முகப்பு வலைப்பதிவு பக்கம் 29

சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்

ஏப்ரல் 30

“சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்”  மத். 5:5

சாந்தகுணம் மனப்பெலவீனமல்ல. பல சமயம் நாம் தவறாய் இரண்டையும் ஒன்றாக்கி விடுகிறோம். கல்மனமுள்ளவர்களிடமும் சாந்த குணம் இருக்கிறது. சாந்த குணம் உள்ளவர்கள் தேவ சித்தத்திற்குக் கீழ்ப்படிந்து அவர் வார்த்தையை மதித்து நடுங்குகிறார்கள். இவர்கள் தேவன் சொல்லும் எல்லாவற்றையும் முறுமுறுக்காமல் காற்றுக்குச் செடி வளைகிறதுப்போல வணங்கி கர்த்தரின் சித்தம் ஆகக்கடவது என்பார்கள்.

சாந்த குணமுள்ளவர்கள் மௌனமாய்த் தேவ கட்டளைகளுக்கு அர்ப்பணித்து இயேசுவைப்போல் பொறுமையாய் நடந்து, பரிசுத்தாவியின் நடத்துதல்படி நடப்பார்கள். அவர்கள் தேவனிடம் தாழ்மையோடும், பிறரிடம் விவேகத்தோடு நடந்து தங்களுக்குப் புகழைத் தேடாமல் கர்த்தருக்கு மகிமையைத் தேடுவார்கள். இவர்கள் சாந்த குணமுள்ள ஆட்டுக்குட்டிகள். கெர்ச்சிக்கிற சிங்கங்கள் அல்ல. சாதுவான புறாக்கள். கொல்லுகிற கழுதுகளல்ல. ஆட்டைப்போல உபகாரிகள். ஓநாய்போல கொலையாளிகளல்ல. இவர்கள் கிறிஸ்துவைப்போல் நடந்து அவரைப்போல் பாக்கியராயிருப்பார்கள். இப்போது அவர்களுக்கு இருப்பது எல்லாம் கொஞ்சந்தான். ஆனால் பூமியைச் சீக்கிரத்தில் சுத்திகரித்துக் கொள்வார்கள். அவர்களுடைய மனநிலையே பெரிய பாக்கியம். ஒன்றுமற்றவர்களைக் கலங்கடிக்கும் பூசலுக்கு விலகி இருக்கிறார்கள். மற்றவர்கள் சேதப்படும்போது இவர்கள் தப்பி சுகமாய் காக்கப்படுகிறார்கள். மற்றவர்கள் கோபமாய் இருக்கும்போது இவர்கள் சாந்தமாய் இருக்கிறார்கள். மற்றவர்கள் கோபமாய் இருக்கும்போது இவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். மற்றவர்கள் எதிர்த்து நிற்கும்போது இவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். மற்றவர்கள் எதிர்த்து நிற்கும்போது இவர்கள் பொறுமையாய் இருக்கிறார்கள். மற்றவர்கள் கலங்கி இருக்கும்போது இவர்கள் அமர்ந்து இருக்கிறார்கள். மற்றவர்கள் சாபமாகும்போது இவர்கள் ஆசீர்வாதமாகிறார்கள்.

ஏழைப்பாவி நான்
சாந்தம் எனக்களியும்
ஏழை பலவீனன் நான்
தாழ்மையை எனக்கருளும்.

நான் ஐசுவரியவான் என்று சொல்லுகிறாய்

ஏப்ரல் 29

“நான் ஐசுவரியவான் என்று சொல்லுகிறாய்”  வெளி 3:17

கர்த்தர் தமது ஏழை மக்களைப் பார்த்து உங்களுக்காக நான் சவதரித்து வைத்திருக்கிற காரியங்களைப்பற்றி, நீங்கள் ஐசுவரியமுள்ளவர்கள் என்று சொல்வது வேறு. பெருமைக்கொண்ட பேர் கிறிஸ்தவன் தான் ஐசுவரியவானென்று சொல்லிக்கொள்வது வேறு என்கிறார். ஆவியின் சிந்தையுள்ளவர்கள் எப்போதும் தங்களுடைய வறுமையை உணருகிறபடியால் தங்களை வெறுத்து தங்களுக்கு வேண்டியதையெல்லாம் கிறிஸ்துவின் நிறைவிலிருந்து பெற்றுக்கொள்ள கற்றுக்கொள்ளுகிறார்கள். நம்முடைய பக்தியயும், செய்கையையும், ஐசுவரியத்தையும்பற்றி நாமே மெச்சிக்கொள்வது நல்லதல்ல. அப்படி செய்தால் இயேசுவைவிட்டு நம் கண்களைத் திருப்பிவிட்டோம் என்றே பொருள். சாத்தானும் நம்மேல் ஜெயமடைவான். இரட்சகர் பாதத்தில் விழுந்து நமது குறைவுகளை உணர்ந்து அவருடைய நிறைவிலிருந்து எதையும் செய்யவும் எந்தச் சிலாக்கியத்தையும் அனுபவிக்கத்தக்கதாக தேடும்போதுதான் நாம் சுகமுடன் இருப்போம்.

தங்களை ஐசுவரியவான்களென்று நினைத்துக் கொண்டிருக்கிறவர்களைப் பார்த்து ஆண்டவர் நிர்ப்பாக்கியமுள்ளவரும், பரிதபிக்கத்தக்கவரும், தரித்திரரும், குருடரும், நிர்வாணியுமானவர்கள் என்று சொல்லுகிறார். இவர்கள் தம்மிடம் வந்து நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், வெண் வஸ்திரத்தையும் பார்வையடையும்படிக்கு கண்ணுக்குத் கலிக்கத்தையும்  வாங்கிக்கொள்ளச் சொல்கிறார். நம்மிடம் இருக்கும் எதையும்பற்றியும் நாம் பெருமை அடையாதிருப்போமாக. தரித்திரராகிய நீங்கள் பாக்கியவான்கள், பரலோக இராஜ்யம் உங்களுடையது. ஐசுவரியவான்களாகிய உங்களுக்கு ஐயோ என்கிறார். நீங்கள் ஒருபோதும் எதிலும் பெருமையடையாமல் உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்.

என் நிர்ப்பந்தத்தைப் பாருமேன்
நான் நிர்வாணி, குருடன்
ஒன்றுமற்ற பாவி நான்
முற்றிலும் அபாத்திரன்
உமது பாதம் நம்பினேன்
இல்லையேல் கெடுவேன்.

தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு

ஏப்ரல் 28

“தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு” 1.பேதுரு 1:5

தேவனுடைய ஜனங்கள் எல்லாரும் தேவன் தங்களைப் பாதுகாப்பது அவசியம் என்று எண்ணி தங்களைப் பாதுகாக்க வேண்டுமென்று ஜெபிக்கிறார்கள். இப்படி ஜெபிப்பது மட்டும் போதாது, வாக்குத்தத்தங்களைப் பற்றிப் பிடித்து, அவைகள் நிறைவேறும் என்று விசுவாசத்தோடு எதிர்ப்பார்த்திருக்க வேண்டும். விசுவாசத்தினால்தான் தேவ வல்லமை நம்மிடமிருந்துப் புறப்படும். விசுவாசத்தினால்தான் தேவ வாக்கைப்பிடித்து கிருபாசனத்துக்குச் சமீபம் சேருகிறோம். மரணத்துக்கும்கூட காக்கப்படுகிறோம்.

அவிசுவாசத்தால் நாம் தேவனைவிட்டு விலகி அலைந்து திரிந்து, பாவத்துக்கும் புத்தியீனத்துக்கும் உள்ளாகிறோம். ஜீவனுள்ள தேவனை விட்;டு விலகுவதற்கு ஏதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களுக்கு இல்லாதபடி எச்சரிக்கையாய் இருங்கள். உங்களில் ஒருவரும் பாவத்தின் வஞ்சனையினால் கடினப்பட்டுப் போகாதபடிக்கு அனுதினமும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள். தேவன் நம்மை மிருகங்களைப்போல் அல்லாது புத்தியுள்ள சிருஷ்டிகளாகத்தான் பாதுகாப்பார். அவர் உன்னைச் சவாரி பண்ணுகிறவன் குதிரையைப் போலும் கோவேறு கழுதையைப்போலும் கடிவாளத்தில் இழுக்கிறதுபோல் இழுக்காமல், அன்புள்ள பிள்ளைகளைப்போல் நடத்தி, ஆசையுள்ள சிருஷ்டிகளைப்போல் காப்பார். அவர் வல்லமை உங்களுக்கு அவசியம் வேண்டும். அவர் வல்லமையை நம் பிள்ளைகளுக்கு மட்டுமே பயன்படுத்துகிறார். விசுவாசிகளும் விசுவாசத்தோடும் நம்பிக்கையோடும் ஜெபிக்கும் போதுதான் அவரோடு பிணைக்கப்பட்டிருக்க முடியும்.

தேவ கரம் என்னைக் காக்கும்
தீய்க்கும் தண்ணீருக்குக் தப்புவேன்
மரணம் என்மீது வரினும்
ஒருகாலும் பயப்படேன்.

பிரியமானவர்களுக்குள் முன்குறித்திருக்கிறார்

ஏப்ரல் 27

“பிரியமானவர்களுக்குள் முன்குறித்திருக்கிறார்”  எபேசி. 1:5-6

இயேசுகிறிஸ்துவானவர்தான் இப்பிரியமானவர். அவரின் பிதாவோ இவரை அளவற்றவிதமாய் நேசிக்கிறார். அவரை அவர் ஜனங்கள் நேசிக்கிறார்கள். நேசிக்கத்தக்கவர். அவர் தன்மையும், வாழ்க்கையும் நேசிக்கத்தக்கவைகள். தேவ ஜனங்கள் யாவரும் இவர்மூலமாய் தேவனிடத்தில் சேருகிறார்கள். இவர் மேலேயே இவர்கள் நம்பிக்கை வைக்கிறார்கள். அவரோடு ஐக்கியப்பட்டு அவருடன் ஒன்றாககக் காணப்படுகிறார்கள். அவரிலே பார்க்கும்போது தேவனுடைய பார்வையில் அருமையானவர்களும் நேசிக்கப்படத்தக்கவர்களுமாய் இருக்கிறார்கள்.

தேவன் தம் பிள்ளைகளை முற்றும் அழகுள்ளவர்களென்று சொல்லி, அவர்கில் கறையில்லை என்கிறார். அன்பரே! நம்மில் நாமே குறைவுள்ளவர்கள், மகா பரிசுத்தருக்கு வெறுப்புண்டாக்குகிறார்கள். ஆனால், கிறிஸ்துவிலே நாம் பரிசுத்தர், நீதிமான்கள், சவுந்தரியவான்கள். அவர் நீதியால் நாம் உடுத்தப்பட்டிருப்பதால் தேவன் நம்மை நீதிமான்களென்கிறார். அவருடைய ஆவியால் நாம் நிரப்பப்படும்போது தேவன் நம்மை நேசிக்கத்தக்கவர்கள் என்கிறார். இயேசுவின்மூலமன்றி வேறு வழியே சென்றால் தேவன் நம்மை ஏற்றுக்கொள்ள மாட்டார். பிரியமானவர்மூலம் நம்மை அங்கீகரித்துக்கொள்வதினால், தம்முடைய கிருபையை யாவரும் கண்டு பிரமிப்பு அடையும்படி அதை மகிமைப்படுத்துகிறார். விசுவாசிகளாக தேவன் அங்கீகரித்துக் கொள்கிறார். இதைவிட அதிகமாய் அவர் நம்மை அங்கீகரித்துக் கொள்கிறார். இதைவிட அதிகமாய் அவர் நம்மை அங்கீகரிக்கப் போவதில்லை. நாம் அங்கீகரிக்கப்பட்டோம் என்பதை அதிக திட்டதாய் அறிந்து அதை அதிக சந்தோ}மாய் அனுபவிக்கலாம். ஆனால் இப்பொழுது இருக்கிறதிலும் அதிகமாய் நாம் அங்கீகரிக்கப்படவும் மாட்டோம்.

இயேசுவுக்கு நன்றியாக
அவர் ஒளியில் நடப்பேன்
முழுவதும் சுத்தனாகுமட்டும்
அவரையே பின்பற்றுவேன்.

எசேக்கியா மனமேட்டிமையானான்

ஏப்ரல் 26

“எசேக்கியா மனமேட்டிமையானான்” 2.நாளா. 32:25

எசேக்கியா மனமேட்டிமையில் அதிகம் வளர்ந்து விட்டான். அவன் நல்லவன்தான். சற்று நேரத்துக்கு முன்னே தேவன்புக்குரிய சாட்சி பெற்றான். நாம் மாம்சத்தின்படி பெருமை வாய்ந்தவர்களானபடியால் தேவன் நமக்குத் தயவு காட்டும்போது நாம் வெகு அதிகமாய் இன்னும் மனமாட்டிமை கொள்கிறோம். தேவன் சோதிக்கும்போது  முறுமுறுக்கிறோம். தேவன் அதிகமாய் தம்மை நமக்கு வெளிப்படுத்தும்போதுதான் டிடிடிடிடி அதிகம் சோதிப்பார். ஆகவே நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். பெருமையைப் பகைக்கிறது போல் வேறெதையும் அவ்வளவு அதிகம் பகைக்கிறதில்லை. அடிகனநநந445வர் அதைச் சகிக்க அவ்வளவு அதிகம் பகைக்கிறதில்லை. அவர் அதைச் சகிக்க மாட்டார். ஆனாலும் நாம் பெருமையில்தான் அதிகம் விழுந்து விடுகிறோம்.

பெருமையுள்ள இருதயம் நல்ல கனிகளைக் கொடாது. தாழ்மையுள்ள இருதயம் ஆவியின் கனிகளைக் கொடுக்கும். பெருமையால், பகையும் விரோதமும், பாகுபாடும், இருதய கடினமும், அடையாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். பெருமைப்பட்டால் தேவன் நம்மை கீழேத் தள்ளி எசேக்கியாவின் விஷயத்தில் செய்ததுப்போல் நமக்கும் செய்ததுப்போல் நமக்கும் செய்துவிடலாம். சாத்தான் நாம் பெருமையில் வளர வேண்டும் என்பதால் நாம் ஜெபம்பண்ணுவதை விட்டுவிடச் செய்வான். ஜெபம்செய்வதை நிறுத்துவோமானால் சாத்தானுடைய ஆதிக்கத்திற்குக் கீழே இருப்போம். அவனோடிருந்தால் பெருமை வந்துவிடும். ஆகவே கிருபை பெறுமுன் எப்படி இருந்தோம். கிருபையை பெறாவிட்டால் எப்படி இருப்போம். கிருபையினால் தேவன் நம்மை இரட்சிக்காவிட்டால் நம்முடைய நிலைமை எப்படி இருக்குமென்று எண்ணி தாழ்மையாய் இருப்போமாக.

இயேசுவே உம்மைப்போல் நான்
தாழ்மையுள்ளோன் சுத்தவான்
சாந்தம் உள்ளவனாக
இருக்கச் செய்யும் தேவன்.

ஆனந்த பாக்கியத்திற்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்

ஏப்ரல் 25

“ஆனந்த பாக்கியத்திற்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்” தீத்து 2:13

கிறிஸ்தவன் எதிர்பார்க்க வேண்டியவன். அவனுக்கு வேண்டிய நல்ல காரியங்கள் அவனுக்கு முன் வைக்கப்பட்டிருக்கிறது. அவனுக்கிருக்கும் வாக்குத்தத்தங்கள் வெளிப்படப்போகிற மகிமையைப் பற்றியது. பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் வரப்போகும் மேசியாவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவரும் வந்தார். ஊழியம் செய்தார். துன்பப்பட்டார். பிராயச்சித்தம் செய்தார். திருப்பி போகும்போது நான் மகிமையாய் மறுபடியும் வருவேனென்று வாக்குக் கொடுத்தார். மகா பரிசுத்த ஸ்தலத்துக்குப் போய் இப்போது நமக்காக பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார். நம்மை ஆசீர்வதிக்க சீக்கிரம் வருவார். அப்போது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். உயிரோடிருக்கும் பரிசுத்தவான்கள் ஆறுதல் அடைந்து புத்திரசுவிகாரத்தை அடைவார்கள். நாமும் எடுத்துக்கொள்ளப்பட்டு ஆட்டவரோடு என்றென்றுமாய் இருப்போம்.

இது நம்முடை நம்பிக்கை, இந்த நம்பிக்கையை எதிர்ப்பார்த்துதான் நாம் வாழ வேண்டும். மரணம் என்று எங்கும் சொல்லவில்லை. மரணத்தையல்ல, இயேசுவின் வருகையே எதிர்நோக்கி ஜீவிக்க வேண்டும். பக்தனாகிய ஏனோக்கு இப்படித்தான் ஜீவித்தான். அவன் தேவனோடு சஞ்சரித்து அவருக்குப் பிரியமாய் நடந்தபடியால் பரலோகத்திற்கு உயர்த்தப்பட்டான். அப்போஸ்தலர்களும் ஆதி கிறிஸ்தவர்களும் இப்படித்தான் வாழ்ந்ததால் நம்மைப்போல் இவ்வுலக காரியங்களால் அத்தனை வருத்தம் அடையரிருந்தார்கள்.

நம்பிக்கையால் ஏவப்பட்டு
கர்த்தரை எதிர்ப்பார்ப்பேன்
மகிமையோடு வருவார்
என்னையும் தம்மிடம் சேர்ப்பார்.

சமீபத்திற்கு மாத்திரமா தேவன்?

ஏப்ரல் 24

“சமீபத்திற்கு மாத்திரமா தேவன்?” எரேமி. 23:23

தேவபிள்ளை ஒரு சிநேகிதனைத் தேடி தூரமாய்ப் போகவேண்டியதில்லை. கர்த்தர் எப்போதும் அவனுக்குச் சமீபமாயிருக்கிறார். அவர் சமீபத்திலிருக்கிற தேவன். தேவன் நம்மைக் கவனிக்க தயாராயிருக்கிறார். உதவி செய்யவும் ஆயத்தமாயிருக்கிறார். இதை நாம் உணர்ந்துக்கொள்ள வேண்டும். நாம் கலங்கி இருக்கும்போது இதுவே நம்மைச் சந்தோஷப்படுத்தும். சோதனையில் இது நம்மை ஆறுதல்படுத்தும், பயத்தில் தைரியம் சொல்லும். பாவம் செய்யாதபடி தடுக்கும். கடமைகளை முடிக்க உற்சாகத்தைக் கொடுக்கும். சோர்ந்துப்போன சமயத்தில் எழுப்பிவிடும். நமது நண்பர்கள் நம்மை விட்டு பிரிந்து விடுவார்கள். இனஜன பந்துக்கள் நமது கஷ்டத்தில் அதிகம் பங்கேற்கமாட்டார்கள். ஆனால் தேவனோ நமது சமீபத்தில் இருக்கிறார். நமக்கு இரக்கங்காட்டி நம்மைக் கண்டிதஇது புத்தி சொல்லி ஆதரிக்க அவர் சமீபத்தில் இருக்கிறார்.

நமக்கு அவர் சமீபத்திலிருக்கிறது மட்டுமல்லாமல் எங்கும் இருக்கிறார். தூரத்திலிருக்கிற நம்முடைய சிநேகிதர்களோடு இருக்கிறார். மறைவிடங்களில் ஒளித்திருக்கிற நம்முடைய சத்துருக்களோடு இருக்கிறார். அவர்களுடைய யோசனைகளை அழித்து அவர்களுடைய விரோதங்களை நமக்கு நன்மையாக  நடத்துவார். தேவன் சமீபமாயிருக்கிறார். தூங்கும்போது அவர் விழித்திருந்து நம்மைப் பாதுகாக்கிறார். அவர் சித்தமின்றி ஒன்றும் நம் வாழ்வில் நடப்பதில்லை. தேவனுக்குத் திடீரென்று ஒன்றும்  சம்பவிக்கிறதில்லை. எவ்வளவு தூரத்திலிருந்தாலும் பார்க்கிறார். சகலத்தையும் நன்மைக்காக முடிப்பேன் என்று அவர் சொல்லியிருப்பதால் அந்த எண்ணத்தோடு இருப்போமாக. ஆத்துமாவே! நீ ஒருபோதும், உன் தேவன் சமீபத்திலிருக்கிறார் என்பதை மறவாதபடிக்குப் பார்.

தேவனே எனக்கு
உமது மகிமையைக் காண்பியும்
உமது வல்லமையே
என் இதயம் உணரட்டும்.

உண்மையுள்ள இருதயத்தோடு சேரக்கடவோம்

ஏப்ரல் 23

“உண்மையுள்ள இருதயத்தோடு சேரக்கடவோம்” எபி. 10:22

அவிசுவாசத்தினால்தான் நாம் தேவனுக்குத் தூரமாய் இருக்கிறோம். அப்போது ஆவியில் குளிர்ந்துப்போய் ஆறுதலற்றவர்களாகிறோம். தேவன் மகா பரிசுத்த ஸ்தலத்தில் இருக்கிறார். அவர் இரக்க சிம்மாசத்தில் வீற்றிருக்குpறார். தன்னைப் பலியாய் கொடுத்ததினால் பாவம் பகைக்கப்பட்டுப் போயிற்று. திரைச்சீலையே இரட்சகர் கிழித்துப் போட்டார். அவரிடம் சேர வழி தாராளமாய் திறந்திருக்கிறது. நம்முடைய பிரதான ஆசாரியன் இரத்தத்தோடு அங்கே நிற்கிறார். தூபவர்க்கம் பொற்கலசத்தில் எரிந்துக் கொண்டிருக்கிறது. தேவனுடைய மனது நம்முடைய காரியங்களில் உத்தமமாய் இருக்கிறது.

தேவன் தம் குமாரனைக் கொடுத்த அன்பு வெறும் அன்பல்ல. இரட்சகரும் நம்முடைய விஷயத்தில் உண்மையான அன்பு வைத்திருக்கிறார். இல்லையென்றால் நம்முடைய பாவங்களுக்காக மரித்திருக்கவும்மாட்டார். நமக்காக பரிந்து பேச மேட்சத்திற்கு போயிருக்கவும்மாட்டார். நாம் தேவனுக்கு உத்தம பிள்ளைகளாய் நம்பிக்கையோடே அவரிடம் சேருவோமாக. அவரிடம் மனம் திறந்து பேச மனிதன் ஆசைகளையும், விருப்பங்களையும் தாராளமாய் சொல்லலாம். பயந்த வேலைக்கானைப்போல தூர நில்லாமல், தகப்பனிடத்துக்கு ஓடி அவர் மடியில் தலையை வைக்கிற குழந்தையைப்போல் நெருங்கி சேருவோமாக. கோபாமுள்ள தேவனுக்கு முன்பாக நடுங்குகிறதுபோல் தூரத்தில் நில்லாமல் அவரை உறுதியாய் நம்புகிறவர்களைப்போல அவர் அருவே போவோமாக. அடிமையைப் போல் அல்ல, பிள்ளைகளுக்குரிய அமர்ந்த நம்பிக்கையினால் அவரை மகிமைப்படுத்துவோம்.

இயேசுவின் இரத்தம் நம்பி
தேவனிடம் சேருவேன்
இரக்க ஆசனத்தை நோக்கி
தைரியமாய் ஜெபிப்பேன்.

அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன்

ஏப்ரல் 22

“அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன்” சங்கீதம் 116:12

ஒவ்வொரு நாளும் முடியும்போது இப்படி கேட்பது நல்லதல்லோ? இன்று மாலை துதி செலுத்த வேண்டியதாயிருந்தாலும் இந்த நாளில் கடந்த காரியங்களை மட்டும் நினைக்கக் கூடாது. கர்த்தர் நமக்கு செய்தது என்ன என்று நம்மை நாமே கேட்க வேண்டும். அவர் எண்ணிலா நன்மைகளைச் செய்திருக்கிறார். இல்லாவிட்டால் நன்மையுள்ளவர்களாய், ஆசீர்வாதமுள்ளவர்களாய் நாம் இருக்க மாட்டோம். அவர் கிருபைகளைத் தந்து பயங்களைப் போக்கி, விடுதலையளித்துத் தேவைகளைச் சந்தித்து விசுவாசத்தை உறுதிப்படுத்தி மகிமைப்படுத்துவேன் என்று வாக்களித்திருக்கிறார். நாம் பெற்றுக்கொள்வதெல்லாம் உபகாரந்தான். அது சுத்தக் கிருபையிலிருந்துப் பிறந்து, அபாத்திரருக்கு நன்மையை அளிப்பதாய் உள்ளது.

பிதா நமக்கு தமது குமாரனைக் கொடுத்தார். நாம் நிறைவேற்றின கிருபைகளைக் கொடுத்தார். ஆவியானவர் தமது ஜீவனைத் தந்து நம் இருதயத்தில் குடிகொண்டுள்ளார். ஆகவே அவருக்கு என்னத்தைச் செலுத்துவோம்? நாம் என்ன செலுத்தக்கூடும்? என்ன செலுத்த மனதாய் இருக்கிறோம்? நாம் வரங்கள் பெற்றிருக்கிறோமென்றால், அதை அவர் புகழ்ச்சிக்கென்று பிரயோகிப்போமாக. அவர் திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்து, அவர் சத்துருக்களுக்கு விரோதமாய் போராடுவோமாக. அவர் ஊழியத்தில் துன்பங்களைச் சகித்து, ஏழைகளுக்கு நம்முடைய பொருளைக் கொடுப்போமாக. அவரோடு நெருங்கி சஞ்சரிக்கிறதுதான் அவருக்குப் பிரியம். அவர் சுவிசேஷத்தை உலகிற்கு அறிவித்து வியாதியுள்ளவர்களைச் சந்தித்து, அவருடைய எளியவர்களுக்கு உதவிசெய். உன் சம்பத்துக்குத்தக்கபடி உன் நன்றியறிதலைக் காட்டு. ஓரே வாழ்க்கையைக் கிறிஸ்துவுக்காய் பிரதிஷ்டைப்பண்ணி ஜீவியம்பண்ணு. தேவனுக்காய் பிரதிஷ்டை செய்யப்பட்ட சீஷனாக ஜீவனம்பண்ணு.

கர்த்தர் காட்டும் தயவுக்கு
பதில் என்ன செய்வேன்
அவர் வழிகளைக் காத்து
அவர் சொற்படி நடப்பேன்.

கிறிஸ்து நம்மை தேவனிடத்தில் சேர்க்கும்படிக்கு

ஏப்ரல் 21

“கிறிஸ்து நம்மை தேவனிடத்தில் சேர்க்கும்படிக்கு” 1.பேதுரு 3:18

கிறிஸ்து செய்து முடித்த சகல கிரியைகளிலும் பிரயாசங்களிலும் அவர் சகித்த சகல பாடுகளிலும் அவர் கொண்ட நோக்கம் இதுதான். சுபாவத்தின்படி நாம் தேவனுக்கு தூரமானவர்கள்: அவருக்கு விரோதிகள். அவரைக்கண்டால் பயப்படுகிறவர்கள். ஆகவே நாம் பாக்கியத்துக்கும், சமாதானத்திற்கும் தூரமானவர்கள். தேவனோடிருக்கிறது, தேவனைப்போல் இருக்கிறது பாக்கியமாதென்று இயேசுவுக்குத் தெரியும். அவர் தம்முடைய மக்களை நேசித்தபடியால் இந்தப் பாக்கியம் அவர்களுக்கு கிடைக்கும்படியே விரும்புகிறார். அவரின் பிள்ளைகளுக்காக எதையும் செய்யவும், எதையும் சகிக்கவும் அவர் அதிகம் விரும்பினார். ஆதலால் அவர் மனதார நம்முடைய பாவங்களுக்காகப் பாடனுபவித்து, தம்மை பலியாகத் தந்து பாவங்களை நிவிர்த்தி செய்தார். மகிமையோடு நம்மைத் தேவனோடு சேர்க்கும்பபடிக்கு அவர் நோக்கம் கொண்டார்.

கிருபாசனத்தின்மேல்  வீற்றிருக்கும் பிதாவின் அருகே நம்மைக் கொண்டு வருகிறார். இங்கே நாம் மன்னிப்பைப் பெற்று, சமாதானம் அடைந்து, தேவன்பை ருசிக்கிறோம். கிருபாசனத்தண்டையில் நமக்கு வேண்டியதெல்லாம் பெற்றுக்கொள்கிறோம். பெரிய வாக்குத்தத்தங்கள் அங்கே நிறைவேறுகின்றன. இங்கே நம்மை ஏற்றுக்கெர்டு தயவு காட்டினார் என்பது அங்கே விளங்கும். பரிபூரணராயும், பாக்கியவான்களாயும் அங்கே இருப்போம். அவரும் மகிழ்ச்சி அடைவார். நாமும் திருப்தியடைவோம். நாம் தேவனிடம் சேருவது, அவர் மரணத்தால் உண்டான பலன். தேவனோடிருப்பது அவர் பட்டபாடுகளின் பிரதிபலன்.

நம்மை தேவனண்டை
இழுத்து சேர்க்கும்படி
பாடுபட்டு உத்தரித்து
இரத்தம் சிந்தி மரித்தார்.

My Favorites

பிரியமானவர்களுக்குள் முன்குறித்திருக்கிறார்

ஏப்ரல் 27 "பிரியமானவர்களுக்குள் முன்குறித்திருக்கிறார்"  எபேசி. 1:5-6 இயேசுகிறிஸ்துவானவர்தான் இப்பிரியமானவர். அவரின் பிதாவோ இவரை அளவற்றவிதமாய் நேசிக்கிறார். அவரை அவர் ஜனங்கள் நேசிக்கிறார்கள். நேசிக்கத்தக்கவர். அவர் தன்மையும், வாழ்க்கையும் நேசிக்கத்தக்கவைகள். தேவ ஜனங்கள் யாவரும் இவர்மூலமாய்...
Exit mobile version