கண்ணிருந்தும் குருடாய் வாழ்ந்தேனே
என் கர்த்தாவே கருணை செய்யும்
மண்ணிலிருந்து என்னை சிருஷ்டித்தீரே
மண்ணிலிருந்து என்னை சிருஷ்டித்தீரே மனித
பாவத்தை தோளினில் சுமந்தீரே
மன்னிக்கும் அதிகாரம் உமக்கல்லவோ
மன்னிக்கும் அதிகாரம் உமக்கல்லவோ எம்
மனக்கண்ணை திறப்பது உம் பொறுப்பல்லவோ
எம் மனக்கண்ணை திறப்பது உம் பொறுப்பல்லவோ
கண்ணிருந்தும் குருடாய் வாழ்ந்தேனே
கண்ணிருந்தும் குருடாய் வாழ்ந்தேனே
என் கர்த்தாவே கருணை செய்யும்
மண்ணிலிருந்து என்னை சிருஷ்டித்தீரே
மண்ணிலிருந்து என்னை சிருஷ்டித்தீரே மனித
பாவத்தை தோளினில் சுமந்தீரே
மன்னிக்கும் அதிகாரம் உமக்கல்லவோ
மன்னிக்கும் அதிகாரம் உமக்கல்லவோ எங்கள்
மனக்கண்ணை திறப்பது உம் பொறுப்பல்லவோ
எங்கள் மனக்கண்ணை திறப்பது உம் பொறுப்பல்லவோ
கண்ணிருந்தும் குருடாய் வாழ்ந்தோமே
எம் மனக்கதவுகளை உடைத்தெறியும் எங்கள்
உடலை எம் கோவிலாய் மாற்றிவிடும்
எம் மனக்கதவுகளை உடைத்தெறியும் எங்கள்
உடலை எம் கோவிலாய் மாற்றிவிடும்
வழியின்றி தவிக்கின்ற பாவிகள் நாம்
வழியின்றி தவிக்கின்ற பாவிகள் நாம் பாவ
இருளினில் எம்மை மீட்டு தூக்கி எடும்
பாவ இருளினில் எம்மை மீட்டு தூக்கி எடும்
கண்ணிருந்தும் குருடாய் வாழ்ந்தேனே
என் கர்த்தாவே கருணை செய்யும்
கண்ணோடு கண் நோக்கும் கன்மலையே
கண்ணோடு கண் நோக்கும் கன்மலையே எம்மை
காத்தெடுத்த கருணையில் திருவுருவே
என்றைக்கும் என்னோடு நீரிருந்தே
என்றைக்கும் என்னோடு நீரிருந்தே இயேசு
ராஜனாய் வாழ்ந்திட வேணுமைய்யா
இயேசு ராஜனாய் வாழ்ந்திட வேணுமைய்யா
