ஒன்று செய்கிறேன்

ஏப்ரல் 07

“ஒன்று செய்கிறேன்.” பிலி. 3:13

உலகத்தில் நாம் வைக்கப்பட்டிருக்கிற விசேஷித்த நோக்கத்தின் மேல், நமது விருப்பங்கைளயும், நினைவுகளையும், எண்ணங்களையும் வைப்பது மிகவும் முக்கியம். தாவீது கர்த்தருடைய வீட்டில் வாசம்பண்ணவேண்டுமென்கிற ஒரே ஒரு காரியத்தையே விரும்பினான். மரியாள் தன்னைவிட்டு எடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துக்கொண்டாள். பவுல் பரம அழைப்பின் பந்தயப்பொருளின்மேல் நோக்கமுள்ளவனாயிருந்தான். கடந்து போனதை மறந்து மேலானவைகளை, இனிமையான பரம காரியங்களை, அதிக பயனுள்ளவைகளை நாடினான். கடந்து போனதும் நிகழ் காலத்திலுள்ளதும் போதுமென்று நினைக்கவில்லை. அவர் விருப்பம், விரிவானது. அவன் நம்பிக்கை மேலானது. தேவனுக்காக செய்ய வேண்டியதெல்லாம் செய்ய வேண்டும். தேவனிடத்திலிருந்து பெற்றுக்கொள்ளக்கூடிதெல்லாம் பெற்றுக் கொள்ள Nவுண்டும். கூடியமட்டும் இயேசுவைப்போல மாறவேண்டும். இதுவே அவனுடைய பெரிய விருப்பமாய் இருந்தது.

அன்பானவர்களே, இது எவ்வளவாய் நம்மைக் கடிந்துக்கொள்ள வேண்டும்? தீர்மானித்தவைகளினின்று நமது மனம் எத்தனை முறை பின்வாங்கி போயிருக்கிறது? நமது இருதயம் முன்னானவைகளை மறந்துவிட்டிருக்கிறது? இயேசுவானவர் தமக்கு முன்வைக்கப்பட்ட சந்தோஷத்தின் மேலேயே நோக்கமாயிருந்தார். மோசே இனிவரும் பலனின்மேல் நோக்கமாயிருந்தான். பவுல் உலகின் காரியங்களைப் பாராமல் நித்திய காரியங்களைNயு நாடினான். அந்த ஒரே காரியத்தின்மேல் நமது மனதையும் குறியையும் உறுதியாய் வைக்கவேண்டியது அவசியம். தம்முடைய மக்களை உற்சாகப்படுத்த இயேசு கிறிஸ்து காப்பிக்கிறதும், அந்த நாளில் அவர்களுக்குக் கொடுக்கப்போகிறதுமான காரியந்தான் அது.

பந்தயத்தை இலக்காக
வைப்பதொன்றே தேவை
பின்னானதை மறந்து
இயேசுவில் மோட்சம் காண்பேன்.

என் கனம் எங்கே

ஏப்ரல் 18

“என் கனம் எங்கே” மல்கியா 1:6

கர்த்தர் தமது மக்கள் தம்மை மகிமைப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கிறார். நாமும் இந்த முக்கியமான கடமையை மறந்திருக்கிறோம். மத்தேயுவைப்போல விசுவாசத்திலும் கிரியைகளிலும், பேதுருவைப்போல உண்மையிலும், உற்சாகத்திலும், யோவானைப்போல மிகுந்த அன்பிலும், பவுலைப்போல இரத்த சாட்சியிலும், உருக்க பாரத்திலும் அவரைக் கனப்படுத்த வேண்டும்.

அன்பர்களே, தேவனைக் கனப்படுத்துவது உங்களுக்கு பிரியமா? அப்படியானால் அவர் செயலை நம்புங்கள். அவர் எப்போதும் உங்களைப் பார்க்கிறாரென்று நினைத்து நடவுங்கள். எல்லாரையும்விட அவர் ஜனத்தை அதிகம் நேசியுங்கள். அவர் ஊழியம் சிறந்து நடக்க எது வேண்டுமானாலும் செய்து உதவுங்கள். தேவனுக்காய் காரியங்களைச் செய்யாவிட்டால் அவர் உங்களைப் பார்த்து என் கனம் எங்கேயென்று நன்றாகக் கேட்கலாம். தேவன் விரும்புகிறபடி அவரைக் கனப்படுத்த வேண்டுமானால் அவரின் தன்மைகளை அறிய வேண்டும். இயேசுவின்மூலம் நல்ல ஐக்கியத்தை வைத்துக்கொள்ள வேண்டும். எப்போதும் அவர் சமுகம் முன் நிற்கிறதாக எண்ணவேண்டும். அவர் அதிகாரத்துக்குக் கீழ் அடங்க வேண்டும். அவரின் நேசத்தின் ஆழத்தை ருசித்து, அவரின் சித்தம் செய்ய வேண்டும். அவர் விரும்புகிறதைப் பார்த்து அதன் மேல் நோக்கமாயிருக்க வேண்டும். நீங்கள் அவரைக் கனப்படுத்தினால், உங்களுக்கு நல்ல சமாதானம் தந்து வேண்டிய யாவையும் கொடுத்து, எந்தத் துன்ப வேளையிலும், சகாயத்தையும் தந்து, அன்பாய் உங்களை அடிக்கடி சந்தித்து, எந்தச் சத்துருவையும் கடைசியிலே வெற்றி சிறக்க சத்துவத்தையும், கொடுத்து உங்களைக் கனப்படுத்துவார்.

தேவன் எனக்குப் பிதாவா?
நான் அவரின் பிள்ளையா?
அவரைக் கனப்படுத்தி
அவர் சித்தம் நடப்பேன்.

கர்த்தருடைய சித்தம் ஆகக்கடவது

ஏப்ரல் 12

“கர்த்தருடைய சித்தம் ஆகக்கடவது” அப். 21:14

தேவன் அன்பாகவே இருக்கிறார். அவர் வாக்கு உண்மையானால் அவர் சொன்னபடி செய்கிறவரானால், அன்போடும் நீதியோடும் இரக்கம் பரிசுத்தம் இவைகளால் அவர் நடத்துவாரானால், நமக்கு மகிமையையும், நன்மையையும் உண்டாக்குவது அவர் சித்தமானால், நாமும் இப்படியே அனுதினமும் சொல்ல வேண்டாமா? இந்த விருப்பம் நமது இருதயத்திலும் வளர விட வேண்டாமா? அவர் ஞானம் அளவற்றது. அவர் ஞானமுள்ளதை விரும்புகிறார். அவர் நமது ஷேமத்தையே விரும்புகிறார். நோக்கம் வைத்தே தேவன் கிரியை செய்கிறார். அவர் என்னதான் நமக்குச் செய்தாலும் நாம் நமது சொந்த சித்தப்படியே நடக்கப் பார்க்கிறோம். இப்பொழுது இருக்பிற நிலைமையிலும் வேறுவிதமாய் இருந்தால் நல்லது என்கிறோம். நமது தேவனுடைய சாமர்த்தியம், உண்மை, தயவு இவைகளில் குறைவுபடுகிறோம். எத்தனை மதியுPனம் இது. சில வேளைகளில் யோசனை இல்லாமைதான் இதற்குக் காரணம். விசுவாசக் குறைவினாலும் இது உண்டாகலாம். ஆனால் தன்னயப் பிரியமாகிய பாவந்தான் இதற்கு முக்கிய காரணம். இதற்குக் காரணம் சுய இஷ்டமே. அதனால் வருத்தமும் அடைகிறோம்.

தேவனை எதிர்க்கிறதுpனால் நம்மை வருத்தப்படுத்திக்கொள்கிறோம். உம்முடைய சித்தம் செய்யப்படுவதாக என்று ஜெபிக்கிறோம். தேவனுடைய சித்தம் நிறைவுள்ளதென்றும் மேன்மையானது என்றும் சொல்கிறோம். ஆனால் நம் பிரியப்படி நடவாவிட்டால், தேவன் நம்மை சோதித்தால், நம்மை பரீட்சித்தால், நாம் முறுமுறுக்கிறோம் அல்லது சோர்ந்து விடுகிறோம். விசுவாசியே, நீ பரிசுத்தமாய் இருக்கவேண்டும். பாக்கியவானாய் இருக்கவேண்டும். நித்திய நன்மையை அடைய வேண்டும் என்று விரும்புகிறார். ஆகவே உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் சுய இஷ்டத்தை உடனே உதறித் தள்ளி எப்பொழுதும் அவர் சித்தம் ஆகக்கடவது என்று சொல்லிப்பார்.

என் ஜீவ காலமெல்லாம்
தேவை எதுவோ தருவீர்
உமது சித்தமே நலம்
அதுவே என் பாக்கியம்..

நான் விசுவாசிக்கிறவர் இன்னார் என்று அறிவேன்

ஏப்ரல் 04

“நான் விசுவாசிக்கிறவர் இன்னார் என்று அறிவேன்.” 1.தீமோ. 1:12

கிறிஸ்துவை அறிந்துகொள்வது பெரிய கிருபை. நம்முடைய ஜெபத்துக்கு அதுதான் காரணம். நம்முடைய விசுவாசத்துக்கு அதுதான் ஆதாரம். அவரை அறிந்துக்கொள்ளுகிற பாக்கியம் நமக்குக் கிடைத்திருக்கிறது. அவருடைய வசனத்தினால் அவரை அறிந்து கொள்ளுகிறோம். தேவனுடைய பிள்ளைகள் கூறிய சாட்சிகளால் தேவனை அறிந்துகொள்ளுகிறோம். இதற்கும் மேலாக பரிசுத்த ஆவியானவரின் போதனையினால் அவரை அறிந்து கொள்ளுகிறோம். ஆனாலும் நாம் அறிந்துகொள்ளுகிறது மிக குறைவுதான். அவரை நேசிக்கத்தக்கதாக, அவருடைய தன்மையை அறிந்துகொள்ளுகிறோம்.

தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட அவர் முடிந்த பூரணகிரியையை நம்பினவர்களாக அவரையே அறிய வேண்டும். நமக்குத் தேவையானதையெல்லாம் பெற்றுக்கொள்ள அவரிடத்தில் நிறைவு உண்டென்று அறிய வேண்டும். துன்பத்திலும், துக்கத்திலும் அவர் அருகில் செல்ல அவருடைய இரக்கத்தையும், உருக்கத்தையும் அறியவேண்டும். மற்றப் பாவிகள் ஜீவனையும் சமாதானத்தையும் அடைய அவரிடத்தில் செல்லுங்கள் என்று சொல்லுத்தக்கதாக, பாவிகளை ஏற்றுக்கொள்ள மனதுள்ளவரென்று அறிய வேண்டும். இரட்சகர் வல்லமையுள்ளவர் என்று நாம் அறிவோம். விசுவாசிக்கத்தக்கவரென்றும் நாம் அறிவோம். அவரை விசுவாசிக்கிற எந்த ஏழைப்பாவியையும் அவர் கைவிடமாட்டாரென்றும் அறிவோம். இவ்வாறு நாம் அறிவதினால்தான் நம்முடைய சகல காரியங்களையும் அவருடைய கரங்களில் ஒப்புக்கொடுக்கிறோம். அவரை அறிந்திருக்கிறபடியால்தான் அவரை நம்முடைய கர்த்தரும் தேவனும் என்று சொல்ல நாம் வெட்கப்படுகிறதில்லை. அவர் தேவ குமாரன் என்றும், இரட்சகர் என்றும், தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார் என்றும் அறிவோம். நம்முடைய பாவங்களுக்காக மரித்து, நம்மை நீதிமான்களாக்க உயிர்த்தெழுந்தார் என்றும் மறுபடியும் தம்மண்டையில் நம்மைச் சேர்த்துக்கொள்வார் என்றும் அறிவோம்.

யாரை விசுவாகித்தேனென்று
நான் அறிவேன் அது நல்லது:
நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை
பாதுகாத்திடவார் எந்நாளும்.

பிரியமானவர்களுக்குள் முன்குறித்திருக்கிறார்

ஏப்ரல் 27

“பிரியமானவர்களுக்குள் முன்குறித்திருக்கிறார்”  எபேசி. 1:5-6

இயேசுகிறிஸ்துவானவர்தான் இப்பிரியமானவர். அவரின் பிதாவோ இவரை அளவற்றவிதமாய் நேசிக்கிறார். அவரை அவர் ஜனங்கள் நேசிக்கிறார்கள். நேசிக்கத்தக்கவர். அவர் தன்மையும், வாழ்க்கையும் நேசிக்கத்தக்கவைகள். தேவ ஜனங்கள் யாவரும் இவர்மூலமாய் தேவனிடத்தில் சேருகிறார்கள். இவர் மேலேயே இவர்கள் நம்பிக்கை வைக்கிறார்கள். அவரோடு ஐக்கியப்பட்டு அவருடன் ஒன்றாககக் காணப்படுகிறார்கள். அவரிலே பார்க்கும்போது தேவனுடைய பார்வையில் அருமையானவர்களும் நேசிக்கப்படத்தக்கவர்களுமாய் இருக்கிறார்கள்.

தேவன் தம் பிள்ளைகளை முற்றும் அழகுள்ளவர்களென்று சொல்லி, அவர்கில் கறையில்லை என்கிறார். அன்பரே! நம்மில் நாமே குறைவுள்ளவர்கள், மகா பரிசுத்தருக்கு வெறுப்புண்டாக்குகிறார்கள். ஆனால், கிறிஸ்துவிலே நாம் பரிசுத்தர், நீதிமான்கள், சவுந்தரியவான்கள். அவர் நீதியால் நாம் உடுத்தப்பட்டிருப்பதால் தேவன் நம்மை நீதிமான்களென்கிறார். அவருடைய ஆவியால் நாம் நிரப்பப்படும்போது தேவன் நம்மை நேசிக்கத்தக்கவர்கள் என்கிறார். இயேசுவின்மூலமன்றி வேறு வழியே சென்றால் தேவன் நம்மை ஏற்றுக்கொள்ள மாட்டார். பிரியமானவர்மூலம் நம்மை அங்கீகரித்துக்கொள்வதினால், தம்முடைய கிருபையை யாவரும் கண்டு பிரமிப்பு அடையும்படி அதை மகிமைப்படுத்துகிறார். விசுவாசிகளாக தேவன் அங்கீகரித்துக் கொள்கிறார். இதைவிட அதிகமாய் அவர் நம்மை அங்கீகரித்துக் கொள்கிறார். இதைவிட அதிகமாய் அவர் நம்மை அங்கீகரிக்கப் போவதில்லை. நாம் அங்கீகரிக்கப்பட்டோம் என்பதை அதிக திட்டதாய் அறிந்து அதை அதிக சந்தோ}மாய் அனுபவிக்கலாம். ஆனால் இப்பொழுது இருக்கிறதிலும் அதிகமாய் நாம் அங்கீகரிக்கப்படவும் மாட்டோம்.

இயேசுவுக்கு நன்றியாக
அவர் ஒளியில் நடப்பேன்
முழுவதும் சுத்தனாகுமட்டும்
அவரையே பின்பற்றுவேன்.

My Favorites

உண்மையுள்ள இருதயத்தோடு சேரக்கடவோம்

ஏப்ரல் 23 "உண்மையுள்ள இருதயத்தோடு சேரக்கடவோம்" எபி. 10:22 அவிசுவாசத்தினால்தான் நாம் தேவனுக்குத் தூரமாய் இருக்கிறோம். அப்போது ஆவியில் குளிர்ந்துப்போய் ஆறுதலற்றவர்களாகிறோம். தேவன் மகா பரிசுத்த ஸ்தலத்தில் இருக்கிறார். அவர் இரக்க சிம்மாசத்தில் வீற்றிருக்குpறார். தன்னைப்...
Exit mobile version