Home பாடல்கள் சிலுவையைச் சுமந்தது போதும்

சிலுவையைச் சுமந்தது போதும்

சிலுவையைச் சுமந்தது போதும் என் இயேசுவே
சிந்தையில் இறங்கியே வாரும்
மனந்திரும்பிடுவேன் இனி நானும்
உமது  மலரடிக்கே திரும்ப வேணும்
சிலுவையைச் சுமந்தது போதும் என் இயேசுவே
சிந்தையில் இறங்கியே வாரும்

வருத்தப்பட்டு நாம் பாரம் சுமப்பதை
சகிக்காத மனம் உமக்கு
சிலுவையில் தொங்கிடும் உம்மை கண்டுமே
மனம் திருந்தாத குணம் எமக்கு
வாக்குத்தத்தம் தந்த தேவா
உமது வார்த்தைக்கு கீழ்ப்படிவேன்
சாத்தானின் சோதனைக்கு நீக்கியே
எம்மையும் உம் பிள்ளைகளாய் எண்ணியே மீளும்

சிலுவையைச் சுமந்தது போதும் என் இயேசுவே
சிந்தையில் இறங்கியே வாரும்
மனந்திரும்பிடுவேன் இனி நானும்
உமது  மலரடிக்கே திரும்ப வேணும்
சிலுவையைச் சுமந்தது போதும் என் இயேசுவே
சிந்தையில் இறங்கியே வாரும்

எம் கேடான குணத்தையே கண்டு நீர்
பாடுகள் பட்டது போதும்
வாடாத மலரான உமதுள்ளத்தை
தேடாத பாவியெம்மைக் காரும்
முறை  கேடான பாவியென உணர்ந்தோம்
எம் தேவா நம் குறைதன்னைக் கேளும்
யாரோடு நாம் சேர்ந்துகொள்வோம்
எங்கள் ஐயனே ஆறுதலைத் தாரும்

சிலுவையைச் சுமந்தது போதும் என் இயேசுவே
சிந்தையில் இறங்கியே வாரும்
மனந்திரும்பிடுவேன் இனி நானும்
உமது  மலரடிக்கே திரும்ப வேணும்
சிலுவையைச் சுமந்தது போதும் என் இயேசுவே
சிந்தையில் இறங்கியே வாரும்

Exit mobile version