அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதும் இல்லை

ஜனவரி 27

“அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதும் இல்லை.” உபா. 31:6

தேவன் சொன்னதை நாம் எதிர்பார்ப்பது வீணாய் இராது. அவர் உண்மையை நாம் நம்புவதினால் நமக்குக் குறை வராது. தமது வார்த்தையை அவர் மறக்கவுமாட்டார். நம்முடைய நன்மையை விடவுமாட்டார். தம்முடைய ஜனங்களை அவர் கைவிட்டதுமில்லை, கைவிடப் போகிறதுமில்லை. உங்களுடைய விசுவாசம் பவீனமாயிருக்கலாம். நீங்கள் பயம் நிறைந்தவர்களாயிருக்கலாம். சந்தேகங்கள் உங்களைத் துன்பத்துக்குள்ளாக்கலாம். உங்கள் குறைகள் உங்களைத் திடுக்கிடப் பண்ணலாம். ஆனாலும் தேவன் உங்களைக் கைவிடவே மாட்டார். ஏன் அவர் கைவிட வேண்டும்?

அவர் தமது கிருபையால் உன்னை அழைக்கும் முன்னே உன் குறைவையும் நிர்பந்தத்தையும் உன் அபாத்திர தன்மையையும் பார்த்தார். உனது நிகழ்கால நிலைமையை அவர் அறியாதவரல்ல. அவர் உனக்கு வாக்களித்தபோது அது அவருக்குத் தெரிந்திருந்தது. உன்னை மகிமைப்படுத்திக் கொள்வார். அவரை நம்புகிறதினால் நீ தவறிப் போகக்கூடாது. எந்தக் கவலையையும் அவர்மேல் வைப்பதில் தயங்கக்கூடாது. அவருடைய உண்மையான வார்த்தையை நம்புவதில் உன் விண்ணப்பத்திற்கு பதில் கொடுப்பதில் தவற மாட்டார். உன் காரியம் ஒருவிதமாய் கண்டாலும் உன் பாதை விருப்பமில்லாமல் போனாலும் அவர் வார்த்தை உண்மையுள்ளது. அவமதிக்கிற துன்பத்தைவிட அதிகமாய் வர விடமாட்டார்.

தேவன் உன் பக்கமிருந்தால்
நீ பயப்படுவானேன்?
அவர் பலம் தருவதால்
பலவீனனென்பானேன்.

உன் சிநேகிதன்மேல் உனக்கு தயை இதுதானா?

ஜனவரி 25

“உன் சிநேகிதன்மேல் உனக்கு தயை இதுதானா?.” 2.சாமு. 16:17

இயேசு நமக்குக் காட்டும் அன்புக்குச் சமமாய் வேறெங்கும் காணமுடியாது. நாமோ அவருக்குச் செய்யும் கைமாரோ இதற்கு எதிரிடையானது. பல சமயங்களில் நாம் அவரை அசட்டை செய்கிறோம். அவரை நோக்கிக் கேட்கும்போது நமக்கு சந்தோஷமாய் இருக்கிறதே தவிர, சில நேரங்களில் அது ஒரு பாரமான வேலையாய் இருக்கிறது. நமக்குத் தெரிந்தவைகளையெல்லாம் செய்து, அவர் சொல்வதை விட்டு விடுகிறோம். அடிக்கடி அவர் வார்த்தையில் சந்தேகம் கொண்டு அவர் அன்பைச் சந்தேகித்து அவரைக் குறித்து முறையிடுகிறோம். அவருக்குக் கீழ்ப்படியாமல் மாம்சத்துக்கு இடங்கொடுத்துவிடுகிறோம். அவர் எதிர்க்கச் சொல்கிற உலகத்தைச் சேர்த்துகொள்கிறோம். அவர் எதிர்க்கச் சொல்கிற உலகத்தைச் சேர்த்துக்கொள்கிறோம். அவர் எதிர்க்கச் சொன்ன சாத்தானோடு இணைந்துவிடுகிறோம்.

எத்தனை வேளைகளில் உலகத்தாருக்குமுன் அவரை அறிக்கையிட வெட்கப்பட்டிருக்கிறோம்? நம்மீது பட்சமும் தயையும் நிறைந்த நம்முடைய மீட்பருக்கு நாம் செய்கிறதைப் பார்த்து, ‘உன் சிநேகிதன் மேல் உனக்கு இருக்கிற தயை இதுதானோ?’ என்று நம்மைக் கேட்கும்போது, வெட்கம் நம்முடைய முகத்தை மூடவேண்டும். நமது உள்ளமும் கலங்க வேண்டும். அவருக்கு நாம் செய்யும் கொடுமை துரோகம் போன்றது. அவர் மன்னித்து நேசிக்கிற அடையாளங்களை நாம் மறுபடியும் தேடி, இனி சோதனைக்கு இணங்கவாவது, பாவத்தில் இடங்கொடுக்கவாவது நினைக்கும் சமயத்தில், நம்முடைய மனச்சாட்சியைப் பார்த்து உன் சிநேகிதன்மேல் உனக்கும் தயை இதுதானா என்று கேட்போமாக.

நான் மகா துரோகி
என் நேசரை மறந்த பாவி
அவர் கிருபை இல்லாவிட்டால்
என்னை அகற்றுவார் அப்பால்.

கிறிஸ்து நமக்காக மரித்தார்

ஜனவரி 24

“கிறிஸ்து நமக்காக மரித்தார்.” ரோமர் 5:8

இது எத்தனை மகத்துவம் நிறைந்த சத்தியம். இன்றைய நாளில் இதைச் சற்று கவனமாய்ச் சிந்திப்போம். தேவனின் ஒரே மகனும், சகல நன்மைக்கு ஊற்றும், எல்லா மேன்மைக்கு மகிமையும், முதலும் முடிவுமாய் கிறிஸ்து மரித்தார். தேச சுபாவத்தையும் மனுஷ சுபாவத்தையும் தம்மில் ஒன்றாய் சேர்த்து வைத்திருந்த இயேசுவானவர் மரித்தார். உடன்படிக்கையில் நமது சுதந்தரராக ஏற்பட்டு நமக்காக பூமிக்கு இறங்கியவர். மரணத்தைவிட தம் சிநேகிதரை நேசித்ததால் அவர் மரித்தார். நம்மை அவர் நேசித்ததாலும் பிதா அவரை தெரிந்துகொண்டதினாலும் அவர் நமக்காக மரித்தார். நாம் நிர்பந்தரும், துன்மார்க்கவுரும், பெலனற்றவர்களும், சத்துருக்களுமாயிருந்தபோது அவர் நமக்காக மரித்தார்.

நமது சரீரத்திற்குச் சிரசாகவும், பிணிப்போக்கு ம் மருந்தாகவும், சிறைப்பட்டவர்களை விடுதலையாக்கவும் தன் மணவாட்டிக்கு மணவாளனாகவும், மந்தைக்கு மேய்ப்பனாகவும், பிதாவின் சித்தத்தை முடிக்க வந்த பணிவிடைக்காரனாகவும், அவர் நமக்காக மரித்தார். நம்மை மரணத்திலிருந்து மீட்கவும், நித்திய ஜீவனுக்கு உயர்த்தவும், தேவனோடு ஒப்புரவாக்கவும், தமது பரிசுத்த வாழ்வுக்கு நம்மை தகுதியுள்ளவர்களாக்கவும், நமக்கு முடிசூட்டி தம்மோடு இருக்கச் செய்யவுமே அவர் மரித்தார். நாமும் எந்நாளும் இயேசுவை நோக்கிக் கொண்டே ஜீவனம்பண்ணுவோமாக.

பாவிகளைத் தேடி வந்தார்
பாவங்கள் யாவையும் போக்கினார்
நம்மை மீட்க அவர்
ஆக்கினைக்குள்ளானார்
மேய்ப்பன் இரத்தம் சிந்தவே
ஆட்டுக்கு உயிர் வந்ததே.

கல்வாரி (கபால ஸ்தலம்) என்று சொல்லப்பட்ட இடம்

ஜனவரி 09

“கல்வாரி (கபால ஸ்தலம்) என்று சொல்லப்பட்ட இடம்” லூக்கா 23:33

இன்று காலை கெத்செமனேக்குச் சொன்றோம். இந்த கல்வாரியைப் பார்த்துச் செல்வோம். கிறிஸ்து தேவகரத்திலிருந்து நேராய் கெத்செமனேக்கு வந்து துன்பங்களை ஏற்கத் தொடங்கினார். கல்வாரியில் பாவிகளால் பாடுபடுத்தப்பட்டார். அடிக்கக் கொண்டுபோகிற ஆட்டுக்குட்டியைப்போல கொண்டு செல்லப்பட்டார். அவர் களைத்து சோர்ந்து, பலவீனப்பட்டு பாரா சிலுவையைத் தோளில் சுமந்து, எருசலேம் வீதிகளில் நடந்து போகிறதைப் பாருங்கள். கொலைக்கள் மேட்டிற்கு ஏறிப்போனார் சிலுவை மரத்திலே தமது கைகளையும் கால்களையும் ஆணிகளால் அடிக்க ஒப்புக்கொடுத்தார். அவரின் எலும்புகள் எல்லாம் ஆணிகளால் பிக்கப்பட்டன. வலியால் தவித்து கதறி துடிதுடிக்கும் மேனியை பாருங்கள். அவர் உடல் முழுதும் காயங்கள், கண்கள் இருண்டு கன்னங்கள் குழி விழுந்திருக்கின்றன. தலையில் முள்முடி. சரீரம் இரத்தத்தால் நனைந்திருக்கிறது. பயங்கர மரண அவஸ்தைப்படும் அருன்நாதரின் முகத்தைப் பாருங்கள்.

“என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று சொல்லும் சத்தத்தைக் கேளுங்கள்.இயேசு பட்ட பாடுகளைக் காட்டிலும் வேறு பாடுகள் உண்டா? பாவமில்லாதவர் நமக்காக பாவமாக்கப்பட்டார். குற்றமற்றவர் நமக்காக குற்றவாளிப்போலானார். நீதிமான் அநீதிமான் போலானது ஏன்? மணவாட்டியை மணவாளன் மீட்டுக்கொள்ளவே நாம் மரிக்காதிருக்கும்படிக்கு, அவர் நமக்கு பதில் மரித்தார். என்ன ஒரு தேவ அன்பு! அனுதினமும் நாம் கல்வாரிக்கு சென்று ஆண்டவரின் பாடுகளைத் தியானிப்போமாக. அன்பினால் துன்பங்களுக்குள்ளான காட்சி இதுவே.

மரணம் வரும் போதும்
என்ஆவி பிரியும் போதும்
கல்வாரியை பார்ப்பேன்
சிலுவையைத் தியானிப்பேன்.

இப்பொழுது கர்த்தரைத் துதிப்பேன்

ஜனவரி02

“இப்பொழுது கர்த்தரைத் துதிப்பேன்” ஆதி. 29:35

நன்றிகேடுபெரும் பாதகம். ஆனால் இது வெகு சாதாரணமான பாவமாகிவிட்டது. நாம் நன்மைகளைப்பெற்றுக்கொள்ளுகிறோம். நன்றி செலுத்தாமல் அவைகளை அனுபவிக்கிறோம்.நன்மைகளுக்கு தேவனைத் துதிக்காமல் இருப்பதால் அவைகள் நம்மை விட்டுஎடுக்கப்பட்டுப் போகின்றன. நாம் பெற்றுக்கொண்டோமென்று உணர்ந்து சொல்லாதஎத்தனை உபகாரங்களை நாம் பெற்றனுபவித்திருக்கிறோம்! ஸ்தோத்திரபலி இடுகிறவன்என்னை மகிமைப்படுத்துகிறான் என்று கர்த்தர் சொல்லுகிறார். நாம் பெற்றுக்கொண்டநன்மைகளைக் குறித்துச் சிந்தித்து, நம்முடைய நன்றிக்கேட்டுக்காகத்துக்கப்பட்டு லேயாளைப்போல் ‘இப்பொழுது கர்த்தரைத் துதிப்பேன்” என்றுசொல்லுவோம். இப்படி சொல்வது இம்மைக்குரிய நன்மைகளுக்காகவும் இப்பொழுதே அவரைத்துதிக்கத் தொடங்குவோமாக. கர்த்தர் இதுவரையில் நமக்குச் செய்ததற்காகவும், இனிசெய்வேனென்று வாக்களித்திருகிறதற்காகவும், ஆதாமின்மூலமாய் நமக்குக் கிடைத்தநன்மைகளுக்காகவும், அதிலும் அதிகமாய் கிறிஸ்துவினாலே நாம் பெற்றுக்கொண்டநன்மைகளுக்காகவும் அவரைத் துதிக்கக்கடவோம். நமது தேவைகளையெல்லாம் அவர்சந்தித்ததற்காகவும் பணமின்றி இலவசமாய் அவைகளையெல்லாம் நமக்குத்தருகிறதற்காகவும் அவரை துதித்து நன்றி சொல்வோம். அவர் நமக்கு தருவது இன்பமானாலும்,துன்பமானாலும் சகலத்தையும் அன்பினால் தருகிறார்.

ஆதலால் அப்போஸ்தலன் புத்தி சொல்லுகிறபடி “எல்லாவற்றிலும் ஸ்தோத்திரம்”செய்யக்கடவோம். அப்படி செய்வதே கிறிஸ்துவுக்குள் உங்களைக் குறித்து தேவ சித்தம்.நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்வின் நாமத்திலே எப்போதும்எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரம் செய்யுங்கள். ‘துதிசெய்வதே செம்மையானவர்களுக்குத் தகும்”

தேவனைத்துதி, உள்ளமே
அவர்ஈவை நினை
நன்மைகளைஎன்றும் மறவாதே
மௌனமாயிராதே.

தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தினார்

ஜனவரி 10

“தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தினார்” பிலி. 2:9

இயேசு கிறிஸ்துவைப்போல் அவ்வளவாய் தன்னைத் தாழ்த்தியவர்கள் ஒருவருமில்லை. அவரைப்போல் அவ்வளவாய் உயர்த்தப்பட்டவரும் இனி உயர்த்தப்பட போகிறவருமில்லை. உலக பாத்திரத்திற்கு அபாத்திரராக நினைக்கப்பட்டு, தாழ்ந்த புழுவைப்போல் எண்ணப்பட்டார். ஆனால் தேவனோ அவரை அதிகமாக உயர்த்தினார். உன்னதங்களில் தேவனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கச் செய்தார். தேவகுமாரனுக்கு வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இராஜாதி இராஜனின் தலை மகுடத்திலுள்ள இரத்தினக் கற்கள், காலை பொழுதின் கதிரவ பிரகாசத்திலும் அதிக பிரகாசமாயிருக்கின்றன. அவரின் செங்கோல் பூமியெங்கும் செல்லும்படி நீட்டப்பட்டிருக்கிறது. அவருடைய இராஜ்யம் நித்திய இராஜ்யம். அவரின் ஆளுகை தலைமுறை தலைமுறையாய் உள்ளது. தேவதூதர்கள் அடிபணிந்து அவரை வணங்குகிறார்கள். இவர்களின் ஆரவாரப் பாடல்களெல்லாம் அவரைப் பற்றினதே.

கிறிஸ்துவானவர் துன்பத்திலும் தாழ்த்தப்பட்டபடியால் மிகவும் கெம்பீரமாக உயர்த்தப்பட்டார். தமது பிள்ளைகளின் நன்மைக்காக இயேசு உயர்த்தப்பட்டாரென்பதை நினைக்கும்போது எவ்வளவு இன்பமாயிருக்கிறது. உலகிலுள்ள மக்கள் யாவரும் மனந்திரும்பி பாவமன்னிப்பு பெற்று ஜீவிக்கவும்,உலகை ஜெயித்து பரிசுத்தமாக வாழவும், கடைசியில் தம்மோடு அவர் பிள்ளைகள் ஜெயித்து என்றென்றுமாய் இருக்கவும், அவரைச் சுற்றி வாழ்த்து பாடவுமே இவர் சிங்காசனத்திற்கு மேலாய் உயர்த்தப்பட்டார். நேற்றும், இன்றும், என்றும் மாறாதவரே! உம்மை அறிந்து, உமது உயிர்த்தெழுதலின் மகிமையை அடைந்து, உம்மோடே மகிமையில் உட்காரும்படி எனக்கு கிருபைத் தாருமே.

மனிதர் இகழும் இயேசு
மகிமைக்கு பாத்திரரே,
நித்திய கிரீடமும் மோட்சமும்
அவருடைய தாகுமே

 

மார்த்தாளே, மார்த்தாளே… நீ கவலைப்பட்டுக் கலங்குகிறாய்

ஜனவரி 6

“மார்த்தாளே, மார்த்தாளே… நீ கவலைப்பட்டுக் கலங்குகிறாய்” லூக்கா 10:41

இயேசு மார்த்தாளில் அன்புகூர்ந்தார். மார்த்தாளும் இயேசுவில் அன்புகூர்ந்தாள். ஆனாலும் உலகக் காரியங்களை குறித்து அதிகமாய் கவலைப்பட்டுக்கொண்டிருந்தாள். இதனால் இரட்சகர் அவளைத் தயவாய்க் கண்டித்தார். அவளோ கவலைப்பட்டு படபடப்பாய்த் திரிந்தாள். அதினின்று அவளைத் தப்புவிக்க வேண்டுமென்பதுதான் நேசருடைய நோக்கம். மார்த்தாள் மிகுந்த கவலைக்குள்ளாகி கலங்கினபடியால், அவரோடு சம்பாஷிக்கவும் அவர் சொல்வதைச் சாந்தமாய்க் கேட்கவும் கூடாமற்போயிற்று.

கிறிஸ்தவர்களுக்குள் இது சாதாரணமாய் காணப்படும் குறை. சபையிலும் இன்று மார்த்தாளைப்போல் எத்தனையோ போர் இருக்கிறார்கள். மரியாளைப் போன்றவர்கள் வெகு சிலரே. நாமும் மரியாளைப்போல் இயேசுவின் பாதத்தண்டையில் உட்கார்ந்து, அவர் சொல்பதைக் கேட்டு, அவர் நமக்காகக் கவலைப்படுகிறார் என்று உணர்ந்து, நம்முடைய கவலைகளையெல்லாம் அவர் மேல்வைப்போமாக. நமது காரியங்களை எல்லாம் அவர் கரத்தில் இருக்கின்றன. சகலத்தையும் அவரே நடத்துகிறார். முதலாவது அவருடைய இராஜ்யத்தை நாம் தேடவேண்டுமென்றும், தேவ சமாதானம் உங்கள் இருதயத்தில் ஆளுகை செய்யட்டும். நடக்கிறதெல்லாம் உங்கள் நன்மைக்காக மாற்றப்படும். இவ்வுலகத்தைவிட்டு சீக்கிரத்தில் பிரிந்து, நீங்கள் வெகுவாய்க் கவலைப்படுகிற சகலத்தையும் பின்னால் எறிந்து, நீங்கள் மறுமைக்குட்படுவீர்கள். ஜெப சிந்தையுள்ளவர்களாய் இருங்கள். வீண் கவலைக்கு இடங்கொடாதேயுங்கள். மார்த்தாள் செய்த வேலையை மரியாளுடைய சிந்தையோடு செய்யுங்கள். இந்த நாளில் இரட்சகர் உங்களை இப்படிக் கண்டிக்கிறார் என்று அறிந்து, உங்கள் கவலைகளை, அவர் உங்கள் பாவங்களைப் புதைத்த இடத்தில் புதைத்துப்போடப் பார்ப்பீர்களாக.

நான் மார்த்தாளைப்போல
வீண் கவலை கொள்வனே?
ஒன்றே தேவை என்றாரே
அதனையே நாடாதிருப்பது ஏன்?

யாக்கோபு என்னும் பூச்சியே பயப்படாதே

ஜனவரி 23

“யாக்கோபு என்னும் பூச்சியே பயப்படாதே.”  ஏசாயா 41:14

மற்றவர்களின் பார்வையில் நாம் சிறியவரும் அற்பமுமாய்க் காணப்பட்டாலும், நாமே நம்மைக் குறித்து பலவீனர்களென்று அறிந்தாலும் தேவன் நம்மைப் பார்த்து பயப்படாதே என்கிறார். நாம் ஒரு பூச்சியைப்போலிருந்தாலும் ஜெபிக்கிற யாக்கோபைக் போலிருந்தால் பயப்படத் தேவையில்லை. ஏன் பயப்படவேண்டும்? பயம் ஆத்துமாவைச் சேதப்படுத்தி சத்துருவைத் தைரியப்படுத்துகிறது. அது சிநேகிதரைக் கலங்கடித்து தேவ நாமத்தைக் கனவீனப்படுத்துகிறபடியால் பயப்படவேண்டாம். இப்படி தேவன் அடிக்கடி நம்மைப் பார்த்து சொல்வது எத்தனை அருமையானது. வேதத்தில் இந்த வார்த்தை எங்கே காணலாம். நாம் ஏன் பயப்படவேண்டும்? ஓடுகிறதற்கு வேகமும், யுத்தத்திற்குச் சவுரியவான்களின் சவுரியமும் இருந்தால் போதாது, பிழைப்புக்கு ஞானமுள்ளவர்களாயிருந்தாலும் போதாது. தயவு அடைவதற்கு வித்வான்களின் அறிவும் போதாது.

அவைகளுக்கெல்லாம் தேவ செயலும் காலமும் நேரிட தேவனே விழித்திருப்பார். நாம் கிறிஸ்து இயேசுவை விசுவாசிக்கிறோமா? அப்படியானால் நாம் பயப்படத் தேவையில்லை. தேவன் நமது சிநேகிதர், அவர் எந்தக் காலத்திலும் எந்தக் காரியத்திலும் நம்மேல் கவலை கொள்கிறார். நமது தேவைகளைச் சந்திக்கிறார். எல்லா விசுவாசிகளையும் அவர் பார்க்கிறார். நம்மை நம்புகிற ஒவ்வொரு பூச்சியையும் சுகமாய் வாழ பாதுகாக்கிறார். அவர் வல்லமை சர்வ வல்லமை. அவரின் ஞானம் சர்வத்தையும் அறியும். அவரின் அன்புக்கு இணையாக ஒன்றுமில்லை. அவர் உன்னைக் காப்பவர். ஆகவே யாக்கோபு என்னும் பூச்சியே பயப்படாதே.

உன்னை யார் இகழ்ந்தாலும்
உன் தேவனை நம்பு
விழுந்த உன்னை தூக்குவார்
யாரும் உன்னை மேற்கொள்ளார்.

இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவி செய்தார்

ஜனவரி 08

“இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவி செய்தார்” 1.சாமு. 7:12

தேவன் உண்மையுள்ளவர். இதை நாம் நமது அனுபவத்தில் நன்றாய்க் கண்டறிந்திருக்கிறோம். அவர் நமக்கு உதவி செய்வேனென்று வாக்களித்துள்ளார். நாம் நம்முடைய நீண்ட பிரயாணத்தில் தண்ணீரைக் கடந்து அக்கினியில் நடந்தாலும், பாதைகள் கரடு முரமானாலும், பாவங்கள் பெருகி, சத்துருக்கள் அநேகரானாலும் நம்முடைய விசுவாசம் பலவீனமுள்ளதாயிருந்தாலும், கர்த்தர் நமக்கு ஏற்ற துணையாய் நின்றார். இருட்டிலும் வெளிச்சத்திலும், கோடைக்காலத்திலும் மாரிக்காலத்திலும், ஆத்தும நலத்திலும் சரீர சுகத்திலும் அவர் நமக்கு உதவி செய்தார்.

இந்த நாளில் அவருடைய இரக்கங்களை நினைத்து நம்முடைய ‘எபெனேசரை” நம் முன் நிறுத்தி அவரே நமக்கு உதவினாரென்று சாட்சியிடுவோமாக. மேலும் கடந்த காலத்தை நினைத்து கலங்காமல், எதிர்காலத்திலும் தேவனே உதவிடுவார் என தைரியமாய் நம்புவோமாக. ‘நான் உனக்குச் சொன்னதை எல்லாம் செய்து தீருமட்டும் நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லுகிறார். நாமும் சந்தோஷித்து மகிழ்ந்து வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தடைய நாமத்திலே எங்களுக்கு ஒத்தாசை உண்டென்று சங்கீதக்காரனோடு துதிபாடுவோமாக. நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை. கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லுகிறதுபோல நாமும் தைரியத்தோடு கர்த்தர் எனக்குச் சகாயர், மனுஷன் எனக்கு என்ன செய்வான் என்று சொல்வோமாக. எது மாறிப்போனாலும் உன் தேவனுடைய அன்பு மாறாது. அவரே மாற்ற ஒருவராலும் கூடாது. ஆகையாய் அவரை நம்பு. எத்துன்ப நேரத்திலும் ஆறுதல் உனக்களிப்பார்.

இம்மட்டும் தேவன் காத்தார்
இம்மட்டும் நடத்தினார்
இன்னும் தயை காட்டுவார்
அவர் அன்பர்கள் போற்றிப் பாடுவர்.

என் நடைகளை உமது வழிகளில் ஸ்திரப்படுத்தும்

ஜனவரி 14

“என் நடைகளை உமது வழிகளில் ஸ்திரப்படுத்தும்”  சங் 17:5

நமது பாவங்களும், தவறுகளும், நஷ்டங்களும், புத்தியீனங்களும் மன்னிக்கிற தேவனண்டையில் நம்மை நடத்த வேண்டும். தேவ வல்லமையையும் தேவ ஞானத்தையும் பெற்றுக்கொள்ள அதுவே சிறந்த வழி. முறிந்த வில்லைப்போல் பலவீனர்களாயிருக்கலாம். அநேகர் விழுந்தார்கள். அநேகர் விழலாம், அல்லது பின்வாங்கி போயிருக்கலாம். சோதனைகள் வரும்போது விழுந்துவிட கூடியவர்களாய் இருக்கலாம். சாத்தான் விழித்திருக்கிறான்.சோதனைகள் கடுமையாகி, நமது பலவீனமான வாழ்க்கையைச் சோதிக்கும்போது கர்த்தரிடத்தில் வந்து அவரை அண்டிக்கொள்வோம். அனுதினமும் என் நடைகளை உமது வழிகளில் ஸ்திரப்படுத்தும் என்று ஜெபிப்போமாக. எந்த வேளையிலும் சோதனையிலும் கொந்தளிப்பிலும், அமைதியான வேளையிலும் நம்முடைய நடைகளை அவர் ஸ்திரப்படுத்தவேண்டும்.

கர்த்தர் நம்மை தாங்கிவிட்டால் நாம் துணிகரத்தில் விழுந்துவிடுவோம். அல்லது அவிசுவாசத்தில் மாண்டு போவோம். சுய நீதியையும் பெலத்தையும் பாராட்டுவோம். அக்கிரமத்தில் விழுந்து பின்வாங்கி போவோம். இன்றுவரை கர்த்தர் நம்மை காத்தால்தான் நாம் பத்திரமாய் இருக்கிறோம். நமது பலவீனத்தையும் சுயத்தையும் அவரிடம் ஒப்படைத்து அவரின் பெரிய ஒத்தாசையை நாடும்போது அவரின் பெரிய பெலத்தைப் பெறுவோம். நம்மையும் உலகத்தையும் நம்பும்போது நாம் விசுவாசத்தைவிட்டு விலகி விடுவோம். மன தாழ்மையோடும் விசுவாசத்தோடும் அவரிடம் வரும்போது நமது பாதைகளைச் செம்மையாக்கி விசுவாசத்தில் நிற்கவும் பெலன் தருகிறார்.

அன்பானவர்களே, தேவ ஒத்தாசையை அனுதினமும் தேடாவிட்டால் சாத்தானால் ஜெயிக்கப்பட்டு மோசம் போவீர்கள். உங்களைப் பரிசோதித்துப் பாருங்கள். விழித்திருந்து ஜெபியுங்கள்.

சுத்த தேவ ஆவியே
சுத்தம் ஞானம் தாருமேன்
மோசம் அணுகும்போது
என்னைத் தாங்கும் அப்போது.

My Favorites

நான் என்னை அருவருக்கிறேன்

அக்டோபர் 24 "நான் என்னை அருவருக்கிறேன்" யோபு 42:6 தேவன் எவ்வளவாக தம்மை தெரியப்படுத்துகிறாரோ, அவருடைய ஆவியானவர் எவ்வளாக நம்மில் கிரியை செய்கிறாரோ, அவ்வளவாக நாம் நம்மைத் தாழ்த்த வேண்டும். தங்களைத் தாங்களே மெச்சிக்கொள்ளுகிறவர்கள், தேவனோடு...
Exit mobile version