முகப்பு வலைப்பதிவு பக்கம் 4

மன அழுத்தம், ஆபத்தா?

நாம் வாழ்கின்ற இந்த உலகம் நிலையற்றதாக. வேகமான ஓட்டத்தில் மாறிக்கொண்டிருக்கின்றது. அந்த ஓட்டத்தோடு போகும் நம்முடைய அன்றாட வாழ்வில். மன அழுத்தமானது ஒரு எதிர்மறையான பகுதியாக அமைந்துவிட்டது. மன அழுத்தம் என்பதை விளக்கப்படுத்தும் போது வாழ்வில் திணிக்கப்படுகின்ற மேலதிக நம் தாக்கங்கள் தேவைகள் மற்றும் பாரங்களால், மக்களில் ஏற்படுகின்ற எதிர்விளைவு என குறிப்பிடலாம்.

லண்டனில் சுமார் 5.000,000 மக்கள் தங்கள் வேலைகளினால் மிக அதிகமான மன அழுத்தத்தை அனுபவிப்பதாக அறிக்கைகள் குறிப்படுகின்றன. 2004 மற்றும் 2005 இல் மொத்தமாக 12.8 மில்லியன் வேலை நாட்கள் மன அழுத்தம் காரணமாக இழக்கப்பட்டுள்ளன. மனஅழுத்தமானது ஒரு ஆரோக்கிய சமூகத்திற்கு பெரிதான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

தோற்றம்:

மன அழுத்தம் ஏற்படும் வேளையில், நாம் நம் வாழ்வை சிந்தித்துப்பார்க்க வேண்டும். மன அழுத்தமானது நம் சுயத்தால், உள்ளான மனதின் காரியங்களால் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம், அல்லது நம் மேல் சுமத்தப்பட்ட ஒன்றாக அமையலாம். எப்படி அமைந்தாலும், அடிப்படைக் கொள்கையில் எந்தவித மாற்றமும் இருப்பதில்லை. மனிதன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்தினாலும் தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால். அதனால் அவனுக்கு என்ன லாபம்? என இயேசு கிறிஸ்து கேட்ட கேள்வியே அந்த அடிப்படைக் கொள்கை (மாற்கு 8:36)
இது நமக்கு நிஜமான சவாலோடு அமைகின்றது. முன அழுத்தங்கள் நிறைந்த வாழ்விலிருந்து. சூழ்நிலையிலிருந்து வெற்றி பெற அல்லது தப்புவதற்கு முக்கிய விஷயமாக அமைவது எது? இந்த பூமியில் நம்முடைய வாழ்க்கைக் காலமானது. நித்தியத்திற்கு ஒரு படியேறுகின்ற ஒரு குறுகிய பயணமே. நாம் நித்தியவாழ்வைக் குறித்ததான காரியங்களுக்கு நம் எண்ணங்களை ஒருமுகப்படுத்துவோமானால். நம் வாழ்வு வேறொரு தோற்றத்தில் காணப்படும். இந்த உலகின் அழுத்தங்கள். உடைமைகள். தகுதிகள் யாவும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே. ஏனெனில். நம் வாழ்க்கை முறைக்கேற்ப நம் ஆத்மா. நித்திய காலமும் இருக்கப் போகும் இடத்தின் முடிவு பரலோகம் அல்லது நரகம் ஆகும்.

ஆயத்தமா?

இது ஒரு மிக முக்கியமான விஷயமாகும். எல்லா மனிதர்களுமே ஏதோ ஒரு நித்திய இடத்திற்கு செல்ல வேண்டியது தவிர்க்க முடியாத கட்டாயமான ஒன்று. நல்ல இடத்தை அடைவதற்குரிய முன்னேற்றப்பாடுகளை செய்து, தயாரான நிலையில் இருந்தால் தான் பரலோகத்தினுள் போக முடியும். அதற்கு நாம் எப்படி தயாராக முடியும்?

நமது பாவங்களை தேவனிடத்தில் அறிக்கைவிட்டு. பாவ வழிகளை விட்டு விலகி மனம் திரும்ப வேண்டும். கிறிஸ்துவின்மேல் விசுவாசம் வைத்து அவர் சொல்லிய வழிப்படி நாம் வாழ வேண்டும் (அவரை நம் இரட்சகராக ஏற்றுக்கொள்ள வேண்டும்). தன்னிடத்தில் விசுவாசம் வைக்கிறவர்கள் எவர்களோ, அவர்களுடைய பாவங்களுக்கான தண்டனையை தன்மீது சுமந்து கிறிஸ்து இயேசு சிலுவையில் மரித்தார். அதன்பின், நமக்கு ஜீவன் கொடுக்கும்படி தேவனாக உயிர்தெழுந்தார். நமக்காக பாடுகள் பட்டு மரித்து, உயிர்தெழுந்து நமக்கு ஜீவன் தந்த கிறிஸ்துவை நாம் தொடர்ந்து பின்பற்றி வாழ வேண்டும். அப்போது தான். நமது வாழ்வில் பரலோகத்தை நாம் நிச்சயத்துடன் நோக்கிப் பார்க்க முடியும்.

இதில், சிறப்பான விஷயம் என்னவென்றால். அழுத்தங்கள் நிறைந்த உலகில் வெற்றி பெறுவதோ. உயிர்வாழ்வதோ முக்கியமல்ல. இரட்சிப்பை அடைவதும், நித்தியத்திற்கான ஆயத்தங்களை செய்வதுமே பெரிய காரியம். இயேசு கிறிஸ்து மூலமாக இரட்சிப்பைப் பெற்ற மனிதன். எவ்வித அழுத்தங்களுமில்லாமல், பரிபூரணம் நிறைந்துள்ள பரலோகத்தை, நித்திய எதிர்காலமாக நோக்கிப் போக முடியும். அங்கு நித்திய மகிழ்ச்சி உண்டு.

அதே வேளை, தேவனை விசுவாசிக்காமல் உலகத்தை ஆதாயப்படுத்த எண்ணி வாழ்பவர்கள் நித்திய நரகத்தை அடைவார்கள். அங்கே (நரகத்தில்) நித்தியமான மன அழுத்தங்களால் அவதிப்படுவர் என்பதையும் வேதாகமம் நமக்கு எச்சரிக்கின்றது.
இதை வாசிக்கின்ற உனது நிலை என்ன? உலகத்தை ஆதாயப்படுத்த எண்ணி மன அழுத்தங்களாலேயே சாகப் (மடிய) போகின்றாயா? அல்லது இரட்சகராகிய இயேசு கிறிஸ்து மூலமாக கிடைக்கும் நித்திய வாழ்க்கையை நோக்கி வாழப்போகின்றாயா?

மீட்பு

எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி, இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக் கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள். (ரோ.3:23-24)

புதிதாக ஒருவர் உங்களை சந்திக்க வந்தால் அவர் மதிப்புக்குரியவர் என எண்ணி வீட்டுக்குள் வரவேற்று தேனீர் அருந்தக்கொடுப்பீர்கள். விருந்தினரை வரவேற்று அவர்களை உபசரிப்பது நமது கலாச்சாரம். சில சமயங்களில் அவருக்கு உதவி புரியவும் முன்வருவோம்.

இதுபோன்ற நற்பழக்க வழக்கங்களை, கெடுதியானதும் துன்பம் நிறைந்ததுமான சூழ்நிலைகளில் மனிதர்கள் மறந்து விடுவதுண்டு. இவ்விதமான சூழ்நிலையில் அநேக மதிப்பிற்குரியவர்களும் கூட மிகவும் முரட்டுத்தனம் உள்ளவர்களாகவும், கொடுமையானவர்களுமாய் மாறிவிடுகிறார்கள். பசியுற்றவர்கள் திருடுவார்கள், பயமுற்றவர்கள் தங்கள் அயலாரைக் காயப்படுத்துவார்கள். பொய்யும், பகையும் நம் சூழ்நிலைகளை கெடுத்துவிடும். அனுபவங்கள் மற்றவர்களைக் குறித்து சந்தேகப்படவும் தீமையான எண்ணங்கொள்ளவும் வழிநடத்திவிடுகின்றது. இவ்வாறு நாடுகளுக்கிடையேயும் கெடுதியான இருளான எண்ணங்கள் காணப்படுகின்றது. நீங்கள் எப்படிப்பட்ட கசப்பானவர்கள்? உங்கள் எதிரியைவிட நீங்கள் முன்னேற முயற்சிக்கும்போது அவனுடைய அழிவைக்கண்டு நகைப்பதில்லையா? பள்ளிப்படிப்பிலும் கூட மற்றவர்களைக் குறித்த கரிசனை, பாரம் இல்லாது உங்களுடைய வெற்றியைக் குறித்தே சிந்தித்துக் கொண்டிருப்பதில்லையா? உணவருந்தும்போதும் சுவையான ஆகாரத்தையே விரும்பி அதைப் பெற்றுக்கொள்ள துடிப்பதில்லையா? நீங்கள் ‘தூஆ’ செய்யும்போது உங்களுடைய பிரச்சனைகளுக்காகவே அதிகநேரம் இறைவனிடம் (அல்லாவிடம்) கேட்பது இல்லையா?

இயற்கையாகவே மனிதன் சுயநலமும், தயக்கமும், தீய நாவும் உடையவனாக இருக்கிறான். ஏனெனில் இறைவனின் இரக்கம் அவனில் வாசம் செய்வதேயில்லை. பிறர் உனக்கு எதிராக யாதொரு காரியத்தையும் செய்யும்போது இறைவன் உன்னில் அன்பு கூர்ந்ததுபோல நீ அவர்களில் அன்பு கூறுவதேயில்லை. நாமெல்லாரும் பாவம் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்து சாத்தானின் சோதனைகளைக் கண்டு நகைக்கிறவர்களாய் காணப்படுகிறோம். இறைவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய நமக்கு பிரியமில்லை. மேலும், நம்மைப் படைத்தவரைப்பற்றிய எண்ணமும் நம்மில் இல்லை. நாம் நமது பாவங்களை விட்டுவிட மனமில்லாத அளவிற்கு நமது பாவத்தை விரும்புகிறோம். நமது எல்லா உறுப்புகளும் பாவம் நிறைந்ததாக இருப்பதால், நீதியும் நித்தியமுமான இறைவனின் கோபாக்கினைக்குப் பாத்திரராயிருக்கிறோம். நாம் நமது பாவங்கள் சிலவற்றை அறிந்திருக்கலாம். ஆயினும் இறைவன் நம் ஆன்மாக்களின் ஆழத்தையும் அறிந்திருக்கிறார். நமது பாவங்கள் அனைத்தும் அவருக்கு முன்னிருக்கின்றன. அவருடைய கட்டளையே நம்மை நியாயம் தீர்க்கிறது. அதன் தீர்ப்போ, “இப்பாவி தள்ளப்பட்டு இழக்கப்பட்டிருக்கிறான்” என்பதே.

மனிதத் தன்மைக்கு வேறுபட்ட தன்மையுடையவர் ஒருவர் இருக்கிறார். இவரே நமது பாவக்கட்டுகளைத் தகர்த்தெறிந்தவர். தம்மைப் பகைத்தவர்களையும் தம்மில் நிலைத் திருந்தவர்களையும் அவர் நேசித்தார். இறைவனுடைய மகிமை அவர் ஊடாக முடிவின்றிப் பிரகாசித்தது.

இந்த பாவமற்ற மனிதன் இயேசு கிறிஸ்துவே. இவர் நமதாண்டவர். கன்னிகையான மரியாளிடத்தில் இறைவனுடைய ஆவியினால் பிறந்தவர். அவருடைய உள்ளம் அன்பினாலும், சத்தியத்தினாலும் நிறைந்திருந்தது. அவரைக் குறித்து ரசூல்கள் கூறியதாவது, “அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.” (யோவான் 1:14) மனிதனை, பிசாசின் தந்திரங்களிலிருந்து விடுவிக்கவும், இறைஅன்பினால் மனிதனை நிரப்பவும் அவர் இவ்வுலகத்தில் வந்தார். அவர் ஊழியம் கொள்ளும்படிவராமல், ஊழியம் செய்யவும், எல்லாரையும் மீட்டுக்கொள்ளும் பொருட்டுத் தம் உயிரையே மீட்புப் பொருளாகக் கொடுக்கவும் வந்தார்.

தமது மகத்தான அன்பிலே, கிறிஸ்து நம்முடைய பாவங்களைச் சுமந்து, அவைகளுக்கான விலையை செலுத்தி, இறைவனுடைய கோபாக்கினையை நமக்குப் பதிலாக தாமே சகித்தார். நம்மை நித்திய அழிவிலிருந்து காப்பாற்ற, அவர் மரித்ததினிமித்தம் நம் மெய் மீட்பரானார். தம்மிடத்தில் சுகம் பெற்றவர்களிடத்தில் அவர் கூலி கேட்கவில்லை. மரித்தவர்களை உயிருள்ளவர்களாய் எழுப்பினார். “உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்று உனக்கும் கூறுகிறார். உன்னிடம் நோன்பையோ, நற்கிரியைகளையோ அல்லது பலியையோ அவர் கேட்கவில்லை. உன்னை இறை சமாதானத்தில் ஆதரித்து, தம் சொந்த விலையேறப்பெற்ற இரத்தத்தினால் கழுவுகிறார். உன் இரட்சகரில் நம்பிக்கைவை, அப்போது உன்னுடைய விசுவாசத்தினால் நீ பிழைத்துள்ளாய் என்பதை நீ அறிந்து கொள்வாய்.

தம், நன்மையும் இரக்கமும் நிறைந்த கண்களினால் கடவுள் உன்னையும் மற்றெல்லா பாவிகளையும் பார்க்கிறார் என்பதனை நீ ஒருபோதும் மறந்துவிடாதே. நீ நல்லவன் என்பதால் உன்னை அவர் அவ்வாறு நோக்குகிறாறென்றல்ல, உன்னை நீயே மீட்டுக் கொள்ள முடியாதென்பதை அவர் அறிவார். சகல அங்கலாய்ப்பில் இருந்தும், துன்பத்தின் கண்ணியிலிருந்தும் உன்னை தூக்கியெடுக்க நித்தியமான கிறிஸ்து உன்னிடத்தில் வந்தார். கிறிஸ்துவண்டை வா! நீ சத்தியத்தைக் கண்டு கொள்வாய். இறை நீதியையும் பெற்றுக் கொள்வாய். கடவுள் உன்னைத் தள்ளிவிடாமல் அன்போடுன்னை வரவேற்கிறார். நீ அவரை உலக இரட்சகர் என நம்பியிருந்தால், இறைவன் உன்னை நீதிமானாகக் காண்கிறார். அன்புள்ள நண்பா, இறைவன் உன்னை நேசிக்கிறார். அதுமட்டுமல்ல, உன்னை சுத்தமாக்கவும் சித்தம் கொண்டுள்ளார். தாமதியாமல், அவர் உனக்கு அளிக்கும் அருளுக்காக அவருக்கு நன்றி செலுத்து. இறைவன் மகத்தானவரென்றும், தம்முடைய மீட்பின் நிமித்தம் மக்களை இலவசமாய் நீதிமானாக்குகிறாரென்றும் மற்றவர்களுக்குச் சொல். அவர்கள் மீட்பைப் பெற்றுக்கொள்ளவும், அளவில்லா அன்பினாலும், மகிழ்ச்சியினாலும், மேலும் நன்றியுள்ள இருதயத்தினாலும் நிரப்பப்படவும் உன் நம்பிக்கையினால் அவர்களுக்கு அறிவூட்டு.

நீ உன் தீய பழக்கவழக்கங்களிலேயே உழன்று கொண்டிராமல் அவைகளை விட்டு கிறிஸ்துவோடு வாழவும் அவருடைய பலத்தினால் தூய வாழ்வு வாழவும், கிறிஸ்து உன்னை உன் தீய பழக்கவழக்கங்களிலிருந்து விடுவிக்க வல்லவராயிருக்கிறார். இதற்கு சந்தேகமேயில்லை. கிறிஸ்துவின் மீட்பு ஒரு முற்றுப்பெற்ற ஒரு வேலை. உன் வாழ்வை அதோடு தொடர்புள்ள போராட்டங்களோடும், சிக்கல்களோடும், தோல்விகளோடும் அவருக்கு அர்ப்பணி. அப்போது அவர் தமது காயப்பட்ட கரங்களை உன்மேல் வைத்து உன்னை ஆசீர்வதித்து, தமது சமாதானத்தை உன் சரீரத்திலும், தமது மகிழ்ச்சியை உன் உள்ளத்திலும், தமது சுத்திகரிப்பை உன் மனச்சாட்சியிலும் ஊற்றுவார் என்பதை நீ அறிந்து கொள்வாய். கிறிஸ்துவினுடைய அன்பின்விளைவை மக்கள் உன் வாழ்விலும் உன் வாழ்வினூடாகவும் கண்டு கொள்வார்கள்.

இவர் யார்

இவர் பிறக்கும்போது, மிகவும் தாழ்வான சூழ்நிலையில் பிறந்தார். எனினும் அவர் பிறந்த அன்று வானமண்டலத்தில் தூதகணங்களின் மகிழ்ச்சியின் இன்ப கீதங்கள் எழும்பின. அவர் பிறந்த இடம் ஒரு மாட்டுக்கொட்டகையாய் இருந்தபோதிலும் ஒரு விண்மீன் அறிஞர்களைக் கீழ்த்தேசத்திலிருந்து வந்து அவரை வணங்கும்படி வழிநடத்தினது.

அவர் பிறப்பு இயற்கை விதிக்கு முரண்பட்டது. அவர் மரணம் மரணவிதிக்கும் மாறுபட்டது. அவர் ஜீவியமும், போதனையும் விளக்கவொண்ணாத ஒரு மாபெரும் அற்புதம். அவருக்கு கோதுமை வயலோ, மீன்பண்ணையோ இல்லாதிருந்தும் அப்பமும் மீனும் ஐயாயிரம் பேருக்கு திருப்திபடக்கொடுத்து மீதமும் வைக்கமுடிந்தது. அவர் நீர் மேல் நடந்தால் அது தரைபோல் அவரைத் தாங்கும்.

அவரைச் சிலுவையில் அறைந்ததோ கொடுமையிலும் கொடுமை. தேவன் அம் மரணத்தின்மூலம் கிருபையாய் பாவமன்னிப்பையும் மீட்பையும் மானிடர்க்கு அருளிச் செய்தார். அவர் மரித்த அன்று ஒரு சிலரே அவருக்காகப் புலம்பினர். ஆயினும் சூரியன் கருந்திரையினால் மூடப்பட்டதுபோல் அந்தகாரப்பட்டது. கீழிருந்த பூமியோ அக் கொடுமையின் பாரம் தாங்காமல் அதிர்ந்தது. சகல இயற்கையின் தத்துவங்களும் அவரை நன்கு மதித்து அவருடைய அநியாய மரணத்திற்கு தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவித்தன. ஆனால் இவ் உலகின் கொடிய பாவிகளோ அவரைத் தூஷித்து, புறக்கணித்து, சிலுவையில் அறைந்தனர்.

பாவம் அவரை எள்ளளவேனும் தீண்டவில்லை. அழிவோ அவரின் சரீரத்தை ஆட்கொள்ளஇயலவில்லை. அவர் இரத்தத்தால் கறைபட்ட மண் அவர் சரீரத்தை மேற்கொள்ள முடியவில்லை. ஏனெனில் அவர் மரித்து மூன்றாம் நாள் மண்ணிலிருந்து உயிருடன் எழுந்தார்.

அவர் நன்மை செய்கிறவராய் சுற்றித்திரிந்து மூன்றரை வருஷங்கள் சுவிசேஷத்தைக் கூறி அறிவித்தார். அவர் ஒரு புத்தகமும் எழுதியதில்லை. ஒரு கட்சியும் அமைக்கவில்லை. ஒரு ஆலயமும் கட்டவில்லை. அவர் மாபெரும் நிதிகள் ஒன்றும் திரட்டவில்லை. என்றாலும் கடந்த இரண்டாயிரம் வருடங்களாக மனித சரித்திரத்தின் நடுநாயகமாக வீற்றிருக்கிறார். இடைவிடாமல் போதிக்கப்பட்டுவரும் பிரசங்கங்களின் மத்திய பொருள் இவரைப் பற்றியதே. காலத்தின் சகல வர்த்தமானங்களும் இயேசு கிறிஸ்து எனும் ஒரு அச்சாணியிலேயே சுழன்றுகொண்டுவருகிறது. இவர் ஒருவரே மானிடவர்க்கத்தை மீட்டு புதுப்பித்து நித்தியஜீவனைக் கொடுக்க வல்லவர்.

அவர் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் தோன்றி மறைந்த மரியாளின் மைந்தனான வெறும் மைந்தனோ? இல்லை! இல்லை! இவர் தெய்வத்தில் தெய்வமானவர். பரஞ்சோதியான உண்மைக் கடவுள். இவர் சர்வத்துக்கும் மேலான தேவன். கல்வாரிச் சிலுவையில் அவர் செய்த ஒப்பற்ற தியாகம்தான் கடந்த நூற்றாண்டுகளில் கொடிய பாவிகளையும் நரமாமிசபட்சணிகளையும் மீட்டு, இரட்சித்து புனிதராக்கி, பிறரைத் தம் தோழராக நேசிக்கச் செய்து அவர்கள் ஜீவியத்தில் அற்புதமாறுதல்கள் உண்டுபண்ணிற்று.

இப்படிப்பட்ட மகத்துவம் நிறைந்த தூயவரை மானிடரை மீட்டு இரட்சித்து இம்மையில் பாவமன்னிப்பின் நிச்சத்தையும் மறுமையில் மோட்சானந்தத்தையும் அளிக்கவல்ல இவ் உன்னத மீட்பரை பகுத்தறிவுள்ள எந்த மனிதனும் என் ஆண்டவனே! என் தேவனே! என்னை இரட்சியும் என்று வணங்காமல் இருக்க மாட்டான்.

இதை வாசிக்கும் அன்பான நண்பரே, நீர் பாவ மன்னிப்பைப் பெற்று மோட்சம்செல்ல வாஞ்சிக்கிறீரா? இப்படிப்பட்ட ஒப்பற்ற நேசராகிய இயேசு கிறிஸ்துவை உமது உள்ளத்தில் உறையும் கடவுளாகவும், உமது சொந்த இரட்சகராகவும் ஏற்று அங்கீகரிப்பீராகில் அவர் உம்மை முற்றுமுடிய இரட்சித்து மோட்சானந்த பாக்கியத்தை உமக்கு அருளுவார். நீர் இம்மையிலும் மறுமையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பீர்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் (அப்16:31).

சுகமாக வேண்டுமென்று விரும்புகிறாயா?

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எருசலேம் என்னும் பட்டணத்தில் பெதஸ்தா எனப்பட்ட ஒரு குளம் இருந்தது. அந்தக் குளத்தின் கரையில் ஐந்து மண்டபங்கள கட்டப்பட்டிருந்தன. அவைகளில் குருடர், சப்பாணிகள், சூம்பின உறுப்புடையவர்கள் முதலான வியாதிக்காரர் அநேகர் படுத்திருந்து தங்கள் சுகத்திற்காக ஏங்கிக் கொண்டிருந்தார்கள்.

முப்பத்தெட்டு வருஷம் வியாதிகொண்டிருந்த ஒரு மனிதன் அங்கே படுத்திருந்தான். இந்த மனிதனுடைய நிலைமை மிகவும் பரிதாபகரமாய் இருந்தது. இந்த மனிதனைக் குறித்து ஆராயும்போது, முதலாவது, இவன் நெடுநாள் வியாதியுள்ளவனாய் இருந்தான். ஒன்று இரண்டு வருடங்களல்ல, முப்பத்தெட்டு வருடம் படுக்கையில் கிடந்து இவனது உறுப்புகள் செயலற்றுப் போயிருந்தன.

இரண்டாவதாக இந்த மனிதன் உதவியற்றவனாயிருந்தான். இவனை ஆரம்பத்தில்கவனித்து வந்தவர்கள் இவனுக்கு உதவி செய்து சலித்துப் போனார்கள். இப்பொழுது உதவி செய்ய யாரும் முன் வரவில்லை. வேளா வேளைக்கு உணவு கொடுத்து கவனிக்கயாருமில்லை. மூன்றாவதாக நம்பிக்கையற்றவனாயிருந்தான். ஆரம்பத்தில் இந்த வியாதி சுகமாகிவிடும் என்ற நம்பிக்கை இருந்தது. இப்பொழுதோ முப்பத்தெட்டு ஆண்டுகள் கடந்து விட்டது. “இனி யார் தான் என்னை சுகப்படுத்தப்போகிறார்கள்? நான் சாகும்வரை இதே படுக்கையில்தான் சாக வேண்டும்” என்று வாழ்க்கையில் நம்பிக்கையற்ற நிலையில் இந்த மனிதன் இருந்தான்.

இப்படி இந்த மனிதன் நெடுநாளாய் வியாதிப்பட்டு, உதவியற்றவனாக, நம்பிக்கையிழந்து படுத்திருக்கும்போது, ஒரு நாள் அவனைத்தேடி வந்த மனிதர் அதிசயமான கேள்வியைக் கேட்டார். சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா? என்பதே அக்கேள்வி. சுகத்திற்கு ஏங்கிக் கொண்டிருக்கும். அந்த மனிதன் இந்த வார்த்தைகளைக் கேட்டு உடனே, மிகுந்த ஆச்சரியப்பட்டு, என்னை அன்போடு விசாரிக்கும் இவர் யார்? என்று அவரை நோக்கிப் பார்த்தான். மன உருக்கமுள்ளவராக, கண்களில் அன்பு கனிந்தவராக இயேசு கிறிஸ்து அவனையே நோக்கிக் கொண்டிருந்தார். அவன் தன்னுடைய உதவியற்ற நிலைமையை இயேசுவுக்கு எடுத்துச் சொன்னான். இயேசு அவனை நோக்கி “எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக் கொண்டு நட” என்றார். உடனே அந்த மனிதன் சொஸ்தமாகி தன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்து போனான். (யோவான் 5:9)

இதை வாசிக்கும் அருமை சகோதரனே! சகோதரியே! ஒருவேளை நீயும் இந்த வியாதியஸ்தனைப்போல் நெடு நாட்களாக வியாதிப்பட்டு படுக்கையில் இருக்கலாம். “எனக்கு உதவி செய்ய யாருமில்லை. நான் தனிமையாக கஷ்டப்படுகிறேன்” என்று கலங்கிக் கொண்டு இருக்கலாம். பயப்படாதே! முப்பத்தெட்டு ஆண்டுகளாக தனிமையில் கிடந்த மனிதனைத் தேடி வந்த இயேசு கிறிஸ்து இன்று உன்னைத் தேடி வந்திருக்கிறார். அவர் உன்னை நேசிக்கிறவர். அன்போடு விசாரிக்கிறவர். காரணம் அவரே உன்னை உண்டாக்கினவர்.

“டாக்டர்கள் என்னை கைவிட்டார்கள், மருந்துகளாலும் பிரயோஜனமில்லை, நான் வாழப்போவது உறுதியில்லை’’ என்று நம்பிக்கையிழந்து கலங்கிக் கொண்டிருக்கிறாயா? கலங்காதே! முப்பத்தெட்டு ஆண்டுகளாக சுகமாகாத வியாதிக்காரனை “எழுந்து நட” என்ற ஒரே சொல்லால் சுகப்படுத்தின இயேசுக் கிறிஸ்து உன் வியாதியை சுகப்படுத்துவது அதிக நிச்சயம். ஏனென்றால் “இயேசு கிறிஸ்துதாமே நம்முடைய பலவீனங்களை ஏற்றுக் கொண்டு, நம்முடைய நோய்களை (சிலுவையில்) சுமந்தார்.’ மத்தேயு 8:17 இயேசு கிறிஸ்து உன் பலவீனங்களையும், நோய்களையும், சுமந்து தீர்த்துவிட்டபடியினால் அவர் உன்னைச் சுகமாக்க வல்லவராயிருக்கிறார்.

இந்த இயேசுகிறிஸ்து இப்போது உன்னைத் தேடி வந்திருக்கிறார். “சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா? என்று உன்னைப் பார்த்து கேட்கிறார். ஆனால் உன் வியாதிக்காக இயேசுவை நோக்கிப் பார்க்கும் முன்பாக ஒரு முக்கியமான காரியத்தை நீ செய்யவேண்டும். உன் பாவங்கள் மன்னிக்கும்படியாக சுகமாக்கும் இயேசுவை உன் உள்ளத்தில் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால்… சுகத்தைப் பெற்றுக்கொண்ட இந்த வியாதியஸ்தனை இயேசு தேவாலாயத்தில் கண்ட போது “இதோ நீ சொஸ்தமானாய் அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனி பாவம் செய்யாதே” என்றார். (யோவான் 5:14) இயேசு கிறிஸ்துவின் இந்த வார்த்தையிலிருந்து, இந்த மனிதனுடைய பாவமே இவனுடைய வியாதிக்கு காரணமாயிருந்தது என்பதை அறிகிறோம்.

அருமையான சகோதரனே, சகோதரியே உன்னுடைய. வியாதிக்குக்கூட உன் பாவமே காரணமாயிருக்கலாம். ஆகவே உன் பாவத்தை சுமந்து தீர்த்த இயேசுவுக்கு உன் உள்ளத்தில் இடம் கொடு. தன்னிடத்தில் வந்த எந்த பாவியையும் அவர் புறம்பே தள்ளுவதில்லை.

இயேசு கிறிஸ்து உன் பாவங்களுக்காக சிலுவையில் இரத்தம் சிந்தினார் என்பதை விசுவாசி “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். நமக்கு சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது.” (ஏசாயா 53:5) “இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும்.” (1 யோவான் 1:7)

“இயேசுவே என் பாவங்களை மன்னியும்” என்று இருதய கதவைத் திறந்து கொடு, அப்பொழுது அவர் இருதயத்தில் வருவார், உன் பாவங்களை மன்னிப்பார். உன் வியாதிகளை குணமாக்குவார். தெய்வீக சமாதானத்தினாலும், சந்தோசத்தினாலும் உன் உள்ளத்தை நிரப்புவார். “இதோவாசற்படியில் நின்று தட்டுகிறேன். ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு கதவை திறந்தால் அவனிடத்தில் நான் பிரவேசிப்பேன்” இயேசு (வெளி 3:20)

உன் உன் இருதய கதவை தட்டிக் கொண்டிருக்கும் இயேசுகிறிஸ்து “சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா?” என்று இப்பொழுது உன்னை கேட்கிறார். அவருக்கு உன் இருதய கதவைத் திறந்து கொடுத்து, இந்த வியாதியஸ்தனைப் போல நீயும் உன் நிலைமையை இயேசுவிடம் சொல், நான் அனுபவிக்கும் இந்த வியாதிக்கு காரணமான என் பாவங்களையும் நீர் எனக்காக சிலுவையில் சுமந்தீரே! ஆகவே என் பாவங்களை மன்னித்து என் வியாதியிலிருந்து சுகம் தாரும் என்று கேள். இயேசுகிறிஸ்து நிச்சயமாக உன்னைச் சுகப்படுத்துவார். “அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்” (ஏசாயா 53:5)

கிறிஸ்து இயேசு அவருடைய தழும்புகளால் தொட்டு உன்னை சுகப்படுத்துவாராக.

மனம் மாறிய மாலுமி

பல ஆண்டுகளுக்கு முன் ஒருமுறை ஒரு பெரிய கப்பல் நடுக் கடலில் சென்று கொண்டிருந்த சமயம் அக் கப்பலின் தலைவன் கேப்டன் ஜான் கொடிய வியாதிப் பட்டு மரணத் தருவாயில் இருந்தான்.

அப்பொழுது மரண பயமும், நித்திய வாழ்வைக் குறித்த கவலையும் அவனைப் பிடித்து வாட்டி வதைத்தன. தனக்குக்கீழ் பணிபுரியும் முக்கிய அதிகாரியை அழைத்தான். நான் பாவங்களையும் அக்கிரமங்களையும்” ஏராளமாய்ச் செய்துள்ளேன். அவைகள் எனக்கு மன்னிக்கப்படவும், எனது நித்திய வாழ்வுக்காக வும், எனக்காக ஜெபியுங்கள் என்று கேட்டுக்” கொண்டார். அந்த அதிகாரி தலைவனைப் பார்த்து, ஐயா! நான் ஜெபித்ததேயில்லை. ஜெபிக்க வும் தெரியாது என்றான். கப்பல் தலைவன் சத்தியவேதத்தைக் கொண்டுவந்தாவது வாசி”” என்றான். அதற்கு அந்த அதிகாரி வருத்தத்துடன் தலைவனைப் பார்த்து, என்னிடம் சத்திய” வேதமும் இல்லையே! என்ன செய்வது? என்றான்.

அப்போது அங்கே அந்தக் கப்பலில் பயணம் செய்துகொண்டிருந்த தேவஊழியர் ஒருவர் முன்வந்தார். கப்பல் தலைவனின் வேண்டுதலின்படி அந்த ஊழியர் வேதத்தைத் திறந்து, ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்தில் 53வது அதிகாரத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்தார்.

“நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு,

நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்.

நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது.

அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.” என்று அந்த அதிகாரத்தின் 5வது வசனத்தை வாசித்தார்.

உடனே, கப்பல் தலைவன், அங்கேயே நிறுத்திக் கொள்ளுங்கள் ஐயா! எனது” தாயார் இந்த வசனத்தில் எனது பெயரையும் வைத்து ஜெபிக்கும்படி கூறினாள். எனக்கோ இதன் அர்த்தம் புரியவில்லை. ஆகையால் இதை நான் ஜெபமாகக் கூறமுடியவில்லை. இந்த வசனம் என்ன சொல்லுகிறது. எனக்கு சற்று விளக்கிச் சொல்லுங்கள் என ஆவலுடன்” கேட்டான்.

அதற்கு அந்த தேவமனிதர், தலைவனே! ஒரு உதாரணம் கூறுகிறேன்.” கேளும். என்னிடமிருந்த விலையுயர்ந்த கண்ணாடிப் பொருளை என் வேலைக்கார சிறுவன் உடைத்துவிட்டு, பிறகு என்னிடம் வந்து அதற்காக மன்னிப்புக் கேட்டான். நானும் அவனை மன்னித்துவிட்டேன். இப்போது உம்மிடம் ஒரு கேள்வி? இந்த மன்னிப்புக்கான விலை எவ்வளவு?எனக் கேட்டார்.

கப்பல் தலைவன் போதகரே! “அந்தக்கண்ணாடிப்பொருளின் விலை எதுவோ? அதுவே மன்னிப்பின் விலை. அதாவது அந்தக் கண்ணாடிப்பொருள் தான் உமது மன்னிப்பின் விலை” என்றார். போதகர் கப்பல் தலைவனைப் பார்த்து நீங்கள் சரியாகச்” சொன்னீர்கள். நாமும் பாவம் செய்யும் போதெல்லாம் கடவுளுக்கு விரோதமாகத்தான் பாவம் செய்கிறோம். புpறகு அவரிடம் வந்து சரணடைந்து மன்னிப்புக் கேட்டால் அவர் உடனே மன்னித்து விடுகிறார். ஆனால் நம்மை அவர் மன்னிக்க அவர் ஒரு விலையைக் கொடுக்கவேண்டும். பாவத்தின் சம்பளம் மரணம். உயிருக்கு விலை உயிர்தான் அல்லவா? எனவே தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தன்னுயிரைத் தந்து எம்மை மன்னிக்கும் அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டார். என்றார்.”

மேலும் கப்பல் தலைவனிடம், இப்போது” உமது தாயார் சொன்னபடி சொல்லித் தருகிறேன் ஜெபியும் என்றார். தலைவன் உடனேயே” கண்களை மூடி ஜெபிக்க ஆரம்பித்தான். தனது பெயரை அழுத்தம்திருத்தமாக

“கேப்டன் ஜானுடைய மீறுதல்களினிமித்தம் இயேசு காயப்பட்டு,

கேப்டன் ஜானுடைய அக்கிரமங்களினிமித்தம்

இயேசு நொறுக்கப்பட்டார்.

கேப்டன் ஜானுக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை இயேசுமேல் வந்தது.

இயேசுவின் தழும்புகளால்

கேப்டன் ஜான் குணமடைகிறான். “என்று தேவ மனிதர் சொல்லச் சொல்ல கேப்டனும் ஜெபித்தார்.

ஜெபித்தவுடன் கேப்டனின் இருதயம் இலகுவானது.

கேப்டன் தானாகவே அழுகையுடன் திரும்பத்திரும்ப ஜெபித்துக்கொண்டிருந்தார். அப்போதே இயேசு தன் பாவங்களை மன்னித்து விட்டார் என்ற நிச்சயமும், இயேசுவின் காயப்பட்ட கரங்களினால் நான் சுகமானேன் என்ற நம்பிக்கையும் கேப்டன் ஜானுக்கு வந்து விட்டது. அந்த நாளிலேயே அவரது உடலில் ஏற்பட்ட வியாதி நீங்கி நல்ல சுகத்தைப் பெற்றார். மரண பயமும் நீங்கிப் போனது. தொடர்ந்து தன் கப்பற்பணியை சந்தோஷமாக நிறைவேற்றினார்.

ஆம்! கேப்டன் ஜானுடைய வாழ்க்கைப் பயணம் கூட புதிய திசையில் பயணிக்க ஆரம்பித்தது.

அன்பானவர்களே!

இந்த கைப்பிரதியை வாசிக்கும் நீங்கள் யாராக இருந்தாலும் எந்த மார்க்கத்தவராயிருந்தாலும் கிறிஸ்துவுக்கு விரோதமானவராயிருந்தாலும் அவர் எல்லா வற்றையும் மன்னித்து தங்கள் வாழ்வில் சமாதானத்தையும், மாறாத சந்தோஷத்தையும் தரக் காத்திருக்கிறார்.

இந்த கேப்டன் ஜானைப் போல் அவரைத் தேடினால் கண்டு கொள்வீர்கள். அவனுக்கு உண்டானதுபோல் கொடிய வியாதியினாலோ, மனநிம்மதியின்றியோ, துயரத்திலோ, வேதனையிலோ நீங்கள் இருக்கக் கூடும். ஆனால் இனி நீங்கள் அவ்வாறு இருக்கத் தேவையில்லை. கடவுளுக்குப் பிரியமில்லாத தவறினை, பாவத்தைச் செய்வதால் நம் வாழ்வில் இத்துன்பங்களால் வாடுகிறோம். அவற்றிலிருந்து எம்மை விடுவிக்கவே ஆண்டவராகிய இயேசு காயப்பட்டார். சிலுவையிலே அறையப்பட்டார். கொலையுண்டார். நமக்;கு எட்டாத சந்தோஷமான சமாதானமான வாழ்வு கிடைக்கும்படிக்கே அவர் சிலுவையில் பலியானார்.

இயேசுவின் காயத்தின் தழும்புகள் உங்கள் வியாதிககைக் குணமாக்கும் வல்லமை யுள்ளது. இன்றே நீங்களும் கேப்டன் ஜானைப் போல அந்த வசனத்தில் உங்கள் பெயரை வைத்து நம்பிக்கையுடன் சொல்லிப் பாருங்கள்.

பூட்டிய அறையில் தனித்திருந்து இயேசுவை வேண்டி உங்கள் பாவங்களை அறிக்கையிடுங்கள். நிச்சயமாகவே நீங்களும் அவரிடம் பாவ மன்னிப்பைப் பெறுவதோடு இப்பூமியிலே மனசமாதானத்தையும் சந்தோஷத்தையும் மறுமையில் தேவனோடு கூட வாழும் பரலோக வாழ்வையும் பெறுவீர்கள்.

தேவன்தாமே உங்களை ஆசிர்வதிப்பாராக!

விலை மதிப்பிடமுடியாத முத்து

நம் நாட்டின் மேற்குக் கடலோரப் பகுதியை ஒட்டியுள்ள ஒரு சிறிய கிராமத்தில் சாபு என்கிற வயதான முத்துக்குளிப்பவன் தனியே வசித்து வந்தான். ஒரு நாள் முத்துக்குளியல் முடித்துக்கொண்டு கரையை அடையும்போது, தன் நெருங்கிய நண்பர் நிற்பதை அடையாளம் கண்டுகொண்டதும் பெரு மகிழ்ச்சியடைந்தான். ஏனெனில், இருவரும் அடிக்கடி சந்தித்து மத சம்பந்தமான விஷயங்களை பேசுவர். சாபு இந்துமதப் பற்றுடையவனாக இருந்த போதிலும், தன் கிறிஸ்தவ நண்பரிடம் அன்போடு பழகுவான்.

இப்போது படகு தன் துறையை அடைந்துவிட்டது. நண்பர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்தபின், சாபுவின் குடிசையை நோக்கி பேசிக்கொண்டே நடந்தனர். ‘சாபு, உன்னைப் பார்க்கும்போது, மிகவும் சோர்ந்திருப்பதுடன், வயதாகிவிட்டபடியால் உன் நடையும் தள்ளாடுகிறது, இதுவே நீ கடைசி முறையாக முத்துக்குளிக்கச் சென்றதோ? என எண்ணுகிறேன்’ என்றதும், ‘ஆம், இனி இந்த கடலோரப் பகுதியில் நான் நடமாடப் போவதில்லை. மேலும், நான் விருத்தாப்பியம் அடைந்ததால் முத்துக்குளிப்பதும் சிரமமாக உள்ளது. என் வாழ்க்கையின் ஒரே இலட்சியம் நிறைவேறப்போகும் நாள் மிக அருகாமையில் இருக்கிறது, பல நூறு மைல்களுக்கு அப்பாலுள்ள கங்கை நதியில் நீராடி மனநிம்மதியடையப்போகிறேன். ஏனெனில் என் வாழ்நாள் எல்லாம் எதற்காக ஏங்கினேனோ அது விரைவில் நிறைவேறப்போகிறது” எனச் சொல்லி அளவிலா மகிழ்ச்சியடைந்தான்.

சாபுவின் கிறிஸ்தவ நண்பர், பலமுறை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை அவனுக்கு தெளிவுபடுத்தியிருந்தார். மீண்டும் அதை அன்போடு விவரிக்க ஆரம்பித்தவர், பாவ மன்னிப்பானது எந்த புண்ணிய நதியில் நீராடுவதாலும் கிடைப்பதல்ல. ஆனால், பாவங்கள் மன்னிக்கப்பட ஒரே வழி யாதெனில், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் சிந்திய இரத்தத்தின் மூலமாக மட்டும் தான் கிடைக்கக் கூடியது. மேலும், இயேசுவானவர் நமக்கு இந்த மாபெரும் மீட்பையும், சந்தோஷத்தையும் இலவசமாக வழங்குவதற்காக சிலுவையில் தன்னுடைய ஜீவனைக் கொடுத்ததை விளக்கினார்.

இதை அடிக்கடி கேட்ட சாபு, நகைப்புடன் “நீர் சொல்லும் கிறிஸ்தவம் இலகுவானது, ஏனெனில் விசுவாசிப்பவனுக்கு இலவசமாக கிடைக்கிறதே ! நான் இரட்சிப்பை பிரயாசப்பட்டு சம்பாதிக்க விரும்புகிறேன்’ என்றான். இந்நேரத்தில் சாபுவின் சிறிய குடிசையை அடைந்துவிட்டார்கள். தன் நண்பரை அன்போடு வரவேற்றான் சாபு.

“நான் புண்ணிய யாத்திரை புறப்பட போவதால், நம் நட்பின் அடையாளமாக ஒரு வெகுமதியை உங்களுக்கு கொடுக்கப் போகிறேன்” என்றவன், குடிசையின் ஒரு மூலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சிறு துணி உருண்டையை தேடிக் கொண்டு வந்து மெதுவாகப் பிரித்தான். என்ன ஆச்சரியம்! சாபுவின் உள்ளங்கையில் நன்கு இழைக்கப்பட்ட, பிரகாசமான முத்து ஜொலிப்பதைக் கண்ட அவனுடைய நண்பரின் மூச்சு ஒரு விநாடி நின்று விட்டது. “எவ்வளவு அழகான ஒப்பற்ற முத்து ! இது அரசரின் கிரீடத்தில் பதிக்கப்பட வேண்டியது,” என்று அவர் சொன்னதும், சாபு ஆம், நான் என் ஆயுள் காலத்தில் பார்த்த முத்துக்களில் இதுவே பழுதற்றது. இதை நான் ஒரு விசேஷமான காரணத்திற்காக வைத்திருந்தேன். எனக்கொரு மகன் இருந்தான், அவன் முத்துக்குளிப்பதில் மிகவும் திறமைசாலி. பல மணி நேரம் மூச்சடக்கும் சக்தியுடையவனான அவன், ஒரு நாள் ஆழமான இடத்திற்குச் சென்று தேடிக்கொண்டு வந்ததுதான். இந்த விலையேறப்பெற்ற முத்து.’ எனக் கூறிவிட்டு அழஆரம்பித்தான் சாபு. ‘நண்பரே, நீண்ட நேரம் தண்ணீரில் இருந்ததால் அவன் நுரையீரல் பாதிக்கப்பட்டு மரணமடைந்தான்’, என்றவன், “நான் உமக்கு வெகுமதியாகக் கொடுக்கும் முத்தின் விலை மதிப்பு என் அன்பு மகனின் உயிர்” என்று கூறி கண்ணீரை துடைத்துக்கொண்டான்.

“இதையா எனக்குக் கொடுக்கப்போகிறாய்? வேண்டாம், இதை இலவசமாக பெற்றுக்கொள்ளமாட்டேன். யாரிடமாவது கடன் வாங்கியோ, அல்லது எப்படியாவது பாடுபட்டு வாங்கிக்கொள்கிறேன் ஆனால்,வெகுமதியாக இதை நான் பெற்றுக்கொள்ள விரும்பவில்லை” என்றார்.
‘நண்பரே, நீர் இதற்கு போதுமான தொகையை கொடுக்கவே முடியாது. ஏனெனில், இது விலை மதிப்பிட முடியாதது. அத்தோடு என் அன்பு மகன் தன் உயிரையே கொடுத்து சம்பாதித்ததல்லவா ! இதன் விலை என் மகனின் உயிர்’ என்றான் சாபு.

“சாபு, சற்று முன் சொன்னது என்ன? கிறிஸ்தவம் மிகவும் இலகுவானதும், இலவசமானதும் என்றல்லவா ! எதையாவது கொடுத்து சம்பாதிப்பதுதான் மதம் என்பது உன்னுடைய தவறான கருத்து. அருமையான நண்பா, உன்னுடைய இரட்சிப்புக்காக தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்து தன் உயிரையே ஈடாகக் கொடுத்து அதை சம்பாதித்திருக்கிறார். நீ மீட்கப்பட்டு, சந்தோஷமுள்ளவனாக வாழ, இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையுண்டு, பாடுபட்டு மரித்து, பின் மூன்றாம் நாளில் உயிருடன் எழுந்தார். விசுவாசிக்கிற எவனும் எந்தக் கிரயமுமின்றி இலவசமாக இரட்சிக்கப்படலாம்’ என்றவர் கிறிஸ்தவம் ஒரு மதமல்ல என்பதையும் விவரித்தார். தொடர்ந்து, “இந்த முத்தின் விலை உன் அன்பு மகனின் உயிர் என்பது உண்மையே, அதுபோல தேவகுமாரனாகிய இயேசு இரட்சகர் தன் உயிரையே கிரயமாகக் கொடுத்து சம்பாதித்திருக்கும் இரட்சிப்புக்கு நீ விலை கொடுக்க முடியுமா? இது முற்றிலும் இலவசமான ஈவாகும்’ என்றார்.

வயதான சாபு கண்ணீரோடு, தேவனுடைய அன்பை எண்ணி தன்னையே அந்த அன்புள்ள தேவனாகிய இயேசு கிறிஸ்துவுக்கு பரிபூரணமாக ஒப்புக்கொடுத்தான். அமைதியாக சிறிது நேரம் முழங்காலிலிருந்து எழுந்ததும், சாபுவின் நண்பர் தன்னிடமிருந்த தேவனுடைய வார்த்தையாகிய வேதாகமத்திலிருந்து கீழ்கண்ட பகுதிகளை உரக்கப் படித்தார். “….நாம் பெலனற்றவர்களாயிருக்கும்போதே. குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்’. (ரோமர் 5:6)

“தேவன் நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார். அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம். குமாரனை உடையவன் ஜீவனை உடையவன். தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்”. (1.யோவான் 5:11,12)

“கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு. ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல’. (எபேசி. 2:8,9)

நிந்திக்கப்பட்டவரின் நிகரில்லா அன்பு

பிரான்ஸ் நாட்டின் தென் பகுதியில் அமர்ந்துள்ளது மார்ஷிலெஸ் நகரம். – அழகான பூந்தோட்டங்களைக் கொண்டு பொலிவுற்றிருந்தது. ஆனால் வருடத்தின் எல்லா மாதங்களிலும் அவ்விதமாக இல்லாமல், பல மாதங்கள் வறட்சியால் பாதிக்கப்படும். ஏனெனில் உள்ளூரில் நீர் தேக்கிவைக்க போதுமான வசதியில்லாததால், 90 மைல் தூரத்திலுள்ள டியூரென்ஸ் நதியிலிருந்து, கால்வாய் மூலமாக இந்நகருக்குத் தண்ணீர் கொண்டு வரப்பட்டுள்ளது. இக்கால்வாய் 1837-1848 காலகட்டத்தில் வெட்டப்பட்டதாகும்.

இந்த கால்வாய் வெட்டப்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு, மார்ஷிலெஸ் நகரத்தில் கைஸான் என்ற ஒருவர் வாழ்ந்து வந்தார். தன் கடமைகளைச் சரிவரச் செய்வதில் இவர் தீவிர நாட்டமுடையவர். எந்த விதமான ஆடம்பரங்களையும் வெறுத்த கைஸான், மலிவான உணவை உண்டு காட்சியளிப்பார். எளிமையாகக் பணம் சேமித்து வைப்பதில் பெரும் ஆர்வமுடையவராக விளங்கிய இவர், அடிப்படையான தேவைகளைக்கூடத் தவிர்த்து, தனியே வாழ்ந்து வந்தார். மார்ஷிலெஸ் நகர மக்கள் இவரைக் கஞ்சன் என்று அழைத்தனர். எல்லாருடனும் நேர்மையாகவும், கண்ணியமாகவும் பழகியபோதிலும் நகர மக்கள் யாவரும் வெறுத்ததுடன், சிறுபிள்ளைகளும் கைஸானை நோக்கி “இதோ வயதான கஞ்சன் போகிறான்’ என்று கூக்குரலிடுவர். ஆனாலும் பண்பட்ட மனதுடையவரான இவர் முகம் கோணாமல், எதையும் தாங்கும் இதயமுடையவராக தன் கடமைகளைச் செய்வார்.

காலம் கடந்தது. கைஸான் நரை முடியுடன், கையில் கோலேந்தி தள்ளாடி நடமாட ஆரம்பித்தார். எண்பது வயது வரை தனியே வாழ்ந்த இவர் ஒருநாள் திடீரென மரணமடைந்தார்.

இவருடைய மரணத்திற்குப் பிறகுதான், தன் வாழ்நாள் முழுவதுமாக கைஸான் சேமித்து வைத்த பொன் வெள்ளியின் விலை பல லட்சம் என்பதை மார்ஷிலெஸ் நகர மக்கள் அறிந்துகொண்டனர். அவருடைய உயிலில் எழுதப்பட்டிருந்தது யாதெனில்,” ஒரு காலத்தில் நான் ஏழையாக இருந்தேன், நம் மார்ஷிலெஸ் நகர மக்கள் போதுமான தண்ணீர் வசதியின்றி கஷ்டப்படுவதைப் பார்த்ததும், ஏழைகளும் நல்ல குடிநீரை திருப்தியாகப் பெறவேண்டும் என்ற எண்ணத்துடன், கால்வாய் ஒன்று வெட்ட, நான் என்னையே தியாகம் செய்து பணத்தைச் சேமிக்க ஆரம்பித்தேன், என்னைப் புரிந்து கொள்ளாத நம் நகர மக்கள் என்னை அவமானப்படுத்தினர், யாருமற்ற நான், யாவரும் குடிநீர் பெற்று கஷ்டமின்றி வாழ என்னையே அர்ப்பணித்தேன்”. இந்தக் குறிக்கோளை அடைய எண்ணிய இந்த நல்ல மனிதர், யாருமற்றவராகவே வாழ்ந்து யாருமற்ற அனாதையாகவே மரித்தார்.

அன்பான வாசகரே! கைஸானைப் போலவே, பாலஸ்தீன நாட்டில் வாழ்ந்த ஒருவர் எல்லாராலும் வெறுத்து புறக்கணிக்கப்பட்டவராக இருந்தார். இவருடைய வாழ்க்கையும் முழுமனதுடன் தரித்திரத்தை ஏற்றுக்கொண்டதாகவே இருந்தது, தலை சாய்க்கக் கூட அவருக்கு இடமில்லை. “அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள் நிமித்தம் தரித்திரரானாரே” (2.கொரி.8:9) சாந்த சொரூபியான இவரை, மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கும் அளவில், ஜனங்கள் வெறுத்து, ‘அவனைச் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று கூச்சலிட்டார்கள்” இவர் தன்னுடைய வல்லமையை வெளிப்படுத்தாமல் தன்னை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்தார். கொடிய ஜனங்கள் இவரை சிலுவையில் அறைந்தார்கள். கேலிக்கும் பரியாசத்திற்கும் தன்னை முழுவதுமாக இவர் அர்ப்பணித்தார். நிந்திக்கப்படும் இவர் யார்? அன்பின் வடிவமான இயேசு பெருமான் நம் நிந்தையை நீக்க யாவற்றையும் பொறுமையுடன் சகித்தார்”. அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார்”. (ரோமர் 4:25)

கைஸானின் தியாகம் மார்ஷிலெஸ் நகர மக்கள் யாவருக்கும் நல்ல தண்ணீர் கிடைக்க வழியுண்டாக்கினது. ஆனால் நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்து, மூன்றாம் நாளில் உயிருடன் எழுந்திருக்கிறபடியால், தம்மிடம் வரும் மக்கள் அனைவரின் ஆத்தும தாகத்தை தீர்க்கும் ஜீவத்தண்ணீரை கொடுப்பவர் மட்டுமல்ல, அவர். அவரே ஜீவத்தண்ணீர். நண்பரே! வற்றாத ஜீவநதியாகிய இயேசு பெருமானிடம் வந்து தாகம் தீர்த்துக்கொள்ள மாட்டீரா! ஜீவத்தண்ணீர் இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது. “விலையுமின்றி பணமுமின்றி’ இலவசமாக அதை நாம் பருகலாம். “ஓ, தாகமாயிருக்கிறவர்களே. நீங்கள் எல்லாரும் தண்ணீரண்டைக்கு வாருங்கள்’ (ஏசாயா 55:1).

“ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்துபானம் பண்ணக்கடவன்” (யோவான் 7:37). “என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருகாலும் தாகமடையான்” (யோவான் 6:35). “விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன் (வெளி.22:17).

கடன் தீர்த்த மாமன்னன்

புகழ்பெற்ற இரஷ்ய நாட்டு மாமன்னர் (ஃஸார்) நிக்கோலாஸ், இரவில் சாதாரணச் சிப்பாய் போல உடையணிந்து, சிப்பாய்கள் தங்கள் முகாமில் என்ன செய்கிறார்கள் என்பதை கண்காணிக்க வெளியே உலாவுவார்.

ஒருநாள் நள்ளிரவு, விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டிருக்க வேண்டிய நேரம். வழக்கம் போல கண்காணிக்க புறப்பட்ட மாமன்னர், பொக்கிஷசாலை அதிகாரியின் அறையில் விளக்கு எரிவதை கவனித்தார். மெல்ல உட்சென்று, கட்டளையை மீறிய நபரை தண்டிக்க எண்ணினார். விளக்கை அணைக்காமல் இருப்பவர், மாமன்னரின் நெருங்கிய நண்பரின் மகன். இந்த இளம் அதிகாரி, மேஜையில் தலைசாய்த்தபடி தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாரியை எழுப்ப எண்ணின மாமன்னரின் கண்களில், குண்டுகளால் நிரப்பப்பட்ட கைத்துப்பாக்கியும், ஒரு கத்தை பணமும், அதிகாரியின் கையிலிருந்து நழுவிய பேனாவும் தெரிந்தது. விளக்கின் ஒளியில் அதிகாரியால் எழுதப்பட்டிருந்த பட்டியலை படித்த மாமன்னர் நிலைமையை உடனடியாக புரிந்துக்கொண்டார்.

அந்த நீண்ட பட்டியலில், சூதாட்டம் போன்ற தீயகாரியங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த தன் மாபெரும் கடனைத் தீர்க்க இவர் ராணுவ நீதியில் கையாடல் செய்திருந்தார். இப்பொழுதோ, இரவில் கணக்கை சீர் செய்ய அமர்ந்தவர், கையிருப்புடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது பற்றாக்குறையான தொகை பல லட்சக் கணக்கில் இருப்பதை முதலாவதாகக் கண்டுபிடித்ததும், கலங்கிப் போனார், ஏனெனில் திரும்ப செலுத்துவோம் என்ற நம்பிக்கைக்கே இடமில்லாத அளவுக்கு அது மாபெரும் தொகையாக இருந்தது. அந்த கடன் பட்டியலின் கீழ் ஒரு கேள்வியை எழுதியிருந்தார்.

“இவ்வளவு பெரிய கடனைத் தீர்ப்பவர் யார்?“

அவமானத்தை சமாளிக்க தைரியமற்றவராக, தன்னைச் சுட்டு தற்கொலை செய்ய நினைத்தவர். தூரத்திலுள்ள தன் வீட்டாரை நினைத்தவுடன் கலக்கமடைந்தவராக மெய்மறந்து தூங்கிவிட்டார்.

நடந்ததை அறிந்த மாமன்னர், இளம் அதிகாரியை உடனடியாக கைது செய்ய எண்ணினார். இப்படிப்பட்ட குற்றங்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டியவை, மேலும் ராணுவத்தில் நீதி நேர்மை காக்கப்பட இவ்வகையான குற்றங்கள் ராணுவ நீதிமன்றத்திற்கு எடுத்துரைக்கப்பட வேண்டும். ஆனால் மாமன்னர் இந்த அதிகாரியின் தகப்பனார் தன் நெருங்கிய நண்பர் என்பதை நினைவுகூர்ந்ததும், அன்பினால் நீதியாக வழங்கப்பட வேண்டிய நியாயத்தீர்ப்பை மேற்கொண்டார். ராணுவத்தின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் அதே நேரத்தில் குற்றவாளியைத் தண்டனையிலிருந்து காத்து நீதிமானாக்கவும் மாமன்னர் ஒரு திட்டம் வகுத்தார். நம்பிக்கையிழந்த அந்த அதிகாரியின் பேனாவை எடுத்து அந்தக் கேள்வியின் கீழ் “நிக்கோலாஸ்” எனத் தன் பெயரை எழுதினார்.

மாமன்னர் நிக்கோலாஸ் மனமார கடனைத் தீர்க்க தீர்மானித்தாரே! தண்டனைக்குரியவன் மீட்கப்பட்டான். இந்த தியாக மனப்பான்மை இயேசு இரட்சகர் தம்மிடம் வரும் எல்லோருக்கும் வழங்கும் பாவ மன்னிப்பை நினைவுபடுத்துகிறது. மாமன்னர் வெளியேறிய சிறிது நேரத்தில் விழித்து, தன்னையே சுட்டுக்கொள்ள முயன்ற இளம் அதிகாரி தன் கேள்வியின் கீழ் மாமன்னரின் கையெழுத்தைப் பார்த்து அசந்து போனார். இது உண்மையானது தானோ என்பதைக் கண்டறிய தன் வசமுள்ள தஸ்தாவேஜுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்ததும் விவரிக்க முடியாத மகிழ்ச்சியடைந்தார். ஆனாலும், தன் துணிகரமான செய்கை மாமன்னருக்கு தெரிந்தும், கடன் சுமையை தன் மேல் சுமத்தாமல் அவர் தாமே ஈடுசெய்ய முன்வந்ததை எண்ணி எண்ணி மகிழ்ந்தார். மன்னிக்கும் மாமன்னர் நிக்கோலாஸ் குற்றவாளியை நீதிமானாக்கி விட்டார். மறுநாள் மாமன்னரிடமிருந்து வந்த பணம், கடன் தொகைக்கு போதுமானதாக இருந்தது.

நண்பரே! நாம் அனைவரும் பாவம் செய்தவர்கள். பாவக் கடனைத் தீர்க்கவேண்டியவர்கள். “யார் இதைத் தீர்க்க முடியும் ?” தேவனுடைய அன்பு இக்கேள்விக்கு விடையளிக்கிறது. மாமன்னர் விடையெழுதினதுபோல இதுவும் ஒரு பெயர்.

இயேசு!

ஆம் அன்பரே ! இயேசு பெருமான் நம் பாவக்கடனையும், நாம் எப்படி இந்த இக்கட்டான நிலைக்கு உள்ளாகி அவமானத்துடன் இருக்கிறோம் என்பதை நன்கு அறிவார். ஆனாலும் அவர் நம்மை நேசித்து நம் பாவக்கடன் எல்லாவற்றையும் அவரே செலுத்தினார். அன்பான வாசகரே ! இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மாண்டது நம் பாவக்கடனைத் தீர்ப்பதற்காகத்தான். அத்துடன் நம்மை நீதிமானாக்க அவர் வெற்றி வேந்தராக மூன்றாம் நாளில் உயிருடன் எழுந்து இன்றும் ஜீவிக்கிறார். நிக்கோலாஸ் என்ற பெயர் அதிகாரியின் கடன் பிரச்சனையைத் தீர்த்தது. அதுபோல, இயேசு கிறிஸ்து என்கிற ஒப்பற்ற நாமம் நம் எல்லா பாவபாரச் சுமையினின்றும் நம்மை விடுவித்துக் காக்க வல்லது. “நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” என்று இயேசு இரட்சகர் நம்மை அன்போடு அழைக்கிறார்.

“ஆதலால் சகோதரரே, இவர் மூலமாய் உங்களுக்குப் பாவ மன்னிப்பு உண்டாகும் என்று அறிவிக்கப்படுகிறதென்றும், விசுவாசிக்கிறவன் எவனும்………… இவராலே (இயேசு கிறிஸ்துவினால்) விடுதலையாகி நீதிமானாக்கப்படுகிறான் என்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கக்கடவது.’ (அப்.13:38,39)

நன்றியுள்ள ஒரு நண்பன்

குடியானவன் ஒருவன் இருந்தான். அவனுக்கு அதிகபிரயோஜனமான ஒரு நல்ல நாய் அவனிடம் இருந்தது. இந்த நாய் மிகவும் வயதானதாகிவிட்டதால். நன்றி கெட்ட தன் எஜமான் அதை கொண்டுபோய் தண்ணீரில் மூழ்கச்செய்து கொன்றுபோட்டுவிட தீர்மானம் செய்தான. ஒருநாள் இக்குடியானவன் நாயை அழைத்துக் கொண்டு தன் வயலுக்கு பக்கத்திலிருந்த ஒருநதியண்டை போனான். அங்கே ஒரு படகில் தன் நாயை ஏற்றிக் கொண்டு நதியின் ஆழமான இடத்துக்கு படகை ஓட்டிக்கொண்டு வந்தான். பிறகு அவன் தன்னோடு கொண்டு வந்திருந்த ஒரு பாரமான கல்லை ஒரு கயிற்றில் கட்டி, அந்த கயிற்றை நாயின் கழுத்தில் கட்டி, நாயை கொன்றுபோட்டுவிட தண்ணீருக்குள் தள்ளிவிட்டான். அந்த நாய் தண்ணீரில் மூழ்கிப் போகும்போது, திடீர் என்று கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிறு அறுந்துபோயிற்று. அப்போது நாய் ஊளையிட்டுக்கொண்டு மறுபடியும் படகுக்குள் வர முயற்சித்தது. கொஞ்சமேனும் இரக்கமற்ற எஜமான் கருணையற்றவனாய் அந்த வயது சென்ற நாயை பலமுறை தன் கையிலிருந்த துடுப்பால் தண்ணீரில் அமிழ்ந்துபோக தள்ளினான்.

கடைசியில் கல் நெஞ்சம் படைத்த அம்மனுஷன் நாயை பலமாக துடுப்பால் ஒரே அடி அடித்து நதியின் தண்ணீரின் ஆழத்தில் தள்ளிப் போட கையை ஒங்கினான். அச்சமயம் தவறி அவனே தண்ணீரில் விழுந்துவிட்டான். பின்பு நீந்தி வெளியே வர முடியாமல் தவித்து அமிழ்ந்துபோகும் தருணத்தில் இருந்தான். தன் எஜமான போராடிக்கொண்டிருக்கிறதை கண்ட நாய் அவன தன்னை அவ்வளவு கொடூரமாய், நன்றி கெட்டவனாக அப்போது நடத்திஇருநதபோதும், அவனுடைய உடுப்பை தன் வாயால் கடித்து, இழுத்துக்கொண்டு வந்து அவனை பத்திரத்தோடு கரையில் சேர்த்தது.

என் அருமை நண்பா ! சற்று நிறுத்தி யோசித்துப் பார்! எல்லா அன்புக்கும் நேர்மைக்கும் விரோதமாக பாவம் செய்து பயங்கரமான குற்றவாளிகளாக நாம் இன்றைக்கு இருக்கிறோம். யோசித்துப்பார். சுமார் 2000 ஆண்டுகளுக்குமுன் இயேசு கிறிஸ்து இவ்வுலகத்திற்கு வந்ததைப் பார்ப்போம். அவர் தேவாதி தேவன்; சத்தியமும் ஒளியும் நிறைந்தவர்; அழிவுக்குள்ளும் தரித்திரததிலுமுள்ள மனுஷனுக்கு தம் பரம அன்பையும் ஆசீர்வாதத்தையும் அளித்தார். அவர் வியாதியஸ்தரை குணமாக்கினார்; குருடருக்கு கண்பார்வை அளித்தார்; மரித்தோரை எழுப்பினார்; பசியுள்ளோரை போஷித்தார்; சோர்ந்துபோனவர்களுக்கும் துக்கமுள்ளவர்களுக்கும் சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் அளித்து நன்மை செய்து சுற்றித்திரிந்தார். இப்படிப்பட்டவருக்கு மனுஷன் என்ன செய்தான்? அவனை அகற்றும் அகற்றும் என்று சத்தமிட்டு கூவி சிலுவை மரததில் அறைந்தான். ஐயோ ! மனுஷனுடைய இருதயம் எவ்வளவு மோசமாய் கெட்டுப்போய் கசப்பு நிறைந்து இருக்கிறது ! நம்முடைய இருதயத்தின் நிலையும் இன்றைக்கு இப்படிதான் இருக்கிறது. பரிசுத்த வேதம் போதிப்பதாவது: எல்லாவற்றைப் பார்க்கிலும் (மனுஷனுடைய) இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது. அதை அறியத்தக்கவன் யார் (எரேமியா 17:9). ஒரேஒரு நொடியில் அவருடைய கரத்திலிருந்து நாம் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ளக் கூடும். ஆனால் நாம் அவருடைய பாதையை விட்டு விலகிப்போனால் உடனே அவர் நம்மை விட்டுவிலகி போய்விடுவார் !

இந்த மாட்சிமையான தேவ மனுஷன் நடு சிலுவைபில் கோர காட்சியோடு தொங்குகிறது தேவனுடைய உள்ளம் எப்படிப்பட்டது என்று நமக்கு எடுத்துக்காட்டுகிறது. இவர் எதிர்த்து ஒரு இழிவான வாரத்தையோ, வெறுப்பான வார்த்தையோ தன் விரலை சுட்டிக்காட்டி எதிர்த்து பேசவில்லை. அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப் போலவும் தன்னை மயிர் கத்தரிக்கிறவனுக்கு முன்பாக சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும் இருந்தார். இவை எல்லாம் உலகத்தில் இருக்கிற எல்லா குற்றவாளிகளுக்கும் பாவிகளுக்கும் தேவன் காண்பிக்கிற பரம அன்பு.

ஓ ! என்ன அருமையான அன்பின் குணம் இது
அவர் இன்றைக்கு திறந்த இருதயத்தோடும்
ஆணிகளால் கடாவப்பட்ட
விரிக்கப்பட்ட கரங்களோடும் நிற்கிறார் !
ஓ! அவரது இரக்கம் இணையற்றது
இந்த இணையற்ற இரக்கத்தை
தம் சத்துருக்களுக்காக எடுத்துக்காட்டுகிறார்.

பிறகு இவர் “பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதெனறு. அறியாமலிருக்கிறார்கள்’ என்று ஜெபித்தார்.

மனுஷன் அவரை சிலுவையில் அறைந்து அங்கே அவருக்கு ஒரு முடிவு கட்ட எண்ணமிட்டான். ஆனால் சபிக்கப்பட்ட அதே கல்வாரி சிலுவையின் கொடூர மரணத்திலிருந்து, மனந்திரும்பி, தன் பாவங்களை அறிக்கை செய்து, அவரைத் தன் சொந்த இரட்சகராகவும், ஆண்டவராகவும் ஏற்றுக்கொள்ள விரும்புகிற ஒவ்வொரு பாவியான மனுஷனுக்கும் இரட்சிப்பின் கிருபையின் வெள்ளம் பாய்ந்து ஓடுகிறது.

நாம் படித்த கதையில் அந்த நன்றியுள்ள நாய் தன் எஜமானின் ஜீவனை காப்பாற்றியது. இயேசு கிறிஸ்து இரட்சிக்கும்போது நம்மை மீட்டு இரட்சிக்கிறார்;. அவர் சொற்ப காலத்துக்காக மட்டுமல்ல் நித்திய காலத்துக்கென்று நம்மை இரட்சிக்கிறார் “தன்னை விசுவாசிப்போருக்கு அவர் நித்திய ஜீவனை கொடுக்கிறார்.
இதை வாசிக்கும் என் அருமை நண்பா! இந்த ஆச்சரியமான இரட்சகரை இன்னும் உன் இரட்சகராக அறியாமல் இருப்பாயானால், கிருபையின் நாளாகிய இதே நாளில், இன்றைக்கு, அவரண்டை வந்து அவர் அளிக்கும் இலவச இரட்சிப்பை பெற்றுக்கொள்ள நான் உன்னை துரிதப்படுத்துகிறேன். இவ்வுலகத்தை நியாயம் தீர்க்க அவர் சீக்கிரத்தில் வரப்போகிறார் அப்போது அவருடைய கோபம் பற்றி எரியும். அந்த பயங்கரமான நாளில் தெய்வ பக்தியற்றவர்களும், பாவிகள் எல்லோரும் அவருக்கு முன்பாக நிற்பார்கள் ஒருவரும் தப்பித்துக்கொள்ள முடியாது.

“தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது”.

“நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதார பலியாக தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உணடாயிருக்கிறது” (1யோவான் 4:9,10)

பானம் பண்ணுவோம் வாருங்கள்

உற்பத்தியைப் பெருக்கும் தொழிற்கூடங்கள் நிறைந்திருந்த ஒரு பெரிய பட்டணத்தில் ஒருநாள், நான் ஒருவரோடு சம்பாஷித்துக்கொண்டிருந்தேன். அவர் என்னைப் பார்த்து, “வாருங்கள், நாம் பானம் அருந்தி செல்வோம்’ என்றார். அதற்கு நான் அவர் அழைத்த நோக்கத்தை அறிந்துகொண்டு, ‘வேண்டாம், உம்முடைய அழைப்புக்கு மிக்க நன்றி” என்று சொன்னேன். அச்சமயததில் என் உள்ளத்தில் அநேக ஆண்டுகளுக்குமுன் நான் கேள்விப்பட்ட: ‘ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து பானம் பண்ணக்கடவன்” (யோவான் 7:37). “என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்” (யோ.6:35) என்ற வேத வசனங்கள் ஞாபகத்துக்கு வந்தன. அவைகளை அவருக்குச் சொன்னேன்.

மேற்கூறிய அழைப்புகள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவானவர் இப்பூவுலகில் இருந்தபோது கூறியவைகள், அவரது ஆசீர்வாதமான உதடுகளால் அப்பொழுது சொல்லப்பட்டவைகள், இன்றும் உண்மையுள்ளவைகளாக இருக்கின்றன. உலகிலுள்ள ஒவ்வொருவருடைய எண்ணங்களையும் அவர் அறிந்து, “ஒருவன் தாகமாயிருந்தால்” எனக் கூறியுள்ளார். உண்மையான ஆத்தும தாகமுள்ள ஆயிரக்கணக்கான ஆத்துமாக்கள் இன்றைக்கு பல சிற்றின்ப ஊற்றுகளால் தங்களுடைய ஆத்தும தாகத்தை தீர்த்துகொள்ள முயற்சித்தும் வெற்றிபெறாமலிருக்கிறதை அவர் நன்கு அறிவார். துக்கம், துன்பம், துயரம், வேதனை, கொடுமை மனச்சித்திரவதை, உபத்திரவம் ஆகிய பாவ நோய்களின் மூலம் அவர்களின் ஆத்துமாக்கள் மன நிறைவு அடையாமல் ஏங்கித் தவித்து நிற்பதையும் அவர் அறிந்துள்ளார். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! கிறிஸ்துவினால் மட்டும் அம்மன நிறைவு அருளப்படக்கூடும். இதினிமித்தமே “ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து பானம் பண்ணக்கடவன்” எனக்கூறினார்.

அவரிடம் வந்து சேராத ஒவ்வொரு ஆத்துமாவுக்கும் இங்கே திட்டவட்டமான பரிகாரம் உண்டு. முதலாவதாக இதனை ஒரு தனிப்பட்ட அழைப்பாகத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும். மனுக்குலத்தோர் யாராயினும் தங்களுடைய ஆத்தும தாகத்தை உணர்ந்து அவரண்டை வரக்கூடும். தேவனுடைய அருமையான குமாரனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே இந்த அழைப்பை விடுத்துள்ளார் என்பது எவ்வளவு ஆச்சரியமானது. ஆனால் என் அருமை நண்பனே ! நான் உம்மிடத்தில் மிக மிக முக்கியமான கேள்வி ஒன்றினைக் கேட்க அனுமதி கிடைக்கட்டும். இந்த அன்பும் கிருபையுமான அழைப்பிற்கு நீ இதுவரை எப்பொழுதாவது தக்க மறுமொழி கூறினதுண்டா?

உனது உள்ளம் தனிமையான நிலையில் துக்கத்தோடு பாவச் சுமையினால் அழுத்தப்பட்டு இருக்கும்போது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சமாரியப் பெண்ணுடன் சம்பாஷிக்கையில் “இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகம் உண்டாகும். ஆனால் நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகம் உண்டாகாது. நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய காலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும்’ என்று உரைத்தபோது அப்பெண்ணுக்கு உண்டானதுபோல, நீ இதை வாசிக்கையில் கர்த்தரின் பரிசுத்தாவியானவர் அதனை உணரும்படி உன் மனதுக்குள் உன்னை ஏவவில்லையா ?

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இதனை என்ன கருத்துடன் கூறியுள்ளார் என்பதனை வேறு விதமாக சொல்வோமானால் ‘நான் குடிக்கக் கொடுக்கும் தண்ணீர்’ என்பது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துதான் அந்த வாழ்வளிக்கும் ஊற்றாக இருக்கிறார். உடலுக்குப் புத்துயிர் அளிக்கத்தேவையானது இயற்கையான தண்ணீராகும். ஆனால் மரிக்காமல் என்றும் நிலைத்திருக்கும் ஆத்மாவின் உள்ளான தேவைகளை நிறைவேற்ற அந்த ஜீவத் தண்ணீர் தான் தேவைப்படுகிறது. எனது அருமை நண்பனே நீ ஒரு ஏழ்மையான, ஆதரவற்ற அனாதியான இழந்துபோன பாவியாக உள்ள நிலையில், நம்பிக்கையின் அடிப்படையில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை, உன் மீட்பராக ஏற்றுக்கொள்ளமாட்டாயா? தேவன் எங்குமுள்ள எல்லா மனுமக்களுக்கும் “இப்பொழுதே மனந்திரும்புங்கள்’ (அப்போஸ்தலர் 17:30) என்று கட்டளையிடுகிறார். மனந்திரும்பு என்பது பாவத்தினின்று விலகிவா என்பது பொருள். உன்னில் காணப்படும் அசுத்த நிலை, இழந்து போன சீரழிந்த நிலை இவைகளை உணர்ந்து பேதுருவைப் போல, கர்த்தரின் முந்நிலையில் இவைகளை ஒப்புக் கொண்டு.’ஓ கர்த்தாவே நான் ஒரு பாவி” என அறிக்கையிடு. தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும் (1 யோவான் 1:7). தெய்வத்தின் அதிசயமான அழைப்பை ஏற்றுக்கொள்ளாத எல்லோரும் நியாயத்தீர்ப்பின்போது அக்கினிக் குழியில் தள்ளப்படுவார்கள் என்று உணர்ந்து, நரகத்திலே தள்ளக்கூடிய வல்லமையுள்ள “அவருக்கே பயப்படுங்கள்’ (லூக்கா 12:5) என நான் உனக்குக் கூறிக்கொள்ளுகிறேன்.

“தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” (யோவான் 3:16)

My Favorites

என்னைச் சோதித்துப் பாரும்

செப்டம்பர் 26 "என்னைச் சோதித்துப் பாரும்" மல்.3:10 தேவன் தம்மைச் சோதித்துப் பார்க்கும்படி நம்மை அழைக்கிறார். அவரின் உண்மையைப் பரீட்சித்துப் பார்க்கச் சொல்லுகிறார். அவர் வாக்குப்பண்ணினதைச் செய்யாதிருப்பாரோ என்று யார் சந்தேகிக்க முடியும்? நாம் சந்தேகிப்போமானால், அது...
Exit mobile version