Home தினதியானம் கர்த்தர் நன்மையானதைத் தருவார்

கர்த்தர் நன்மையானதைத் தருவார்

மார்ச் 31

“கர்த்தர் நன்மையானதைத் தருவார்.” சங். 85:12

நலமானது எதுவோ அதைக் கர்த்தர் நமது ஜனத்திற்குத் தருவார். நம்மை ஆதரிக்க உணவையும், பரிசுத்தமாக்க கிருபையையும், மகுடம் சூட்டிக்கொள்ள மகிமையையும் நமக்குத் தருவார். தலமானதை மட்டும்தான் தேவன் தருவார். ஆனால் நாம் விரும்பிக்கேட்கிற அநேக காரியங்களைத் தரமாட்டார். நலமானதைத் தருவார். தகுந்த காலத்திலதான் எந்த நன்மையையும் தருவார். கடைசியில் பெரிய நன்மைகளை நாம் பெற்றுக்கொள்ளத்தக்கதாக இப்போது நமக்கு நலமானதைத் தருவார். எந்த நன்மையும் இயேசுவின் கரத்திலிருந்தே வரும். அவர் தமது ஜனங்களுக்கு நன்மையைத் தருவார் என்வது அவருக்க் அவர்களுக்கம் இருக்கும் ஐக்கியத்தினால் உறுதிப்படுகிறது. அவர்களுக்கு இவர் பிதா. அவர்களுக்காக அவர் அளவற்ற அன்பையும் உருக்கமான கிருபையையும் வைத்திருக்கிறார். அது கிருபையினாலும் வாக்குத்தத்தத்தினாலும் உறுதிப்படுத்தப்படுகிறது.

தேவன் சத்துருக்களை நேசித்து சிநேகிதரைப் பட்டினிப்போடமாட்டார். அவர் நமக்குக் கொடுக்கும் நிச்சயம் நம் பொறுமையில்லாமையைக் கண்டிக்க வேண்டும். கர்த்தருக்குக் காத்திரு. ஜெபத்திற்கு அது உன்னை ஏவி எழுப்பட்டும். அவரிடம் நன்மையான காரியத்தைக் கேள். அது உன் விசுவாசத்தை வளரப்பண்ணும். அவரின் வார்த்தையை விசுவாசி. அது உனக்குத் திருப்பதியை உண்டாக்கு. தேவன் உனக்கக் கொடுக்கும் நன்மையில் திருப்பி அடையப்பார். அது உனக்குள் நம்பிக்கையை எழுப்பட்டும். எந்த நல்ல காரியத்தையும் கர்த்தரிடத்திலிருந்துப் பெற்றுக்கொள்ளப் பார்.

கர்த்தர் நன்மை தருவார்
மகிமை அளிப்பார்
தம்முடையோர்களுக்கு அதை
அவசியம் அளிப்பது நிச்சயம்.

Exit mobile version