பாடல்கள்

Home பாடல்கள்

சபை கூடியே ஒரு சங்கீதம் பாடுகிறோம்

சபை கூடியே ஒரு சங்கீதம் பாடுகிறோம்

சபை கூடியே ஒரு சங்கீதம் பாடுகிறோம்
எங்கள் அருள்நாதரே நீர் அதைக் கேட்க வருவீரைய்யா
சபை கூடியே ஒரு சங்கீதம் பாடுகிறோம்
எங்கள் அருள்நாதரே நீர் அதைக் கேட்க வருவீரைய்யா

மனம் நிம்மதி இன்றி அலைமோதிடும் வேளை
இளைப்பாறுதல் தரும் நிழல் நீரன்றோ
மனம் நிம்மதி இன்றி அலைமோதிடும் வேளை
இளைப்பாறுதல் தரும் நிழல் நீரன்றோ
உமதண்டையே எமக்குப் பரலோகமே
உமதண்டையே எமக்குப் பரலோகமே
அதைத் தரவேண்டியே இன்று துதி பாடினோம்

சபை கூடியே ஒரு சங்கீதம் பாடுகிறோம்
எங்கள் அருள்நாதரே நீர் அதைக் கேட்க வருவீரைய்யா

பழி பாவங்கள் நெஞ்சில் குறைவானதே
உமது பரிசுத்தத்தால் அவை மறைவானதே
பழி பாவங்கள் நெஞ்சில் குறைவானதே
உமது பரிசுத்தத்தால் அவை மறைவானதே
தினந்தோறுமே ஜெபத்தில் நிறைவாகினோம்
தினந்தோறுமே ஜெபத்தில் நிறைவாகினோம்
ஜெகஜோதியே எங்கள் குறை தீருமே

சபை கூடியே ஒரு சங்கீதம் பாடுகிறோம்
எங்கள் அருள்நாதரே நீர் அதைக் கேட்க வருவீரைய்யா

மனம் மாறியே தினமும் மன்றாடினோம்
உமது மலரடியிலே இன்று சரணாகினோம்
மனம் மாறியே தினமும் மன்றாடினோம்
உமது மலரடியிலே இன்று சரணாகினோம்
அருள் வாக்கினால் எம்மைக் குணமாக்கவே
அருள் வாக்கினால் எம்மைக் குணமாக்கவே
மன இருள் நீக்கியே ஞான ஒளி தாருமே

சபை கூடியே ஒரு சங்கீதம் பாடுகிறோம்
எங்கள் அருள்நாதரே நீர் அதைக் கேட்க வருவீரைய்யா
சபை கூடியே ஒரு சங்கீதம் பாடுகிறோம்
எங்கள் அருள்நாதரே நீர் அதைக் கேட்க வருவீரைய்யா

திடன் கொள் மகனே என்றவர்

திடன் கொள் மகனே என்றவர்
தினம் வந்து திருத்தியே நடத்துவார்
பலங்கொள்ள அவர் என்னை
பரிசுத்தஆவியால் பரிவுடன் நிரப்புவார்

என் மேய்ப்பர் என்னோடு இருக்கிறார்
என் இயேசு என்னோடு வாழ்கிறார்
என் மேய்ப்பர் என்னோடு இருக்கிறார்
என் இயேசு என்னோடு வாழ்கிறார்

உலகத்தில் உனக்கே உபத்திரவம் உண்டு
மகனே கலங்காதே
உலகத்தில் உனக்கே உபத்திரவம் உண்டு
மகனே கலங்காதே
உனக்காய் ஜீவனைத் தருவேன்
எந்தன் வாக்கை நீ மறவாதே
உனக்காய் ஜீவனைத் தருவேன்
எந்தன் வாக்கை நீ மறவாதே

என் மேய்ப்பர் என்னோடு இருக்கிறார்
என் இயேசு என்னோடு வாழ்கிறார்
என் மேய்ப்பர் என்னோடு இருக்கிறார்
என் இயேசு என்னோடு வாழ்கிறார்

ஆபத்து வேளையில் கூப்பிடும்
போதெந்தன் அருகினில் வருகிறார்
ஆபத்து வேளையில் கூப்பிடும்
போதெந்தன் அருகினில் வருகிறார்
ஆண்டவா என்று அழைத்திடும் போதவர்
அன்போடு கைநீட்டுவார்
ஆண்டவா என்று அழைத்திடும் போதவர்
அன்போடு கைநீட்டுவார்

என் மேய்ப்பர் என்னோடு இருக்கிறார்
என் இயேசு என்னோடு வாழ்கிறார்
என் மேய்ப்பர் என்னோடு இருக்கிறார்
என் இயேசு என்னோடு வாழ்கிறார்

நல்ல பாடலொன்று தினமும்

நல்ல பாடலொன்று தினமும்
உனக்காய் நான் தருவேன்
வல்ல தேவன் என்றே என்னை நீ
வாழ்த்தியே பாடிவிடு மகனே

நல்ல பாடலொன்று தினமும்
உனக்காய் நான் தருவேன்

உள்ளம் களிகூர்ந்தே
எனக்காய் பாடிடும் வரம் தருவேன்
உள்ளம் களிகூர்ந்தே
எனக்காய் பாடிடும் வரம் தருவேன்
நீ செல்லுமிடமெல்லாம் எந்தன்
நாமத்தையே பாடு மகனே
நீ செல்லுமிடமெல்லாம் எந்தன்
நாமத்தையே பாடு மகனே

நல்ல பாடலொன்று தினமும்
உனக்காய் நான் தருவேன்

கள்ளமில்லா எனது அடியவர்
உள்ளத்தில் வாசம் செய்வேன்
கள்ளமில்லா எனது அடியவர்
உள்ளத்தில் வாசம் செய்வேன்
நீ பாடும் துதியில் எல்லாம் எந்தன்
பரிவினை எடுத்துச் சொல்லு மகனே
நீ பாடும் துதியில் எல்லாம் எந்தன்
பரிவினை எடுத்துச் சொல்லு மகனே

நல்ல பாடலொன்று தினமும்
உனக்காய் நான் தருவேன்

வள்ளலே உமதன்பை என்றும் நான்
பாடிடும் வரம் தாரும்
வள்ளலே உமதன்பை என்றும் நான்
பாடிடும் வரம் தாரும்
என் வாழ்வு முடியும் வரை
உமக்காய்ப் பாடிக்கொண்டேயிருப்பேன்
என் வாழ்வு முடியும் வரை
உமக்காய்ப் பாடிக்கொண்டேயிருப்பேன்
உமக்காய்ப் பாடிக்கொண்டேயிருப்பேன்

அன்பு கொண்ட மனிதனே

அன்பு கொண்ட மனிதனே – உன்னை
அழைக்கிறார் என் தெய்வமே
இன்னல் காணும் இந்த உலகில்
எந்த நன்மையும் இல்லையே
இங்கு காணும் இன்பம் யாவும்
இடையில் தோன்றும் மாயையே

அன்பு கொண்ட மனிதனே – உன்னை
அழைக்கிறார் என் தெய்வமே

கல்லும் மலையும் கடந்து சென்றே
கடவுளைக் காண முடியுமோ
உள்ளும் புறமும் உனக்குள் வாழும்
தெய்வத்தை நீ மறந்ததேன்
எல்லையில்லா அன்பை நீயும்
இயேசுவிடத்தில் காணலாம்
எல்லையில்லா அன்பை நீயும்
இயேசுவிடத்தில் காணலாம்

அன்பு கொண்ட மனிதனே – உன்னை
அழைக்கிறார் என் தெய்வமே

அல்லும் பகலும் அலைந்து உழைத்தும்
மனதில் நிம்மதி இல்லையே
கொல்லும் துன்பம் எதையும் வெல்ல
வல்ல தேவன் அழைக்கிறார்
கள்ளமில்லா இயேசு அன்பை
கண்டு நீயும் மகிழலாம்
கள்ளமில்லா இயேசு அன்பை
கண்டு நீயும் மகிழலாம்

அன்பு கொண்ட மனிதனே – உன்னை
அழைக்கிறார் என் தெய்வமே

மின்னல் போல மனித வாழ்வு
இடையில் தோன்றி மறையுமே
இன்று நீயும் மனந்திரும்பி
மகிமை வாழ்வு அடையலாம்
அண்ணல் இயேசு அன்புகூர்ந்து
அருகில் உன்னை அழைக்கிறார்
அண்ணல் இயேசு அன்புகூர்ந்து
அருகில் உன்னை அழைக்கிறார்

 

அன்பு கொண்ட மனிதனே – உன்னை
அழைக்கிறார் என் தெய்வமே

கர்த்தரை நோக்கியே கூப்பிடு

கர்த்தரை நோக்கியே கூப்பிடு
உன்னைக் கரம் பிடிப்பாரவர் புறப்படு
எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்
உன்னைக் காத்திடும் மேய்ப்பனைப் பணிந்திடு
கர்த்தரை நோக்கியே கூப்பிடு
உன்னைக் கரம் பிடிப்பாரவர் புறப்படு

வல்லமை நிறைந்தவர் வாக்குமாறாதவர்
பரிசுத்தரும் இவரே
உன்னதமானவர் உயிர்த்தெழுந்தே இன்னும்
ஜீவிக்கிறார் நம்பிக் கூப்பிடு

கர்த்தரை நோக்கியே கூப்பிடு
உன்னைக் கரம் பிடிப்பாரவர் புறப்படு

தேவனை நோக்கியே கூப்பிடு
உன்னைத் தெரிந்து கொள்வாரவர் கூப்பிடு
உன்னத கிருபையால் தினம் உன்னைத் தேற்றிடும்
மன்னவனைப் போற்றியே கூப்பிடு

கர்த்தரை நோக்கியே கூப்பிடு
உன்னைக் கரம் பிடிப்பாரவர் புறப்படு

பரிசுத்த இரத்தத்தால் பாவங்கள் கழுவிய
இயேசு நாதனையே கூப்பிடு
அற்புதமானவர் இரட்சிப்பைத் தந்திடவே
அழைக்கத் துடிக்கிறார் கூப்பிடு

கர்த்தரை நோக்கியே கூப்பிடு
உன்னைக் கரம் பிடிப்பாரவர் புறப்படு
எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்
உன்னைக் காத்திடும் மேய்ப்பனைப் பணிந்திடு
கர்த்தரை நோக்கியே கூப்பிடு
உன்னைக் கரம் பிடிப்பாரவர் புறப்படு

மகிமை நிறைந்த தேவனின்

மகிமை நிறைந்த தேவனின் நாமத்தை
மகிழ்ந்து களி கூர வா
மகிமை நிறைந்த தேவனின் நாமத்தை
மகிழ்ந்து களி கூர வா
அவர் வருகை நெருங்கிடும் நேரமிதே நீ
மனந்திரும்பியே வா
அவர் வருகை நெருங்கிடும் நேரமிதே நீ
மனந்திரும்பியே வா
நீ மனந்திரும்பியே வா

பலியினாலே உன்னைக் காக்கவந்த என்
ரபியை நோக்கியே வா
பலியினாலே உன்னைக் காக்கவந்த என்
ரபியை நோக்கியே வா
இரட்சிப்பைத் தந்துன்னை மீட்கும் ஐயனென்
இயேசுவை நோக்கியே வா
இரட்சிப்பைத் தந்துன்னை மீட்கும் ஐயனென்

இயேசுவை நோக்கியே வா
எந்தன் இயேசுவை நோக்கியே வா

கல்லிலும் முள்ளிலும் கடவுளேது நீ
கர்த்தரை நோக்கியே வா
கல்லிலும் முள்ளிலும் கடவுளேது நீ
கர்த்தரை நோக்கியே வா
உன்னை மனிதனாகவே சிருஷ்டித்த எந்தன்
தேவனைத் தேடியே வா
உன்னை மனிதனாகவே சிருஷ்டித்த எந்தன்
தேவனைத் தேடியே வா
எந்தன் தேவனைத் தேடியே வா

கருணை பொழியும் அவர் அன்பை நீயும்
கல்வாரியில் பார்த்திட வா
கருணை பொழியும் அவர் அன்பை நீயும்
கல்வாரியில் பார்த்திட வா
எம்மைக் காத்திடும் மேய்ப்பரின்
மந்தையில் நீயும் சேர்ந்து வாழ்ந்திடவே வா
எம்மைக் காத்திடும் மேய்ப்பரின்
மந்தையில் நீயும் சேர்ந்து வாழ்ந்திடவே வா
நீயும் சேர்ந்து வாழ்ந்திடவே வா

எங்களைக் காத்திடும் இயேசுவே உன்னையும்
நேசிக்கிறார் ஓடிவா
எங்களைக் காத்திடும் இயேசுவே உன்னையும்
நேசிக்கிறார் ஓடிவா
உன்னதமானவர் உயிர்த்தெழுந்தே இன்னும்
ஜீவிக்கிறார் ஓடிவா
உன்னதமானவர் உயிர்த்தெழுந்தே இன்னும்
ஜீவிக்கிறார் ஓடிவா

இயேசு ஜீவிக்கிறார் ஓடிவா
உன்னை நேசிக்கிறார் ஓடிவா
இயேசு ஜீவிக்கிறார் ஓடிவா
உன்னை நேசிக்கிறார் ஓடிவா

அன்பு பொழிந்தோனே

அன்பு பொழிந்தோனே
எம்மை ஆதரிக்கும் தெய்வமே
அன்பு பொழிந்தோனே
எம்மை ஆதரிக்கும் தெய்வமே
இறைமகன் ஆக வந்தே
எங்கள் இன்னல் களைந்தவரே
இறைமகன் ஆக வந்தே
எங்கள் இன்னல் களைந்தவரே

இயேசப்பா ஸ்தோத்திரம்
இறைமகனே ஸ்தோத்திரம்
இயேசப்பா ஸ்தோத்திரம்
இறைமகனே ஸ்தோத்திரம்

நம்பிக்கை ஒளியைத் தந்தே
நாதனே நல்வழி காட்டிவைத்தீர்
நம்பிக்கை ஒளியைத் தந்தே
நாதனே நல்வழி காட்டிவைத்தீர்
உன்னதமானவரே உள்ளத்தில்
ஒளிதர வேண்டி நின்றோம்
உன்னதமானவரே உள்ளத்தில்
ஒளிதர வேண்டி நின்றோம்

இயேசப்பா ஸ்தோத்திரம்
இறைமகனே ஸ்தோத்திரம்
இயேசப்பா ஸ்தோத்திரம்
இறைமகனே ஸ்தோத்திரம்

பேரின்பக் கன்மலையே எங்கள்
கோட்டையும் நீரல்லவோ
பேரின்பக் கன்மலையே எங்கள்
கோட்டையும் நீரல்லவோ
வானம் பூமி அழிந்தாலும்
உமது வார்த்தைகள் அழிவதில்லை
வானம் பூமி அழிந்தாலும்
உமது வார்த்தைகள் அழிவதில்லை

இயேசப்பா ஸ்தோத்திரம்
இறைமகனே ஸ்தோத்திரம்
இயேசப்பா ஸ்தோத்திரம்
இறைமகனே ஸ்தோத்திரம்

அதிசயமானவரே உமது
மகிமையைப் பாட வந்தோம்
அதிசயமானவரே உமது
மகிமையைப் பாட வந்தோம்
ஆண்டவரே உமக்காய் ஆரோகண
சங்கீதம் பாட வந்தோம்
ஆண்டவரே உமக்காய் ஆரோகண
சங்கீதம் பாட வந்தோம்

இயேசப்பா ஸ்தோத்திரம்
இறைமகனே ஸ்தோத்திரம்
இயேசப்பா ஸ்தோத்திரம்
இறைமகனே ஸ்தோத்திரம்

இடையில் என் பாடல்

இடையில் என் பாடல் நின்றும் விடாது
என் இயேசுவின் அன்பும் குறைந்தும் விடாது
இடையில் என் பாடல் நின்றும் விடாது
என் இயேசுவின் அன்பும் குறைந்தும் விடாது
படகில் நான் பயணம் செய்கின்றபோதும்
என் பரமனின் பலமே எனைக் கரை சேர்க்கும்
படகில் நான் பயணம் செய்கின்றபோதும்
என் பரமனின் பலமே எனைக் கரை சேர்க்கும்
இடையில் என் பாடல் நின்றும் விடாது
என் இயேசுவின் அன்பும் குறைந்தும் விடாது

இடைவரும் துன்பம் எது வந்த போதும்
என் இயேசுவுக்காய் அதைத் தாங்கிடக் கூடும்
இடைவரும் துன்பம் எது வந்த போதும்
என் இயேசுவுக்காய் அதைத் தாங்கிடக் கூடும்
பலமுள்ள பரிசுத்த ஆவியினாலே
திடன்கொள்ள என்னை அவர் நிரப்பிடக்கூடும்
பலமுள்ள பரிசுத்த ஆவியினாலே
திடன்கொள்ள என்னை அவர் நிரப்பிடக்கூடும்

இடையில் என் பாடல் நின்றும் விடாது
என் இயேசுவின் அன்பும் குறைந்தும் விடாது

கடையவன் என்றென்னைக் கைவிட மாட்டார்
என் நடைமுறை வாழ்வுக்கு வழிதந்த மேய்ப்பன்
கடையவன் என்றென்னைக் கைவிட மாட்டார்
என் நடைமுறை வாழ்வுக்கு வழிதந்த மேய்ப்பன்
உலகுக்கு ஒளியாக உயிர்தந்த நாதன்
இவருக்கு இணையாக இனித் தெய்வம் இல்லை
உலகுக்கு ஒளியாக உயிர்தந்த நாதன்
இவருக்கு இணையாக இனித் தெய்வம் இல்லை

இடையில் என் பாடல் நின்றும் விடாது
என் இயேசுவின் அன்பும் குறைந்தும் விடாது

எத்தனை பாடலை நான்

எத்தனை பாடலை நான்….

எத்தனை பாடலை நான் பாடியபோதுமெந்தன்
கர்த்தரின் பாடலுக்கு இணையாகுமா
எத்தனை பாடலை நான் பாடியபோதுமெந்தன்
கர்த்தரின் பாடலுக்கு இணையாகுமா
சித்தம் கொண்டே என்னை சீர் செய்யும்
இயேசுவின் அன்புக்கு முன்னெதுவும் ஈடாகுமா
எத்தனை பாடலை நான் பாடியபோதுமெந்தன்
கர்த்தரின் பாடலுக்கு இணையாகுமா

நித்தியமானதொரு ஜீவியத்தைக் காட்டும்
தேவனின் பாடலுக்கே மகிமையுண்டு
நித்தியமானதொரு ஜீவியத்தைக் காட்டும்
தேவனின் பாடலுக்கே மகிமையுண்டு
அந்த சத்தியப் பாடலினைப் பாடுவதால்
சத்தியப் பாடலினைப் பாடுவதால் தினமும்  
இத்தரை மீதினிலே மகிழ்ச்சியுண்டு
எத்தனை பாடலை நான் பாடியபோதுமெந்தன்
கர்த்தரின் பாடலுக்கு இணையாகுமா

உத்தமராக எம்மை வழி நடத்தும் இயேசு
வார்த்தையில் தானே நல் ஜீவனுண்டு
உத்தமராக எம்மை வழி நடத்தும் இயேசு
வார்த்தையில் தானே நல் ஜீவனுண்டு
அந்த சத்திய நாதனின் பாட்டினிலே
சத்திய நாதனின் பாட்டினிலே நல்ல
நித்திய வாழ்வுக்கும் வழியுமுண்டு
எத்தனை பாடலை நான் பாடியபோதுமெந்தன்
கர்த்தரின் பாடலுக்கு இணையாகுமா

எத்தனை பாடலை நான் பாடியபோதுமெந்தன்
கர்த்தரின் பாடலுக்கு இணையாகுமா
எத்தனை பாடலை நான் பாடியபோதுமெந்தன்
கர்த்தரின் பாடலுக்கு இணையாகுமா
சித்தம் கொண்டே என்னை சீர் செய்யும்
இயேசுவின் அன்புக்கு முன்னெதுவும் ஈடாகுமா
எத்தனை பாடலை நான் பாடியபோதுமெந்தன்
கர்த்தரின் பாடலுக்கு இணையாகுமா

நானுந்தன் பிள்ளையென ஆனதும்

நானுந்தன் பிள்ளையென ஆனதும்
நீரெந்தன் தந்தையென ஆகினீர்
நானுந்தன் பிள்ளையென ஆனதும்
நீரெந்தன் தந்தையென ஆகினீர்
யாரெந்தன் வேதனையைப் போக்குவார்
என் இயேசுவே என் துன்பம் நீக்கினார்
யாரெந்தன் வேதனையைப் போக்குவார்
என் இயேசுவே என் துன்பம் நீக்கினார்
நானுந்தன் பிள்ளையென ஆனதும்
நீரெந்தன் தந்தையென ஆகினீர்

அப்பா பிதாவே என்று தினமும் நான் 
அழைத்தேதான் கூப்பிடுவேன்
அப்பா பிதாவே என்று தினமும் நான் 
அழைத்தேதான் கூப்பிடுவேன்
தப்பாமல் வந்து என் துதியை
நீரும் ஏற்றுக்கொள்ளும் தேவனே
தப்பாமல் வந்து என் துதியை
நீரும் ஏற்றுக்கொள்ளும் தேவனே

நானுந்தன் பிள்ளையென ஆனதும்
நீரெந்தன் தந்தையென ஆகினீர்
யாரெந்தன் வேதனையைப் போக்குவார்
யாரெந்தன் வேதனையைப் போக்குவார்
என் இயேசுவே என் துன்பம் நீக்கினார்
நானுந்தன் பிள்ளையென ஆனதும்
நீரெந்தன் தந்தையென ஆகினீர்

ஸ்தோத்திரம் சொல்லிடும் வேளையில்
என் மீட்பரே எனை வந்து தேற்றிவிடும்
நீர் தந்த தாலந்தைக் கொண்டே நானும்
நீர் தந்த தாலந்தைக் கொண்டே நானும்
பாமாலை பலநூறு பாடவேணும்
நீர் தந்த தாலந்தைக் கொண்டே நானும்
பாமாலை பலநூறு பாடவேணும்

நானுந்தன் பிள்ளையென ஆனதும்
நீரெந்தன் தந்தையென ஆகினீர்
யாரெந்தன் வேதனையைப் போக்குவார்
யாரெந்தன் வேதனையைப் போக்குவார்
என் இயேசுவே என் துன்பம் நீக்கினார்
நானுந்தன் பிள்ளையென ஆனதும்
நீரெந்தன் தந்தையென ஆகினீர்

Popular Posts

My Favorites

கர்த்தருடைய சித்தம் ஆகக்கடவது

ஏப்ரல் 12 "கர்த்தருடைய சித்தம் ஆகக்கடவது" அப். 21:14 தேவன் அன்பாகவே இருக்கிறார். அவர் வாக்கு உண்மையானால் அவர் சொன்னபடி செய்கிறவரானால், அன்போடும் நீதியோடும் இரக்கம் பரிசுத்தம் இவைகளால் அவர் நடத்துவாரானால், நமக்கு மகிமையையும், நன்மையையும்...