ஏப்ரல்

முகப்பு தினதியானம் ஏப்ரல்

ஆண்டவரே எனக்கு உதவி செய்யும்

ஏப்ரல் 19

“ஆண்டவரே எனக்கு உதவி செய்யும்” மத். 15:25

இந்த வார்த்தை ஒர் ஏழை ஸ்திரீயினுடைய இருதயத்திலிருந்துப் பிறந்த ஜெபம் இது. கிறிஸ்துவின் இதயத்துக்குள் சென்றது. இது சுருக்க ஜெபமானாலும் சகலத்தையும் அடங்கிய ஜெபம். எந்த வேளைக்கும் இது ஏற்றதானாலும் சில சந்தர்ப்பங்களில் மிகவும் ஏற்றது. நமது பெலவீனத்தை அறிந்து உணருகிறது பெரிய இரக்கம். அப்போதுதான் கர்த்தரின் பெலனுக்காய் இருதயத்திலிருந்து கெஞ்சுவோம். நாம் செய்ய வேண்டிய எந்தக் காரியத்திலும், சகிக்க வேண்டிய எந்தச் சோதனையிலும், நாம் படவேண்டிய எத்துன்பத்திலும், ஆண்டவரே, எனக்கு உதவிசெய்யும் என்று ஜெபிக்கலாம். நமக்கு தேவ ஒத்தாசை தேவை. அதைக் கொடுப்பேன் என்று வாக்களித்திருக்கிறார். அதைத் தேடிப் பெற்றுக்கொள்வது நமது கடமை.

முழு மனதோடு இயேசுவுடன் இருக்க உதவி செய்யும். எப்போதும் சந்தோஷமாய் உமது சித்தம் நிறைவேற்ற உதவி செய்யும். எல்லா வருத்தங்களையும் கடந்து பரம அழைப்பிற்குரிய பந்தயப் பொருளை இலக்காக வைத்து ஓடும்படி கிருபை செய்யும். வாழ்வில் நன்றி நிறைந்த உள்ளத்தோடு உம்மைப் போற்றி தாழ்வில் பொறுமையாய் உமது சித்தம் தேட உதவி செய்யும். என் சத்துருக்களை ஜெயிக்க உதவி செய்யும். சோதனைகளை மேற்கொள்ள உதவி செய்யும். என் மரண நாள் மட்டும் உம் பாதத்தில் அமைதியோடு காத்திருக்க உதவி செய்யும் என்று தினந்தோறும் ஜெபிப்போமாக. இப்படி விசுவாசத்தோடு உணர்ந்து ஜெபிப்போமானால், கர்த்தர் எனக்குச் சகாயர், மனிதன் எனக்கு என்ன செய்வான். நான் பயப்படேன் என்று அனுதினமும் சொல்லலாம்.

கர்த்தாவே கிருபை புரியும்
நான் ஏதுமற்ற பாவி
உமக்காக உழைத்து மரிக்க
உமதாவி அளியும்.

எசேக்கியா மனமேட்டிமையானான்

ஏப்ரல் 26

“எசேக்கியா மனமேட்டிமையானான்” 2.நாளா. 32:25

எசேக்கியா மனமேட்டிமையில் அதிகம் வளர்ந்து விட்டான். அவன் நல்லவன்தான். சற்று நேரத்துக்கு முன்னே தேவன்புக்குரிய சாட்சி பெற்றான். நாம் மாம்சத்தின்படி பெருமை வாய்ந்தவர்களானபடியால் தேவன் நமக்குத் தயவு காட்டும்போது நாம் வெகு அதிகமாய் இன்னும் மனமாட்டிமை கொள்கிறோம். தேவன் சோதிக்கும்போது  முறுமுறுக்கிறோம். தேவன் அதிகமாய் தம்மை நமக்கு வெளிப்படுத்தும்போதுதான் டிடிடிடிடி அதிகம் சோதிப்பார். ஆகவே நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். பெருமையைப் பகைக்கிறது போல் வேறெதையும் அவ்வளவு அதிகம் பகைக்கிறதில்லை. அடிகனநநந445வர் அதைச் சகிக்க அவ்வளவு அதிகம் பகைக்கிறதில்லை. அவர் அதைச் சகிக்க மாட்டார். ஆனாலும் நாம் பெருமையில்தான் அதிகம் விழுந்து விடுகிறோம்.

பெருமையுள்ள இருதயம் நல்ல கனிகளைக் கொடாது. தாழ்மையுள்ள இருதயம் ஆவியின் கனிகளைக் கொடுக்கும். பெருமையால், பகையும் விரோதமும், பாகுபாடும், இருதய கடினமும், அடையாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். பெருமைப்பட்டால் தேவன் நம்மை கீழேத் தள்ளி எசேக்கியாவின் விஷயத்தில் செய்ததுப்போல் நமக்கும் செய்ததுப்போல் நமக்கும் செய்துவிடலாம். சாத்தான் நாம் பெருமையில் வளர வேண்டும் என்பதால் நாம் ஜெபம்பண்ணுவதை விட்டுவிடச் செய்வான். ஜெபம்செய்வதை நிறுத்துவோமானால் சாத்தானுடைய ஆதிக்கத்திற்குக் கீழே இருப்போம். அவனோடிருந்தால் பெருமை வந்துவிடும். ஆகவே கிருபை பெறுமுன் எப்படி இருந்தோம். கிருபையை பெறாவிட்டால் எப்படி இருப்போம். கிருபையினால் தேவன் நம்மை இரட்சிக்காவிட்டால் நம்முடைய நிலைமை எப்படி இருக்குமென்று எண்ணி தாழ்மையாய் இருப்போமாக.

இயேசுவே உம்மைப்போல் நான்
தாழ்மையுள்ளோன் சுத்தவான்
சாந்தம் உள்ளவனாக
இருக்கச் செய்யும் தேவன்.

தம்மைத்தாமே தாழ்த்தினார்

ஏப்ரல் 15

“தம்மைத்தாமே தாழ்த்தினார்” பிலி. 2:8

இவ்வாறு தம்மைத் தாழ்த்தினவர் யார்? மகிமையின் பிரகாசமானவர், பிதாவின் அச்சடையாளமானவர் தேவனோடிருந்தவர். தேவனாயிருந்தவர். வல்லமையுள்ள தேவனும், நித்திய சமாதானப் பிரபுவுமானவர், எப்படி அவர் தம்மைத் தாழ்த்தினார்? நம்முடைய தன்மையை எடுத்து அடிமையின் ரூபம் எடுத்து, மரண பரியந்தம் கீழ்ப்படிந்து தம்மைத் தாழ்த்தினார்.

மாட்டு தொழுவத்தைப் பார், தச்சுப் பட்டரையைப் பார், நாசரேத்தூர் குடிசையைப் பார், யோர்தான் நதியைப் பார், தலை சாய்க்க இடமின்றி அலைந்தவரைப் பார். கெத்செமனேயைப் பார், கொல்கொதாவைப் பார், யோசேப்பின் கல்லறையைப் பார், இவைகயையெல்லாம் பார்த்தான் அவர் எவ்வளவாய் தன்னைத் தாழ்த்தினார் என்பது விபரிக்க வேண்டி இராது. எல்லாம் உனக்குத் தெரிந்ததே. ஏன் இப்படி தன்னை தாழ்த்தினார் என யோசி. அவர் நம்மை நேசித்தபடியினால் தம்மைத் தாழ்த்தினார். அளவற்ற அன்பினால் ஏவப்பட்டு மகத்துவமானவர் தம்மைத் தாழ்த்தினார். மனுஷரோடு பழகி, நமது குறைகளையும், பெலவீனங்களையும் அறிந்ததினால், நமக்கு பெலன் தர தம்மைத்தாழ்த்தினார். நமக்கு உதவிடும்படி மரணம் மட்டும் பணிந்து தாழ்த்தினார். நமக்கு உயர்த்த தம்மைத் தாழ்த்தினார். நம்மை மேன்மைப்படுத்த தம்மைச் சாபமாக்கினார். நாம் மகிழ்ந்து பாட அவர் பெருமூச்சு விட்டார். சாபமாக்கினார். நாம் மகிழ்ந்து பாட அவர் பெருமூச்சு விட்டார். நாம் பிழைக்க அவர் மரித்தார். நாம் சிங்காசனம் ஏற அவர் சிலுவையில் ஏறினார். ஆச்சரியமான தாழ்மை. அதிசயமான அன்பு.

பாவிக்காய் மனதுருகி
தேவன் இரத்தம் சிந்தினார்
இது என்ன அதிசயம்
எவர்க்கும் விளங்கா இரகசியம்.

நான் ஐசுவரியவான் என்று சொல்லுகிறாய்

ஏப்ரல் 29

“நான் ஐசுவரியவான் என்று சொல்லுகிறாய்”  வெளி 3:17

கர்த்தர் தமது ஏழை மக்களைப் பார்த்து உங்களுக்காக நான் சவதரித்து வைத்திருக்கிற காரியங்களைப்பற்றி, நீங்கள் ஐசுவரியமுள்ளவர்கள் என்று சொல்வது வேறு. பெருமைக்கொண்ட பேர் கிறிஸ்தவன் தான் ஐசுவரியவானென்று சொல்லிக்கொள்வது வேறு என்கிறார். ஆவியின் சிந்தையுள்ளவர்கள் எப்போதும் தங்களுடைய வறுமையை உணருகிறபடியால் தங்களை வெறுத்து தங்களுக்கு வேண்டியதையெல்லாம் கிறிஸ்துவின் நிறைவிலிருந்து பெற்றுக்கொள்ள கற்றுக்கொள்ளுகிறார்கள். நம்முடைய பக்தியயும், செய்கையையும், ஐசுவரியத்தையும்பற்றி நாமே மெச்சிக்கொள்வது நல்லதல்ல. அப்படி செய்தால் இயேசுவைவிட்டு நம் கண்களைத் திருப்பிவிட்டோம் என்றே பொருள். சாத்தானும் நம்மேல் ஜெயமடைவான். இரட்சகர் பாதத்தில் விழுந்து நமது குறைவுகளை உணர்ந்து அவருடைய நிறைவிலிருந்து எதையும் செய்யவும் எந்தச் சிலாக்கியத்தையும் அனுபவிக்கத்தக்கதாக தேடும்போதுதான் நாம் சுகமுடன் இருப்போம்.

தங்களை ஐசுவரியவான்களென்று நினைத்துக் கொண்டிருக்கிறவர்களைப் பார்த்து ஆண்டவர் நிர்ப்பாக்கியமுள்ளவரும், பரிதபிக்கத்தக்கவரும், தரித்திரரும், குருடரும், நிர்வாணியுமானவர்கள் என்று சொல்லுகிறார். இவர்கள் தம்மிடம் வந்து நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், வெண் வஸ்திரத்தையும் பார்வையடையும்படிக்கு கண்ணுக்குத் கலிக்கத்தையும்  வாங்கிக்கொள்ளச் சொல்கிறார். நம்மிடம் இருக்கும் எதையும்பற்றியும் நாம் பெருமை அடையாதிருப்போமாக. தரித்திரராகிய நீங்கள் பாக்கியவான்கள், பரலோக இராஜ்யம் உங்களுடையது. ஐசுவரியவான்களாகிய உங்களுக்கு ஐயோ என்கிறார். நீங்கள் ஒருபோதும் எதிலும் பெருமையடையாமல் உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்.

என் நிர்ப்பந்தத்தைப் பாருமேன்
நான் நிர்வாணி, குருடன்
ஒன்றுமற்ற பாவி நான்
முற்றிலும் அபாத்திரன்
உமது பாதம் நம்பினேன்
இல்லையேல் கெடுவேன்.

சகல கிருபையும் பொருந்திய தேவன்

ஏப்ரல் 01

“சகல கிருபையும் பொருந்திய தேவன்.” 1. பேது.5:10

யேகோவா தேவன் தம்மைக் குறித்துச் சொல்வது எத்தனை மகிழ்ச்சியாயிருக்கிறது. நாம் தேவனது மேலான குணநலன்களையும் தகுதிகளையும் பார்த்துவிட்டு, அவருக்கு எதிராக தகாத பல காரியங்களையும் செய்து விடுகிறோம். அவர் சகல கிருபை பொருந்தின தேவனாயிருக்கிறதுமல்லாமல் நீதியுள்ள தேவனாயும் இருக்கிறார். அளவற்ற நித்திய கிருபையுள்ள தேவன். இரக்கத்தின் ஐசுவரியமும் அவரிடத்தில் உண்டு. குற்றவாளியை மன்னிக்கிறதும், மரித்தோரை உயிர்ப்பிக்கிறதும், ஆறுதல் அள்ளவர்களுக்கு ஆறுதல் தருபவரும், பெலவீனரைப் பெலப்படுத்துகிறதும், வழி தப்பி திரிகிறவர்களைத் திரும்பக் கொண்டு வந்து சேர்க்கிறதும், கெட்டுப்போனவர்களை இரட்சிக்கிறதுமான கிருபை அவரிடத்தில் உண்டு.

தம்முடைய மக்களுக்கு அவர் செய்கிற கிரியைகளில் தமது கிருபையை வெளிப்படுத்துவதில் எவ்வளவு தாராளமாய் அந்தக் கிருபையைக் காட்டினார். சிலுவையில் அறையப்பட்ட கள்ளனை இரட்சித்ததில் ஏற்ற காலத்தில் கிருபையைக் காட்டினார். காட்டத்தி மரத்தினின்று சகேயுவை இறங்கி வரச் சொன்னபோது, அவன் எதிர்பாராதவிதமாய் இந்தக் கிருபையை வெளிப்படுத்தினார். இவைகளெல்லாம் கிருபை நிறைந்த தேவன் நமக்கு காட்டும் இரக்கமாகும். தேவனை நாம் அளவற்ற கிருபை நிறைந்தவராய்ப் பார்ப்போமாக. அபாத்திரரும் பாவிகளுமான நம்மிடத்தில் தான் அவர் மாட்சிமையும், கிருபையும் மகிமையும் அதகமாய் விளங்குகிறது. இது நமது ஐயங்களை நீக்கி ஜாக்கரதையுள்ளவர்கள் ஆக்க வேண்டும். நம்பிக்கையோடும் நன்றி உணர்வோடும் அவருக்கு ஒப்புவிக்க இது நம்மை ஏவ வேண்டும். நமது தேவன் சகல கிருபையினாலும் நிறைந்தவர் என்ற சிந்தையினால் உண்டாகும் மகிழ்ச்சியோடு இன்று இரவு நித்திரைக்குச் செல்வோமாக.

தேவனே நான் உம்மைவிட்டு
கெட்டு அலையாமல்
மன்னித்து மகிழ்ச்சியாக்கும்
உம் சமுகம் என்னைக் காக்கும்.

பிரியமானவர்களுக்குள் முன்குறித்திருக்கிறார்

ஏப்ரல் 27

“பிரியமானவர்களுக்குள் முன்குறித்திருக்கிறார்”  எபேசி. 1:5-6

இயேசுகிறிஸ்துவானவர்தான் இப்பிரியமானவர். அவரின் பிதாவோ இவரை அளவற்றவிதமாய் நேசிக்கிறார். அவரை அவர் ஜனங்கள் நேசிக்கிறார்கள். நேசிக்கத்தக்கவர். அவர் தன்மையும், வாழ்க்கையும் நேசிக்கத்தக்கவைகள். தேவ ஜனங்கள் யாவரும் இவர்மூலமாய் தேவனிடத்தில் சேருகிறார்கள். இவர் மேலேயே இவர்கள் நம்பிக்கை வைக்கிறார்கள். அவரோடு ஐக்கியப்பட்டு அவருடன் ஒன்றாககக் காணப்படுகிறார்கள். அவரிலே பார்க்கும்போது தேவனுடைய பார்வையில் அருமையானவர்களும் நேசிக்கப்படத்தக்கவர்களுமாய் இருக்கிறார்கள்.

தேவன் தம் பிள்ளைகளை முற்றும் அழகுள்ளவர்களென்று சொல்லி, அவர்கில் கறையில்லை என்கிறார். அன்பரே! நம்மில் நாமே குறைவுள்ளவர்கள், மகா பரிசுத்தருக்கு வெறுப்புண்டாக்குகிறார்கள். ஆனால், கிறிஸ்துவிலே நாம் பரிசுத்தர், நீதிமான்கள், சவுந்தரியவான்கள். அவர் நீதியால் நாம் உடுத்தப்பட்டிருப்பதால் தேவன் நம்மை நீதிமான்களென்கிறார். அவருடைய ஆவியால் நாம் நிரப்பப்படும்போது தேவன் நம்மை நேசிக்கத்தக்கவர்கள் என்கிறார். இயேசுவின்மூலமன்றி வேறு வழியே சென்றால் தேவன் நம்மை ஏற்றுக்கொள்ள மாட்டார். பிரியமானவர்மூலம் நம்மை அங்கீகரித்துக்கொள்வதினால், தம்முடைய கிருபையை யாவரும் கண்டு பிரமிப்பு அடையும்படி அதை மகிமைப்படுத்துகிறார். விசுவாசிகளாக தேவன் அங்கீகரித்துக் கொள்கிறார். இதைவிட அதிகமாய் அவர் நம்மை அங்கீகரித்துக் கொள்கிறார். இதைவிட அதிகமாய் அவர் நம்மை அங்கீகரிக்கப் போவதில்லை. நாம் அங்கீகரிக்கப்பட்டோம் என்பதை அதிக திட்டதாய் அறிந்து அதை அதிக சந்தோ}மாய் அனுபவிக்கலாம். ஆனால் இப்பொழுது இருக்கிறதிலும் அதிகமாய் நாம் அங்கீகரிக்கப்படவும் மாட்டோம்.

இயேசுவுக்கு நன்றியாக
அவர் ஒளியில் நடப்பேன்
முழுவதும் சுத்தனாகுமட்டும்
அவரையே பின்பற்றுவேன்.

என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்று அறிவேன்

ஏப்ரல் 16

“என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்று அறிவேன்” யோபு 19:25

மரணத்துக்குரிய உலகில் நாம் வாழ்கிறோம். சிநேகிதரும் இனத்தாரும் ஒவ்வொருவராய் மரித்துக்போகிறார்கள். ஓர் இனத்தான் மட்டும் மரிக்கிறதேயில்லை. இயேசுவே அந்த இனத்தான். நம்மை மீட்கும் சுதந்தரம் அவருக்குண்டு. நம்மை மீட்கும் பொருளைக் கொடுத்ததுமல்லாமல் முற்றும் விடுதலையாக்க உயிரோடிருக்கிறார். தேவ வலது பாரிசத்தில் நமது தன்மையைத் தரித்தவராயிருக்கிறார். மகா பரிசுத்த ஸ்தலத்தில் நமக்காக இருக்கிறார். என்றும் இருக்கிறவராகவே இருக்கிறார். அவரின் இவ்வேலையை வேறு ஒருவரும் செய்ய முடியாது. அவர் நமக்காக மன்றாடி நம்முடைய சத்துருக்களை ஜெயித்து, கிருபைகளைப் பூரணப்படுத்தி மரணத்தினின்று நம்மை மீட்டுக் கொள்வார். அவர் இரண்டாம் முறை பாவமில்லாமல் வருகையில் நம்மை இரட்சித்து மகிமைப்படுத்துவார்.

வேத வசனத்தின்மூலமும், பரிசுத்தாவியானவரின் போதனை மூலமும் நாம் அறிந்துக் கொள்ளலாம். நாம் நம்பியிருக்கும் வண்ணமே அவரை அறிந்துக்கொள்ளுவோம். நான் என் மீட்பராக அவரை அறிவேன். அவர் என்னைச் சாத்தானிடமிருந்தும், பழைய பாவத்திலிருந்தும், பொல்லாத உலகத்திலிருந்தும் மீட்டுக் கொண்டார். அவர் கரத்தில் என் ஆவியை ஒப்புவித்திருக்கிறேன். அவர் என்னை மீட்கும்படி உயிரோடிருப்பதால் நானும் பிழைத்திருப்பேன்.

என்றென்றும் நம்மை நேசித்து என்றுமே நம்மை பிழைப்பிக்கிற ஒரு நண்பன் நமக்கு இருப்பது எத்தனை மகிழ்ச்சி? நாம் அவருக்குப் பிரியமானவர்களானபடியால் நம்முடைய காரியம் அவருடைய கரத்தில் பத்திரமாயிருக்கும். இயேசுவே நான் இன்னும் அதிகம், உம்மை நேசித்தால் எவ்வளவு நலம்.

என் மீட்பர் உயிரோடிருக்கிறார்
எனக்காகப் பேசுகிறார்
அவர் அளிப்பது இரட்சிப்ப
ஜீவன் சுகம் பூரிப்பு

ஒன்று செய்கிறேன்

ஏப்ரல் 07

“ஒன்று செய்கிறேன்.” பிலி. 3:13

உலகத்தில் நாம் வைக்கப்பட்டிருக்கிற விசேஷித்த நோக்கத்தின் மேல், நமது விருப்பங்கைளயும், நினைவுகளையும், எண்ணங்களையும் வைப்பது மிகவும் முக்கியம். தாவீது கர்த்தருடைய வீட்டில் வாசம்பண்ணவேண்டுமென்கிற ஒரே ஒரு காரியத்தையே விரும்பினான். மரியாள் தன்னைவிட்டு எடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துக்கொண்டாள். பவுல் பரம அழைப்பின் பந்தயப்பொருளின்மேல் நோக்கமுள்ளவனாயிருந்தான். கடந்து போனதை மறந்து மேலானவைகளை, இனிமையான பரம காரியங்களை, அதிக பயனுள்ளவைகளை நாடினான். கடந்து போனதும் நிகழ் காலத்திலுள்ளதும் போதுமென்று நினைக்கவில்லை. அவர் விருப்பம், விரிவானது. அவன் நம்பிக்கை மேலானது. தேவனுக்காக செய்ய வேண்டியதெல்லாம் செய்ய வேண்டும். தேவனிடத்திலிருந்து பெற்றுக்கொள்ளக்கூடிதெல்லாம் பெற்றுக் கொள்ள Nவுண்டும். கூடியமட்டும் இயேசுவைப்போல மாறவேண்டும். இதுவே அவனுடைய பெரிய விருப்பமாய் இருந்தது.

அன்பானவர்களே, இது எவ்வளவாய் நம்மைக் கடிந்துக்கொள்ள வேண்டும்? தீர்மானித்தவைகளினின்று நமது மனம் எத்தனை முறை பின்வாங்கி போயிருக்கிறது? நமது இருதயம் முன்னானவைகளை மறந்துவிட்டிருக்கிறது? இயேசுவானவர் தமக்கு முன்வைக்கப்பட்ட சந்தோஷத்தின் மேலேயே நோக்கமாயிருந்தார். மோசே இனிவரும் பலனின்மேல் நோக்கமாயிருந்தான். பவுல் உலகின் காரியங்களைப் பாராமல் நித்திய காரியங்களைNயு நாடினான். அந்த ஒரே காரியத்தின்மேல் நமது மனதையும் குறியையும் உறுதியாய் வைக்கவேண்டியது அவசியம். தம்முடைய மக்களை உற்சாகப்படுத்த இயேசு கிறிஸ்து காப்பிக்கிறதும், அந்த நாளில் அவர்களுக்குக் கொடுக்கப்போகிறதுமான காரியந்தான் அது.

பந்தயத்தை இலக்காக
வைப்பதொன்றே தேவை
பின்னானதை மறந்து
இயேசுவில் மோட்சம் காண்பேன்.

சமாதானம் சமாதானம்

ஏப்ரல் 05

“சமாதானம் சமாதானம்.” ஏசாயா 57:19

இவ்விதமான மிருதுவான அமைதி தரும் வார்த்தைகளைத்தான் சுவிசேஷம் நமக்குச் சொல்லுகிறது. நமக்கு வரும் எத்துன்ப நேரத்திலும், சோதனையிலும், வியாதியிலும், வருத்தத்திலும் அது நம்மிடம் சமாதானம் சமாதானம் என்றே சொல்லுகிறது.

பாவத்தைப் பரிகரிக்க இயேசு மரித்ததால் சமாதானம், மோட்சத்தில் உனக்காகப் பரிந்து பேச இயேசு உயிர்த்ததால் சமாதானம், சகலத்தையும் ஆளும் இயேசுவின் கரத்தில் உன் பிரச்சனைகள் இருப்பதால் உனக்குச் சமாதானம். கிறிஸ்து உன்னை நேசிக்கிறதினால் உனக்குச் சமாதானம். அவரின் மரணத்தில் நீ ஒப்புரவாக்கப்பட்டபடியினால் உனக்குச் சமாதானம். மனம் கலங்கவேண்டாம், உன்னைப்பற்றி தேவன் கொண்டிருக்கும் எண்ணம் எல்லாமே சமாதானம். உன்னைக் குறித்துத் தேவனால் தீர்மானிக்கப்பட்டதெல்லாம் சமாதானம். பரலோகமும் உன்னோடு சமாதான உறவை ஏற்படுத்திக் கொள்கிறது.

கிறிஸ்து உனக்காக மரித்தபோதும், உன் பாவம் தொலைந்தபோதும் உன் சமாதானம் நிறைவேறி முடிந்தது. உனக்குச் சமாதானம் உண்டாக்குகிற அவரையே நோக்கிப்பார். கெத்செமனே கொல்கொதா இவைகளை அடிக்கடி நினைத்துக்கொள். தேவனைச் சமாதானத்தின் தேவனாகவும் பரலோகத்தைச் சமாதானத்தின் வீடாகவும் சிந்தனை செய். உம்மை உறுதியாய் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால் நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர் என்கிற வாக்கை அடிக்கடி தியானி. உன் மனதில் கர்த்தரின் சமாதானம் தங்கட்டும்.

விசுவாசம் வர்த்திக்கப்பண்ணும்
சமாதானம் அளித்திடும்
உமது பெலனை நம்புவேன்
பாவத்தால் கலங்கிடேனே.

கிறிஸ்துவின் அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது

ஏப்ரல் 17

“கிறிஸ்துவின் அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது” 2.கொரி. 5:14

நேசிக்கிறவர்களுடைய குணத்துக்கும் தன்மைக்கும் தக்கபடியே அவர்களின் நேசமும் இருக்கும். இயேசு கிறிஸ்து நிறைவுள்ளவரானபடியால் மேலான குணங்கள் எல்லாம் அவரிடத்தில் இருந்தது. அவருடைய அன்பு அதிசயமானது, மகிமையானது. அதில் பாவிகளுக்காக உருகும் உருக்கமும் நீதிமான்களுக்கா மகிழும் மகிழ்ச்சியும் இருக்கிறது. பிதா அவரை நேசிக்கிறதுபோலவே நம்மை அவர் நேசிக்கிறார். பிதா அவர்மேல் வைக்கும் அன்பு எவ்வளவு அதிகமென்று நமக்குத் தெரியாததுப்போலவே அவர் நம்மேல் வைக்கும் அன்பின் அளவு தெரிந்துக்கொள்ள முடியாது.

அன்பு அவர் இருதயத்தில் வாசம்பண்ணி அவர் கண்களில் விளங்கி, தமது கைகளினால் கிரியை செய்து, அவர் நாவில் பேசி அவரால் சகலத்தையும் சம்பாதிக்கிறது. இயேசு எந்த நிலைமையும் தாழ்வாக எண்ணவில்லை. எந்தச் செயலையும் கேவலமாய் நினைக்கவில்லை. எந்தக் குறைவையும் பார்த்துவிட்டுப் போகவில்லை. எந்த ஈவையும் பெரியதாக எண்ணவில்லை. எந்தத் துன்பத்தையும் சகிக்கக் கூடாதென்று சொல்லவில்லை. தமது ஜனத்தின் மத்தியில் கண்ட எந்த நன்மையையும் அற்பமாய் எண்ணவில்லை. அவர்களுக்கு நன்மை செய்ய எந்தப் பேதமும் பார்க்கவில்லை. கிறிஸ்துவின் அன்பு, சொல்லுக்கும் நினைவுக்கும் அடங்காதது. இந்த அன்பால் ஏவப்பட்டு நான் அப்போஸ்தலர்கள் உழைத்தார்கள். துன்பத்தைச் சகித்தார்கள். இரத்த சாட்சிகளாய் மரித்தார்கள். கிறிஸ்துவின் அன்பை நாம் உணருவோமானால் நம்மை அவருக்கு ஒப்புக்கொடுத்து சகலத்தையும் வீணென்று தள்ளுவோம். அவருக்காக எதையும் சகிக்க, உழைக்க, மரிக்க கொடுக்க அவரின் அன்பே நன்மை ஏவிவிடுகிறது. கிறிஸ்துவின் அன்பு ஜாக்கிரதைக்கும், வைராக்கியத்துக்கும், உதாரகுணத்துக்கும் உன்னை ஏவி விடுகிறதா?

பாவம் விட்டொழிக்க
கிறிஸ்துவின் அன்பு ஏவுது
அவருக்கு என்னை ஒப்புவிக்க
அது என்னை நெருக்குது.

Popular Posts

My Favorites

ஜெயங்கொள்ளுகிறவன்

யூலை 20 "ஜெயங்கொள்ளுகிறவன்" வெளி 2:17 ஒவ்வொரு கிறிஸ்தவனும் போர்ச்சேவகனானபடியால் கிறிஸ்து இயேசுவின் நற்சேவகனாக இருக்க கற்பிக்கப்படுகிறான். கிறிஸ்தவனாகிய போர்ச்சேவகன் யுத்தத்திற்குப்போக வேண்டும். அவனுக்குச் சத்துருக்கள் ஏராளம், பலசாலிகள். கிறிஸ்தவன் அவர்களை ஜெயிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள்...