பெப்ரவரி

முகப்பு தினதியானம் பெப்ரவரி

நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்

பெப்ரவரி 19

“நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்.” மத். 6:34

வீணாய் வருத்தப்பட்டு, மனதைப் புண்ணாக்கிக் கொள்ளும்படி கவலைப்படாதேயுங்கள். நாளை நமக்குரியதில்லையென்று அறிவோமே? இன்றிரவு கர்த்தர் ஒரு வேளை உங்களை எடுத்துக்கொள்ளலாமே! நீங்கள் உயிரோடிருக்கிறதால் இன்றைக்கிருக்கிறவிதமாய் கர்த்தர் உங்கள்மேல் கவனமாய்ப் பட்சமாய் காப்பாராக. அனுதின உணவுப்போல் அனுதின கிருபையும் வேண்டும். நீங்கள் தகப்பனற்றவர்களல்ல: தரவற்றவர்கள் அல்ல. உங்களை கவலைக்குள்ளாக்குகிற காரியங்கள் எதுவானாலும், அது உங்கள் பரமபிதாவுக்கு தெரியும். தேவையானதை அவ்வப்போது உங்களுக்கு தந்து கொண்டேயிருப்பார். தேவ சமாதானம் உங்களை ஆளுகை செய்யட்டும். கர்த்தருடைய வார்த்தையை நம்பியிருங்கள்.

கவலைக்கு இடங்கொடாமல் இருங்கவும், வீண் சிந்தனைகளுக்கு இடங்கொடாமலிருக்கவும் கர்த்தரிடம் காத்திருந்து பொறுமையாய் விசுவாசித்தால் பெற்றுக்கொள்ளவுமே அவர் விரும்புகிறார். இன்றிரவு நீ அமைதியாய் உன் ஆண்டவர் சொன்னதை யோசித்துப்பார். ‘முதலாவது தேவனுடைய இராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள். அப்போது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூட கொடுக்கப்படும். ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள். நாளை தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலை;படும். அந்தந்த நாளுக்கு அதினதன் பாடுபோதும்.” காலையில் நீ விழிக்கும்போது உன் தேவன் உன்னோடிருப்பார். ஆறு துன்பங்களில் உன்னை விடுவித்தவர், ஏழு துன்பங்களிலும் உன்னை கைவிடார்.

ஆகவே கவலைப்டாதே.
வீட்டிலும் வெளியிலும்
இரவிலும் பகலிலும்
அவர் கரம் உன்னைப் போஷிக்கும்
அவர் கரம் உன்னை நடத்தும்.

கர்த்தர் எவனிடத்தில் அன்புகூறுகிறாரோ அவனை அவர் சிட்சிக்கிறார்

பெப்ரவரி 21

“கர்த்தர் எவனிடத்தில் அன்புகூறுகிறாரோ அவனை அவர் சிட்சிக்கிறார்.” எபி. 12:6

எல்லா விசுவாசிகளையும் தேவன் நேசிக்கிறார். ஆகையால் எல்லா விசுவாசிகளையும் அவர் தண்டிக்கிறார். தண்டனைதான் அவர் அன்புக்கு அத்தாட்சி. நாம் பி;ளைகளாயிருப்போமானால் தண்டனை நமக்கு அவசியம் வேண்டும். அப்படி அவசியமான தண்டனைகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். சிலரை நஷ்டம் வரும்படி வியாதிமூலம் தண்டிக்கிறார். சிலருக்குக் குடும்பப் பிரச்சனைகளினால் தண்டிக்கப்படுகிறார்கள். தேவனுடைய ஒரே பிரம்பால் நாம் தண்டிக்கப்படாவிட்டாலும், ஒரே கரந்தான் நம்மெல்லாரையுமே தண்டிக்கிறது. ஒரே வகையாய் நாம் எல்லாரும் சீரடையாவிட்டாலும் நம்மெல்லாரையும் சீர்ப்படுத்துகிறவர் ஞானமும் அன்பும் கொண்ட ஒரே பிதாதான்.

சிலர் மனதில் வருத்தப்படுகிறார்கள். சிலர் சரீரத்தில் துன்பப்படுகிறார்கள். சிலர் தங்களின் உறவினர்கள்மூலம் தண்டனையடைகிறார்கள். எந்த அடிகளும் அன்பால் விழுகிறதென்பதை நாம் மறக்கக்கூடாது. தண்டனை நமக்கு வருத்தத்தைத்தான் கொடுக்கும், பிதாவும் அப்படியே வருத்தம் அடைவார். அவர் வேண்டுமென்று நம்மை தண்டிக்கிறதில்லை. தமது இஷ்டப்படி நம்மைத் துன்பப்படுத்துகிறதில்லை. சில சமயங்களில் நமது புத்தியீனமும் நமது துன்பங்களுக்கும் காரணமாகிவிடுகிறது. நமது பாவங்கள்கூட பிதாவின் கடிந்துக் கொள்ளுதலை அவசியமாக்குகிறது.

இன்று நமது பிதாவின்கீழ் நம்மைத் தாழ்த்துவோமாக. நம்மை அவர் தண்டிக்கும்போது அவர் நமக்குச் சொந்தம் என்றும் நம்மை நேசிக்கிறாராயென்று நாம் சந்தேகிக்கக்கூடாது. நமக்குத் தண்டனை அவசியமில்லையென்று எண்ணி அவைகளை அசட்டை செய்யாதிருப்போமாக.

தேவ தண்டனை எனக்கு
வருத்தமாகக் கண்டாலும்
அதற்கே கீழடங்குவேன்
தேவ சித்தமே நலம் என்பேன்.

புத்திரசுவிகாரத்தின் ஆவி.

பெப்ரவரி 02

“புத்திரசுவிகாரத்தின் ஆவி.” ரோமர் 8:15

பாவிகளாகிய நம்மை இரக்கத்திற்காகக் கெஞ்சும்படி செய்கிறவர் ஆவியானவரே. பிறகு நேசிக்கும் பிள்ளைகளாகும்படி நம்முடன் உறவாடுகிறவரும் இவரே. யேகோவாவின் கிருபை நிறைந்த குணநலன்களை நமக்கு வெளிப்படுத்தி, நமது இதயத்தில் அவரில் வாஞ்சைக்கொள்ளும்படி செய்து பிதாவின் அன்பை நமது உள்ளங்களில் ஊற்றி அப்பா பிதாவே என்று நம்மை அழைக்கச் செய்கிறவதும் இந்த ஆவியானவரே. உலக தோற்றத்திற்கு முன்னே புத்திரசுவிகாரத்தின் சிலாக்கியத்திற்கு நாம் முன் குறிக்கபட்டிருந்தாலும்,பரிசுத்தாவியானவரின் துணைக் கொண்டுதான் சகலத்தையும் அறிய முடியும்.

ஆவியானவர்தான் இருதயத்தைத் திருப்பி, மேலான சிந்தனைகளைக் தந்து, உள்ளத்தைச் சுத்திகரித்து, நோக்கங்களைச் சீர்ப்படுத்தி, சத்தியத்தில் நடத்துகிறார். மேலும் பாவத்தைச் சுட்டிக்காட்டி உணர்த்தி, மனந்திரும்பச் செய்து சமாதானத்தினாலும், உத்தமத்தாலும் நிரப்புகிறார். அவர் நம்மை நடத்தும்போது ஜெபம் இனிமையாகிவிடும். தியானம் பிரயோஜனமாகிவிடும். விசேஷமான வெளிப்பாடுகள் ஆனந்தங்கொடுக்கும்.

நண்பரே, இந்தப் புத்திரசுவிகார ஆவியானவர் உன்னிடத்தி; உண்டா? பிள்ளையைத் தகப்பனிடம் நடத்துகிறதுப்போல நடத்துகிற ஆவியானவரை நாடுகிறாயா? ஆற்றி தேற்றி உன்னை அணைக்கும்போது அவரோடு இசைந்துப் போகிறாயா? அவரால் எழுதப்பட்ட தேவ வசனத்தை ஏற்றுக்கொண்டு கீழ்ப்படிகிறாயா? அவர் ஜெபிக்க சொல்கிறபடி அவருடன் சேர்ந்து ஜெபிக்கிறாயா?

கர்த்தாவே உம் ஆவியை
என் உள்ளத்தில் ஊதிவிடும்
உமதன்பால் என்னை ஆள்கொள்ளும்
உம்மை விடேன் எந்நாளும்.

என் ஆத்துமா தேவன் மேல் தாகமாயிருக்கிறது

பெப்ரவரி 10

“என் ஆத்துமா தேவன் மேல் தாகமாயிருக்கிறது.”  சங். 63:1

தேவன் தன் பட்சத்திலிருக்கிறாரென்று அறிந்துகொள்வது மாத்திரம் ஒரு கிறிஸ்தவனுக்கு போதாது. அவர் சமுகத்தை அவன் தரிசத்து, அவரோடு இன்பமாய் இசைந்து அவருடைய அன்பை ருசிக்க வேண்டும். கிறிஸ்து இயேசுவில் அவன் புதிதாய்ப் பிறந்தபடியால் தேவன் கொடுக்கும் ஈவுகளின்மேல் வாஞ்சையடைய வேண்டும். அவராலன்றி அவன் ஆசைகள் நிறைவேறாது. தேவனுடைய இனிய முகத்தை நாடி வாஞ்சித்து, அதுவே தன் சந்தோஷம் என்று அறிந்து ஆனந்தங்கொள்ள வேண்டும். நீ ஆண்டவரின் முகத்தைக் காணாதுப்போவாயானால் சீக்கிரம் சேர்ந்துதுப்போவாய்.

தேவ வாக்கியங்களில் தேவனைக் காணாவிட்டால் அனலற்ற வெளிச்சம்போலவும், விசேஷித்த சிலாக்கியமாய்க் கர்த்தரைக் காணாவிட்டால் ஜீரத்தினால் பீடிக்கப்பட்டவனுக்கு முன்னால் வைக்கப்பட்டிருக்கிற காய்கறிகளைப்போலவும் தோன்றும். தேவன்தான் ஒருவனுக்கு ஜீவன். இயேசுதான் ஒருவனுக்கு உயிர். கர்த்தருக்குள் சந்தோஷப்படுதலதான் அவன் பெலன். ஒருவன் தேவனைக் காணாவிட்டால் உயிரற்றவன். வியாதியஸ்தன். துக்கம் நிறைந்தவன். பாடுகளுள்வன்.

அன்பரே, இது உன் அனுபவமா? வெறும் அறிவும், வீண் சடங்குகளும், தெய்வ அனலை ஊட்டாத மார்க்கமும், உனக்கு மன திருப்தியை கொடுக்குமா? அப்படியிருக்குமானால் உன் நிலை சந்தேகத்திற்குரியது. தேவனில்லா மார்க்கத்தைப் பற்றியும், தேவனோடு பேசி உறவு கொள்ளாத மார்க்கத்தைப்பற்றியும் எச்சரிக்கையாயிரு.

உம்மேல் தாகமாய்
ஏங்குதே என் ஆத்துமா
என் சமீபமாய் வாரும்
அப்போ தென்வாஞ்சைகள் தீரும்.

இவள் மிகவும் அன்புகூர்ந்தாள்

பெப்ரவரி 23

“இவள் மிகவும் அன்புகூர்ந்தாள்.” லூக்கா 7:47

இவள் ஒரு பெரிய பாவி. தன் பாவத்தை உணர்ந்து இரட்சகரைத் தேடினாள். மன்னிப்புக்காக அவரிடம் சென்று இரக்கம் பெற்றான். இயேசுவின் அன்பையும், அவர் காட்டின பாசத்தையும் அவள் உணர்ந்தபடியால், அவர் Nரில் அன்பு பொங்கிற்று. அவள் அவரைச் சாதாரணமாய் Nநிக்கவில்லை. அதிகமாய் நேசித்தாள். அதனால் அவரின் சமுகத்தை உணர்ந்து அவர் வார்த்தைக்குச் செவிகொடுத்து துன்பத்தையும், நிந்தையையும் சகித்தவளானாள். அவளின் அன்பு உள்ளுக்குள்ளேயே அடைக்கப்படவில்லை. அதை வெளிக்காட்டினாள். அதனால்தான் விலையேறப்பெற்ற தைலத்தைக் கொண்டு வந்து ஊற்றி, தன் கண்ணீரால் அவர் பாதங்களை நனைத்து, தலை மயிரால் துடைத்து அபிஷேகம்பண்ணினாள்.

இது நமக்கு ஒரு நல்ல முன்மாதிரி. நாமும் பாவிகள்தான். இயேசுவும் நமது பாவங்களை மன்னித்தார். ஆம் இந்த ஸ்திரீயை அவர் எவ்வளவாய் நேசித்தாரோ அவ்வளவாய் நம்மையும் நேசிக்கிறார். அந்தப் பெண் நேசித்ததுப்போல் நாமும் அவரை நேசிக்கிறோமா? இல்லையென்றே சொல்ல வேண்டும். காரணம் என்ன? நாம் நமது பாவங்கள் நிமித்தம் அவ்வளவு உணர்வு அடைவதில்லை. நமது அபாத்திர தன்மையை அவ்வளவாய் பார்க்கிறதில்லை. நமது மோசமான வாழ்க்கையைக் கண்டு நாம் கண்ணீர் விடுவதில்லை. அவர் நம்மை மன்னித்த மன்னிப்பைப் பெரிதாக ஒன்றும் எண்ணவில்லை. இனியாவது நமது சிந்தையை இயேசுவண்டைத் திருப்புவோம். பரிசுத்தாவியானவர் தேவ அன்பை நமது இருதயத்தில் ஊற்றும்படி கேட்போம். அவரோடு ஒன்றாகி அவர் பாதத்தில் அமர்ந்திருப்போம்.

தேவ அன்புக்கீடாய்
பதில் என்ன செய்வோம்
அவர் மன்னிப்புக்கு ஈடாய்
நன்றி சொல்வோம்.

கர்த்தருக்கே காத்திரு

பெப்ரவரி 27

“கர்த்தருக்கே காத்திரு.” சங். 37:7

எப்பொழுதுமே பாவியானவன் அமைதலற்றவன். அவன் இருக்க வேண்டிய இடத்தை விட்டுவிட்டபடியால் அவன் ஆவை அவனை நிலையற்றவனாக்குகிறது. கிறிஸ்து அவனைப் பார்த்து என்னிடத்தில் வா, நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன் என்கிறார். விசுவாசி இளைப்பாறுதல் பெற்றிருந்தாலும், சோதனைகளிலும், கவலைகளிலும், அவிசுவாசத்தாலும் அடிக்கடி இழுக்கப்பட்டு, பின்னும் அமைதலய்யவனாகிறான்.

அன்பானவர்களே, உங்களில் கவலைக்குரிய காரியம் இவைகளாய் இருக்கக்கூடாது. நீ கர்த்தரில் இளைப்பாற்றி காத்திருக்க வேண்டும். தேவ சமுகமே உனக்கு ஆனந்தமாய் இருக்க வேண்டும். தேவ சித்தத்திற்குக் காத்திருக்க வேண்டும். அவர் திட்டமிடுகிறதெல்லாம் உன் நன்மைக்காகத்தான் இருக்கும். நீங்கள் பரிசுத்தமாய் வாழவேண்டுமென்பதே தேவசித்தம். தேவ அன்பில் இளைப்பாற்றிக் காத்திருக்கவேண்டும். அவர் சமுகத்தில் அமர்ந்து அவரைப்பற்றி தியானம் பண்ணவேண்டும். தேவ இரக்கத்திற்குக் காத்திருந்தால் இளைப்பாறிக்காத்திரு. அது உண்மையுள்ளது, மாறாததது, தேவனுக்கும் உனக்கும் ஐக்கியம் தேவை. இந்த ஐக்கியத்தில் இளைப்பாறு. அவர் உன் பிதா. கரிசனையுள்ள பிதா. ஞானமுள்ள பிதா. சகாயஞ் செய்யும் பிதா. தேவன் இருக்கிறவிதமாய் அவரைத் தரிச்சிக்க அவரில் காத்திரு. அவர் சகலத்தையும் உன் நன்மைக்காகவும் தன் மகிமைக்காகவும் நேர்ப்படுத்துவார். கர்த்தருக்குக் காத்திரு, பாக்கியமுள்ளவனாயிரு.

தேவ தாசர் தேவ சித்தம்
காத்திருந்து அறிவர்
சோதிக்கப்பட்டும் நித்தம்
அவர் கடாட்சம் பெறுவர்.

நீர் என்னைப் புடமிட்டுப் பார்த்தீர்

பெப்ரவரி 13

“நீர் என்னைப் புடமிட்டுப் பார்த்தீர்.” சங். 17:3

ஆகையால் ஜெபத்திற்குப் பதில் கிடைத்தது. கிருபை வரங்கள் பெருகியது. தேவன் உன்னைக் கண்டிப்பாய் நடத்தியிருக்கிறார். நீதிமானைக் கர்த்தர் புடமிடுகிறபடியால் அவனுக்கு வரும் துன்பங்கள் மூலம் நற்குணங்கள் பிரகாசிக்கின்றன. அவருடைய அக்கினி சீயோனிலும் அவருடைய குகை எருசலேமிலும் இருக்கினறன. அங்கேதான் அவர் தமது ஜனங்களைப் புடமிடுகிறார். எந்தத் துன்பமும் நமது நன்மைக்கு அவசியம் வேண்டியது. நித்திய நேசத்தால் ஏற்படுத்தப்பட்டு எவ்வளவு காலம் அது தேவையோ அவ்வளவு காலம் அது இருக்கும். அதற்கு மிஞ்சி ஒரு நொடியும் இருக்காது. எந்தப் பக்தனுக்கும் துன்புங்கள் வேண்டும். எந்த விசுவாசியும் புடமிடப்படுகிறான். நம்மைப் பரிசுத்தராக்க தேவன் சித்தங்கொண்டால் நம்மை அக்கினியில் வைப்பார்.

பரிசுத்தத்திற்காக நாம் ஜெபிக்கும்போதெல்லாம் துன்பங்கள் வேண்டுமென்று கேட்கிறோம். துன்பங்கள் வாக்குத்தத்தங்களை அதிக அருமையாக்கி, கிருபாசனத்தின்மேல் நாம் வாஞ்சைக்கொள்ள செய்கிறது. இது இரட்சகரை எவ்வளவோ அருமையுள்ளவர் ஆக்குகிறது. துன்பங்கள் வரும்போது நம்முடைய சொந்த இருதயங்களை நாம் நன்றாய் பார்க்கிறோம். உலகம் நம்மைச் சாந்திப்படுத்தாது என்று அறிகிறோம். நாம் தேவனுடைய பிள்ளைகளென்று காட்டுகிற சாட்சிகளைக் கூர்ந்து கவனிக்கச் செய்கிறது. ஒரு புடமிடப்பட்ட கிறிஸ்தவன் உறுதியுள்ளவனாவான். சோதனையில்லாமல் இருக்கிறவர்கள் பரம சிந்தையில் குறையுள்ளவர்களாயிருப்பார்கள். அதிக பிரயோஜனமுள்ளவர்களாயும் இருக்க மாட்டார்கள். பிறருக்கு ஆறுதலாயுமிருக்க முடியாது. துன்பங்கள் மழை காலத்தில் விழும் மூடுபனிபோல் வசனமாகிய விதையை ஏற்றுக்கொள்ள நமது இருதயத்தைப் பண்படுத்துகிறது. அப்போதுதான் நாம் அதிக கனிகளைக் கொடுப்போம்.

அக்கினியில் என்னைச் சோதித்தீர்
அதை அவித்து தினம் துதிப்பேன்
தண்ணீரில் மூழ்கப் பண்ணினீர்
நீரே இரட்சித்தீரென்று போற்றுவேன்.

கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு

பெப்ரவரி 14

”கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு.” சங். 37:4

கர்த்தர் நம்மில் மகிழுகிறதுபோல, நாம் அவரில் மனமகிழ்ச்சியாயிருக்க வேண்டும். இதற்கு அவருடைய அன்பைப்பற்றி சரியான எண்ணங்கள் நமது உள்ளத்தில் வரவேண்டும். இயேசுவில் வெளியாகியிருக்கிற அவரின் மகிமையான குண நலன்களைத் தியானிக்க வேண்டும். அவருடைய அன்பும் பூரண இரட்சிப்பும் நமக்கு உண்டென உணரவேண்டும். அவரின் அழகையும் பரலோக சிந்தையும் நம்மில் இடைவிடாமல் இருக்க வேண்டும். அவரின் வாக்குகளை அதிகம் நம்ப வேண்டும்.அவரின் பாதத்தில் காத்திருக்க வேண்டும். நமது தகப்பனாகவும், நண்பனாகவும் அவரை நாட வேண்டும். நமது பங்கு நித்திய காலமாய் நமக்கிருக்கிறதென்று விசுவாசிக்க வேண்டும்.

எனவே, கீழான காரியங்களின் மேலிருக்கும் நாட்டத்தை நீக்கி, அதைக் கர்த்தர்மேல் வைக்க அதிகமாய் பிரயாசப்பட வேண்டும். கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாய் இருப்பவர்கள் வெகு சிலரே. அவரைப் பற்றி தியானிப்பது, அவரைப்பற்றி அறிந்துக்கொள்வது அவரைப்பற்றிப்படிப்பது போதுமென்றிருக்கிறோம். ஆனால் அது போதாது. நாம் கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிருக்க வேண்டும். நமக்கு வேண்டியதையெல்லாம் நமக்குக் கொடுக்கும் பொக்கிஷங்களில் நாம் மகிழலாம். நமக்குத் தரும் பாதுகாப்பிற்காகவும் அவரில் மகிழலாம். அவரின் அலங்காரமான பரிசுத்தத்தில் மகிழலாம். அவரின் கிருபைக்காகவே அவரில் அனுதினம் மகிழலாம்.

கர்த்தாவே உம்மில் மகிழுவேன்
உமது அரவணைப்பில் பூரிப்பேன்
நீர் என் நேசர், துன்பத்தில்
உமதண்டை ஓடி வருவேன்.

இலக்கை நோக்கித் தொடருகிறேன்

பெப்ரவரி 03

“இலக்கை நோக்கித் தொடருகிறேன்.”  பிலி. 3:14

விசுவாச பந்தயத்தில் ஓடுகிறவன். பந்தயப் பொருள் அவனுக்கு முன் வைக்கப்பட்டிருக்கிறது. பரிசுத்தம், மகிமை, பரலோகம் இவைகளே இந்தப் பந்தையப் பொருள். அவன் ஓடவேண்டிய ஓட்டம் பரிசுத்த வசனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த ஓட்டத்தில் அNநுக சத்துருக்கள் எதிர்ப்படுவார்கள். துன்பங்களும், சோதனைகளும் வந்தாலும் நமது குறி இலக்கை நோக்கியே கவனிக்க வேண்டும். அந்த இலக்கை அடைய வேண்டுமென்றே அவன் அனுதினமும் போராட வேண்டும். கிறிஸ்து வைத்த வாழ்க்கையின் மாதிரியே அந்த இலக்கு. அவரைப்போலவே நாம் மாறவேண்டும். அவரைப்போன்றே பாவத்தைப்பகைத்து, சாத்தானை ஜெயித்து, சோதனைகளைச் சகித்து, ஓடவேண்டும்.

இயேசுவோ தமது முன்வைத்த சந்தோஷத்தை நோக்கிக் கொண்டே பந்தயச் சாலையில் ஓடி தமது இலக்கை அடைந்து, கிரீடத்தைப் பெற்று ஜெய வீரராய் தேவ வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார். அவர்தான் நமக்கு முன்மாதிரி. நமது விசுவாசத்தைத் துவக்கி முடிக்கிறவரும் அவரே. நமது கண்களும் கருத்தும் அவர் மேலிருக்க வேண்டும். அவர் தேடிய விதமாகவே நாமும் தேடவேண்டும். அப்போஸ்தலனைப்போல் ஒன்றையே நோக்கி, அதையே நாடி இல்கை நோக்கி தொடர வேண்டும். அப்போதுதான் பந்தையப் பொருள் கிடைக்கும். ‘நான் ஜெயங்கொண்டு பிதாவின் சிங்காசனத்தில் அமர்ந்ததுப்போல, ஜெயங்கொள்ளுகிறவன் எவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடுகூட உட்காரும்படி கிருபை செய்வேன்’ என்று கிறிஸ்துவும் சொல்லுகிறார்.

நாம் ஓடும் ஓட்டத்தில்
இரட்சகரையே நோக்குவோம்
அந்த இலக்கை நோக்கினால்
பந்தயப் பொருளைப் பெறுவோம்.

சமாதானத்தின் தேவன்

பெப்ரவரி 05

“சமாதானத்தின் தேவன்.”  எபி. 13:20

கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தால் தேவன் நம்மோடு முற்றிலும் சமாதானமாகி ஒப்புரவாக்கப்பட்டிருக்கிறார். அவர் சமாதானத்தின் தேவன். பயப்படத்தக்கதொன்றும் அவரில் இல்லை. இயேசுவின் நாமத்தில் எதைக் கேட்டாலும் அதை நடக்குக் கொடுப்பார். அவர் நம்மேல் மனஸ்தாபமாயிருந்தது உண்மைதான். இப்போதோ அவர் கோபம் நீங்கி ஆறுதல்படுத்துகிறார். நமக்கும், அவருக்கும் இப்போது சமாதானமுண்டு. நமது நன்மையை அவர் போருகிறார். அவருக்கு மகிமையை அதிகம் கொடுக்க வேண்டியதே நமது கடமை. யோகோவா நம்மிடம் சமாதானமாய் இருப்பது எத்தனை பாக்கியம். அவரின் சமுகத்தில் நமது இருதயத்தை ஊற்றி அவரில் நம்பிக்கை வைத்து முழுவதும் அவர் கரத்தில் நம்மை ஒப்புக்கொடுப்போமாக.

கிறிஸ்துவானவர் நமக்காக நிறைவேற்றின கிரியையை, யோகோவா அங்கீகரித்து, அவரை மரித்தோரிலிருந்து எழுப்பி, பரம ஸ்தலங்களில் அவரைத் தமது வலது பாரிசத்தில் வைத்து, அவர்மூலம் நமது வாழ்க்கைக்கு நன்மை செய்யப் பிரியப்படுகிறார். இப்போதும் அவர் அதிகமாய் நம்மோடு சமாதானப்பட்டிருக்குpறார். நாம் இதை அதிகமாய் நம்பி அதிகமாய் அனுபவிக்கலாம். பரிசுத்தாவியைத் தந்து நமக்கு நன்மை செய்கிறது அவருக்குப் பிரியம். இனி தேவனைக் குறித்து தப்பெண்ணங்கொள்ளாதபடிக்கும் அவர் கடினமனமு;ளவரென்று எண்ணாதபடிக்கும் எச்சரிக்கையாயிருப்போமாக. அவர் சமாதானத்தின் தேவன்.

சமாதானத்தின் தேவனே
அமர்ந்த மனநிலை தாருமே
இருதயத்தில் இரத்தம் தெளித்து
உமது நாமம் அதில் எழுதுமே.

My Favorites

நித்திய ஜீவனைக் குறித்த நம்பிக்கையைப்பற்றி

மார்ச் 15 "நித்திய ஜீவனைக் குறித்த நம்பிக்கையைப்பற்றி." தீத்து 1:3 உத்தம கிறிஸ்தவன் ஒருவன் இப்படித்தான் ஜீவியம் செய்ய வேண்டும். அவன் இருதயம் கீழான உலக காரியத்தைப்பற்றாமல் நித்திய ஜீவனுக்கென்று இயேசுவின் இரக்கத்தையே நோக்கிக்கொண்டிருக்கிறது. கிறிஸ்தவனின்...
Exit mobile version