ஜனவரி

முகப்பு தினதியானம் ஜனவரி

குறிப்பினால் அறிந்தேன்

ஜனவரி 26

“குறிப்பினால் அறிந்தேன்.” ஆதி. 30: 27

குறிப்பினால் அறிந்தேன் அல்லது அனுபவத்தால் அறிந்தேன். இப்படி சொன்னவன் லாபான். யாக்கோபு தனக்கு ஊழியஞ் செய்ததினால் தான் அடைந்த பிரயோஜனத்தைப்பற்றி இப்படி சொன்னான். தேவ போதனையால் உண்டாகும் நன்மையைக் குறித்தும் ஒரு கிறிஸ்தவன் இப்படிச் சொல்லலாம். அனுபவம் என்பது பரீட்சையினால் உண்டாகும் அறிவு. அனுபவத்தால்தான் உண்மை மார்க்கத்தின் உண்மையும், மேன்மையும் அடைகிறோம். அறிகிறோம். சாத்தானுடைய தந்திரங்களையும், விசுவாசத்தின் ரகசியங்களையும் அறிகிறோம். துன்பத்தால் உண்டாகும் பிரயோஜனத்தையும் இவ்வுலகத்தின் வெறுமையையும் ஒன்றுமில்லாமையையும் உடன்படிக்கையில் நமக்கு தேவனுடைய அன்பையும் உண்மையையும் கற்றறிகிறோம்.

அனுபவத்தால் வருகிற அறிவுக்கு சமமானது ஒன்றுமில்லை. கேள்வியால் உண்டாகும் அறிவுக்கு இது மேலானது. உறுதியைப் பார்த்தாலும் பிரயோஜனத்தைப் பார்த்தாலும் மனதை ஸ்திரப்படுத்துகிற நிச்சயத்தைப் பார்த்தாலும் இது எந்த அறிவுக்கும் மேலானது. வாலிபர்கள் அடக்கமுடியவர்களாயிருக்க வேண்டும். அவர்கள் அறிந்துக் கொண்டது கொஞ்சம். அனுபவமடைந்தவர்கள் தாங்கள் அறிந்ததை மற்றவர்களுக்கு சொல்ல வேண்டும். இதுபோல் பிரயோஜனமுடையது ஒன்றுமில்லை. அனுபவத்தால் நாம் சொல்லுகிறதும் நமது நடக்கையையும் ஒத்திருக்க வேண்டுமென்பதைக் குறித்து நாம் மிகவும் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.

நேசித்து உமது சொல்படி
செய்திட எனக்கு கற்பியும்
உமது அனுபவத்தின்படி
என்னை உம்முடையவனாக்கும்.

கிறிஸ்து நமக்காக மரித்தார்

ஜனவரி 24

“கிறிஸ்து நமக்காக மரித்தார்.” ரோமர் 5:8

இது எத்தனை மகத்துவம் நிறைந்த சத்தியம். இன்றைய நாளில் இதைச் சற்று கவனமாய்ச் சிந்திப்போம். தேவனின் ஒரே மகனும், சகல நன்மைக்கு ஊற்றும், எல்லா மேன்மைக்கு மகிமையும், முதலும் முடிவுமாய் கிறிஸ்து மரித்தார். தேச சுபாவத்தையும் மனுஷ சுபாவத்தையும் தம்மில் ஒன்றாய் சேர்த்து வைத்திருந்த இயேசுவானவர் மரித்தார். உடன்படிக்கையில் நமது சுதந்தரராக ஏற்பட்டு நமக்காக பூமிக்கு இறங்கியவர். மரணத்தைவிட தம் சிநேகிதரை நேசித்ததால் அவர் மரித்தார். நம்மை அவர் நேசித்ததாலும் பிதா அவரை தெரிந்துகொண்டதினாலும் அவர் நமக்காக மரித்தார். நாம் நிர்பந்தரும், துன்மார்க்கவுரும், பெலனற்றவர்களும், சத்துருக்களுமாயிருந்தபோது அவர் நமக்காக மரித்தார்.

நமது சரீரத்திற்குச் சிரசாகவும், பிணிப்போக்கு ம் மருந்தாகவும், சிறைப்பட்டவர்களை விடுதலையாக்கவும் தன் மணவாட்டிக்கு மணவாளனாகவும், மந்தைக்கு மேய்ப்பனாகவும், பிதாவின் சித்தத்தை முடிக்க வந்த பணிவிடைக்காரனாகவும், அவர் நமக்காக மரித்தார். நம்மை மரணத்திலிருந்து மீட்கவும், நித்திய ஜீவனுக்கு உயர்த்தவும், தேவனோடு ஒப்புரவாக்கவும், தமது பரிசுத்த வாழ்வுக்கு நம்மை தகுதியுள்ளவர்களாக்கவும், நமக்கு முடிசூட்டி தம்மோடு இருக்கச் செய்யவுமே அவர் மரித்தார். நாமும் எந்நாளும் இயேசுவை நோக்கிக் கொண்டே ஜீவனம்பண்ணுவோமாக.

பாவிகளைத் தேடி வந்தார்
பாவங்கள் யாவையும் போக்கினார்
நம்மை மீட்க அவர்
ஆக்கினைக்குள்ளானார்
மேய்ப்பன் இரத்தம் சிந்தவே
ஆட்டுக்கு உயிர் வந்ததே.

கர்த்தாவே நான் உமது அடியேன்

ஜனவரி21

“கர்த்தாவே நான் உமது அடியேன்” சங்.116:16

நாம்கர்த்தருடைய ஊழியக்காரர். அவருடைய மகிமைக்காகவே சிருஷ்டிக்கப்பட்டோம். அவர்துதியைச் சொல்லி வர மீட்கப்பட்டோம். அவரின் மேன்மையான குணங்களைவிளக்குவதற்கே உருவாக்கப்பட்டோம். நாம் அவருடைய நெருங்கிய உறவினர்கள். இயேசுவானவர்நமது எஜமான். அவர் சித்தம் நமக்குச் சட்டம். அவருக்குப் பிரியமானதெதுவோ,அதுவே நமக்கு ஆனந்தமாயிருக்கவேண்டும். நமது எஜமானே நமக்கு முன்மாதிரி. அவர்பிதாவின் ஊழியக்காரனாக உலகத்துக்கு வந்து சகலத்தையும் பிதாவின் சித்தப்படியேசெய்து முடித்து பிதா கட்டளையிட்ட சகலத்தையும் முணுமுணுக்காமல் செய்து முடித்தார்.அன்று அவர் தம்மைத்தாமே தாழ்த்தி கீழ்ப்படிந்தபடியால் இப்பொழுது உயர்த்தப்பட்டு,மேன்மையாக்கப்பட்டு மகா உன்னதத்தில் இருக்கிறார்.

அவர்நம்மைப் பார்த்து ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்யமனதானால் அவன் என்னைபஇபோலிருக்கக்கடவன். நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்.ஒருவன் எனக்கு ஊழியஞ் செய்தால், என் பிதா அவனைக் குனப்படுத்துவார் என்கிறார்.நாம் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதினால் மனுஷன் நம்மைக் குறைவாய் எண்ணினாலும்எண்ணலாம். ஆனால் தேவனோ நம்மை மேன்மைப்படுத்துவார். உலகம் நம்மை நித்தித்துஅவமதிக்கலாம். அவர் தம்முடைய சமுகத்தாலும் அன்பான பார்வையாலும் நம்மைக்கனப்படுத்தி பிறகு நம்மை மகிமையில் சேர்த்துக் கொள்வார். இன்றைக்கு நாம்யாருக்கு ஊழியஞ் செய்தோம்? யாரைப் பிரியப்படுத்தினேம்? யாருடைய வேலைக்குமுதலிடம் கொடுத்தோம்? அவர் நம்மை அழைக்கும்போது அவரண்டைக்குப் போகமனமுள்ளவர்களாய், அல்லது நம்மை உலகத்தில் வைக்கும் பரியந்தமும் அவருக்குஊழியஞ்செய்ய முனமுள்ளவர்களாய் இன்றைய நாளில் சிந்திப்போம்.

கிறிஸ்துவின்அடியார்
மகாமேன்மை உடையார்
அவர்நுகம் சுமப்போர்
தேவாசீர்வாதம்பெறுவர்.

மார்த்தாளே, மார்த்தாளே… நீ கவலைப்பட்டுக் கலங்குகிறாய்

ஜனவரி 6

“மார்த்தாளே, மார்த்தாளே… நீ கவலைப்பட்டுக் கலங்குகிறாய்” லூக்கா 10:41

இயேசு மார்த்தாளில் அன்புகூர்ந்தார். மார்த்தாளும் இயேசுவில் அன்புகூர்ந்தாள். ஆனாலும் உலகக் காரியங்களை குறித்து அதிகமாய் கவலைப்பட்டுக்கொண்டிருந்தாள். இதனால் இரட்சகர் அவளைத் தயவாய்க் கண்டித்தார். அவளோ கவலைப்பட்டு படபடப்பாய்த் திரிந்தாள். அதினின்று அவளைத் தப்புவிக்க வேண்டுமென்பதுதான் நேசருடைய நோக்கம். மார்த்தாள் மிகுந்த கவலைக்குள்ளாகி கலங்கினபடியால், அவரோடு சம்பாஷிக்கவும் அவர் சொல்வதைச் சாந்தமாய்க் கேட்கவும் கூடாமற்போயிற்று.

கிறிஸ்தவர்களுக்குள் இது சாதாரணமாய் காணப்படும் குறை. சபையிலும் இன்று மார்த்தாளைப்போல் எத்தனையோ போர் இருக்கிறார்கள். மரியாளைப் போன்றவர்கள் வெகு சிலரே. நாமும் மரியாளைப்போல் இயேசுவின் பாதத்தண்டையில் உட்கார்ந்து, அவர் சொல்பதைக் கேட்டு, அவர் நமக்காகக் கவலைப்படுகிறார் என்று உணர்ந்து, நம்முடைய கவலைகளையெல்லாம் அவர் மேல்வைப்போமாக. நமது காரியங்களை எல்லாம் அவர் கரத்தில் இருக்கின்றன. சகலத்தையும் அவரே நடத்துகிறார். முதலாவது அவருடைய இராஜ்யத்தை நாம் தேடவேண்டுமென்றும், தேவ சமாதானம் உங்கள் இருதயத்தில் ஆளுகை செய்யட்டும். நடக்கிறதெல்லாம் உங்கள் நன்மைக்காக மாற்றப்படும். இவ்வுலகத்தைவிட்டு சீக்கிரத்தில் பிரிந்து, நீங்கள் வெகுவாய்க் கவலைப்படுகிற சகலத்தையும் பின்னால் எறிந்து, நீங்கள் மறுமைக்குட்படுவீர்கள். ஜெப சிந்தையுள்ளவர்களாய் இருங்கள். வீண் கவலைக்கு இடங்கொடாதேயுங்கள். மார்த்தாள் செய்த வேலையை மரியாளுடைய சிந்தையோடு செய்யுங்கள். இந்த நாளில் இரட்சகர் உங்களை இப்படிக் கண்டிக்கிறார் என்று அறிந்து, உங்கள் கவலைகளை, அவர் உங்கள் பாவங்களைப் புதைத்த இடத்தில் புதைத்துப்போடப் பார்ப்பீர்களாக.

நான் மார்த்தாளைப்போல
வீண் கவலை கொள்வனே?
ஒன்றே தேவை என்றாரே
அதனையே நாடாதிருப்பது ஏன்?

உமது வாக்கை என் இருதயத்தில் வைத்து வைத்தேன்

ஜனவரி 29

“உமது வாக்கை என் இருதயத்தில் வைத்து வைத்தேன்.”  சங். 119:11

பழைய உடன்படிக்கையின் பலகைகள் பெட்டியில் வைத்து பரிசுத்த ஸ்தலத்தில் பத்திரப்படுத்தப்பட்டது. புது உடன்படிக்கையோடு விசுவாசிகளின் இருதயத்தில் வைத்து பத்திரப்படுத்தப்பட வேண்டும். தினசரி பாரத்தோடு கூடிய ஜெபத்திலும் தியானத்திலும் நாம் தேவனுடைய சுத்த வசனத்தை அறிந்து அனுபவித்து, அதைப் பத்திரப்படுத்தக் பார்க்க வேண்டும். இது தினசரி போஜனத்துக்காக நாம் சேர்க்க வேண்டிய வேலைக்குச் சட்டம். நமது நம்பக்கைக்கு ஆதாரமாகிய கிருபைகளையும், விலையேறப் பெற்ற வாக்குத்தத்தங்களையும் நாம் பத்திரப்படுத்த வேண்டும்.

நமது இருதயத்தில் பத்திரப்படுத்தினால் இந்த விலையேறப் பெற்ற பொக்கிஷத்தை ஒருவனும் நம்மை விட்டு எடுத்துக் கொள்ளமாட்டான். நமக்கு தேவைப்படும்போது நாம் அதைத் தேட வேண்டியதில்லை. ஆகையால் அதன் அருமையை அறிந்து அதிலுள்ளதை மதித்து அதை ஆராய்ந்துப் பார்த்து, தியானஞ் செய்து தினசரி ஆகாரமாய் அதை உள்கொள்ள வேண்டும். நமது மனதில் பத்திரப்படுத்தாமல்விட்டால் நாம் பரிசுத்தமடைய மாட்டோம். நம்முடைய வாழ்வில் கனிகளும் இருக்காது. இருதயத்தில் இருந்தால் தான் நடக்கையில் தெரியும். நாம் அனைவரும் வாசிக்கும்படியான நிருபங்களாயிருக்கும்படி தேவன் தமது பிரமாணங்களை நமது மனிதில் எழுத வேண்டுமென்று தினமும் ஜெபிப்போமாக.

தேவ வாக்கு மதுரம்
அதன் போதகம் சத்தியம்
அறிவு அதனால் வரும்
ஆறுதலும் தரும்.

வேண்டுதல் செய்யும்படி அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறார்

ஜனவரி 28

“வேண்டுதல் செய்யும்படி அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறார்.” எபி. 7:25

நம்முடைய பாவங்களுக்காக அவர் ஒரே தரம் மரித்தார். என்றாலும் தினந்தோறும் ஒவ்வொரு மணி நேரமும், ஒவ்வொரு நிமிஷமும் நமக்காகப் பரிந்து பேச அவர் உயிரோடிருக்கிறார். அவருக்கு முடிவில்லாத ஜீவனும் மாறாத ஆசாரியத்துவமும் உண்டு. Nhட்சத்தில் நம்முடைய பிரதான ஆசாரியராக அவர் வெளிப்படுவார். நம்முடைய பெயர்கள் அவருடைய இருதயத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. நமது காரியங்களையெல்லாம் அவர் நன்றாய் அறிவார். நமக்காகப் பரிந்துப் பேசத்தான் அவர் அங்கேயும் உயிரோடிருக்கிறார். தம் அருமையான இரத்தத்தையும், பூரண நீதியையும் தேவன் முன்பாக வைத்து, அவைகளின்மூலம் நமக்கு மன்னிப்பு, தந்து நம்மை மகிமைப்படுத்த வேண்டுமென்று வேண்டுகிறார்.

பிதா அவருக்குச் செவிக் கொடுக்கிறார். ஏனென்றால் அவர் அவரை அதிகம் நேசிக்கிறார். நமது செழுமைக்காக தம்மாய் ஆனதெல்லாம் அவர் செய்தார். அவர் அன்பு எத்தனை ஆச்சரியமானது. நமக்காக பரலோகத்தைத் துறந்தார். பூமியிலேவந்து பாடுபட்டு உத்தரித்து நமக்காக மரித்தார். பின்பு மோட்சலோகஞ்சென்று அங்கே நமக்காக வேண்டிக்கொண்டு நன்மைகளைப் பெற்றுக் கொடுக்கிறார். நாம் மாறுகிறதை அவர் பார்க்கிறார். துக்கப்பட்டு இன்னும் நமக்காக மன்றாடுகிறார். நமக்கு நன்மை செய்யப் பிரியப்படுகிறார். இது எத்தனை ஆறுதல்! நம்பிக்கைக்கு எத்தனை ஆதாரம். நாம் தேவனுக்குச் சத்துருக்கயரிருக்கையில் அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், பின்பு நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாம்.

இரக்க ஆசனத்தின் முன்னே
நமக்காய் நின்று பேசுவார்
பாரியத்தில் உத்தமர்
வீரம் கொண்டு ஜெயிப்பார்.

உன் சிநேகிதன்மேல் உனக்கு தயை இதுதானா?

ஜனவரி 25

“உன் சிநேகிதன்மேல் உனக்கு தயை இதுதானா?.” 2.சாமு. 16:17

இயேசு நமக்குக் காட்டும் அன்புக்குச் சமமாய் வேறெங்கும் காணமுடியாது. நாமோ அவருக்குச் செய்யும் கைமாரோ இதற்கு எதிரிடையானது. பல சமயங்களில் நாம் அவரை அசட்டை செய்கிறோம். அவரை நோக்கிக் கேட்கும்போது நமக்கு சந்தோஷமாய் இருக்கிறதே தவிர, சில நேரங்களில் அது ஒரு பாரமான வேலையாய் இருக்கிறது. நமக்குத் தெரிந்தவைகளையெல்லாம் செய்து, அவர் சொல்வதை விட்டு விடுகிறோம். அடிக்கடி அவர் வார்த்தையில் சந்தேகம் கொண்டு அவர் அன்பைச் சந்தேகித்து அவரைக் குறித்து முறையிடுகிறோம். அவருக்குக் கீழ்ப்படியாமல் மாம்சத்துக்கு இடங்கொடுத்துவிடுகிறோம். அவர் எதிர்க்கச் சொல்கிற உலகத்தைச் சேர்த்துகொள்கிறோம். அவர் எதிர்க்கச் சொல்கிற உலகத்தைச் சேர்த்துக்கொள்கிறோம். அவர் எதிர்க்கச் சொன்ன சாத்தானோடு இணைந்துவிடுகிறோம்.

எத்தனை வேளைகளில் உலகத்தாருக்குமுன் அவரை அறிக்கையிட வெட்கப்பட்டிருக்கிறோம்? நம்மீது பட்சமும் தயையும் நிறைந்த நம்முடைய மீட்பருக்கு நாம் செய்கிறதைப் பார்த்து, ‘உன் சிநேகிதன் மேல் உனக்கு இருக்கிற தயை இதுதானோ?’ என்று நம்மைக் கேட்கும்போது, வெட்கம் நம்முடைய முகத்தை மூடவேண்டும். நமது உள்ளமும் கலங்க வேண்டும். அவருக்கு நாம் செய்யும் கொடுமை துரோகம் போன்றது. அவர் மன்னித்து நேசிக்கிற அடையாளங்களை நாம் மறுபடியும் தேடி, இனி சோதனைக்கு இணங்கவாவது, பாவத்தில் இடங்கொடுக்கவாவது நினைக்கும் சமயத்தில், நம்முடைய மனச்சாட்சியைப் பார்த்து உன் சிநேகிதன்மேல் உனக்கும் தயை இதுதானா என்று கேட்போமாக.

நான் மகா துரோகி
என் நேசரை மறந்த பாவி
அவர் கிருபை இல்லாவிட்டால்
என்னை அகற்றுவார் அப்பால்.

கிறிஸ்துவுக்குஉடன் சுதந்தரருமாமே

ஜனவரி19

“கிறிஸ்துவுக்குஉடன் சுதந்தரருமாமே.” ரோமர் 8:17

கிறிஸ்துவோடுஇப்போது சம்பந்தப்பட்டிருப்பதால் எப்போதும் அவரோடு சுகந்தரர் ஆவோம். ஒரேகுடும்பத்தைச் சார்ந்த சகோதரர்களாய் மட்டுமல்ல மணவாட்டி மணவாளனோடுசுதந்தரவாளியாவதுப்போல் சுதந்தரம் ஆவோம். இயேசுவானவரே சகலத்துக்கும்சுதந்தரவாளியாக ஏற்படுத்தப்பட்டிருக்கிறார். நாமும் அவரோடு ஜக்கியப்பட்டிருக்கிறோம்.ஆதலால் தேவனுடைய சுதந்தரரும் கிறிஸ்துவுக்குள் உடன் சுதந்தரருமாமே. என்னே மகத்துவம்!எவ்வளவு பெரிய சிலாக்கியம். நாம் இரட்சிப்புக்குச் சுதந்தரர்.வாக்குத்தத்தத்துக்கும் சுதந்தரர். ஆதாமோடு சம்பந்தப்பட்டு குற்றத்துக்கும்நாசத்துக்கும் நிர்ப்பாக்கியத்துக்கும் உள்ளானோம். ஆனால் இயேசுவோடுநம்பந்தப்பட்டதால் நீதியம், சமாதானமும், நித்திய ஆசீர்வாதமும் நமக்குகிடைக்கிறது. இப்போது அவரோடு துன்பப்படுவோமானால், இன்னும் கொஞ்சகாலத்தில் அவரோடு மகிமையடைவோம். இப்போது துக்க பாத்திரத்தில் குடிக்கிறோம்.வெகு சீக்கிரத்தில் மகிழ்ச்சியின் பாத்திரத்தில் பானம்பண்ணுவோம்.

கிறிஸ்துவோடுநாம் சுதந்திரராயிருக்கிறோமா? கிறிஸ்து இயேசுவிலுள்ள விசுவாசத்தில் தேவனுடையபிள்ளைகளாயிருக்கிறோமா? நமது பரமபிதாவை மனமார நேசிக்கிறோமா? அவருக்கே கனமும்மகிமையும் உண்டாக வேண்டுமென்ற ஒரு பெரிய வைராக்கியம் நமக்கிருக்கிறதா? அவரின்பிரசன்னத்தின் சந்தோஷத்தை விரும்புகிறோமா? நேசரில்லாமல் வாழ்ந்தால்துக்கமும் துயரமும் நாம் அடைகிறோமா? தேவபிள்ளைகளோடு நல்ல ஐக்கியம் உண்டா? பாவத்தைப் பகைத்து பரிசுத்தம் வாஞ்சித்துஆனந்தம் கொள்ளுகிறோமா? அப்படியானால் கிறிஸ்துவானவர் நம்மைத் தம்முடையசகோதரர் என்கிறார். தேவன் நம்மைத் தம்முடைய பிள்ளைகள் என்கிறார். நாம்முன்குறிக்கப்பட்டு கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரருமாகும்படி தெரிந்துக்கொள்ளப்பட்டோம்.

தேவனுடையபுத்திரன்
சுதந்தரம்மகா பெரியது
தேவபிள்ளைகளுக்கு வரும் மகிமை
மகாபெரிய மகா இனிது.

சாவு எனக்கு ஆதாயம்

ஜனவரி 5

“சாவு எனக்கு ஆதாயம்”  பிலி. 1:21

தேவ சிருஷ்டிகள் என்ற அடிப்படையில் நாம் மரணத்தைப் பார்த்தால் அதற்குப் பயப்படுவோம். ஆனால் கிறிஸ்தவர்கள் என்ற அடிப்படையில் பார்த்தால் பயப்படமாட்டோம். முன்னே அது நமக்குச் சாபம்: இப்பொழுதோ அது ஆசீர்வாதம். முன்னே அது நமக்கு நஷ்டம். இப்பொழுதோ அது நமக்கு இலாபம். சாகும்போது எல்லாவித சத்துருவினின்றும், சோதனையினின்றும், துன்பத்தினின்றும் விடுதலையடைந்து, கணக்கற்ற நன்மைகளைப் பெற்றுக்கொள்ளுவோம். பாவத்தினின்று விடுவிக்கப்பட்டு பரிசுத்தத்தில் பூரணமாகிறோம். அறிவிலிருந்து தேறுகிறோம். அப்போதுதான் நாம் அறியப்பட்டிக்கிறபடி அறிந்துகொள்வோம். பரிசுத்தமும் பெறுவோம், ஏனென்றால் கிறிஸ்துவோடும் அவரைப்போலும் இருப்போம்: மேன்மையும் கிடைக்கும். ஏனென்றால் வெள்ளை வஸ்திரம் நமக்குக் கொடுக்கப்படும். சாத்தானையும், உலகையும், பாவத்தையும் வென்ற வெற்றி வீரர்களாகக் கருதப்படுவோம். கிறிஸ்துவோடு அவர் சிங்காசனத்திலும் உட்காருவோம்.

எந்த விசுவாசிக்கும் மரணம் இலாபம்தான். உடனடியாகக்கிடைக்கிற இலாபம்: பெரில இலாபம், என்றுமுள்ள இலாபம். மரண நதியைக் கடக்கிறது கடினந்தான். கடந்த பிறகோ மகிமைதான். நாம் மரணத்திற்குப் பயப்படலாமா? ஏன் பயப்படவேண்டும்? இயேசு கிறிஸ்து என்ன சொல்லுகிறார்? ‘என் வார்த்தைகளைக் கைக்கொள்ளுகிறவன் மரணத்தை ருசிப்பதில்லை” என்கிறார். அவன் உறங்கலாம், அவன் துன்பங்கள், போராட்டங்கள் நீங்கி இளைப்பாற வீடு பேறு பெறலாம். ஆகிலும் அவன் மரிக்கவே மாட்டான். மரணம் அவன்மேல் ஆளுகைச் செய்யாது. இயேசுவின் மூலம் மரணத்தைப்பார், மரணத்தின்மூலம் இயேசுவைப் பார்.

கிறிஸ்து வெளிப்படுகையில்
என் துக்கம் நீங்குமே
கிறிஸ்து என் ஜீவனாகில்
பாவம் துன்பம் நீங்குமே.

கர்த்தரில் அன்பு கூறுகிறவர்களோ தீமையை வெறுத்துவிடுங்கள்

ஜனவரி 18

“கர்த்தரில் அன்பு கூறுகிறவர்களோ தீமையை வெறுத்துவிடுங்கள்.” சங்கீதம் 97:10

தெளிவான கடமைகளைக் குறித்து நமக்குப் புத்தி சொல்வது அவசியந்தான். ஏனென்றால் சில வேளைகளில் நாம் அவைகளை மறந்துபோகிறோம். அடிக்கடி கவலையுற்று வெதுவெதுப்பான சிந்தனைகளுக்கு இடங்கொடுத்து விடுகிறோம். நாம் கர்த்தரை நேசிப்பது உண்மையானால் அவரின் ஜனங்ளை நேசிப்போம். அவருடைய நியமங்களையும் அவருடைய சுவிசேஷத்தையும் நியாயப்பிரமாணத்தையும் நேசிப்போம். நமக்குச் சேதமுண்டாக்குகிறதைத்தான் அவர் விலக்குகிறார் என அறிந்து, அவரின் வாக்குத்தத்தங்களையும் நேசிக்கிற அளவிலேயே அவர் வேண்டாமென்று விலக்குகிறதையும் நேசிப்போம். இந்த நாளில் தாவீதைப்போல் ‘நான் உம்முடைய பிரமாணத்தை எவ்வளவாய் நேசிக்கிறேன். நாளெல்லாம் அது என் தியானம்’ என்று நாம் சொல்ல முடியுமா?

தேவபிரமாணம் தீமையான யாவையும் விலக்குகிறது. ஆகவே நாம் தேவ சித்தத்திற்குக் கீழ்ப்படிந்து பாவத்தையும், தீமையையும் அவர் வெறுக்கிற விதமாகவே வெறுத்து விலக்குவோமாக. தீயநினைவுகளை எதிர்த்துப் போராடுவோமாக. கெட்ட வார்த்தைகளை விலக்கி கடிவாளத்தினால் வாயை காப்போமாக. கெட்ட செய்கையை விலக்கி பொல்லாப்பாய் தோன்றுகிறதைவிட்டு விலகுவோமாக. இருதயம் பொல்லாங்குள்ளதும் அதிக கேடானதுமானது. எல்லா பொல்லாங்குகளும் அதிலிருந்து வருகிறது. முக்கியமாய் தேவனை விட்டு விலகுகிற அவிசுவாசமுள்ள இருதயத்தைப்பற்றி எச்சரிக்கையாய் இருப்போமாக.

நண்பரே! தீமையைப் பகைக்க உனக்கு மனதிருக்கிறதா? அப்படியானால் தேவனோடு நெருங்கி பழகு. அப்போது பரிசுத்த வாழ்வு உனக்குச் சுலபமாகிவிடும். அப்போது எந்தப் பொல்லாப்பையும் வெறுத்துத் தள்ளுவாய். கர்த்தரின் தாசர்களே, பொல்லாப்புக்கு முழு மனதோடு பயப்படுங்கள். யாவரோடும் சமாதானமும் பரிசுத்தமாயுமிருங்க நாடுங்கள். பரிசுத்தமில்லாமல் ஒருவனும் தேவனைத் தரிசிக்க முடியாதே.

நேச பிதாவே உம்மில்
எனக்கு எல்லாம் சொந்தம்
என்னையும் தந்தேன் உமக்கு
இதுவே எனக்கானந்தம்.

Popular Posts

My Favorites