நேசம் மரணத்தைப்போல் வலிது

மே 26

“நேசம் மரணத்தைப்போல் வலிது.” உன். 8:6

மரணம் யாவரையும் சந்திக்கக் கூடியது. ஞானமுள்ளவனும்¸ பலசாலியும்¸ தைரியஸ்தனும்¸ பரிசுத்தன் யாவருமே மரணத்தின் வாசலைத் தாண்டியர்வகள். அது எல்லாரையும் கொன்று உலகத்தைப் பெரிய கல்லறையாக்கி விட்டர். அன்பும் மரணத்தைப்போல் வலியதுதான். இது சகலத்தையும் வென்று விடுகிறது. இயேசுவின் நேசமோ அனைத்திலும் பெரியது. இது மரணத்தை ஜெயித்துப் போட்டது. இயேசு நமது பேரிலும் அப்படிப்பட்ட அன்பை வைத்திருக்கிறார். நான் உங்களை நேசிக்கிறேன் என்கிறார். ஒருவன் தன் சிநேகிதனுக்காக தன் ஜீவனைக் கொடுக்கும் அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலும் இல்லை.

அவர் நமக்கு ஈந்த ஈவுகளாலும்¸ நம்மைச் சந்திக்க வந்தாலும்¸ நமக்காக அவர் விட்ட கண்ணீராலும்¸ அவர் செய்த கிரியையாலும் நமக்காக அவர் சகித்த துன்பங்களாலும்¸ அடைந்த மரணத்தினாலும்¸ நமக்காக அவர் கொண்ட வாஞ்சையினாலும்¸ எப்பொழுதும் நமக்காக அவர் செய்யும் வேண்டுதலினாலும் அவருடைய அன்பு எவ்வளவு வலமையுள்ளதென்று காண்பித்திருக்கிறார். அவருடைய அன்பு அனைத்து வருத்தங்களையும் மேற்கொண்டு¸ எல்லா விரோதங்களையும் ஜெயித்து¸ எல்லா சத்துருக்களையும் அழித்து¸ தெய்வீகத்துக்குரிய மகிமை நிறைந்த விளக்காகப் பிரகாசிக்கிறது. அவருடைய அன்பு அழிந்துப்போகாது. நம்முடைய அறிவுக்கு எட்டாதது. கிறிஸ்துவின் அன்பு இவ்வாறு ஆச்சரியமுடையதாயிருப்பினும்¸ வலிதும் மகிமையுள்ளதாயிருப்பினும்¸ அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமாயிருக்கிற நம்மீது மறவாமல் இருக்கிறதென்று நினைவோடு இந்த இராத்திரி படுக்கப்போவோமாக.

கர்த்தாவே ஏழை என்னையும்
எவ்வளவாய் நேசித்தீர்
என் இதயம்¸ அன்பு¸ ஜீவன்
யாவையும் அங்கீகரிப்பீர்.

நீங்கள் எல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்

மே 25

‘நீங்கள் எல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.” கலா. 3:28

கிறிஸ்தவர்கள் எல்லாரும் கிறிஸ்துவில் ஒன்றாய் இருக்கிறார்கள். தேவ பிள்ளைகளின் ஐக்கியத்திற்கு அவர்தான் மையம். நாம் எல்லாரும் அவரில் தெரிந்துக்கொள்ளப்பட்டோம். அவர் ஒருவரே நம் எல்லாருக்கும் தெய்வம். அவரோடு ஐக்கியப்பட்டு ஜீவனுள்ளவர்களாய் இருக்கிறோம். ஏனெனில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைத் தரித்துக் கொண்டோம். இனம்¸ வயது¸ அந்தஸ்து என்ற வேறுபாடுகளே இல்லை. எல்லாரும் வரப்போகிற அதே சிலாக்கியங்களை¸ இன்பங்களை¸ நன்மைகளைச் சுதந்தரிக்கப் போவதால் கிறிஸ்துவில் ஒன்றால் இருக்கிறோம். வயதிலே வித்தியாசம் இருந்தாலும் ஒரே குடும்பம்தான். பலவைத் தொழுவங்களிருந்தாலும் மந்தை ஒன்றுதான். வௌ;வேறு கற்களாக இருந்தாலும் கட்டப்படும் கட்டடம் ஒன்றுதான். பலவித ஆலயங்களும் அலுவல்களும் இருந்தாலும் ஒரெ சரீரம்தான். பல இடங்களில் சிதறிக்கிடந்தாலும் சபை ஒன்றுதான். இயேசு தம் சொந்த இரத்தத்தால் சம்பாதித்த ஒரே மணவாட்டிதான்.

ஆகவே நாம் எல்லாரும் கிறிஸ்துவுகள் ஒன்றாய் இருக்கிறது உண்மையானால்¸ சகோதரரைப்போல் ஒருவரை ஒருவர் நேசித்து சில வேளைகளிலாவது ஒன்று கூடி உணவருந்தி¸ உத்தம அன்பால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருக்க வேண்டும். சரீரத்தின் அவயவங்களைப்போல் ஒன்றுபட்டிருப்போம். எவ்விதத்திலும் வித்தியாசமி;ன்றி அனைத்திலுமே ஏக சிந்தையாய் இருக்க வேண்டும். இட வித்தியாசமானாலும்¸ காரிய போதனைகளினாலும் வேறு பட்டிருந்தாலும் கிறிஸ்துவுகள் அனைவரும் ஒன்றாய் இருக்க வேண்டும். நம்முடைய மேன்மையிலும்¸ நற்காரியங்களிலும் ஒருவரிலொருவர் சந்தோஷப்பட வேண்டும். அன்பர்களே¸ நாம் ஒவ்வொரு கிறிஸ்தவனையும்¸ கிறிஸ்துவிலிருக்கிறவனாக எண்ணி கிறிஸ்துவின் சரீரத்தின் அவயவமாகப் பாவித்து¸ அதற்கேற்றவாறு நடந்துகொள்ளுவோமாக.

கர்த்தாவே எங்கள் இதயத்தை
ஒன்றித்து வளர்ப்பியும்
உம்மைப்போல் இருப்போம்
அன்பில் வளருவோம்.

எக்காலமும் அவரை நம்புங்கள்

மே 27

“எக்காலமும் அவரை நம்புங்கள்.” சங் 62:8

எப்பொழுதும் தேவனை நம்பலாமென்று நமக்குத் தேவனே தைரியம் கொடுக்கிறது மட்டுமல்ல¸ எக்காலத்திலும் நம்முடைய நம்பிக்கைக்கு அவர் பாத்திரர்தான். இப்படி எப்போதும் அவரை நம்பச் சொல்லியும் நாம் அவரை எப்போதும் நம்பாமல் போகிறோம். நாம் அவரை நம்புவது மிக அவசியம். சிருஷ்டியானது நம்பாமல் இருக்கலாமோ? அவரைச் சார்ந்திருக்கிறோம் எப்பதற்கு அது அத்தாட்சியானதால் அந்த நம்பிக்கையைப்பெற முயற்சி செய்ய வேண்டும். வேலைக்காரன் எஜமானை நம்ப வேண்டும். சிநேகிதன் சிநேகிதனை நம்ப வேண்டும். பிள்ளை தகப்பனை நம்பவேண்டும். விசுவாசி தேவனை நம்ப வேண்டும். அவருடைய வார்த்தை உண்மையானதால் அதை நம்ப வேண்டும். இரட்சகர் செய்த கிரியை பூரணமானதால் அதை நம்ப வேண்டும். தெய்வ செயலை நம்புவது நியாயமானதே.

அவர்மேல் நாம் வைக்கும் நம்பிக்கையை ஒன்றும் கலைக்கக்கூடாது. அவுருடைய தன்மை அன்பு. அன்புகூற அவர் உடன்பட்டுள்ளார். அவர் பொக்கிஷம் குறையாதது. அவர் இரக்கம் என்றுமுள்ளது. ஆகையால் துக்கத்திலும்¸ சந்தோஷத்திலும்¸ அந்த காரத்திலும்¸ வெளிச்சத்திலும்¸ நிறைவிலும்¸ குறைவிலும்¸ சோதனையிலும்¸ அமைதியிலும் அவரை நாம் நம்புவோமாக. அவரை நம்பினால் பயங்களை ஜெயிப்போம். துன்பங்களைச் சகிப்போம். வேலையில் காரியசித்திப் பெறுவோம். கவலைகளை ஒழித்து சத்துருக்களை விழத்தாக்குவோம். நாம் அவரை நம்பும்படிக்குதான் தம்முடைய குணாதிசயங்களை வெளிப்படுத்தி¸ தம்முடைய வாக்கையருளியுள்ளார். நம்மீது கோபமாய் இரேன் என்று சொல்லி¸ தாம் மாறாதவர் என்று உறுதிமொழி சொல்லியிருக்கிறார். ஆகையால் என்றைக்கும் கர்த்தரை நம்புவோமாக.

எக்காலமும் கர்த்தாவே
உம்மையே நம்புவேன்
நீரே எனக்கு எல்லாம்
என்றும் உம்மில் மகிழுவேன்.

கர்த்தர் தம்முடையவர்களை அறிவார்.

மே 23

“கர்த்தர் தம்முடையவர்களை அறிவார்.” 2.தீமோ.2:19

தகப்பனுக்கு தன் பிள்ளை தெரியும். அன்பு கணவன் தன் ஆசை மனைவியை அறிவான். அப்படியே கர்த்தர் தம்முடையவர்களை அறிவார். தம் நேசமான பொருளாக¸ தம் குமாரன் இரத்தத்தினால் வாங்கப்பட்டவர்களாகவும்¸ பரிசுத்த ஆவியின் ஆலயமாகவும் அவர்களை அறிவார். பூமியிலே அவர்கள் பரதேசிகளும் அந்நியருமானவர்கள். ஆகவே அவர்களை அறிவார். தம்முடைய பிள்ளைகளை தேவன் ஆராய்ந்து அறிந்திருக்கிறார். உலகத்தார்¸ அவர்கள் தலைமேல் ஏறும்படி அனுமதித்தாலும்¸ தீய்க்கும் தண்ணீருக்கும் அவர்களை உள்ளாக்கினாலும் அவர்களை அறிவார்.

தம்மை யாரெல்லாம் நேசிக்கிறார்கள் என்றும்¸ இன்னும் அதிகம் நேசிக்க முடியவில்லையே என்று ஏங்குகிறவர்களையும் அவர் அறிவார். விசுவாசத்தால் போராடி¸ விசுவாசம் பெலவீனமாய் இருக்கிறதே என்று மனவேதனைப்படுகிறவர்களையும் அவர் அறிவார். பயமும்¸ திகிலும் அலைக்கழித்து கொந்தளித்தாலும்¸ தம்மை அவர்கள் நம்பியிருக்கிறார்களே என்று அவர் அறிவார். தம்முடைய வழிகளுக்குக் கீழ்ப்படிந்து கற்பனைகளை எப்போதும் கைக்கொண்டால் நலம் என்று பெருமூச்சு விடுகிறவர்கள் என்று அவர்களை அறிவார்.

அன்பர்களே¸ கர்த்தர் உங்களைத் தம்முடையவர்கள் என்று அறிந்து¸ தமது சொந்தப் பிள்ளைகளென்று நேசித்து¸ தாம் தெரிந்துக் கொண்ட மணவாட்டியாக உங்களுக்காக கவலைப்பட்டு¸ தம் மந்தையின் ஆடுகளாக உங்களை மேய்த்து¸ கண்ணின் கருவிழிப்போல் புடமிட்டு நல் ஆபரணங்களாக உங்களைப் பத்திரப்படுத்தி தம்முடைய கிரீடத்தின் இரத்தின கற்களாக உங்களைப் பூரணமாய் அறிந்திருக்கிறார்.

தேவனே உமது பக்தரெல்லாம்
உமக்கே எவ்வளவு அருமை
உமது நாமம் தரிசித்தோர்
பெற்றுக் கொள்வார் மகிமை.

Popular Posts

My Favorites