மார்ச்

முகப்பு தினதியானம் மார்ச்

கர்த்தர் சமீபமாயிருக்கிறார்

மார்ச் 02

“கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.” பிலி. 4:5

இயேசு கிறிஸ்து வரப்போகிறார். அவர் வருகிற நாள் தெரியாது. ஆகையால் நாம் எப்போதும் ஆயத்தமாய் இருக்க வேண்டும். அவர் சீக்கிரம் வருவார். உண்மையாய் வரத்தான் போகிறார் என்று உணர்ந்தோமானால், சாம் இப்போது இருக்கிறதுபோல் அடிப்படி உலக காரியங்களில் சிக்கிக்கொள்ள மாட்டோம். உலகத்துக்குரியவைகளைச் சிந்திக்காமல் தினமும் பரலோகத்தை நினைத்து ஏங்குகிறவர்களாய் இருப்போம். உலகை நியாயந்தீர்க்கவும், நமது பிள்ளைகளை ஒன்று சேர்க்கவும், அவனவன் செய்த கிரியைகளுக்குத் தக்க பலன் தரவும், அவர் சீக்கிரம் வரப்போகிறார்.

அந்த நாள் சமீபமாயிருக்கிறதென்று உணர்ந்தோமானால் சோதனையில் அது நம்மைப் பாதுகாக்கும். பின்மாறாதபடி தடுக்கும். நமது பயபக்தியையும் பரம சிந்தையையும் அதிகமாக்கும். அவரையே Nநூக்கியிருக்க செய்யும்: அவருக்காக நம்மை ஆயத்தப்படுத்தும்.

நாமோ! அவரை வாரும் இயேசுவே என்று அழைத்து அவரின் வருகைக்காய் வாஞ்சையோடு காத்திருக்க வேண்டும். அவர் வரும் போது கிருபையை தம்முடன் கொண்டு வருவார். நம்மை தம்முடன் சேர்த்துக்கொள்வார். சத்துருக்களை நாசம்பண்ணுவார். நம்மைத் தமது சாயலுக்கொப்பாய் மாற்றுவார். இயேசுவானவர் வரும்போது அவரின் ஜனங்கள் பூரண பாக்கியவான்களாய் இருப்பார்கள். அழுகை இன்பமாயும், துயரங்கள் ஸ்தோத்திர கீதங்களாயும் மாறும். ஆமென், கர்த்தராகிய இயேசுவே வாரும். சீக்கிரம் வாரும் என்று அழைப்போம்.

வாரும் இயேசுவே வாரும்
உமது மகிமையைக் காட்டும்
அதை நாங்கள் கண்ணாய் கண்டு
கையில் பொற் கின்னரம் கொண்டு
ஜெயம் ஜெயம் என்று
வாழ்த்திப் போற்றிப் பாடுவோம்.

அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா

மார்ச் 07

“அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா.” மத். 6:6

கர்த்தருக்குத் தெரியாமல் யாராவது தன்னை இரகசியமான இடங்களில் மறைத்துக்கொள்ளக்கூடுமோ? ஒரு கிறிஸ்தவன் எந்த வகையிலாவது தன்னை அவரிடமிருந்து ஒளித்துக்கொள்ள முடியாது. எப்போதும் கர்த்தருடைய கண்கள் என்மேல் வைக்கப்பட்டிருக்கிறது. இப்போதும் அவர் என்னை நன்றாய்ப் பார்க்கிறார். அது என் தகப்பனுடைய கண்கள். என் பிதா என்னை அந்தரங்கத்திலிருந்துப் பார்க்கிறார். என் சத்துருக்களின் இரகசிய கண்ணிகளுக்கு என்னைத் தப்புவிப்பார். என்னைச் சேதப்படுத்தவிருக்கும் தீங்கிற்கு என்னை அருமையாய்த் தப்புவிப்பார்.

என் இதயத்தின் போராட்டங்களையும், என் அந்தரங்க சோதனைகளையும், அவர் பார்த்து அறிந்துக்கொள்கிறார். நான் ஜெபிக்கக்கூடாதபோது அவரை நோக்கிப் பார்ப்பதை அவர் பார்த்தறிவார். என் குறைவுகளையும், நிர்பந்தங்களையும் அவர் கண்ணோக்குகிறார். என் இரகசியமான பாவங்களையும் பொல்லாத சிந்தனைகளையும், தகாத தீய செயல்களையும் அவர் கவனிக்காமலில்லை. எத்தனை பயங்கரமான ஒரு காரியம் இது. இப்படி கண்ணோக்குகிற ஒரு தேவன் நமக்கிரு;கிறபடியால், இனி சோதனைக்கு இடங்கொடாமல், அவர் வழிகளுக்கு மாறாய் செய்யாமல் நம்மை நாமே காத்துக்கொள்ள வேண்டும். என் பரமபிதா என்னைப் பார்க்கிறார். ஒவ்வொரு நிமிடமும் இந்த நிமிடமும், என்னைப் பார்க்கிறார். என் உள்ளிந்திரியங்களையும் பார்க்கிறார். என் யோசனைகளையும் விருப்பங்களையும் அவர் பார்க்கிறார். இப்படிப் பார்க்கிறவர் எந்தப் பாவத்தையும் அளவற்ற பகையாய்ப் பார்க்கிறார்.

நான் எங்கே இருந்தாலும்
தேவ சிந்தை என்னை காணும்
நீர் என்னைக் காணும் தேவன்
பாவத்தை வெறுப்பேன் நான்.

மன்னிக்கிறவர்

மார்ச் 23

“மன்னிக்கிறவர்.” சங். 86:5

கர்த்தர் இரக்கத்தில் பிரியப்படுகிறவராகவும், கோபத்திற்கு ஆத்தரப்படாதவராகவும், மன்னிக்கிற தேவனாகவும் வெளிப்படுகிறார். இது உண்மையானபடியால் இதை எப்போதும் நாம் விசுவாசிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் மன்னிப்பைத்தேடி எதிர்நோக்கிப் பெற்றுக்கொள்ள வேண்டும். அவரை நம்பி துக்கப்பட்டு அறிக்கையிடுகிற யாவருக்கும் கர்த்தர், அதை மன்னிக்க மனதுள்ளவரும், பின்வாங்காதவரும் ஆவார். ஆண்டவரின் நாமத்தில் அவரிடத்தில் வருகிற ஒவ்வொருவருக்கம் மன்னிப்பளிக்கும்போது தம்முடைய வசனத்துக்கு உண்மையுள்ளவராகவும், தமது குமாரனுடைய இரக்கத்தின்படி நியாயஞ்செய்கிறவராகவும் வெளிப்படுகிறார். அவன் மன்னிக்கிறவரானதால் நாம் பயப்படதேவையில்லை. மனம் கலங்க அவசியமில்லை. இந்த விஷயத்தில் கிறிஸ்துவைச் சந்தேகிப்பது பாவமாகிவிடும். ஆகையால் மகாபாவியையும் குறைவின்றி மன்னிக்க ஒரு வழியை ஏற்படுத்தியுள்ளார். பாவிகளாம் நம்மை மன்னித்து சேர்த்துக்கொள்ள, தம் அன்புள்ள ஒரே பேறான குமாரனைப் பிராயச்சித்த பலியாய் ஒப்புக்கொடுத்ததால் மன்னிக்க ஆயத்தமுள்ளவர் என்பதைக் காட்டினார்.

பிராயச்சித்தமின்றி மன்னிப்பு கிடையாது. அவர் செய்யக் கூடியதை எவ்விதமும் செய்வார். இயேசுவின் பிராயச் சித்தத்தின்படி தேவன் எவ்விதப் பாவிக்கும் பூரணமாய், சுலபமாக அனுதினமும் மன்னிப்பு அளிக்கு முடியாது. இந்த இரவிலும் இந்த நாளின் பாவங்களையும் முந்தின எல்லாப் பாவங்களையும் நமக்கு மன்னித்து, இந்த நேரத்திலேயே தர ஆயத்தமாய் இருக்கிறார். இது எவ்வளவு பெரிய சத்தியம்.

மரித்துயிர்த்த இயேசுவை
விசுவாசத்தால் நோக்குவோம்
அப்போது நீதிமான்களாகி
பரத்தில் சேர்ந்து களிகூறுவோம்.

வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளைச் சுதந்தரித்துக் கொள்ளுகிறார்கள்

மார்ச் 22

“வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளைச் சுதந்தரித்துக் கொள்ளுகிறார்கள்.” எபி. 6:17

சுபாவத்தின்படி மற்றவர்களைப்போல நாமும் கோபாக்கினையின் புத்திரர். மற்றவர்களைப்போலவே அக்கிரமக்காரர். எது மற்றவர்கள். கெட்டுப்போனவர்கள். தேவனுக்கு விரோதமாகவும் அவருடைய இராஜ்யத்திற்கு விரோதமாகவும் கலகம்பண்ணினார்கள். எந்த நற்கிரியைகளையும் தேவன் நமக்கு செய்ய நாம் தகுதியுள்ளவர்களல்ல. ஆனால் புதிய ஏற்பாட்டு காலத்திலே தமது குமாரன் இயேசு கிறிஸ்துவால் வாக்குத்தத்தங்களையும் சுதந்தரத்தையும் கிருபையால் ஏற்படுத்தியிருக்கிறார். நம்மையும் ஒரு பொட்டென எண்ணினபடியால் தன் ஆத்துமாவை வியாகுலத்திற்கு ஒப்புக்கொடுத்தார். நம் மூலம் தேவனுக்கு மகிமையுண்டாக அவரில் ஆம் என்றும் ஆமென் என்றும் இரு;கிற வாக்குத்தத்தங்களுக்கு நம்மைப் பாத்திரராக்கினார்.

ஆகையாம் நாம் கிறிஸ்துவோடு சம்மந்தப்பட்டிருக்கிறபடியினாலும், கிறிஸ்துவின் மரணத்தின்மூலம் நமக்கு பங்கிருக்கிறபடியினாலும், வேதத்தின் சகல வாக்குத்தத்தங்களுக்கும் நம்மை சொந்;தரக்காரர் ஆக்கினார். நித்தியி ஜீவனும் என்றுமுள்ள நீதியும், இம்மைக்கும் மறுமைக்கும் நமக்கு வேண்டிய சகலமும் நமக்கு வாக்களிக்கப்பட்டிருக்கின்றன. நாம் சுதந்தரர், ஆகையால் நமது சுதந்ரத்தில் எல்லாம் இருக்கிறது. இந்தச் சுதந்தரம் நமக்கு கிருபையினால் வந்ததுது. இந்தக் கிருபை கிறிஸ்துவால் கிடைத்தது. மோட்சத்துக்கு நம்மை நடத்துகிறது. நன்றி செலுத்த நம்மை ஏவுகிறது. நான் சுதந்தரவாளியா? வாக்குத்தத்தங்கள் என் பத்திரமா? அப்படிப்பட்ட சுதந்தரத்துக்கு நான் பாத்திரனாக ஜீவிக்கிறேனோ என்று நாம் நம்மை சோதித்தறியக்கடவோம்.

தேவன் வாக்குப்பண்ணினதை
சுதந்தரிப்போம் எந்நாளும்
அவரில் நிறைவடைவோம்
தேவ நாமம் துதிப்போம்.

சமாதானத்தோடே போ

மார்ச் 24

“சமாதானத்தோடே போ.” லூக்கா 7:50

உண்மையான சமாதானம் பாவமன்னிப்பிலிருந்து உண்டாகிறது. தேவன் கிறிஸ்துவினால் நமது அக்கிரமங்களையல்லாம் மன்னித்துவிட்டாரென்று நாம் விசுவாசிக்கும்போது நமது ஆத்துமா அந்தச் சமாதானத்தை அனுபவிக்கும். நாம் விசுவாசத்தால் நீதிமான்களாக்கப்பட்டபடியினால் தேவ சமாதானத்தைப் பெற்றிருக்கிறோம். தேவனைப்பற்றி நாம் பயப்படவேண்டியதில்லை. நம்மை மன்னித்துவிட்டபடியால் நம்மீது அவர் குற்றஞ்சுமத்தமாட்டார். அவர் நமக்கு நன்மை செய்வார் என்று எதிர்ப்பார்க்கலாம். தம்முடைய குமாரனiயே தந்தவர், சகலத்தையும் நமக்கு இலவசமாய்க் கொடாமல் இருப்பாரா? நாம் எத்தீங்குக்கும் பயப்படாமல் எந்த நன்மையும் கிடைக்கும் என்று அவரை விசுவாசித்திருந்தால் நாம் சமாதானமாய் இருக்கலாம்.

இயேசு கிறிஸ்து அந்த ஸ்திரீயை மன்னித்து சமாதானத்தோடே போ என்று சொன்னதுபோல் நம்மையும் பார்த்துச் சொல்லுகிறார். சாத்தான் சொல்வரை கவனியாதே. மனிதனின் செயல்களில் அக்கறைக்கொள்ளாதே. பயப்படாமல் உன் கடமையைச் செய் . துன்பமும் சோதனையும் நேரிட்டால் அவைகளைச் சகித்துக்கொள். தேவ பக்திக்குரிய சிலாக்கியங்களை அனுபவி. மோசங்கள் சூழலாம். பெலவீனங்கள் பெருகலாம். ஆனாலும் சமாதானத்தோடே போ. தேவன் உன்னை ஏற்றுக்கொள்வார். நீ தேவனோடு ஒப்புவாக்கப்பட்டபடியால் தேவ நாமத்தை பிரஸ்தாபம்பண்ணு. யேகொவாவின் அன்பையும் மன்னிப்பையும் எங்கும் போய் சொல். அவர் சொல்வது உண்மை என்று சாட்சி சொல். உன்னால் உன் சத்துருக்கள் எல்லாரையும் ஜெபிக்க வைக்க முடியும். இன்று சமாதானமாய் இளைப்பாறு. தேவன் என்னோடு இருக்கிறார் என்று சொல்லி உன்னை ஆற்றித் தேற்றிக்கொள். அவர் சமாதானத்துடன் போ என்கிறார்.

என்னை அன்பாய் பாருமே
என் துக்கத்தை நீக்கிடும்
பயம் சந்தேகம் போக்கிடும்.
சமாதானம் கூறிடும்.

இஸ்ரவேலின் ஜெயபலமானவர் பொய் சொல்லுகிறதில்லை

மார்ச் 04

“இஸ்ரவேலின் ஜெயபலமானவர் பொய் சொல்லுகிறதில்லை.” 1.சாமு. 15:29

கர்த்தர் பொய் சொல்லாதவரானபடியால் நாம் அவருக்கு உண்மையாக இருந்து அவரை நம்பவேண்டும். இது நமது கடமை. அவருக்கு முன்னால் பொய்யற்றவர்களாக நிற்க வேண்டும். அவருடைய பொய் சொல்லா வாக்குகளெல்லாம் அவர் அன்பிலிருந்து பிறக்கும் கனிகள். அவர் சர்வ வல்லவரானபடியால் தமது வார்த்தைகளை எவ்விதமும் நிறைவேற்ற வல்லவராயிருக்கிறார். அவர் உண்மையுள்ளவராய் இருக்கிறபடியால் எவ்விதத்தினாலும் அதை நிறைவேற்றுவார். தமது ஜனங்களை ஆற்றித்தேற்ற அவர் வல்லமை உள்ளவர். அவர் தமது வசனத்தின்மூலம், நம்மோடு பேசுகிறார். பாவிகளாகிய நம்மைப் பார்த்து பேசுகிறார். சோதனையிலும், துன்பத்திலுமிருக்கிற உங்களைப் பார்த்து இந்த நாளில் இருக்கிறவிதமாய் பேசுகிறார்.

நம் பயங்களைப் போக்க, நம்முடைய துன்பங்களில் நம்மை மகிழ்ச்சியாக்க, நம்முடைய வருத்தங்களில் நமக்கு ஆறுதல் அளிக்க நம்மைப் பார்த்துப் பேசுகிறார். அவர் உண்மையுள்ள வார்த்தையை நாம் உண்மையாய் நம்புகிறோமா? தேவன் உண்மையையே பேசுகிறார் என்று நினைக்கிறோமா? அவர் நமக்கு உண்மையாய் இருக்கிறதுபோல நாமும் அவருக்கு உண்மையாய் இருக்கிறோமா? அவர் சொல்லைப்பற்றி பிடித்திருக்கிறோமா? எப்போதும் உண்மை தேவனை நோக்குகிறோமா? எப்போதுமே நமது பரமபிதா உண்மை வார்த்தைகளைத்தான் பேசுகிறார் என்று விசுவாசிக்கிறோமா? வானமும் பூமியும் ஓழிந்தாலும் என் வார்த்தைகளோ ஒழிந்து போகாது என்று இயேசு சொன்னதை உண்மையானது என்று உண்மையாய் நம்புங்கள். அவரை நம்பி நடவுங்கள். அவருடைய வார்த்தையை நோக்குங்கள். அப்படி நோக்கும்போது பின் வருகிற பிரகாரம் சொல்லலாம்.

தேவனே சொன்னதால்
அவர் உண்மையுள்ளவராதலால்
வாக்கை நிறைவேற்றுவார்
எதையும் செய்து முடிப்பார்.

அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரில் அன்புகூருகிறோம்

மார்ச் 11

“அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரில் அன்புகூருகிறோம்.”
1.யோவான் 4:19

நாம் தேவனை நேசிக்கும் நேசம் அவர் நமதுபேரில் வைத்த நேசத்தின் தயைதான். நாம் இந்த ஜீவகாலத்தில் அவரை நேசிக்கும்படி, அவர் நித்திய காலமாய் நம்மை நேசித்தார். நேசிக்க வேண்டிய தகுதி ஒன்றும் நம்மில் இல்லாதிருந்தும் நம்மை அவர் நேசித்தார். அவர் அளவற்ற அன்பு நிறைந்தவரானபடியால், நாம் அவரை நேசிப்பது நம்முடைய கடமை. அவரின் அன்பு நமக்கு வெளிப்பட்டபடியினாலே தான் அவரை நாம் நேசிக்க ஏவப்படுகிறோம். அவரின் அன்பு நமது இருதயத்தில் ஊற்றப்பட்டபடியால்தான் நாம் அவரை நேசிக்கிறோம் சாபத்தின்படி ஒருவனும் தேவனை நேசிக்கிறதில்லை. தன் மாம்சத்தின்படி ஒருவனும் தேவனை நேசிக்கவும் முடியாது. ஏனென்றால் மாம்ச சிந்தை தேவனுக்கு விரோதமான பகை. அது தேவ பிரமாணத்திற்கு அடங்கியிருக்கிறதுமில்லை. அடங்கியிருக்கவும் மாட்டாது.

நாம் தேவனை நேசித்தால், அல்லது மனதார நேசிக்க விரும்பினால், நமது இருதயம் மாற்றப்பட்டதற்கு அது ஓர் அத்தாட்சி. அந்த மாறுதல் அவர் நம்மை நேசித்ததின் பலன். எந்தப் பரம நம்மையும் அவருடைய அன்பிலிருந்து பாய்கிறது. அவரில் உண்டாகியதெதுவும் உடன் படிக்கைக்குரிய ஆசீர்வாதமானதால் திரும்ப அவரண்டைக்கே நம்மை நடத்துகிறது. அவரின் வார்த்தையில் வைக்கிற  விசுவாசமும், அவர் இரக்கத்தில் நமக்கு நம்பிக்கையும், அவர் பிள்ளைகளிடத்தில் நாம் வைக்கிற அன்பும், அவர் சேவைகளில் நமக்கிருக்கும் வைராக்கியமும், பாவத்திற்காக நாம் படும் துக்கமும், பரிசுத்தத்தின்மேல் நமக்கிருக்கும் வாஞ்சையும் அவர் நம்மை நேசிக்கிறார் என்பதற்கு அத்தாட்சிகள். நம்மைப்போல பாவிகள் தேவனுடைய பிள்ளைகள் என்று சொல்லப்படுவதற்கு இணையான அன்புண்டோ.

நீர் என்னை நேசிக்கிறீரென்பதை
நான் சந்தேகிக்கக் கூடாது
உம்மை நேசிக்கச் செய்யுமேன்
என் நேசம் வர்த்திக்கப்பண்ணுமேன்.

தேவனிடத்தில் சேருங்கள்

மார்ச் 13

“தேவனிடத்தில் சேருங்கள்.” யாக். 4:8

பாவமானது நம்மைத் தேவனைவிட்டு வெகுதூரம் கொண்டுபோய்விடும். அவிசுவாசம் நம்மை அங்கேயே நிறுத்தி வைத்துவிடும். ஆனால் கிருபையோ சிலுவையில் இரத்தத்தைக் கொண்டு நம்மைத் திரும்ப தேவனண்டைக்குக் கொண்டு வருகிறது. நாம் பாவம் செய்யும்போது தேவனைவிட்டு திரிந்தலைகிறோம். தேவனுக்குச் சமீபமாய் வரவேண்டும் என்பதே அவரது பிரியம். அவர் கிருபாசனத்தண்டையில் வீற்றிருக்கிறார். நமக்காகப் பரிந்து பேச இயேசுவானவர் சி;ம்மாசனத்துக்குமுன் நிற்று நம்மை அழைக்கிறார். தேவ சந்நிதியைக்காண இயேசுவின்மூலமாய் அவரின் நம்பிக்கை வைக்க நம்முடைய இருதயங்களை அவருக்கு முன்பாக ஊற்ற நாம் சிங்காசனத்தண்டைக்கு போகவேண்டும்.

நம்மைப் பயப்படுத்துகிற சகலத்தையும் நாம்விரும்புகிற சகலத்தையும் நமக்குத் தேவையான சகலத்தையும் அவருக்குச் சொல்ல, நமக்கு இருக்கிற எல்லாவற்றிற்காகவும், கடந்த காலத்தில் பெற்றுக்கொண்ட நன்மைக்காகவும், இனி வேண்டிய தேவைகளுக்காகவும் சிம்மாசனத்தண்டை சேர வேண்டும். நாம் கூச்சப்படாமல் பயபக்தியாய் சகலத்தையும் அவருக்கு அறிவிக்கலாம். தேவன் சித்தத்தை அறிந்துகொள்ள அவரின் அன்பை ருசிக்க, மனகவலை நீங்க, அவரை சொந்தமாக்கிக்கொள்ள, தேவ சமுகம் தேடி, அவரிடத்தில் வந்து சேருங்கள். அவரும் உங்களுக்குச் சமீபமாய் வருவார்.

இயேசுவே வழியாம்
அவரால் மோட்சம் சேர்வோம்
அவரால் பிதாவின் சமுகம்
கண்டென்றும் ஆனந்திப்போம்.

நான் தேவனுக்குப் பயப்படுகிறேன்

மார்ச் 30

“நான் தேவனுக்குப் பயப்படுகிறேன்.” ஆதி. 42:18

இந்த வார்த்தைகளை யோசேப்பு, தன் சகோதரரைப் பார்த்துச் சொன்னான். தன் தகப்பனுக்குப் போஜன பதார்த்தங்களை அனுப்பும்போது இப்படிச் சொன்னான்;. கிpறஸ்தவ மார்க்கத்திற்கு விரோதமாக நடக்க நாம் சோதிக்கப்பட்டால் நாம் இப்படி சொல்லலாம். உத்தமமான தேவபயம் அன்பினால் பிறந்து பிள்ளையைப்போல தேவனோடு உறவாடுவதனால் உறுதிப்படுகிறது. இந்தப் பயம் அவருடைய மகத்துவத்தைப் பார்த்துப் பயப்படும் பயம் அல்ல. அவருக்கு வருத்தம் உண்டாக்க கூடாதே என்கிற பயம்தான். இந்தப் பயத்திற்கு காரணம் பரிசுத்த ஆவியானவர்.. பாவம் செய்யாதிருக்க இவர் நல்ல மாற்று. தேவனுக்கு மனஸ்தாபம் உண்டாக்கப் பயந்தால் எவ்விதமும் அவரைப் பிரியப்படுத்த பார்ப்போம். உண்மையாக நான் அவரை நேசித்தால் அவருக்கு மனஸ்தாபம் உண்டாக்க பயப்படுவேன். இந்தப் பயம் நம்மை எச்சரிப்புள்ளவர்களாகவும், விழிப்புள்ளவர்களாகவும் இருக்கப்பண்ணும். இது நம்மை ஜெபத்திற்கு நடத்தும். தற்பரிசோதனை செய்ய ஏவி விடும். நமது நடக்கையை வசனத்தோடு ஒத்துப் பார்க்கப்பண்ணும். இது நம்மை ஜெபத்திற்கு நடத்தும். தற்பரிசோதனை செய்ய ஏவி விடும். நமது நடக்கையை வசனத்தோடு ஒத்துப் பார்க்கப்பண்ணும். துணிகரத்திற்கும் அசட்டைக்கும் உண்மை தாழ்ச்சிக்கும் நம்மை விலக்கிக் காக்கும்.

தேவனுக்குப் பயப்படுகிறவன் பாவிகள் வழியில் நடக்கமாட்டான். துன்மார்க்கர் ஆலோசனையில் நிற்கமாட்டான். பரியாசக்காரருடைய இடத்தில் உட்காரமாட்டான். அவன் பிரியம் தேவ வசனத்தில் இருக்கும். அதை இரவும் பகலும் தியானிப்பான். இன்று தெய்வ பயம் நம்மை நமத்தினதுண்டா? நான் தேவனுக்குப் பயப்படுகிறேன் என்று நீங்கள் சொன்னதுண்டா? அப்படியில்லை என்றால் நாம் கர்த்தருக்குப் பயப்படவில்லை என்றே சொல்லமுடியும். உன்னால் நான் கர்த்தருக்குப் பயப்படுகிறவன் என்று சொல்லக்கூடுமா?

தேவ பயம் சுகம் தரும்
வெளிச்சம் இன்பம் அளிக்கும்
தெய்வ செயலை விளக்கும்
இரக்கத்தைப் பெரிதாக்கும்.

நீங்கள் விண்ணப்பம்பண்ணியும் பெற்றுக்கொள்ளாமல் இருக்கிறீர்கள்

மார்ச் 27

“நீங்கள் விண்ணப்பம்பண்ணியும் பெற்றுக்கொள்ளாமல் இருக்கிறீர்கள்.”
யாக் 4:3

கொடுப்பதில் தேவன் மமற்றவரா? அவர் சொல் தவறி போகுமா? இல்லை போகாது. ஆனால் பாவத்திற்கு இடங்கொடுக்கவோ, மதியீனத்திற்கு சம்மதிக்கவோ அவர் சொல்லுவில்லை. நமது ஜெபங்களுக்கு எல்லாம் பதில் கொடுக்க முடியும. ஆனால் நாம் ஜெபிக்கும்போது நம்முடைய நோக்கம் இன்னதென்று தேவன் கவனிக்கிறார். நமது விண்ணப்பங்களுக்கு செவிகொடுக்கும்போது நம்முடைய மனதை அறிந்துக்கொள்கிறார். நம் ஆசைகளை நிறைவேற்று நம் இச்சைகளைத் திருப்பதிப்புடுத்த உலக காரியங்களை நாம் கேட்போமானால் அவைகளையுமு; தேவன் கொடுப்பாரென்று நாம் எண்ணக்கூடாது. மாம்சத்திற்குரிய நோக்கத்தை முடிக்க ஆவிக்கரிய நன்மைகளைக் கேட்கும்போது தேவன் அவைகளையும் மறுக்கிறது நியாயந்தான்.

ஒருவேளை நாம் கேட்கிறது நல்ல காரியங்களாய் இருக்கலாம். ஆனால் நம்முடைய நோக்கம் தேவனை மகிமைப்படுத்தி, இயேசுவை உயர்த்தி, அவருடைய காரியத்தை நிறைவேற்றுவதாய் இருக்க வேண்டும். இந்த நோக்கம் நமக்கிராவிட்டால் நாம் தகாவிதமாய் கேட்கிறவர்களாய் இருப்போம். உலக காரியங்களைப்பற்றி அதிக வாஞ்சைக்கொண்டு பரம காரியங்களைப்பற்றி அதிக கவலையற்றிருக்கலாம். கெட்ட இச்சைகளாகிய பெருமை, பொருளாசை, பொறாமை இவைகளும் நம்மை ஜெபத்தில்ஏவலாம். ஆகவே நமது ஜெபத்திற்கு பதில் கிடையாத காரணம் என்ன என்பதை யோசிக்க வேண்டும். நமது சுயசித்தம், நம் சிந்தை, நமது நோக்கம் போன்றவை தகாததாய் இருக்கிறதா என்று கவனிக்க வேண்டும். நாம் ஏன், எப்படி, எதற்காக ஜெபம்பண்ணுகிறோம் என்று நம்மை நாம் ஆராய வேண்டும்.

ஜெபத்தில் என் நோக்கம்
தப்பாய் இருப்பதால்
என் உள்ளம் சுத்திகரியும்
உம்மிடம் என்னை இழும்.

My Favorites

நாம் அவரை அறியும்படியாக

மார்ச் 25 "நாம் அவரை அறியும்படியாக" பிலி. 3:10 அப்போஸ்தலனாகிய பவுல் ஏழு விசேஷித்த காரியங்களைக் குறித்து விருப்பங்கொண்டான். அவைகளை இந்தச் சுருக்கமான நிருபத்தில் காணலாம். அவை அத்தனையும் கிறிஸ்துவைப் பற்றினதுதான். பவுல் எல்லாவற்றிற்கும் இயேசுவையே...
Exit mobile version