“அவனையேநோக்கிப் பார்ப்பேன்”

https://www.tamilgospel.com/wp-content/uploads/2018/01/001_january01.mp3?_=1

ஜனவரி 01

“அவனையேநோக்கிப் பார்ப்பேன்” ஏசாயா 66:2

எவனைநோக்கிப் பார்ப்பேன்? சிறுமைப்பட்டவனை, ஆவியில் நொறுங்குண்டவனை, தமது வசனத்துக்கு நடுங்குகிறவனை, சிங்காசனத்தில் வீற்றிருக்குமுன் தான் ஓன்றுமேயில்லை என தாழ்த்துகிறவனை, தன் பாவங்களை நினைத்து மனந்திரும்புகிறவனை, குற்றங்களை நினைத்து உண்மையாக மனஸ்தாபப்படுகிறவனை, தன் வாழ்வில் எல்லாமே இயேசுவால் மட்டுமே கிடைக்குமென்று அவரை நோக்குகிறவனையே.தேவாதி தேவன் நோக்கிப் பார்ப்பேன் என்கிறார்.

கர்த்தர் இப்படிப்பட்டவர்களைக் கவனித்துப் பார்க்கிறார். இவர்களைப் பார்த்து உள்ளம்பூரிக்கிறார். அகமகிழ்கிறார். தேவ அன்பை இவர்கள்மேல் அதிகம் ஊற்றுகிறார். இவர்கள்வாழ்க்கையையும் வழிகளையும் ஆசீர்வதிக்கிறார். தம்முடைய சிநேகிதராக இவர்களைச் சந்தித்துப் பேசி சஞ்சரிக்கிறார். இவர்களுடைய ஜெபங்களுக்குக் கட்டாயம் பதில்கொடுக்கிறார். இவர்களின் பொருத்தனைகளையும் வேண்டுதல்களையும் ஆவலாய் அங்கீகரித்துக்கொள்ளுகிறார். இப்படிப்பட்டவர்களைத் தமது மகிமைக்கு அலங்காரமாக பயன்படுத்தி மேன்மைப்படுத்துகிறார். கிதியோனைப்போல வல்லமையாய் பயன்படுத்தி பேதுருவைப்போல சீர்படுத்துகிறார். இவ்விதமக்கள்மேல் கர்த்தர் தமது நேசமுகப்பிரகாசத்தைத் திருப்புவார்.

என் ஆத்துமாவே, இன்று நீ கர்த்தரை நோக்கிப் பார்த்துக்கொண்டிருந்தாயா? அவரை உன் ஆசைத் தகப்பனாகப் பார்த்தாயா? உன் இரட்சகராக அவரை பார்த்தாயா? பார்த்திருப்பாயானால் அவர் தகப்பனுக்குரிய பட்சத்தோடு உன்னையும் பார்ப்பார். இப்போதும் உன்னை அப்படியே பார்த்துக்கொண்டிருக்கிறார். கர்த்தர் நம்மை பார்க்கிறது என்ன ஓர்ஆனந்தம்! என்ன ஒரு பேரின்பம்! தேவன் நம்மை கண்ணோக்குகிறார். உலக ஆஸ்தியைவிட மனித புகழைவிட, அன்போடு கண்ணோக்குகிறார் என்று நினைத்துக் கொண்டே இன்றையநாளில் இருப்பாயாக.

அவர் அன்பும் தயவும்

தேவமீட்பில் விளங்கும்

பாவங்களை மன்னித்து

அக்கிரமங்களை மறந்தார்.

அவனைக் கனப்படுத்துவேன்

ஜனவரி 07

“அவனைக் கனப்படுத்துவேன்”  சங். 91:15

என்னைக் கனப்படுத்துகிறவர்களை நான் கனப்படுத்துவேன். தற்பெருமை கர்த்தரைக் கனவீனப்படுத்தி நமக்குக் குறைவையும் அவர்கீர்த்தியையும் உண்டாக்குகிறது. தன்னை வெறுத்தலே மேன்மைக்கும் கனத்துக்கும் வழி நடத்தும். கிறிஸ்தவன் தன்னை வெறுத்து தன் கண்களையும் மனதையும் இரட்சகர்மேல் உறுதியாய் வைப்பானானால் கர்த்தர் அவனைக் கனப்படுத்துவார். அப்பொழுது அவன் வருத்தங்களை பொறுமையோடு சகித்து மற்றவர்கள் சொல்லும் நிந்தைகளையும் பழிச்சொற்களையும் நிராகரித்து துன்பநாளிலும்கூட பிதாவின் முகமலர்ச்சியை அனுபவிப்பான். கர்த்தரோ அவனைச் சந்தித்து அவனுடன் இனிமையாய்ப் பேசி அவனைச் சூழ்ந்திருக்கும் சகல துன்பங்களையும் மறந்துவிடும்படி செய்து அவன் வாழ்க்கையின்மேல் நோக்கமாயிருப்பார். வியாதியில் ஆற்றித்தேற்றி சுகத்தில் அவனை நடத்திக்கொண்டு போவார். வறுமையில் திருப்தியைக் கொடுத்து வாழ்வில் அவனுக்கு உதாரகுணத்தைத் தருவார். வாழ்நாளில் அவனுக்கு வேண்டியதைத் தந்து அவனை ஆதரித்து மரணத்தில் உயிர்ப்பித்து தம்மண்டையில் ஏற்றுக்கொள்வார். உயிரோடிருக்கும்போது ஆசீர்வாதமாயிருந்து மரித்த பிறகு சிங்காசனத்துக்கு அருகில் வைக்கப்படுவான்.

அன்பானவர்களே! உங்களை வெறுத்து மாம்சத்தை வென்று உலகத்துக்கு மேலாக எழும்பி விசுவாசத்தினால் வாழ்ந்து தேவனுடன் சஞ்சரித்துக் கர்த்தரைக் கனம்பண்ணுங்கள். அவரும் உங்களைக் கனப்படுத்துவார். உங்களின் கவலைக்குரிய காரியங்களை அவருக்கு ஒப்புவித்துப் பாருங்கள். அவருடைய இராஜ்யத்தையும் மகிமையையும் விரிவடையச் செய்யப் பாருங்கள். அப்போது தேவன் உங்களை ஆசீர்வதித்து மன்னாவால் உங்களைத் திருப்தியாக்குவார் என்று அறிவீர்கள்.

என் நிமித்தம் இம்மையில்
தன்னை வெறுப்பவன்
எனதன்பை ருசித்து
என் மகிமையை காண்பான்.

எல்லாம் உங்களுடையதே

ஜனவரி 4

“எல்லாம் உங்களுடையதே”  1.கொரி. 3:21

என் பிரிய சகோதரரே, கேளுங்கள். ‘தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும் தம்மிடத்தில் அன்பு கூறுகிறவர்களுக்கத் தாம் வாக்குத்தத்தம் பண்ணின இராஜ்சியத்தை சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்துக்கொள்ளவில்லையா?” இது என்ன விசித்திரம்! ஏழைகளாயிருந்தாலும் ஐசுவரியவான்கள். ஒன்றுமில்லாதவர்களாயிருந்தாலும் எல்லாமுடையவர்கள். சகலமும் நம்முடைய உபயோகத்துக்கும் நம்முடைய பிரயோஜனத்துக்கென்றிருக்கிறது. நமது கரங்களில் அது இல்லாவிட்டாலும் இன்னும் அவைகள் நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். இவைகளை விசுவாசத்தினால் அறிந்து அனுபவிக்கவும், நம்முடையதென்று கேட்டுப் பெற்றுக்கொள்ளவும், உடன்படிக்கையில் நமக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு வாக்குத்ததத்ங்களில் கொடுக்கப்பட்டுமிருக்கிறது. அவசரத்துக்கு வேண்டியதெல்லாம் அந்தத வேளையில் நமக்குக் கொடுக்கப்படும். கிறிஸ்துவானவர் இரண்டாந்தரம் பாவமன்றி இரட்சிப்பளிக்கவரும்போது சகலம் நமக்குக் கிடைக்கும். நாம் தேவனுக்குச் சுதந்தரர். இயேசு கிறிஸ்துவோடு உடன் சுதந்தரர். நாம் இம்மைக்குரியவைகளைப் பார்த்தாலும், பரமகாரியங்களைப் பார்த்தாலும், இனிவரும் காரியங்களைப் பார்த்தாலும், துன்பங்களைப் பார்த்தாலும், பூமிக்குரியவைகளைப் பார்த்தாலும், பரலோகத்துக்குரியவைகளைப் பார்த்தாலும், சகலமும் நம்முடையதென்றே திட்டமாய்ச் சொல்லலாம்.

தேவன் நம்முடைய பங்கு, இயேசு நம்முடைய மணவாளன், பரிசுத்த ஆவியானவர் நம்முடைய தேற்றரவாளன், பூமி நம்முடைய நித்திய வீடு. நாம் இதை விசுவாசிக்கிறோமா? இவைகள் எல்லாம் உண்மையென்று எண்ணி வாழ்ந்து வருகிறோமா? சகலமும் என்னுடையதென்று உறுதியாய்ச் சொல்லக்கூடுமோ? அப்படியானால் ‘நான் உன் தரித்திரத்தை அறிவேன். ஆனாலும், நீ ஐசுவரியவான்” என்று அவர் நம்மைப் பார்த்துத் திட்டமாய்ச் சொல்லலாம்.

உலகப் பொருள் போகினும்
அவர் உன் பங்காமே
ஒன்றுமற்றவனாயினும்
அவர் உன் சொந்தமாமே.

கர்த்தரில் அன்பு கூறுகிறவர்களோ தீமையை வெறுத்துவிடுங்கள்

ஜனவரி 18

“கர்த்தரில் அன்பு கூறுகிறவர்களோ தீமையை வெறுத்துவிடுங்கள்.” சங்கீதம் 97:10

தெளிவான கடமைகளைக் குறித்து நமக்குப் புத்தி சொல்வது அவசியந்தான். ஏனென்றால் சில வேளைகளில் நாம் அவைகளை மறந்துபோகிறோம். அடிக்கடி கவலையுற்று வெதுவெதுப்பான சிந்தனைகளுக்கு இடங்கொடுத்து விடுகிறோம். நாம் கர்த்தரை நேசிப்பது உண்மையானால் அவரின் ஜனங்ளை நேசிப்போம். அவருடைய நியமங்களையும் அவருடைய சுவிசேஷத்தையும் நியாயப்பிரமாணத்தையும் நேசிப்போம். நமக்குச் சேதமுண்டாக்குகிறதைத்தான் அவர் விலக்குகிறார் என அறிந்து, அவரின் வாக்குத்தத்தங்களையும் நேசிக்கிற அளவிலேயே அவர் வேண்டாமென்று விலக்குகிறதையும் நேசிப்போம். இந்த நாளில் தாவீதைப்போல் ‘நான் உம்முடைய பிரமாணத்தை எவ்வளவாய் நேசிக்கிறேன். நாளெல்லாம் அது என் தியானம்’ என்று நாம் சொல்ல முடியுமா?

தேவபிரமாணம் தீமையான யாவையும் விலக்குகிறது. ஆகவே நாம் தேவ சித்தத்திற்குக் கீழ்ப்படிந்து பாவத்தையும், தீமையையும் அவர் வெறுக்கிற விதமாகவே வெறுத்து விலக்குவோமாக. தீயநினைவுகளை எதிர்த்துப் போராடுவோமாக. கெட்ட வார்த்தைகளை விலக்கி கடிவாளத்தினால் வாயை காப்போமாக. கெட்ட செய்கையை விலக்கி பொல்லாப்பாய் தோன்றுகிறதைவிட்டு விலகுவோமாக. இருதயம் பொல்லாங்குள்ளதும் அதிக கேடானதுமானது. எல்லா பொல்லாங்குகளும் அதிலிருந்து வருகிறது. முக்கியமாய் தேவனை விட்டு விலகுகிற அவிசுவாசமுள்ள இருதயத்தைப்பற்றி எச்சரிக்கையாய் இருப்போமாக.

நண்பரே! தீமையைப் பகைக்க உனக்கு மனதிருக்கிறதா? அப்படியானால் தேவனோடு நெருங்கி பழகு. அப்போது பரிசுத்த வாழ்வு உனக்குச் சுலபமாகிவிடும். அப்போது எந்தப் பொல்லாப்பையும் வெறுத்துத் தள்ளுவாய். கர்த்தரின் தாசர்களே, பொல்லாப்புக்கு முழு மனதோடு பயப்படுங்கள். யாவரோடும் சமாதானமும் பரிசுத்தமாயுமிருங்க நாடுங்கள். பரிசுத்தமில்லாமல் ஒருவனும் தேவனைத் தரிசிக்க முடியாதே.

நேச பிதாவே உம்மில்
எனக்கு எல்லாம் சொந்தம்
என்னையும் தந்தேன் உமக்கு
இதுவே எனக்கானந்தம்.

கண்மணிபோல் என்னைக் காத்தருளும்

ஜனவரி 22

கண்மணிபோல் என்னைக் காத்தருளும்.”  சங். 17:8

இன்றொரு நாளும் கர்த்தர் நம்மைக் காத்தபடியினால் அவரின் உத்தம நேசத்தை இன்று நாம் அறிக்கையிடவேண்டும். கடந்த காலமெல்லாம் அவர் நம்மைப் பட்சமாய்க் காத்திட்டதை அறிக்கை செய்து இனிவருங்காலங்களின் தேவைக்கும் கிருபைக்கும் வேண்டிக்கொள்ளவேண்டும். இந்த ஜெபம் மிகவும் முக்கியமானது. தேவனே நீர் சர்வ வல்லவரும் சர்வஞானமும் உடையவருமானபடியால் என்னைக் காத்தருளும். என்னைச் சத்துருக்கள் சூழ வரும்போதும், எப்பக்கத்திலிருந்தும் நாச மோசங்கள் வரும்போதும் என்னைக் காத்தருளும். நானோ சிறகு முளைக்கிற பெலத்தில் காத்துக் கொள்ளும். நான் விழுந்து வீடுவேனோவென்று பயப்படுகிறேன். உம்மையன்றி வேறு யாருமில்லை எனக்கு. கண்ணின் வருவிழிப்போல் என்னைக் கருத்தாய் காத்தருளும். பிரயோஜனமும், அலங்காரமுமாய் வாழ என்னைக் காத்தருளும்.

நான் உமது சமுகத்தில் விழித்துக்கொண்டு ஆசீர்வாதங்களை அனுபவிக்கவும் தலையாகிய கிறிஸ்துவுக்குள் வளரவும், என்னைக் காத்தருளும். நானும் உலகத்தாரைப்போல பாவத்தில் விழாமலும் உம்மைவிட்டு வழுவிப்போகாமல் இருக்கவும் என்னைக் காத்தருளும். ஆவிக்குரிய வாழ்வில் குளிர்ந்துப்போய் விடுகிறார்கள். நானும் விழக்கூடியவன். ஆகையால் என்னைக் காத்தருளும். கர்த்தர் என்னைக் காக்கிறவர். கர்த்தர் என் வலது பக்கத்தில் எனக்கு நிழலாயிருக்கிறார். கர்த்தர் என் போக்கையும் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்கும் காப்பார் என்று தைரியமாய் சொல்வோம். தேவன் காக்கிற விதங்குளை நாம் உணர்ந்துகொள்வோமாக.

கண் மூடாமல் விழித்து
காக்கிற தேவனே
எந்தன் ஆத்துமாவை
கண்ணிகளுக்கெல்லாம் தப்புவியுமாக.

கிறிஸ்துவுக்குஉடன் சுதந்தரருமாமே

ஜனவரி19

“கிறிஸ்துவுக்குஉடன் சுதந்தரருமாமே.” ரோமர் 8:17

கிறிஸ்துவோடுஇப்போது சம்பந்தப்பட்டிருப்பதால் எப்போதும் அவரோடு சுகந்தரர் ஆவோம். ஒரேகுடும்பத்தைச் சார்ந்த சகோதரர்களாய் மட்டுமல்ல மணவாட்டி மணவாளனோடுசுதந்தரவாளியாவதுப்போல் சுதந்தரம் ஆவோம். இயேசுவானவரே சகலத்துக்கும்சுதந்தரவாளியாக ஏற்படுத்தப்பட்டிருக்கிறார். நாமும் அவரோடு ஜக்கியப்பட்டிருக்கிறோம்.ஆதலால் தேவனுடைய சுதந்தரரும் கிறிஸ்துவுக்குள் உடன் சுதந்தரருமாமே. என்னே மகத்துவம்!எவ்வளவு பெரிய சிலாக்கியம். நாம் இரட்சிப்புக்குச் சுதந்தரர்.வாக்குத்தத்தத்துக்கும் சுதந்தரர். ஆதாமோடு சம்பந்தப்பட்டு குற்றத்துக்கும்நாசத்துக்கும் நிர்ப்பாக்கியத்துக்கும் உள்ளானோம். ஆனால் இயேசுவோடுநம்பந்தப்பட்டதால் நீதியம், சமாதானமும், நித்திய ஆசீர்வாதமும் நமக்குகிடைக்கிறது. இப்போது அவரோடு துன்பப்படுவோமானால், இன்னும் கொஞ்சகாலத்தில் அவரோடு மகிமையடைவோம். இப்போது துக்க பாத்திரத்தில் குடிக்கிறோம்.வெகு சீக்கிரத்தில் மகிழ்ச்சியின் பாத்திரத்தில் பானம்பண்ணுவோம்.

கிறிஸ்துவோடுநாம் சுதந்திரராயிருக்கிறோமா? கிறிஸ்து இயேசுவிலுள்ள விசுவாசத்தில் தேவனுடையபிள்ளைகளாயிருக்கிறோமா? நமது பரமபிதாவை மனமார நேசிக்கிறோமா? அவருக்கே கனமும்மகிமையும் உண்டாக வேண்டுமென்ற ஒரு பெரிய வைராக்கியம் நமக்கிருக்கிறதா? அவரின்பிரசன்னத்தின் சந்தோஷத்தை விரும்புகிறோமா? நேசரில்லாமல் வாழ்ந்தால்துக்கமும் துயரமும் நாம் அடைகிறோமா? தேவபிள்ளைகளோடு நல்ல ஐக்கியம் உண்டா? பாவத்தைப் பகைத்து பரிசுத்தம் வாஞ்சித்துஆனந்தம் கொள்ளுகிறோமா? அப்படியானால் கிறிஸ்துவானவர் நம்மைத் தம்முடையசகோதரர் என்கிறார். தேவன் நம்மைத் தம்முடைய பிள்ளைகள் என்கிறார். நாம்முன்குறிக்கப்பட்டு கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரருமாகும்படி தெரிந்துக்கொள்ளப்பட்டோம்.

தேவனுடையபுத்திரன்
சுதந்தரம்மகா பெரியது
தேவபிள்ளைகளுக்கு வரும் மகிமை
மகாபெரிய மகா இனிது.

My Favorites

தேவன் உன் கிரியைகளை அங்கீகாரம்பண்ணியிருக்கிறார்

டிசம்பர் 05 "தேவன் உன் கிரியைகளை அங்கீகாரம்பண்ணியிருக்கிறார்" பிர. 9:7 நாம் ஆண்டவருக்கு சத்துருக்களாக மாறும்போதும், அவருக்கு எதிரடையாய் செயல்படும்போதும், தேவன் நாம் செய்வதை அங்கீகரிக்கவேமாட்டார். அப்படி ஒருவேளை அவர் அங்கீகரிப்பாரானால், அது அவர் கலகக்காரரையும்,...
Exit mobile version