என் ஆத்துமா மண்ணோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது

பெப்ரவரி 17

“என் ஆத்துமா மண்ணோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது.” சங். 119:25

இப்படி சரியான அறிக்கை செய்வது சாதாரணமானாலும், மிக உண்மையானது. உலகம் வெறும் மண். அதன் பணமும் பதவிகளும் மண்தான். மேலான இராஜ்யத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது இவைகளெல்லாம் ஒன்றுமில்லை. நிலையான ஆத்துமாவுக்கு முன், நிலைய்ய இவைகள் ஒன்றுமில்லை. இது நமக்குத் தெரிந்திருந்தாலும் நாம் உலக நினைவாலே அதிகம் கவரப்படுகிறோம். நமது ஆசைகள் உலகப் பொருள்மீது அதிகம் ஈடுபடுகிறது. இதனால் நமது நல் மனசாட்சியையும் நாம் கெடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. உலகத்தார் இந்த மண்ணை விரும்பி இதிலேயே திருப்தியாகி விடுகிறார்கள். ஆனால் இந்த மண்ணோடு ஒட்டிக்கொண்டிருக்கிற தேவ பிள்டுளைகளுக்கோ இது திருப்தியாயிருக்கக்கூடாது. அதை அருவருத்து வாழ்கிறது மிகவும் நல்லதே.

நாம் மேலானவைகளை நோக்க வேண்டும். செட்சைகளை விரித்து மேலே எழும்ப வேண்டும். இம்மைக்குரிய பொருள்களை அற்பமென்று எண்ணவேண்டும். என் ஆத்துமாவே! நீ ஒன் அசுத்தத்தை விட்டெழும்பு. நீ இருக்கிற இடத்திலிருந்தே தேவனை நோக்கிப் பார். இந்த மண்ணை விட்டெழுந்து உதறி மேலான வஸ்திரங்களைத் தரித்துக்கொள். இதுவே இரட்சிப்பின் நாள். தேவன் உன்னை அழைக்கிறார். அவர் உன்னோடு ஐக்கியம் கொள்ள விரும்புகிறார். இந்த பூமி உனக்கு நிரந்திரமானதல்ல. உன் வீடும் வாசஸ்தலமும் நித்தியம்தான். இந்தப் பூமி கடந்து போய்விட வேண்டிய ஒரு வனாந்தரம். நீ கொஞ்சநாள் தங்கியிருக்கும் இடம். நீ இளைப்பாரும் இடம் மேலே உள்ளது. இவ்விடம் தீட்டுள்ளது.

மரித்து மோட்சம் சேரும் நான்
மண்ணைப் பிடித்திருப்பேனோ?
லோகத்தைவிட்டு என் ஆவி
பரத்தைப் பிடிக்கும் தாவி.

உம்மை நேசிக்கிறவன் என்பதை நீர் அறிவீர்

பெப்ரவரி 08

“உம்மை நேசிக்கிறவன் என்பதை நீர் அறிவீர்.” யோவான் 21:15

நான் எவ்வளவோ குறைவுள்ளவனாயிருந்தாலும், உம்மை அடிக்கடி துக்கப்படுத்தியும், உம்முடைய அன்புக்கு துரோகஞ்செய்தும் உம் வார்த்தைகளை நம்பாமலும், இவ்வுலகப்பொருளை அதிகமாய் பற்றிப்பிடித்தும், கொடியதும் அக்கிரமுமான கேடுபாடுகள் செய்தும், சில வேளைகளில் சாத்தானுக்குக் கீழ்படிந்து வாழ்ந்தபோதும் நீர் என் இருதயத்தை ஆராய்கிறீர். என் ஆத்துமாவின் அந்தரங்க கிரியைகள் எல்லாவற்றையும் பார்க்கிறீர். நான் உம்மை நேசிக்கிறேனா என்பதையும் நீ அறிவீர். உம்மையல்லாமல் திருப்தியடையக் கூடாத உரு வஸ்து என் உள்ளத்தில் புதைந்து கிடக்கிறதென்பதை நீர் அறிவீர். ஆதலால், உம்மை நினைத்து, உம்முடைய அன்பு என் உள்ளத்தில் ஊற்றப்படவேண்டுமென்று நாடி, உம் மகிமை என் ஆத்துமாவுக்குப் பிரசன்னமாக வேண்டுமென்று ஜெபித்து, எல்லாவற்றிற்கும் மேலாக நீர் என்னுடையவரென்றும் சொந்தம் பாராட்டி உம்மை அனுபவிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். உம்மை நேசிக்கிறபடியால் என் இருதயத்தில் பக்தி வைராக்கியம் கொண்டிருக்கிறேன். உம்மை நேசிக்கிறபடியால் உலகத்தை வெறுக்கிறேன். உம்மை விரும்புகிறபடியால் உமக்குப் பிரியமாய் நடக்க ஆசிக்கிறேன். எப்போதாவது உம்மை விட்டுப் பிரிந்தால் அதுதான் எனக்கு மனவருத்தம் கொடுக்கிறதேயன்றி வேறொன்றுமில்லை.

இன்னும் உம்மை அதிகம் நேசிக்க வேண்டாமா? உம்மைத் தியானிக்கும்போது ஆத்துமா ஆனந்தத்தால் பொங்கவேண்டாமா? எப்போதும் உம்மை நேசிக்கவும் எந்த நிமிடமும் உம் அன்பைத் தியானிக்கவும் உம்மேல் ஒரு பெரிய பாசத்தை வளர்ப்பியும் கர்த்தாவே.

என் அன்பு குளிர்ந்தது
என்பதே என் துக்கம்
நேசம் பெருகச் செய்யும்
நீரே என் துருகம்.

வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்தாவி

பெப்ரவரி 15

“வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்தாவி.” எபேசி.1:13

பழைய ஏற்பாட்டில் வாக்குத்தத்தம்பண்ணப்பட்டிருக்கிற பெரிய ஆசர்வாதம் தே குமாரன்தான். புதிய ஏற்பாட்டில் வாக்குத்தத்தம்பண்ணப்பட்டிருக்கிறவர் பரிசுத்தாவியானவர். இயேசு கிறிஸ்து செய்து முடித்த கிரியைகளுக்குப் பதிலாக, அவர் நமக்குக் கொடுக்கப்பட்டார். அவரை நோக்கி கேட்கிற எவருக்கும் ஆவியானவரைத் தந்தருளுவார். இந்த ஜீவத் தண்ணீரைக் கொடுப்பவர் இயேசுவானவN. இதைப் பெறுகிற யாவரும் நித்திய ஜீவகாலமாய் ஊறும்ஊற்றைப் பெறுவர். நம்மைத் தேற்றவும், ஆற்றவும், போதிக்கவும், நடத்தவும், உதவி செய்யவும் ஆவியானவேர பொறுப்பெடுக்கிறார். கிறிஸ்துவால் நமக்கு நீதியும் இரட்சிப்பும் கிடைக்கிறதுபோல, பரிசுத்தாவியானவர்மூலம் நமக்கு அறிவும், ஜீவனும், சந்தோஷமும், சமாதானமும் கிடைக்கிறது.

இவர் வாக்குத்தத்தத்தின் ஆவியாயிருக்கிறார். இவர் உதவியின்றி தேவ வாக்குகளை நாம் வாசித்தால் அதன் மகிமையை அறியோம். சொந்தமாக்கிக் கொள்ளும் உணர்வையும் அடையோம். அவர் போதித்தால் தான் வாக்குகள் எல்லாம் புதியவைகளாகவும், அருமையானதாகவும், மேலானதாகவும் தெரியும். எந்தக் கிறிஸ்தவனும் துன்பமென்னும் பள்ளிக்கூடத்தில் தன் சுய அனுபவத்தால், வாக்குத்தத்தமுள்ள ஆவியானவர் தினமும் தனக்கு அவசியத் தேவையெனக் கற்றுக்கொள்ளுகிறான்.

தேவ பிள்ளையே, ஆவியானவரைத் துக்கப்படுத்தாதபடி ஜாக்கிரதையாக இருப்போமாக. அவர் ஏவுதலை ஏற்று, அவர் சித்தம் செய்ய முற்றிலும் இடங்கொடுப்போமாக.

பிதாவே உமது ஆவி தாரும்
அவர் என்னை ஆளட்டும்
உமது வாக்கின்படி செய்யும்
என் தாகத்தைத் தீரும்.

தம்முடைய சொந்தக் குமாரன் என்றும் பாராமல்

பெப்ரவரி 11

“தம்முடைய சொந்தக் குமாரன் என்றும் பாராமல்.” ரோமர் 8:32

தமது ஜனங்களை இரட்சிக்கும்படிக்கு பிதா தம்முடைய குமாரனையும் பெரிதாக எண்ணவில்லை. இவர்களை ஆறுதல்படுத்த அவரைத் தண்டித்தார். பாவம் செய்த தூதர்களையும் அவர் விட்டுவைக்கவில்லை. உலகத்தில் அதிகமாய் பாவம் செய்தவர்களையும் தண்டித்தார். ஆனால் நம்மையோ இரட்சிப்பதற்கு அதிகம் விருப்பம் கொள்கிறார். இந்த அன்பை யோசித்தால் ஆச்சரியமானது. அவரே நம்மை இரட்சித்தார், இரட்சிக்கிறார், இரட்சிப்பார். இதற்காகத்தான் இயேசுவையும் ஒப்புக்கொடுத்தார். நமக்hகத்தான் பிதாவும் அவரோடு உடன்படிக்கை செய்தார். நமக்காகவே அவர் உலகத்தில் வந்தார். நமக்காகவே சகல நீதியையும் நிறைவேற்றினார். நமக்காகவே பாவ பலியானார். நமக்காக மரித்து அடக்கம் பண்ணப்பட்டு, உயிர்த்தெழுந்து பரமேறி பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்.

கிறிஸ்து நம்முடைய பதிலாளி. மேலான உடன்படிக்கைக்குப் பிணையாளி. ஆகையால்தான் நம்மை விடுவிக்க தேவன் அவரை தண்டித்தார். நம்மைத் தப்பிவிப்பது மட்டுமல்hமல் ஜீவனும், புத்தியும், சகல உரிமையையும் இலவசமாய் தருகிறார். எங்கள் அருமை இரட்சகரே, எங்களுக்காக பிதா உம்மைத் தண்டித்தார். பிசாசும் உம்மைச் சும்மா விட்டு வைக்கவில்லை. குற்றவாளியான மனுஷர்களும் உம்மைக் கொடுமைப்படுத்தினார்கள். ஆனால் நாங்களோ, உம்மைக் கோபப்படுத்தாமல் பார்த்துக் கொள்ளவும், உம்மை மனம் நோகச் செய்யாதபடி காத்துக் கொள்ளவும், உமது நாமத்தை வீணிலே வழங்காதிருக்கும்படி நடக்கவும், எங்களுக்குக் கீழ்ப்படிகிற இருதயத்தைத் தந்தருளும்.

முள்கிரீடத்தில் எங்களுக்கு
மகிமை சம்பாதித்தீர்
ஐங்காயங்களால் பாவிகட்கு
சுகம் வரப்பண்ணினீர்.

இவள் மிகவும் அன்புகூர்ந்தாள்

பெப்ரவரி 23

“இவள் மிகவும் அன்புகூர்ந்தாள்.” லூக்கா 7:47

இவள் ஒரு பெரிய பாவி. தன் பாவத்தை உணர்ந்து இரட்சகரைத் தேடினாள். மன்னிப்புக்காக அவரிடம் சென்று இரக்கம் பெற்றான். இயேசுவின் அன்பையும், அவர் காட்டின பாசத்தையும் அவள் உணர்ந்தபடியால், அவர் Nரில் அன்பு பொங்கிற்று. அவள் அவரைச் சாதாரணமாய் Nநிக்கவில்லை. அதிகமாய் நேசித்தாள். அதனால் அவரின் சமுகத்தை உணர்ந்து அவர் வார்த்தைக்குச் செவிகொடுத்து துன்பத்தையும், நிந்தையையும் சகித்தவளானாள். அவளின் அன்பு உள்ளுக்குள்ளேயே அடைக்கப்படவில்லை. அதை வெளிக்காட்டினாள். அதனால்தான் விலையேறப்பெற்ற தைலத்தைக் கொண்டு வந்து ஊற்றி, தன் கண்ணீரால் அவர் பாதங்களை நனைத்து, தலை மயிரால் துடைத்து அபிஷேகம்பண்ணினாள்.

இது நமக்கு ஒரு நல்ல முன்மாதிரி. நாமும் பாவிகள்தான். இயேசுவும் நமது பாவங்களை மன்னித்தார். ஆம் இந்த ஸ்திரீயை அவர் எவ்வளவாய் நேசித்தாரோ அவ்வளவாய் நம்மையும் நேசிக்கிறார். அந்தப் பெண் நேசித்ததுப்போல் நாமும் அவரை நேசிக்கிறோமா? இல்லையென்றே சொல்ல வேண்டும். காரணம் என்ன? நாம் நமது பாவங்கள் நிமித்தம் அவ்வளவு உணர்வு அடைவதில்லை. நமது அபாத்திர தன்மையை அவ்வளவாய் பார்க்கிறதில்லை. நமது மோசமான வாழ்க்கையைக் கண்டு நாம் கண்ணீர் விடுவதில்லை. அவர் நம்மை மன்னித்த மன்னிப்பைப் பெரிதாக ஒன்றும் எண்ணவில்லை. இனியாவது நமது சிந்தையை இயேசுவண்டைத் திருப்புவோம். பரிசுத்தாவியானவர் தேவ அன்பை நமது இருதயத்தில் ஊற்றும்படி கேட்போம். அவரோடு ஒன்றாகி அவர் பாதத்தில் அமர்ந்திருப்போம்.

தேவ அன்புக்கீடாய்
பதில் என்ன செய்வோம்
அவர் மன்னிப்புக்கு ஈடாய்
நன்றி சொல்வோம்.

அவருக்குக் காத்துக்கொண்டிரு

பெப்ரவரி 07

“அவருக்குக் காத்துக்கொண்டிரு.” யோபு 35:14

உன் காலங்கள் அவர் கரத்தில் இருக்கிறது. உன் பேர் ஜீவபுத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. அவர் உன் தேவனாயிருப்பேனென்று வாக்களித்திருக்கிறார். அவர் சொன்னபடியே செய்கிறவர். இவைகளை மறவாதே. நமக்கு தேவையான எந்த நன்மையானாலும் கொடுப்பேனென்று வாக்குப்பண்ணியிருக்கிறார். அவர் வாக்கு உறுதியும் நம்பிக்கையுமானது. அவைகளையே நம்பிக் கொண்டிரு. உன் இருதயம் பயப்படலாம். உன் மனம் திகைக்கலாம். உன் சத்துருக்கள் உன்னை நிந்திக்கலாம். ஆனால் உன் பாதைகளோ கர்த்தருக்கு மறைக்கப்படுவதில்லை. ஆகையால் அவரையே நம்பிக்காத்திரு.

ஆதிமுதல் அவர் வார்த்தை உண்மையாகவே இருக்கிறது. இதை அவரின் அடியவர்கள் பரீட்சித்து பார்த்திருக்கிறார்கள். உண்மைதான் அதன் கிரீடம். ஆதலால் நீ உறுதியாய் நம்பலாம். உன் நம்பிக்கையைப் பலப்படுத்து. உன் ஆறுதல் இன்னமாய் இருக்கட்டும். இப்பொழுதும் நீ குழந்தையைப்போல் கீழ்ப்படி. அவரின் மனமோ உன்னை நேசித்துக் கொண்டிருக்கிறது. ஒருவேளை உனது தப்பிதங்களுக்கு, உன்னை அழிக்க ஒரு பட்டயத்தை பிடித்திருப்பாய். அவர் தோன்றினாலும் தோன்றலாம். அப்போது நீ அவர் என்னைக் கொன்றுப்போட்டாலும் அவுர்மேல் நம்பிக்கையாயிருப்பேன் என்று சொல்ல வேண்டும். அப்போது நீ காட்டின நம்பிக்கையின் நிமித்தம், உன்னை மேன்மைப்படுத்தி, திரண்ட ஐசுவரியமுள்ள மேலான தலத்திற்கு கொண்டுபோவார்.

கர்த்தாவே உமது வழிகள்
மிக ஞானமுள்ளவைகள்
கோணலான வழிகளெல்லாம்
உமதன்பினால் உண்டானவையே
ஆகையால் நான் நம்புவேன்
உம்சித்தம் என் பாக்யம் என்பேன்.

தேவனை மகிமைப்படுத்துங்கள்

பெப்ரவரி 24

“தேவனை மகிமைப்படுத்துங்கள்.” 1.கொரி. 6:20

தேவன் செய்கிற எல்லாமே தமது மகிமைக்காகத்தான். சகலமும் அவரை மகிமைப்படுத்த வேண்டும். நாமும் அவரின் மகிமைக்காகவே சிருஷ்டிக்கப்பட்டோம். பாவம் செய்தபோதோ நாம் அவர் மகிமையைச் சீர்குலையப்பண்ணினோம். அவரின் நியாயப் பிரமாணத்திற்குக் கீழ்ப்படியாமல் அவருக்கு எதிர்த்து நின்றோம். அவரின் சாயலை நம்மில் நாமே கெடுத்துக் கொண்டோம். அவரின் சமுகத்தைத் தீட்டுப்படுத்தினோம். ஆனால இயேசுவானவரோ நமக்காக மரித்து, நம்மை மீட்க தம்மைத் தந்து, நீதியை நிறைவேற்றி இரட்சிப்பை ஈந்தார்.

நாம் அவரின் கிரயத்தால் வாங்கப்பட்டவர்கள். ஆகவே நாம் நம்முடையவர்களல்ல. நாம் அவரின் சொந்தமானதால் அவரை மகிமைப்படுத்துவது நமது கடமை. தேவனை மகிமைப்படுத்துவதே இவ்வுலகில் நமக்குக் குறிக்கப்பட்டிருக்கிற பெரிய வேலை. அவருக்கு மகிமையைச் செலுத்துவதென்றால் அவரை விசுவாசித்து, அவர் வாக்குகளை நம்பி, அவர் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவதே ஆகும். அவர் நிமித்தம் நாம் எளியோருக்கு நன்மை செய்ய வேண்டும். தேவ பக்தரை ஆதரிக்க வேண்டும். அவர் சுவிசேஷத்தை உலகிற்கு எடுத்து சொல்ல வேண்டும். நம்முடைய கெட்ட குணங்களை அடக்கி, அவருக்குப் பயப்படுகிற பயத்திஈ; நம்முடைய குடும்பங்களை வளர்த்து, சகலத்திலும் அவரை மகிமைப்படுத்த வேண்டும். தேவனுக்கு மகிமை செலுத்துவதே நமது தலையானகடமை, நமது ஊழியம். அதுவே நம்முடைய மகிழ்சியும் ஆனந்தமுமாய் இருக்க வேண்டும்.

என்னை மீட்க வந்து
இரத்தம் சிந்தி மாண்டீர்
உமக்கென்று பிழைக்கவும்
உம்மையே போற்றவும் செய்வீர்.

நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்

பெப்ரவரி 19

“நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்.” மத். 6:34

வீணாய் வருத்தப்பட்டு, மனதைப் புண்ணாக்கிக் கொள்ளும்படி கவலைப்படாதேயுங்கள். நாளை நமக்குரியதில்லையென்று அறிவோமே? இன்றிரவு கர்த்தர் ஒரு வேளை உங்களை எடுத்துக்கொள்ளலாமே! நீங்கள் உயிரோடிருக்கிறதால் இன்றைக்கிருக்கிறவிதமாய் கர்த்தர் உங்கள்மேல் கவனமாய்ப் பட்சமாய் காப்பாராக. அனுதின உணவுப்போல் அனுதின கிருபையும் வேண்டும். நீங்கள் தகப்பனற்றவர்களல்ல: தரவற்றவர்கள் அல்ல. உங்களை கவலைக்குள்ளாக்குகிற காரியங்கள் எதுவானாலும், அது உங்கள் பரமபிதாவுக்கு தெரியும். தேவையானதை அவ்வப்போது உங்களுக்கு தந்து கொண்டேயிருப்பார். தேவ சமாதானம் உங்களை ஆளுகை செய்யட்டும். கர்த்தருடைய வார்த்தையை நம்பியிருங்கள்.

கவலைக்கு இடங்கொடாமல் இருங்கவும், வீண் சிந்தனைகளுக்கு இடங்கொடாமலிருக்கவும் கர்த்தரிடம் காத்திருந்து பொறுமையாய் விசுவாசித்தால் பெற்றுக்கொள்ளவுமே அவர் விரும்புகிறார். இன்றிரவு நீ அமைதியாய் உன் ஆண்டவர் சொன்னதை யோசித்துப்பார். ‘முதலாவது தேவனுடைய இராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள். அப்போது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூட கொடுக்கப்படும். ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள். நாளை தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலை;படும். அந்தந்த நாளுக்கு அதினதன் பாடுபோதும்.” காலையில் நீ விழிக்கும்போது உன் தேவன் உன்னோடிருப்பார். ஆறு துன்பங்களில் உன்னை விடுவித்தவர், ஏழு துன்பங்களிலும் உன்னை கைவிடார்.

ஆகவே கவலைப்டாதே.
வீட்டிலும் வெளியிலும்
இரவிலும் பகலிலும்
அவர் கரம் உன்னைப் போஷிக்கும்
அவர் கரம் உன்னை நடத்தும்.

மனந்திரும்பி ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக

பெப்ரவரி 26

“மனந்திரும்பி ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக.”  வெளி 2:5

மனந்திரும்புதலுக்குச் சிந்தனை தேவை. நடத்தையைப்பற்றியும், தன் நிலைமையைப்பற்றியும் பயபக்தியாய் சிந்திக்கிற சிந்தனை வேண்டும். அது பாவத்தைப்பற்றி உணர்வதில் ஏற்படுகிறது. தேவனுக்கு முன்பாக நம்முடைய தன்மை பாவ கரையுள்ளது என்று அறிய வேண்டும். இந்தச் சிந்தனை வந்தால்தான் பாவத்தைவிட்டு, பாவ மன்னிப்பைப் பெற்று சமாதானம் பெற வழியுண்டாகும். இந்த எண்ணத்தில் உள்ளான துக்கமும் அடங்கியிருக்கிறது. இந்த மன வருத்தம், கர்த்தருக்கு மனஸ்தாபத்தை உண்டாக்கிப் போட்டோமே. அவரை அவமதித்து அவர் இரக்கத்தை புறக்கணத்தோமே என்ற விசனத்தை உண்டாக்கும்.

இந்த வருத்தம் தான் நம்மை சீர்வாழ்வுக்கும், இரட்சிப்புக்கும் வழி நடத்தும். உண்மையான மனஸ்தாபமில்லாமல் ஒருவேளை வாழ்க்கை நடத்தலாம். ஆனால், நல்வாழ்கை நடத்த வேண்டுமானால், உண்மை மனஸ்தாபம் வேண்டும். நமது வழிகளைக் குறித்துச் சிந்தித்து, நமது பின்மாற்றத்தை யோசித்து, குற்றங்களை ஒப்புக்கொண்டு, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்யத் தொடங்குவோமாக. கிறிஸ்துவை நோக்கி பார். தேவனுக்குக் காத்திரு. வசனத்தை ஆராய்ந்து பார். அவர் கட்டளைகளைக் கைக்கொள். இயேசுவை குறித்து மற்றவர்களாடு பேசு. முன்பு செய்ததுப்போல் தீமையாய் தோன்றுகிறவைகளை விட்டு விலகு. இப்படிச் செய்வதனால் அன்பும், வைராக்கியமும், விழிப்புணர்ச்சியும், பயப்கதியும், ஒப்புவித்தலும் நம்மில் மிகுதியாய்க் காணப்படும். நம்முடைய வழிகளை ஆராய்ந்து அவரிடத்தில் திரும்புவோமாக. இயேசு கிறிஸ்துவைக் கனக்குறைச்சல் படுத்தினோம் என்று முறையிடுவதோடு, மனந்திரும்பி ஆதியில் செய்த கிரியைகளைச் செய் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

கடந்த காலத்தை நினை
ஆதி அன்பைக் காட்டு
முந்தின கிரியை செய்
அவரில் ஆறுதலடை.

கர்த்தர் எவனிடத்தில் அன்புகூறுகிறாரோ அவனை அவர் சிட்சிக்கிறார்

பெப்ரவரி 21

“கர்த்தர் எவனிடத்தில் அன்புகூறுகிறாரோ அவனை அவர் சிட்சிக்கிறார்.” எபி. 12:6

எல்லா விசுவாசிகளையும் தேவன் நேசிக்கிறார். ஆகையால் எல்லா விசுவாசிகளையும் அவர் தண்டிக்கிறார். தண்டனைதான் அவர் அன்புக்கு அத்தாட்சி. நாம் பி;ளைகளாயிருப்போமானால் தண்டனை நமக்கு அவசியம் வேண்டும். அப்படி அவசியமான தண்டனைகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். சிலரை நஷ்டம் வரும்படி வியாதிமூலம் தண்டிக்கிறார். சிலருக்குக் குடும்பப் பிரச்சனைகளினால் தண்டிக்கப்படுகிறார்கள். தேவனுடைய ஒரே பிரம்பால் நாம் தண்டிக்கப்படாவிட்டாலும், ஒரே கரந்தான் நம்மெல்லாரையுமே தண்டிக்கிறது. ஒரே வகையாய் நாம் எல்லாரும் சீரடையாவிட்டாலும் நம்மெல்லாரையும் சீர்ப்படுத்துகிறவர் ஞானமும் அன்பும் கொண்ட ஒரே பிதாதான்.

சிலர் மனதில் வருத்தப்படுகிறார்கள். சிலர் சரீரத்தில் துன்பப்படுகிறார்கள். சிலர் தங்களின் உறவினர்கள்மூலம் தண்டனையடைகிறார்கள். எந்த அடிகளும் அன்பால் விழுகிறதென்பதை நாம் மறக்கக்கூடாது. தண்டனை நமக்கு வருத்தத்தைத்தான் கொடுக்கும், பிதாவும் அப்படியே வருத்தம் அடைவார். அவர் வேண்டுமென்று நம்மை தண்டிக்கிறதில்லை. தமது இஷ்டப்படி நம்மைத் துன்பப்படுத்துகிறதில்லை. சில சமயங்களில் நமது புத்தியீனமும் நமது துன்பங்களுக்கும் காரணமாகிவிடுகிறது. நமது பாவங்கள்கூட பிதாவின் கடிந்துக் கொள்ளுதலை அவசியமாக்குகிறது.

இன்று நமது பிதாவின்கீழ் நம்மைத் தாழ்த்துவோமாக. நம்மை அவர் தண்டிக்கும்போது அவர் நமக்குச் சொந்தம் என்றும் நம்மை நேசிக்கிறாராயென்று நாம் சந்தேகிக்கக்கூடாது. நமக்குத் தண்டனை அவசியமில்லையென்று எண்ணி அவைகளை அசட்டை செய்யாதிருப்போமாக.

தேவ தண்டனை எனக்கு
வருத்தமாகக் கண்டாலும்
அதற்கே கீழடங்குவேன்
தேவ சித்தமே நலம் என்பேன்.

My Favorites

கர்த்தர் சமீபமாயிருக்கிறார்

மார்ச் 02 "கர்த்தர் சமீபமாயிருக்கிறார்." பிலி. 4:5 இயேசு கிறிஸ்து வரப்போகிறார். அவர் வருகிற நாள் தெரியாது. ஆகையால் நாம் எப்போதும் ஆயத்தமாய் இருக்க வேண்டும். அவர் சீக்கிரம் வருவார். உண்மையாய் வரத்தான் போகிறார் என்று...

நீதிபரன்

Exit mobile version