பெப்ரவரி

முகப்பு தினதியானம் பெப்ரவரி

கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்

பெப்ரவரி 16

“கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்.” எபேசி. 2:5

நாம் இலவசமாய் இரட்சிக்கப்படுகிறது எவ்வளவு பெரிய தேவ இரக்கம். நமது இரட்சிப்பு துவக்கம் முதல் முடிவுவரை கிருபைதான். உலகம் தோன்றுமுன்னே அது தேவ சித்தமாய் முன் குறிக்கப்பட்டது. நாம் இரட்சிப்புக்கென்றே தெரிந்துக்கொள்ளப்பட்ட்டோம். கிறிஸ்துவின் இரத்தத்தால் தெரிந்துக்கொள்ளப்பட்டோம். தேவன் நம்மை தெரிந்தெடுத்து அவரோடு நித்திய நித்தியமாய் நாம் வாழவே. கர்த்தர் தமது சுய சித்தப்படியே நம்மை இரட்சிப்புக்கு தெரிந்தெடுத்தார். அவர் மாறாதவர். ஆகவே அவர் திட்டமும் மாறாது. தேவ புத்தகத்தில் நம்முடைய பெயர் இருக்கிறது. தேவன் ஆரம்பித்த கிரியைகளில் நமக்கும் பங்கிருக்கிறது. பரிசுத்தவான்களின் சுதந்தரமும் நமக்குண்டு. நாம் உலகத்திலிருந்து தெரிந்துக்கொள்ளப்பட்டோம். இது பெரிய தேவ தயவு.

நாம் மீட்கப்படவே நமக்காக கிரயம் செலுத்தப்பட்டது. நம்மை விடுவிக்கவே வ்லமை புறப்பட்டது. நாம் தேவனோடு பேசுகிறோம். தேவ இராஜய்த்தின் இரகசியங்களை தெரிந்துக்கொள்வதும் எத்தனை தயவு. தேவன் நமக்குக் கொடுக்கும் கிருபை எத்தனை பெரியது. இது வல்லமையும் மேன்மையுமுள்ளது. இப்படி நாம் அழைக்கப்பட்டதினால் புது ஜீவனுக்கும், பரம அழைப்புக்கும், சகல நன்மைகளுக்கும் பங்குள்ளவர்களாகிறோம். தேவ வல்லமையால் நாம் காக்கப்படுகிறோம். இதுவும் பெரிய கிருபை. சத்துருவின் கைகளுக்கும், விசுவாசத்தைவிட்டு வழுவாமல் காக்கப்படுவதும் கிருபையே. இப்படி செய்வதினால் தேவன் நம்மை எல்லாவற்றிலிருந்தும் இரட்சிக்கிறார் என்பது உண்மையாகிறது. நாம் சீக்கிரத்தில் மறுரூபமாவோம். அப்போது மோட்சத்தில் இலவசமாய் நுழைவோம். இரட்சிப்பு இலவசமாய் கிடைப்பதினால் அதை எவரும் பெற்றுக்கொள்ளலாம். துவக்க முதல் முடிவு மட்டும் அதினால் உண்டாகும் மகிமை கர்த்தருடையதாகவே இருக்கும்.

தேவகுமாரன் மரித்ததால்
நமக்கு இரட்சிப்புண்டாயிற்று
பாவிகளை மீட்டதால்
துதிகள் வானம் எட்டியது.

தம்முடைய சொந்தக் குமாரன் என்றும் பாராமல்

பெப்ரவரி 11

“தம்முடைய சொந்தக் குமாரன் என்றும் பாராமல்.” ரோமர் 8:32

தமது ஜனங்களை இரட்சிக்கும்படிக்கு பிதா தம்முடைய குமாரனையும் பெரிதாக எண்ணவில்லை. இவர்களை ஆறுதல்படுத்த அவரைத் தண்டித்தார். பாவம் செய்த தூதர்களையும் அவர் விட்டுவைக்கவில்லை. உலகத்தில் அதிகமாய் பாவம் செய்தவர்களையும் தண்டித்தார். ஆனால் நம்மையோ இரட்சிப்பதற்கு அதிகம் விருப்பம் கொள்கிறார். இந்த அன்பை யோசித்தால் ஆச்சரியமானது. அவரே நம்மை இரட்சித்தார், இரட்சிக்கிறார், இரட்சிப்பார். இதற்காகத்தான் இயேசுவையும் ஒப்புக்கொடுத்தார். நமக்hகத்தான் பிதாவும் அவரோடு உடன்படிக்கை செய்தார். நமக்காகவே அவர் உலகத்தில் வந்தார். நமக்காகவே சகல நீதியையும் நிறைவேற்றினார். நமக்காகவே பாவ பலியானார். நமக்காக மரித்து அடக்கம் பண்ணப்பட்டு, உயிர்த்தெழுந்து பரமேறி பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்.

கிறிஸ்து நம்முடைய பதிலாளி. மேலான உடன்படிக்கைக்குப் பிணையாளி. ஆகையால்தான் நம்மை விடுவிக்க தேவன் அவரை தண்டித்தார். நம்மைத் தப்பிவிப்பது மட்டுமல்hமல் ஜீவனும், புத்தியும், சகல உரிமையையும் இலவசமாய் தருகிறார். எங்கள் அருமை இரட்சகரே, எங்களுக்காக பிதா உம்மைத் தண்டித்தார். பிசாசும் உம்மைச் சும்மா விட்டு வைக்கவில்லை. குற்றவாளியான மனுஷர்களும் உம்மைக் கொடுமைப்படுத்தினார்கள். ஆனால் நாங்களோ, உம்மைக் கோபப்படுத்தாமல் பார்த்துக் கொள்ளவும், உம்மை மனம் நோகச் செய்யாதபடி காத்துக் கொள்ளவும், உமது நாமத்தை வீணிலே வழங்காதிருக்கும்படி நடக்கவும், எங்களுக்குக் கீழ்ப்படிகிற இருதயத்தைத் தந்தருளும்.

முள்கிரீடத்தில் எங்களுக்கு
மகிமை சம்பாதித்தீர்
ஐங்காயங்களால் பாவிகட்கு
சுகம் வரப்பண்ணினீர்.

நீர் என்னைப் புடமிட்டுப் பார்த்தீர்

பெப்ரவரி 13

“நீர் என்னைப் புடமிட்டுப் பார்த்தீர்.” சங். 17:3

ஆகையால் ஜெபத்திற்குப் பதில் கிடைத்தது. கிருபை வரங்கள் பெருகியது. தேவன் உன்னைக் கண்டிப்பாய் நடத்தியிருக்கிறார். நீதிமானைக் கர்த்தர் புடமிடுகிறபடியால் அவனுக்கு வரும் துன்பங்கள் மூலம் நற்குணங்கள் பிரகாசிக்கின்றன. அவருடைய அக்கினி சீயோனிலும் அவருடைய குகை எருசலேமிலும் இருக்கினறன. அங்கேதான் அவர் தமது ஜனங்களைப் புடமிடுகிறார். எந்தத் துன்பமும் நமது நன்மைக்கு அவசியம் வேண்டியது. நித்திய நேசத்தால் ஏற்படுத்தப்பட்டு எவ்வளவு காலம் அது தேவையோ அவ்வளவு காலம் அது இருக்கும். அதற்கு மிஞ்சி ஒரு நொடியும் இருக்காது. எந்தப் பக்தனுக்கும் துன்புங்கள் வேண்டும். எந்த விசுவாசியும் புடமிடப்படுகிறான். நம்மைப் பரிசுத்தராக்க தேவன் சித்தங்கொண்டால் நம்மை அக்கினியில் வைப்பார்.

பரிசுத்தத்திற்காக நாம் ஜெபிக்கும்போதெல்லாம் துன்பங்கள் வேண்டுமென்று கேட்கிறோம். துன்பங்கள் வாக்குத்தத்தங்களை அதிக அருமையாக்கி, கிருபாசனத்தின்மேல் நாம் வாஞ்சைக்கொள்ள செய்கிறது. இது இரட்சகரை எவ்வளவோ அருமையுள்ளவர் ஆக்குகிறது. துன்பங்கள் வரும்போது நம்முடைய சொந்த இருதயங்களை நாம் நன்றாய் பார்க்கிறோம். உலகம் நம்மைச் சாந்திப்படுத்தாது என்று அறிகிறோம். நாம் தேவனுடைய பிள்ளைகளென்று காட்டுகிற சாட்சிகளைக் கூர்ந்து கவனிக்கச் செய்கிறது. ஒரு புடமிடப்பட்ட கிறிஸ்தவன் உறுதியுள்ளவனாவான். சோதனையில்லாமல் இருக்கிறவர்கள் பரம சிந்தையில் குறையுள்ளவர்களாயிருப்பார்கள். அதிக பிரயோஜனமுள்ளவர்களாயும் இருக்க மாட்டார்கள். பிறருக்கு ஆறுதலாயுமிருக்க முடியாது. துன்பங்கள் மழை காலத்தில் விழும் மூடுபனிபோல் வசனமாகிய விதையை ஏற்றுக்கொள்ள நமது இருதயத்தைப் பண்படுத்துகிறது. அப்போதுதான் நாம் அதிக கனிகளைக் கொடுப்போம்.

அக்கினியில் என்னைச் சோதித்தீர்
அதை அவித்து தினம் துதிப்பேன்
தண்ணீரில் மூழ்கப் பண்ணினீர்
நீரே இரட்சித்தீரென்று போற்றுவேன்.

கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு

பெப்ரவரி 14

”கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு.” சங். 37:4

கர்த்தர் நம்மில் மகிழுகிறதுபோல, நாம் அவரில் மனமகிழ்ச்சியாயிருக்க வேண்டும். இதற்கு அவருடைய அன்பைப்பற்றி சரியான எண்ணங்கள் நமது உள்ளத்தில் வரவேண்டும். இயேசுவில் வெளியாகியிருக்கிற அவரின் மகிமையான குண நலன்களைத் தியானிக்க வேண்டும். அவருடைய அன்பும் பூரண இரட்சிப்பும் நமக்கு உண்டென உணரவேண்டும். அவரின் அழகையும் பரலோக சிந்தையும் நம்மில் இடைவிடாமல் இருக்க வேண்டும். அவரின் வாக்குகளை அதிகம் நம்ப வேண்டும்.அவரின் பாதத்தில் காத்திருக்க வேண்டும். நமது தகப்பனாகவும், நண்பனாகவும் அவரை நாட வேண்டும். நமது பங்கு நித்திய காலமாய் நமக்கிருக்கிறதென்று விசுவாசிக்க வேண்டும்.

எனவே, கீழான காரியங்களின் மேலிருக்கும் நாட்டத்தை நீக்கி, அதைக் கர்த்தர்மேல் வைக்க அதிகமாய் பிரயாசப்பட வேண்டும். கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாய் இருப்பவர்கள் வெகு சிலரே. அவரைப் பற்றி தியானிப்பது, அவரைப்பற்றி அறிந்துக்கொள்வது அவரைப்பற்றிப்படிப்பது போதுமென்றிருக்கிறோம். ஆனால் அது போதாது. நாம் கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிருக்க வேண்டும். நமக்கு வேண்டியதையெல்லாம் நமக்குக் கொடுக்கும் பொக்கிஷங்களில் நாம் மகிழலாம். நமக்குத் தரும் பாதுகாப்பிற்காகவும் அவரில் மகிழலாம். அவரின் அலங்காரமான பரிசுத்தத்தில் மகிழலாம். அவரின் கிருபைக்காகவே அவரில் அனுதினம் மகிழலாம்.

கர்த்தாவே உம்மில் மகிழுவேன்
உமது அரவணைப்பில் பூரிப்பேன்
நீர் என் நேசர், துன்பத்தில்
உமதண்டை ஓடி வருவேன்.

நானோ எப்போதும் நம்பிக்கைக் கொண்டிருப்பேன்

பெப்ரவரி 12

“நானோ எப்போதும் நம்பிக்கைக் கொண்டிருப்பேன்.” சங். 71:14

இப்படித்தான் நான் தைரியமாய் நம்பிக்கைக் கொள்ள வேண்டும். ஏனென்றால் என் நம்பிக்கை அஸ்திபாரமானது, என்றும் மாறாமல் நிலையாய் நிற்கிறது. கிருபை நிறைந்த என் தேவனுடைய தகுதிகளும் அவருடைய வசனத்தில் கண்டிருக்கும் உண்மை வாக்குகளும் அதில் எழுதியிருக்கிறது. தேவனுடைய பக்தருடைய வாழ்க்கையிலும் என் அனுபவத்திலும் கண்மறிந்ததும், சகலமும் எப்போதும் தேவனிடம் நம்பிக்கைக் கொண்டிருக்க என்னை உற்சாகப்படுத்துகின்றன. என் அக்கிரமத்திற்கு தேவன் இறங்குவார். சகல துன்பத்திலும் என்i னஆதரிப்பார். சமயத்திற்கேற்ப உதவி செய்து என்னை விடுவிப்பார். எனக்கு வரும் எல்லா தீயக் காரியங்களிலிருந்தும் நன்மை பிறக்கும். இயேசுவானவர் தோன்றும்போது எனக்குத் தயை கிடைக்கும். நித்தியஜீவன் எனது படைபங்காயிருக்குமென்று நம்பிக்கைக் கொண்டிருப்பேன். இந்த நம்பிக்கை மட்டும் இல்லையேல் நான் நிர்மூலமாகிவிடுவேன். வீண் கவலை என்னை நெருக்கி, அவநம்பிக்கை என் மனதை மூடினாலும் நான் அவரையே நம்பிக்கொண்டிருப்பேன்.

இப்படி நான் நம்புவதால் நம்பிக்கையின் தேவ னைக் கனப்படுத்துகிறோம். வருங்காரியங்கள் வெளிச்சமாய் இருக்கும். இது ஜெபத்திற்கும் முயற்சிக்கும் நம்மை தூண்டி விடுகின்றது. நமது ஜீண காலத்தை இனிமையாக்குகிறது. ஆனால் ஒன்றை நான் மறந்துவிடக்கூடாது.. என் நம்பிக்கை பரீட்சிக்கப்படும். தேவனும் என்னை ஆராய்வார். சாத்தானும் என்னைச் சோதிப்பான். ஆனாலும் நல்ல நம்பிக்கையானது பிழைத்து பலத்த காரியம் நடைபெற கிரியை செய்யும். நான் ஏன் அவநம்பிக்கைக்கு இடங்கொடுக்க வேண்டும்? நான் பயப்படேன். அதனால் எனக்கு என்ன பலன் கிடைக்கும்?

காற்றடித்தாலும் கொந்தளித்தாலும்
என் ஆத்துமா உம்மைப் பற்றும்
அப்போ என் மனம் சுகித்து
உம்மில் வாழ்ந்து களிக்கும்.

விலையேறப்பெற்ற சீயோன் குமாரர்

பெப்ரவரி 06

“விலையேறப்பெற்ற சீயோன் குமாரர்.” புல. 4:2

இரட்சகராகிய இயேசு தம்முடைய ஜனங்களுக்கு அருமையாயிருக்கிறதுபோல, அவர்களும் தமது ஆபரணங்களென்றும் தமது விசேஷித்த பொக்கிஷங்களென்றும், நமது பங்கென்றும் அவர் சொல்லுகிறார். அவர்கள்மேல் அவர் வைத்திருக்கும் அன்பு ஆச்சரியமானது. தமது பிள்ளைகளை மிகவும் வேண்டியவர்களாய் எண்ணியபடியால், தனது விலையேறப்பெற்ற இரத்தத்தினால் அவர்களை மீட்டார். அவ்வளவு உயர்ந்த விலைக்கொடுத்து மீட்டதால் அவர்களைக் கைவிடவே மாட்டார். நேசர் தமது ஜனங்களுக்கு அருமையாயிருப்பதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது? அவர் அவர்களுக்கு எவ்வளவோ உதவிகளையும், நன்மைகளையும் செய்கிறார். பல வழிகளில் அவர்களோடு ஐக்கியப்படுகிறார். அவர் எவ்வளவோ அருமையானவர். நாம் அவர் பார்வையில் அருமையாயிருப்பதுதான் அதிக ஆச்சரியம்.

நாம் எவ்வளவு பாவிகள், எவ்வளவு நிர்பந்தர், எவ்வளவு கொடியவர்கள், எவ்வளவு நிர்விசாரிகள். அவரின் வழிகள் நம்முடையவைகள் அல்ல. அவருடைய நினைவுகள் நம்முடைய நினைவுகள் அல்ல. அப்படியருந்தும் நம்மை, அருமையான பிள்ளைகளாக, அழகான மனையாட்டிகளாகப் பாவிக்கிறார். அவ்வளவுக்கு அதிகமாய் அவர் நம்மை நேசிக்கிறார். இது மகிமை நிறைந்த சத்தியம். மனிதர் நம்மைக் குறித்து என்ன நினைத்தாலும் அவர் நம்மை விலையேறப்பெற்றவர்களாய் நினைக்கிறார். நாம் விலையேறப்பெற்றதால்தான் கர்த்தருடைய பார்வைக்கு அருமையானவர்கள். இந்தச் சிந்தையோடு இந்த இரவில் படுக்கைக்குச் செல்வோமாக. பரிசுத்தவான்கள் கர்த்தருடைய பார்வைக்கு அருமையானவர்கள்தான். அவர்கள் மரணமும் அருமையானதுதான்.

இயேசு சொல்வதைக் கேள்
அவரை விட்டுப் பிரியாதே
பிழைத்தும் செத்தும் பக்தர்
அவருக்கு அருமையானவர்களே.

அவர் நம்மேல் இரங்குவார்

பெப்ரவரி 22

“அவர் நம்மேல் இரங்குவார்.” மீகா 7:19

நாம் பாவம் செய்ததால் நம் பேரில் அவருக்குக் கோபம் ஏற்பட்டது. ஆனால் எப்போதுமே அவர் கோபத்தோடிருப்பவரல்ல. நமது பாவம் நம்மை நிர்மூலமாக்குமானால் தேவ இரக்கம் நம்மை பாக்கியவான்களாக்குகிறது. அவர் வார்த்தையின்படி ஆறுதலும் தேறுதலும் உண்டாகும்படி நமக்கு இரங்குவார். அவர் உருக்கம் நிறைந்தவர். அவர் இரக்கத்தில் சம்பூணர். மன்னிக்க ஆயத்தமானவர். இவைகள் தேவனுடைய சொந்த வாக்கியங்கள். நாம் அவைகளை மட்டும் நம்பினோமானால் நம்முடைய பங்களும், திகிலும் பறந்தோடும். நம்முடைய சந்தேகங்களும் மறைந்துப்போம். நாம் சந்தோஷத்தாலும், சமாதானத்தாலும் நிரப்பப்படுவோம்.

நாம் அவரைவிட்டு வீணாய் அலைந்தோம். ஆனாலும் அவர் நம்மேல் இரங்கினார். அலைந்துதிரிந்த ஆட்டைத் திரும்பவும் சேர்த்துக் கொள்கிறார். கெட்ட குமாரனை, ஆடல் பாடலோடு வரவேற்றுக் கொள்கிறார். சாத்தான் என்ன பழி சொன்னாலும் அவர் மனம் துருகவே உருகுவார். உன் பாவங்களும், பயங்களும் வெகுவாய் இருந்தாலும் அவர் மனம் உருகிவிடுகிறார். அவர் வாக்களித்தபடியாலும், அவர் தன்மையின்படியும் இரக்கமுள்ளவராயிருக்கிறார். எத்தனை முறை நமக்கு அப்படி செய்திருக்கிறார். இப்போதும் அவர் மனம் உருக்கத்தால் பொங்குகிறது. நீ பாவத்திற்காக மனம் வருந்துவதைக் கண்டாலோ தப்பிதங்களுக்காக அழுகிறதைப் பார்த்தாலோ அவர் உருகி விடுகிறார். உன் அக்கிரமங்களையெல்லாம் நிராகரித்து உன் பாவங்களையெல்லாம் சமுத்திரத்தின் ஆழத்தில் போட்டு விடுகிறார்.

இயேசு மனதுருகி
காயம் கட்டுவார்
துக்கிப்பவர்களுக்கு
ஆறுதலளிப்பார்.

நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்

பெப்ரவரி 19

“நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்.” மத். 6:34

வீணாய் வருத்தப்பட்டு, மனதைப் புண்ணாக்கிக் கொள்ளும்படி கவலைப்படாதேயுங்கள். நாளை நமக்குரியதில்லையென்று அறிவோமே? இன்றிரவு கர்த்தர் ஒரு வேளை உங்களை எடுத்துக்கொள்ளலாமே! நீங்கள் உயிரோடிருக்கிறதால் இன்றைக்கிருக்கிறவிதமாய் கர்த்தர் உங்கள்மேல் கவனமாய்ப் பட்சமாய் காப்பாராக. அனுதின உணவுப்போல் அனுதின கிருபையும் வேண்டும். நீங்கள் தகப்பனற்றவர்களல்ல: தரவற்றவர்கள் அல்ல. உங்களை கவலைக்குள்ளாக்குகிற காரியங்கள் எதுவானாலும், அது உங்கள் பரமபிதாவுக்கு தெரியும். தேவையானதை அவ்வப்போது உங்களுக்கு தந்து கொண்டேயிருப்பார். தேவ சமாதானம் உங்களை ஆளுகை செய்யட்டும். கர்த்தருடைய வார்த்தையை நம்பியிருங்கள்.

கவலைக்கு இடங்கொடாமல் இருங்கவும், வீண் சிந்தனைகளுக்கு இடங்கொடாமலிருக்கவும் கர்த்தரிடம் காத்திருந்து பொறுமையாய் விசுவாசித்தால் பெற்றுக்கொள்ளவுமே அவர் விரும்புகிறார். இன்றிரவு நீ அமைதியாய் உன் ஆண்டவர் சொன்னதை யோசித்துப்பார். ‘முதலாவது தேவனுடைய இராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள். அப்போது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூட கொடுக்கப்படும். ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள். நாளை தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலை;படும். அந்தந்த நாளுக்கு அதினதன் பாடுபோதும்.” காலையில் நீ விழிக்கும்போது உன் தேவன் உன்னோடிருப்பார். ஆறு துன்பங்களில் உன்னை விடுவித்தவர், ஏழு துன்பங்களிலும் உன்னை கைவிடார்.

ஆகவே கவலைப்டாதே.
வீட்டிலும் வெளியிலும்
இரவிலும் பகலிலும்
அவர் கரம் உன்னைப் போஷிக்கும்
அவர் கரம் உன்னை நடத்தும்.

சமாதானத்தின் தேவன்

பெப்ரவரி 05

“சமாதானத்தின் தேவன்.”  எபி. 13:20

கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தால் தேவன் நம்மோடு முற்றிலும் சமாதானமாகி ஒப்புரவாக்கப்பட்டிருக்கிறார். அவர் சமாதானத்தின் தேவன். பயப்படத்தக்கதொன்றும் அவரில் இல்லை. இயேசுவின் நாமத்தில் எதைக் கேட்டாலும் அதை நடக்குக் கொடுப்பார். அவர் நம்மேல் மனஸ்தாபமாயிருந்தது உண்மைதான். இப்போதோ அவர் கோபம் நீங்கி ஆறுதல்படுத்துகிறார். நமக்கும், அவருக்கும் இப்போது சமாதானமுண்டு. நமது நன்மையை அவர் போருகிறார். அவருக்கு மகிமையை அதிகம் கொடுக்க வேண்டியதே நமது கடமை. யோகோவா நம்மிடம் சமாதானமாய் இருப்பது எத்தனை பாக்கியம். அவரின் சமுகத்தில் நமது இருதயத்தை ஊற்றி அவரில் நம்பிக்கை வைத்து முழுவதும் அவர் கரத்தில் நம்மை ஒப்புக்கொடுப்போமாக.

கிறிஸ்துவானவர் நமக்காக நிறைவேற்றின கிரியையை, யோகோவா அங்கீகரித்து, அவரை மரித்தோரிலிருந்து எழுப்பி, பரம ஸ்தலங்களில் அவரைத் தமது வலது பாரிசத்தில் வைத்து, அவர்மூலம் நமது வாழ்க்கைக்கு நன்மை செய்யப் பிரியப்படுகிறார். இப்போதும் அவர் அதிகமாய் நம்மோடு சமாதானப்பட்டிருக்குpறார். நாம் இதை அதிகமாய் நம்பி அதிகமாய் அனுபவிக்கலாம். பரிசுத்தாவியைத் தந்து நமக்கு நன்மை செய்கிறது அவருக்குப் பிரியம். இனி தேவனைக் குறித்து தப்பெண்ணங்கொள்ளாதபடிக்கும் அவர் கடினமனமு;ளவரென்று எண்ணாதபடிக்கும் எச்சரிக்கையாயிருப்போமாக. அவர் சமாதானத்தின் தேவன்.

சமாதானத்தின் தேவனே
அமர்ந்த மனநிலை தாருமே
இருதயத்தில் இரத்தம் தெளித்து
உமது நாமம் அதில் எழுதுமே.

மனந்திரும்பி ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக

பெப்ரவரி 26

“மனந்திரும்பி ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக.”  வெளி 2:5

மனந்திரும்புதலுக்குச் சிந்தனை தேவை. நடத்தையைப்பற்றியும், தன் நிலைமையைப்பற்றியும் பயபக்தியாய் சிந்திக்கிற சிந்தனை வேண்டும். அது பாவத்தைப்பற்றி உணர்வதில் ஏற்படுகிறது. தேவனுக்கு முன்பாக நம்முடைய தன்மை பாவ கரையுள்ளது என்று அறிய வேண்டும். இந்தச் சிந்தனை வந்தால்தான் பாவத்தைவிட்டு, பாவ மன்னிப்பைப் பெற்று சமாதானம் பெற வழியுண்டாகும். இந்த எண்ணத்தில் உள்ளான துக்கமும் அடங்கியிருக்கிறது. இந்த மன வருத்தம், கர்த்தருக்கு மனஸ்தாபத்தை உண்டாக்கிப் போட்டோமே. அவரை அவமதித்து அவர் இரக்கத்தை புறக்கணத்தோமே என்ற விசனத்தை உண்டாக்கும்.

இந்த வருத்தம் தான் நம்மை சீர்வாழ்வுக்கும், இரட்சிப்புக்கும் வழி நடத்தும். உண்மையான மனஸ்தாபமில்லாமல் ஒருவேளை வாழ்க்கை நடத்தலாம். ஆனால், நல்வாழ்கை நடத்த வேண்டுமானால், உண்மை மனஸ்தாபம் வேண்டும். நமது வழிகளைக் குறித்துச் சிந்தித்து, நமது பின்மாற்றத்தை யோசித்து, குற்றங்களை ஒப்புக்கொண்டு, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்யத் தொடங்குவோமாக. கிறிஸ்துவை நோக்கி பார். தேவனுக்குக் காத்திரு. வசனத்தை ஆராய்ந்து பார். அவர் கட்டளைகளைக் கைக்கொள். இயேசுவை குறித்து மற்றவர்களாடு பேசு. முன்பு செய்ததுப்போல் தீமையாய் தோன்றுகிறவைகளை விட்டு விலகு. இப்படிச் செய்வதனால் அன்பும், வைராக்கியமும், விழிப்புணர்ச்சியும், பயப்கதியும், ஒப்புவித்தலும் நம்மில் மிகுதியாய்க் காணப்படும். நம்முடைய வழிகளை ஆராய்ந்து அவரிடத்தில் திரும்புவோமாக. இயேசு கிறிஸ்துவைக் கனக்குறைச்சல் படுத்தினோம் என்று முறையிடுவதோடு, மனந்திரும்பி ஆதியில் செய்த கிரியைகளைச் செய் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

கடந்த காலத்தை நினை
ஆதி அன்பைக் காட்டு
முந்தின கிரியை செய்
அவரில் ஆறுதலடை.

Popular Posts

My Favorites

சத்தியத்தை அறிவீர்கள்

மார்ச் 09 "சத்தியத்தை அறிவீர்கள்." யோவான் 8:32 கிறிஸ்துவானவர் நமக்கு போதிக்கிறவரானால், நாம் பிள்ளைக்குரிய குணத்தோடும் கற்றுக்கொள்கிற மனதோடும் இருப்போமானால் சத்தியத்தை அறிந்துக்கொள்வோம். சீயோன் குமாரர்களும் குமாரத்திகளும் கர்த்தரால் போதிக்கப்படுகிறார்கள். தேவ போதனையைக் கேட்கிற எவரும்...