Home Blog

சத்தியமும் வழியும் ஜீவனும் தருகின்ற

சத்தியமும் வழியும் ஜீவனும் தருகின்ற
தேவனே நமஸ்காரம்
சத்தியமும் வழியும் ஜீவனும் தருகின்ற
தேவனே நமஸ்காரம்
உத்தமராக நம்மை வழிநடத்தும்
நல்ல இயேசுவே நமஸ்காரம்
உத்தமராக நம்மை வழிநடத்தும்
நல்ல இயேசுவே நமஸ்காரம்

மனுமகன் அவதாரம் எடுத்து வந்தே உலகை
காத்தவரே நமஸ்காரம்
மனுமகன் அவதாரம் எடுத்து வந்தே உலகை
காத்தவரே நமஸ்காரம்
மனுமக்கள் துயர்களைய மாடிடைக் குடியில் வந்து
பிறந்தவரே நமஸ்காரம்
மனுமக்கள் துயர்களைய மாடிடைக் குடியில் வந்து
பிறந்தவரே நமஸ்காரம்

சத்தியமும் வழியும் ஜீவனும் தருகின்ற
தேவனே நமஸ்காரம்
சத்தியமும் வழியும் ஜீவனும் தருகின்ற
தேவனே நமஸ்காரம்

கர்பத்திலே நம்மை தெரிந்துகொண்டே
கருணை செய்தவரே நமஸ்காரம்
கர்பத்திலே நம்மை தெரிந்துகொண்டே
கருணை செய்தவரே நமஸ்காரம்
வெட்கத்தினாலே நாம் தலை குனியாவண்ணம்
மீட்டவரே நமஸ்காரம்
வெட்கத்தினாலே நாம் தலை குனியாவண்ணம்
மீட்டவரே நமஸ்காரம்

சத்தியமும் வழியும் ஜீவனும் தருகின்ற
தேவனே நமஸ்காரம்
சத்தியமும் வழியும் ஜீவனும் தருகின்ற
தேவனே நமஸ்காரம்

சிலுவை மரணத்தினால் தூய இரத்தம் சிந்தி
காத்தவரே நமஸ்காரம்
சிலுவை மரணத்தினால் தூய இரத்தம் சிந்தி
காத்தவரே நமஸ்காரம்
பரிசுத்தஆவி தந்து பாதுகாத்தே வழி
நடத்துகிறீர் நமஸ்காரம்
பரிசுத்தஆவி தந்து பாதுகாத்தே வழி
நடத்துகிறீர் நமஸ்காரம்

சத்தியமும் வழியும் ஜீவனும் தருகின்ற
தேவனே நமஸ்காரம்
சத்தியமும் வழியும் ஜீவனும் தருகின்ற
தேவனே நமஸ்காரம்

செந்நீர் சிந்திடும் சிலுவை முன்னே

செந்நீர் சிந்திடும் சிலுவை முன்னே
வந்து கண்ணீரைக் காணிக்கையாக்கிடுவேன்
மன்னிப்புத் தந்திடும் என் தேவனே
உம் மந்தையில் சேர்த்திடும் என் இயேசுவே

பாவத்தை உணர்த்திய பரிசுத்தரே-என்
பாரத்தை உம்மிடம் தந்துவிட்டேன்
ஞானத்தைத் தந்தென்னை ஆண்டுகொள்ள
என் நாதனே உம்மிடம் வந்துவிட்டேன்

செந்நீர் சிந்திடும் சிலுவை முன்னே
வந்து கண்ணீரைக் காணிக்கையாக்கிடுவேன்
மன்னிப்புத் தந்திடும் என் தேவனே
உம் மந்தையில் சேர்த்திடும் என் இயேசுவே

ஆதியில் வார்த்தையாய் ஆகி வந்து
எம்மை ஆட்கொண்ட தேவனும் நீரல்லவோ
நீதியின் பாதையில் எமை நடத்தி தினம்
காத்திடும் மேய்ப்பனும் நீரல்லவோ

செந்நீர் சிந்திடும் சிலுவை முன்னே
வந்து கண்ணீரைக் காணிக்கையாக்கிடுவேன்
மன்னிப்புத் தந்திடும் என் தேவனே
உம் மந்தையில் சேர்த்திடும் என் இயேசுவே

வாழவைக்கும் வார்த்தை எங்கே

வாழவைக்கும் வார்த்தை எங்கே
என்றே தேடினேன் – எனக்கு
வாழ்வளிக்க இயேசுவைத் தான் தேடி ஓடினேன்
காலமெல்லாம் என்னைக் காக்கும் கவசமானதே
வார்த்தையென் கால்களுக்கு வெளிச்சமாகி
வழியைக் காட்டுதே – நல்ல
வழியைக் காட்டுதே

வாழவைக்கும் வார்த்தை எங்கே
என்றே தேடினேன் – எனக்கு
வாழ்வளிக்க இயேசுவைத் தான் தேடி ஓடினேன்

நீதியுள்ள பாதைதனை வேதம் காட்டுதே – நமக்கு
நேர்மையான காரியத்தை நினைவு மூட்டுதே
ஆதியிலே வார்த்தையாக தேவன் வந்தாரே
நமக்கு ஆண்டவர் நான் என்று சொல்லி
அறிவைத் தந்தாரே – நல்ல
அறிவைத் தந்தாரே

வாழவைக்கும் வார்த்தை எங்கே
என்றே தேடினேன் – எனக்கு
வாழ்வளிக்க இயேசுவைத் தான் தேடி ஓடினேன்

தேவன் ஒன்றே என உலகம் தெரிந்து கொள்ளட்டுமே
நம்மைத் தேடிவரும் தெய்வம் இயேசு என உணரட்டுமே
நம் பாடுகளை அனுபவித்த பரமபிதாவின்
ஜீவ வார்த்தைக்குத்தான் மதிப்பளித்து
கீழ்ப்படியட்டுமே – உலகம்
கீழ்ப்படியட்டுமே

வாழவைக்கும் வார்த்தை எங்கே
என்றே தேடினேன் – எனக்கு
வாழ்வளிக்க இயேசுவைத் தான் தேடி ஓடினேன்

வார்த்தையினால் பிழைப்பேன்

வார்த்தையினால் பிழைப்பேன் – உமது
வார்த்தையினால் பிழைப்பேன் – இயேசுவே
வார்த்தையினால் பிழைப்பேன்

ஆண்டவரே உமதருள் மொழி கூறிடும்
வேதத்தை நான் படிப்பேன் – அதில்
நீர் தரும் வாக்கினை வாஞ்சித்து மனதில்
மகிழ்ந்து களி கூறுவேன்
ஆண்டவரே உமதருள் மொழி கூறிடும்
வேதத்தை நான் படிப்பேன் – அதில்
நீர் தரும் வாக்கினை வாஞ்சித்து மனதில்
மகிழ்ந்து களி கூறுவேன்

வார்த்தையினால் பிழைப்பேன் – உமது
வார்த்தையினால் பிழைப்பேன் – இயேசுவே
வார்த்தையினால் பிழைப்பேன்

நொறுங்குண்ட இதயத்தின் காயத்தை ஆற்றிடும்
தேவா உன் வார்த்தையன்றோ
இருபுறம் கருக்குள்ள பட்டயம் போலது
பாவத்தை அறுக்குமன்றோ – இயேசுவே
நொறுங்குண்ட இதயத்தின் காயத்தை ஆற்றிடும்
தேவா உன் வார்த்தையன்றோ
இருபுறம் கருக்குள்ள பட்டயம் போலது
பாவத்தை அறுக்குமன்றோ – இயேசுவே

வார்த்தையினால் பிழைப்பேன் – உமது
வார்த்தையினால் பிழைப்பேன் – இயேசுவே
வார்த்தையினால் பிழைப்பேன்

வார்த்தையின் வடிவாய் வாழ்வுக்குத்
துணையாய் வந்தவர் நீரல்லவோ
எம்மை வாழ்விக்கும் தேவா
இயேசுவே உமது நாமத்தை நாம் துதிப்போம்
வார்த்தையின் வடிவாய் வாழ்வுக்குத்
துணையாய் வந்தவர் நீரல்லவோ
எம்மை வாழ்விக்கும் தேவா
இயேசுவே உமது நாமத்தை நாம் துதிப்போம்

வார்த்தையினால் பிழைப்பேன் – உமது
வார்த்தையினால் பிழைப்பேன் – இயேசுவே
வார்த்தையினால் பிழைப்பேன்

மனம் கசிந்தேயொரு ஜெபம்

மனம் கசிந்தேயொரு ஜெபம் செய்யும்போது – தன்
ஆவியினால் கர்த்தர் உனை நிரப்புவாரு
மனம் கசிந்தேயொரு ஜெபம் செய்யும்போது – தன்
ஆவியினால் கர்த்தர் உனை நிரப்புவாரு
மனம் திரும்பியே நீயும் மன்றாடியே கேளு – உன்
மனக்குறை யாவுமே தீர்த்து வைப்பாரு
மனம் திரும்பியே நீயும் மன்றாடியே கேளு – உன்
மனக்குறை யாவுமே தீர்த்து வைப்பாரு

இனம் தெரியாத நோய் எது வந்தபோதும் – அதை
குணமாக்கும் என்று கர்த்தரையே கேளு
இனம் தெரியாத நோய் எது வந்தபோதும் – அதை
குணமாக்கும் என்று கர்த்தரையே கேளு
உடன் தருவார் சுகம் இயேசுவே எனப் பாடு
உண்மை அன்பை நீயும் சிலுவையிலே பாரு
உடன் தருவார் சுகம் இயேசுவே எனப் பாடு
உண்மை அன்பை நீயும் சிலுவையிலே பாரு

பணம் பொருள் பதவி உந்தன் கூடவராது – பாவச்
சுமையினில் எமை மீட்க வந்தது யாரு
பணம் பொருள் பதவி உந்தன் கூடவராது – பாவச்
சுமையினில் எமை மீட்க வந்தது யாரு
கன்மலையே என்னைக் காத்திடும் எனப்பாடு
கண்ணீரோடொரு ஜெபம் செய்து கேளு
கன்மலையே என்னைக் காத்திடும் எனப்பாடு
கண்ணீரோடொரு ஜெபம் செய்து கேளு

நொருங்குண்ட இதயத்தின் குறைகள் கேட்பாரு – ஆவியில்
எளிமைகொண்டே அடைக்கலம் கேளு
நொருங்குண்ட இதயத்தின் குறைகள் கேட்பாரு – ஆவியில்
எளிமைகொண்டே அடைக்கலம் கேளு
கலங்கும் உன் மனதுக்கு களிப்பூட்டுவாரு – அந்த
இரக்கத்தின் தேவனை நீ ருசித்தே பாரு
கலங்கும் உன் மனதுக்கு களிப்பூட்டுவாரு – அந்த
இரக்கத்தின் தேவனை நீ ருசித்தே பாரு

இன்னும் வேண்டுமோ உனக்கொரு பாடல்

இன்னும் வேண்டுமோ உனக்கொரு பாடல்
எழுது மகனே என்றார் – என்
நாமம் மகிமைபெற செல்லுமிடமெல்லாம்
பாடு மகனே என்றார்
இன்னும் வேண்டுமோ உனக்கொரு பாடல்
எழுது மகனே என்றார் – என்
நாமம் மகிமைபெற செல்லுமிடமெல்லாம்
பாடு மகனே என்றார்

நல்ல மேய்ப்பன் என் பாடல் உனக்குத்
தினம் நம்பிக்கை தந்துவிடும் – என்
வார்த்தையில் தினமும் கீழ்ப்படிந்தால்
உனக்குச் சீரிய வாழ்வமையும்
நல்ல மேய்ப்பன் என் பாடல் உனக்குத்
தினம் நம்பிக்கை தந்துவிடும் – என்
வார்த்தையில் தினமும் கீழ்ப்படிந்தால்
உனக்குச் சீரிய வாழ்வமையும்

உவமைகளால் என் உதட்டினைத் தினமும்
உனக்காய்த் திறந்து வைப்பேன் – அந்த
உண்மை நிலை உணர்ந்து உலகில் வாழ்பவர்க்கு
உன்னதப்பாட்டெழுது
உவமைகளால் என் உதட்டினைத் தினமும்
உனக்காய்த் திறந்து வைப்பேன் – அந்த
உண்மை நிலை உணர்ந்து உலகில் வாழ்பவர்க்கு
உன்னதப்பாட்டெழுது

நன்மை கிருபைகளை நாளும் உனக்காக
தந்திட நான் மறவேன் – தினம்
என்னை இயேசுவென மகிழ்ந்து பாடுமுந்தன்
மனக்குறை நான் அறிவேன்
நன்மை கிருபைகளை நாளும் உனக்காக
தந்திட நான் மறவேன் – தினம்
என்னை இயேசுவென மகிழ்ந்து பாடுமுந்தன்
மனக்குறை நான் அறிவேன்

அழைப்பு ஒன்று உனக்கு உண்டு

அழைப்பு ஒன்று உனக்கு உண்டு
எழுந்து வா மகனே – இறைவன்
சுமக்கும் சிலுவை நமக்கும் உண்டு
தூக்கி வா மகனே
அழைப்பு ஒன்று உனக்கு உண்டு
எழுந்து வா மகனே – இறைவன்
சுமக்கும் சிலுவை நமக்கும் உண்டு
தூக்கி வா மகனே

உபத்திரவங்கள் நிறைந்த உலகம்
உன்னைத் துன்பப்படுத்தும் – அதை
ஜெயித்த இறைவன் அழைப்பை ஏற்று
விரைந்து வா மகனே
உபத்திரவங்கள் நிறைந்த உலகம்
உன்னைத் துன்பப்படுத்தும் – அதை
ஜெயித்த இறைவன் அழைப்பை ஏற்று
விரைந்து வா மகனே

அழைப்பு ஒன்று உனக்கு உண்டு
எழுந்து வா மகனே – இறைவன்
சுமக்கும் சிலுவை நமக்கும் உண்டு
தூக்கி வா மகனே

உயிரைத் தந்து உலகில் உன்னை
உலவவிட்ட இறைவன் – இன்று உன்
அழுக்கை நீக்கி ஆத்துமாவை
தேற்றவே அழைக்கிறார்
உயிரைத் தந்து உலகில் உன்னை
உலவவிட்ட இறைவன் – இன்று உன்
அழுக்கை நீக்கி ஆத்துமாவை
தேற்றவே அழைக்கிறார்

அழைப்பு ஒன்று உனக்கு உண்டு
எழுந்து வா மகனே – இறைவன்
சுமக்கும் சிலுவை நமக்கும் உண்டு
தூக்கி வா மகனே

பதுக்கிப் பொருளை சேர்க்கும் உலகில்
பாவம் குறைந்திடுமா – சிலுவை
சுமக்கும் இயேசு கிருபையின்றி
மீட்பும் அடைந்திடுமா
பதுக்கிப் பொருளை சேர்க்கும் உலகில்
பாவம் குறைந்திடுமா – சிலுவை
சுமக்கும் இயேசு கிருபையின்றி
மீட்பும் அடைந்திடுமா

அழைப்பு ஒன்று உனக்கு உண்டு
எழுந்து வா மகனே – இறைவன்
சுமக்கும் சிலுவை நமக்கும் உண்டு
தூக்கி வா மகனே

காப்பார் காப்பார் எந்தன்

காப்பார் காப்பார் எந்தன்
இயேசு என்னைக் காப்பார்
மீட்பார் மீட்பார் எந்தன்
மேய்ப்பர் என்னை மீட்பார்
காப்பார் காப்பார் எந்தன்
இயேசு என்னைக் காப்பார்
மீட்பார் மீட்பார் எந்தன்
மேய்ப்பர் என்னை மீட்பார்

ஆதியிலே என் ஆண்டவர் இயேசு
வார்த்தையாய் இருந்தவர்தான்
ஆதியிலே என் ஆண்டவர் இயேசு
வார்த்தையாய் இருந்தவர்தான்
பின்னர் நீதியிலே நம்மை நடத்திட மாமிச
அவதாரம் எடுத்துவந்தார்-என்றும்
பின்னர் நீதியிலே நம்மை நடத்திட மாமிச
அவதாரம் எடுத்துவந்தார்-என்றும்

காப்பார் காப்பார் எந்தன்
இயேசு என்னைக் காப்பார்
மீட்பார் மீட்பார் எந்தன்
மேய்ப்பர் என்னை மீட்பார்

புறஜாதிக்குள்ளே நம்மைத் தெரிந்தெடுத்து
நல்ல சாட்சியாய் வாழவைத்தார்
புறஜாதிக்குள்ளே நம்மைத் தெரிந்தெடுத்து
நல்ல சாட்சியாய் வாழவைத்தார்
இறைநாமத்தையே எமைப் பாடவைத்தே
வழிநடத்தித்தான் மேய்த்துச் செல்வார்-என்றும்
இறைநாமத்தையே எமைப் பாடவைத்தே
வழிநடத்தித்தான் மேய்த்துச் செல்வார்-என்றும்

காப்பார் காப்பார் எந்தன்
இயேசு என்னைக் காப்பார்
மீட்பார் மீட்பார் எந்தன்
மேய்ப்பர் என்னை மீட்பார்

அவர் நாமத்தையே தினம் ஸ்தோத்தரித்தே
சுவிசேஷ இரட்சிப்பையும் சொல்லுவோம்
அவர் நாமத்தையே தினம் ஸ்தோத்தரித்தே
சுவிசேஷ இரட்சிப்பையும் சொல்லுவோம்
துதிகளில் வதியும் நம் தேவனின் மகிமையை
புவியெங்கும் பரப்பிடுவோம்-என்றும்  
துதிகளில் வதியும் நம் தேவனின் மகிமையை
புவியெங்கும் பரப்பிடுவோம்-என்றும்  

காப்பார் காப்பார் எந்தன்
இயேசு என்னைக் காப்பார்
மீட்பார் மீட்பார் எந்தன்
மேய்ப்பர் என்னை மீட்பார்
காப்பார் காப்பார் எந்தன்
இயேசு என்னைக் காப்பார்
மீட்பார் மீட்பார் எந்தன்
மேய்ப்பர் என்னை மீட்பார்

நான் பாடிக்கொண்டேயிருப்பேன்

நான் பாடிக்கொண்டேயிருப்பேன்
என் இயேசுவின் நாமத்திலே
நான் பாடிக்கொண்டேயிருப்பேன்
என் இயேசுவின் நாமத்திலே
ஆவியில் நிறைவாகி தீர்க்க
தரிசனங்கள் சொல்வேன்
நான் பாடிக்கொண்டேயிருப்பேன்
என் இயேசுவின் நாமத்திலே

தேடியே வந்து என்னை
திருக் கரங்களினால் அணைத்தார்
தேடியே வந்து என்னை
திருக் கரங்களினால் அணைத்தார்
பாடுகள் அனுபவித்து
பாவச்  சேற்றினில் மீட்டவரை
பாடுகள் அனுபவித்து
பாவச்  சேற்றினில் மீட்டவரை
நான் பாடிக்கொண்டேயிருப்பேன்
என் இயேசுவின் நாமத்திலே

தேவனின் திருப்பாட்டு
எந்தன் ஆவியைத் தாலாட்டும்
தேவனின் திருப்பாட்டு
எந்தன் ஆவியைத் தாலாட்டும்
இயேசுவின் திருவசனம்
ஞானப் பாலாய் அமுதூட்டும்
இயேசுவின் திருவசனம்
ஞானப் பாலாய் அமுதூட்டும்
நான் பாடிக்கொண்டேயிருப்பேன்
என் இயேசுவின் நாமத்திலே

காரிருள் சூழ்ந்தாலும்
ஜீவ ஒளியென்னை வழி நடத்தும்
காரிருள் சூழ்ந்தாலும்
ஜீவ ஒளியென்னை வழி நடத்தும்
சத்திய வசனம் வந்து
என்னை தழுவியே காத்துக்கொள்ளும்
சத்திய வசனம் வந்து
என்னை தழுவியே காத்துக்கொள்ளும்
நான் பாடிக்கொண்டேயிருப்பேன்
என் இயேசுவின் நாமத்திலே

நான் பாடிக்கொண்டேயிருப்பேன்
என் இயேசுவின் நாமத்திலே

நான் பாடிக்கொண்டேயிருப்பேன்
என் இயேசுவின் நாமத்திலே…

சபை கூடியே ஒரு சங்கீதம் பாடுகிறோம்

சபை கூடியே ஒரு சங்கீதம் பாடுகிறோம்

சபை கூடியே ஒரு சங்கீதம் பாடுகிறோம்
எங்கள் அருள்நாதரே நீர் அதைக் கேட்க வருவீரைய்யா
சபை கூடியே ஒரு சங்கீதம் பாடுகிறோம்
எங்கள் அருள்நாதரே நீர் அதைக் கேட்க வருவீரைய்யா

மனம் நிம்மதி இன்றி அலைமோதிடும் வேளை
இளைப்பாறுதல் தரும் நிழல் நீரன்றோ
மனம் நிம்மதி இன்றி அலைமோதிடும் வேளை
இளைப்பாறுதல் தரும் நிழல் நீரன்றோ
உமதண்டையே எமக்குப் பரலோகமே
உமதண்டையே எமக்குப் பரலோகமே
அதைத் தரவேண்டியே இன்று துதி பாடினோம்

சபை கூடியே ஒரு சங்கீதம் பாடுகிறோம்
எங்கள் அருள்நாதரே நீர் அதைக் கேட்க வருவீரைய்யா

பழி பாவங்கள் நெஞ்சில் குறைவானதே
உமது பரிசுத்தத்தால் அவை மறைவானதே
பழி பாவங்கள் நெஞ்சில் குறைவானதே
உமது பரிசுத்தத்தால் அவை மறைவானதே
தினந்தோறுமே ஜெபத்தில் நிறைவாகினோம்
தினந்தோறுமே ஜெபத்தில் நிறைவாகினோம்
ஜெகஜோதியே எங்கள் குறை தீருமே

சபை கூடியே ஒரு சங்கீதம் பாடுகிறோம்
எங்கள் அருள்நாதரே நீர் அதைக் கேட்க வருவீரைய்யா

மனம் மாறியே தினமும் மன்றாடினோம்
உமது மலரடியிலே இன்று சரணாகினோம்
மனம் மாறியே தினமும் மன்றாடினோம்
உமது மலரடியிலே இன்று சரணாகினோம்
அருள் வாக்கினால் எம்மைக் குணமாக்கவே
அருள் வாக்கினால் எம்மைக் குணமாக்கவே
மன இருள் நீக்கியே ஞான ஒளி தாருமே

சபை கூடியே ஒரு சங்கீதம் பாடுகிறோம்
எங்கள் அருள்நாதரே நீர் அதைக் கேட்க வருவீரைய்யா
சபை கூடியே ஒரு சங்கீதம் பாடுகிறோம்
எங்கள் அருள்நாதரே நீர் அதைக் கேட்க வருவீரைய்யா

Popular Posts

My Favorites

தேவன் பேசி(னால்)…. நலமாய் இருக்கும்

ஓகஸ்ட் 04 "தேவன் பேசி(னால்).... நலமாய் இருக்கும்" யோபு 11:5-6 யோபின் சிநேகிதர் அவன் நிலமையை புரிந்துக்கொள்ளவில்லை. அவர்கள் சொன்ன நியாயங்கள் அவன் மனதில் தங்கவில்லை. அவனுக்கு அவைகள் தெரிய வேண்டுமென்று அவர்களில் இவன் ஒருவன் விரும்பினதால்,...