கர்த்தாவே என்று நான் கதறி அழுகையிலே
கர்த்தாவே என்று நான் கதறி அழுகையிலே
என் மகனே என்று நீர் எனை வந்து அணைத்துவிடும்
உம்மையே தஞ்சமென்று நினைக்கின்றேன் தினமும்
என்னையே வழிநடத்த இரங்கி நீர் வந்துவிடும்
கர்த்தாவே என்று நான் கதறி அழுகையிலே
என் மகனே என்று நீர் எனை வந்து அணைத்துவிடும்
கூட்பிட்ட குரல் கேட்டு ஓடிவந்தீர்
என்னைக் குழந்தையாய் அணைத்துமே தேற்றுகிறீர்
குற்றத்தை மன்னிக்கும் பெருந்தகையே
என் கர்த்தரே உம்மால் பிழைத்துக் கொண்டேன்
கர்த்தாவே என்று நான் கதறி அழுகையிலே
என் மகனே என்று நீர் எனை வந்து அணைத்துவிடும்
சித்தம் இரங்கியே வந்துவிட்டீர்
என் சத்தம் உம் காதில் விழுந்தனவோ
இத்தரை வாழ்வெல்லாம் மாயமன்றோ
உமது நித்திய ஜீவனே நிலைக்குமன்றோ
கர்த்தாவே என்று நான் கதறி அழுகையிலே
என் மகனே என்று நீர் எனை வந்து அணைத்துவிடும்
நித்தம் உம் வார்த்தையால் பிழைத்திருப்பேன்
உமது சித்தத்தின் நினைவுக்கே கீழ்ப்படிவேன்
எத் திசை சென்றாலும் உமதன்பை
என் இதயத்தில் ஏந்தியே எடுத்துச் செல்வேன்
கர்த்தாவே என்று நான் கதறி அழுகையிலே
என் மகனே என்று நீர் எனை வந்து அணைத்துவிடும்
உம்மையே தஞ்சமென்று நினைக்கின்றேன் தினமும்
என்னையே வழிநடத்த இரங்கி நீர் வந்துவிடும்













