Home Blog Page 38

சகல கிருபையும் பொருந்திய தேவன்

ஏப்ரல் 01

“சகல கிருபையும் பொருந்திய தேவன்.” 1. பேது.5:10

யேகோவா தேவன் தம்மைக் குறித்துச் சொல்வது எத்தனை மகிழ்ச்சியாயிருக்கிறது. நாம் தேவனது மேலான குணநலன்களையும் தகுதிகளையும் பார்த்துவிட்டு, அவருக்கு எதிராக தகாத பல காரியங்களையும் செய்து விடுகிறோம். அவர் சகல கிருபை பொருந்தின தேவனாயிருக்கிறதுமல்லாமல் நீதியுள்ள தேவனாயும் இருக்கிறார். அளவற்ற நித்திய கிருபையுள்ள தேவன். இரக்கத்தின் ஐசுவரியமும் அவரிடத்தில் உண்டு. குற்றவாளியை மன்னிக்கிறதும், மரித்தோரை உயிர்ப்பிக்கிறதும், ஆறுதல் அள்ளவர்களுக்கு ஆறுதல் தருபவரும், பெலவீனரைப் பெலப்படுத்துகிறதும், வழி தப்பி திரிகிறவர்களைத் திரும்பக் கொண்டு வந்து சேர்க்கிறதும், கெட்டுப்போனவர்களை இரட்சிக்கிறதுமான கிருபை அவரிடத்தில் உண்டு.

தம்முடைய மக்களுக்கு அவர் செய்கிற கிரியைகளில் தமது கிருபையை வெளிப்படுத்துவதில் எவ்வளவு தாராளமாய் அந்தக் கிருபையைக் காட்டினார். சிலுவையில் அறையப்பட்ட கள்ளனை இரட்சித்ததில் ஏற்ற காலத்தில் கிருபையைக் காட்டினார். காட்டத்தி மரத்தினின்று சகேயுவை இறங்கி வரச் சொன்னபோது, அவன் எதிர்பாராதவிதமாய் இந்தக் கிருபையை வெளிப்படுத்தினார். இவைகளெல்லாம் கிருபை நிறைந்த தேவன் நமக்கு காட்டும் இரக்கமாகும். தேவனை நாம் அளவற்ற கிருபை நிறைந்தவராய்ப் பார்ப்போமாக. அபாத்திரரும் பாவிகளுமான நம்மிடத்தில் தான் அவர் மாட்சிமையும், கிருபையும் மகிமையும் அதகமாய் விளங்குகிறது. இது நமது ஐயங்களை நீக்கி ஜாக்கரதையுள்ளவர்கள் ஆக்க வேண்டும். நம்பிக்கையோடும் நன்றி உணர்வோடும் அவருக்கு ஒப்புவிக்க இது நம்மை ஏவ வேண்டும். நமது தேவன் சகல கிருபையினாலும் நிறைந்தவர் என்ற சிந்தையினால் உண்டாகும் மகிழ்ச்சியோடு இன்று இரவு நித்திரைக்குச் செல்வோமாக.

தேவனே நான் உம்மைவிட்டு
கெட்டு அலையாமல்
மன்னித்து மகிழ்ச்சியாக்கும்
உம் சமுகம் என்னைக் காக்கும்.

கர்த்தர் நன்மையானதைத் தருவார்

மார்ச் 31

“கர்த்தர் நன்மையானதைத் தருவார்.” சங். 85:12

நலமானது எதுவோ அதைக் கர்த்தர் நமது ஜனத்திற்குத் தருவார். நம்மை ஆதரிக்க உணவையும், பரிசுத்தமாக்க கிருபையையும், மகுடம் சூட்டிக்கொள்ள மகிமையையும் நமக்குத் தருவார். தலமானதை மட்டும்தான் தேவன் தருவார். ஆனால் நாம் விரும்பிக்கேட்கிற அநேக காரியங்களைத் தரமாட்டார். நலமானதைத் தருவார். தகுந்த காலத்திலதான் எந்த நன்மையையும் தருவார். கடைசியில் பெரிய நன்மைகளை நாம் பெற்றுக்கொள்ளத்தக்கதாக இப்போது நமக்கு நலமானதைத் தருவார். எந்த நன்மையும் இயேசுவின் கரத்திலிருந்தே வரும். அவர் தமது ஜனங்களுக்கு நன்மையைத் தருவார் என்வது அவருக்க் அவர்களுக்கம் இருக்கும் ஐக்கியத்தினால் உறுதிப்படுகிறது. அவர்களுக்கு இவர் பிதா. அவர்களுக்காக அவர் அளவற்ற அன்பையும் உருக்கமான கிருபையையும் வைத்திருக்கிறார். அது கிருபையினாலும் வாக்குத்தத்தத்தினாலும் உறுதிப்படுத்தப்படுகிறது.

தேவன் சத்துருக்களை நேசித்து சிநேகிதரைப் பட்டினிப்போடமாட்டார். அவர் நமக்குக் கொடுக்கும் நிச்சயம் நம் பொறுமையில்லாமையைக் கண்டிக்க வேண்டும். கர்த்தருக்குக் காத்திரு. ஜெபத்திற்கு அது உன்னை ஏவி எழுப்பட்டும். அவரிடம் நன்மையான காரியத்தைக் கேள். அது உன் விசுவாசத்தை வளரப்பண்ணும். அவரின் வார்த்தையை விசுவாசி. அது உனக்குத் திருப்பதியை உண்டாக்கு. தேவன் உனக்கக் கொடுக்கும் நன்மையில் திருப்பி அடையப்பார். அது உனக்குள் நம்பிக்கையை எழுப்பட்டும். எந்த நல்ல காரியத்தையும் கர்த்தரிடத்திலிருந்துப் பெற்றுக்கொள்ளப் பார்.

கர்த்தர் நன்மை தருவார்
மகிமை அளிப்பார்
தம்முடையோர்களுக்கு அதை
அவசியம் அளிப்பது நிச்சயம்.

நான் தேவனுக்குப் பயப்படுகிறேன்

மார்ச் 30

“நான் தேவனுக்குப் பயப்படுகிறேன்.” ஆதி. 42:18

இந்த வார்த்தைகளை யோசேப்பு, தன் சகோதரரைப் பார்த்துச் சொன்னான். தன் தகப்பனுக்குப் போஜன பதார்த்தங்களை அனுப்பும்போது இப்படிச் சொன்னான்;. கிpறஸ்தவ மார்க்கத்திற்கு விரோதமாக நடக்க நாம் சோதிக்கப்பட்டால் நாம் இப்படி சொல்லலாம். உத்தமமான தேவபயம் அன்பினால் பிறந்து பிள்ளையைப்போல தேவனோடு உறவாடுவதனால் உறுதிப்படுகிறது. இந்தப் பயம் அவருடைய மகத்துவத்தைப் பார்த்துப் பயப்படும் பயம் அல்ல. அவருக்கு வருத்தம் உண்டாக்க கூடாதே என்கிற பயம்தான். இந்தப் பயத்திற்கு காரணம் பரிசுத்த ஆவியானவர்.. பாவம் செய்யாதிருக்க இவர் நல்ல மாற்று. தேவனுக்கு மனஸ்தாபம் உண்டாக்கப் பயந்தால் எவ்விதமும் அவரைப் பிரியப்படுத்த பார்ப்போம். உண்மையாக நான் அவரை நேசித்தால் அவருக்கு மனஸ்தாபம் உண்டாக்க பயப்படுவேன். இந்தப் பயம் நம்மை எச்சரிப்புள்ளவர்களாகவும், விழிப்புள்ளவர்களாகவும் இருக்கப்பண்ணும். இது நம்மை ஜெபத்திற்கு நடத்தும். தற்பரிசோதனை செய்ய ஏவி விடும். நமது நடக்கையை வசனத்தோடு ஒத்துப் பார்க்கப்பண்ணும். இது நம்மை ஜெபத்திற்கு நடத்தும். தற்பரிசோதனை செய்ய ஏவி விடும். நமது நடக்கையை வசனத்தோடு ஒத்துப் பார்க்கப்பண்ணும். துணிகரத்திற்கும் அசட்டைக்கும் உண்மை தாழ்ச்சிக்கும் நம்மை விலக்கிக் காக்கும்.

தேவனுக்குப் பயப்படுகிறவன் பாவிகள் வழியில் நடக்கமாட்டான். துன்மார்க்கர் ஆலோசனையில் நிற்கமாட்டான். பரியாசக்காரருடைய இடத்தில் உட்காரமாட்டான். அவன் பிரியம் தேவ வசனத்தில் இருக்கும். அதை இரவும் பகலும் தியானிப்பான். இன்று தெய்வ பயம் நம்மை நமத்தினதுண்டா? நான் தேவனுக்குப் பயப்படுகிறேன் என்று நீங்கள் சொன்னதுண்டா? அப்படியில்லை என்றால் நாம் கர்த்தருக்குப் பயப்படவில்லை என்றே சொல்லமுடியும். உன்னால் நான் கர்த்தருக்குப் பயப்படுகிறவன் என்று சொல்லக்கூடுமா?

தேவ பயம் சுகம் தரும்
வெளிச்சம் இன்பம் அளிக்கும்
தெய்வ செயலை விளக்கும்
இரக்கத்தைப் பெரிதாக்கும்.

சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்

மார்ச் 29

“சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்.” மத். 28:20

அப்படியானால் இயேசு இந்த நாளிலும் நம்முடன் இருக்கிறார். இனி சகல நாள்களிலும் இருப்பதுப்போல் இப்போதும் இருக்கிறார். இனிமேலும் இருப்பார். நம்மை பாதுகாக்க, ஆறுதல்படுத்த, நமக்கு பயத்தை நீக்கு, நமக்குள்ளே நம்பிக்கையைப் பிறப்பிக்க அவர் நம்மோடிருக்குpறார். நம்மோடு தம்மை ஒன்றாக்கிக் கொள்ளுகிறார். நமது காரியங்களைத் தமது காரியங்களாக்கிக் கொள்ளுகிறார். அவர் நம்மோடிருப்பேன் என்று வாக்களித்தபடியால் அந்த வாக்கு நம்மை காக்கிற கேடகம். நம் இருதயத்தின் பலன். நமது சந்தோஷத்தின் ஊற்று. நாம் தனிமையாய் ஓர் அடிவைத்தாலும் நம்மைவிட்டு போகமாட்டார். ஒரு நொடிப்பொழுதும் தமது கண்களை நம்மிதிலிருந்து எடுக்கமாட்டார்.

ஓர் அன்பு தாயிக்குத்தன் ஆசை குழந்தையின்மேல் இருக்கும் பாவத்தைவிட நம்மீது அதிக பாசம் வைத்திருக்கிறார். இவ்வுலக கட்டுகளைவிட கிருபையின் கட்டுகள் அதிக பலத்ததும் உருக்கமுமானவைகள். இயேசுவானவர் நம்மோடிருக்கிறார். அவர் எப்போதும் நமக்க முன்னே இருக்கிறாரென்று நமது மனிதல் வைக்க வேண்டும். இவ்வுலகத்தில் கடைசி மட்டும் ஏற்றுக்கொள்ள காத்திருக்கிறவர் அவரே. ஆதலால் ஒன்று மட்டும் நமக்கு நிச்சயமாய் கிடைக்கும். அது இயேசுவின் சமூகம். அது தேவதூதர்களுக்குச் சந்தோஷத்தையும், மோட்சத்தில் ஆனந்தத்தையும், நித்திய நித்திய காலமாய் மகிமையையும் கொடுக்கும். ஆகNவு, ‘இதோ உலகத்தின் முடிவு பரியந்தமும் சகல நாள்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்” என்ற இயேசுவின் வாக்குகளை நம்பி இந்த இராத்திரியில் படுக்கச் செல்வோமாக.

என் ஜீவ காலம் எல்லாம்
உமக்கொப்புவிக்கிறேன்
உம்மைத் துதிப்பது இன்றும்
என்னோடிருப்பேன் என்றதால்.

நான் பொல்லாப்புக்குப் பயப்படேன்

மார்ச் 28

“நான் பொல்லாப்புக்குப் பயப்படேன்.” சங். 23:4

நான் கர்த்தருடையவனானால் ஏன் பயப்பட வேண்டும்? கர்த்தருக்கம் பயந்து நடந்தால் எதற்கும் பயப்பட தேவையில்லை. கர்த்தர் உன்னை எல்லா தீமைக்கும் விலக்கிக் காப்பார். ஒரு சோதனையும் வராமல் காப்பாரென்றல்ல. சோதனைகள் தீமையல்ல. நன்மைகள்தான். தீமையானவைகள் இரண்டுதான். ஒன்று பாவம், மற்றொன்று பின்மாற்றம். விசுவாசிகளுக்கு பாவம் மன்னிக்கப்பட்டு போயிற்று. அவர்கள் கிறிஸ்துவுடன் சிலுவையிலறைப்பட்டவர்கள். விசுவாசியின்மேல் அது ஆளுகை செய்வதில்லை. பின்மாற்றத்திற்கு விசுவாசிகள் வாழ்க்கையில் இடமில்லை. கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மை ஒன்றும் பிரிக்க முடியாது.

நமக்குள் இருந்து நம்மை நமத்த வேண்டியது பயமல்ல. அன்பே! திகிலல்ல, நம்பிக்கையே! கர்த்தர் நம்மைக் காக்கிறவர். அவர் நம்முடைய ஆத்துமாவைக் காக்கிறவர். நமக்கு கஷ்டங்களும், துன்பங்களும், பிசாசாலும், மனிதனாலும் வரலாம். வறுமையும் வியாதியும் நண்டாகலாம். மரணமும் நமக்குத்தீமை அல்ல. அதற்கும் நாம் பயப்பட தேவையில்லை. கிறிஸ்துவைப்பற்றி அவருக்காக அவரைப்போல நடப்போமாக. அப்போது மரிக்கும்போது கிறிஸ்துவுடன் இருப்போம். இங்கிருப்பதைவிட அங்கிருப்பதே நல்லது. சாவு நமக்கு ஆதாயமாகும். ஆகவே வாக்குத்தத்தத்தை உறுதியாய் பற்றிப்பிடித்து, இரத்தம் சிந்திய கிறிஸ்துவின் அருகே நடந்து, தேவனை மகிமைப்படுத்திய உயிரோடிருக்கும் நாளெல்லாம் பொல்லாப்புக்குப் பயப்படேன் என்று சொல்லுவோமாக.

கலங்காதே திகையாதே
இயேசுவுக்கு நீ சொந்தம்
உன்னை மோட்சத்தில்
சேர்ப்பதே அவர் ஆனந்தம்.

நீங்கள் விண்ணப்பம்பண்ணியும் பெற்றுக்கொள்ளாமல் இருக்கிறீர்கள்

மார்ச் 27

“நீங்கள் விண்ணப்பம்பண்ணியும் பெற்றுக்கொள்ளாமல் இருக்கிறீர்கள்.”
யாக் 4:3

கொடுப்பதில் தேவன் மமற்றவரா? அவர் சொல் தவறி போகுமா? இல்லை போகாது. ஆனால் பாவத்திற்கு இடங்கொடுக்கவோ, மதியீனத்திற்கு சம்மதிக்கவோ அவர் சொல்லுவில்லை. நமது ஜெபங்களுக்கு எல்லாம் பதில் கொடுக்க முடியும. ஆனால் நாம் ஜெபிக்கும்போது நம்முடைய நோக்கம் இன்னதென்று தேவன் கவனிக்கிறார். நமது விண்ணப்பங்களுக்கு செவிகொடுக்கும்போது நம்முடைய மனதை அறிந்துக்கொள்கிறார். நம் ஆசைகளை நிறைவேற்று நம் இச்சைகளைத் திருப்பதிப்புடுத்த உலக காரியங்களை நாம் கேட்போமானால் அவைகளையுமு; தேவன் கொடுப்பாரென்று நாம் எண்ணக்கூடாது. மாம்சத்திற்குரிய நோக்கத்தை முடிக்க ஆவிக்கரிய நன்மைகளைக் கேட்கும்போது தேவன் அவைகளையும் மறுக்கிறது நியாயந்தான்.

ஒருவேளை நாம் கேட்கிறது நல்ல காரியங்களாய் இருக்கலாம். ஆனால் நம்முடைய நோக்கம் தேவனை மகிமைப்படுத்தி, இயேசுவை உயர்த்தி, அவருடைய காரியத்தை நிறைவேற்றுவதாய் இருக்க வேண்டும். இந்த நோக்கம் நமக்கிராவிட்டால் நாம் தகாவிதமாய் கேட்கிறவர்களாய் இருப்போம். உலக காரியங்களைப்பற்றி அதிக வாஞ்சைக்கொண்டு பரம காரியங்களைப்பற்றி அதிக கவலையற்றிருக்கலாம். கெட்ட இச்சைகளாகிய பெருமை, பொருளாசை, பொறாமை இவைகளும் நம்மை ஜெபத்தில்ஏவலாம். ஆகவே நமது ஜெபத்திற்கு பதில் கிடையாத காரணம் என்ன என்பதை யோசிக்க வேண்டும். நமது சுயசித்தம், நம் சிந்தை, நமது நோக்கம் போன்றவை தகாததாய் இருக்கிறதா என்று கவனிக்க வேண்டும். நாம் ஏன், எப்படி, எதற்காக ஜெபம்பண்ணுகிறோம் என்று நம்மை நாம் ஆராய வேண்டும்.

ஜெபத்தில் என் நோக்கம்
தப்பாய் இருப்பதால்
என் உள்ளம் சுத்திகரியும்
உம்மிடம் என்னை இழும்.

இரக்கங்களின் பிதா

மார்ச் 26

“இரக்கங்களின் பிதா.” 2. கொரி. 1:3

யேகோவா நமக்குப் பிதா, இரக்கமுள்ள பிதா, உருக்கம் நிறைந்த பிதா. அவர் இரக்கங்களின் ஊற்றாயிருக்கிறபடியால், இரக்கங்களெல்லாம் அவரிடத்திலிருந்து தோன்றி அவரிடத்திலிருந்தே பாய்கிறது. நமக்குக் கிடைத்த விசேஷ இரக்கம் இரட்சகர்தான். அவர் தேவனின் ஒரே பேறான குமாரன். அவர் குமாரனை நம்மெல்லாருக்காகவும் இலவசமாய் ஒப்புக்கொடுத்தார். நம்மை உயிர்ப்பித்து, ஆறுதல்படுத்தி, இன்னும் நம்மைப் பாதுகாத்து வருகிற இரக்கத்திற்கு காரணர் அவரே. இரக்கமாய் நமக்கு வருகிற துன்பங்களும், விடுதலைகளும், இடைஞ்சல்களும், சகாயங்களும், நம்மைகளும் அவரின் சித்தத்தின்படிதான் நமக்கு வருகிறது.

அவரே இரக்கங்களின் பிதா, நமக்கு வரும் உருக்கமான இரக்கமெல்லாம் அவரிடத்திலிருந்தே பாய்கிறது. அவர் நம்மிடம் கோபிக்கிறவர் என்றும், அவர் கடினமானவர் என்றும் பல சமயங்களில் தப்பாய் நினைக்கிறதை இனி நீக்கி நமது விசுவாசத்தையும், நம்பிக்கையையும், அன்பையும் உற்சாகப்படுத்துகிறது. நாம் ஆராதிக்கிற தேவன் இரக்கம் நிறைந்தவர் என்று நம் ஆத்துமா அறிவதுதான் மிக முக்கியம். அப்போதுதான் சாத்தானின் அக்கினி அப்புகளைத் தடுக்க இது ஒரு நல்ல கேடகம். தேவனிடமிருந்து நாம் பெற்றுக்கொள்ளும் சகல ஈவுகளிலும் அவரை அதிகமாய் நேசிக்க இது ஒரு நல்ல வழி.

அன்பர்களே, இன்றிரவு உங்களுக்கு என்ன தேவை? இரக்கமா? அது தேவனிடத்தில் உண்டு. அது உங்களுக்கு நன்மையென்றால் அதைத்தர மனதாயிருக்கிறார். இன்றிரவு ங்கள் பரம பிதாவை நோக்குp கெஞ்சுங்கள். அவர் உற்களுக்கு இரங்குவார். அது உங்களுக்கு தேவையாயிருக்கிறது. எந்த இரக்கமானாலும் அதை உங்கள் முன்பாகக் கொண்டு வந்து வைப்பார்.

ஆத்துமாவே, உன் நேகர்
எந்நாளும் மாறாதவர்
யார் போயினும் அவரில்
நிலைத்துப் பிழைத்து நில்.

நாம் அவரை அறியும்படியாக

மார்ச் 25

“நாம் அவரை அறியும்படியாக” பிலி. 3:10

அப்போஸ்தலனாகிய பவுல் ஏழு விசேஷித்த காரியங்களைக் குறித்து விருப்பங்கொண்டான். அவைகளை இந்தச் சுருக்கமான நிருபத்தில் காணலாம். அவை அத்தனையும் கிறிஸ்துவைப் பற்றினதுதான். பவுல் எல்லாவற்றிற்கும் இயேசுவையே பிடித்து எப்போதும் அவர் சமூகத்தை நோக்கியே ஓடினான். அவன் ஆத்தும வாஞ்சை, விருப்பம் எல்லாம் அவரையே பற்றியிருந்தது. கிறிஸ்துவை அறியவும், அவரைத் தன் சரீரத்திலும், ஆத்துமாவிலும் மேன்மைப்படுத்தவும், அவரை ஆதாயப்படுத்திக் கொள்ளவும், அவரில் கண்டு பிடிக்கப்படவும், அவரில் ஒப்பாகவும், அவர் வரும் நாளில் மகிழ்ச்சி அடையவும், அவரோடிருக்கவும் விரும்பினான்.

கிறிஸ்துவை அறிகிற அறிவு மற்றெல்லா அறிவிலும் மேன்மையானது. ஆனால் நாம் அவரைக் குறைந்த அளவே அறிந்திருக்கிறோம். அதனால் குறைந்த அளவே அனுபவிக்கிறோம். அவரை ஆழமாய் தெளிவாய் அறிந்துக்கொள்ள வேண்டும் என்று நம் ஆத்துமா வாஞ்சிக்கிறதா? அந்த அறிவு பெலனுள்ளதாயும், நமது நினைவுகளையும், விருப்பங்களையும், நம்பிக்கையையும், பயங்களையும், ஆசைகளையும் தேவனுக்கு முன்பாகவும், மனுஷருக்கு முன்பாகவும் குறிப்பாக பரிசுத்தவான்களுக்கு முன்பாக நம் நடக்கையை ஒழுங்குபடுத்த நம் ஆத்தமா வாஞ்சிக்கிறதா? நமது அறிவு கிறிஸ்துவை அறிகிற அறிவில் வளர ஆவல் கொள்ளுகிறதா? நாம் கிறிஸ்துவை உண்மையாயும் உத்தமமாயும் அறிய விரும்புகிறோமா? அப்படியானால் அவர் வசனத்தை ஆராய்ந்துப் பார்ப்போம். அவரின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவோம். அவர் உண்மையான வாக்குகளைப்பற்றி தியானிப்போம். அவர் சமுகத்தையே நோக்குவோம். அவரைக்குறித்து அவருடைய மக்களிடம் பேசுவோம்.

ஆட்டுக்குட்டியின் மரணம்
நித்திய ஜீவ காரணம்
இவ்வறிவை அடையட்டும்
இதிலே நான் தேறட்டும்.

சமாதானத்தோடே போ

மார்ச் 24

“சமாதானத்தோடே போ.” லூக்கா 7:50

உண்மையான சமாதானம் பாவமன்னிப்பிலிருந்து உண்டாகிறது. தேவன் கிறிஸ்துவினால் நமது அக்கிரமங்களையல்லாம் மன்னித்துவிட்டாரென்று நாம் விசுவாசிக்கும்போது நமது ஆத்துமா அந்தச் சமாதானத்தை அனுபவிக்கும். நாம் விசுவாசத்தால் நீதிமான்களாக்கப்பட்டபடியினால் தேவ சமாதானத்தைப் பெற்றிருக்கிறோம். தேவனைப்பற்றி நாம் பயப்படவேண்டியதில்லை. நம்மை மன்னித்துவிட்டபடியால் நம்மீது அவர் குற்றஞ்சுமத்தமாட்டார். அவர் நமக்கு நன்மை செய்வார் என்று எதிர்ப்பார்க்கலாம். தம்முடைய குமாரனiயே தந்தவர், சகலத்தையும் நமக்கு இலவசமாய்க் கொடாமல் இருப்பாரா? நாம் எத்தீங்குக்கும் பயப்படாமல் எந்த நன்மையும் கிடைக்கும் என்று அவரை விசுவாசித்திருந்தால் நாம் சமாதானமாய் இருக்கலாம்.

இயேசு கிறிஸ்து அந்த ஸ்திரீயை மன்னித்து சமாதானத்தோடே போ என்று சொன்னதுபோல் நம்மையும் பார்த்துச் சொல்லுகிறார். சாத்தான் சொல்வரை கவனியாதே. மனிதனின் செயல்களில் அக்கறைக்கொள்ளாதே. பயப்படாமல் உன் கடமையைச் செய் . துன்பமும் சோதனையும் நேரிட்டால் அவைகளைச் சகித்துக்கொள். தேவ பக்திக்குரிய சிலாக்கியங்களை அனுபவி. மோசங்கள் சூழலாம். பெலவீனங்கள் பெருகலாம். ஆனாலும் சமாதானத்தோடே போ. தேவன் உன்னை ஏற்றுக்கொள்வார். நீ தேவனோடு ஒப்புவாக்கப்பட்டபடியால் தேவ நாமத்தை பிரஸ்தாபம்பண்ணு. யேகொவாவின் அன்பையும் மன்னிப்பையும் எங்கும் போய் சொல். அவர் சொல்வது உண்மை என்று சாட்சி சொல். உன்னால் உன் சத்துருக்கள் எல்லாரையும் ஜெபிக்க வைக்க முடியும். இன்று சமாதானமாய் இளைப்பாறு. தேவன் என்னோடு இருக்கிறார் என்று சொல்லி உன்னை ஆற்றித் தேற்றிக்கொள். அவர் சமாதானத்துடன் போ என்கிறார்.

என்னை அன்பாய் பாருமே
என் துக்கத்தை நீக்கிடும்
பயம் சந்தேகம் போக்கிடும்.
சமாதானம் கூறிடும்.

மன்னிக்கிறவர்

மார்ச் 23

“மன்னிக்கிறவர்.” சங். 86:5

கர்த்தர் இரக்கத்தில் பிரியப்படுகிறவராகவும், கோபத்திற்கு ஆத்தரப்படாதவராகவும், மன்னிக்கிற தேவனாகவும் வெளிப்படுகிறார். இது உண்மையானபடியால் இதை எப்போதும் நாம் விசுவாசிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் மன்னிப்பைத்தேடி எதிர்நோக்கிப் பெற்றுக்கொள்ள வேண்டும். அவரை நம்பி துக்கப்பட்டு அறிக்கையிடுகிற யாவருக்கும் கர்த்தர், அதை மன்னிக்க மனதுள்ளவரும், பின்வாங்காதவரும் ஆவார். ஆண்டவரின் நாமத்தில் அவரிடத்தில் வருகிற ஒவ்வொருவருக்கம் மன்னிப்பளிக்கும்போது தம்முடைய வசனத்துக்கு உண்மையுள்ளவராகவும், தமது குமாரனுடைய இரக்கத்தின்படி நியாயஞ்செய்கிறவராகவும் வெளிப்படுகிறார். அவன் மன்னிக்கிறவரானதால் நாம் பயப்படதேவையில்லை. மனம் கலங்க அவசியமில்லை. இந்த விஷயத்தில் கிறிஸ்துவைச் சந்தேகிப்பது பாவமாகிவிடும். ஆகையால் மகாபாவியையும் குறைவின்றி மன்னிக்க ஒரு வழியை ஏற்படுத்தியுள்ளார். பாவிகளாம் நம்மை மன்னித்து சேர்த்துக்கொள்ள, தம் அன்புள்ள ஒரே பேறான குமாரனைப் பிராயச்சித்த பலியாய் ஒப்புக்கொடுத்ததால் மன்னிக்க ஆயத்தமுள்ளவர் என்பதைக் காட்டினார்.

பிராயச்சித்தமின்றி மன்னிப்பு கிடையாது. அவர் செய்யக் கூடியதை எவ்விதமும் செய்வார். இயேசுவின் பிராயச் சித்தத்தின்படி தேவன் எவ்விதப் பாவிக்கும் பூரணமாய், சுலபமாக அனுதினமும் மன்னிப்பு அளிக்கு முடியாது. இந்த இரவிலும் இந்த நாளின் பாவங்களையும் முந்தின எல்லாப் பாவங்களையும் நமக்கு மன்னித்து, இந்த நேரத்திலேயே தர ஆயத்தமாய் இருக்கிறார். இது எவ்வளவு பெரிய சத்தியம்.

மரித்துயிர்த்த இயேசுவை
விசுவாசத்தால் நோக்குவோம்
அப்போது நீதிமான்களாகி
பரத்தில் சேர்ந்து களிகூறுவோம்.

Popular Posts

My Favorites