மார்ச்

முகப்பு தினதியானம் மார்ச்

இரக்கங்களின் பிதா

மார்ச் 26

“இரக்கங்களின் பிதா.” 2. கொரி. 1:3

யேகோவா நமக்குப் பிதா, இரக்கமுள்ள பிதா, உருக்கம் நிறைந்த பிதா. அவர் இரக்கங்களின் ஊற்றாயிருக்கிறபடியால், இரக்கங்களெல்லாம் அவரிடத்திலிருந்து தோன்றி அவரிடத்திலிருந்தே பாய்கிறது. நமக்குக் கிடைத்த விசேஷ இரக்கம் இரட்சகர்தான். அவர் தேவனின் ஒரே பேறான குமாரன். அவர் குமாரனை நம்மெல்லாருக்காகவும் இலவசமாய் ஒப்புக்கொடுத்தார். நம்மை உயிர்ப்பித்து, ஆறுதல்படுத்தி, இன்னும் நம்மைப் பாதுகாத்து வருகிற இரக்கத்திற்கு காரணர் அவரே. இரக்கமாய் நமக்கு வருகிற துன்பங்களும், விடுதலைகளும், இடைஞ்சல்களும், சகாயங்களும், நம்மைகளும் அவரின் சித்தத்தின்படிதான் நமக்கு வருகிறது.

அவரே இரக்கங்களின் பிதா, நமக்கு வரும் உருக்கமான இரக்கமெல்லாம் அவரிடத்திலிருந்தே பாய்கிறது. அவர் நம்மிடம் கோபிக்கிறவர் என்றும், அவர் கடினமானவர் என்றும் பல சமயங்களில் தப்பாய் நினைக்கிறதை இனி நீக்கி நமது விசுவாசத்தையும், நம்பிக்கையையும், அன்பையும் உற்சாகப்படுத்துகிறது. நாம் ஆராதிக்கிற தேவன் இரக்கம் நிறைந்தவர் என்று நம் ஆத்துமா அறிவதுதான் மிக முக்கியம். அப்போதுதான் சாத்தானின் அக்கினி அப்புகளைத் தடுக்க இது ஒரு நல்ல கேடகம். தேவனிடமிருந்து நாம் பெற்றுக்கொள்ளும் சகல ஈவுகளிலும் அவரை அதிகமாய் நேசிக்க இது ஒரு நல்ல வழி.

அன்பர்களே, இன்றிரவு உங்களுக்கு என்ன தேவை? இரக்கமா? அது தேவனிடத்தில் உண்டு. அது உங்களுக்கு நன்மையென்றால் அதைத்தர மனதாயிருக்கிறார். இன்றிரவு ங்கள் பரம பிதாவை நோக்குp கெஞ்சுங்கள். அவர் உற்களுக்கு இரங்குவார். அது உங்களுக்கு தேவையாயிருக்கிறது. எந்த இரக்கமானாலும் அதை உங்கள் முன்பாகக் கொண்டு வந்து வைப்பார்.

ஆத்துமாவே, உன் நேகர்
எந்நாளும் மாறாதவர்
யார் போயினும் அவரில்
நிலைத்துப் பிழைத்து நில்.

நாம் அவரை அறியும்படியாக

மார்ச் 25

“நாம் அவரை அறியும்படியாக” பிலி. 3:10

அப்போஸ்தலனாகிய பவுல் ஏழு விசேஷித்த காரியங்களைக் குறித்து விருப்பங்கொண்டான். அவைகளை இந்தச் சுருக்கமான நிருபத்தில் காணலாம். அவை அத்தனையும் கிறிஸ்துவைப் பற்றினதுதான். பவுல் எல்லாவற்றிற்கும் இயேசுவையே பிடித்து எப்போதும் அவர் சமூகத்தை நோக்கியே ஓடினான். அவன் ஆத்தும வாஞ்சை, விருப்பம் எல்லாம் அவரையே பற்றியிருந்தது. கிறிஸ்துவை அறியவும், அவரைத் தன் சரீரத்திலும், ஆத்துமாவிலும் மேன்மைப்படுத்தவும், அவரை ஆதாயப்படுத்திக் கொள்ளவும், அவரில் கண்டு பிடிக்கப்படவும், அவரில் ஒப்பாகவும், அவர் வரும் நாளில் மகிழ்ச்சி அடையவும், அவரோடிருக்கவும் விரும்பினான்.

கிறிஸ்துவை அறிகிற அறிவு மற்றெல்லா அறிவிலும் மேன்மையானது. ஆனால் நாம் அவரைக் குறைந்த அளவே அறிந்திருக்கிறோம். அதனால் குறைந்த அளவே அனுபவிக்கிறோம். அவரை ஆழமாய் தெளிவாய் அறிந்துக்கொள்ள வேண்டும் என்று நம் ஆத்துமா வாஞ்சிக்கிறதா? அந்த அறிவு பெலனுள்ளதாயும், நமது நினைவுகளையும், விருப்பங்களையும், நம்பிக்கையையும், பயங்களையும், ஆசைகளையும் தேவனுக்கு முன்பாகவும், மனுஷருக்கு முன்பாகவும் குறிப்பாக பரிசுத்தவான்களுக்கு முன்பாக நம் நடக்கையை ஒழுங்குபடுத்த நம் ஆத்தமா வாஞ்சிக்கிறதா? நமது அறிவு கிறிஸ்துவை அறிகிற அறிவில் வளர ஆவல் கொள்ளுகிறதா? நாம் கிறிஸ்துவை உண்மையாயும் உத்தமமாயும் அறிய விரும்புகிறோமா? அப்படியானால் அவர் வசனத்தை ஆராய்ந்துப் பார்ப்போம். அவரின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவோம். அவர் உண்மையான வாக்குகளைப்பற்றி தியானிப்போம். அவர் சமுகத்தையே நோக்குவோம். அவரைக்குறித்து அவருடைய மக்களிடம் பேசுவோம்.

ஆட்டுக்குட்டியின் மரணம்
நித்திய ஜீவ காரணம்
இவ்வறிவை அடையட்டும்
இதிலே நான் தேறட்டும்.

சமாதானத்தோடே போ

மார்ச் 24

“சமாதானத்தோடே போ.” லூக்கா 7:50

உண்மையான சமாதானம் பாவமன்னிப்பிலிருந்து உண்டாகிறது. தேவன் கிறிஸ்துவினால் நமது அக்கிரமங்களையல்லாம் மன்னித்துவிட்டாரென்று நாம் விசுவாசிக்கும்போது நமது ஆத்துமா அந்தச் சமாதானத்தை அனுபவிக்கும். நாம் விசுவாசத்தால் நீதிமான்களாக்கப்பட்டபடியினால் தேவ சமாதானத்தைப் பெற்றிருக்கிறோம். தேவனைப்பற்றி நாம் பயப்படவேண்டியதில்லை. நம்மை மன்னித்துவிட்டபடியால் நம்மீது அவர் குற்றஞ்சுமத்தமாட்டார். அவர் நமக்கு நன்மை செய்வார் என்று எதிர்ப்பார்க்கலாம். தம்முடைய குமாரனiயே தந்தவர், சகலத்தையும் நமக்கு இலவசமாய்க் கொடாமல் இருப்பாரா? நாம் எத்தீங்குக்கும் பயப்படாமல் எந்த நன்மையும் கிடைக்கும் என்று அவரை விசுவாசித்திருந்தால் நாம் சமாதானமாய் இருக்கலாம்.

இயேசு கிறிஸ்து அந்த ஸ்திரீயை மன்னித்து சமாதானத்தோடே போ என்று சொன்னதுபோல் நம்மையும் பார்த்துச் சொல்லுகிறார். சாத்தான் சொல்வரை கவனியாதே. மனிதனின் செயல்களில் அக்கறைக்கொள்ளாதே. பயப்படாமல் உன் கடமையைச் செய் . துன்பமும் சோதனையும் நேரிட்டால் அவைகளைச் சகித்துக்கொள். தேவ பக்திக்குரிய சிலாக்கியங்களை அனுபவி. மோசங்கள் சூழலாம். பெலவீனங்கள் பெருகலாம். ஆனாலும் சமாதானத்தோடே போ. தேவன் உன்னை ஏற்றுக்கொள்வார். நீ தேவனோடு ஒப்புவாக்கப்பட்டபடியால் தேவ நாமத்தை பிரஸ்தாபம்பண்ணு. யேகொவாவின் அன்பையும் மன்னிப்பையும் எங்கும் போய் சொல். அவர் சொல்வது உண்மை என்று சாட்சி சொல். உன்னால் உன் சத்துருக்கள் எல்லாரையும் ஜெபிக்க வைக்க முடியும். இன்று சமாதானமாய் இளைப்பாறு. தேவன் என்னோடு இருக்கிறார் என்று சொல்லி உன்னை ஆற்றித் தேற்றிக்கொள். அவர் சமாதானத்துடன் போ என்கிறார்.

என்னை அன்பாய் பாருமே
என் துக்கத்தை நீக்கிடும்
பயம் சந்தேகம் போக்கிடும்.
சமாதானம் கூறிடும்.

மன்னிக்கிறவர்

மார்ச் 23

“மன்னிக்கிறவர்.” சங். 86:5

கர்த்தர் இரக்கத்தில் பிரியப்படுகிறவராகவும், கோபத்திற்கு ஆத்தரப்படாதவராகவும், மன்னிக்கிற தேவனாகவும் வெளிப்படுகிறார். இது உண்மையானபடியால் இதை எப்போதும் நாம் விசுவாசிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் மன்னிப்பைத்தேடி எதிர்நோக்கிப் பெற்றுக்கொள்ள வேண்டும். அவரை நம்பி துக்கப்பட்டு அறிக்கையிடுகிற யாவருக்கும் கர்த்தர், அதை மன்னிக்க மனதுள்ளவரும், பின்வாங்காதவரும் ஆவார். ஆண்டவரின் நாமத்தில் அவரிடத்தில் வருகிற ஒவ்வொருவருக்கம் மன்னிப்பளிக்கும்போது தம்முடைய வசனத்துக்கு உண்மையுள்ளவராகவும், தமது குமாரனுடைய இரக்கத்தின்படி நியாயஞ்செய்கிறவராகவும் வெளிப்படுகிறார். அவன் மன்னிக்கிறவரானதால் நாம் பயப்படதேவையில்லை. மனம் கலங்க அவசியமில்லை. இந்த விஷயத்தில் கிறிஸ்துவைச் சந்தேகிப்பது பாவமாகிவிடும். ஆகையால் மகாபாவியையும் குறைவின்றி மன்னிக்க ஒரு வழியை ஏற்படுத்தியுள்ளார். பாவிகளாம் நம்மை மன்னித்து சேர்த்துக்கொள்ள, தம் அன்புள்ள ஒரே பேறான குமாரனைப் பிராயச்சித்த பலியாய் ஒப்புக்கொடுத்ததால் மன்னிக்க ஆயத்தமுள்ளவர் என்பதைக் காட்டினார்.

பிராயச்சித்தமின்றி மன்னிப்பு கிடையாது. அவர் செய்யக் கூடியதை எவ்விதமும் செய்வார். இயேசுவின் பிராயச் சித்தத்தின்படி தேவன் எவ்விதப் பாவிக்கும் பூரணமாய், சுலபமாக அனுதினமும் மன்னிப்பு அளிக்கு முடியாது. இந்த இரவிலும் இந்த நாளின் பாவங்களையும் முந்தின எல்லாப் பாவங்களையும் நமக்கு மன்னித்து, இந்த நேரத்திலேயே தர ஆயத்தமாய் இருக்கிறார். இது எவ்வளவு பெரிய சத்தியம்.

மரித்துயிர்த்த இயேசுவை
விசுவாசத்தால் நோக்குவோம்
அப்போது நீதிமான்களாகி
பரத்தில் சேர்ந்து களிகூறுவோம்.

வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளைச் சுதந்தரித்துக் கொள்ளுகிறார்கள்

மார்ச் 22

“வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளைச் சுதந்தரித்துக் கொள்ளுகிறார்கள்.” எபி. 6:17

சுபாவத்தின்படி மற்றவர்களைப்போல நாமும் கோபாக்கினையின் புத்திரர். மற்றவர்களைப்போலவே அக்கிரமக்காரர். எது மற்றவர்கள். கெட்டுப்போனவர்கள். தேவனுக்கு விரோதமாகவும் அவருடைய இராஜ்யத்திற்கு விரோதமாகவும் கலகம்பண்ணினார்கள். எந்த நற்கிரியைகளையும் தேவன் நமக்கு செய்ய நாம் தகுதியுள்ளவர்களல்ல. ஆனால் புதிய ஏற்பாட்டு காலத்திலே தமது குமாரன் இயேசு கிறிஸ்துவால் வாக்குத்தத்தங்களையும் சுதந்தரத்தையும் கிருபையால் ஏற்படுத்தியிருக்கிறார். நம்மையும் ஒரு பொட்டென எண்ணினபடியால் தன் ஆத்துமாவை வியாகுலத்திற்கு ஒப்புக்கொடுத்தார். நம் மூலம் தேவனுக்கு மகிமையுண்டாக அவரில் ஆம் என்றும் ஆமென் என்றும் இரு;கிற வாக்குத்தத்தங்களுக்கு நம்மைப் பாத்திரராக்கினார்.

ஆகையாம் நாம் கிறிஸ்துவோடு சம்மந்தப்பட்டிருக்கிறபடியினாலும், கிறிஸ்துவின் மரணத்தின்மூலம் நமக்கு பங்கிருக்கிறபடியினாலும், வேதத்தின் சகல வாக்குத்தத்தங்களுக்கும் நம்மை சொந்;தரக்காரர் ஆக்கினார். நித்தியி ஜீவனும் என்றுமுள்ள நீதியும், இம்மைக்கும் மறுமைக்கும் நமக்கு வேண்டிய சகலமும் நமக்கு வாக்களிக்கப்பட்டிருக்கின்றன. நாம் சுதந்தரர், ஆகையால் நமது சுதந்ரத்தில் எல்லாம் இருக்கிறது. இந்தச் சுதந்தரம் நமக்கு கிருபையினால் வந்ததுது. இந்தக் கிருபை கிறிஸ்துவால் கிடைத்தது. மோட்சத்துக்கு நம்மை நடத்துகிறது. நன்றி செலுத்த நம்மை ஏவுகிறது. நான் சுதந்தரவாளியா? வாக்குத்தத்தங்கள் என் பத்திரமா? அப்படிப்பட்ட சுதந்தரத்துக்கு நான் பாத்திரனாக ஜீவிக்கிறேனோ என்று நாம் நம்மை சோதித்தறியக்கடவோம்.

தேவன் வாக்குப்பண்ணினதை
சுதந்தரிப்போம் எந்நாளும்
அவரில் நிறைவடைவோம்
தேவ நாமம் துதிப்போம்.

மேன்மையான பரம தேசத்தையே விரும்பினார்கள்

மார்ச் 21

“மேன்மையான பரம தேசத்தையே விரும்பினார்கள்.” எபி. 11:16

மேலான தன்மையே அல்ல மேலான நிலைமையை அல்ல. மேலான தேசத்தையே விரும்பினார்கள். முற்பிதாக்கள் விரும்பினது இதுதான். அப்போஸ்தலரும் இதையே நாடினார்கள். எந்த உண்மை கிறிஸ்தவனும் இதைத்தான் நாடுவான். நாமும் மேலான பரம தேசத்தை நாடுகிறோமா? ஒரு நித்திய தேசம் நமக்குண்டு. அது வேதத்தில் நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது. இயேசுவை விசுவாசித்து மரண பரியந்தம் உண்மையாயிருக்கிற யாவருக்கும் அது வருத்தம் இல்லை. துன்பம் இல்லை, கண்ணீர் இல்லை, கவலை இல்லை. அது இளைப்பாறும் இடம். அந்த மேல் வீட்டில் அன்பு நிறைந்திருக்கும். சத்துருக்கள் இல்லை. பாவம் செய்யும் மனிதனும் மாய்மாலம் நிறைந்த கிறிஸ்தவர்களும் அங்கே இல்லை. பொறாமையுள்ள சகோதரர் அங்கு இல்லை.

அது பூரண அன்பும் இடைவிடாத துதியும் நிறைந்த ஓரிடம். அங்கே எல்லாரும் தேவனை நேசிப்பார்கள், தேவன் எல்லாரையும் நேசிப்பார். ஒவ்வொருவரும் பிறரை நேசிக்கும் ஸ்தலம். அது பரிசுத்தம் நிறைந்த வீடு. அங்கே பாவமில்லாததால் ஒவ்வொருவரும் இயேசுவைப்போலவே இருப்பார்கள். எங்கும் எப்போதும் மகிழ்ச்சிப் பரவசம், பரிசுத்தம், கலக்கமற்ற ஆறுதல்தான் அங்கு உண்டு. அங்கே இயேசுவை முகமுகமாய் பார்க்கலாம். அங்கே தேவன் தமது மகிமையை வெளிப்படையாகக் காண்பிக்கிறார். நமது ஆசைகளெல்லாம் நிறைவேறும் இடம் அது. எல்லா ஆத்துமாவும் மகிமையின் நிறைவுப்பெற்று பொங்கி வழியும். அதுN நமது நித்திய உண்மை தேசம். ஆத்துமாவே நீ அதை வாஞ்சிக்கிறாயா? அதுவே உனக்கு போதும் என்று நினைக்கிறாயா? கர்த்தருடைய ஜனங்களுக்கு இருக்கும் இளைப்பாறுதல் அதுவே.

வரும் மகிழ்ச்சி கண்டு
பயம் அகற்றுவோம்
தேவன் நம் சொந்தமென்று
கண்ணீரைத் துடைப்போம்.

கிறிஸ்துவுடன் எழுந்திரு

மார்ச் 20

“கிறிஸ்துவுடன் எழுந்திரு.” கொலோ. 3:1

இயேசுவானவர் நமது பிணையாளியாகையால் நமக்கு பதிலாக மரித்தார். தம்முடைய ஜனங்கள் எல்லார் சார்பாகவும் மரித்தார். அப்படியே எல்லாருக்காகவும் உயிர்த்தெழுந்தார். அவர் மரித்தபோது அவருடைய ஜனங்கள் எல்லாரும் மரித்தார்கள். அவர் உயிர்த்தெழுந்தபோது அவர்கள் எல்லாரும் அவரோடு உயிர்த்தெழுந்தார்கள். இதனால்தான் கிறிஸ்துவிலுள்ள ஜீவ ஆவியினால் நாம் உயிர்ப்பிக்கப்பட்டு, நம்பிக்கையினாலும் ஆசையினாலும், அன்பினாலும் எழுந்து அவரோடு பரத்திற்கு ஏறுகிறோம். அவருடைய ஜீவன் நம்மில் வெளிப்படும்போது, உயிர்த்த கிறிஸ்துவின் ஜீவன் நம்மில் வெளிப்படுத்த வேண்டியவர்களாகிறோம். பாவத்திற்கு நாம் செத்தவர்களாயும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்துவின்மூலம் தேவனுக்குப் பிழைத்திருக்கிறவர்களாயும் நம்மை எண்ணிக்கொள்ள வேண்டும்.

விசுவாசிகள் எல்லாரையும் அவர் எழுப்பி கிறிஸ்துவோடுகூட தமது வலது பாரிசத்தில் உட்காரப்பண்ணினார் என்று சொல்லியிருக்கிறது. கிறிஸ்துவும் அவருடைய ஜனங்களும் ஒன்றுதான். அவுர் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றினபோதும், உயிர்த்தெழுந்தபோதும், தமது இரத்தத்தால் மகா பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசித்தபோதும் அவர்களுக்கு முதலாளியாகத்தான் அப்படி செய்தார். அவரின் மரணத்தின்மூலம் அவர்கள் பிழைக்கிறார்கள். அவருடைய ஐக்கியமாகத்தான் பிழைக்கிறார்கள். அவருக்கு கனம் மகிமையும் உண்டாகத்தான் பிழைக்கிறார்கள். கிறிஸ்துவோடு எழுப்பப்பட்டவர்கள் உலகத்தை பிடித்துக்கொண்டிருப்பது சரியல்ல. அவர்களின் ஆசையும், பாசமும், எண்ணமும், தியானமும் பரலோகத்தில் தான் இருக்க வேண்டும். ஏனெனில் அவர்களுடைய சிரசும், பங்கும், ஜீவனுமானவர் அங்கேதான் இருக்கிறார்.

கிறிஸ்துவோடு எழுந்து
அதை உணர்ந்த பக்தரே
கீழானதை இகழ்ந்து
மேலானதை நாடுவீரே.

அவர் என் ஆத்துமாவைத் தேற்றுகிறார்

மார்ச் 19

“அவர் என் ஆத்துமாவைத் தேற்றுகிறார்.” சங். 23:3

காணாமற் போன ஆட்டைப்போல் விழி தப்பினோன். நாம் எப்போதும் அலைந்து திரிய ஏதுவானவர்கள். அப்படி அலைந்துதிரியும்போது அந்த நல்ல மேய்ப்பர் நம்மைத் தேடி கண்டுபிடிக்குகும் வரையில், நாம் சரியான பாதைக்குத் திரும்புகிறதேயில்லை. அவருடைய பார்வையோ, அலைந்து தரிகிற ஆட்டின்மேல்தான் இருக்கிறது. அவருடைய உள்ளமோ காணாமற்போன ஆட்டின்மேலே இருக்கிறது. அதைக் கண்டு அதன்மேல் அன்புகாட்ட தகுந்த நேரம் வரும் என்றே காத்திருக்கிறார். நயமாயும், பயமாயும், கண்டித்தும், போபித்தும் அதைப்பின் தொடர்ந்து போய் கண்டுபிடித்து வருகிறார்.

தொழுவத்தைவிட்டு அலைந்து திரிவது, புத்தியீனமென்று அந்த ஆத்துமா உணரும்போது, அலைந்து திரிகிறதினால் மனவருத்தமடைந்து, உள்ளுக்குள்ளே ஜெபித்து, எப்போது திரும்பலாமென்று கவலைப்பட்டு மேய்ப்பனின் அடிகளைத் தேடி வந்து, தன் பாவத்தையும், அறியாமையையும் அறிக்கையிட்டு, இரக்கத்திற்காக கெஞ்சி, உம்முடைய இரட்சிப்பின் சந்தோஷத்தை எனக்குத் திரும்ப கட்டளையிடும் என்று சத்தமிடும். மேய்ப்பனோ தன் கரத்தினால் அதைத் தூக்கி, தோளின்மேல் போட்டு அன்பாய்க் கண்டித்து தொழுவத்திற்குக் கொண்டு போகிறான். கிருபையால்தான் இப்படி திருப்ப ஏதுவுண்டு.

மேய்ப்பனுடைய கரிசனையில்தான் அலைந்து திரிகிற ஆத்துமா சீரடையும். சீர்ப்பட்டவன் மேய்ப்பனால் சுத்தமாக்கப்படுகிறார். அவன் மனம் மிருதுவாகிறது. பாவத்தின்மேல் பகை ஏற்படுகிறது. தன்னைத்தான் வெறுத்து தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறான். மேய்ப்பனின் இரக்கமே நம்மை இப்படி நடத்துகிறது. நம்மை மீட்டு மேய்ப்பனின் இரக்கத்தை அனுதினமும் நினைப்போமாக.

வழி தப்பி திரிய
என் இருதயம் பார்க்கிறது
உமக்கே அதைப் படைக்கிறேன்
அதை நீரே திருத்துமேன்.

பயப்படாமலும் கலங்காமலும் இரு

மார்ச் 18

“பயப்படாமலும் கலங்காமலும் இரு.” உபா. 1:21

கர்த்தர் நம்மை சோதித்தாலும் நமக்குத் தைரியம் கொடுக்கிறார். அவர் தமது வசனத்தில் முன்னூற்று அறுபத்தாறு முறைக்குமேல் பயப்படாதே என்கிறார். ஆனால் நாமோ அடிக்கடி பயப்படுகிறோம். இதை ஆண்டவர் அறிந்துதான் நம்மைச் சந்தோஷப்படுத்தவும், நமக்கு உற்சாகம் அளிக்கவும் இத்தனை முறை சொல்லியிருக்கிறார். தேவன் நல்ல தேசத்தை நமக்கு முன்பாக வைத்து அதை நமக்கத் தருவேன் என்று வாக்களித்து அதைச் சுதந்தரித்துக்கொள்ளப் போங்கள் என்று கற்பித்தபடியால் நாம் அதைரியப்படக்கூடாது. நமது சத்துருக்கள் பலத்திருக்கலாம். ஆனால் நமது சர்வ வல்லவரான தேவன் நமக்காக யுத்தம்பண்ணுவார். நமது சத்துருக்கள் தந்திரக்காரராய் இருக்கலாம். ஞானமுள்ள ஒரே தேவன் நமது பட்சத்தில் இருக்கிறார். தேவக்கோபம் நம்மீது இருப்பதுப்போல தோன்றலாம். நமது ஜெபங்களுக்கு பதில் அளிக்காமல், காரியங்கள் மோசப்பட்டு போவதாய்க் காணலாம். ஆனால் நமது நற்குணங்களை அதிகப்படுத்த, நமது உத்தமத்தைச் சோதிக்க, கருத்தான ஜெபத்தை ஏறெடுக்க இப்படிப்பட்ட காரியங்களைத் தேவன் அனுமதிக்கிறார் என்று அறிய வேண்டும்.

அன்பர்களே, ஆகவே நம்பிக்கையில் உறுதிப்பட்டு விசுவாசத்தில் விடாப்பிடியாய் இருக்க வேண்டும். கர்த்தர் நமக்காக வெளிப்படுவார். நமது அனுபவத்தால் அவர் வசனம் உண்மையுள்ளது என்று கண்டறிவோம். இப்போது எந்தப் பதிலும் அவர் சொல்லாவிட்டாலும் நமது இருதயம் விரும்புகிறபடி சீக்கிரம் செய்வார். ஆதலால் பயப்பட அவசியமில்லை. பயம், விசுவாசத்தைப் பெலவீனப்படுத்தி, தேவனைக் கனவீனப்படுத்தி, நமது சத்துருக்களை சந்தோஷப்படுத்தும். உங்களோடு தேவன் இருக்கிறார். அவர் உனக்கானவர்.

உமது சமுகம் தேடி
உம்மில் மகிழ்ந்திருப்போம்
உமது வாக்கை நம்பி
பயத்தை அகற்றுவோம்
விக்கினங்கள் பெருகினும்
உம்மால் வெற்றிபெறுவோம்.

கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்து

மார்ச் 17

“கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்து.” 1.நாளா. 16:29

தேவன் தமது நாமத்தை அவருடைய வல்லமையான கிரியைகள் எல்லாவற்றின் மேலும், அன்பான ஈவுகள் எல்லாவற்றின் மேலும் தயவாய் மாட்சிமையாய் வரைந்திருக்கிறார். தேவ நாமத்தை நாம் நன்கறிய வேண்டும். அதிலும் சுவிசேஷத்தை ஆராய்ந்தறிய வேண்டும். தேவன் தமது நாமத்தை, பாவங்களைக் குணமாக்குதலிலும், நீதிமான்களாக்கப்படுவதிலும், பரிசுத்தவான்களாக்கப்படுவதிலும், மகிமைப்படுத்துவதிலும் வரைந்திருக்கிறார். தமது மகிமையான தன்மைகளையும், குணநலன்களையும் விளக்கி வெளிப்படுத்துகிறார். தேவன் தமது நாமத்தை தம்முடைய வசனத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார். அதை உபதேசங்களிலும், வாக்குத்தத்தங்களிலும், கட்டளைகளிலும், இனி வெளிப்படப்போகிற காரியங்களிலும் நாம் வாசிக்கிறோம்.

யேகோவாவின் நாமத்தை நாம் சரியானபடி வாசித்து அறிவோமானால், ஆச்சரியத்தோடும் நிரப்பப்படுவோம். அப்படி நிரப்பப்படும்போது நமது ஜெபங்களிலும், துதிகளிலும், நடக்கைகளிலும் அவரை மகிமைப்படுத்துவோம். அவருடைய நாமத்திற்குரிய பிரகாரம் அவரை மகிமைப்படுத்த நமது திறமைகளும், காலமும் போதவே போதாது. அவரை மகிமைப்படுத்துவது நமது கடமை. இருதயம் மட்டும் சுத்தமாய் இருக்குமானால் அது நமக்கு இனிமையாய் இருக்கம். நாம் அடிக்கடி தேவமகிமையை அசட்டை செய்கிறோம். தேவனுக்குரியதை நாம் செலுத்தாமல் போவதால் ஆத்துமாவுக்கரிய ஆறுதலை நாம் அனுபவிக்க முடியாமல் இருக்கிறோம். அவரு நாமத்திற்கரிய மகிமையை அவருக்குச் செலுத்த நாம் கற்றுக்கொள்வோமாக.

வான் கடல் பூமி யாவும்
உம் நாமம் துதித்து போற்றும்
உமது நாமம் கற்போம்
அப்போது ஞானிகள் ஆவோம்

Popular Posts

My Favorites

அவன் இப்பொழுது ஜெபம்பண்ணுகிறான்

நவம்பர் 14 "அவன் இப்பொழுது ஜெபம்பண்ணுகிறான்" அப். 9:11 பவுல் பரிசேயனாக இருந்தபொழுது எழுதப்பட்ட ஜெபங்களைமட்டும் வாசித்து வந்திருப்பான். இப்பொழுதுதான் அவர் மெய்யாகவே ஜெபம் செய்கிறான். இயேசு கிறிஸ்துவில் அவன் புதிய மனிதன் ஆனபடியினாலே அவனுடைய...