இடைவிடாமல் உன் தேவனை நம்பிக்கொண்டிரு

மார்ச் 05

“இடைவிடாமல் உன் தேவனை நம்பிக்கொண்டிரு.” ஓசியா 12:16

உன் தேவனை நம்பிக்கொண்டிரு அல்லது உன் தேவனுக்காகக் காத்துக்கொண்டிரு. தேவனிடம் காத்திருப்பதே நம்மை பரம சிந்தைக்கு வழி நடத்துகிறது. அவருடைய சிங்காசனத்துக்கு முன் நிறுத்தி அவர் வார்த்தையில் விசுவாசம் தந்து, அவர் இரத்தத்தை நம்ப வைத்து அவரின் சித்தத்திற்கு நேராய் நம்மை நடத்துகிறது. அவர் பாதத்தில் அமர்ந்திருக்கும்போதுதான் அவருக்குப் பிரியமானதை செய்ய நமது மனம் நினைக்கும். காத்திருக்கும் ஆத்துமாதான் சகலத்திலும் தேவனைக் காண்கிறது. எவ்விடத்திலும் தேவன் இருக்கிறார் என்றே உணருகிறது. எந்தக் காரியத்தையும் தேவன் நடத்துகிறார் என்று ஒத்துக்கொள்கிறது. உன் தேவனிடத்தில் எப்போதும் காத்திரு. அப்போதூன் எக்காலத்திலும் மோசத்திற்குத் தப்பி சுகித்திருப்பாய். எந்தச் சோதனையிலும் வெற்றிப் பெறுவாய். கர்த்தர் தம்முடைய நியமங்களின்மூலம் உன்னை மேன்மைப் படுத்துகிறதைக் காண்பாய்.

ஜாக்கிரதையுள்ள ஊழியக்காரன் தன் பட்சமுள்ள எஜமானிடத்திலும், உத்தம வேலைக்கரி தன் எஜமாட்டியிடத்திலும் பட்சமுள்ள பிள்ளை தன் பிரிய தகப்பனிடத்திலும் காத்திருப்பது போல காத்திரு. நீ காத்திருப்பது அவருக்குப் பிரியமானபடியால் அவரிடத்தில் காத்திரு. காத்திரு என்று உன்னிடம் அவர் சொன்னதால் காத்திரு. அவர் இரக்கம் காண்பிக்கும் நேரத்திற்காக காத்திரு. அவருக்காக காத்திருப்பவர்கள் வெட்கப்படமாட்டார்கள். கர்த்தரிடம் காத்திரு. திடமனதாயிரு. அதுவே பெலன். இனி ஆத்துமாவே, இன்று தேவனிடத்தில் காத்திருந்தாயா? இந்த இராத்திரியிலே அவரோடு அமர்ந்து காத்திருக்கிற சிந்தை உன்னிடத்தில் உண்டா? கர்த்தருக்குக் காத்திருக்கிறேன் என்று தைரியமாய் உன்னால் சொல்ல முடியுமா? இல்லையென்றால் இனிமேலாவது காத்திருக்க தீர்மானி.

விசுவாசித்து காத்திரு
திடமாய் நிலைத்திரு
அவர் வார்த்தை உண்மையே
அவர் பெலன் அளிப்பாரே.

இஸ்ரவேலின் ஜெயபலமானவர் பொய் சொல்லுகிறதில்லை

மார்ச் 04

“இஸ்ரவேலின் ஜெயபலமானவர் பொய் சொல்லுகிறதில்லை.” 1.சாமு. 15:29

கர்த்தர் பொய் சொல்லாதவரானபடியால் நாம் அவருக்கு உண்மையாக இருந்து அவரை நம்பவேண்டும். இது நமது கடமை. அவருக்கு முன்னால் பொய்யற்றவர்களாக நிற்க வேண்டும். அவருடைய பொய் சொல்லா வாக்குகளெல்லாம் அவர் அன்பிலிருந்து பிறக்கும் கனிகள். அவர் சர்வ வல்லவரானபடியால் தமது வார்த்தைகளை எவ்விதமும் நிறைவேற்ற வல்லவராயிருக்கிறார். அவர் உண்மையுள்ளவராய் இருக்கிறபடியால் எவ்விதத்தினாலும் அதை நிறைவேற்றுவார். தமது ஜனங்களை ஆற்றித்தேற்ற அவர் வல்லமை உள்ளவர். அவர் தமது வசனத்தின்மூலம், நம்மோடு பேசுகிறார். பாவிகளாகிய நம்மைப் பார்த்து பேசுகிறார். சோதனையிலும், துன்பத்திலுமிருக்கிற உங்களைப் பார்த்து இந்த நாளில் இருக்கிறவிதமாய் பேசுகிறார்.

நம் பயங்களைப் போக்க, நம்முடைய துன்பங்களில் நம்மை மகிழ்ச்சியாக்க, நம்முடைய வருத்தங்களில் நமக்கு ஆறுதல் அளிக்க நம்மைப் பார்த்துப் பேசுகிறார். அவர் உண்மையுள்ள வார்த்தையை நாம் உண்மையாய் நம்புகிறோமா? தேவன் உண்மையையே பேசுகிறார் என்று நினைக்கிறோமா? அவர் நமக்கு உண்மையாய் இருக்கிறதுபோல நாமும் அவருக்கு உண்மையாய் இருக்கிறோமா? அவர் சொல்லைப்பற்றி பிடித்திருக்கிறோமா? எப்போதும் உண்மை தேவனை நோக்குகிறோமா? எப்போதுமே நமது பரமபிதா உண்மை வார்த்தைகளைத்தான் பேசுகிறார் என்று விசுவாசிக்கிறோமா? வானமும் பூமியும் ஓழிந்தாலும் என் வார்த்தைகளோ ஒழிந்து போகாது என்று இயேசு சொன்னதை உண்மையானது என்று உண்மையாய் நம்புங்கள். அவரை நம்பி நடவுங்கள். அவருடைய வார்த்தையை நோக்குங்கள். அப்படி நோக்கும்போது பின் வருகிற பிரகாரம் சொல்லலாம்.

தேவனே சொன்னதால்
அவர் உண்மையுள்ளவராதலால்
வாக்கை நிறைவேற்றுவார்
எதையும் செய்து முடிப்பார்.

கீழ்ப்படிகிற பிள்ளையாய் இருங்கள்

மார்ச் 03

“கீழ்ப்படிகிற பிள்ளையாய் இருங்கள்.” 1.பேதுரு 1:14

தேவன் என் தகப்பன், நான் அவரின் பிள்ளை என்று ஒவ்வொரு விசுவாசியும் அனுதினமும் பிரியத்தோடு உணரவேண்டும். அவர் ஒரு பிள்ளையைப்போல் அவனை நடத்துகிறார். என் பரமபிதா எனக்கு வேண்டியதெல்லாம் சுதந்தரித்து வைத்திருக்கிறார். பாவியான ஒருவன் பக்தனானபோது இயேசுவிடமிருந்து எல்லாம் கிடைக்கிறது. இயேசுவிலுள்ளதெல்லாம் அவனுக்காகதான். இயேசுவின் நிறைவிலிருந்து கிருபை மேல் கிருபையைப் பெற்றுக்கொள்ளவேண்டும்.

நீயோ அவர் பிள்ளைப்போல் பிதாவின் சத்தத்திற்குச் செவிகொடுக்க வேண்டும். அவர் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து அவர் சித்தத்திற்கு அடிபணிய வேண்டும். கீழ்ப்படிவதுதான் உன் கடமை. உனக்கு வேண்டியதெல்லாம் உன் பிதா தருவார். அவர் சொல்படி செய்வதுதான் உன் வேலை. பின்னால் நடக்கப்போவதைப்பற்றி கவலைப்படாதே. எந்த விஷயத்திலும் பிதாவின் சித்தம் மட்டும் தெரிந்து கொண்டால் அதுவே அவர் திட்டப்படி செய்ய சுலபமாயிருக்கும். உனக்கு இருக்கும் nரிய கௌரவம் தேவன் உனக்கு தகப்பனாயிருப்பதுதான். உன்னை சொல்லமுடியா அன்பினால் ஒருவர் நேசிக்கிறார். அதுவே உனக்குப் பாக்கியம். அவர் பாதம் அமர்ந்து காத்திருக்கும்போது இன்னும் உன்னை நேசிக்கும் பிதா, சகல ஞானத்திலும் அறிவிலும் வல்லமையாலும் நிறைந்த பிதா உனக்கு இருக்கிறார் என்று நினை. இதுவே உனது மகிழ்ச்சி. பிள்ளையைப்போல உன் மனதை அவருக்கு ஒப்புவி. உன் கவலைகளையெல்லாம் அவர் மேல் போட்டுவிடு. அப்போது உனக்கு ஆசீர்வாதமும், ஆறுதலும் நிச்சயமாய் கிடைக்கும். உனக்கு வேண்டியதெல்லாம் தாராளமாய்ப் பெற்றுக்கொள்வாய்.

கர்த்தாவே எனக்கிரங்கி
எனக்குத் தயை காட்டி
குறைவையெல்லாம் நீக்கி
என்மேல் நேசம் வைத்திடும்.

கர்த்தர் சமீபமாயிருக்கிறார்

மார்ச் 02

“கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.” பிலி. 4:5

இயேசு கிறிஸ்து வரப்போகிறார். அவர் வருகிற நாள் தெரியாது. ஆகையால் நாம் எப்போதும் ஆயத்தமாய் இருக்க வேண்டும். அவர் சீக்கிரம் வருவார். உண்மையாய் வரத்தான் போகிறார் என்று உணர்ந்தோமானால், சாம் இப்போது இருக்கிறதுபோல் அடிப்படி உலக காரியங்களில் சிக்கிக்கொள்ள மாட்டோம். உலகத்துக்குரியவைகளைச் சிந்திக்காமல் தினமும் பரலோகத்தை நினைத்து ஏங்குகிறவர்களாய் இருப்போம். உலகை நியாயந்தீர்க்கவும், நமது பிள்ளைகளை ஒன்று சேர்க்கவும், அவனவன் செய்த கிரியைகளுக்குத் தக்க பலன் தரவும், அவர் சீக்கிரம் வரப்போகிறார்.

அந்த நாள் சமீபமாயிருக்கிறதென்று உணர்ந்தோமானால் சோதனையில் அது நம்மைப் பாதுகாக்கும். பின்மாறாதபடி தடுக்கும். நமது பயபக்தியையும் பரம சிந்தையையும் அதிகமாக்கும். அவரையே Nநூக்கியிருக்க செய்யும்: அவருக்காக நம்மை ஆயத்தப்படுத்தும்.

நாமோ! அவரை வாரும் இயேசுவே என்று அழைத்து அவரின் வருகைக்காய் வாஞ்சையோடு காத்திருக்க வேண்டும். அவர் வரும் போது கிருபையை தம்முடன் கொண்டு வருவார். நம்மை தம்முடன் சேர்த்துக்கொள்வார். சத்துருக்களை நாசம்பண்ணுவார். நம்மைத் தமது சாயலுக்கொப்பாய் மாற்றுவார். இயேசுவானவர் வரும்போது அவரின் ஜனங்கள் பூரண பாக்கியவான்களாய் இருப்பார்கள். அழுகை இன்பமாயும், துயரங்கள் ஸ்தோத்திர கீதங்களாயும் மாறும். ஆமென், கர்த்தராகிய இயேசுவே வாரும். சீக்கிரம் வாரும் என்று அழைப்போம்.

வாரும் இயேசுவே வாரும்
உமது மகிமையைக் காட்டும்
அதை நாங்கள் கண்ணாய் கண்டு
கையில் பொற் கின்னரம் கொண்டு
ஜெயம் ஜெயம் என்று
வாழ்த்திப் போற்றிப் பாடுவோம்.

உம்முடைய அதிசயமான கிருபையை விளங்கப்பண்ணும்

மார்ச் 01

“உம்முடைய அதிசயமான கிருபையை விளங்கப்பண்ணும்.” சங். 17:7

நம்மை மிகவும் அன்பான உறவில், தம்மோடு ஜக்கியப்படுத்திக்கொண்டதினால், இந்தப் பெரிய கிருபையை விளங்கப்பண்ணியிருக்கிறார். ஒரு புழுவைத் தம் பிள்ளையென்று அழைப்பது எத்தனை கிருபை. பாவம் நிறைந்த தீட்டுள்ள ஒரு புழுவைத் தன் மணவாட்டி என்று அழைப்பது எவ்வளவு பெரிய கிருபை. நமது பங்களை நீக்கி, நமக்குள் நம்பிக்கை தந்து, விருப்பங்களை உண்டாக்கி, நம்மோடு இணைந்து விடுகிற தேவனின் கிருபைதான் எவ்வளவு பெரியது. இந்த அன்பை எப்படி சொல்வது.

அதிசயமான கிருபை என்பது அதிகமாய் நம்மை எழுப்பிவிடத்தக்க அன்புதான். இது உருக்கம் கொள்ளுகிற, பட்சம் காட்டுகிறது அன்பு. இது தாழ்ந்த சிந்தையால் அலங்கரிக்கப்பட்ட அன்பு. அதிசயமான கிருபையைக் காண்பிப்பது. அதிக தயவைப் பாராட்டுவதாகும். வழக்கத்திற்கு மாறான தயை. அறிவுக்க விளங்காத கருணை. விசுவாசம் மட்டும் எதிர்பார்க்கிற தேவ அன்பு. இதை விசுவாசத்தோடு கேட்டால் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். அன்பதே, நன்மை செய்வதே தேவனுக்குப் பரியம் என்பதை நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது. தமது ஊழியக்காரனுடைய சுகத்தைத்தான் அவர் விரும்புகிறார். நமக்கு நன்மை செய்வதில் அவர் ஆநன்தப்படுகிறார். நாம் தாழ்மையோடு, மனந்திருப்தியாய் விசுவாசத்தைத் தினமும் முயற்சிப்போமானால், நமக்கு ஒன்றையும் மறுக்கவும் மாட்டார். நாம் கேளாததினால்தான் பெற்றுக்கொள்ளுகிறதில்லை. கேட்டாலும், தகாதவிதமாய் கேட்பதினாலும் பெற்றுக்கொள்ளாமல் போகிறோம்.

தேவனே நான் உம்மையே
நம்பி இருக்கிறேன்.
என் விண்ணப்பம் கேளும்
எனக்குத் துணையாய் வாரும்
புவியில் இருக்கும் எனக்க
இரங்கி தயை காட்டுமே.

Popular Posts

My Favorites

அவர்களில் நான் மகிமைப்பட்டிருக்கிறேன்

யூலை 18 "அவர்களில் நான் மகிமைப்பட்டிருக்கிறேன்" யோவான் 17:10 பிதாவை மகிமைப்படுத்துகிறதுதான் இயேசுவின் கிரியை. பிதா அவரில் மகிமைப்படுகிறார். இயேசுவை மகிமைப்படுத்துவது அவருடைய வேலையாய் இருக்குமானால் இயேசு நம்மில் மகிமைப்படுவார். அவருடைய இரத்தம் நம்மை மன்னித்து சமாதானப்படுத்தி,...