முகப்பு வலைப்பதிவு பக்கம் 38

உமது வாக்கை என் இருதயத்தில் வைத்து வைத்தேன்

ஜனவரி 29

“உமது வாக்கை என் இருதயத்தில் வைத்து வைத்தேன்.”  சங். 119:11

பழைய உடன்படிக்கையின் பலகைகள் பெட்டியில் வைத்து பரிசுத்த ஸ்தலத்தில் பத்திரப்படுத்தப்பட்டது. புது உடன்படிக்கையோடு விசுவாசிகளின் இருதயத்தில் வைத்து பத்திரப்படுத்தப்பட வேண்டும். தினசரி பாரத்தோடு கூடிய ஜெபத்திலும் தியானத்திலும் நாம் தேவனுடைய சுத்த வசனத்தை அறிந்து அனுபவித்து, அதைப் பத்திரப்படுத்தக் பார்க்க வேண்டும். இது தினசரி போஜனத்துக்காக நாம் சேர்க்க வேண்டிய வேலைக்குச் சட்டம். நமது நம்பக்கைக்கு ஆதாரமாகிய கிருபைகளையும், விலையேறப் பெற்ற வாக்குத்தத்தங்களையும் நாம் பத்திரப்படுத்த வேண்டும்.

நமது இருதயத்தில் பத்திரப்படுத்தினால் இந்த விலையேறப் பெற்ற பொக்கிஷத்தை ஒருவனும் நம்மை விட்டு எடுத்துக் கொள்ளமாட்டான். நமக்கு தேவைப்படும்போது நாம் அதைத் தேட வேண்டியதில்லை. ஆகையால் அதன் அருமையை அறிந்து அதிலுள்ளதை மதித்து அதை ஆராய்ந்துப் பார்த்து, தியானஞ் செய்து தினசரி ஆகாரமாய் அதை உள்கொள்ள வேண்டும். நமது மனதில் பத்திரப்படுத்தாமல்விட்டால் நாம் பரிசுத்தமடைய மாட்டோம். நம்முடைய வாழ்வில் கனிகளும் இருக்காது. இருதயத்தில் இருந்தால் தான் நடக்கையில் தெரியும். நாம் அனைவரும் வாசிக்கும்படியான நிருபங்களாயிருக்கும்படி தேவன் தமது பிரமாணங்களை நமது மனிதில் எழுத வேண்டுமென்று தினமும் ஜெபிப்போமாக.

தேவ வாக்கு மதுரம்
அதன் போதகம் சத்தியம்
அறிவு அதனால் வரும்
ஆறுதலும் தரும்.

வேண்டுதல் செய்யும்படி அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறார்

ஜனவரி 28

“வேண்டுதல் செய்யும்படி அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறார்.” எபி. 7:25

நம்முடைய பாவங்களுக்காக அவர் ஒரே தரம் மரித்தார். என்றாலும் தினந்தோறும் ஒவ்வொரு மணி நேரமும், ஒவ்வொரு நிமிஷமும் நமக்காகப் பரிந்து பேச அவர் உயிரோடிருக்கிறார். அவருக்கு முடிவில்லாத ஜீவனும் மாறாத ஆசாரியத்துவமும் உண்டு. Nhட்சத்தில் நம்முடைய பிரதான ஆசாரியராக அவர் வெளிப்படுவார். நம்முடைய பெயர்கள் அவருடைய இருதயத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. நமது காரியங்களையெல்லாம் அவர் நன்றாய் அறிவார். நமக்காகப் பரிந்துப் பேசத்தான் அவர் அங்கேயும் உயிரோடிருக்கிறார். தம் அருமையான இரத்தத்தையும், பூரண நீதியையும் தேவன் முன்பாக வைத்து, அவைகளின்மூலம் நமக்கு மன்னிப்பு, தந்து நம்மை மகிமைப்படுத்த வேண்டுமென்று வேண்டுகிறார்.

பிதா அவருக்குச் செவிக் கொடுக்கிறார். ஏனென்றால் அவர் அவரை அதிகம் நேசிக்கிறார். நமது செழுமைக்காக தம்மாய் ஆனதெல்லாம் அவர் செய்தார். அவர் அன்பு எத்தனை ஆச்சரியமானது. நமக்காக பரலோகத்தைத் துறந்தார். பூமியிலேவந்து பாடுபட்டு உத்தரித்து நமக்காக மரித்தார். பின்பு மோட்சலோகஞ்சென்று அங்கே நமக்காக வேண்டிக்கொண்டு நன்மைகளைப் பெற்றுக் கொடுக்கிறார். நாம் மாறுகிறதை அவர் பார்க்கிறார். துக்கப்பட்டு இன்னும் நமக்காக மன்றாடுகிறார். நமக்கு நன்மை செய்யப் பிரியப்படுகிறார். இது எத்தனை ஆறுதல்! நம்பிக்கைக்கு எத்தனை ஆதாரம். நாம் தேவனுக்குச் சத்துருக்கயரிருக்கையில் அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், பின்பு நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாம்.

இரக்க ஆசனத்தின் முன்னே
நமக்காய் நின்று பேசுவார்
பாரியத்தில் உத்தமர்
வீரம் கொண்டு ஜெயிப்பார்.

அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதும் இல்லை

ஜனவரி 27

“அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதும் இல்லை.” உபா. 31:6

தேவன் சொன்னதை நாம் எதிர்பார்ப்பது வீணாய் இராது. அவர் உண்மையை நாம் நம்புவதினால் நமக்குக் குறை வராது. தமது வார்த்தையை அவர் மறக்கவுமாட்டார். நம்முடைய நன்மையை விடவுமாட்டார். தம்முடைய ஜனங்களை அவர் கைவிட்டதுமில்லை, கைவிடப் போகிறதுமில்லை. உங்களுடைய விசுவாசம் பவீனமாயிருக்கலாம். நீங்கள் பயம் நிறைந்தவர்களாயிருக்கலாம். சந்தேகங்கள் உங்களைத் துன்பத்துக்குள்ளாக்கலாம். உங்கள் குறைகள் உங்களைத் திடுக்கிடப் பண்ணலாம். ஆனாலும் தேவன் உங்களைக் கைவிடவே மாட்டார். ஏன் அவர் கைவிட வேண்டும்?

அவர் தமது கிருபையால் உன்னை அழைக்கும் முன்னே உன் குறைவையும் நிர்பந்தத்தையும் உன் அபாத்திர தன்மையையும் பார்த்தார். உனது நிகழ்கால நிலைமையை அவர் அறியாதவரல்ல. அவர் உனக்கு வாக்களித்தபோது அது அவருக்குத் தெரிந்திருந்தது. உன்னை மகிமைப்படுத்திக் கொள்வார். அவரை நம்புகிறதினால் நீ தவறிப் போகக்கூடாது. எந்தக் கவலையையும் அவர்மேல் வைப்பதில் தயங்கக்கூடாது. அவருடைய உண்மையான வார்த்தையை நம்புவதில் உன் விண்ணப்பத்திற்கு பதில் கொடுப்பதில் தவற மாட்டார். உன் காரியம் ஒருவிதமாய் கண்டாலும் உன் பாதை விருப்பமில்லாமல் போனாலும் அவர் வார்த்தை உண்மையுள்ளது. அவமதிக்கிற துன்பத்தைவிட அதிகமாய் வர விடமாட்டார்.

தேவன் உன் பக்கமிருந்தால்
நீ பயப்படுவானேன்?
அவர் பலம் தருவதால்
பலவீனனென்பானேன்.

குறிப்பினால் அறிந்தேன்

ஜனவரி 26

“குறிப்பினால் அறிந்தேன்.” ஆதி. 30: 27

குறிப்பினால் அறிந்தேன் அல்லது அனுபவத்தால் அறிந்தேன். இப்படி சொன்னவன் லாபான். யாக்கோபு தனக்கு ஊழியஞ் செய்ததினால் தான் அடைந்த பிரயோஜனத்தைப்பற்றி இப்படி சொன்னான். தேவ போதனையால் உண்டாகும் நன்மையைக் குறித்தும் ஒரு கிறிஸ்தவன் இப்படிச் சொல்லலாம். அனுபவம் என்பது பரீட்சையினால் உண்டாகும் அறிவு. அனுபவத்தால்தான் உண்மை மார்க்கத்தின் உண்மையும், மேன்மையும் அடைகிறோம். அறிகிறோம். சாத்தானுடைய தந்திரங்களையும், விசுவாசத்தின் ரகசியங்களையும் அறிகிறோம். துன்பத்தால் உண்டாகும் பிரயோஜனத்தையும் இவ்வுலகத்தின் வெறுமையையும் ஒன்றுமில்லாமையையும் உடன்படிக்கையில் நமக்கு தேவனுடைய அன்பையும் உண்மையையும் கற்றறிகிறோம்.

அனுபவத்தால் வருகிற அறிவுக்கு சமமானது ஒன்றுமில்லை. கேள்வியால் உண்டாகும் அறிவுக்கு இது மேலானது. உறுதியைப் பார்த்தாலும் பிரயோஜனத்தைப் பார்த்தாலும் மனதை ஸ்திரப்படுத்துகிற நிச்சயத்தைப் பார்த்தாலும் இது எந்த அறிவுக்கும் மேலானது. வாலிபர்கள் அடக்கமுடியவர்களாயிருக்க வேண்டும். அவர்கள் அறிந்துக் கொண்டது கொஞ்சம். அனுபவமடைந்தவர்கள் தாங்கள் அறிந்ததை மற்றவர்களுக்கு சொல்ல வேண்டும். இதுபோல் பிரயோஜனமுடையது ஒன்றுமில்லை. அனுபவத்தால் நாம் சொல்லுகிறதும் நமது நடக்கையையும் ஒத்திருக்க வேண்டுமென்பதைக் குறித்து நாம் மிகவும் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.

நேசித்து உமது சொல்படி
செய்திட எனக்கு கற்பியும்
உமது அனுபவத்தின்படி
என்னை உம்முடையவனாக்கும்.

உன் சிநேகிதன்மேல் உனக்கு தயை இதுதானா?

ஜனவரி 25

“உன் சிநேகிதன்மேல் உனக்கு தயை இதுதானா?.” 2.சாமு. 16:17

இயேசு நமக்குக் காட்டும் அன்புக்குச் சமமாய் வேறெங்கும் காணமுடியாது. நாமோ அவருக்குச் செய்யும் கைமாரோ இதற்கு எதிரிடையானது. பல சமயங்களில் நாம் அவரை அசட்டை செய்கிறோம். அவரை நோக்கிக் கேட்கும்போது நமக்கு சந்தோஷமாய் இருக்கிறதே தவிர, சில நேரங்களில் அது ஒரு பாரமான வேலையாய் இருக்கிறது. நமக்குத் தெரிந்தவைகளையெல்லாம் செய்து, அவர் சொல்வதை விட்டு விடுகிறோம். அடிக்கடி அவர் வார்த்தையில் சந்தேகம் கொண்டு அவர் அன்பைச் சந்தேகித்து அவரைக் குறித்து முறையிடுகிறோம். அவருக்குக் கீழ்ப்படியாமல் மாம்சத்துக்கு இடங்கொடுத்துவிடுகிறோம். அவர் எதிர்க்கச் சொல்கிற உலகத்தைச் சேர்த்துகொள்கிறோம். அவர் எதிர்க்கச் சொல்கிற உலகத்தைச் சேர்த்துக்கொள்கிறோம். அவர் எதிர்க்கச் சொன்ன சாத்தானோடு இணைந்துவிடுகிறோம்.

எத்தனை வேளைகளில் உலகத்தாருக்குமுன் அவரை அறிக்கையிட வெட்கப்பட்டிருக்கிறோம்? நம்மீது பட்சமும் தயையும் நிறைந்த நம்முடைய மீட்பருக்கு நாம் செய்கிறதைப் பார்த்து, ‘உன் சிநேகிதன் மேல் உனக்கு இருக்கிற தயை இதுதானோ?’ என்று நம்மைக் கேட்கும்போது, வெட்கம் நம்முடைய முகத்தை மூடவேண்டும். நமது உள்ளமும் கலங்க வேண்டும். அவருக்கு நாம் செய்யும் கொடுமை துரோகம் போன்றது. அவர் மன்னித்து நேசிக்கிற அடையாளங்களை நாம் மறுபடியும் தேடி, இனி சோதனைக்கு இணங்கவாவது, பாவத்தில் இடங்கொடுக்கவாவது நினைக்கும் சமயத்தில், நம்முடைய மனச்சாட்சியைப் பார்த்து உன் சிநேகிதன்மேல் உனக்கும் தயை இதுதானா என்று கேட்போமாக.

நான் மகா துரோகி
என் நேசரை மறந்த பாவி
அவர் கிருபை இல்லாவிட்டால்
என்னை அகற்றுவார் அப்பால்.

கிறிஸ்து நமக்காக மரித்தார்

ஜனவரி 24

“கிறிஸ்து நமக்காக மரித்தார்.” ரோமர் 5:8

இது எத்தனை மகத்துவம் நிறைந்த சத்தியம். இன்றைய நாளில் இதைச் சற்று கவனமாய்ச் சிந்திப்போம். தேவனின் ஒரே மகனும், சகல நன்மைக்கு ஊற்றும், எல்லா மேன்மைக்கு மகிமையும், முதலும் முடிவுமாய் கிறிஸ்து மரித்தார். தேச சுபாவத்தையும் மனுஷ சுபாவத்தையும் தம்மில் ஒன்றாய் சேர்த்து வைத்திருந்த இயேசுவானவர் மரித்தார். உடன்படிக்கையில் நமது சுதந்தரராக ஏற்பட்டு நமக்காக பூமிக்கு இறங்கியவர். மரணத்தைவிட தம் சிநேகிதரை நேசித்ததால் அவர் மரித்தார். நம்மை அவர் நேசித்ததாலும் பிதா அவரை தெரிந்துகொண்டதினாலும் அவர் நமக்காக மரித்தார். நாம் நிர்பந்தரும், துன்மார்க்கவுரும், பெலனற்றவர்களும், சத்துருக்களுமாயிருந்தபோது அவர் நமக்காக மரித்தார்.

நமது சரீரத்திற்குச் சிரசாகவும், பிணிப்போக்கு ம் மருந்தாகவும், சிறைப்பட்டவர்களை விடுதலையாக்கவும் தன் மணவாட்டிக்கு மணவாளனாகவும், மந்தைக்கு மேய்ப்பனாகவும், பிதாவின் சித்தத்தை முடிக்க வந்த பணிவிடைக்காரனாகவும், அவர் நமக்காக மரித்தார். நம்மை மரணத்திலிருந்து மீட்கவும், நித்திய ஜீவனுக்கு உயர்த்தவும், தேவனோடு ஒப்புரவாக்கவும், தமது பரிசுத்த வாழ்வுக்கு நம்மை தகுதியுள்ளவர்களாக்கவும், நமக்கு முடிசூட்டி தம்மோடு இருக்கச் செய்யவுமே அவர் மரித்தார். நாமும் எந்நாளும் இயேசுவை நோக்கிக் கொண்டே ஜீவனம்பண்ணுவோமாக.

பாவிகளைத் தேடி வந்தார்
பாவங்கள் யாவையும் போக்கினார்
நம்மை மீட்க அவர்
ஆக்கினைக்குள்ளானார்
மேய்ப்பன் இரத்தம் சிந்தவே
ஆட்டுக்கு உயிர் வந்ததே.

யாக்கோபு என்னும் பூச்சியே பயப்படாதே

ஜனவரி 23

“யாக்கோபு என்னும் பூச்சியே பயப்படாதே.”  ஏசாயா 41:14

மற்றவர்களின் பார்வையில் நாம் சிறியவரும் அற்பமுமாய்க் காணப்பட்டாலும், நாமே நம்மைக் குறித்து பலவீனர்களென்று அறிந்தாலும் தேவன் நம்மைப் பார்த்து பயப்படாதே என்கிறார். நாம் ஒரு பூச்சியைப்போலிருந்தாலும் ஜெபிக்கிற யாக்கோபைக் போலிருந்தால் பயப்படத் தேவையில்லை. ஏன் பயப்படவேண்டும்? பயம் ஆத்துமாவைச் சேதப்படுத்தி சத்துருவைத் தைரியப்படுத்துகிறது. அது சிநேகிதரைக் கலங்கடித்து தேவ நாமத்தைக் கனவீனப்படுத்துகிறபடியால் பயப்படவேண்டாம். இப்படி தேவன் அடிக்கடி நம்மைப் பார்த்து சொல்வது எத்தனை அருமையானது. வேதத்தில் இந்த வார்த்தை எங்கே காணலாம். நாம் ஏன் பயப்படவேண்டும்? ஓடுகிறதற்கு வேகமும், யுத்தத்திற்குச் சவுரியவான்களின் சவுரியமும் இருந்தால் போதாது, பிழைப்புக்கு ஞானமுள்ளவர்களாயிருந்தாலும் போதாது. தயவு அடைவதற்கு வித்வான்களின் அறிவும் போதாது.

அவைகளுக்கெல்லாம் தேவ செயலும் காலமும் நேரிட தேவனே விழித்திருப்பார். நாம் கிறிஸ்து இயேசுவை விசுவாசிக்கிறோமா? அப்படியானால் நாம் பயப்படத் தேவையில்லை. தேவன் நமது சிநேகிதர், அவர் எந்தக் காலத்திலும் எந்தக் காரியத்திலும் நம்மேல் கவலை கொள்கிறார். நமது தேவைகளைச் சந்திக்கிறார். எல்லா விசுவாசிகளையும் அவர் பார்க்கிறார். நம்மை நம்புகிற ஒவ்வொரு பூச்சியையும் சுகமாய் வாழ பாதுகாக்கிறார். அவர் வல்லமை சர்வ வல்லமை. அவரின் ஞானம் சர்வத்தையும் அறியும். அவரின் அன்புக்கு இணையாக ஒன்றுமில்லை. அவர் உன்னைக் காப்பவர். ஆகவே யாக்கோபு என்னும் பூச்சியே பயப்படாதே.

உன்னை யார் இகழ்ந்தாலும்
உன் தேவனை நம்பு
விழுந்த உன்னை தூக்குவார்
யாரும் உன்னை மேற்கொள்ளார்.

கண்மணிபோல் என்னைக் காத்தருளும்

ஜனவரி 22

கண்மணிபோல் என்னைக் காத்தருளும்.”  சங். 17:8

இன்றொரு நாளும் கர்த்தர் நம்மைக் காத்தபடியினால் அவரின் உத்தம நேசத்தை இன்று நாம் அறிக்கையிடவேண்டும். கடந்த காலமெல்லாம் அவர் நம்மைப் பட்சமாய்க் காத்திட்டதை அறிக்கை செய்து இனிவருங்காலங்களின் தேவைக்கும் கிருபைக்கும் வேண்டிக்கொள்ளவேண்டும். இந்த ஜெபம் மிகவும் முக்கியமானது. தேவனே நீர் சர்வ வல்லவரும் சர்வஞானமும் உடையவருமானபடியால் என்னைக் காத்தருளும். என்னைச் சத்துருக்கள் சூழ வரும்போதும், எப்பக்கத்திலிருந்தும் நாச மோசங்கள் வரும்போதும் என்னைக் காத்தருளும். நானோ சிறகு முளைக்கிற பெலத்தில் காத்துக் கொள்ளும். நான் விழுந்து வீடுவேனோவென்று பயப்படுகிறேன். உம்மையன்றி வேறு யாருமில்லை எனக்கு. கண்ணின் வருவிழிப்போல் என்னைக் கருத்தாய் காத்தருளும். பிரயோஜனமும், அலங்காரமுமாய் வாழ என்னைக் காத்தருளும்.

நான் உமது சமுகத்தில் விழித்துக்கொண்டு ஆசீர்வாதங்களை அனுபவிக்கவும் தலையாகிய கிறிஸ்துவுக்குள் வளரவும், என்னைக் காத்தருளும். நானும் உலகத்தாரைப்போல பாவத்தில் விழாமலும் உம்மைவிட்டு வழுவிப்போகாமல் இருக்கவும் என்னைக் காத்தருளும். ஆவிக்குரிய வாழ்வில் குளிர்ந்துப்போய் விடுகிறார்கள். நானும் விழக்கூடியவன். ஆகையால் என்னைக் காத்தருளும். கர்த்தர் என்னைக் காக்கிறவர். கர்த்தர் என் வலது பக்கத்தில் எனக்கு நிழலாயிருக்கிறார். கர்த்தர் என் போக்கையும் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்கும் காப்பார் என்று தைரியமாய் சொல்வோம். தேவன் காக்கிற விதங்குளை நாம் உணர்ந்துகொள்வோமாக.

கண் மூடாமல் விழித்து
காக்கிற தேவனே
எந்தன் ஆத்துமாவை
கண்ணிகளுக்கெல்லாம் தப்புவியுமாக.

கர்த்தாவே நான் உமது அடியேன்

ஜனவரி21

“கர்த்தாவே நான் உமது அடியேன்” சங்.116:16

நாம்கர்த்தருடைய ஊழியக்காரர். அவருடைய மகிமைக்காகவே சிருஷ்டிக்கப்பட்டோம். அவர்துதியைச் சொல்லி வர மீட்கப்பட்டோம். அவரின் மேன்மையான குணங்களைவிளக்குவதற்கே உருவாக்கப்பட்டோம். நாம் அவருடைய நெருங்கிய உறவினர்கள். இயேசுவானவர்நமது எஜமான். அவர் சித்தம் நமக்குச் சட்டம். அவருக்குப் பிரியமானதெதுவோ,அதுவே நமக்கு ஆனந்தமாயிருக்கவேண்டும். நமது எஜமானே நமக்கு முன்மாதிரி. அவர்பிதாவின் ஊழியக்காரனாக உலகத்துக்கு வந்து சகலத்தையும் பிதாவின் சித்தப்படியேசெய்து முடித்து பிதா கட்டளையிட்ட சகலத்தையும் முணுமுணுக்காமல் செய்து முடித்தார்.அன்று அவர் தம்மைத்தாமே தாழ்த்தி கீழ்ப்படிந்தபடியால் இப்பொழுது உயர்த்தப்பட்டு,மேன்மையாக்கப்பட்டு மகா உன்னதத்தில் இருக்கிறார்.

அவர்நம்மைப் பார்த்து ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்யமனதானால் அவன் என்னைபஇபோலிருக்கக்கடவன். நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்.ஒருவன் எனக்கு ஊழியஞ் செய்தால், என் பிதா அவனைக் குனப்படுத்துவார் என்கிறார்.நாம் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதினால் மனுஷன் நம்மைக் குறைவாய் எண்ணினாலும்எண்ணலாம். ஆனால் தேவனோ நம்மை மேன்மைப்படுத்துவார். உலகம் நம்மை நித்தித்துஅவமதிக்கலாம். அவர் தம்முடைய சமுகத்தாலும் அன்பான பார்வையாலும் நம்மைக்கனப்படுத்தி பிறகு நம்மை மகிமையில் சேர்த்துக் கொள்வார். இன்றைக்கு நாம்யாருக்கு ஊழியஞ் செய்தோம்? யாரைப் பிரியப்படுத்தினேம்? யாருடைய வேலைக்குமுதலிடம் கொடுத்தோம்? அவர் நம்மை அழைக்கும்போது அவரண்டைக்குப் போகமனமுள்ளவர்களாய், அல்லது நம்மை உலகத்தில் வைக்கும் பரியந்தமும் அவருக்குஊழியஞ்செய்ய முனமுள்ளவர்களாய் இன்றைய நாளில் சிந்திப்போம்.

கிறிஸ்துவின்அடியார்
மகாமேன்மை உடையார்
அவர்நுகம் சுமப்போர்
தேவாசீர்வாதம்பெறுவர்.

கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்

ஜனவரி 20

“கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்.” நீதி. 2:6

ஞானத்தைத் தருமுன்னே அது நமக்குத் தேவை என்று, அதன் மேல் வாஞ்சைக்கொண்டு அவருடைய பாதத்தருகில் அமர்ந்து கருத்தாய் கேட்கவேண்டும். நாம் பயபக்தியாய் நடக்கவும், சோதனைகளை வெல்லவும், தேவனுடைய பண்ணையில் செம்மையாய் வேலை செய்யவும் நமக்கு ஞானம் வேண்டும். அவருடையவர்களாகிய நமக்குச் சரீரத்திலும், ஆவியிலும், ஆத்துமாவிலும் தேவனை மகிமைப்படுத்தவும், அவரைச் ஸ்தோத்தரிக்கவும் ஞானம் தேவை. நமக்கு தேவையான ஞானத்தைக் கிரியையினாலல்ல, ஜெபத்தினால் பெற்றுக்கொள்ளலாம். அது நம்மால் உண்டாவதல்ல. தேவனே இதைக் கொடுப்பேனென்று வாக்களித்துள்ளார்.

“உங்களில் ஒருவன் ஞானத்தில் குறை உள்ளவனாக இருந்தால் யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும், ஒருவரையும் கடிந்துக் கொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன். அப்போது அவனுக்குக் கொடுக்கப்படும். ஆனால் அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன்.’ தேவன் செய்வார் என்று நாம் விசுவாசித்து அதை அவரிடத்தில் கேட்க வேண்டும். அவர் பொய் சொல்லா உத்தமர். ஆகவே, கொடுப்பார். தேவன் கொடுக்கும் ஞானம் மகா மேன்மையுள்ளது, பயனுடையது. முக்கியமான பிரசித்திப் பெற்றது. பரத்திலிருந்து வரும் ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இரக்கமும் உள்ளதாயும், இரக்கத்தாலும், நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயும் இருக்கிறது.
நீ இரட்சிப்படைய ஞானியாக வேண்டுமா? ஆத்துமாக்களை ஆதாப்படுத்தும் ஞானியாக வேண்டுமா? பொல்லாப்பை வெறுத்து எல்லா நம்மைகளையும் பெற்றுக்கொள்ள ஞானியாக வேண்டுமா? அப்படியானால் தேவனிடத்தில் ஞானத்தைக் கேள். இப்பொழுதே கேள். கருத்தாய் கேள். விசுவாசத்தோடே கேள். அப்பொழுது உனக்குக் கொடுக்கப்படும்.

சாந்தம், தாழ்மை, சுத்தம்
இதோடு சேர்ந்த ஞானம்
எனக்களித்தால் அப்போ
உமக்கு பிரியனாவேனல்லோ?

My Favorites

ஜெயங்கொள்ளுகிறவன்

யூலை 20 "ஜெயங்கொள்ளுகிறவன்" வெளி 2:17 ஒவ்வொரு கிறிஸ்தவனும் போர்ச்சேவகனானபடியால் கிறிஸ்து இயேசுவின் நற்சேவகனாக இருக்க கற்பிக்கப்படுகிறான். கிறிஸ்தவனாகிய போர்ச்சேவகன் யுத்தத்திற்குப்போக வேண்டும். அவனுக்குச் சத்துருக்கள் ஏராளம், பலசாலிகள். கிறிஸ்தவன் அவர்களை ஜெயிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள்...
Exit mobile version