மார்ச்

முகப்பு தினதியானம் மார்ச்

அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா

மார்ச் 07

“அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா.” மத். 6:6

கர்த்தருக்குத் தெரியாமல் யாராவது தன்னை இரகசியமான இடங்களில் மறைத்துக்கொள்ளக்கூடுமோ? ஒரு கிறிஸ்தவன் எந்த வகையிலாவது தன்னை அவரிடமிருந்து ஒளித்துக்கொள்ள முடியாது. எப்போதும் கர்த்தருடைய கண்கள் என்மேல் வைக்கப்பட்டிருக்கிறது. இப்போதும் அவர் என்னை நன்றாய்ப் பார்க்கிறார். அது என் தகப்பனுடைய கண்கள். என் பிதா என்னை அந்தரங்கத்திலிருந்துப் பார்க்கிறார். என் சத்துருக்களின் இரகசிய கண்ணிகளுக்கு என்னைத் தப்புவிப்பார். என்னைச் சேதப்படுத்தவிருக்கும் தீங்கிற்கு என்னை அருமையாய்த் தப்புவிப்பார்.

என் இதயத்தின் போராட்டங்களையும், என் அந்தரங்க சோதனைகளையும், அவர் பார்த்து அறிந்துக்கொள்கிறார். நான் ஜெபிக்கக்கூடாதபோது அவரை நோக்கிப் பார்ப்பதை அவர் பார்த்தறிவார். என் குறைவுகளையும், நிர்பந்தங்களையும் அவர் கண்ணோக்குகிறார். என் இரகசியமான பாவங்களையும் பொல்லாத சிந்தனைகளையும், தகாத தீய செயல்களையும் அவர் கவனிக்காமலில்லை. எத்தனை பயங்கரமான ஒரு காரியம் இது. இப்படி கண்ணோக்குகிற ஒரு தேவன் நமக்கிரு;கிறபடியால், இனி சோதனைக்கு இடங்கொடாமல், அவர் வழிகளுக்கு மாறாய் செய்யாமல் நம்மை நாமே காத்துக்கொள்ள வேண்டும். என் பரமபிதா என்னைப் பார்க்கிறார். ஒவ்வொரு நிமிடமும் இந்த நிமிடமும், என்னைப் பார்க்கிறார். என் உள்ளிந்திரியங்களையும் பார்க்கிறார். என் யோசனைகளையும் விருப்பங்களையும் அவர் பார்க்கிறார். இப்படிப் பார்க்கிறவர் எந்தப் பாவத்தையும் அளவற்ற பகையாய்ப் பார்க்கிறார்.

நான் எங்கே இருந்தாலும்
தேவ சிந்தை என்னை காணும்
நீர் என்னைக் காணும் தேவன்
பாவத்தை வெறுப்பேன் நான்.

இப்பொழுது ஆக்கினைத்தீர்ப்பில்லை

மார்ச் 06

“இப்பொழுது ஆக்கினைத்தீர்ப்பில்லை.” ரோமர் 8:1

ஒவ்வொரு விசுவாசியும் கிறிஸ்துவில் இருக்கிறான். அவரோடு ஐக்கியப்பட்டு அவருடைய செயல்களுக்குப் பிரயோஜனப்பட்டு அவருடைய நீதியால் உந்தப்பட்டு அவருடைய ஆவியால் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறான். இப்படிப்பட்ட மனிதருக்கு ஆக்கினைத்தீர்ப்பு இல்லை. பாவம் பெருத்திருக்கலாம். சந்தேகங்கள் அதிகம் இருக்கலாம். நமக்குள் பாவசிந்தை இருந்;தாலும் அது நம்மை மேற்கொள்ள முடியாது. விசுவாசி எவனும் தேவனால் கைவிடப்படுவதில்லை. அவன் கிறிஸ்துவுக்குள் ஒன்றாய் இருப்பதினால் குற்றத்திலிருந்து விடுதலையாகி தேவனோடு நீதிமானாயிருக்கிறான். தனது சொந்தப்பிள்ளை என்று தேவனால் அங்கீகரிக்கப்படுகிறான். கிருபைக்கம் மகிமைக்கும் சுதந்தரவாளியாகிறான். பாவம் செய்தால் தேவனால் தண்டிக்கப்படுகிறான். தண்டனைப் பெற்றால் தன் குற்றங்களை அறிக்கை செய்கிறான். அப்படி செய்வதால் உண்மையும் நீதியுமுள்ள தேவன் அவனுக்கு மன்னிப்பளித்து, கிறிஸ்துவானவர் நிறைவேற்றின கிரியை தன்னுடையது என்று சொல்லி விடுதலையடைகிறான். ஒருவனும் அவனைக் குற்றவாளி என்று தீர்க்க முடியாது. கிறிஸ்து ஒருவர்தான் அவனுக்காக மரித்தபடியால், அவர் மட்டும்தான் அவனைக் குற்றவாளியாக தீர்க்க முடியும்.

அவரே அவனுக்குப் பரிகாரியாய் உயிர்த்தெழுந்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருந்து அவனுக்காய்ப் பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார். அவர் அவனைக் குற்றவாளியென்று தீர்க்கிறதில்லை. இது பாக்கியமான கிருபை. நீ குற்றவாளியாக தீர்ப்பு பெறுகிற பாவியல்ல. குற்றமற்றவன் என்றும் விடுதலையடைந்த தேவ பிள்ளை என்றும் நினைத்துக் கொண்டே உறங்கச்செல். இது தேவன் தன் பிள்ளைகளுக்குத் தந்த அதிசயமான கிருபை.

ஆக்கினை உனக்கில்லை
தேவன் தாமே சொன்னாரே
கிறிஸ்து மகிமையுள்ளவர்
உன்னையும் மகிமைப்படுத்துவார்.

கர்த்தர் சமீபமாயிருக்கிறார்

மார்ச் 02

“கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.” பிலி. 4:5

இயேசு கிறிஸ்து வரப்போகிறார். அவர் வருகிற நாள் தெரியாது. ஆகையால் நாம் எப்போதும் ஆயத்தமாய் இருக்க வேண்டும். அவர் சீக்கிரம் வருவார். உண்மையாய் வரத்தான் போகிறார் என்று உணர்ந்தோமானால், சாம் இப்போது இருக்கிறதுபோல் அடிப்படி உலக காரியங்களில் சிக்கிக்கொள்ள மாட்டோம். உலகத்துக்குரியவைகளைச் சிந்திக்காமல் தினமும் பரலோகத்தை நினைத்து ஏங்குகிறவர்களாய் இருப்போம். உலகை நியாயந்தீர்க்கவும், நமது பிள்ளைகளை ஒன்று சேர்க்கவும், அவனவன் செய்த கிரியைகளுக்குத் தக்க பலன் தரவும், அவர் சீக்கிரம் வரப்போகிறார்.

அந்த நாள் சமீபமாயிருக்கிறதென்று உணர்ந்தோமானால் சோதனையில் அது நம்மைப் பாதுகாக்கும். பின்மாறாதபடி தடுக்கும். நமது பயபக்தியையும் பரம சிந்தையையும் அதிகமாக்கும். அவரையே Nநூக்கியிருக்க செய்யும்: அவருக்காக நம்மை ஆயத்தப்படுத்தும்.

நாமோ! அவரை வாரும் இயேசுவே என்று அழைத்து அவரின் வருகைக்காய் வாஞ்சையோடு காத்திருக்க வேண்டும். அவர் வரும் போது கிருபையை தம்முடன் கொண்டு வருவார். நம்மை தம்முடன் சேர்த்துக்கொள்வார். சத்துருக்களை நாசம்பண்ணுவார். நம்மைத் தமது சாயலுக்கொப்பாய் மாற்றுவார். இயேசுவானவர் வரும்போது அவரின் ஜனங்கள் பூரண பாக்கியவான்களாய் இருப்பார்கள். அழுகை இன்பமாயும், துயரங்கள் ஸ்தோத்திர கீதங்களாயும் மாறும். ஆமென், கர்த்தராகிய இயேசுவே வாரும். சீக்கிரம் வாரும் என்று அழைப்போம்.

வாரும் இயேசுவே வாரும்
உமது மகிமையைக் காட்டும்
அதை நாங்கள் கண்ணாய் கண்டு
கையில் பொற் கின்னரம் கொண்டு
ஜெயம் ஜெயம் என்று
வாழ்த்திப் போற்றிப் பாடுவோம்.

மேன்மையான பரம தேசத்தையே விரும்பினார்கள்

மார்ச் 21

“மேன்மையான பரம தேசத்தையே விரும்பினார்கள்.” எபி. 11:16

மேலான தன்மையே அல்ல மேலான நிலைமையை அல்ல. மேலான தேசத்தையே விரும்பினார்கள். முற்பிதாக்கள் விரும்பினது இதுதான். அப்போஸ்தலரும் இதையே நாடினார்கள். எந்த உண்மை கிறிஸ்தவனும் இதைத்தான் நாடுவான். நாமும் மேலான பரம தேசத்தை நாடுகிறோமா? ஒரு நித்திய தேசம் நமக்குண்டு. அது வேதத்தில் நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது. இயேசுவை விசுவாசித்து மரண பரியந்தம் உண்மையாயிருக்கிற யாவருக்கும் அது வருத்தம் இல்லை. துன்பம் இல்லை, கண்ணீர் இல்லை, கவலை இல்லை. அது இளைப்பாறும் இடம். அந்த மேல் வீட்டில் அன்பு நிறைந்திருக்கும். சத்துருக்கள் இல்லை. பாவம் செய்யும் மனிதனும் மாய்மாலம் நிறைந்த கிறிஸ்தவர்களும் அங்கே இல்லை. பொறாமையுள்ள சகோதரர் அங்கு இல்லை.

அது பூரண அன்பும் இடைவிடாத துதியும் நிறைந்த ஓரிடம். அங்கே எல்லாரும் தேவனை நேசிப்பார்கள், தேவன் எல்லாரையும் நேசிப்பார். ஒவ்வொருவரும் பிறரை நேசிக்கும் ஸ்தலம். அது பரிசுத்தம் நிறைந்த வீடு. அங்கே பாவமில்லாததால் ஒவ்வொருவரும் இயேசுவைப்போலவே இருப்பார்கள். எங்கும் எப்போதும் மகிழ்ச்சிப் பரவசம், பரிசுத்தம், கலக்கமற்ற ஆறுதல்தான் அங்கு உண்டு. அங்கே இயேசுவை முகமுகமாய் பார்க்கலாம். அங்கே தேவன் தமது மகிமையை வெளிப்படையாகக் காண்பிக்கிறார். நமது ஆசைகளெல்லாம் நிறைவேறும் இடம் அது. எல்லா ஆத்துமாவும் மகிமையின் நிறைவுப்பெற்று பொங்கி வழியும். அதுN நமது நித்திய உண்மை தேசம். ஆத்துமாவே நீ அதை வாஞ்சிக்கிறாயா? அதுவே உனக்கு போதும் என்று நினைக்கிறாயா? கர்த்தருடைய ஜனங்களுக்கு இருக்கும் இளைப்பாறுதல் அதுவே.

வரும் மகிழ்ச்சி கண்டு
பயம் அகற்றுவோம்
தேவன் நம் சொந்தமென்று
கண்ணீரைத் துடைப்போம்.

எப்போதும் கர்த்தருடனே கூட இருப்போம்

மார்ச் 12

“எப்போதும் கர்த்தருடனே கூட இருப்போம்.” 1.தெச. 4:17

தேவன் உலகத்தாருக்குத் தம்மை வெளிப்படுத்துவது போலில்லாமல், தமது ஜனத்திற்கு வேறுவிதமாய் வெளிப்படுத்துகிறார். இப்படி அவர் தமது ஜனங்களைச் சந்திப்பது எத்தனை இனிமையாயிருக்கிறது. அப்படி அவர் நமக்கு வெளிப்படுத்துவது நமது விசுவாசத்தை உறுதிப்படுத்துகிறதாயிருக்கிறது. சந்தோஷத்தை வளர்க்கிறதாயுமிருக்கிறது. இன்னும் கொஞ்ச காலத்தில் நம்மை தமது பரம வீட்டிற்கு கொண்டு போக திரும்ப வருவார். ஒருவேளை அதற்கு முன்னே நமக்கு மரணத்தை அனுப்பினாலும் அனுப்பலாம். நாம் சரீரத்தை விட்டு பிரிந்து போய் கிறிஸ்துடன் இருக்க வேண்டியது வரும். நமது நிகழ்காலத்தைவிட அதுவே மிகவும் நல்லது. அப்படியேயானாலும் அவர் சீக்கிரம் வந்து நம்முடைய சரீரங்களைக் கல்லறையினின்று எழுப்பி நமது ஆத்துமாவையும், சரீரத்தையும் அவருடைய சாயலுக்கு ஒப்பாக்கும்போது, நாம் ஆகாயத்தில் அவரைச் சந்திக்கக் கொண்டுபோகப்பட்டு எப்போதும் கர்த்தரோடிருப்போம். இதுதான் நமக்கு மோட்சம். இதுதான் நமது பங்கு. நாம் அவரைப்போல அவராடிருப்போம். நமது இப்போதைய நிலைக்கு அது வித்தியாசமானது. இது அதிக மகிமையான காட்சி.

என்றைக்கும் கர்த்தரோடிருப்பதில் அடங்கா மகிமை உண்டு. எப்போதும் அவரோடிருப்பதில் துன்பமும் இல்லை. மகிமையைக் குறித்து தியானித்து, சந்தோஷம் நிறைந்த இந்த மாறுதலை நோக்கி பார்த்துக்கொண்டே இந்த நாளை முடிப்போமாக. இனி வருத்தத்தையும் துன்பத்தையும் பார்ப்பது சரியல்ல. நான் சீக்கிரம் கர்த்தரோடிருப்பேன் என்று சொல்லுவோம்.

என்றும் தேவனோடிருப்பது
ஆனந்த மகிழ்ச்ச
அதுவே பேரின்ப வாழ்வு
இதுவே நித்திய பேறு.

சத்தியத்தை அறிவீர்கள்

மார்ச் 09

“சத்தியத்தை அறிவீர்கள்.” யோவான் 8:32

கிறிஸ்துவானவர் நமக்கு போதிக்கிறவரானால், நாம் பிள்ளைக்குரிய குணத்தோடும் கற்றுக்கொள்கிற மனதோடும் இருப்போமானால் சத்தியத்தை அறிந்துக்கொள்வோம். சீயோன் குமாரர்களும் குமாரத்திகளும் கர்த்தரால் போதிக்கப்படுகிறார்கள். தேவ போதனையைக் கேட்கிற எவரும் கிறிஸ்துவில் வளருவர். இயேசுவிடம் வருகிற எல்லாரும் இரட்சிப்புக்கேற்ற ஞானம் பெற்று சத்தியத்தை அறிந்து கொள்வர். கிறிஸ்துவுக்குள் சத்தியம் இருக்கிறது. அதன் மையம் அவர்தான். அவர் வசனத்தை நம்பி, அவர் பலிபீடத்தின்மேல் சார்ந்து அவருடைய சித்தத்தை அப்படியே செய்யும்போதுதான் அவரை அறிந்துக்கொள்ளுகிறோம். அவரை அறிந்துக்கொள்ளுகிறதே சத்தியத்தை அறிந்து கொள்வதாகும்.

சத்தியம்தான் நம்மை விடுதலையாக்கும். அது அறியாமையிலிருந்தும், தப்பெண்ணத்தினின்றும், புத்தியீனத்தினின்றும், துர்போதகத்திலிருந்தும் நம்மை விடுதலையாக்கும். சாத்தானுடைய அடிமைத்தனத்தினின்றும், நியாயப்பிரமாணத்தினின்றும் பொடுமையிலிருந்தும், அது நம்மை தப்புவிக்குpறது. பாவத்தின் குற்றத்தினின்றும் குற்ற மனசாட்சியினின்றும் அது நம்மை விடுவிக்கிறது. தேவனைப்பற்றி உண்மையான அறிவை நமக்குப் புகட்டி, சமாதானத்தையும் ஒப்புரவாகுதலையும் நமக்குத் தெரியப்படுத்துகிறது. நாம் கிறிஸ்துவின் சத்தியத்தை அறிவோமானால் உலகத்தை ஜெயிப்போம். பரம இராஜ்யத்தில் பிரவேசிப்போம். தேவ சமாதானம் பெற்று அவர் சித்தம் செய்வோம்.

தேவ பக்தியே நமது ஆனந்தம்.
கர்த்தாவே நீர் போதிக்கும்போது
பாவம் அற்றுப்போவதால்
உமதாவியில் நடத்திடும்.
கிருபையால் என்னைப் பிரகாசியும்.

கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்து

மார்ச் 17

“கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்து.” 1.நாளா. 16:29

தேவன் தமது நாமத்தை அவருடைய வல்லமையான கிரியைகள் எல்லாவற்றின் மேலும், அன்பான ஈவுகள் எல்லாவற்றின் மேலும் தயவாய் மாட்சிமையாய் வரைந்திருக்கிறார். தேவ நாமத்தை நாம் நன்கறிய வேண்டும். அதிலும் சுவிசேஷத்தை ஆராய்ந்தறிய வேண்டும். தேவன் தமது நாமத்தை, பாவங்களைக் குணமாக்குதலிலும், நீதிமான்களாக்கப்படுவதிலும், பரிசுத்தவான்களாக்கப்படுவதிலும், மகிமைப்படுத்துவதிலும் வரைந்திருக்கிறார். தமது மகிமையான தன்மைகளையும், குணநலன்களையும் விளக்கி வெளிப்படுத்துகிறார். தேவன் தமது நாமத்தை தம்முடைய வசனத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார். அதை உபதேசங்களிலும், வாக்குத்தத்தங்களிலும், கட்டளைகளிலும், இனி வெளிப்படப்போகிற காரியங்களிலும் நாம் வாசிக்கிறோம்.

யேகோவாவின் நாமத்தை நாம் சரியானபடி வாசித்து அறிவோமானால், ஆச்சரியத்தோடும் நிரப்பப்படுவோம். அப்படி நிரப்பப்படும்போது நமது ஜெபங்களிலும், துதிகளிலும், நடக்கைகளிலும் அவரை மகிமைப்படுத்துவோம். அவருடைய நாமத்திற்குரிய பிரகாரம் அவரை மகிமைப்படுத்த நமது திறமைகளும், காலமும் போதவே போதாது. அவரை மகிமைப்படுத்துவது நமது கடமை. இருதயம் மட்டும் சுத்தமாய் இருக்குமானால் அது நமக்கு இனிமையாய் இருக்கம். நாம் அடிக்கடி தேவமகிமையை அசட்டை செய்கிறோம். தேவனுக்குரியதை நாம் செலுத்தாமல் போவதால் ஆத்துமாவுக்கரிய ஆறுதலை நாம் அனுபவிக்க முடியாமல் இருக்கிறோம். அவரு நாமத்திற்கரிய மகிமையை அவருக்குச் செலுத்த நாம் கற்றுக்கொள்வோமாக.

வான் கடல் பூமி யாவும்
உம் நாமம் துதித்து போற்றும்
உமது நாமம் கற்போம்
அப்போது ஞானிகள் ஆவோம்

நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ?

மார்ச் 08

“நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ?.” யோவான் 6:67

ஆண்டவர் இயேசு இந்தப் பூமியில் இருந்தபோது, அவருடைய சீஷர்கள் அவரை விட்டுப் பின்வாங்கி போய்விட்டார்கள். அதேப் போல பலர் இந்நாளிலும் அவரை விட்டுப்போய்விட மனதுள்ளவர்களாயிருக்கிறார்கள். அநேகர் லோத்தின் மனைவிப்போல திரும்பிப் பார்க்கிறார்கள். பெத்தேலிலிருந்து வந்த தீர்க்கதரிசியைப்போல் சோதனைக்கு இடங்கொடுத்து விடுகிறார்கள். எத்தனைப் பேர் தோமைவைப்போல ஆண்டவரை நேசித்து பிறகு விசுவாசத்தை விட்டு போய்விடுகிறார்கள். ஆனால் நீங்களோ இளைப்பாறுதலில் பிரவேசிக்கும்வரை அவரை விட்டு பின் வாங்கவே கூடாது என்று தீர்மானியுங்கள்.

இயேசுவை விட்டுப் போகிறது பின்மாறிப்போகிறது ஆகும். இது ஒளியைவிட்டு இருளுக்கும், நிறைவை விட்டு குறைவுக்கும், பாக்கியத்தை விட்டு நிர்ப்பந்தத்துக்கும், ஜீவனை விட்டு மரணத்திற்கும் செல்வதாகும். கிறிஸ்துவை விட்டு போனால், வேறு யாரிடம் போவோம்? உலகமும் அதில் உள்ள பொருள்களும், நிலையான ஆத்துமாவுக்கு சமமாகாது. நம்மில் சிலர் நான் தேவ பிள்ளை என்று சொல்லி உலகத்தை இச்சித்து அதன்பின் சென்று விடுவதால் பின்வாங்கிப் போகிறோம் என்று அறியாதிருக்கிறோம். எச்சரிக்கையாயிருங்கள். எப்போதும் நாம் விழித்திருக்க வேண்டும். தேவனைவிட்டு விலகுகிறோமா என்று எல்லா காரியங்களிலும் சோதித்துப் பார்க்க வேண்டும். தன்னை நிற்கிறவன் என்று சொல்லுகிறவன், தான் விழாதபடி எச்சரிக்கையாயிருக்கடவன்.

ஒரு நிமிஷமாவது இரட்சகரை விட்டு பரிந்து போவதற்கு வழியே இல்லை. அவரை விட்டு பின் வாங்கிப் போவது புத்தியீனம். அவருடைய நியமங்களை அசட்டை செய்வது தவறு. அவருக்கு முதுகைக் காட்டுவது துரோகம். ஆத்துமாவே உன்னையும் பார்த்து, நீ என்னை விட்டுப் போகிறாயா என்று அவர் கேட்கிறார்.

ஒன்றை தேவை என்றீரே
அதை எனக்குத் தாருமே
நான் உம்மை விட்டு,
ஒருபோதும் விலகாதிருக்கட்டும்.

நான் பொல்லாப்புக்குப் பயப்படேன்

மார்ச் 28

“நான் பொல்லாப்புக்குப் பயப்படேன்.” சங். 23:4

நான் கர்த்தருடையவனானால் ஏன் பயப்பட வேண்டும்? கர்த்தருக்கம் பயந்து நடந்தால் எதற்கும் பயப்பட தேவையில்லை. கர்த்தர் உன்னை எல்லா தீமைக்கும் விலக்கிக் காப்பார். ஒரு சோதனையும் வராமல் காப்பாரென்றல்ல. சோதனைகள் தீமையல்ல. நன்மைகள்தான். தீமையானவைகள் இரண்டுதான். ஒன்று பாவம், மற்றொன்று பின்மாற்றம். விசுவாசிகளுக்கு பாவம் மன்னிக்கப்பட்டு போயிற்று. அவர்கள் கிறிஸ்துவுடன் சிலுவையிலறைப்பட்டவர்கள். விசுவாசியின்மேல் அது ஆளுகை செய்வதில்லை. பின்மாற்றத்திற்கு விசுவாசிகள் வாழ்க்கையில் இடமில்லை. கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மை ஒன்றும் பிரிக்க முடியாது.

நமக்குள் இருந்து நம்மை நமத்த வேண்டியது பயமல்ல. அன்பே! திகிலல்ல, நம்பிக்கையே! கர்த்தர் நம்மைக் காக்கிறவர். அவர் நம்முடைய ஆத்துமாவைக் காக்கிறவர். நமக்கு கஷ்டங்களும், துன்பங்களும், பிசாசாலும், மனிதனாலும் வரலாம். வறுமையும் வியாதியும் நண்டாகலாம். மரணமும் நமக்குத்தீமை அல்ல. அதற்கும் நாம் பயப்பட தேவையில்லை. கிறிஸ்துவைப்பற்றி அவருக்காக அவரைப்போல நடப்போமாக. அப்போது மரிக்கும்போது கிறிஸ்துவுடன் இருப்போம். இங்கிருப்பதைவிட அங்கிருப்பதே நல்லது. சாவு நமக்கு ஆதாயமாகும். ஆகவே வாக்குத்தத்தத்தை உறுதியாய் பற்றிப்பிடித்து, இரத்தம் சிந்திய கிறிஸ்துவின் அருகே நடந்து, தேவனை மகிமைப்படுத்திய உயிரோடிருக்கும் நாளெல்லாம் பொல்லாப்புக்குப் பயப்படேன் என்று சொல்லுவோமாக.

கலங்காதே திகையாதே
இயேசுவுக்கு நீ சொந்தம்
உன்னை மோட்சத்தில்
சேர்ப்பதே அவர் ஆனந்தம்.

கர்த்தர் நன்மையானதைத் தருவார்

மார்ச் 31

“கர்த்தர் நன்மையானதைத் தருவார்.” சங். 85:12

நலமானது எதுவோ அதைக் கர்த்தர் நமது ஜனத்திற்குத் தருவார். நம்மை ஆதரிக்க உணவையும், பரிசுத்தமாக்க கிருபையையும், மகுடம் சூட்டிக்கொள்ள மகிமையையும் நமக்குத் தருவார். தலமானதை மட்டும்தான் தேவன் தருவார். ஆனால் நாம் விரும்பிக்கேட்கிற அநேக காரியங்களைத் தரமாட்டார். நலமானதைத் தருவார். தகுந்த காலத்திலதான் எந்த நன்மையையும் தருவார். கடைசியில் பெரிய நன்மைகளை நாம் பெற்றுக்கொள்ளத்தக்கதாக இப்போது நமக்கு நலமானதைத் தருவார். எந்த நன்மையும் இயேசுவின் கரத்திலிருந்தே வரும். அவர் தமது ஜனங்களுக்கு நன்மையைத் தருவார் என்வது அவருக்க் அவர்களுக்கம் இருக்கும் ஐக்கியத்தினால் உறுதிப்படுகிறது. அவர்களுக்கு இவர் பிதா. அவர்களுக்காக அவர் அளவற்ற அன்பையும் உருக்கமான கிருபையையும் வைத்திருக்கிறார். அது கிருபையினாலும் வாக்குத்தத்தத்தினாலும் உறுதிப்படுத்தப்படுகிறது.

தேவன் சத்துருக்களை நேசித்து சிநேகிதரைப் பட்டினிப்போடமாட்டார். அவர் நமக்குக் கொடுக்கும் நிச்சயம் நம் பொறுமையில்லாமையைக் கண்டிக்க வேண்டும். கர்த்தருக்குக் காத்திரு. ஜெபத்திற்கு அது உன்னை ஏவி எழுப்பட்டும். அவரிடம் நன்மையான காரியத்தைக் கேள். அது உன் விசுவாசத்தை வளரப்பண்ணும். அவரின் வார்த்தையை விசுவாசி. அது உனக்குத் திருப்பதியை உண்டாக்கு. தேவன் உனக்கக் கொடுக்கும் நன்மையில் திருப்பி அடையப்பார். அது உனக்குள் நம்பிக்கையை எழுப்பட்டும். எந்த நல்ல காரியத்தையும் கர்த்தரிடத்திலிருந்துப் பெற்றுக்கொள்ளப் பார்.

கர்த்தர் நன்மை தருவார்
மகிமை அளிப்பார்
தம்முடையோர்களுக்கு அதை
அவசியம் அளிப்பது நிச்சயம்.

Popular Posts

My Favorites

கிறிஸ்துவினுடைய அடிமை

டிசம்பர் 19 "கிறிஸ்துவினுடைய அடிமை" 1.கொரி.7:22 கிறிஸ்துவின் பிள்ளை ஒவ்வொருவனும் அவருக்கு அடிமைதான். இயேசுநாதர்தான் அவனுக்கு எஜமான். இவர்கள் கீழ்ப்படியவேண்டுமென்று கூறுபவை வேதவசனங்கள் ஆகிய சட்டங்கள். இச்சட்டங்களுக்கு எல்லாம் கீழ்ப்படிய வேண்டியதே. அவ்வாறு கீழ்ப்படிவது அவருடைய...