபத்தின்படி ஒருவனும் தேவனை நேசிக்கிறதில்லை. தன் மாம்சத்தின்படி ஒருவனும் தேவனை நேசிக்கவும் முடியாது. ஏனென்றால் மாம்ச சிந்தை தேவனுக்கு விரோதமான பகை. அது தேவ பிரமாணத்திற்கு அடங்கியிருக்கிறதுமில்லை. அடங்கியிருக்கவும் மாட்டாது.

நாம் தேவனை நேசித்தால், அல்லது மனதார நேசிக்க விரும்பினால், நமது இருதயம் மாற்றப்பட்டதற்கு அது ஓர் அத்தாட்சி. அந்த மாறுதல் அவர் நம்மை நேசித்ததின் பலன். எந்தப் பரம நம்மையும் அவருடைய அன்பிலிருந்து பாய்கிறது. அவரில் உண்டாகியதெதுவும் உடன் படிக்கைக்குரிய ஆசீர்வாதமானதால் திரும்ப அவரண்டைக்கே நம்மை நடத்துகிறது. அவரின் வார்த்தையில் வைக்கிற  விசுவாசமும், அவர் இரக்கத்தில் நமக்கு நம்பிக்கையும், அவர் பிள்ளைகளிடத்தில் நாம் வைக்கிற அன்பும், அவர் சேவைகளில் நமக்கிருக்கும் வைராக்கியமும், பாவத்திற்காக நாம் படும் துக்கமும், பரிசுத்தத்தின்மேல் நமக்கிருக்கும் வாஞ்சையும் அவர் நம்மை நேசிக்கிறார் என்பதற்கு அத்தாட்சிகள். நம்மைப்போல பாவிகள் தேவனுடைய பிள்ளைகள் என்று சொல்லப்படுவதற்கு இணையான அன்புண்டோ.

நீர் என்னை நேசிக்கிறீரென்பதை
நான் சந்தேகிக்கக் கூடாது
உம்மை நேசிக்கச் செய்யுமேன்
என் நேசம் வர்த்திக்கப்பண்ணுமேன்.

நீங்கள் சந்தேகமப்படாமல் இருங்கள்

மார்ச் 10

“நீங்கள் சந்தேகமப்படாமல் இருங்கள்.” லூக்கா 12:29

நாம் எல்லாரும் சந்தேகங்கொள்ள ஏதுவானவர்கள், சந்தேகிக்கக்காரணம் இல்லாததையே முக்கியமாய் சந்தேகிக்கிறோம். சிலரோ சந்தேகம் மார்க்கத்திற்கு உரியதுப்போல் அதை அதிகப்படுத்திக் கொள்கிறார்கள். இது தவறு. பாவமும்கூட இரட்சகர் நம்மைப் பார்த்து விசுவாசியுங்கள் என்று சொல்லுகிறார். சந்தேகம் கர்த்தரைக் கனவீனப்படுத்தி, நமக்கு வருத்தமுண்டாக்கி, சாத்தானும் நம்மை எளிதாய் மேற்கொள்ள செய்கிறது. அவருடைய செயலைக் குறித்து நாம் சந்தேகங்கொள்ளக்கூடாது. அது உண்மையுள்ள வார்த்தை. கண்டு விசுவாசிப்பது சரியல்ல. ஒருபோதும் மாறாததும் மோசம் போகாததுமான நிச்திய வாக்குகளைப் பிடித்துக்கொள்வோமாக.

நமது தருமங்களையும் திறமைகளையும் நாம் அதிகம் நினைக்காமல், கர்த்தரையும் அவர் வல்லமையைப் பார்த்து நாம் கலங்கவேண்டியதில்லை. சுகபோகமாய் வாழ்வதைவிட தரித்திரராய் தேவனுக்கு வாழ்வதில் அதிக பாக்கியவான்களாகலாம். மனிதன் மனத் மாறுகிறதைப் பார்த்து நாம் கலங்க வேண்டாம். ஏனென்றால் தேவன் மனம் மாறாதவர். ஒரே மனதுள்ளவர். அவர் மனதை மாற்ற யாராலும் முடியாது. நமது மனதைச் சந்தேகிக்க இடங்கொடுத்தால் அது நம்முடைய தற்கால சந்தோஷத்தைக் கெடுத்து, பக்திக்கரிய கடமைகளைத் தடுத்து நம்பிக்கை என்னும் பார்வையை மங்கச் செய்து, நமது பயங்களைப் பெரிதாக்கிவிடும். பின்னும் கிருபை நிறைந்த தேவனுடைய பட்சத்தையும், நமது பேரில அவர் வைத்திருக்கும் அக்கரையும் சந்தேகிக்கும். ஆகவே சந்தேகம் வேண்டாம். விசுவாசிப்போம்.

கர்த்தர்மேல் பாரத்தை
வைத்து அவர் கரத்தை
நோக்கி அமர்ந்திரு,
இரட்சிப்பாரென்று காத்திரு
சிலுவையில் தொங்கி மீட்டாரே
உன்னை இரட்சிக்காமல் போகாரே.

சத்தியத்தை அறிவீர்கள்

மார்ச் 09

“சத்தியத்தை அறிவீர்கள்.” யோவான் 8:32

கிறிஸ்துவானவர் நமக்கு போதிக்கிறவரானால், நாம் பிள்ளைக்குரிய குணத்தோடும் கற்றுக்கொள்கிற மனதோடும் இருப்போமானால் சத்தியத்தை அறிந்துக்கொள்வோம். சீயோன் குமாரர்களும் குமாரத்திகளும் கர்த்தரால் போதிக்கப்படுகிறார்கள். தேவ போதனையைக் கேட்கிற எவரும் கிறிஸ்துவில் வளருவர். இயேசுவிடம் வருகிற எல்லாரும் இரட்சிப்புக்கேற்ற ஞானம் பெற்று சத்தியத்தை அறிந்து கொள்வர். கிறிஸ்துவுக்குள் சத்தியம் இருக்கிறது. அதன் மையம் அவர்தான். அவர் வசனத்தை நம்பி, அவர் பலிபீடத்தின்மேல் சார்ந்து அவருடைய சித்தத்தை அப்படியே செய்யும்போதுதான் அவரை அறிந்துக்கொள்ளுகிறோம். அவரை அறிந்துக்கொள்ளுகிறதே சத்தியத்தை அறிந்து கொள்வதாகும்.

சத்தியம்தான் நம்மை விடுதலையாக்கும். அது அறியாமையிலிருந்தும், தப்பெண்ணத்தினின்றும், புத்தியீனத்தினின்றும், துர்போதகத்திலிருந்தும் நம்மை விடுதலையாக்கும். சாத்தானுடைய அடிமைத்தனத்தினின்றும், நியாயப்பிரமாணத்தினின்றும் பொடுமையிலிருந்தும், அது நம்மை தப்புவிக்குpறது. பாவத்தின் குற்றத்தினின்றும் குற்ற மனசாட்சியினின்றும் அது நம்மை விடுவிக்கிறது. தேவனைப்பற்றி உண்மையான அறிவை நமக்குப் புகட்டி, சமாதானத்தையும் ஒப்புரவாகுதலையும் நமக்குத் தெரியப்படுத்துகிறது. நாம் கிறிஸ்துவின் சத்தியத்தை அறிவோமானால் உலகத்தை ஜெயிப்போம். பரம இராஜ்யத்தில் பிரவேசிப்போம். தேவ சமாதானம் பெற்று அவர் சித்தம் செய்வோம்.

தேவ பக்தியே நமது ஆனந்தம்.
கர்த்தாவே நீர் போதிக்கும்போது
பாவம் அற்றுப்போவதால்
உமதாவியில் நடத்திடும்.
கிருபையால் என்னைப் பிரகாசியும்.

Popular Posts

My Favorites

கல்வாரி (கபால ஸ்தலம்) என்று சொல்லப்பட்ட இடம்

ஜனவரி 09 "கல்வாரி (கபால ஸ்தலம்) என்று சொல்லப்பட்ட இடம்" லூக்கா 23:33 இன்று காலை கெத்செமனேக்குச் சொன்றோம். இந்த கல்வாரியைப் பார்த்துச் செல்வோம். கிறிஸ்து தேவகரத்திலிருந்து நேராய் கெத்செமனேக்கு வந்து துன்பங்களை ஏற்கத் தொடங்கினார்....