Home Blog

ஸ்தோத்திரம் செய்வோம் இயேசுவுக்கு

ஸ்தோத்திரம் செய்வோம் இயேசுவுக்கு
இனி சாத்திரம் சமயம் ஏன் நமக்கு
நித்திய ஜீவனை அடைவதற்கு
நல்ல பாத்திரம் ஆகவே மனம் திரும்பு
ஸ்தோத்திரம் செய்வோம் இயேசுவுக்கு
இனி சாத்திரம் சமயம் ஏன் நமக்கு
நித்திய ஜீவனை அடைவதற்கு
நல்ல பாத்திரம் ஆகவே மனம் திரும்பு

வாழ்கின்ற வாழ்வுக்கோர் வழி இருக்கு
வாழ்கின்ற வாழ்வுக்கோர் வழி இருக்கு
அதை காட்டிடும் தெய்வம் நமக்கிருக்கு
வருத்தங்கள் வாதங்கள் நோய் நொடியை
இங்கு காத்திட கர்த்தர் துணையிருக்கு
வருத்தங்கள் வாதங்கள் நோய் நொடியை
இங்கு காத்திட கர்த்தர் துணையிருக்கு

ஸ்தோத்திரம் செய்வோம் இயேசுவுக்கு
இனி சாத்திரம் சமயம் ஏன் நமக்கு
நிலையென்று வாழ்வை நினைக்காதே
நிலையென்று வாழ்வை நினைக்காதே
நீ நிம்மதி இன்றி புலம்பாதே
சிலை என்று தேவனை நினைக்காதே
சிலை என்று தேவனை நினைக்காதே
மனம் அலைகின்ற போக்கினில் போகாதே
சிலை என்று தேவனை நினைக்காதே
மனம் அலைகின்ற போக்கினில் போகாதே

ஸ்தோத்திரம் செய்வோம் இயேசுவுக்கு
இனி சாத்திரம் சமயம் ஏன் நமக்கு
திருமறை வேதத்தை தினம் படிப்போம்
திருமறை வேதத்தை தினம் படிப்போம்
அதில் அறிவென்ற போதனை ஸ்தோத்தரிப்போம்
நால்வகை வேதமும் பொருள் கூறும்
இயேசுநாதனை வணங்கிட அருள் சேரும்
நால்வகை வேதமும் பொருள் கூறும்
இயேசுநாதனை வணங்கிட அருள் சேரும்

ஸ்தோத்திரம் செய்வோம் இயேசுவுக்கு
இனி சாத்திரம் சமயம் ஏன் நமக்கு
நித்திய ஜீவனை அடைவதற்கு
நல்ல பாத்திரம் ஆகவே மனம் திரும்பு
ஸ்தோத்திரம் செய்வோம் இயேசுவுக்கு
இனி சாத்திரம் சமயம் ஏன் நமக்கு
நித்திய ஜீவனை அடைவதற்கு
நல்ல பாத்திரம் ஆகவே மனம் திரும்பு

கண்ணிருந்தும் குருடாய் வாழ்ந்தேனே

கண்ணிருந்தும் குருடாய் வாழ்ந்தேனே
என் கர்த்தாவே கருணை செய்யும்
மண்ணிலிருந்து என்னை சிருஷ்டித்தீரே
மண்ணிலிருந்து என்னை சிருஷ்டித்தீரே மனித
பாவத்தை தோளினில் சுமந்தீரே

மன்னிக்கும் அதிகாரம் உமக்கல்லவோ
மன்னிக்கும் அதிகாரம் உமக்கல்லவோ எம்
மனக்கண்ணை திறப்பது உம் பொறுப்பல்லவோ
எம் மனக்கண்ணை திறப்பது உம் பொறுப்பல்லவோ

கண்ணிருந்தும் குருடாய் வாழ்ந்தேனே
கண்ணிருந்தும் குருடாய் வாழ்ந்தேனே
என் கர்த்தாவே கருணை செய்யும்
மண்ணிலிருந்து என்னை சிருஷ்டித்தீரே
மண்ணிலிருந்து என்னை சிருஷ்டித்தீரே மனித
பாவத்தை தோளினில் சுமந்தீரே

மன்னிக்கும் அதிகாரம் உமக்கல்லவோ
மன்னிக்கும் அதிகாரம் உமக்கல்லவோ எங்கள்
மனக்கண்ணை திறப்பது உம் பொறுப்பல்லவோ
எங்கள் மனக்கண்ணை திறப்பது உம் பொறுப்பல்லவோ
கண்ணிருந்தும் குருடாய் வாழ்ந்தோமே

எம் மனக்கதவுகளை உடைத்தெறியும் எங்கள்
உடலை எம் கோவிலாய் மாற்றிவிடும்
எம் மனக்கதவுகளை உடைத்தெறியும் எங்கள்
உடலை எம் கோவிலாய் மாற்றிவிடும்
வழியின்றி தவிக்கின்ற பாவிகள் நாம்
வழியின்றி தவிக்கின்ற பாவிகள் நாம் பாவ
இருளினில் எம்மை மீட்டு தூக்கி எடும்
பாவ இருளினில் எம்மை மீட்டு தூக்கி எடும்

கண்ணிருந்தும் குருடாய் வாழ்ந்தேனே
என் கர்த்தாவே கருணை செய்யும்

கண்ணோடு கண் நோக்கும் கன்மலையே
கண்ணோடு கண் நோக்கும் கன்மலையே எம்மை
காத்தெடுத்த கருணையில் திருவுருவே
என்றைக்கும் என்னோடு நீரிருந்தே
என்றைக்கும் என்னோடு நீரிருந்தே இயேசு
ராஜனாய் வாழ்ந்திட வேணுமைய்யா
இயேசு ராஜனாய் வாழ்ந்திட வேணுமைய்யா

ஆண்டவரே மீண்டும் ஒரு பாடல்

ஆண்டவரே மீண்டும் ஒரு பாடல் எழுத வேணும்
ஆண்டவரே மீண்டும் ஒரு பாடல் எழுத வேணும்
என்னை ஆவியினால் நீர் நிரப்பி அணைத்து மகிழ வேணும்
ஆண்டவரே மீண்டும் ஒரு பாடல் எழுத வேணும்

வேண்டுகிறேன் இயேசு உமது தரிசனத்தைத் தாரும்
வேண்டுகிறேன் இயேசு உமது தரிசனத்தைத் தாரும்
உம்மை ஆண்டவராய் எனது நெஞ்சில் துதிக்க வேணும் நாளும்
ஆண்டவராய் எனது நெஞ்சில் துதிக்க வேணும் நாளும்
ஆண்டவரே மீண்டும் ஒரு பாடல் எழுத வேணும்

மீண்டும் உமது வருகை இந்த மண்ணும் காண வேணும்
மீண்டும் உமது வருகை இந்த மண்ணும் காண வேணும்
அதை காணுகின்ற  பாக்கியமாய் நானும் வாழ வேணும்
அதை காணுகின்ற  பாக்கியமாய் நானும் வாழ வேணும்
ஆண்டவரே மீண்டும் ஒரு பாடல் எழுத வேணும்

அகிலமெங்கும் உமது நாமம் அறிந்து கொள்ள வேணும்
அகிலமெங்கும் உமது நாமம் அறிந்து கொள்ள வேணும்
எங்கள் ஆயன் என்றே உமதடியில் ஓடி வரவும் வேணும்
எங்கள் ஆயன் என்றே உமதடியில் ஓடி வரவும் வேணும்
ஆண்டவரே மீண்டும் ஒரு பாடல் எழுத வேணும்

இயேசுதானே தெய்வம் என்று தெரிந்து கொள்ளவும் வேணும்
இயேசுதானே தெய்வம் என்று தெரிந்து கொள்ளவும் வேணும்
தேவ ஆட்டுக்குட்டி என்று உமது பலியைப் போற்ற வேணும்
தேவ ஆட்டுக்குட்டி என்று உமது பலியைப் போற்ற வேணும்
ஆண்டவரே மீண்டும் ஒரு பாடல் எழுத வேணும்

தேவன் உண்டு என உலகம் தெரிந்து கொள்ளவும் வேணும்
தேவன் உண்டு என உலகம் தெரிந்து கொள்ளவும் வேணும்
அந்த தேவ அன்பை உமதடியில் கண்டு மகிழ வேணும்
அந்த தேவ அன்பை உமதடியில் கண்டு மகிழ வேணும்
ஆண்டவரே மீண்டும் ஒரு பாடல் எழுத வேணும்
என்னை ஆவியினால் நீர் நிரப்பி அணைத்து மகிழ வேண்டும்
ஆண்டவரே மீண்டும் ஒரு பாடல் எழுத வேணும்

வயலை தேடி மாமழை வந்தது

அருள் நிறைந்த மேரியிடம்
இறைத்தூதர் கபிரியேல்
ஆண்டவரின் சேதி சொன்னார்
அழகு மணி திரு வயிற்றில்
ஆண்டவரின் திருக்குமாரன்
வரப்போகும் சேதி சொன்னார்

தாயோடு தங்க மகன்
இறைவன் அருள் மிகப்பெற்ற
தன்மைகளை தான் உரைத்தார்
தலைமுறைகள் பலனூறாய்
காத்திருந்த மேசியாவின்
வருகைதனை முன்னுரைத்தார்

வயலை தேடி மாமழை வந்தது இரக்கத்தின் அடையாளம்
வானத்தில் கதிரவன் மண்ணில் மலர்ந்தது அன்பின் பிணைப்பாகும்
வயலை தேடி மாமழை வந்தது இரக்கத்தின் அடையாளம்
வானத்தில் கதிரவன் மண்ணில் மலர்ந்தது அன்பின் பிணைப்பாகும்

எல்லோரும் கொண்டாடுங்கள்
இயேசுவில் பண்பாடுங்கள்
எல்லோரும் கொண்டாடுங்கள்
இயேசுவில் பண்பாடுங்கள்

வாழ்நாள் முழுதும் வழித்துணையாகும் வள்ளல் பிறந்தாரே
வாழ்நாள் முழுதும் வழித்துணையாகும் வள்ளல் பிறந்தாரே
இங்கு நாம் மறந்தாலும் நம்மை மறவா நாயகன் அவர்தானே
இங்கு நாம் மறந்தாலும் நம்மை மறவா நாயகன் அவர்தானே
தேனாய் இனிக்கும் மீட்பை அடையும் வாழ்க்கை அவருடனே
தேனாய் இனிக்கும் மீட்பை அடையும் வாழ்க்கை அவருடனே
நம்பி திருவடி தொழுதால் உறவென மகிழ்வார் இறைவனின் திருமகனே
எங்கள் இறைமகன் திருமகனே

எல்லோரும் கொண்டாடுங்கள்
இயேசுவில் பண்பாடுங்கள்
எல்லோரும் கொண்டாடுங்கள்
இயேசுவில் பண்பாடுங்கள்

வயலை தேடி மாமழை வந்தது இரக்கத்தின் அடையாளம்
வானத்தில் கதிரவன் மண்ணில் மலர்ந்தது அன்பின் பிணைப்பாகும்
வயலை தேடி மாமழை வந்தது இரக்கத்தின் அடையாளம்
வானத்தில் கதிரவன் மண்ணில் மலர்ந்தது அன்பின் பிணைப்பாகும்

எல்லோரும் கொண்டாடுங்கள்
இயேசுவில் பண்பாடுங்கள்
எல்லோரும் கொண்டாடுங்கள்
இயேசுவில் பண்பாடுங்கள்

உள்ளமெனும் கோவிலிலே

உள்ளமெனும் கோவிலிலே உறைகின்ற தேவனே
எல்லையில்லா உமது அன்புக்கிணை இல்லையே
அழும் குழந்தைச் செல்வமதை அணைக்கின்ற அன்னையைப்போல்
அல்லலுறும் பாவியெம்மை அணைத்திட நீர் வந்திடுமே

உள்ளமெனும் கோவிலிலே உறைகின்ற தேவனே
எல்லையில்லா உமது அன்புக்கிணை இல்லையே

வள்ளலே உமது வற்றாத பெரும் அன்பில்
மனந்திரும்பும் பாவிகளை மன்னிக்கவேண்டுமே
தினமுமது மகிமையினால் மனத்திருப்பம் வேண்டும்
திசைமாறும் வேளையிலும் வழிகாட்டவேண்டும்

உள்ளமெனும் கோவிலிலே உறைகின்ற தேவனே
எல்லையில்லா உமது அன்புக்கிணை இல்லையே

இயேசுவே இரக்கத்தின் பலியினையும்
இருக்கின்ற மனித இனம் புரிந்து கொள்ளவேண்டும்
அன்பென்ற வார்த்தைக்கு அர்த்தம் நீரேயென்று
அண்ணலே அடுத்தவரும் அறிந்துகொள்ளவேணும்

உள்ளமெனும் கோவிலிலே உறைகின்ற தேவனே
எல்லையில்லா உமது அன்புக்கிணை இல்லையே

கல்வாரி இயேசுவை நோக்கி

கல்வாரி இயேசுவை நோக்கி இன்று கண்ணீருடன் ஜெபித்தேன்
கல்வாரி இயேசுவை நோக்கி இன்று கண்ணீருடன் ஜெபித்தேன்
தீராத நோய்களையும் மாற்றும் அந்த மாசில்லா ஜோதி முகம் பார்த்தேன்
தீராத நோய்களையும் மாற்றும் அந்த மாசில்லா ஜோதி முகம் பார்த்தேன்
கல்வாரி இயேசுவை நோக்கி இன்று கண்ணீருடன் ஜெபித்தேன்

மனம் திரும்பிய மகனே உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றார்
மனம் திரும்பிய மகனே உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றார்
பின்பற்றி வா எந்தன் வழியை உலகத்தின் மீட்பனும் நானே தான் என்றார்
பின்பற்றி வா எந்தன் வழியை உலகத்தின் மீட்பனும் நானே தான் என்றார்
கல்வாரி இயேசுவை நோக்கி இன்று கண்ணீருடன் ஜெபித்தேன்

ஸ்தோத்திரம் செய்வேன் சுவாமி எந்தன் சிலுவையை கொண்டு உடன் வருவேன்
ஸ்தோத்திரம் செய்வேன் சுவாமி எந்தன் சிலுவையை கொண்டு உடன் வருவேன்
நித்திய தேவனாம் உம்மை என்றும் என் இதயத்தில் துதித்து மகிழ்வேன்
நித்திய தேவனாம் உம்மை என்றும் என் இதயத்தில் துதித்து மகிழ்வேன்
கல்வாரி இயேசுவை நோக்கி இன்று கண்ணீருடன் ஜெபித்தேன்

நாமடைந்த சந்தோஷத்தை எவரும் அடைந்திட கிருபை தாரும்
நாமடைந்த சந்தோஷத்தை எவரும் அடைந்திட கிருபை தாரும்
உம்மால் தெரிந்து கொள்ளப்பட்ட ஜனமாய்
உம்மால் தெரிந்து கொள்ளப்பட்ட ஜனமாய்
என்னோடு அவரையும் சேர்த்துவிடும்

கல்வாரி இயேசுவை நோக்கி இன்று கண்ணீருடன் ஜெபித்தேன்
தீராத நோய்களையும் மாற்றும் அந்த மாசில்லா ஜோதி முகம் பார்த்தேன்
கல்வாரி இயேசுவை நோக்கி இன்று கண்ணீருடன் ஜெபித்தேன்

இனிப் பாடும் பாட்டெல்லாம்

இனிப் பாடும் பாட்டெல்லாம் இயேசுவுக்காக
இனிப் பாடும் பாட்டெல்லாம் இயேசுவுக்காக
நான் பாடிடுவேன் நாள் முழுதும் வாழ்வதற்காக
நான் எழுதும் பாட்டுக்கெல்லாம் பொருளாய் வருவார்
நான் எழுதும் பாட்டுக்கெல்லாம் பொருளாய் வருவார்
நம்மை இசை தந்து அருள்காட்டும் அன்புக்காகவே
இனிப் பாடும் பாட்டெல்லாம் இயேசுவுக்காக

வழிகாட்டும் தெய்வம் என்று வணங்கிடுவோமே
இவர் மகிமை சொல்லி நாளெல்லாம் ஸ்தோத்தரிப்போமே
வழிகாட்டும் தெய்வம் என்று வணங்கிடுவோமே
இவர் மகிமை சொல்லி நாளெல்லாம் ஸ்தோத்தரிப்போமே
கதியற்று கலங்கி நாங்கள் கதறியவேளை
கதியற்று கலங்கி நாங்கள் கதறியவேளை
இரு கரம் நீட்டி அன்போடு அடைக்கலம் தந்தார்
இரு கரம் நீட்டி அன்போடு அடைக்கலம் தந்தார்
இனிப் பாடும் பாட்டெல்லாம் இயேசுவுக்காக

கண்ணீரோடும் கவலையோடும் கலங்கிய நேரம்
நம்மைத் தண்ணீருள்ள அண்டையிலே கொண்டுசெல்லுவார்
கண்ணீரோடும் கவலையோடும் கலங்கிய நேரம்
நம்மைத் தண்ணீருள்ள அண்டையிலே கொண்டுசெல்லுவார்
கண்மூடித்தனமாய் நாம் நடந்திட்டபோதும்
கண்மூடித்தனமாய் நாம் நடந்திட்டபோதும்
கையில் தடி கொண்டு வழிகாட்டும் ஆயனாகினார்
இனிப் பாடும் பாட்டெல்லாம் இயேசுவுக்காக

பொன் தேடி பொருள் தேடி புதைத்திடவேண்டாம்
தேவன் அருள்தேடி வகைதேடும் மார்க்கம் காணுவோம்
பொன் தேடி பொருள் தேடி புதைத்திடவேண்டாம்
தேவன் அருள்தேடி வகைதேடும் மார்க்கம் காணுவோம்
கண்மூடி இவர் நாமம் பாடுவதாலே
கண்மூடி இவர் நாமம் பாடுவதாலே
மாய சிறை நீங்கி சித்தமெல்லாம் சுத்தமாகுமே

இனிப் பாடும் பாட்டெல்லாம் இயேசுவுக்காக
நான் பாடிடுவேன் நாள் முழுதும் வாழ்வதற்காக
நான் எழுதும் பாட்டுக்கெல்லாம் பொருளாய் வருவார்
நான் எழுதும் பாட்டுக்கெல்லாம் பொருளாய் வருவார்
நம்மை இசை தந்து அருள்காட்டும் அன்புக்காகவே
இனிப் பாடும் பாட்டெல்லாம் இயேசுவுக்காக

 

எங்கள் பாதைக்கு வெளிச்சம் ஐயா

எங்கள் பாதைக்கு வெளிச்சம் ஐயா
உமது ஜீவனுள்ள வார்த்தை
எங்கள் பாதைக்கு வெளிச்சம்
ஐயா உமது ஜீவனுள்ள வார்த்தை
வார்த்தையில் மாமிசமாய் எம்மை வந்து
காத்திட்ட இயேசு நாதா
வார்த்தையில் மாமிசமாய் எம்மை வந்து
காத்திட்ட இயேசு நாதா
பாவி என் பயணத்திலே
நல்ல ஒரு வழித்துணையாக வாரும்
பாவி என் பயணத்திலே
நல்ல ஒரு வழித்துணையாக வாரும்
எங்கள் பாதைக்கு வெளிச்சம் ஐயா
உமது ஜீவனுள்ள வார்த்தை

பாவிக்காய் பூமியிலே
அவதாரமே எடுத்து வந்தீர்
பாவிக்காய் பூமியிலே
அவதாரமே எடுத்து வந்தீர்
உலகின் ஜோதி என
உயிர்த்தெழுந்த தெய்வம் ஐயா
உலகின் ஜோதி என
உயிர்த்தெழுந்த தெய்வம் ஐயா
இயேசுவே மனதிரங்கி
எங்கள் நெஞ்சத்தை தூய்மை செய்யும்
இயேசுவே மனதிரங்கி
எங்கள் நெஞ்சத்தை தூய்மை செய்யும்

எங்கள் பாதைக்கு வெளிச்சம் ஐயா
உமது ஜீவனுள்ள வார்த்தை
எங்கள் பாதைக்கு வெளிச்சம்
ஐயா உமது ஜீவனுள்ள வார்த்தை
வார்த்தையில் மாமிசமாய் எம்மை வந்து
காத்திட்ட இயேசு நாதா
வார்த்தையில் மாமிசமாய் எம்மை வந்து
காத்திட்ட இயேசு நாதா
பாவி என் பயணத்திலே
நல்ல ஒரு வழித்துணையாக வாரும்
பாவி என் பயணத்திலே
நல்ல ஒரு வழித்துணையாக வாரும்
எங்கள் பாதைக்கு வெளிச்சம் ஐயா
உமது ஜீவனுள்ள வார்த்தை

ஆவியில் உறவாடி
எம்மை ஆதரித்தே நில்லும்
ஆவியில் உறவாடி
எம்மை ஆதரித்தே நில்லும்
ஆண்டவர் உம்மைவிட்டால்
அடைக்கலம் தருபவர் யார்
ஆண்டவர் உம்மைவிட்டால் எமக்கு
அடைக்கலம் தருபவர் யார்
தேவனே உம்மை அழைத்தால்
வந்து தேற்றியே அணைத்துக்கொள்ளும்
தேவனே உம்மை அழைத்தால்
வந்து தேற்றியே அணைத்துக்கொள்ளும்

எங்கள் பாதைக்கு வெளிச்சம் ஐயா
உமது ஜீவனுள்ள வார்த்தை
எங்கள் பாதைக்கு வெளிச்சம்
ஐயா உமது ஜீவனுள்ள வார்த்தை
வார்த்தையில் மாமிசமாய் எம்மை வந்து
காத்திட்ட இயேசு நாதா
வார்த்தையில் மாமிசமாய் எம்மை வந்து
காத்திட்ட இயேசு நாதா
பாவி என் பயணத்திலே
நல்ல ஒரு வழித்துணையாக வாரும்
பாவி என் பயணத்திலே
நல்ல ஒரு வழித்துணையாக வாரும்
எங்கள் பாதைக்கு வெளிச்சம் ஐயா
உமது ஜீவனுள்ள வார்த்தை

என் இயேசு நாதனுக்காய்

என் இயேசு நாதனுக்காய்
இனி நான் பாடுவேன்
என் இயேசு நாதனுக்காய்
இனி நான் பாடுவேன்
வாழ்வில் எல்லை இல்லா மகிழ்ச்சியுடன்
நான் ஆடுவேன் நான் ஆடுவேன்
என் இயேசு நாதனுக்காய்
இனி நான் பாடுவேன்

பின் தேடும் மாந்தருக்கு
அவர் விளக்காய் வந்தவர்
மனு குலம் வாழ அவதார
இறையும் ஆனவர்
மனு குலம் வாழ அவதார
இறையும் ஆனவர்
குறையாத தெய்வ அன்பில்
நிறைவானவர் இயேசு
எங்கள் மனக்கோயில் இருப்பிடத்தில்
நிலையும் ஆனவர் நிலையும் ஆனவர்
எங்கள் மனக்கோயில் இருப்பிடத்தில்
நிலையும் ஆனவர் நிலையும் ஆனவர்

என் இயேசு நாதனுக்காய்
இனி நான் பாடுவேன்

கண்பாடும் காதலுக்கு
அவர் உருவாயானவர்
சின்ன பாலகரின் உள்ளத்தையே
விரும்புகின்றவர்
சின்ன பாலகரின் இதயத்தையே
விரும்புகின்றவர்
தன் நலத்தை கண்டுமே
மனம் சகிக்காதவர் இயேசு
தன் நலத்தை கண்டுமே
மனம் சகிக்காதவர் இயேசு
இந்த மண்ணுலகம் கண்ட மனித
தெய்வம் ஆனவர்
இந்த மண்ணுலகம் கண்ட தெய்வம்
மனிதன் ஆனவர்

என் இயேசு நாதனுக்காய்
இனி நான் பாடுவேன்

முன்னோரின் வேதத்துக்கே
அவர் முதலாய் ஆனவர்
உலக முடிவினிலே
அவதாரம் செய்கின்றவர்
உலக முடிவினிலே
அவதாரம் செய்கின்றவர்
ஆதியிலே வார்த்தையோடு
மூலம் ஆனவர்
ஆதியிலே வார்த்தையோடு
மூலம் ஆனவர்
எங்கள் ஆண்டவராய் இயேசு அவர்
நெஞ்சில் வாழ்பவர்
எங்கள் ஆண்டவராய் இயேசு அவர்
நெஞ்சில் வாழ்பவர்

என் இயேசு நாதனுக்காய்
இனி நான் பாடுவேன்
என் இயேசு நாதனுக்காய்
இனி நான் பாடுவேன்
வாழ்வில் எல்லை இல்லா மகிழ்ச்சியுடன்
நான் ஆடுவேன் நான் ஆடுவேன்
என் இயேசு நாதனுக்காய்
இனி நான் பாடுவேன்

கல்லும் மலையுமே கடந்து

கல்லும் மலையுமே கடந்து சென்றே நான்
கடவுளைத் தேடுகையில் – ஒரு
முள் முடி சுமந்தே முதுகில் சிலுவைகொண்டு
இயேசு என்னை அழைத்தார் – அன்பின்
இயேசு என்னை அழைத்தார்

அல்லும் பகலுமே அலைந்து திரிந்து நான்
ஆலயம் போகையிலே – அந்த
அன்புத் தெய்வம் எந்தன் ….
தோளில் சுமந்து வந்தார்
அவர்தம் தோளினிலே சுமந்து வந்தார்

கல்லும் மலையுமே கடந்து சென்றே நான்
கடவுளைத் தேடுகையில் – ஒரு
முள் முடி சுமந்தே முதுகில் சிலுவைகொண்டு
இயேசு என்னை அழைத்தார் – அன்பின்
இயேசு என்னை அழைத்தார்

செல்லும் பாதை எது எனக்கு இனி என்று நான்
திரிந்திட்ட போதினிலே – ஒ
நில்லு மகனே என்று நேர்வழி காட்டிட
மேய்ப்பனாய் ஓடி வந்தார் – நல்ல
மேய்ப்பனாய் ஓடி வந்தார்

கல்லும் மலையுமே கடந்து சென்றே நான்
கடவுளைத் தேடுகையில் – ஒரு
முள் முடி சுமந்தே முதுகில் சிலுவைகொண்டு
இயேசு என்னை அழைத்தார் – அன்பின்
இயேசு என்னை அழைத்தார்

அன்பு கொண்டு உன்னை அணைக்கத் துடிக்கிறேன்
என்னை நீ மறவாதே என்று
ஆறுதல் கூறியே ஆண்டவர் இயேசு என்
அருகினில் ஓடி வந்தார்

கல்லும் மலையுமே கடந்து சென்றே நான்
கடவுளைத் தேடுகையில் – ஒரு
முள் முடி சுமந்தே முதுகில் சிலுவைகொண்டு
இயேசு என்னை அழைத்தார் – அன்பின்
இயேசு என்னை அழைத்தார்

Popular Posts

My Favorites

வார்த்தையினால் பிழைப்பேன்

https://youtu.be/jEA6jlIVOoA?si=2ObHJp4ypX6B1dUy வார்த்தையினால் பிழைப்பேன் – உமதுவார்த்தையினால் பிழைப்பேன் – இயேசுவேவார்த்தையினால் பிழைப்பேன் ஆண்டவரே உமதருள் மொழி கூறிடும்வேதத்தை நான் படிப்பேன் – அதில்நீர் தரும் வாக்கினை வாஞ்சித்து மனதில்மகிழ்ந்து களி கூறுவேன்ஆண்டவரே உமதருள் மொழி கூறிடும்வேதத்தை...

மீட்பு