தினதியானம்

முகப்பு தினதியானம் பக்கம் 2

அவர் லீலி புஷ்பங்களுக்குள்ளே மேய்கிறார்

அக்டோபர் 11

“அவர் லீலி புஷ்பங்களுக்குள்ளே மேய்கிறார்” உன். 6:3

விசுவாசிகள் லீலி மலர்களுக்கு ஒப்பிடப்பட்டுள்ளார்கள். இம் மலர்கள் வெளிகளில் வளர்வன அல்ல, தோட்டத்தில் பயிரிடப்படுபவை. தேவ பிள்ளைகள் அவருடைய தோட்டத்தில் வளர்க்கப்படுகிறார்கள். அவர் அவர்களை அதிகம் நேசிக்கிறார். எப்பொழுதும் அவர்களைச் சந்தித்து உரையாடி அவர்கள் நடுவில் உலாவுகிறார். இந்தத் தோட்டத்தில் உள்ள தேவ பிள்ளைகளின், ஜெபங்கள், துதிகள், சாட்சிகள், செய்யும் ஊழியம் ஆகியவை தேவனுக்கு மிகவும் பிரியம். அவர் தம்மை அவர்களுக்கு வெளிப்படுத்தும்போது, அவரின் குரலை அவர்கள் கேட்கும்போதும் விசுவாசிகள் மிக மகிழ்ச்சிகொள்ளுகிறார்கள்.

இது ஓரு விசுவாசியின் உயர்ந்த தன்மையைக் காட்டுகிறதல்லவா? தொடுகிற எவரையும் காயப்படுத்தும் முள்ளைப்போலவோ, எதிரியையும் எவரையும் தாக்கும் கொடிய விலங்குபோலவோ இல்லாது, இவர்கள் லீலி மலர்களைப் போன்று உயர் பண்புடையவர்கள். உள்ளான அழகும், நற்குணங்களாகிய நறுமணமும் கொண்டு யாவராலும் விரும்பப்படுகிறார்கள்.

நண்பனே, நீ எவ்வாறு இருக்கிறாய்? உன் விசுவாச வாழ்க்கை நறு மணத்துடனுள்ளதா? பிறருக்கு தேவ சாட்சியாக வாழ்கிறாயா? எவ்விடத்திலிருப்பினும் ஒளி வீசும் சுடராய் நீ விளங்க வேண்டும். பலருக்குப் பயன்படும் பாத்திரமாக நீ இருக்க வேண்டும். மணம் வீசும் லீலி மலராகத் திகழ வேண்டும். அப்பொழுதுதான் உன் நேசர் உன் நடுவில் வந்து மேய்வார். உன்னோடு உரையாடுவார். உன்னுடனேயே அவர் தங்கியிருக்கும்படிடி அவரை வருந்தி வேண்டிக்கொள். அவர் உன் பிரியமான பிரியா நேசராயிருப்பார். நீ வருந்தி அழைத்தால் அவர் வருவார்.

உம் வல்லமையால் என்னை
உம்முடையவனாக்கும்
உம் லீலி மலர்களைப்போல்
உமக்குக் காத்திருக்கச் செய்யும்.

நான் தேவனுக்குப் பயப்படுகிறேன்

மார்ச் 30

“நான் தேவனுக்குப் பயப்படுகிறேன்.” ஆதி. 42:18

இந்த வார்த்தைகளை யோசேப்பு, தன் சகோதரரைப் பார்த்துச் சொன்னான். தன் தகப்பனுக்குப் போஜன பதார்த்தங்களை அனுப்பும்போது இப்படிச் சொன்னான்;. கிpறஸ்தவ மார்க்கத்திற்கு விரோதமாக நடக்க நாம் சோதிக்கப்பட்டால் நாம் இப்படி சொல்லலாம். உத்தமமான தேவபயம் அன்பினால் பிறந்து பிள்ளையைப்போல தேவனோடு உறவாடுவதனால் உறுதிப்படுகிறது. இந்தப் பயம் அவருடைய மகத்துவத்தைப் பார்த்துப் பயப்படும் பயம் அல்ல. அவருக்கு வருத்தம் உண்டாக்க கூடாதே என்கிற பயம்தான். இந்தப் பயத்திற்கு காரணம் பரிசுத்த ஆவியானவர்.. பாவம் செய்யாதிருக்க இவர் நல்ல மாற்று. தேவனுக்கு மனஸ்தாபம் உண்டாக்கப் பயந்தால் எவ்விதமும் அவரைப் பிரியப்படுத்த பார்ப்போம். உண்மையாக நான் அவரை நேசித்தால் அவருக்கு மனஸ்தாபம் உண்டாக்க பயப்படுவேன். இந்தப் பயம் நம்மை எச்சரிப்புள்ளவர்களாகவும், விழிப்புள்ளவர்களாகவும் இருக்கப்பண்ணும். இது நம்மை ஜெபத்திற்கு நடத்தும். தற்பரிசோதனை செய்ய ஏவி விடும். நமது நடக்கையை வசனத்தோடு ஒத்துப் பார்க்கப்பண்ணும். இது நம்மை ஜெபத்திற்கு நடத்தும். தற்பரிசோதனை செய்ய ஏவி விடும். நமது நடக்கையை வசனத்தோடு ஒத்துப் பார்க்கப்பண்ணும். துணிகரத்திற்கும் அசட்டைக்கும் உண்மை தாழ்ச்சிக்கும் நம்மை விலக்கிக் காக்கும்.

தேவனுக்குப் பயப்படுகிறவன் பாவிகள் வழியில் நடக்கமாட்டான். துன்மார்க்கர் ஆலோசனையில் நிற்கமாட்டான். பரியாசக்காரருடைய இடத்தில் உட்காரமாட்டான். அவன் பிரியம் தேவ வசனத்தில் இருக்கும். அதை இரவும் பகலும் தியானிப்பான். இன்று தெய்வ பயம் நம்மை நமத்தினதுண்டா? நான் தேவனுக்குப் பயப்படுகிறேன் என்று நீங்கள் சொன்னதுண்டா? அப்படியில்லை என்றால் நாம் கர்த்தருக்குப் பயப்படவில்லை என்றே சொல்லமுடியும். உன்னால் நான் கர்த்தருக்குப் பயப்படுகிறவன் என்று சொல்லக்கூடுமா?

தேவ பயம் சுகம் தரும்
வெளிச்சம் இன்பம் அளிக்கும்
தெய்வ செயலை விளக்கும்
இரக்கத்தைப் பெரிதாக்கும்.

இதோ, பொறுமையாய் இருக்கிறவர்களைப் பாக்கியவான்கள் என்கிறோமே

ஓகஸ்ட் 26

“இதோ, பொறுமையாய் இருக்கிறவர்களைப் பாக்கியவான்கள் என்கிறோமே” யாக். 5:11

நம்முடைய துன்பங்கள் நமக்குச் சோதனைகள். ஒவ்வொருவனும் சோதிக்கப்படுவான். சோதனை நேரத்தில் அநேகர் சோர்ந்து போகிறவர்கள். சிலர் பின்வாங்கிப் போகிறார்கள். துன்பத்திற்குத் தக்கதாக மகிழ்ச்சியடைவோம் என்று மறந்து விடுகிறார்கள். தாழ்மைப்பட்டவன் பயனடைவான். கடினப்பட்டவன் அதை வெறுக்கிறான். துன்பத்தினால் சிலர் இரட்சகருடைய பாதத்தில் இழுக்கப்படுகின்றனர். சிலரோ அவரை விரோதிக்கின்றனர்.

கிறிஸ்தவனைப்போல துன்பத்தைத் தாழ்மையோடும், விசுவாசத்தோடும், திடனோடும், பொறுமையோடும், சகிக்கிறவன் பாக்கியவான். முறுமுறுக்காமல், கசந்துகொள்ளாமல் சகிக்கிறவன் பாக்கியவான். இவன் பிரம்பை அல்ல, அதைக் கையாடுகிறவரைப் பார்க்கிறான். கரத்தை மட்டுமல்ல, அடிக்கிற கரத்தின் மனதையும் பார்க்கிறான். இது ஒரு பாடம் என்றும் இது ஒரு சிட்சை என்றும் தண்டிக்கிறவர் தன் தகப்பன் என்றும் ஏற்றுக்கொள்கிறான். தண்டிப்பது அவருக்குப் பிரியம் இல்லை. நமக்குத்தான் பயன். அவர் பரிசுத்தத்தில் எனக்குப் பங்கு உண்டு. என்னைப் பரிசுத்தவானாக்கும்படி ஜெபம்பண்ணினேன். நான் மோட்சத்துக்குப் பாத்திரவான் என்பதற்கு அத்தாட்சி கேட்டேன். இதுவே அதன் பதில். ஆகவே, நான் முறுமுறுப்பது நியாயமா. பிதா எனக்குக் கொடுக்கும் பாத்திரத்தில் நான் பானம்பண்ணாமல் இருப்பேனா என்பான். இப்படிப்பட்டவன்தான் துன்பத்தைச் சகித்து, பொறுமையோடு அதற்கு உடன்படுவான்.
இவன்தான் பாக்கியாவன். துன்பங்களால் இவனுக்கு நன்மைவராமல் போகாது. நெடுங்காலமாய் அவன் துன்பப்படவும் மாட்டான்.

தேவ ஞானம் நடத்தும்
தேவ கிருபை தாங்கும்
ஒன்றும் அறியா பாவி நான்
தேவ சித்தம் என் பாக்கியம்.

கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருக்கிறார்

யூன் 29

“கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருக்கிறார்.”  கொலோ 1:27

தேவபிள்ளைகளுடைய நம்பிக்கை மகிமையைப் பற்றினது. அந்த நம்பிக்கையின் தன்மை நமக்குப் புரியாத ஒன்றாய் இருக்கலாம். அந்த மகிமையின் மகத்துவம் நமக்கு விளங்காததுப்போல் இருக்கும். அதில் சுதந்தரம் ஓர் இராஜ்யம், கிரீடம், சந்தோஷம் ஆகியவை அடங்கியிருக்கின்றன. அது மகிமையின் கிரீடம். கனமகிமை, நித்திய மகிமை. நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் மகிமை, நம்மை உடுத்துகிற மகிமை. நமக்குள் இருக்கும் மகிமையும், வல்லமையும், ஞானமும், அறிவும் சேர்ந்திருக்கும் மகிமை. அது சரீரத்தைப் போற்றி ஆத்துமாவை நிரப்பும். அந்த மகிமை நமக்குள் இருக்கும் மகிமை. அது வெளிப்படக் காத்திருக்கிறது.

இந்த நம்பிக்கை அல்லது எதிர்பார்க்குதல் கிருபையில் ஆரம்பித்து, பரிசுத்த ஆவியானவரால் உண்டாகி, விசுவாசத்தினால் பெருகி, தேவவாக்கையும், ஆணையையும் பிடித்து, தேவன் குறித்த காலத்திற்காக காத்திருந்து அதைப் பெற்றவனைச் சுத்திகரிக்கிறது. கிறிஸ்து நம்மில் இருப்பதுதான் இந்த நம்பிக்கையின் அத்தாட்சி. தேவன் தம்முடைய ஜனங்களில் தம்முடைய வசனத்தைக் கொண்டும், கிருபையைக் கொண்டும், தம்முடைய வசனத்தைக் கொண்டும், வாசம் செய்கிறார். ஓர் அரசனைப்போல் நம்மில் ஆட்சி செய்கிறார். குடும்பத்தில் தலைவனைப்போல் கண்காணிக்கிறார். வீட்டில் எஜமானனைப்போல் எல்லாவற்றையும் தம்முடையதாக்குகிறார். மரத்தின் சாரத்தைப்போல் வளரப்பண்ணுகிறார். ஆகவே நமது ஆலயத்தில் உள்ள தேவனைப்போல் நாம் அவரை ஆராதிக்க வேண்டும். கிறிஸ்து உங்களில் வாசம்பண்ணினால் உங்கள் எண்ணங்களிலும், விருப்பங்களிலும், பாசங்களிலும், நோக்கங்களிலும் அவர் வாசம் செய்ய வேண்டும். உங்களுக்கு மகிமை கிடைக்கும் என்ற நம்பிக்கை உங்களுக்கு உண்டா? நீங்கள் எதிர்பார்க்கிற மகிமை தேவனோடு ஐக்கியப்படுகிறதா?

என்னில் தங்கும் இயேசுவே
நீர் சொல்லி முடியாத ஈவே
மோட்ச நம்பிக்கை தாரும்
அவ்வடையாளம் வேணும்.

உங்கள் அன்பைத் திருஷ்டாந்தப்படுத்துங்கள்

யூன் 01

“உங்கள் அன்பைத் திருஷ்டாந்தப்படுத்துங்கள்.” 2.கொரி 8:24

தேவனை நேசிக்கிறோமென்று சொல்லியும் நேசியாமலிருந்தால் நாம் கிறிஸ்தவர்கள் அல்ல. கிறிஸ்தவ அன்பு எல்லாவற்றையும்விட கிறிஸ்துவையும் அவர் காரியத்தையும் பெரிதாக எண்ணும். அவரின் அதிகாரத்திற்குக் கீழ்ப்படிந்து அவர் சித்தம் செய்யும். அவர் கற்பனைகள் எல்லாவற்றிற்கும் உண்மையாய் கீழ்ப்படிந்து அவர் பிள்ளைகள் இவ்வுலகில் மேன்மக்கள் என்று அவர்களோடு சந்தோஷப்படும். இந்த அன்புதான் துன்பப்படுகிறவர்களோடு பரிதபிக்கும். எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாயிருக்கும். நாம் உண்மையுள்ள ஜாக்கிரதையுள்ள கிறிஸ்தவர்கள் என்றால் இப்படிச் செய்வோம்.

தேவனுடைய பிரமாணம் இப்படி நம்மை நேசிக்கும்படி செய்கிறது. சர்வ வல்ல பிதா இந்த நேசத்தை நமக்குள் உண்டாக்குவேன் என்கிறார். பரிசுத்த ஆவியானவரால் இந்த அன்பு நம் உள்ளத்தில் ஊற்றப்படுகிறது. இயல்பாகவே நம்மில் அன்பு இல்லாதபோது அவர்தான் தெய்வீக அன்பை ஊற்றுகிறார். அதைப் பார்த்து ஆச்சரியப்பட்டு, விரும்பி தேடப்பண்ணுகிறார். சுவிஷேத்தை விளக்கிக் காட்டி நம்முடைய இருதயத்தில் தேவ அன்பை ஊற்றி அதை உண்;டுபண்ணுகிறார். தேவனோடு தினமும் அவர் ஐக்கியத்தில் நம்மை வழி நடத்திச் செல்லுகிறார். அன்பர்களே, நாம் தேவனையும் அவர் பிள்ளைகளையும் நேசிக்கிறோமென்று சொல்லுகிறோம். அப்படியானால், நல்வசனத்திலும், கிரியைகளிலும் அவர்களுக்கு உதவி செய்து, மற்றெல்லாரிலும் அவர்களை மேன்மையாக எண்ணி அந்த அன்பை நிரூபிக்க வேண்டும். வியாதியில் அவர்களைச் சந்தித்து, வறுமையில் உதவி செய்து, ஒடுக்கப்படும்போது பாதுகாத்து இயேசுவின் நிமித்தம் அவர்களிடத்தில் பட்சமாய் நடந்துகொள்வோமாக.

இயேசுவின் இரத்தம் பெற்றோம்
அதில் காப்பற்றப்பட்டோம்
அவ்விரக்கத்தைக் காட்டுவோம்
அன்பைப் பாராட்டுவோம்.

கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுக்கு நலம்

ஜனவரி 31

“கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுக்கு நலம்.” நெகே. 8:10

பயமும் துக்கமும் நம்மை பெலவீனப்படுத்தும். விசுவாசமும் சந்தோஷமும் நம்மைப் பெலப்படுத்தும். அதுவே நமக்கு ஜீவனைக் கொடுத்து, நம்மை தைரியப்படுத்தி உற்சாகப்படுத்துகிறது. நமது தேவனைப் பாக்கியமுள்ள தேவனென்றும் ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவனென்றும் சொல்லுச் செய்கிறது. அவர் நம்மை பாக்கியவான்களாக்குகிறார். அவர் சகலத்துக்கும் ஆறுதலில் தேவனாயிருக்கிறார். ஆகவே நம்மை ஆறுதல்படுத்தி மகிழ்ச்சியாக்குகிறார். இரட்சிப்பின் கிணறுகள் நமக்குண்டு, அதனிடத்திலிருந்து மகிழ்ச்சியோடே தண்ணீர் மொண்டும் கொள்ள வேண்டும். அந்த நிறைவான ஊற்றிலிருந்து எந்த அவசரத்திற்கும் தேவையானதை நாம் அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

அடிக்கடிப்போய் கேட்கிறோமே என்று அச்சப்படத் தேவையில்லை. உங்கள் சந்தோ}ம் நிறைவாயிருக்கும்படிக்குக் கேட்டுப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று ஆண்டவர் சொல்பதைக் கேளுங்கள். நம்மை நாமே வெறுத்து இயேசுவின் சிலுவையைச் சுமந்துக்கெர்டு வாழ்க்கை நடத்தினால்தான் நாம் பாக்கியசாலிகளாவோம். சந்தோஷமுள்ள கிறிஸ்தவன் தான் பெலமுள்ள கிறிஸ்தவன். தேவனுக்கு அதிக மகிமையை அவனால் தான் கொடுக்க முடியும். நாம் பரிசுத்தராய் இருப்பதுபோல் மகிழ்ச்சியாய் இருப்பதும் நமது கடமை. இரண்டும் தேவையானதே. முக்கியமானதே. நாம் எப்போதும் மன மகிழ்ச்சியாயிருக்கக் கற்றுக்கொள்வோம்.

நமக்குப் பரம நேசருண்டு
அவர் தயவில் மகிழ
அவர் மகிமை அளிப்பார்
பரம இராஜ்யமும் தருவார்.

தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு

ஏப்ரல் 28

“தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு” 1.பேதுரு 1:5

தேவனுடைய ஜனங்கள் எல்லாரும் தேவன் தங்களைப் பாதுகாப்பது அவசியம் என்று எண்ணி தங்களைப் பாதுகாக்க வேண்டுமென்று ஜெபிக்கிறார்கள். இப்படி ஜெபிப்பது மட்டும் போதாது, வாக்குத்தத்தங்களைப் பற்றிப் பிடித்து, அவைகள் நிறைவேறும் என்று விசுவாசத்தோடு எதிர்ப்பார்த்திருக்க வேண்டும். விசுவாசத்தினால்தான் தேவ வல்லமை நம்மிடமிருந்துப் புறப்படும். விசுவாசத்தினால்தான் தேவ வாக்கைப்பிடித்து கிருபாசனத்துக்குச் சமீபம் சேருகிறோம். மரணத்துக்கும்கூட காக்கப்படுகிறோம்.

அவிசுவாசத்தால் நாம் தேவனைவிட்டு விலகி அலைந்து திரிந்து, பாவத்துக்கும் புத்தியீனத்துக்கும் உள்ளாகிறோம். ஜீவனுள்ள தேவனை விட்;டு விலகுவதற்கு ஏதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களுக்கு இல்லாதபடி எச்சரிக்கையாய் இருங்கள். உங்களில் ஒருவரும் பாவத்தின் வஞ்சனையினால் கடினப்பட்டுப் போகாதபடிக்கு அனுதினமும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள். தேவன் நம்மை மிருகங்களைப்போல் அல்லாது புத்தியுள்ள சிருஷ்டிகளாகத்தான் பாதுகாப்பார். அவர் உன்னைச் சவாரி பண்ணுகிறவன் குதிரையைப் போலும் கோவேறு கழுதையைப்போலும் கடிவாளத்தில் இழுக்கிறதுபோல் இழுக்காமல், அன்புள்ள பிள்ளைகளைப்போல் நடத்தி, ஆசையுள்ள சிருஷ்டிகளைப்போல் காப்பார். அவர் வல்லமை உங்களுக்கு அவசியம் வேண்டும். அவர் வல்லமையை நம் பிள்ளைகளுக்கு மட்டுமே பயன்படுத்துகிறார். விசுவாசிகளும் விசுவாசத்தோடும் நம்பிக்கையோடும் ஜெபிக்கும் போதுதான் அவரோடு பிணைக்கப்பட்டிருக்க முடியும்.

தேவ கரம் என்னைக் காக்கும்
தீய்க்கும் தண்ணீருக்குக் தப்புவேன்
மரணம் என்மீது வரினும்
ஒருகாலும் பயப்படேன்.

நீங்கள் அசதியாயிராமல்

ஏப்ரல் 14

“நீங்கள் அசதியாயிராமல்” ரோமர் 12:11

அதியாயிருந்தால் சத்தியத்தைப் புரட்டி நன்மைகளை அவமதித்து கர்த்தரைக் கனவீனப்படுத்தி, அந்தகாரப் பிரபுவுக்கு சந்தோஷத்தை உண்டாக்குவோம். அசதி, அவகீர்த்தி, உலக காரியங்களிலும், பரம காரியங்களிலும் ஒன்றே. நம் கடமைகளில் நாம் அசதியாயிராமல் சுறுசுறுப்பாய், ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும். நல்ல நோக்கத்தோடு, நல்ல சிந்தையோடு, வைராக்கியத்தோடு நம் வேலையைச் செய்ய வேண்டும். ஒவ்வொரு கிறிஸ்தவனும் இப்படி தன் வேலைகளைச் செய்வது அவனது கடமை.

இந்த வசனத்தில் அப்போஸ்தலன் பரம காரியங்களைக் குறித்துதான் பேசுகிறோம். பரம நன்மைகளைத் தேடுவதில், தாலந்துகளைப் பயன்படுத்துவதில், கிரியைகளை முயற்சி செய்வதில் நல் மாதிரிகளைப் பின்பற்றுவதில் நாம் அசதியாயிருக்கக் கூடாது. விசுவாசித்தின்மூலம், பொறுமையின்மூலம், வாக்குத்தத்தங்களை சுதந்தரித்தவர்களை நீங்கள் பின்பற்ற வேண்டும். முற்பிதாக்களின் நடத்தை உங்களை உட்சாகப்படுத்த வேண்டும். கிறிஸ்துவின் அன்பு உங்களை நெருக்கி ஏவ வேண்டும். சுவிசேஷத்திலுள்ள பரிசுத்த கற்பனைகள் உங்களை நடத்த வேண்டும். கிருபையின் மகிமை நிறைந்த வாக்குத்தத்தங்கள் உங்களை உயிர்ப்பிக்க வேண்டும். ஆகவே சோம்பலுக்கு இடங்கொடாதீர்கள். உங்களைச் சுற்றியிருக்கும் மக்கள் ஜாக்கிரதையாயிருக்கிறார்கள். உலகம் அதிக ஜாக்கிரதையாயிருக்கிறது, உங்களுக்காக பணி செய்ய தேவதூதர்களும் ஜாக்கிரதையாயிருக்கிறார்கள். தேவ சமுகத்தில் உங்கள் காரியம் முடிக்க இயேசுவும் ஜாக்கிரதையாய் இருக்கிறார். காலம் இனி செல்லாது. கணக்கு ஒப்புவிக்க வேண்டிய நாள் நெருங்கிவிட்டது. நமக்குக் கிடைக்கும் கடைசி தருணம் சீக்கிரம் வரும்.

உமக்கர் உழைக்கும்போது
நாங்கள் என்றும் பாக்கியர்
உழைப்பெல்லாம் அன்பினால்
இன்பமாகும் அதனால்.

தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தினார்

ஜனவரி 10

“தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தினார்” பிலி. 2:9

இயேசு கிறிஸ்துவைப்போல் அவ்வளவாய் தன்னைத் தாழ்த்தியவர்கள் ஒருவருமில்லை. அவரைப்போல் அவ்வளவாய் உயர்த்தப்பட்டவரும் இனி உயர்த்தப்பட போகிறவருமில்லை. உலக பாத்திரத்திற்கு அபாத்திரராக நினைக்கப்பட்டு, தாழ்ந்த புழுவைப்போல் எண்ணப்பட்டார். ஆனால் தேவனோ அவரை அதிகமாக உயர்த்தினார். உன்னதங்களில் தேவனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கச் செய்தார். தேவகுமாரனுக்கு வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இராஜாதி இராஜனின் தலை மகுடத்திலுள்ள இரத்தினக் கற்கள், காலை பொழுதின் கதிரவ பிரகாசத்திலும் அதிக பிரகாசமாயிருக்கின்றன. அவரின் செங்கோல் பூமியெங்கும் செல்லும்படி நீட்டப்பட்டிருக்கிறது. அவருடைய இராஜ்யம் நித்திய இராஜ்யம். அவரின் ஆளுகை தலைமுறை தலைமுறையாய் உள்ளது. தேவதூதர்கள் அடிபணிந்து அவரை வணங்குகிறார்கள். இவர்களின் ஆரவாரப் பாடல்களெல்லாம் அவரைப் பற்றினதே.

கிறிஸ்துவானவர் துன்பத்திலும் தாழ்த்தப்பட்டபடியால் மிகவும் கெம்பீரமாக உயர்த்தப்பட்டார். தமது பிள்ளைகளின் நன்மைக்காக இயேசு உயர்த்தப்பட்டாரென்பதை நினைக்கும்போது எவ்வளவு இன்பமாயிருக்கிறது. உலகிலுள்ள மக்கள் யாவரும் மனந்திரும்பி பாவமன்னிப்பு பெற்று ஜீவிக்கவும்,உலகை ஜெயித்து பரிசுத்தமாக வாழவும், கடைசியில் தம்மோடு அவர் பிள்ளைகள் ஜெயித்து என்றென்றுமாய் இருக்கவும், அவரைச் சுற்றி வாழ்த்து பாடவுமே இவர் சிங்காசனத்திற்கு மேலாய் உயர்த்தப்பட்டார். நேற்றும், இன்றும், என்றும் மாறாதவரே! உம்மை அறிந்து, உமது உயிர்த்தெழுதலின் மகிமையை அடைந்து, உம்மோடே மகிமையில் உட்காரும்படி எனக்கு கிருபைத் தாருமே.

மனிதர் இகழும் இயேசு
மகிமைக்கு பாத்திரரே,
நித்திய கிரீடமும் மோட்சமும்
அவருடைய தாகுமே

 

தேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின்மேல் இருப்பதாக

செப்டம்பர் 22

“தேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின்மேல் இருப்பதாக” சங். 3:8

உலகம் உண்டாவதற்கு முன்னமே, தேவனுடைய ஜனம் எல்லா ஞான நன்மைகளாலும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவர்கள் கிறிஸ்துவால் எல்லா நன்மைகளையும் பெறுகிறார்கள். மறுமையிலும் கிறிஸ்து நாதரோடு வாழ்ந்து அனைத்து நன்மைகளையும் அனுபவிப்பார்கள். கர்த்தருடைய ஆசீர்வாதம் அவருடைய கிருபையால் அவர்கள்மேல் இருப்பதனால், அவர்கள் அவரைப் புகழ்ந்து போற்றித் துதித்துப் பாட அவர்களைத் தெரிந்து கொண்டார். இதனால் அவர்களுடைய பரிசுத்த பெருகுகிறது. அந்த ஆசீர்வாதம் தங்கியிருப்பதனால், அவர்களுக்கு நேரிடும் சோதனைகள் யாவும் நன்மையாகவே முடிகிறது. அவர்களுடைய குடும்பத்தின்மேலும் இந்த ஆசீர்வாதம் தங்குகிறது. உடன்படிக்கைப் பெட்டியின்மூலம் ஆசீர்வதிக்கப்பட்ட ஓபேத், ஏதோம் என்பவர்களுடைய வீட்டைப் போல் அவர்கள் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுவான்.

அன்பானவர்களே, தேவ ஆசீர்வாதம் உங்கள்மேல் தங்குவது தான் உங்கள் பாக்கியம். இதை அனுபவித்து இருக்கிறீர்களா? தேவ கிருபையால்தான் இது நடக்கிறது என்று அறிவீர்களா? இயேசு கிறிஸ்துதான் இக்கிருபையை உமக்கு அருளுகிறார். விசுவாசத்துடன் கீழ்படிவதனால் இதை அனுபவிக்கலாம். தேவ வாக்குத்தத்தத்தின் மூலம் இது உறுதி செய்யப்படுகிறது. தேவ பிள்ளையே, உனக்குத் தேவையானதைத் தர தேவன் ஆயத்தமாக இருக்கிறார் என்னும் சிந்தையோடு இன்றிரவு படுக்கைக்குச் செல்லுங்கள். தகப்பனே, என்னை ஆசீர்வதியும் என்று ஜெபித்துப் படுத்துக்கொள். அவரை நம்புகிற யாவரும் பாக்கியவான்கள்.

நான் உம்முடையவன்
என்னை மகிழ்ச்சியாக்கும்
உம் சொந்த மகனாகவே உம்
வாக்குத்தத்தம் பெறுவேன்.

My Favorites

தேவனை ஸ்தோத்தரித்து தைரியம் அடைந்தான்

நவம்பர் 07 "தேவனை ஸ்தோத்தரித்து தைரியம் அடைந்தான்" அப். 28:15 பவுலுக்கு அவன் சிநேகிதர்கள் காட்டின அன்பு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்து இதற்காக அவன் தேவனைத் துதித்து தைரியம் அடைந்தான். நாம் பெற்றுக்கொள்ளும் எல்லா நன்மைகளுக்காகவும்...
Exit mobile version