Home Blog

அன்பே உமக்காக நான் பாடுவேன்

அன்பே உமக்காக நான் பாடுவேன்
இந்த அவனியில் உம்மோடு நான் வாழுவேன்
அன்பே உமக்காக நான் பாடுவேன்
இந்த அவனியில் உம்மோடு நான் வாழுவேன்
முன்பே எனக்காக நீர் பொழிந்த
அந்த அன்பை அனைவருடன் பரிமாறுவேன்
முன்பே எனக்காக நீர் பொழிந்த
அந்த அன்பை அனைவருடன் பரிமாறுவேன்
அன்பே உமக்காக நான் பாடுவேன்
இந்த அவனியில் உம்மோடு நான் வாழுவேன்

கண்ணே எமக்காய் நீர் சிலுவையிலே
உம்மை ஒப்புக் கொடுத்த உயர் தெய்வமன்றோ
கண்ணே எமக்காய் நீர் சிலுவையிலே
உம்மை ஒப்புக் கொடுத்த உயர் தெய்வமன்றோ
பண்பே இல்லாத பாவியர்க்காய்
பண்பே இல்லாத பாவியர்க்காய்
நீர் பாரில் அவதரித்த இயேசுவல்லோ
நீர் பாரில் அவதரித்த இயேசுவல்லோ

அன்பே உமக்காக நான் பாடுவேன்
இந்த அவனியில் உம்மோடு நான் வாழுவேன்
அன்பே உமக்காக நான் பாடுவேன்
இந்த அவனியில் உம்மோடு நான் வாழுவேன்

மண்ணே உமதன்பை புரிந்திடவே
நீர் மனித அவதாரம் எடுத்தீரன்றோ
இந்த மண்ணே உமதன்பை புரிந்திடவே
நீர் மனித அவதாரம் எடுத்தீரன்றோ
என்னே உமதன்பு இயேசு நாதா
என்னே உமதன்பு இயேசு நாதா
இறைவா உமதன்பின் அடிமை நானே
என் இறைவா உமதன்பின் அடிமை நானே

அன்பே உமக்காக நான் பாடுவேன்
இந்த அவனியில் உம்மோடு நான் வாழுவேன்
அன்பே உமக்காக நான் பாடுவேன்
இந்த அவனியில் உம்மோடு நான் வாழுவேன்

முன்னே நீர் சென்ற அடிச்சுவட்டில்
உம்மை பின்னோக்கி வருகிறோம் இயேசு நாதா
முன்னே நீர் சென்ற அடிச்சுவட்டில்
உம்மை பின்னோக்கி வருகிறோம் இயேசு நாதா
பொன்னான போதனையை ஏற்றுக்கொண்டே
உம் பொன்னான போதனையை ஏற்றுக்கொண்டே
புது வாழ்வில் நடைபோட்டு வருகின்றோமே
புது வாழ்வில் நடைபோட்டு வருகின்றோமே

அன்பே உமக்காக நான் பாடுவேன்
இந்த அவனியில் உம்மோடு நான் வாழுவேன்
அன்பே உமக்காக நான் பாடுவேன்
இந்த அவனியில் உம்மோடு நான் வாழுவேன்

இயேசுவின் அன்பை விட்டு நம்மைப்

இயேசுவின் அன்பை விட்டு நம்மைப்
பிரிப்பவன் யாரும் இல்லை
மரணமானாலும் ஜீவனானாலும் தேவதூதர்களானாலும்
அதிகாரங்கள் ஆனாலும்
இயேசுவின் அன்பை விட்டு நம்மைப்
பிரிப்பவன் யாரும் இல்லை

பொய்யென்ற உலகத்தில் மெய் ஞான ஒளி வந்து
உந்தனைக் கரை சேர்க்குமே
பொய்யென்ற உலகத்தில் மெய் ஞான ஒளி வந்து
உந்தனைக் கரை சேர்க்குமே
கடுகளவு விசுவாசம் உன் மனதில் வந்திட்டால்
கர்த்தரின் அன்பு சேருமே
கடுகளவு விசுவாசம் உன் மனதில் வந்திட்டால்
கர்த்தரின் அன்பு சேருமே

இயேசுவின் அன்பை விட்டு நம்மைப்
பிரிப்பவன் யாரும் இல்லை

தன் மந்தையில் உந்தனைச் சேர்த்திட
என் கர்த்தர் ஆவலாய் இருக்கின்றாரே
தன் மந்தையில் உந்தனைச் சேர்த்திட
என் கர்த்தர் ஆவலாய் இருக்கின்றாரே
மெய்யாகவே உனக்கு சொல்லுகிறேன் என்று
வாக்குத்தத்தங்கள் தந்தாரே
மெய்யாகவே உனக்கு சொல்லுகிறேன் என்று
வாக்குத்தத்தங்கள் தந்தாரே

இயேசுவின் அன்பை விட்டு நம்மைப்
பிரிப்பவன் யாரும் இல்லை

நானே வழியும் சத்தியமும் என்றெம்மை
தான் வந்து வழி காட்டினாரே
நானே வழியும் சத்தியமும் என்று
தான் வந்து வழி காட்டினாரே
வீணே உன் வாழ்வை சீர்செய்து கொள்ளாது
ஏன் நொந்து மனம் வேகிறாய்
வீணே உன் வாழ்வை சீர்செய்து கொள்ளாது
ஏன் நொந்து மனம் வேகிறாய்

இயேசுவின் அன்பை விட்டு நம்மைப்
பிரிப்பவன் யாரும் இல்லை
மரணமானாலும் ஜீவனானாலும் தேவதூதர்களானாலும்
அதிகாரங்கள் ஆனாலும்
இயேசுவின் அன்பை விட்டு நம்மைப்
பிரிப்பவன் யாரும் இல்லை

என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி

என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி
என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி
அவர் செய்த உபகாரங்களை
அவர் செய்த உபகாரங்களை
உன் நெஞ்சில் மறவாதே
என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி

அவர் நல்லவர் அவர் வல்லவர்
அவர் நல்லவர் அவர் வல்லவர்
அவர் கிருபை என்றுமே உள்ளதென்று
அவர் கிருபை என்றுமே உள்ளதென்று

என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி
அவர் செய்த உபகாரங்களை
அவர் செய்த உபகாரங்களை
உன் நெஞ்சில் மறவாதே
என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி

என் முழு உள்ளமே இயேசுவின்
நாமத்தை ஸ்தோத்தரி
என் முழு உள்ளமே இயேசுவின்
நாமத்தை ஸ்தோத்தரி
உன் முடிவு பரியந்தம் அவர்
வழியில் போய்த் திரி
உன் முடிவு பரியந்தம் அவர்
வழியில் போய்த் திரி

என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி
அவர் செய்த உபகாரங்களை
அவர் செய்த உபகாரங்களை
உன் நெஞ்சில் மறவாதே
என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி
என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி

இறைவா என்னைத் தெரிந்து

இறைவா என்னைத் தெரிந்து
கொண்டதும் ஏனோ – உமது
அன்பைக் குறித்து பாடல் எழுதி
மகிமைப் படுத்த தானோ
இறைவா என்னைத் தெரிந்து
கொண்டதும் ஏனோ…

திசை மாறிய பறவை போல – நான்
அலைந்து திரிந்த போது
திசை மாறிய பறவை போல – நான்
அலைந்து திரிந்த போது
வழி நானே என்று வந்து
ஒளியைத் தந்த தேவா – எந்தன் இயேசுவே
வழி நானே என்று வந்து
ஒளியைத் தந்த தேவா – எந்தன் இயேசுவே

இறைவா என்னைத் தெரிந்து
கொண்டதும் ஏனோ

அலைபாயும் உமதன்பை நான்
அறிந்திடாத போது – அன்பு
அலைபாயும் உமதன்பை நான்
அறிந்திடாத போது – அன்பு
வலை போட்டு என்னைப் பிடித்து
வழிகாட்டிய தேவா – எந்தன் இயேசு
வலை போட்டு என்னைப் பிடித்து
வழிகாட்டிய தேவா – எந்தன் இயேசு

இறைவா என்னைத் தெரிந்து
கொண்டதும் ஏனோ – உமது
அன்பைக் குறித்து பாடல் எழுதி
மகிமைப் படுத்த தானோ
இறைவா என்னைத் தெரிந்து
கொண்டதும் ஏனோ…

கர்த்தாவே என்று நான் கதறி அழுகையிலே

கர்த்தாவே என்று நான் கதறி அழுகையிலே
என் மகனே என்று நீர் எனை வந்து அணைத்துவிடும்
உம்மையே தஞ்சமென்று நினைக்கின்றேன் தினமும்
என்னையே வழிநடத்த இரங்கி நீர் வந்துவிடும்
கர்த்தாவே என்று நான் கதறி அழுகையிலே
என் மகனே என்று நீர் எனை வந்து அணைத்துவிடும்

கூட்பிட்ட குரல் கேட்டு ஓடிவந்தீர்
என்னைக் குழந்தையாய் அணைத்துமே தேற்றுகிறீர்
குற்றத்தை மன்னிக்கும் பெருந்தகையே
என் கர்த்தரே உம்மால் பிழைத்துக் கொண்டேன்
கர்த்தாவே என்று நான் கதறி அழுகையிலே
என் மகனே என்று நீர் எனை வந்து அணைத்துவிடும்

சித்தம் இரங்கியே வந்துவிட்டீர்
என் சத்தம் உம் காதில் விழுந்தனவோ
இத்தரை வாழ்வெல்லாம் மாயமன்றோ
உமது நித்திய ஜீவனே நிலைக்குமன்றோ
கர்த்தாவே என்று நான் கதறி அழுகையிலே
என் மகனே என்று நீர் எனை வந்து அணைத்துவிடும்

நித்தம் உம் வார்த்தையால் பிழைத்திருப்பேன்
உமது சித்தத்தின் நினைவுக்கே கீழ்ப்படிவேன்
எத் திசை சென்றாலும் உமதன்பை
என் இதயத்தில் ஏந்தியே எடுத்துச் செல்வேன்

கர்த்தாவே என்று நான் கதறி அழுகையிலே
என் மகனே என்று நீர் எனை வந்து அணைத்துவிடும்
உம்மையே தஞ்சமென்று நினைக்கின்றேன் தினமும்
என்னையே வழிநடத்த இரங்கி நீர் வந்துவிடும்

இராஜாதி இராஜா மண்மீது வந்து

இராஜாதி இராஜா மண்மீது வந்து
நம்மீது அன்பு கொண்டநாள்
இராஜாதி இராஜா மண்மீது வந்து
நம்மீது அன்பு கொண்டநாள்
தேவாதி தேவன் வார்த்தையில் வடிவாய்
வந்தே மண் உதித்த நன்நாள்
தேவாதி தேவன் வார்த்தையில் வடிவாய்
வந்தே மண் உதித்த நன்நாள்

அல்லேலூயா ஸ்தோத்ரம்
ஆண்டவரே ஸ்தோத்ரம்
அல்லேலூயா ஸ்தோத்ரம்
ஆண்டவரே ஸ்தோத்ரம்

நம் இயேசு ராஜன் எம்மீதுகொண்ட
அன்பின் கோலமிதே
நம் இயேசு ராஜன் எம்மீதுகொண்ட
அன்பின் கோலமிதே
விண்மீது தேவதூதர்கள் வந்தே
வாழ்த்திய நேரமிதே
விண்மீது தேவதூதர்கள் வந்தே
வாழ்த்திய நேரமிதே

அல்லேலூயா ஸ்தோத்ரம்
ஆண்டவரே ஸ்தோத்ரம்
அல்லேலூயா ஸ்தோத்ரம்
ஆண்டவரே ஸ்தோத்ரம்

தாவீதின் ஊரில் தேவாதி தேவன்
பிறந்த நன்நாளிதுவே
தாவீதின் ஊரில் தேவாதி தேவன்
பிறந்த நன்நாளிதுவே
மண்மீது மகிமையின் நற்செய்தி கேட்டே
களிக்கின்ற நேரமிதே
மண்மீது மகிமையின் நற்செய்தி கேட்டே
களிக்கின்ற நேரமிதே

அல்லேலூயா ஸ்தோத்ரம்
ஆண்டவரே ஸ்தோத்ரம்
அல்லேலூயா ஸ்தோத்ரம்
ஆண்டவரே ஸ்தோத்ரம்

சத்தியமும் வழியும் ஜீவனும் தருகின்ற

சத்தியமும் வழியும் ஜீவனும் தருகின்ற
தேவனே நமஸ்காரம்
சத்தியமும் வழியும் ஜீவனும் தருகின்ற
தேவனே நமஸ்காரம்
உத்தமராக நம்மை வழிநடத்தும்
நல்ல இயேசுவே நமஸ்காரம்
உத்தமராக நம்மை வழிநடத்தும்
நல்ல இயேசுவே நமஸ்காரம்

மனுமகன் அவதாரம் எடுத்து வந்தே உலகை
காத்தவரே நமஸ்காரம்
மனுமகன் அவதாரம் எடுத்து வந்தே உலகை
காத்தவரே நமஸ்காரம்
மனுமக்கள் துயர்களைய மாடிடைக் குடியில் வந்து
பிறந்தவரே நமஸ்காரம்
மனுமக்கள் துயர்களைய மாடிடைக் குடியில் வந்து
பிறந்தவரே நமஸ்காரம்

சத்தியமும் வழியும் ஜீவனும் தருகின்ற
தேவனே நமஸ்காரம்
சத்தியமும் வழியும் ஜீவனும் தருகின்ற
தேவனே நமஸ்காரம்

கர்பத்திலே நம்மை தெரிந்துகொண்டே
கருணை செய்தவரே நமஸ்காரம்
கர்பத்திலே நம்மை தெரிந்துகொண்டே
கருணை செய்தவரே நமஸ்காரம்
வெட்கத்தினாலே நாம் தலை குனியாவண்ணம்
மீட்டவரே நமஸ்காரம்
வெட்கத்தினாலே நாம் தலை குனியாவண்ணம்
மீட்டவரே நமஸ்காரம்

சத்தியமும் வழியும் ஜீவனும் தருகின்ற
தேவனே நமஸ்காரம்
சத்தியமும் வழியும் ஜீவனும் தருகின்ற
தேவனே நமஸ்காரம்

சிலுவை மரணத்தினால் தூய இரத்தம் சிந்தி
காத்தவரே நமஸ்காரம்
சிலுவை மரணத்தினால் தூய இரத்தம் சிந்தி
காத்தவரே நமஸ்காரம்
பரிசுத்தஆவி தந்து பாதுகாத்தே வழி
நடத்துகிறீர் நமஸ்காரம்
பரிசுத்தஆவி தந்து பாதுகாத்தே வழி
நடத்துகிறீர் நமஸ்காரம்

சத்தியமும் வழியும் ஜீவனும் தருகின்ற
தேவனே நமஸ்காரம்
சத்தியமும் வழியும் ஜீவனும் தருகின்ற
தேவனே நமஸ்காரம்

செந்நீர் சிந்திடும் சிலுவை முன்னே

செந்நீர் சிந்திடும் சிலுவை முன்னே
வந்து கண்ணீரைக் காணிக்கையாக்கிடுவேன்
மன்னிப்புத் தந்திடும் என் தேவனே
உம் மந்தையில் சேர்த்திடும் என் இயேசுவே

பாவத்தை உணர்த்திய பரிசுத்தரே-என்
பாரத்தை உம்மிடம் தந்துவிட்டேன்
ஞானத்தைத் தந்தென்னை ஆண்டுகொள்ள
என் நாதனே உம்மிடம் வந்துவிட்டேன்

செந்நீர் சிந்திடும் சிலுவை முன்னே
வந்து கண்ணீரைக் காணிக்கையாக்கிடுவேன்
மன்னிப்புத் தந்திடும் என் தேவனே
உம் மந்தையில் சேர்த்திடும் என் இயேசுவே

ஆதியில் வார்த்தையாய் ஆகி வந்து
எம்மை ஆட்கொண்ட தேவனும் நீரல்லவோ
நீதியின் பாதையில் எமை நடத்தி தினம்
காத்திடும் மேய்ப்பனும் நீரல்லவோ

செந்நீர் சிந்திடும் சிலுவை முன்னே
வந்து கண்ணீரைக் காணிக்கையாக்கிடுவேன்
மன்னிப்புத் தந்திடும் என் தேவனே
உம் மந்தையில் சேர்த்திடும் என் இயேசுவே

வாழவைக்கும் வார்த்தை எங்கே

வாழவைக்கும் வார்த்தை எங்கே
என்றே தேடினேன் – எனக்கு
வாழ்வளிக்க இயேசுவைத் தான் தேடி ஓடினேன்
காலமெல்லாம் என்னைக் காக்கும் கவசமானதே
வார்த்தையென் கால்களுக்கு வெளிச்சமாகி
வழியைக் காட்டுதே – நல்ல
வழியைக் காட்டுதே

வாழவைக்கும் வார்த்தை எங்கே
என்றே தேடினேன் – எனக்கு
வாழ்வளிக்க இயேசுவைத் தான் தேடி ஓடினேன்

நீதியுள்ள பாதைதனை வேதம் காட்டுதே – நமக்கு
நேர்மையான காரியத்தை நினைவு மூட்டுதே
ஆதியிலே வார்த்தையாக தேவன் வந்தாரே
நமக்கு ஆண்டவர் நான் என்று சொல்லி
அறிவைத் தந்தாரே – நல்ல
அறிவைத் தந்தாரே

வாழவைக்கும் வார்த்தை எங்கே
என்றே தேடினேன் – எனக்கு
வாழ்வளிக்க இயேசுவைத் தான் தேடி ஓடினேன்

தேவன் ஒன்றே என உலகம் தெரிந்து கொள்ளட்டுமே
நம்மைத் தேடிவரும் தெய்வம் இயேசு என உணரட்டுமே
நம் பாடுகளை அனுபவித்த பரமபிதாவின்
ஜீவ வார்த்தைக்குத்தான் மதிப்பளித்து
கீழ்ப்படியட்டுமே – உலகம்
கீழ்ப்படியட்டுமே

வாழவைக்கும் வார்த்தை எங்கே
என்றே தேடினேன் – எனக்கு
வாழ்வளிக்க இயேசுவைத் தான் தேடி ஓடினேன்

வார்த்தையினால் பிழைப்பேன்

வார்த்தையினால் பிழைப்பேன் – உமது
வார்த்தையினால் பிழைப்பேன் – இயேசுவே
வார்த்தையினால் பிழைப்பேன்

ஆண்டவரே உமதருள் மொழி கூறிடும்
வேதத்தை நான் படிப்பேன் – அதில்
நீர் தரும் வாக்கினை வாஞ்சித்து மனதில்
மகிழ்ந்து களி கூறுவேன்
ஆண்டவரே உமதருள் மொழி கூறிடும்
வேதத்தை நான் படிப்பேன் – அதில்
நீர் தரும் வாக்கினை வாஞ்சித்து மனதில்
மகிழ்ந்து களி கூறுவேன்

வார்த்தையினால் பிழைப்பேன் – உமது
வார்த்தையினால் பிழைப்பேன் – இயேசுவே
வார்த்தையினால் பிழைப்பேன்

நொறுங்குண்ட இதயத்தின் காயத்தை ஆற்றிடும்
தேவா உன் வார்த்தையன்றோ
இருபுறம் கருக்குள்ள பட்டயம் போலது
பாவத்தை அறுக்குமன்றோ – இயேசுவே
நொறுங்குண்ட இதயத்தின் காயத்தை ஆற்றிடும்
தேவா உன் வார்த்தையன்றோ
இருபுறம் கருக்குள்ள பட்டயம் போலது
பாவத்தை அறுக்குமன்றோ – இயேசுவே

வார்த்தையினால் பிழைப்பேன் – உமது
வார்த்தையினால் பிழைப்பேன் – இயேசுவே
வார்த்தையினால் பிழைப்பேன்

வார்த்தையின் வடிவாய் வாழ்வுக்குத்
துணையாய் வந்தவர் நீரல்லவோ
எம்மை வாழ்விக்கும் தேவா
இயேசுவே உமது நாமத்தை நாம் துதிப்போம்
வார்த்தையின் வடிவாய் வாழ்வுக்குத்
துணையாய் வந்தவர் நீரல்லவோ
எம்மை வாழ்விக்கும் தேவா
இயேசுவே உமது நாமத்தை நாம் துதிப்போம்

வார்த்தையினால் பிழைப்பேன் – உமது
வார்த்தையினால் பிழைப்பேன் – இயேசுவே
வார்த்தையினால் பிழைப்பேன்

Popular Posts

My Favorites

ஆண்டவர் இயேசு வருகின்றார்

https://youtu.be/saIa9Gc7S0M?si=SzFLfZP9FdEgL-sv ஆண்டவர்  இயேசு வருகின்றார்தன் அண்டையில் உன்னையும் அழைக்கின்றார்வேண்டிடும் வரங்களைத் தருகின்றார்மன வேதனைச் சுமைகளை குறைக்கின்றார்ஆண்டவர்  இயேசு வருகின்றார்தன் அண்டையில் உன்னையும் அழைக்கின்றார்வேண்டிடும் வரங்களைத் தருகின்றார்மன வேதனைச் சுமைகளை குறைக்கின்றார் பாவத்தின் இருளைப் போக்கியவர்பாரச் சிலுவையைத்...