மார்ச்

முகப்பு தினதியானம் மார்ச்

பயப்படாமலும் கலங்காமலும் இரு

மார்ச் 18

“பயப்படாமலும் கலங்காமலும் இரு.” உபா. 1:21

கர்த்தர் நம்மை சோதித்தாலும் நமக்குத் தைரியம் கொடுக்கிறார். அவர் தமது வசனத்தில் முன்னூற்று அறுபத்தாறு முறைக்குமேல் பயப்படாதே என்கிறார். ஆனால் நாமோ அடிக்கடி பயப்படுகிறோம். இதை ஆண்டவர் அறிந்துதான் நம்மைச் சந்தோஷப்படுத்தவும், நமக்கு உற்சாகம் அளிக்கவும் இத்தனை முறை சொல்லியிருக்கிறார். தேவன் நல்ல தேசத்தை நமக்கு முன்பாக வைத்து அதை நமக்கத் தருவேன் என்று வாக்களித்து அதைச் சுதந்தரித்துக்கொள்ளப் போங்கள் என்று கற்பித்தபடியால் நாம் அதைரியப்படக்கூடாது. நமது சத்துருக்கள் பலத்திருக்கலாம். ஆனால் நமது சர்வ வல்லவரான தேவன் நமக்காக யுத்தம்பண்ணுவார். நமது சத்துருக்கள் தந்திரக்காரராய் இருக்கலாம். ஞானமுள்ள ஒரே தேவன் நமது பட்சத்தில் இருக்கிறார். தேவக்கோபம் நம்மீது இருப்பதுப்போல தோன்றலாம். நமது ஜெபங்களுக்கு பதில் அளிக்காமல், காரியங்கள் மோசப்பட்டு போவதாய்க் காணலாம். ஆனால் நமது நற்குணங்களை அதிகப்படுத்த, நமது உத்தமத்தைச் சோதிக்க, கருத்தான ஜெபத்தை ஏறெடுக்க இப்படிப்பட்ட காரியங்களைத் தேவன் அனுமதிக்கிறார் என்று அறிய வேண்டும்.

அன்பர்களே, ஆகவே நம்பிக்கையில் உறுதிப்பட்டு விசுவாசத்தில் விடாப்பிடியாய் இருக்க வேண்டும். கர்த்தர் நமக்காக வெளிப்படுவார். நமது அனுபவத்தால் அவர் வசனம் உண்மையுள்ளது என்று கண்டறிவோம். இப்போது எந்தப் பதிலும் அவர் சொல்லாவிட்டாலும் நமது இருதயம் விரும்புகிறபடி சீக்கிரம் செய்வார். ஆதலால் பயப்பட அவசியமில்லை. பயம், விசுவாசத்தைப் பெலவீனப்படுத்தி, தேவனைக் கனவீனப்படுத்தி, நமது சத்துருக்களை சந்தோஷப்படுத்தும். உங்களோடு தேவன் இருக்கிறார். அவர் உனக்கானவர்.

உமது சமுகம் தேடி
உம்மில் மகிழ்ந்திருப்போம்
உமது வாக்கை நம்பி
பயத்தை அகற்றுவோம்
விக்கினங்கள் பெருகினும்
உம்மால் வெற்றிபெறுவோம்.

சமாதானத்தோடே போ

மார்ச் 24

“சமாதானத்தோடே போ.” லூக்கா 7:50

உண்மையான சமாதானம் பாவமன்னிப்பிலிருந்து உண்டாகிறது. தேவன் கிறிஸ்துவினால் நமது அக்கிரமங்களையல்லாம் மன்னித்துவிட்டாரென்று நாம் விசுவாசிக்கும்போது நமது ஆத்துமா அந்தச் சமாதானத்தை அனுபவிக்கும். நாம் விசுவாசத்தால் நீதிமான்களாக்கப்பட்டபடியினால் தேவ சமாதானத்தைப் பெற்றிருக்கிறோம். தேவனைப்பற்றி நாம் பயப்படவேண்டியதில்லை. நம்மை மன்னித்துவிட்டபடியால் நம்மீது அவர் குற்றஞ்சுமத்தமாட்டார். அவர் நமக்கு நன்மை செய்வார் என்று எதிர்ப்பார்க்கலாம். தம்முடைய குமாரனiயே தந்தவர், சகலத்தையும் நமக்கு இலவசமாய்க் கொடாமல் இருப்பாரா? நாம் எத்தீங்குக்கும் பயப்படாமல் எந்த நன்மையும் கிடைக்கும் என்று அவரை விசுவாசித்திருந்தால் நாம் சமாதானமாய் இருக்கலாம்.

இயேசு கிறிஸ்து அந்த ஸ்திரீயை மன்னித்து சமாதானத்தோடே போ என்று சொன்னதுபோல் நம்மையும் பார்த்துச் சொல்லுகிறார். சாத்தான் சொல்வரை கவனியாதே. மனிதனின் செயல்களில் அக்கறைக்கொள்ளாதே. பயப்படாமல் உன் கடமையைச் செய் . துன்பமும் சோதனையும் நேரிட்டால் அவைகளைச் சகித்துக்கொள். தேவ பக்திக்குரிய சிலாக்கியங்களை அனுபவி. மோசங்கள் சூழலாம். பெலவீனங்கள் பெருகலாம். ஆனாலும் சமாதானத்தோடே போ. தேவன் உன்னை ஏற்றுக்கொள்வார். நீ தேவனோடு ஒப்புவாக்கப்பட்டபடியால் தேவ நாமத்தை பிரஸ்தாபம்பண்ணு. யேகொவாவின் அன்பையும் மன்னிப்பையும் எங்கும் போய் சொல். அவர் சொல்வது உண்மை என்று சாட்சி சொல். உன்னால் உன் சத்துருக்கள் எல்லாரையும் ஜெபிக்க வைக்க முடியும். இன்று சமாதானமாய் இளைப்பாறு. தேவன் என்னோடு இருக்கிறார் என்று சொல்லி உன்னை ஆற்றித் தேற்றிக்கொள். அவர் சமாதானத்துடன் போ என்கிறார்.

என்னை அன்பாய் பாருமே
என் துக்கத்தை நீக்கிடும்
பயம் சந்தேகம் போக்கிடும்.
சமாதானம் கூறிடும்.

நாம் அவரை அறியும்படியாக

மார்ச் 25

“நாம் அவரை அறியும்படியாக” பிலி. 3:10

அப்போஸ்தலனாகிய பவுல் ஏழு விசேஷித்த காரியங்களைக் குறித்து விருப்பங்கொண்டான். அவைகளை இந்தச் சுருக்கமான நிருபத்தில் காணலாம். அவை அத்தனையும் கிறிஸ்துவைப் பற்றினதுதான். பவுல் எல்லாவற்றிற்கும் இயேசுவையே பிடித்து எப்போதும் அவர் சமூகத்தை நோக்கியே ஓடினான். அவன் ஆத்தும வாஞ்சை, விருப்பம் எல்லாம் அவரையே பற்றியிருந்தது. கிறிஸ்துவை அறியவும், அவரைத் தன் சரீரத்திலும், ஆத்துமாவிலும் மேன்மைப்படுத்தவும், அவரை ஆதாயப்படுத்திக் கொள்ளவும், அவரில் கண்டு பிடிக்கப்படவும், அவரில் ஒப்பாகவும், அவர் வரும் நாளில் மகிழ்ச்சி அடையவும், அவரோடிருக்கவும் விரும்பினான்.

கிறிஸ்துவை அறிகிற அறிவு மற்றெல்லா அறிவிலும் மேன்மையானது. ஆனால் நாம் அவரைக் குறைந்த அளவே அறிந்திருக்கிறோம். அதனால் குறைந்த அளவே அனுபவிக்கிறோம். அவரை ஆழமாய் தெளிவாய் அறிந்துக்கொள்ள வேண்டும் என்று நம் ஆத்துமா வாஞ்சிக்கிறதா? அந்த அறிவு பெலனுள்ளதாயும், நமது நினைவுகளையும், விருப்பங்களையும், நம்பிக்கையையும், பயங்களையும், ஆசைகளையும் தேவனுக்கு முன்பாகவும், மனுஷருக்கு முன்பாகவும் குறிப்பாக பரிசுத்தவான்களுக்கு முன்பாக நம் நடக்கையை ஒழுங்குபடுத்த நம் ஆத்தமா வாஞ்சிக்கிறதா? நமது அறிவு கிறிஸ்துவை அறிகிற அறிவில் வளர ஆவல் கொள்ளுகிறதா? நாம் கிறிஸ்துவை உண்மையாயும் உத்தமமாயும் அறிய விரும்புகிறோமா? அப்படியானால் அவர் வசனத்தை ஆராய்ந்துப் பார்ப்போம். அவரின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவோம். அவர் உண்மையான வாக்குகளைப்பற்றி தியானிப்போம். அவர் சமுகத்தையே நோக்குவோம். அவரைக்குறித்து அவருடைய மக்களிடம் பேசுவோம்.

ஆட்டுக்குட்டியின் மரணம்
நித்திய ஜீவ காரணம்
இவ்வறிவை அடையட்டும்
இதிலே நான் தேறட்டும்.

எப்போதும் கர்த்தருடனே கூட இருப்போம்

மார்ச் 12

“எப்போதும் கர்த்தருடனே கூட இருப்போம்.” 1.தெச. 4:17

தேவன் உலகத்தாருக்குத் தம்மை வெளிப்படுத்துவது போலில்லாமல், தமது ஜனத்திற்கு வேறுவிதமாய் வெளிப்படுத்துகிறார். இப்படி அவர் தமது ஜனங்களைச் சந்திப்பது எத்தனை இனிமையாயிருக்கிறது. அப்படி அவர் நமக்கு வெளிப்படுத்துவது நமது விசுவாசத்தை உறுதிப்படுத்துகிறதாயிருக்கிறது. சந்தோஷத்தை வளர்க்கிறதாயுமிருக்கிறது. இன்னும் கொஞ்ச காலத்தில் நம்மை தமது பரம வீட்டிற்கு கொண்டு போக திரும்ப வருவார். ஒருவேளை அதற்கு முன்னே நமக்கு மரணத்தை அனுப்பினாலும் அனுப்பலாம். நாம் சரீரத்தை விட்டு பிரிந்து போய் கிறிஸ்துடன் இருக்க வேண்டியது வரும். நமது நிகழ்காலத்தைவிட அதுவே மிகவும் நல்லது. அப்படியேயானாலும் அவர் சீக்கிரம் வந்து நம்முடைய சரீரங்களைக் கல்லறையினின்று எழுப்பி நமது ஆத்துமாவையும், சரீரத்தையும் அவருடைய சாயலுக்கு ஒப்பாக்கும்போது, நாம் ஆகாயத்தில் அவரைச் சந்திக்கக் கொண்டுபோகப்பட்டு எப்போதும் கர்த்தரோடிருப்போம். இதுதான் நமக்கு மோட்சம். இதுதான் நமது பங்கு. நாம் அவரைப்போல அவராடிருப்போம். நமது இப்போதைய நிலைக்கு அது வித்தியாசமானது. இது அதிக மகிமையான காட்சி.

என்றைக்கும் கர்த்தரோடிருப்பதில் அடங்கா மகிமை உண்டு. எப்போதும் அவரோடிருப்பதில் துன்பமும் இல்லை. மகிமையைக் குறித்து தியானித்து, சந்தோஷம் நிறைந்த இந்த மாறுதலை நோக்கி பார்த்துக்கொண்டே இந்த நாளை முடிப்போமாக. இனி வருத்தத்தையும் துன்பத்தையும் பார்ப்பது சரியல்ல. நான் சீக்கிரம் கர்த்தரோடிருப்பேன் என்று சொல்லுவோம்.

என்றும் தேவனோடிருப்பது
ஆனந்த மகிழ்ச்ச
அதுவே பேரின்ப வாழ்வு
இதுவே நித்திய பேறு.

மேன்மையான பரம தேசத்தையே விரும்பினார்கள்

மார்ச் 21

“மேன்மையான பரம தேசத்தையே விரும்பினார்கள்.” எபி. 11:16

மேலான தன்மையே அல்ல மேலான நிலைமையை அல்ல. மேலான தேசத்தையே விரும்பினார்கள். முற்பிதாக்கள் விரும்பினது இதுதான். அப்போஸ்தலரும் இதையே நாடினார்கள். எந்த உண்மை கிறிஸ்தவனும் இதைத்தான் நாடுவான். நாமும் மேலான பரம தேசத்தை நாடுகிறோமா? ஒரு நித்திய தேசம் நமக்குண்டு. அது வேதத்தில் நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது. இயேசுவை விசுவாசித்து மரண பரியந்தம் உண்மையாயிருக்கிற யாவருக்கும் அது வருத்தம் இல்லை. துன்பம் இல்லை, கண்ணீர் இல்லை, கவலை இல்லை. அது இளைப்பாறும் இடம். அந்த மேல் வீட்டில் அன்பு நிறைந்திருக்கும். சத்துருக்கள் இல்லை. பாவம் செய்யும் மனிதனும் மாய்மாலம் நிறைந்த கிறிஸ்தவர்களும் அங்கே இல்லை. பொறாமையுள்ள சகோதரர் அங்கு இல்லை.

அது பூரண அன்பும் இடைவிடாத துதியும் நிறைந்த ஓரிடம். அங்கே எல்லாரும் தேவனை நேசிப்பார்கள், தேவன் எல்லாரையும் நேசிப்பார். ஒவ்வொருவரும் பிறரை நேசிக்கும் ஸ்தலம். அது பரிசுத்தம் நிறைந்த வீடு. அங்கே பாவமில்லாததால் ஒவ்வொருவரும் இயேசுவைப்போலவே இருப்பார்கள். எங்கும் எப்போதும் மகிழ்ச்சிப் பரவசம், பரிசுத்தம், கலக்கமற்ற ஆறுதல்தான் அங்கு உண்டு. அங்கே இயேசுவை முகமுகமாய் பார்க்கலாம். அங்கே தேவன் தமது மகிமையை வெளிப்படையாகக் காண்பிக்கிறார். நமது ஆசைகளெல்லாம் நிறைவேறும் இடம் அது. எல்லா ஆத்துமாவும் மகிமையின் நிறைவுப்பெற்று பொங்கி வழியும். அதுN நமது நித்திய உண்மை தேசம். ஆத்துமாவே நீ அதை வாஞ்சிக்கிறாயா? அதுவே உனக்கு போதும் என்று நினைக்கிறாயா? கர்த்தருடைய ஜனங்களுக்கு இருக்கும் இளைப்பாறுதல் அதுவே.

வரும் மகிழ்ச்சி கண்டு
பயம் அகற்றுவோம்
தேவன் நம் சொந்தமென்று
கண்ணீரைத் துடைப்போம்.

இரக்கங்களின் பிதா

மார்ச் 26

“இரக்கங்களின் பிதா.” 2. கொரி. 1:3

யேகோவா நமக்குப் பிதா, இரக்கமுள்ள பிதா, உருக்கம் நிறைந்த பிதா. அவர் இரக்கங்களின் ஊற்றாயிருக்கிறபடியால், இரக்கங்களெல்லாம் அவரிடத்திலிருந்து தோன்றி அவரிடத்திலிருந்தே பாய்கிறது. நமக்குக் கிடைத்த விசேஷ இரக்கம் இரட்சகர்தான். அவர் தேவனின் ஒரே பேறான குமாரன். அவர் குமாரனை நம்மெல்லாருக்காகவும் இலவசமாய் ஒப்புக்கொடுத்தார். நம்மை உயிர்ப்பித்து, ஆறுதல்படுத்தி, இன்னும் நம்மைப் பாதுகாத்து வருகிற இரக்கத்திற்கு காரணர் அவரே. இரக்கமாய் நமக்கு வருகிற துன்பங்களும், விடுதலைகளும், இடைஞ்சல்களும், சகாயங்களும், நம்மைகளும் அவரின் சித்தத்தின்படிதான் நமக்கு வருகிறது.

அவரே இரக்கங்களின் பிதா, நமக்கு வரும் உருக்கமான இரக்கமெல்லாம் அவரிடத்திலிருந்தே பாய்கிறது. அவர் நம்மிடம் கோபிக்கிறவர் என்றும், அவர் கடினமானவர் என்றும் பல சமயங்களில் தப்பாய் நினைக்கிறதை இனி நீக்கி நமது விசுவாசத்தையும், நம்பிக்கையையும், அன்பையும் உற்சாகப்படுத்துகிறது. நாம் ஆராதிக்கிற தேவன் இரக்கம் நிறைந்தவர் என்று நம் ஆத்துமா அறிவதுதான் மிக முக்கியம். அப்போதுதான் சாத்தானின் அக்கினி அப்புகளைத் தடுக்க இது ஒரு நல்ல கேடகம். தேவனிடமிருந்து நாம் பெற்றுக்கொள்ளும் சகல ஈவுகளிலும் அவரை அதிகமாய் நேசிக்க இது ஒரு நல்ல வழி.

அன்பர்களே, இன்றிரவு உங்களுக்கு என்ன தேவை? இரக்கமா? அது தேவனிடத்தில் உண்டு. அது உங்களுக்கு நன்மையென்றால் அதைத்தர மனதாயிருக்கிறார். இன்றிரவு ங்கள் பரம பிதாவை நோக்குp கெஞ்சுங்கள். அவர் உற்களுக்கு இரங்குவார். அது உங்களுக்கு தேவையாயிருக்கிறது. எந்த இரக்கமானாலும் அதை உங்கள் முன்பாகக் கொண்டு வந்து வைப்பார்.

ஆத்துமாவே, உன் நேகர்
எந்நாளும் மாறாதவர்
யார் போயினும் அவரில்
நிலைத்துப் பிழைத்து நில்.

கர்த்தர் சமீபமாயிருக்கிறார்

மார்ச் 02

“கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.” பிலி. 4:5

இயேசு கிறிஸ்து வரப்போகிறார். அவர் வருகிற நாள் தெரியாது. ஆகையால் நாம் எப்போதும் ஆயத்தமாய் இருக்க வேண்டும். அவர் சீக்கிரம் வருவார். உண்மையாய் வரத்தான் போகிறார் என்று உணர்ந்தோமானால், சாம் இப்போது இருக்கிறதுபோல் அடிப்படி உலக காரியங்களில் சிக்கிக்கொள்ள மாட்டோம். உலகத்துக்குரியவைகளைச் சிந்திக்காமல் தினமும் பரலோகத்தை நினைத்து ஏங்குகிறவர்களாய் இருப்போம். உலகை நியாயந்தீர்க்கவும், நமது பிள்ளைகளை ஒன்று சேர்க்கவும், அவனவன் செய்த கிரியைகளுக்குத் தக்க பலன் தரவும், அவர் சீக்கிரம் வரப்போகிறார்.

அந்த நாள் சமீபமாயிருக்கிறதென்று உணர்ந்தோமானால் சோதனையில் அது நம்மைப் பாதுகாக்கும். பின்மாறாதபடி தடுக்கும். நமது பயபக்தியையும் பரம சிந்தையையும் அதிகமாக்கும். அவரையே Nநூக்கியிருக்க செய்யும்: அவருக்காக நம்மை ஆயத்தப்படுத்தும்.

நாமோ! அவரை வாரும் இயேசுவே என்று அழைத்து அவரின் வருகைக்காய் வாஞ்சையோடு காத்திருக்க வேண்டும். அவர் வரும் போது கிருபையை தம்முடன் கொண்டு வருவார். நம்மை தம்முடன் சேர்த்துக்கொள்வார். சத்துருக்களை நாசம்பண்ணுவார். நம்மைத் தமது சாயலுக்கொப்பாய் மாற்றுவார். இயேசுவானவர் வரும்போது அவரின் ஜனங்கள் பூரண பாக்கியவான்களாய் இருப்பார்கள். அழுகை இன்பமாயும், துயரங்கள் ஸ்தோத்திர கீதங்களாயும் மாறும். ஆமென், கர்த்தராகிய இயேசுவே வாரும். சீக்கிரம் வாரும் என்று அழைப்போம்.

வாரும் இயேசுவே வாரும்
உமது மகிமையைக் காட்டும்
அதை நாங்கள் கண்ணாய் கண்டு
கையில் பொற் கின்னரம் கொண்டு
ஜெயம் ஜெயம் என்று
வாழ்த்திப் போற்றிப் பாடுவோம்.

தேவனிடத்தில் சேருங்கள்

மார்ச் 13

“தேவனிடத்தில் சேருங்கள்.” யாக். 4:8

பாவமானது நம்மைத் தேவனைவிட்டு வெகுதூரம் கொண்டுபோய்விடும். அவிசுவாசம் நம்மை அங்கேயே நிறுத்தி வைத்துவிடும். ஆனால் கிருபையோ சிலுவையில் இரத்தத்தைக் கொண்டு நம்மைத் திரும்ப தேவனண்டைக்குக் கொண்டு வருகிறது. நாம் பாவம் செய்யும்போது தேவனைவிட்டு திரிந்தலைகிறோம். தேவனுக்குச் சமீபமாய் வரவேண்டும் என்பதே அவரது பிரியம். அவர் கிருபாசனத்தண்டையில் வீற்றிருக்கிறார். நமக்காகப் பரிந்து பேச இயேசுவானவர் சி;ம்மாசனத்துக்குமுன் நிற்று நம்மை அழைக்கிறார். தேவ சந்நிதியைக்காண இயேசுவின்மூலமாய் அவரின் நம்பிக்கை வைக்க நம்முடைய இருதயங்களை அவருக்கு முன்பாக ஊற்ற நாம் சிங்காசனத்தண்டைக்கு போகவேண்டும்.

நம்மைப் பயப்படுத்துகிற சகலத்தையும் நாம்விரும்புகிற சகலத்தையும் நமக்குத் தேவையான சகலத்தையும் அவருக்குச் சொல்ல, நமக்கு இருக்கிற எல்லாவற்றிற்காகவும், கடந்த காலத்தில் பெற்றுக்கொண்ட நன்மைக்காகவும், இனி வேண்டிய தேவைகளுக்காகவும் சிம்மாசனத்தண்டை சேர வேண்டும். நாம் கூச்சப்படாமல் பயபக்தியாய் சகலத்தையும் அவருக்கு அறிவிக்கலாம். தேவன் சித்தத்தை அறிந்துகொள்ள அவரின் அன்பை ருசிக்க, மனகவலை நீங்க, அவரை சொந்தமாக்கிக்கொள்ள, தேவ சமுகம் தேடி, அவரிடத்தில் வந்து சேருங்கள். அவரும் உங்களுக்குச் சமீபமாய் வருவார்.

இயேசுவே வழியாம்
அவரால் மோட்சம் சேர்வோம்
அவரால் பிதாவின் சமுகம்
கண்டென்றும் ஆனந்திப்போம்.

நீங்கள் சந்தேகமப்படாமல் இருங்கள்

மார்ச் 10

“நீங்கள் சந்தேகமப்படாமல் இருங்கள்.” லூக்கா 12:29

நாம் எல்லாரும் சந்தேகங்கொள்ள ஏதுவானவர்கள், சந்தேகிக்கக்காரணம் இல்லாததையே முக்கியமாய் சந்தேகிக்கிறோம். சிலரோ சந்தேகம் மார்க்கத்திற்கு உரியதுப்போல் அதை அதிகப்படுத்திக் கொள்கிறார்கள். இது தவறு. பாவமும்கூட இரட்சகர் நம்மைப் பார்த்து விசுவாசியுங்கள் என்று சொல்லுகிறார். சந்தேகம் கர்த்தரைக் கனவீனப்படுத்தி, நமக்கு வருத்தமுண்டாக்கி, சாத்தானும் நம்மை எளிதாய் மேற்கொள்ள செய்கிறது. அவருடைய செயலைக் குறித்து நாம் சந்தேகங்கொள்ளக்கூடாது. அது உண்மையுள்ள வார்த்தை. கண்டு விசுவாசிப்பது சரியல்ல. ஒருபோதும் மாறாததும் மோசம் போகாததுமான நிச்திய வாக்குகளைப் பிடித்துக்கொள்வோமாக.

நமது தருமங்களையும் திறமைகளையும் நாம் அதிகம் நினைக்காமல், கர்த்தரையும் அவர் வல்லமையைப் பார்த்து நாம் கலங்கவேண்டியதில்லை. சுகபோகமாய் வாழ்வதைவிட தரித்திரராய் தேவனுக்கு வாழ்வதில் அதிக பாக்கியவான்களாகலாம். மனிதன் மனத் மாறுகிறதைப் பார்த்து நாம் கலங்க வேண்டாம். ஏனென்றால் தேவன் மனம் மாறாதவர். ஒரே மனதுள்ளவர். அவர் மனதை மாற்ற யாராலும் முடியாது. நமது மனதைச் சந்தேகிக்க இடங்கொடுத்தால் அது நம்முடைய தற்கால சந்தோஷத்தைக் கெடுத்து, பக்திக்கரிய கடமைகளைத் தடுத்து நம்பிக்கை என்னும் பார்வையை மங்கச் செய்து, நமது பயங்களைப் பெரிதாக்கிவிடும். பின்னும் கிருபை நிறைந்த தேவனுடைய பட்சத்தையும், நமது பேரில அவர் வைத்திருக்கும் அக்கரையும் சந்தேகிக்கும். ஆகவே சந்தேகம் வேண்டாம். விசுவாசிப்போம்.

கர்த்தர்மேல் பாரத்தை
வைத்து அவர் கரத்தை
நோக்கி அமர்ந்திரு,
இரட்சிப்பாரென்று காத்திரு
சிலுவையில் தொங்கி மீட்டாரே
உன்னை இரட்சிக்காமல் போகாரே.

கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்து

மார்ச் 17

“கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்து.” 1.நாளா. 16:29

தேவன் தமது நாமத்தை அவருடைய வல்லமையான கிரியைகள் எல்லாவற்றின் மேலும், அன்பான ஈவுகள் எல்லாவற்றின் மேலும் தயவாய் மாட்சிமையாய் வரைந்திருக்கிறார். தேவ நாமத்தை நாம் நன்கறிய வேண்டும். அதிலும் சுவிசேஷத்தை ஆராய்ந்தறிய வேண்டும். தேவன் தமது நாமத்தை, பாவங்களைக் குணமாக்குதலிலும், நீதிமான்களாக்கப்படுவதிலும், பரிசுத்தவான்களாக்கப்படுவதிலும், மகிமைப்படுத்துவதிலும் வரைந்திருக்கிறார். தமது மகிமையான தன்மைகளையும், குணநலன்களையும் விளக்கி வெளிப்படுத்துகிறார். தேவன் தமது நாமத்தை தம்முடைய வசனத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார். அதை உபதேசங்களிலும், வாக்குத்தத்தங்களிலும், கட்டளைகளிலும், இனி வெளிப்படப்போகிற காரியங்களிலும் நாம் வாசிக்கிறோம்.

யேகோவாவின் நாமத்தை நாம் சரியானபடி வாசித்து அறிவோமானால், ஆச்சரியத்தோடும் நிரப்பப்படுவோம். அப்படி நிரப்பப்படும்போது நமது ஜெபங்களிலும், துதிகளிலும், நடக்கைகளிலும் அவரை மகிமைப்படுத்துவோம். அவருடைய நாமத்திற்குரிய பிரகாரம் அவரை மகிமைப்படுத்த நமது திறமைகளும், காலமும் போதவே போதாது. அவரை மகிமைப்படுத்துவது நமது கடமை. இருதயம் மட்டும் சுத்தமாய் இருக்குமானால் அது நமக்கு இனிமையாய் இருக்கம். நாம் அடிக்கடி தேவமகிமையை அசட்டை செய்கிறோம். தேவனுக்குரியதை நாம் செலுத்தாமல் போவதால் ஆத்துமாவுக்கரிய ஆறுதலை நாம் அனுபவிக்க முடியாமல் இருக்கிறோம். அவரு நாமத்திற்கரிய மகிமையை அவருக்குச் செலுத்த நாம் கற்றுக்கொள்வோமாக.

வான் கடல் பூமி யாவும்
உம் நாமம் துதித்து போற்றும்
உமது நாமம் கற்போம்
அப்போது ஞானிகள் ஆவோம்

Popular Posts

My Favorites

சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்

ஏப்ரல் 30 "சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்"  மத். 5:5 சாந்தகுணம் மனப்பெலவீனமல்ல. பல சமயம் நாம் தவறாய் இரண்டையும் ஒன்றாக்கி விடுகிறோம். கல்மனமுள்ளவர்களிடமும் சாந்த குணம் இருக்கிறது. சாந்த குணம் உள்ளவர்கள் தேவ சித்தத்திற்குக் கீழ்ப்படிந்து அவர்...