Home Blog Page 45

கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்

ஜனவரி 20

“கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்.” நீதி. 2:6

ஞானத்தைத் தருமுன்னே அது நமக்குத் தேவை என்று, அதன் மேல் வாஞ்சைக்கொண்டு அவருடைய பாதத்தருகில் அமர்ந்து கருத்தாய் கேட்கவேண்டும். நாம் பயபக்தியாய் நடக்கவும், சோதனைகளை வெல்லவும், தேவனுடைய பண்ணையில் செம்மையாய் வேலை செய்யவும் நமக்கு ஞானம் வேண்டும். அவருடையவர்களாகிய நமக்குச் சரீரத்திலும், ஆவியிலும், ஆத்துமாவிலும் தேவனை மகிமைப்படுத்தவும், அவரைச் ஸ்தோத்தரிக்கவும் ஞானம் தேவை. நமக்கு தேவையான ஞானத்தைக் கிரியையினாலல்ல, ஜெபத்தினால் பெற்றுக்கொள்ளலாம். அது நம்மால் உண்டாவதல்ல. தேவனே இதைக் கொடுப்பேனென்று வாக்களித்துள்ளார்.

“உங்களில் ஒருவன் ஞானத்தில் குறை உள்ளவனாக இருந்தால் யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும், ஒருவரையும் கடிந்துக் கொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன். அப்போது அவனுக்குக் கொடுக்கப்படும். ஆனால் அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன்.’ தேவன் செய்வார் என்று நாம் விசுவாசித்து அதை அவரிடத்தில் கேட்க வேண்டும். அவர் பொய் சொல்லா உத்தமர். ஆகவே, கொடுப்பார். தேவன் கொடுக்கும் ஞானம் மகா மேன்மையுள்ளது, பயனுடையது. முக்கியமான பிரசித்திப் பெற்றது. பரத்திலிருந்து வரும் ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இரக்கமும் உள்ளதாயும், இரக்கத்தாலும், நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயும் இருக்கிறது.
நீ இரட்சிப்படைய ஞானியாக வேண்டுமா? ஆத்துமாக்களை ஆதாப்படுத்தும் ஞானியாக வேண்டுமா? பொல்லாப்பை வெறுத்து எல்லா நம்மைகளையும் பெற்றுக்கொள்ள ஞானியாக வேண்டுமா? அப்படியானால் தேவனிடத்தில் ஞானத்தைக் கேள். இப்பொழுதே கேள். கருத்தாய் கேள். விசுவாசத்தோடே கேள். அப்பொழுது உனக்குக் கொடுக்கப்படும்.

சாந்தம், தாழ்மை, சுத்தம்
இதோடு சேர்ந்த ஞானம்
எனக்களித்தால் அப்போ
உமக்கு பிரியனாவேனல்லோ?

கிறிஸ்துவுக்குஉடன் சுதந்தரருமாமே

ஜனவரி19

“கிறிஸ்துவுக்குஉடன் சுதந்தரருமாமே.” ரோமர் 8:17

கிறிஸ்துவோடுஇப்போது சம்பந்தப்பட்டிருப்பதால் எப்போதும் அவரோடு சுகந்தரர் ஆவோம். ஒரேகுடும்பத்தைச் சார்ந்த சகோதரர்களாய் மட்டுமல்ல மணவாட்டி மணவாளனோடுசுதந்தரவாளியாவதுப்போல் சுதந்தரம் ஆவோம். இயேசுவானவரே சகலத்துக்கும்சுதந்தரவாளியாக ஏற்படுத்தப்பட்டிருக்கிறார். நாமும் அவரோடு ஜக்கியப்பட்டிருக்கிறோம்.ஆதலால் தேவனுடைய சுதந்தரரும் கிறிஸ்துவுக்குள் உடன் சுதந்தரருமாமே. என்னே மகத்துவம்!எவ்வளவு பெரிய சிலாக்கியம். நாம் இரட்சிப்புக்குச் சுதந்தரர்.வாக்குத்தத்தத்துக்கும் சுதந்தரர். ஆதாமோடு சம்பந்தப்பட்டு குற்றத்துக்கும்நாசத்துக்கும் நிர்ப்பாக்கியத்துக்கும் உள்ளானோம். ஆனால் இயேசுவோடுநம்பந்தப்பட்டதால் நீதியம், சமாதானமும், நித்திய ஆசீர்வாதமும் நமக்குகிடைக்கிறது. இப்போது அவரோடு துன்பப்படுவோமானால், இன்னும் கொஞ்சகாலத்தில் அவரோடு மகிமையடைவோம். இப்போது துக்க பாத்திரத்தில் குடிக்கிறோம்.வெகு சீக்கிரத்தில் மகிழ்ச்சியின் பாத்திரத்தில் பானம்பண்ணுவோம்.

கிறிஸ்துவோடுநாம் சுதந்திரராயிருக்கிறோமா? கிறிஸ்து இயேசுவிலுள்ள விசுவாசத்தில் தேவனுடையபிள்ளைகளாயிருக்கிறோமா? நமது பரமபிதாவை மனமார நேசிக்கிறோமா? அவருக்கே கனமும்மகிமையும் உண்டாக வேண்டுமென்ற ஒரு பெரிய வைராக்கியம் நமக்கிருக்கிறதா? அவரின்பிரசன்னத்தின் சந்தோஷத்தை விரும்புகிறோமா? நேசரில்லாமல் வாழ்ந்தால்துக்கமும் துயரமும் நாம் அடைகிறோமா? தேவபிள்ளைகளோடு நல்ல ஐக்கியம் உண்டா? பாவத்தைப் பகைத்து பரிசுத்தம் வாஞ்சித்துஆனந்தம் கொள்ளுகிறோமா? அப்படியானால் கிறிஸ்துவானவர் நம்மைத் தம்முடையசகோதரர் என்கிறார். தேவன் நம்மைத் தம்முடைய பிள்ளைகள் என்கிறார். நாம்முன்குறிக்கப்பட்டு கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரருமாகும்படி தெரிந்துக்கொள்ளப்பட்டோம்.

தேவனுடையபுத்திரன்
சுதந்தரம்மகா பெரியது
தேவபிள்ளைகளுக்கு வரும் மகிமை
மகாபெரிய மகா இனிது.

கர்த்தரில் அன்பு கூறுகிறவர்களோ தீமையை வெறுத்துவிடுங்கள்

ஜனவரி 18

“கர்த்தரில் அன்பு கூறுகிறவர்களோ தீமையை வெறுத்துவிடுங்கள்.” சங்கீதம் 97:10

தெளிவான கடமைகளைக் குறித்து நமக்குப் புத்தி சொல்வது அவசியந்தான். ஏனென்றால் சில வேளைகளில் நாம் அவைகளை மறந்துபோகிறோம். அடிக்கடி கவலையுற்று வெதுவெதுப்பான சிந்தனைகளுக்கு இடங்கொடுத்து விடுகிறோம். நாம் கர்த்தரை நேசிப்பது உண்மையானால் அவரின் ஜனங்ளை நேசிப்போம். அவருடைய நியமங்களையும் அவருடைய சுவிசேஷத்தையும் நியாயப்பிரமாணத்தையும் நேசிப்போம். நமக்குச் சேதமுண்டாக்குகிறதைத்தான் அவர் விலக்குகிறார் என அறிந்து, அவரின் வாக்குத்தத்தங்களையும் நேசிக்கிற அளவிலேயே அவர் வேண்டாமென்று விலக்குகிறதையும் நேசிப்போம். இந்த நாளில் தாவீதைப்போல் ‘நான் உம்முடைய பிரமாணத்தை எவ்வளவாய் நேசிக்கிறேன். நாளெல்லாம் அது என் தியானம்’ என்று நாம் சொல்ல முடியுமா?

தேவபிரமாணம் தீமையான யாவையும் விலக்குகிறது. ஆகவே நாம் தேவ சித்தத்திற்குக் கீழ்ப்படிந்து பாவத்தையும், தீமையையும் அவர் வெறுக்கிற விதமாகவே வெறுத்து விலக்குவோமாக. தீயநினைவுகளை எதிர்த்துப் போராடுவோமாக. கெட்ட வார்த்தைகளை விலக்கி கடிவாளத்தினால் வாயை காப்போமாக. கெட்ட செய்கையை விலக்கி பொல்லாப்பாய் தோன்றுகிறதைவிட்டு விலகுவோமாக. இருதயம் பொல்லாங்குள்ளதும் அதிக கேடானதுமானது. எல்லா பொல்லாங்குகளும் அதிலிருந்து வருகிறது. முக்கியமாய் தேவனை விட்டு விலகுகிற அவிசுவாசமுள்ள இருதயத்தைப்பற்றி எச்சரிக்கையாய் இருப்போமாக.

நண்பரே! தீமையைப் பகைக்க உனக்கு மனதிருக்கிறதா? அப்படியானால் தேவனோடு நெருங்கி பழகு. அப்போது பரிசுத்த வாழ்வு உனக்குச் சுலபமாகிவிடும். அப்போது எந்தப் பொல்லாப்பையும் வெறுத்துத் தள்ளுவாய். கர்த்தரின் தாசர்களே, பொல்லாப்புக்கு முழு மனதோடு பயப்படுங்கள். யாவரோடும் சமாதானமும் பரிசுத்தமாயுமிருங்க நாடுங்கள். பரிசுத்தமில்லாமல் ஒருவனும் தேவனைத் தரிசிக்க முடியாதே.

நேச பிதாவே உம்மில்
எனக்கு எல்லாம் சொந்தம்
என்னையும் தந்தேன் உமக்கு
இதுவே எனக்கானந்தம்.

உம்முடைய ஜனங்கள் மனப்பூர்வமுள்ளவர்களாயிருப்பார்கள்

ஜனவரி 17

“உம்முடைய ஜனங்கள் மனப்பூர்வமுள்ளவர்களாயிருப்பார்கள்.” சங்கீதம் 110:3

எந்த மனுஷனும் தன் சுயமாய் இரட்சிப்படைந்து கிறிஸ்துவிடம் வரமாட்டான். இரட்சிக்கப்படவும் மாட்டான். கிறிஸ்துNவே தேவகிருபையால் ஒவ்வொருவரையும் இரட்சிக்கிறார். மனுஷ சுபாவம் குருட்டுத்தனமுள்ள, பெருமையுள்ளது. ஆனால் இரட்சிக்கப்பட வேண்டும் என்ற எண்ணமோ தேவனால் உண்டாகிறது. தேவ போதனையால்தான் எவரும் பரிசுத்தம் பெறமுடியும். நாமும் மனதிலும் நடக்கையிலும் பரிசுத்தமாக்கப்பட வாஞ்சைக்கொண்டு பரிசுத்தாவியானவரின் போதனையில் தினந்தோறும் நடக்கவேண்டும். இப்படி ஒரு பாக்கியமான அனுபவம் கிடைப்பது எத்தனை கிருபை. நாம் சுபாவத்திலே நல்லவர்களாயும் மனதிலே பரிசுத்தமாயும் இருக்க இதுவே காரணம். அறிவினாலே நல் உணர்ச்சியும், நல் விருப்பமும், நற்கிரியையும் நம்மில் உண்டாகிறது என்று நாம் நினைக்கிறோம். இல்லை, கர்த்தரின் வல்லமையினால்தான் நாம் நல்மனமுடையவர்களாயிருக்கிறோம். இந்த வல்லமை நமது மனதிலும் சுபாவத்திலும் இரகசியமாய்ச் செயல்படுகிறபடியால் நமக்கு அது தெரிகிறதில்லை.

தேவன் உன்னைத் தம்முடைய கிருபையில் அழைத்திருக்கிறார் என்பதைப்பற்றி நீ சந்தேகம் கொள்கிறாயா? அப்படியானால், கெட்டுப்போன ஏழைப்பாவியாகிய இயேசுவினால் இரட்சிக்கப்பட எனக்கு மனமிருக்கிறதா? பாக்கியவானாக மட்டுமல்ல, பரிசுத்தமாக்கப்படவும் எனக்கு வாய்சையிருக்கிறதா? இரட்சிக்கப்பட மாத்திரமல்ல பிரயோஜயமுள்ளவனாயிக்கவும் வேண்டுமென்று ஜெபிக்கிறேனா? நீயே உன்னை சோதித்துப்பார். அப்படி செய்வாயானால் நீ கர்த்தரின் பிள்ளைதான். அவர் தமது வருகையின் நாளில் நீ தைரியமாய் சந்திக்கும்படி உன்னை மாற்றியிருக்கிறார்.

இரட்சிப்படைய வாஞ்சையுண்டு
உமது முகம் காட்டுமே
சுத்தனாக ஆசையுண்டு
என்னில் கிரியை செய்யுமே.

சுகந்தான்

ஜனவரி 16

“சுகந்தான்” 2.இராஜா. 4:26

இப்படிச் சொல்லக்கூடிய நேரங்கள் எத்தனை பாக்கியமுள்ள நேரங்கள். நாம் கிறிஸ்துவுக்குள் இருந்தால் அவர் நீதியால் உடுத்தப்பட்டு அவர் அப்பத்தை உட்கொண்டிருப்போமானால் சுகந்தான். ஏனென்றால் நமது பாவங்கள் தொலைந்துப் போயிற்று. பரிசுத்த ஆவியானவர் நம்முடைய இருதயத்தில் வாசம்பண்ணுகிறார். தேவன் தமது அளவற்ற நேசத்தால் நம்மை நேசிக்கிறார். நமது பேர் ஜீவ புத்தகத்தில் இருக்கிறது. ஆகவே நமக்குச் சுகந்தான்.

நமது வாழக்கை ஆண்டவர் கரங்களில் இருக்கிறது. நாம் தேவனோடு ஒப்புரவாக்கப்பட்டிருக்கிறோம். நம்முடைய நாள்கள் மந்தாரமாயிருந்தாலும் நித்திய வெளிச்சமாய் கர்த்தர் உதிப்பார். நமது துக்க நாள்கள் முடிந்துப்போம். தேவ செயல்கள் நமக்கு விரோதமாய் இருப்பதுப்போல் தெரியும். சரீரத்திற்குரிய துன்பங்கள் பரமநன்மைகளை நமக்கு துயரத்திலிருக்கும்Nபுhது தேற்றுகிறது. சாத்தான் நம்மை மலைமேலேற்றி குருவியைப்போல் வேட்டையாடலாம். தேவனோ அவனை நமது காலடிகளுக்கு கீழே நசுக்குவார். ஏனென்றால் தேவன் நமது பிள்ளைகளைப் பரிசுத்தமாக்கி, மகிழ்வித்து அவர்கள் சுகமாய் வாழ அனுகூலமாக்குகிறார்.

நமது இருதயம் வெறுமையாய் அமைதியாய் இருக்கலாம். தேவனோடு அதிலும் சுகம் கொடுக்க சித்தங்கொள்ளுகிறார். தேவ சுகத்தை பெற்றுக்கொள்ள முடியாதபடி நமதுஆவியில் பெருமையும், அகந்தையும் வராமல் இருக்கலாம், இயேசு கிறிஸ்துவின் முடித்த கிருபையை நமக்கு அருமையாக்கவுமே தேவன் இதை அனுமதித்திருக்கலாம். புறம்பான காரியம் எப்படியிருந்தாலும் கர்த்தருக்கு பயப்படுகிறவர்களுக்குச் சகலமும் நலந்தான்.

பொய்பாவம் பொல்லா இதயமும்
உன்னைக் கெடுக்கப் பார்த்தாலும்
பிதாவின் அன்பு நிச்சயம்
ஆகவே எல்லாம் நலமே.

நாங்கள் அனைவரும் இலைகளைப்போல் உதிருகிறோம்

ஜனவரி 15

“நாங்கள் அனைவரும் இலைகளைப்போல் உதிருகிறோம்.”  ஏசாயா 64:6

மாறாத நித்திய தேவனுக்கும், இலையைப்போல வாடிவிடுகிற பாவிக்கும் எவ்வளவு வித்தியாசமிருகஇகிறது. நமது இம்மைக்குரிய வாழ்நாள் இப்படித்தான் பசுமையாய்ச் செழிப்பாய் இருக்கலாம். இன்னும் கொஞ்சம் காலத்தில் வாடி வதங்கி போகலாம். ‘ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன், வாழ்நாள் குறுகினவனும், சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான். அவன் பூவைப்போல் பூத்து அறுப்புண்டு, நிழலைப்போல் நிலைநிற்காமல் ஓடிப்போகிறான்’. இந்நிலை நம்மை எவ்வளவு மோசமாக்கி விடுகிறது. ஆயினும் அது நமக்குப் பிரயோஜனமே. நாம் சீக்கிரம் மாண்டுபோவது நிஜமா? ஆம்மென்றால், நமது வாழ்வில் நடக்கிற காரியங்களைக் குறித்து பெரிதாக எண்ணக்கூடாது. பூமிக்குரியவைகளைவிட்டு மேலானவைகளை நாடி, பரலோக பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கக்கடவோம்.

இயேசுவின்மேல் விசுவாசம் வைத்து, தேவனோடு சஞ்சரித்து, நாம் செய்யும் எல்லாவற்றிலும் அவரைப் பிரியப்படுத்தப்பார்ப்போம். நாம் உலகில்வாழும் நாள்வரையிலும் உலக சிந்தனைக்கு இடம் கொடாமல், பயபக்தியாய் கர்த்தர்முன் செலவழிக்கவேண்டும். சுகம், வியாதியாக மாறலாம். பலம் பலவீனமாய் மாறலாம். வாலிபம் வயோதிபமாகலாம். மரணப்படுக்கை சவப்பெட்டியாகலாம். நமக்கு முன்னே நமது கல்லறை தெரிகிறது. அதற்கு முன்னே நமது தெரிந்துக்கொள்ளுதலையும் அழைப்பையும் நிச்சயித்துக் கொள்வோமாக. தேவனோடு தேவ விள்ளைகளாக நெருங்கி வாழ்வோமாக. நாம் ஆழமாய்த் தோண்டி கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடுவோமாக. பிரியமானவரே, நமது வாழ்நாள்கள் குறுகினது. மகிமை நிறைந்த நித்தியம் நமக்கு முன்னே இருக்கிறது. நாம் எல்லாரும் இலைகளைப் போல் வாழப் போகலாம்.

நித்திய ஜீவ விருட்சம்
என் நம்பிக்கைக்கு ஆதாரம்
என்றென்றும் பசுமையாம்
இதன் இலை வாடாதாம்.

என் நடைகளை உமது வழிகளில் ஸ்திரப்படுத்தும்

ஜனவரி 14

“என் நடைகளை உமது வழிகளில் ஸ்திரப்படுத்தும்”  சங் 17:5

நமது பாவங்களும், தவறுகளும், நஷ்டங்களும், புத்தியீனங்களும் மன்னிக்கிற தேவனண்டையில் நம்மை நடத்த வேண்டும். தேவ வல்லமையையும் தேவ ஞானத்தையும் பெற்றுக்கொள்ள அதுவே சிறந்த வழி. முறிந்த வில்லைப்போல் பலவீனர்களாயிருக்கலாம். அநேகர் விழுந்தார்கள். அநேகர் விழலாம், அல்லது பின்வாங்கி போயிருக்கலாம். சோதனைகள் வரும்போது விழுந்துவிட கூடியவர்களாய் இருக்கலாம். சாத்தான் விழித்திருக்கிறான்.சோதனைகள் கடுமையாகி, நமது பலவீனமான வாழ்க்கையைச் சோதிக்கும்போது கர்த்தரிடத்தில் வந்து அவரை அண்டிக்கொள்வோம். அனுதினமும் என் நடைகளை உமது வழிகளில் ஸ்திரப்படுத்தும் என்று ஜெபிப்போமாக. எந்த வேளையிலும் சோதனையிலும் கொந்தளிப்பிலும், அமைதியான வேளையிலும் நம்முடைய நடைகளை அவர் ஸ்திரப்படுத்தவேண்டும்.

கர்த்தர் நம்மை தாங்கிவிட்டால் நாம் துணிகரத்தில் விழுந்துவிடுவோம். அல்லது அவிசுவாசத்தில் மாண்டு போவோம். சுய நீதியையும் பெலத்தையும் பாராட்டுவோம். அக்கிரமத்தில் விழுந்து பின்வாங்கி போவோம். இன்றுவரை கர்த்தர் நம்மை காத்தால்தான் நாம் பத்திரமாய் இருக்கிறோம். நமது பலவீனத்தையும் சுயத்தையும் அவரிடம் ஒப்படைத்து அவரின் பெரிய ஒத்தாசையை நாடும்போது அவரின் பெரிய பெலத்தைப் பெறுவோம். நம்மையும் உலகத்தையும் நம்பும்போது நாம் விசுவாசத்தைவிட்டு விலகி விடுவோம். மன தாழ்மையோடும் விசுவாசத்தோடும் அவரிடம் வரும்போது நமது பாதைகளைச் செம்மையாக்கி விசுவாசத்தில் நிற்கவும் பெலன் தருகிறார்.

அன்பானவர்களே, தேவ ஒத்தாசையை அனுதினமும் தேடாவிட்டால் சாத்தானால் ஜெயிக்கப்பட்டு மோசம் போவீர்கள். உங்களைப் பரிசோதித்துப் பாருங்கள். விழித்திருந்து ஜெபியுங்கள்.

சுத்த தேவ ஆவியே
சுத்தம் ஞானம் தாருமேன்
மோசம் அணுகும்போது
என்னைத் தாங்கும் அப்போது.

என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும்

ஜனவரி 13

“என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும்” மாற்கு 9:24

நம்முடைய விசுவாசம் பலவீனமுள்ளது. அவிசுவாசமோ மிகவும் பலமுள்ளது. தேவன் சொல்வதை நம்பாமல்போவது பாவத்தின் இயல்பு. வேத வாக்கியங்களை ஒரு கிறிஸ்தவன் முற்றிலும் நம்புகிறது நல்லது. சில வேளைகளில் தேவன் சொல்கிறது மிகவும் நல்லதாயிருக்கும்போது அது உண்மைதானோவென்று சந்தேகிக்க வேண்டியதாயிருக்கிறது. நாம் செய்த பாவங்களை நினைத்து, இவ்வளவு பெரிய மகிமையான காரியங்கள் நமக்குக் கிடைக்குமோவென்று சந்தேகம் கொள்ளுகிறோம். வேதம் சொல்லுகிறபடி, நல்ல தேவன் பெரிய பாவிக்கு பெரிய நன்மைகளை வாக்களிக்கிறார் என்று நம்புவது சுலபமல்ல. நாம் அவைகளை உறுதியாய் நம்பி, நமக்குச் சொந்தமாக்கி கொண்டு, நமக்குரியதாகச் சொல்லி ஜெபிக்கிறதும் அவ்வளவு எளிதல்ல. எங்கே துணிகரத்துக்கு இடங் கொடுக்கிறோமோ என்று பயந்து அவிசுவாசத்துக்குள்ளாகி விடுகிறோம். சாத்தான் சொல்வதைக் கேட்டு சந்தேகத்திற்கும் பயத்திற்கும் இடம் கொடுத்து விடுகிறோம். நான் சத்தியத்தை சொன்னால் ஏன் நம்புவதில்லையென இரட்சகர் கேட்கிறார். வாக்குத்தத்தம் உண்மைதானா? அது பாவிகளுக்குரியதா? கிருபையினின்று அது பிறந்திருக்கிறா? தேவ அன்பும் இரக்கமும் மேன்மை அடைய அது நமக்குக் கொடுக்கப்பட்டதா?

அப்படியானால் தேவ வார்த்தைகளை நம்பி பற்றிக்கொள்ளவும், தேவன் சொன்னபடியே செய்வாரென விசுவாசிக்கவும் வேண்டும். பாவங்களை நாம் எங்கே கொண்டுபோட வேண்டியதோ, அங்கே நம்முடைய அவிசுவாசத்தையும் கொண்டு போடவேண்டும். அவ்வாறு செய்ய முடியாவிடில் இயேசுவிடம்தான் கொண்டு போகவேண்டும். அதை அவரிடம் அறிக்கையிட்டு சீஷர்களைப்போல் ‘கர்த்தாவே எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணும்’ என்று கெஞ்சுவோமாக. அல்லது மேலே அந்த மனிதன் சொன்னதுபோல, ‘என் அவிசுவாசம் நீங்கும்படி உதவி செய்யும்’ என்று கேட்போம்.

பிழைகளெல்லாம் மன்னித்திரே
விசுவாசிக்க செய்யுமே
உம்முடையவன் என்று சொல்லி
முத்திரை என்மேல் வையுமே

மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தி

ஜனவரி 12

“மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தி”  லூக்கா 2:10

நம்மை மனம் நோகச் செய்யவும், அதைரியப்படுத்தவும், அநேக காரியங்கள் நம் உள்ளத்தில் இருக்கிறது. நம்மை துக்கப்படுத்த குடும்பத்திலும், சபையிலும் பல சோர்வுகளைக் கொண்டு வரலாம். இவ்வுலகம் நமக்குக் கவலையையும் கண்ணீரையும் கொண்டு வரும். ஆனால் சுவிசேஷமோ மிகுந்த சந்தோஷத்தைக் கொண்டு வரும். சுவிசேஷம் பெரிய ஒரு மேலான இரட்சகரை நமக்கு முன் நிறுத்துகிறது. இயேசு கிறிஸ்து மனுஷ ரூபமானபடியினால், மனிதர்களாகிய நமக்கு மனமிறங்கி தேவனிடத்தில் சகலத்தையும் பெற்றுத்தர கூடியவர். என் ஆத்துமாவே நீ ஏன் கலங்குகிறார்? ஏன் எனக்குள் தியங்குகிறாய் என உங்களுக்கு ஆறுதல் சொல்லிக் கொள்ளுங்கள்.

கிறிஸ்துவின் இரத்தத்தால் நம்முடைய பாவம் எல்லாமே பரிபூரணமாய் மன்னிக்கப்படுகிறது. அவர் தேவனுக்குக் கீழ்ப்படிந்தபடியால், நிறுத்தும்படி கிருபையை தமது நீதியால் உண்டாக்கிக் கொடுத்தார். அவர் பாவமில்லாதவரானபடியால், நமது பாவங்களை மன்னிக்க காத்திருக்கிறார் அவர் இரக்கமுள்ளவரானபடியால் நம்மீது எப்போதும் இரங்குகிற தேவனாய் இருக்கிறார். நாம் துன்பப்படும்போது தேற்றரவாளனால் உதவிட ஓடி வருகிறார். பாவிகளுக்கு இரட்சகராய் இருக்கிறார். பிதாவின் முன் பரிந்து பேசும் நேசராய் இருக்கிறார். பாவிகளை அழைத்து அவர்களைத் தம் இரத்தத்தால் கழுவி தமது இராஜ்யத்தில் சேர்த்துக் கொள்ளுகிறார். செய்திகளைச் சுபசெய்தியாக்குகிறதே சுவிசேஷம் தான். நம்மை சந்தோஷத்தில் நிரப்பும் அனைத்தும் நற்செய்தியில் இருக்கிறது.

இவ்வன்பை அளவிட முடியாது
நீளம் அகலம் அற்றது
ஆழம் உயரம் இல்லாதது
அளவிடப்பட முடியாதது.

என்னை இழுத்துக் கொள்ளும்

ஜனவரி 11

“என்னை இழுத்துக் கொள்ளும்” உன். 1:4

ஒவ்வொரு நாள் காலையும் நேசர் நம்மை அழைக்கிற சத்தம் எவ்வளவு இனிமையும் அருமையாயும் இருக்கிறது. ஆனால் அவரின் அழைப்பு மட்டும் கேட்டால் போதுமா? நம்முடைய இருதயம் அதற்குச் செவி கொடுக்க வேண்டும். மந்தமான ஆத்துமாவும், சோம்பலான இருதயமும் இன்னும் பல காரியங்களும் தேவ பரிபூரணத்தைப் பெற்றுக்கொள்ளாதபடி நம்மைத் தடுக்கின்றன. அவர் நம்மை அழைக்கிறது நமக்குத் தைரியத்தைக் கொடுக்க வேண்டும். அவர் நமது தகப்பன், நாம் தாராளமாய் அவரிடம் பிரவேசிக்கலாம். என்ன தேவையானாலும் அவைகளை பெற்றுக்கொள்ள அவரிடம் போகலாம். அவர் பட்சபாதமுள்ளவரல்ல. அவர் வார்த்தைகள் உண்மை நிறைந்தது. அது பரிபூரணமாய் நமக்குண்டு. பரிசுத்தவியானவர் நம்மை இழுக்கும்போது அவரிடம் சென்றிடவேண்டும். அப்போதுதான் நமது சுயம், பலவீனம் எல்லாம் நீங்கி நமக்கு ஆவிக்குரிய வாழ்வில் புத்துணர்ச்சி கிடைக்கும். ‘என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வர மாட்டான் என்று இயேசு சொன்னார்.” இந்த வசனம் தேவன்நம்மீது வைத்துள்ள அநாதி அன்புக்கு சாட்சி கொடுக்கிறது. ‘அநாதி நேசத்தால் உன்னை நேசித்தேன், இரக்கம் உருக்கத்தால் உன்னை இழுத்துக் கொண்டேன்” என்றார்.

ஆத்தும நேசர் நம்மை இழுக்கிற பாசம் எவ்வளவு பெரியது. நாம் முழு இருதயத்துடன் அவர் வார்த்தைகளுக்கு இணங்குவோம். அன்பின் கயிற்றால் நம்மை இழுத்துக்கொண்டது எவ்வளவு பெரிய கிருபை. முழு ஆத்துமாவோடு அவர் வழிகளில் நடப்போம். உலகம் பாவத்துக்கும் இன்பங்களுக்கும் நம்மை இழுக்கும்போது நாம் செல்லாமல், சழங்காசனநாதர் பாதத்தில் அமர்ந்து, அவர் பிரசன்னத்தில் மகிழ்ந்து வாழ அவரின் பாதைகளில் நடப்போம். அவர் உங்களை சேர்த்துக்கொள்வாராக.

கிருபாசனத்துக்கு நேராய் என்னை
உம்மண்டை இழுத்துக்கொள்ளும்
மரியாள் போல் உம் பாதத்திலிருந்து
கற்றுக்கொள்ள உதவி செய்யும்.

Popular Posts

My Favorites

உம்முடைய ஜனங்கள் மனப்பூர்வமுள்ளவர்களாயிருப்பார்கள்

ஜனவரி 17 "உம்முடைய ஜனங்கள் மனப்பூர்வமுள்ளவர்களாயிருப்பார்கள்." சங்கீதம் 110:3 எந்த மனுஷனும் தன் சுயமாய் இரட்சிப்படைந்து கிறிஸ்துவிடம் வரமாட்டான். இரட்சிக்கப்படவும் மாட்டான். கிறிஸ்துNவே தேவகிருபையால் ஒவ்வொருவரையும் இரட்சிக்கிறார். மனுஷ சுபாவம் குருட்டுத்தனமுள்ள, பெருமையுள்ளது. ஆனால் இரட்சிக்கப்பட...