முகப்பு செய்திகள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டால் நீ….. யார்?

கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டால் நீ….. யார்?

நீ ஏற்றுக்கொள்ளப்படுகிறாய்

நீ தேவனுடைய பிள்ளை. (யோவான 1:12)

நீ கிறிஸ்துவின் நண்பன். (யோவான் 15:15).

நீ நீதிமானாக்கப்பட்டிருக்கிறாய். (ரோம. 5:1)

நீ கர்த்தரோடு இசைந்திருக்கிறாய் அவருடனே ஒரே ஆவியாயிருக்கின்றாய். (1கொரி. 6:17)

நீ கிரயத்துக்குக் கொள்ளப்பட்டிருக்கிறாய். நீ தேவனுக்குச் சொந்தமானவன். (1கொரி. 6:19-20)

நீ கிறிஸ்துவின் சரிரத்தின் அவயவமாயிருக்கின்றாய்;. (1கொரி. 12:27)

நீ ஒரு பரிசுத்தவான் .(எபே. 1:1)

நீ தேவனுடைய சுவிகாரபுத்திரன் (எபே. 1:6)

பரிசுத்த ஆவியானவராலே தேவனிடத்தில் நேரடியாகச் செல்லக்கூடிய சிலாக்கியத்தைப் பெற்றிருக்கிறாய். (எபே. 2:13)

உன்னுடைய சகல பாவங்களும் மன்னிக்கப்பட்டு நீ மீட்கப்பட்டிருக்கிறாய். (கொலோ. 1:14)

நீ கிறிஸ்துவுக்குள் பரிபூரணமுள்ளவனாயிருக்கிறாய்;. (கொலோ. 2:10)

நீ பாத்திரமாய் இருக்கிறாய்

நீ ஆக்கினைத் தீர்ப்பினின்று விடுதலையாக்கப்பட்டிருக்கிறாய்.. (ரோம. 8:1-2)

உனக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறாய். (ரோம. 8:28)

உன்னை யாரும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கு முடியாது. (ரோம. 8:31-34)

தேவனுடைய அன்பை விட்டு யாரும், எதுவும் உன்னைப் பிரிக்கமுடியாது. (ரோம. 8:35-39)

தேவனே உன்னை ஸ்திரப்படுத்தி, அபிஷேகம்பண்ணி முத்திரித்து வைத்திருக்கின்றார். (2கொரி. 1:21-22)

நீ கிறிஸ்துவுடன் தேவனுக்குள் மறைந்திருக்கிறாய். (கொலோ. 3:3)

தேவன் உன்னில் தொடங்கிய நற்கிரியையை பூரணமாக நடத்தி முடிப்பர் என்று நீ நம்பியிருக்கிறாய். (பிலி. 1:5).

நீ பரலோக குடிமகன். (பிலி. 3:20)

தேவன் உனக்கு பயமுள்ள ஆவியை அல்ல, பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கின்றார். (2தீமோ.1:7)

நீ ஏற்ற சமயத்தில் இரக்கத்தைப்பெறவும், சகாயம் செய்யவும் கிருபையைக் கண்டடையக்கூடும். (எபி. 4:16)

நீ தேவனால் பிறந்திருக்கிறாய், பொல்லாங்கன் உன்னைத் தொட முடியாது (1யோவான். 5:18).

நீ முக்கியத்துவம் வாய்ந்தவன்

நீ உலகத்துக்கு உப்பாகவும் ஒளியாகவும் இருக்கிறாய். (மத். 5:13-14)

நீ மெய்யான திராட்சைச் செடியின் கொடியாய் இருக்கிறாய். அவரது ஜீவன் உன் மூலமாகப் பாய்ந்தோடுகிறது. (யோவான் 15:1,5)

நீ கனிகொடுக்கும்படியாகத் தெரிந்தெடுக்கப்பட்டு, நியமிக்கப்பட்டிருக்கிறாய். (யோவான் 15:16)

நீ கிறிஸ்துவுக்குச் சாட்சியாயிருக்கிறாய். (அப். 1:8)

நீ தேவனுடைய ஆலயமாயிருக்கின்றாய். (1கொரி. 3:16)

நீ தேவனுடைய ஒப்புரவாக்குதலின் ஊழியக்காரன். (2கொரி. 5:17-21)

நீ தேவனுடன் கூட உடன் ஊழியக்காரன். (2கொரி. 6:1, 1கொரி.3:9)

நீ கிறிஸ்துவுடன் கூட உன்னதங்களில் உட்கார்ந்திருக்கிறாய். (எபே. 2:6)

நீ தேவனுடைய படைப்பு. (எபே. 2:10)

நீ தேவனிடத்தில் தைரியத்துடனும் திடநம்பிக்கையுடனும் சேரலாம். (எபே. 3:12)

உன்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே நீ எல்லாவற்றையும் செய்ய முடியும். (பிலி. 4:13)