பெப்ரவரி

முகப்பு தினதியானம் பெப்ரவரி

நான் அவரைத் தியானிக்கும் தியானம் இனிதாயிருக்கும்

பெப்ரவரி 25

“நான் அவரைத் தியானிக்கும் தியானம் இனிதாயிருக்கும்.” சங். 104:34

தியானம் என்பது ஒன்றைக்குறித்து ஆழமாய் கவனித்து சிந்திப்பது ஆகும். அந்த ஒன்று ஆவிக்குரியதானால் எத்தனை பயனுள்ளதாயிருக்கும். பரலோகத்தை நினைத்து ஆண்டவராகிய இயேசுவைப்பற்றி தியானம் செய்வது எத்தனை இனிமை.

அவரில் விளங்கும் மகிமையைப்பற்றியும் அவர் கிருபையின் ஐசுவரியத்தைப்பற்றியும், அவர் அன்பின் ஆழம்பற்றியும், கனிவான உருக்கம்பற்றியும், இரக்கம்பற்றியும், அவரின் பராக்கிரம புயத்தைப்பற்றியும், அவரின் இரத்தத்தால் கிடைக்கும் புண்ணியத்தைப்பற்றியும் மகத்தான அவருடைய நீதியைப்பற்றியும், அவர் அடைந்த பூரண வெற்றியைப்பற்றியும், அவர் பரமேறின ஜோதிப் பிரகாசத்தைப்பற்றியும், அவர் நமக்காய் மன்றாடி வாங்கும் நன்மைகளைப்பற்றியும், மோட்சத்தில் அவர் வீற்றிருக்கும் மேன்மையைப்பற்றியும், பூமியில் தமது ஜனங்களை காத்துவரும் பாதுகாப்பைப்பற்றியும், இரண்டாம் வருகையைப்பற்றியும், அதன் மகிமையைப்பற்றியும் நாம் தியானிக்க வேண்டும்.

நம் தியானமெல்லாம் இயேசுவைப்பற்றியே இருக்க வேண்டும். இயேசுவைப்பற்றியே தியானிக்க வேண்டும். அவரைப்பற்றியும், அவரின் ஊழியம்பற்றியும், அவர் செய்த கிரியைகளைப்பற்றியும், அவர் இராஜ்யம்பற்றியும் அவர் தாழ்த்தப்பட்டு மேன்மையடைந்ததுப்பற்றியும், நாம் தியானிக்க வேண்டும். அப்படிப்பட்ட தியானம் இனிமையாயிருக்கும்.

உம்மைக் குறித்த தியானம்
என் மனதிற்கு இன்பம்
சிருஷ்டித்தார் இரட்சித்தார்
என்று கீதம் பாடுவேன்.

இவள் மிகவும் அன்புகூர்ந்தாள்

பெப்ரவரி 23

“இவள் மிகவும் அன்புகூர்ந்தாள்.” லூக்கா 7:47

இவள் ஒரு பெரிய பாவி. தன் பாவத்தை உணர்ந்து இரட்சகரைத் தேடினாள். மன்னிப்புக்காக அவரிடம் சென்று இரக்கம் பெற்றான். இயேசுவின் அன்பையும், அவர் காட்டின பாசத்தையும் அவள் உணர்ந்தபடியால், அவர் Nரில் அன்பு பொங்கிற்று. அவள் அவரைச் சாதாரணமாய் Nநிக்கவில்லை. அதிகமாய் நேசித்தாள். அதனால் அவரின் சமுகத்தை உணர்ந்து அவர் வார்த்தைக்குச் செவிகொடுத்து துன்பத்தையும், நிந்தையையும் சகித்தவளானாள். அவளின் அன்பு உள்ளுக்குள்ளேயே அடைக்கப்படவில்லை. அதை வெளிக்காட்டினாள். அதனால்தான் விலையேறப்பெற்ற தைலத்தைக் கொண்டு வந்து ஊற்றி, தன் கண்ணீரால் அவர் பாதங்களை நனைத்து, தலை மயிரால் துடைத்து அபிஷேகம்பண்ணினாள்.

இது நமக்கு ஒரு நல்ல முன்மாதிரி. நாமும் பாவிகள்தான். இயேசுவும் நமது பாவங்களை மன்னித்தார். ஆம் இந்த ஸ்திரீயை அவர் எவ்வளவாய் நேசித்தாரோ அவ்வளவாய் நம்மையும் நேசிக்கிறார். அந்தப் பெண் நேசித்ததுப்போல் நாமும் அவரை நேசிக்கிறோமா? இல்லையென்றே சொல்ல வேண்டும். காரணம் என்ன? நாம் நமது பாவங்கள் நிமித்தம் அவ்வளவு உணர்வு அடைவதில்லை. நமது அபாத்திர தன்மையை அவ்வளவாய் பார்க்கிறதில்லை. நமது மோசமான வாழ்க்கையைக் கண்டு நாம் கண்ணீர் விடுவதில்லை. அவர் நம்மை மன்னித்த மன்னிப்பைப் பெரிதாக ஒன்றும் எண்ணவில்லை. இனியாவது நமது சிந்தையை இயேசுவண்டைத் திருப்புவோம். பரிசுத்தாவியானவர் தேவ அன்பை நமது இருதயத்தில் ஊற்றும்படி கேட்போம். அவரோடு ஒன்றாகி அவர் பாதத்தில் அமர்ந்திருப்போம்.

தேவ அன்புக்கீடாய்
பதில் என்ன செய்வோம்
அவர் மன்னிப்புக்கு ஈடாய்
நன்றி சொல்வோம்.

அவருக்குக் காத்துக்கொண்டிரு

பெப்ரவரி 07

“அவருக்குக் காத்துக்கொண்டிரு.” யோபு 35:14

உன் காலங்கள் அவர் கரத்தில் இருக்கிறது. உன் பேர் ஜீவபுத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. அவர் உன் தேவனாயிருப்பேனென்று வாக்களித்திருக்கிறார். அவர் சொன்னபடியே செய்கிறவர். இவைகளை மறவாதே. நமக்கு தேவையான எந்த நன்மையானாலும் கொடுப்பேனென்று வாக்குப்பண்ணியிருக்கிறார். அவர் வாக்கு உறுதியும் நம்பிக்கையுமானது. அவைகளையே நம்பிக் கொண்டிரு. உன் இருதயம் பயப்படலாம். உன் மனம் திகைக்கலாம். உன் சத்துருக்கள் உன்னை நிந்திக்கலாம். ஆனால் உன் பாதைகளோ கர்த்தருக்கு மறைக்கப்படுவதில்லை. ஆகையால் அவரையே நம்பிக்காத்திரு.

ஆதிமுதல் அவர் வார்த்தை உண்மையாகவே இருக்கிறது. இதை அவரின் அடியவர்கள் பரீட்சித்து பார்த்திருக்கிறார்கள். உண்மைதான் அதன் கிரீடம். ஆதலால் நீ உறுதியாய் நம்பலாம். உன் நம்பிக்கையைப் பலப்படுத்து. உன் ஆறுதல் இன்னமாய் இருக்கட்டும். இப்பொழுதும் நீ குழந்தையைப்போல் கீழ்ப்படி. அவரின் மனமோ உன்னை நேசித்துக் கொண்டிருக்கிறது. ஒருவேளை உனது தப்பிதங்களுக்கு, உன்னை அழிக்க ஒரு பட்டயத்தை பிடித்திருப்பாய். அவர் தோன்றினாலும் தோன்றலாம். அப்போது நீ அவர் என்னைக் கொன்றுப்போட்டாலும் அவுர்மேல் நம்பிக்கையாயிருப்பேன் என்று சொல்ல வேண்டும். அப்போது நீ காட்டின நம்பிக்கையின் நிமித்தம், உன்னை மேன்மைப்படுத்தி, திரண்ட ஐசுவரியமுள்ள மேலான தலத்திற்கு கொண்டுபோவார்.

கர்த்தாவே உமது வழிகள்
மிக ஞானமுள்ளவைகள்
கோணலான வழிகளெல்லாம்
உமதன்பினால் உண்டானவையே
ஆகையால் நான் நம்புவேன்
உம்சித்தம் என் பாக்யம் என்பேன்.

சமாதானத்தின் தேவன்

பெப்ரவரி 05

“சமாதானத்தின் தேவன்.”  எபி. 13:20

கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தால் தேவன் நம்மோடு முற்றிலும் சமாதானமாகி ஒப்புரவாக்கப்பட்டிருக்கிறார். அவர் சமாதானத்தின் தேவன். பயப்படத்தக்கதொன்றும் அவரில் இல்லை. இயேசுவின் நாமத்தில் எதைக் கேட்டாலும் அதை நடக்குக் கொடுப்பார். அவர் நம்மேல் மனஸ்தாபமாயிருந்தது உண்மைதான். இப்போதோ அவர் கோபம் நீங்கி ஆறுதல்படுத்துகிறார். நமக்கும், அவருக்கும் இப்போது சமாதானமுண்டு. நமது நன்மையை அவர் போருகிறார். அவருக்கு மகிமையை அதிகம் கொடுக்க வேண்டியதே நமது கடமை. யோகோவா நம்மிடம் சமாதானமாய் இருப்பது எத்தனை பாக்கியம். அவரின் சமுகத்தில் நமது இருதயத்தை ஊற்றி அவரில் நம்பிக்கை வைத்து முழுவதும் அவர் கரத்தில் நம்மை ஒப்புக்கொடுப்போமாக.

கிறிஸ்துவானவர் நமக்காக நிறைவேற்றின கிரியையை, யோகோவா அங்கீகரித்து, அவரை மரித்தோரிலிருந்து எழுப்பி, பரம ஸ்தலங்களில் அவரைத் தமது வலது பாரிசத்தில் வைத்து, அவர்மூலம் நமது வாழ்க்கைக்கு நன்மை செய்யப் பிரியப்படுகிறார். இப்போதும் அவர் அதிகமாய் நம்மோடு சமாதானப்பட்டிருக்குpறார். நாம் இதை அதிகமாய் நம்பி அதிகமாய் அனுபவிக்கலாம். பரிசுத்தாவியைத் தந்து நமக்கு நன்மை செய்கிறது அவருக்குப் பிரியம். இனி தேவனைக் குறித்து தப்பெண்ணங்கொள்ளாதபடிக்கும் அவர் கடினமனமு;ளவரென்று எண்ணாதபடிக்கும் எச்சரிக்கையாயிருப்போமாக. அவர் சமாதானத்தின் தேவன்.

சமாதானத்தின் தேவனே
அமர்ந்த மனநிலை தாருமே
இருதயத்தில் இரத்தம் தெளித்து
உமது நாமம் அதில் எழுதுமே.

கர்த்தருக்கே காத்திரு

பெப்ரவரி 27

“கர்த்தருக்கே காத்திரு.” சங். 37:7

எப்பொழுதுமே பாவியானவன் அமைதலற்றவன். அவன் இருக்க வேண்டிய இடத்தை விட்டுவிட்டபடியால் அவன் ஆவை அவனை நிலையற்றவனாக்குகிறது. கிறிஸ்து அவனைப் பார்த்து என்னிடத்தில் வா, நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன் என்கிறார். விசுவாசி இளைப்பாறுதல் பெற்றிருந்தாலும், சோதனைகளிலும், கவலைகளிலும், அவிசுவாசத்தாலும் அடிக்கடி இழுக்கப்பட்டு, பின்னும் அமைதலய்யவனாகிறான்.

அன்பானவர்களே, உங்களில் கவலைக்குரிய காரியம் இவைகளாய் இருக்கக்கூடாது. நீ கர்த்தரில் இளைப்பாற்றி காத்திருக்க வேண்டும். தேவ சமுகமே உனக்கு ஆனந்தமாய் இருக்க வேண்டும். தேவ சித்தத்திற்குக் காத்திருக்க வேண்டும். அவர் திட்டமிடுகிறதெல்லாம் உன் நன்மைக்காகத்தான் இருக்கும். நீங்கள் பரிசுத்தமாய் வாழவேண்டுமென்பதே தேவசித்தம். தேவ அன்பில் இளைப்பாற்றிக் காத்திருக்கவேண்டும். அவர் சமுகத்தில் அமர்ந்து அவரைப்பற்றி தியானம் பண்ணவேண்டும். தேவ இரக்கத்திற்குக் காத்திருந்தால் இளைப்பாறிக்காத்திரு. அது உண்மையுள்ளது, மாறாததது, தேவனுக்கும் உனக்கும் ஐக்கியம் தேவை. இந்த ஐக்கியத்தில் இளைப்பாறு. அவர் உன் பிதா. கரிசனையுள்ள பிதா. ஞானமுள்ள பிதா. சகாயஞ் செய்யும் பிதா. தேவன் இருக்கிறவிதமாய் அவரைத் தரிச்சிக்க அவரில் காத்திரு. அவர் சகலத்தையும் உன் நன்மைக்காகவும் தன் மகிமைக்காகவும் நேர்ப்படுத்துவார். கர்த்தருக்குக் காத்திரு, பாக்கியமுள்ளவனாயிரு.

தேவ தாசர் தேவ சித்தம்
காத்திருந்து அறிவர்
சோதிக்கப்பட்டும் நித்தம்
அவர் கடாட்சம் பெறுவர்.

வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்தாவி

பெப்ரவரி 15

“வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்தாவி.” எபேசி.1:13

பழைய ஏற்பாட்டில் வாக்குத்தத்தம்பண்ணப்பட்டிருக்கிற பெரிய ஆசர்வாதம் தே குமாரன்தான். புதிய ஏற்பாட்டில் வாக்குத்தத்தம்பண்ணப்பட்டிருக்கிறவர் பரிசுத்தாவியானவர். இயேசு கிறிஸ்து செய்து முடித்த கிரியைகளுக்குப் பதிலாக, அவர் நமக்குக் கொடுக்கப்பட்டார். அவரை நோக்கி கேட்கிற எவருக்கும் ஆவியானவரைத் தந்தருளுவார். இந்த ஜீவத் தண்ணீரைக் கொடுப்பவர் இயேசுவானவN. இதைப் பெறுகிற யாவரும் நித்திய ஜீவகாலமாய் ஊறும்ஊற்றைப் பெறுவர். நம்மைத் தேற்றவும், ஆற்றவும், போதிக்கவும், நடத்தவும், உதவி செய்யவும் ஆவியானவேர பொறுப்பெடுக்கிறார். கிறிஸ்துவால் நமக்கு நீதியும் இரட்சிப்பும் கிடைக்கிறதுபோல, பரிசுத்தாவியானவர்மூலம் நமக்கு அறிவும், ஜீவனும், சந்தோஷமும், சமாதானமும் கிடைக்கிறது.

இவர் வாக்குத்தத்தத்தின் ஆவியாயிருக்கிறார். இவர் உதவியின்றி தேவ வாக்குகளை நாம் வாசித்தால் அதன் மகிமையை அறியோம். சொந்தமாக்கிக் கொள்ளும் உணர்வையும் அடையோம். அவர் போதித்தால் தான் வாக்குகள் எல்லாம் புதியவைகளாகவும், அருமையானதாகவும், மேலானதாகவும் தெரியும். எந்தக் கிறிஸ்தவனும் துன்பமென்னும் பள்ளிக்கூடத்தில் தன் சுய அனுபவத்தால், வாக்குத்தத்தமுள்ள ஆவியானவர் தினமும் தனக்கு அவசியத் தேவையெனக் கற்றுக்கொள்ளுகிறான்.

தேவ பிள்ளையே, ஆவியானவரைத் துக்கப்படுத்தாதபடி ஜாக்கிரதையாக இருப்போமாக. அவர் ஏவுதலை ஏற்று, அவர் சித்தம் செய்ய முற்றிலும் இடங்கொடுப்போமாக.

பிதாவே உமது ஆவி தாரும்
அவர் என்னை ஆளட்டும்
உமது வாக்கின்படி செய்யும்
என் தாகத்தைத் தீரும்.

மனந்திரும்பி ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக

பெப்ரவரி 26

“மனந்திரும்பி ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக.”  வெளி 2:5

மனந்திரும்புதலுக்குச் சிந்தனை தேவை. நடத்தையைப்பற்றியும், தன் நிலைமையைப்பற்றியும் பயபக்தியாய் சிந்திக்கிற சிந்தனை வேண்டும். அது பாவத்தைப்பற்றி உணர்வதில் ஏற்படுகிறது. தேவனுக்கு முன்பாக நம்முடைய தன்மை பாவ கரையுள்ளது என்று அறிய வேண்டும். இந்தச் சிந்தனை வந்தால்தான் பாவத்தைவிட்டு, பாவ மன்னிப்பைப் பெற்று சமாதானம் பெற வழியுண்டாகும். இந்த எண்ணத்தில் உள்ளான துக்கமும் அடங்கியிருக்கிறது. இந்த மன வருத்தம், கர்த்தருக்கு மனஸ்தாபத்தை உண்டாக்கிப் போட்டோமே. அவரை அவமதித்து அவர் இரக்கத்தை புறக்கணத்தோமே என்ற விசனத்தை உண்டாக்கும்.

இந்த வருத்தம் தான் நம்மை சீர்வாழ்வுக்கும், இரட்சிப்புக்கும் வழி நடத்தும். உண்மையான மனஸ்தாபமில்லாமல் ஒருவேளை வாழ்க்கை நடத்தலாம். ஆனால், நல்வாழ்கை நடத்த வேண்டுமானால், உண்மை மனஸ்தாபம் வேண்டும். நமது வழிகளைக் குறித்துச் சிந்தித்து, நமது பின்மாற்றத்தை யோசித்து, குற்றங்களை ஒப்புக்கொண்டு, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்யத் தொடங்குவோமாக. கிறிஸ்துவை நோக்கி பார். தேவனுக்குக் காத்திரு. வசனத்தை ஆராய்ந்து பார். அவர் கட்டளைகளைக் கைக்கொள். இயேசுவை குறித்து மற்றவர்களாடு பேசு. முன்பு செய்ததுப்போல் தீமையாய் தோன்றுகிறவைகளை விட்டு விலகு. இப்படிச் செய்வதனால் அன்பும், வைராக்கியமும், விழிப்புணர்ச்சியும், பயப்கதியும், ஒப்புவித்தலும் நம்மில் மிகுதியாய்க் காணப்படும். நம்முடைய வழிகளை ஆராய்ந்து அவரிடத்தில் திரும்புவோமாக. இயேசு கிறிஸ்துவைக் கனக்குறைச்சல் படுத்தினோம் என்று முறையிடுவதோடு, மனந்திரும்பி ஆதியில் செய்த கிரியைகளைச் செய் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

கடந்த காலத்தை நினை
ஆதி அன்பைக் காட்டு
முந்தின கிரியை செய்
அவரில் ஆறுதலடை.

தம்மைச் சேர்ந்த ஜனம்

பெப்ரவரி 01

“தம்மைச் சேர்ந்த ஜனம்.”  சங்.148:14

இயேசு நம்மைப்போல மனுஷ சாயல் கொண்டு நம்மில் ஒருவராய் பூமியில் வாசம்பண்ணி நம்மைச் சேர்ந்தவரானார். அவர் தமது பரிசுத்தாவியைத் தந்து நம்மோடு ஐக்கியப்படும்போது நாம் அவரைக் சேர்ந்தவர்களாகிறோம். இது நமக்குக் கிடைத்த மேலான கனம். நமது சமாதானத்திற்கும் பாக்கியத்திற்கும் இது வற்றாத ஊற்று. நாம் அவருடைய பிள்ளைகளானால் அவரோடு ஐக்கியப்பட்டவர்களாகிவிடுகிறோம். நாம் அவரின் எலும்பில் எலும்பில் எலும்பும் மாம்சத்தில் மாம்சமுமானபடியால், அவரோடு ஒன்றாய் ஐக்கியப்பட்டிருக்கிறோம். ஒரு மனிதன் தன் நண்பனோடு பழகுவதுப்போல் தேவன் நம்மோடு சஞ்சரித்து ஐக்கியப்படுகிறார். அவர் தினம் தினம் நம்மைக் காத்து விசாரிக்கிறபடியால் அவருடைய கரிசனையில் ஐக்கியப்படுகிறோம். நமக்கு வாசஸ்தலத்தை ஆயத்தம்பண்ணும்போது அவரோமு இருப்பிடத்திலும் ஐக்கியப்படுகிறோம். நாம் மரிக்கும்போது அவருடன் அதிக ஐக்கியத்தில் பங்குள்ளவர்களாவோம்.

நாம் ஏழைகளாயிருந்தாலும் துன்பப்படும்போது அவரோடு ஐக்கியப்பட்டிருக்கிறோம். நாம் அவரோடு ஐக்கியப்பட்டிருந்தால் நாம் துன்பப்படும்போது நமக்குத் துணை நின்று, சகல மோசங்களிலும் நம்மை ஆதரித்து, தனிமையாயிருக்கும்போது ஆறுதல் சொல்லி, நம்மோடு பேசி, தேவைப்படும்போதெல்லாம் தேவையானதைத் தந்து மகிமைப்படுத்துவார். தினம்தோறும் நாம் தேவனோடு ஐக்கியப்பட்டிருந்தால் அவரும் நம்மோடு ஐக்கியப்பட்டிருப்பார் என்பதை உணர்ந்துக் கொண்வோமாக.

நான் தேவனுடைய பிள்ளையா?
அவர் என் நேசரா?
விசுவாசத்தோடு ஜெபிப்பேன்
அவரை ஆரோசித்து நடப்பேன்.

கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு

பெப்ரவரி 14

”கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு.” சங். 37:4

கர்த்தர் நம்மில் மகிழுகிறதுபோல, நாம் அவரில் மனமகிழ்ச்சியாயிருக்க வேண்டும். இதற்கு அவருடைய அன்பைப்பற்றி சரியான எண்ணங்கள் நமது உள்ளத்தில் வரவேண்டும். இயேசுவில் வெளியாகியிருக்கிற அவரின் மகிமையான குண நலன்களைத் தியானிக்க வேண்டும். அவருடைய அன்பும் பூரண இரட்சிப்பும் நமக்கு உண்டென உணரவேண்டும். அவரின் அழகையும் பரலோக சிந்தையும் நம்மில் இடைவிடாமல் இருக்க வேண்டும். அவரின் வாக்குகளை அதிகம் நம்ப வேண்டும்.அவரின் பாதத்தில் காத்திருக்க வேண்டும். நமது தகப்பனாகவும், நண்பனாகவும் அவரை நாட வேண்டும். நமது பங்கு நித்திய காலமாய் நமக்கிருக்கிறதென்று விசுவாசிக்க வேண்டும்.

எனவே, கீழான காரியங்களின் மேலிருக்கும் நாட்டத்தை நீக்கி, அதைக் கர்த்தர்மேல் வைக்க அதிகமாய் பிரயாசப்பட வேண்டும். கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாய் இருப்பவர்கள் வெகு சிலரே. அவரைப் பற்றி தியானிப்பது, அவரைப்பற்றி அறிந்துக்கொள்வது அவரைப்பற்றிப்படிப்பது போதுமென்றிருக்கிறோம். ஆனால் அது போதாது. நாம் கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிருக்க வேண்டும். நமக்கு வேண்டியதையெல்லாம் நமக்குக் கொடுக்கும் பொக்கிஷங்களில் நாம் மகிழலாம். நமக்குத் தரும் பாதுகாப்பிற்காகவும் அவரில் மகிழலாம். அவரின் அலங்காரமான பரிசுத்தத்தில் மகிழலாம். அவரின் கிருபைக்காகவே அவரில் அனுதினம் மகிழலாம்.

கர்த்தாவே உம்மில் மகிழுவேன்
உமது அரவணைப்பில் பூரிப்பேன்
நீர் என் நேசர், துன்பத்தில்
உமதண்டை ஓடி வருவேன்.

நானோ எப்போதும் நம்பிக்கைக் கொண்டிருப்பேன்

பெப்ரவரி 12

“நானோ எப்போதும் நம்பிக்கைக் கொண்டிருப்பேன்.” சங். 71:14

இப்படித்தான் நான் தைரியமாய் நம்பிக்கைக் கொள்ள வேண்டும். ஏனென்றால் என் நம்பிக்கை அஸ்திபாரமானது, என்றும் மாறாமல் நிலையாய் நிற்கிறது. கிருபை நிறைந்த என் தேவனுடைய தகுதிகளும் அவருடைய வசனத்தில் கண்டிருக்கும் உண்மை வாக்குகளும் அதில் எழுதியிருக்கிறது. தேவனுடைய பக்தருடைய வாழ்க்கையிலும் என் அனுபவத்திலும் கண்மறிந்ததும், சகலமும் எப்போதும் தேவனிடம் நம்பிக்கைக் கொண்டிருக்க என்னை உற்சாகப்படுத்துகின்றன. என் அக்கிரமத்திற்கு தேவன் இறங்குவார். சகல துன்பத்திலும் என்i னஆதரிப்பார். சமயத்திற்கேற்ப உதவி செய்து என்னை விடுவிப்பார். எனக்கு வரும் எல்லா தீயக் காரியங்களிலிருந்தும் நன்மை பிறக்கும். இயேசுவானவர் தோன்றும்போது எனக்குத் தயை கிடைக்கும். நித்தியஜீவன் எனது படைபங்காயிருக்குமென்று நம்பிக்கைக் கொண்டிருப்பேன். இந்த நம்பிக்கை மட்டும் இல்லையேல் நான் நிர்மூலமாகிவிடுவேன். வீண் கவலை என்னை நெருக்கி, அவநம்பிக்கை என் மனதை மூடினாலும் நான் அவரையே நம்பிக்கொண்டிருப்பேன்.

இப்படி நான் நம்புவதால் நம்பிக்கையின் தேவ னைக் கனப்படுத்துகிறோம். வருங்காரியங்கள் வெளிச்சமாய் இருக்கும். இது ஜெபத்திற்கும் முயற்சிக்கும் நம்மை தூண்டி விடுகின்றது. நமது ஜீண காலத்தை இனிமையாக்குகிறது. ஆனால் ஒன்றை நான் மறந்துவிடக்கூடாது.. என் நம்பிக்கை பரீட்சிக்கப்படும். தேவனும் என்னை ஆராய்வார். சாத்தானும் என்னைச் சோதிப்பான். ஆனாலும் நல்ல நம்பிக்கையானது பிழைத்து பலத்த காரியம் நடைபெற கிரியை செய்யும். நான் ஏன் அவநம்பிக்கைக்கு இடங்கொடுக்க வேண்டும்? நான் பயப்படேன். அதனால் எனக்கு என்ன பலன் கிடைக்கும்?

காற்றடித்தாலும் கொந்தளித்தாலும்
என் ஆத்துமா உம்மைப் பற்றும்
அப்போ என் மனம் சுகித்து
உம்மில் வாழ்ந்து களிக்கும்.

Popular Posts

My Favorites

வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்தாவி

பெப்ரவரி 15 "வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்தாவி." எபேசி.1:13 பழைய ஏற்பாட்டில் வாக்குத்தத்தம்பண்ணப்பட்டிருக்கிற பெரிய ஆசர்வாதம் தே குமாரன்தான். புதிய ஏற்பாட்டில் வாக்குத்தத்தம்பண்ணப்பட்டிருக்கிறவர் பரிசுத்தாவியானவர். இயேசு கிறிஸ்து செய்து முடித்த கிரியைகளுக்குப் பதிலாக, அவர் நமக்குக் கொடுக்கப்பட்டார். அவரை...