Home Blog

இயேசுவைத் தேடிடுவாய் மனமே

இயேசுவைத் தேடிடுவாய் மனமே
இயேசுவைத் தேடிடுவாய்
பாவத்தின் பிடியினின்று உன்னை
மீட்டெடுக்கும் தேவன் – அந்த தூயனாம் இயேசு

ஆவியானவர் எங்கு உண்டோ – அங்கு
விடுதலை உனக்கு உண்டு
ஆவியானவர் எங்கு உண்டோ – அங்கு
விடுதலை உனக்கு உண்டு
பாவியாகி நீ மரிப்பதினாலே
உனக்கென்ன சுகமுண்டு
பாவியாகி நீ மரிப்பதினாலே
உனக்கென்ன சுகமுண்டு

இயேசுவைத் தேடிடுவாய் மனமே
இயேசுவைத் தேடிடுவாய்

ஒரே ஒருதரம் மரிப்பதும் – பின்பு
நியாயத்தீர்ப்பினை அடைவதுமே
ஒரே ஒருதரம் மரிப்பதும் – பின்பு
நியாயத்தீர்ப்பினை அடைவதுமே
மனிதனுக்கென்றே வேதத்தில்
நியமிக்கப்பட்டே இருப்பதையுணர்ந்து
மனிதனுக்கென்றே வேதத்தில்
நியமிக்கப்பட்டே இருப்பதையுணர்ந்து

இயேசுவைத் தேடிடுவாய் மனமே
இயேசுவைத் தேடிடுவாய்

இயேசுவின்றி ஒரு தெய்வத்தினாலும்
இரட்சிப்புக் கிடைக்காது
இயேசுவின்றி ஒரு தெய்வத்தினாலும்
இரட்சிப்புக் கிடைக்காது
அவர் வார்த்தையை நம்பியே மனந்திரும்பு
மன்னிப்பு உனக்கு உண்டு
அவர் வார்த்தையை நம்பியே மனந்திரும்பு
மன்னிப்பு உனக்கு உண்டு

இயேசுவைத் தேடிடுவாய் மனமே
இயேசுவைத் தேடிடுவாய்

இயேசுவைத் தேடிடுவாய் மனமே
இயேசுவைத் தேடிடுவாய்

இயேசுவே !….ஊழியத்துக்காய் என்னை

இயேசுவே !….
ஊழியத்துக்காய் என்னை ஒப்படைக்கின்றேன் – இனி
ஜீவிக்கின்ற நாட்கள் எல்லாம் உமது
ஜீவிக்கின்ற நாட்கள் எல்லாம் உமது

வாலிபத்தில் எந்தன் நாட்களெல்லாம் – ஒரு
கேலிக் கூத்தைப் போலே ஆகிவிட்டதே
வாலிபத்தில் எந்தன் நாட்களெல்லாம் – ஒரு
கேலிக் கூத்தைப் போலே ஆகிவிட்டதே
 உமது ஜீவனுள்ள வார்த்தையினால் மீட்கப்பட்டதும்
என் நெஞ்சமேல்லாம் உந்தனையே தேடுதய்யா
உமது ஜீவனுள்ள வார்த்தையினால் மீட்கப்பட்டதும்
என் நெஞ்சமேல்லாம் உந்தனையே தேடுதய்யா

எங்களுக்காய் பாவந்தனை சுமந்துகொண்டு
நீர் பட்டதுயர் எந்நெஞ்சத்தையே வாட்டுதய்யா
எங்களுக்காய் பாவந்தனை சுமந்துகொண்டு
நீர் பட்டதுயர் எந்நெஞ்சத்தையே வாட்டுதய்யா
இனிக் கொஞ்ச நேரம் கூட வீணாக்கிடாமல்
உமது சந்தோஷத்தை மக்களுக்கு இசைத்திடுவேன்
இனிக் கொஞ்ச நேரம் கூட வீணாக்கிடாமல்
உமது சந்தோஷத்தை மக்களுக்கு இசைத்திடுவேன்

எம்மையெல்லாம் மீட்டெடுத்த கன்மலையே
உம்மை நன்றியுடன் ஸ்தோத்தரித்து துதித்திடுவோம்
எம்மையெல்லாம் மீட்டெடுத்த கன்மலையே
உம்மை நன்றியுடன் ஸ்தோத்தரித்து துதித்திடுவோம்
தந்துவிடும் பரிசுத்த வல்லமையை
அந்தத் தாலந்துகளால் உம்மை மகிமை செய்வோம்
தந்துவிடும் பரிசுத்த வல்லமையை
அந்தத் தாலந்துகளால் உம்மை மகிமை செய்வோம்

கல்லான இதயத்தை மெழுகாக்கி

கல்லான இதயத்தை மெழுகாக்கி – அதில்
ஞான ஒளி ஏற்றியெங்கள் இருள் நீக்கினீர்
கல்லான இதயத்தை மெழுகாக்கி – அதில்
ஞான ஒளி ஏற்றியெங்கள் இருள் நீக்கினீர்
பொல்லாத நினைவுகளைப் பொடியாக்கியே
உமது போதனையினால் எம்மைத் தெளிவாக்கினீர்
பொல்லாத நினைவுகளைப் பொடியாக்கியே
உமது போதனையினால் எம்மைத் தெளிவாக்கினீர்

தேவனே எங்கள் இயேசுவே
இயேசுவே  எங்கள் மேய்ப்பரே
தேவனே எங்கள் இயேசுவே
இயேசுவே  எங்கள் மேய்ப்பரே

அற்புதமாய் எம்மை உருவாக்கியே – உமது
ஆவியினைத் தந்தெமக்கு உயிரூட்டினீர்
அற்புதமாய் எம்மை உருவாக்கியே – உமது
ஆவியினைத் தந்தெமக்கு உயிரூட்டினீர்
கற்பனையினால் எம்மைக் களிப்பூட்டியே
நல்ல கர்த்தர் என்றே எமக்கு வழிகாட்டினார்
கற்பனையினால் எம்மைக் களிப்பூட்டியே
நல்ல கர்த்தர் என்றே எமக்கு வழிகாட்டினார்

தேவனே எங்கள் இயேசுவே
இயேசுவே  எங்கள் மேய்ப்பரே
தேவனே எங்கள் இயேசுவே
இயேசுவே  எங்கள் மேய்ப்பரே

பொல்லாத மனிதரைப் புனிதராக்கியே – நல்ல
சித்தமுடன் இரத்தத்தால் சுத்தமாக்கினீர்
பொல்லாத மனிதரைப் புனிதராக்கியே – நல்ல
சித்தமுடன் இரத்தத்தால் சுத்தமாக்கினீர்
குஷ்டம் வந்த ரோகியரைக் குணமாக்கியே
எந்தக் கஷ்டத்திலும் எங்களுக்கு பலமூட்டினீர்
குஷ்டம் வந்த ரோகியரைக் குணமாக்கியே
எந்தக் கஷ்டத்திலும் எங்களுக்கு பலமூட்டினீர்

தேவனே எங்கள் இயேசுவே
இயேசுவே  எங்கள் மேய்ப்பரே
தேவனே எங்கள் இயேசுவே
இயேசுவே  எங்கள் மேய்ப்பரே

கடலலையும் இரைகிறது இயேசு

கடலலையும் இரைகிறது இயேசு என்று தான்
அந்தக் காற்றுங்கூட வீசுவது இயேசு என்று தான்
கடலலையும் இரைகிறது இயேசு என்று தான்
அந்தக் காற்றுங்கூட வீசுவது இயேசு என்று தான்
மழையும் கூட பொழிகிறது இயேசு என்று தான்
மழையும் கூட பொழிகிறது இயேசு என்று தான்
இந்த மண்ணும் கூட சுழருவது இயேசு என்று தான்
இந்த மண்ணும் கூட சுழருவது இயேசு என்று தான்
கடலலையும் இரைகிறது இயேசு என்று தான்
அந்தக் காற்றுங்கூட வீசுவது இயேசு என்று தான்

மேகங்களும் ஓடுவது இயேசு என்று தான்
மேகங்களும் ஓடுவது இயேசு என்று தான்
மூங்கிலிலே வரும் இசையும் இயேசு என்று தான்
அந்த மூங்கிலிலே வரும் இசையும் இயேசு என்று தான்
மனமும் கூட துள்ளுவது இயேசு என்று தான்
மலரும் கூட அசைகிறது இயேசு என்று தான்
இந்த மலரும் கூட அசைகிறது இயேசு என்று தான்
கடலலையும் இரைகிறது இயேசு என்று தான்
அந்தக் காற்றுங்கூட வீசுவது இயேசு என்று தான்

உயிரினங்கள் வாழுவதும் இயேசு என்று தான்
உயிரினங்கள் வாழுவதும் இயேசு என்று தான்
பயிரும் கூட வளருவது இயேசு என்று தான்
அந்த பயிரும் கூட வளருவது இயேசு என்று தான்
நிலவு கூடத் தவளுவது இயேசு என்று தான்
இந்த நிலவு கூடத் தவளுவது இயேசு என்று தான்
மின்னல் கூட மின்னுவதும் இயேசு என்று தான்
இந்த மின்னல் கூட மின்னுவதும் இயேசு என்று தான்

கடலலையும் இரைகிறது இயேசு என்று தான்
அந்தக் காற்றுங்கூட வீசுவது இயேசு என்று தான்
கடலலையும் இரைகிறது இயேசு என்று தான்
அந்தக் காற்றுங்கூட வீசுவது இயேசு என்று தான்

உத்தமமான தெய்வம் – இயேசு

உத்தமமான தெய்வம் – இயேசு
உன்னதத்திலும் தெய்வம்
உத்தமமான தெய்வம் – இயேசு
உன்னதத்திலும் தெய்வம்
சத்தியமான தெய்வம் – சங்கடம்
காப்பதிலும் தெய்வம்
உத்தமமான தெய்வம் – இயேசு
உன்னதத்திலும் தெய்வம்

நித்தியமான தெய்வம் – நெஞ்சினில்
வாழுகின்ற தெய்வம்
நித்தியமான தெய்வம் – நெஞ்சினில்
வாழுகின்ற தெய்வம்
பத்திய வார்த்தையினால் – எங்களை
பாது காக்கும் தெய்வம்
பத்திய வார்த்தையினால் – எங்களை
பாது காக்கும் தெய்வம்

உத்தமமான தெய்வம் – இயேசு
உன்னதத்திலும் தெய்வம்

சிலுவையைச் சுமந்து வந்த – பாவச்
சிறையினை மீட்ட தெய்வம்
சிலுவையைச் சுமந்து வந்த – பாவச்
சிறையினை மீட்ட தெய்வம்
சீர் கெட்ட மானிடர்காய் – தன்னையே
ஒப்புக் கொடுத்த தெய்வம்
சீர் கெட்ட மானிடர்காய் – தன்னையே
ஒப்புக் கொடுத்த தெய்வம்

உத்தமமான தெய்வம் – இயேசு
உன்னதத்திலும் தெய்வம்

பரிசுத்த வார்த்தை தந்தே – எம்மை
மீட்க வந்த தெய்வம்
பரிசுத்த வார்த்தை தந்தே – எம்மை
மீட்க வந்த தெய்வம்
அசுத்த ஆவிகளை எம்மைவிட்டு
அகற்ற வந்த தெய்வம்
அசுத்த ஆவிகளை எம்மைவிட்டு
அகற்ற வந்த தெய்வம்

உத்தமமான தெய்வம் – இயேசு
உன்னதத்திலும் தெய்வம்

என் தேவனே என் தேவனே

என் தேவனே என் தேவனே
வந்தே எம்மைத் தடுத்தாளுமே
காலங்களை நாம் வீணாக்கினோம்
கர்த்தாவே இன்று உமை நோக்கினோம்
காலங்களை நாம் வீணாக்கினோம்
கர்த்தாவே இன்று உமை நோக்கினோம்
என் தேவனே என் தேவனே
வந்தே எம்மைத் தடுத்தாளுமே

கண்ணீருடன் இன்று கை கூப்பினோம்
எம் இயேசுவே கடைக் கண் பாருமே
கண்ணீருடன் இன்று கை கூப்பினோம்
எம் இயேசுவே கடைக் கண் பாருமே
செந்நீரையே எமக்காகச் சிந்த
செந்நீரையே எமக்காகச் சிந்த
நீர் வந்தீரென்றே விசுவாசிக்கின்றோம்
நீர் வந்தீரென்றே விசுவாசிக்கின்றோம்

என் தேவனே என் தேவனே
வந்தே எம்மைத் தடுத்தாளுமே

பாவங்களை அன்று நீர் சுமந்ததால்
பலி பீடங்களில் இன்று செந்நீர் இல்லை
பாவங்களை அன்று நீர் சுமந்ததால்
பலி பீடங்களில் இன்று செந்நீர் இல்லை
கலி காலங்களால் இன்று கண் மூடினோம்
கலி காலங்களால் இன்று கண் மூடினோம்
என் ஜீவனே மீண்டும் வரவேண்டுமே
என் ஜீவனே மீண்டும் வரவேண்டுமே

என் தேவனே என் தேவனே
வந்தே எம்மைத் தடுத்தாளுமே

வேதங்களில் என்றும் உம் நாமமே
ஜீவ நாதங்களும் உம் புகழ் பாடுமே
வேதங்களில் என்றும் உம் நாமமே
ஜீவ நாதங்களும் உம் புகழ் பாடுமே
பாவங்களும் இன்று பறந்தோடுமே
பாவங்களும் இன்று பறந்தோடுமே
வந்து வரம் தாருமே எம் நேசரே
வந்து வரம் தாருமே எம் நேசரே

என் தேவனே என் தேவனே
வந்தே எம்மைத் தடுத்தாளுமே
காலங்களை நாம் வீணாக்கினோம்
கர்த்தாவே இன்று உமை நோக்கினோம்
காலங்களை நாம் வீணாக்கினோம்
கர்த்தாவே இன்று உமை நோக்கினோம்
என் தேவனே என் தேவனே
வந்தே எம்மைத் தடுத்தாளுமே

அன்பே உமக்காக நான் பாடுவேன்

அன்பே உமக்காக நான் பாடுவேன்
இந்த அவனியில் உம்மோடு நான் வாழுவேன்
அன்பே உமக்காக நான் பாடுவேன்
இந்த அவனியில் உம்மோடு நான் வாழுவேன்
முன்பே எனக்காக நீர் பொழிந்த
அந்த அன்பை அனைவருடன் பரிமாறுவேன்
முன்பே எனக்காக நீர் பொழிந்த
அந்த அன்பை அனைவருடன் பரிமாறுவேன்
அன்பே உமக்காக நான் பாடுவேன்
இந்த அவனியில் உம்மோடு நான் வாழுவேன்

கண்ணே எமக்காய் நீர் சிலுவையிலே
உம்மை ஒப்புக் கொடுத்த உயர் தெய்வமன்றோ
கண்ணே எமக்காய் நீர் சிலுவையிலே
உம்மை ஒப்புக் கொடுத்த உயர் தெய்வமன்றோ
பண்பே இல்லாத பாவியர்க்காய்
பண்பே இல்லாத பாவியர்க்காய்
நீர் பாரில் அவதரித்த இயேசுவல்லோ
நீர் பாரில் அவதரித்த இயேசுவல்லோ

அன்பே உமக்காக நான் பாடுவேன்
இந்த அவனியில் உம்மோடு நான் வாழுவேன்
அன்பே உமக்காக நான் பாடுவேன்
இந்த அவனியில் உம்மோடு நான் வாழுவேன்

மண்ணே உமதன்பை புரிந்திடவே
நீர் மனித அவதாரம் எடுத்தீரன்றோ
இந்த மண்ணே உமதன்பை புரிந்திடவே
நீர் மனித அவதாரம் எடுத்தீரன்றோ
என்னே உமதன்பு இயேசு நாதா
என்னே உமதன்பு இயேசு நாதா
இறைவா உமதன்பின் அடிமை நானே
என் இறைவா உமதன்பின் அடிமை நானே

அன்பே உமக்காக நான் பாடுவேன்
இந்த அவனியில் உம்மோடு நான் வாழுவேன்
அன்பே உமக்காக நான் பாடுவேன்
இந்த அவனியில் உம்மோடு நான் வாழுவேன்

முன்னே நீர் சென்ற அடிச்சுவட்டில்
உம்மை பின்னோக்கி வருகிறோம் இயேசு நாதா
முன்னே நீர் சென்ற அடிச்சுவட்டில்
உம்மை பின்னோக்கி வருகிறோம் இயேசு நாதா
பொன்னான போதனையை ஏற்றுக்கொண்டே
உம் பொன்னான போதனையை ஏற்றுக்கொண்டே
புது வாழ்வில் நடைபோட்டு வருகின்றோமே
புது வாழ்வில் நடைபோட்டு வருகின்றோமே

அன்பே உமக்காக நான் பாடுவேன்
இந்த அவனியில் உம்மோடு நான் வாழுவேன்
அன்பே உமக்காக நான் பாடுவேன்
இந்த அவனியில் உம்மோடு நான் வாழுவேன்

இயேசுவின் அன்பை விட்டு நம்மைப்

இயேசுவின் அன்பை விட்டு நம்மைப்
பிரிப்பவன் யாரும் இல்லை
மரணமானாலும் ஜீவனானாலும் தேவதூதர்களானாலும்
அதிகாரங்கள் ஆனாலும்
இயேசுவின் அன்பை விட்டு நம்மைப்
பிரிப்பவன் யாரும் இல்லை

பொய்யென்ற உலகத்தில் மெய் ஞான ஒளி வந்து
உந்தனைக் கரை சேர்க்குமே
பொய்யென்ற உலகத்தில் மெய் ஞான ஒளி வந்து
உந்தனைக் கரை சேர்க்குமே
கடுகளவு விசுவாசம் உன் மனதில் வந்திட்டால்
கர்த்தரின் அன்பு சேருமே
கடுகளவு விசுவாசம் உன் மனதில் வந்திட்டால்
கர்த்தரின் அன்பு சேருமே

இயேசுவின் அன்பை விட்டு நம்மைப்
பிரிப்பவன் யாரும் இல்லை

தன் மந்தையில் உந்தனைச் சேர்த்திட
என் கர்த்தர் ஆவலாய் இருக்கின்றாரே
தன் மந்தையில் உந்தனைச் சேர்த்திட
என் கர்த்தர் ஆவலாய் இருக்கின்றாரே
மெய்யாகவே உனக்கு சொல்லுகிறேன் என்று
வாக்குத்தத்தங்கள் தந்தாரே
மெய்யாகவே உனக்கு சொல்லுகிறேன் என்று
வாக்குத்தத்தங்கள் தந்தாரே

இயேசுவின் அன்பை விட்டு நம்மைப்
பிரிப்பவன் யாரும் இல்லை

நானே வழியும் சத்தியமும் என்றெம்மை
தான் வந்து வழி காட்டினாரே
நானே வழியும் சத்தியமும் என்று
தான் வந்து வழி காட்டினாரே
வீணே உன் வாழ்வை சீர்செய்து கொள்ளாது
ஏன் நொந்து மனம் வேகிறாய்
வீணே உன் வாழ்வை சீர்செய்து கொள்ளாது
ஏன் நொந்து மனம் வேகிறாய்

இயேசுவின் அன்பை விட்டு நம்மைப்
பிரிப்பவன் யாரும் இல்லை
மரணமானாலும் ஜீவனானாலும் தேவதூதர்களானாலும்
அதிகாரங்கள் ஆனாலும்
இயேசுவின் அன்பை விட்டு நம்மைப்
பிரிப்பவன் யாரும் இல்லை

என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி

என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி
என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி
அவர் செய்த உபகாரங்களை
அவர் செய்த உபகாரங்களை
உன் நெஞ்சில் மறவாதே
என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி

அவர் நல்லவர் அவர் வல்லவர்
அவர் நல்லவர் அவர் வல்லவர்
அவர் கிருபை என்றுமே உள்ளதென்று
அவர் கிருபை என்றுமே உள்ளதென்று

என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி
அவர் செய்த உபகாரங்களை
அவர் செய்த உபகாரங்களை
உன் நெஞ்சில் மறவாதே
என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி

என் முழு உள்ளமே இயேசுவின்
நாமத்தை ஸ்தோத்தரி
என் முழு உள்ளமே இயேசுவின்
நாமத்தை ஸ்தோத்தரி
உன் முடிவு பரியந்தம் அவர்
வழியில் போய்த் திரி
உன் முடிவு பரியந்தம் அவர்
வழியில் போய்த் திரி

என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி
அவர் செய்த உபகாரங்களை
அவர் செய்த உபகாரங்களை
உன் நெஞ்சில் மறவாதே
என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி
என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி

இறைவா என்னைத் தெரிந்து

இறைவா என்னைத் தெரிந்து
கொண்டதும் ஏனோ – உமது
அன்பைக் குறித்து பாடல் எழுதி
மகிமைப் படுத்த தானோ
இறைவா என்னைத் தெரிந்து
கொண்டதும் ஏனோ…

திசை மாறிய பறவை போல – நான்
அலைந்து திரிந்த போது
திசை மாறிய பறவை போல – நான்
அலைந்து திரிந்த போது
வழி நானே என்று வந்து
ஒளியைத் தந்த தேவா – எந்தன் இயேசுவே
வழி நானே என்று வந்து
ஒளியைத் தந்த தேவா – எந்தன் இயேசுவே

இறைவா என்னைத் தெரிந்து
கொண்டதும் ஏனோ

அலைபாயும் உமதன்பை நான்
அறிந்திடாத போது – அன்பு
அலைபாயும் உமதன்பை நான்
அறிந்திடாத போது – அன்பு
வலை போட்டு என்னைப் பிடித்து
வழிகாட்டிய தேவா – எந்தன் இயேசு
வலை போட்டு என்னைப் பிடித்து
வழிகாட்டிய தேவா – எந்தன் இயேசு

இறைவா என்னைத் தெரிந்து
கொண்டதும் ஏனோ – உமது
அன்பைக் குறித்து பாடல் எழுதி
மகிமைப் படுத்த தானோ
இறைவா என்னைத் தெரிந்து
கொண்டதும் ஏனோ…

Popular Posts

My Favorites

மெய்யான ஒளி இப்பொழுது பிரகாசிக்கிறது

டிசம்பர் 11 "மெய்யான ஒளி இப்பொழுது பிரகாசிக்கிறது" 1.யோவான் 2:8 இவ்வுலகில் எங்குமே பாவ இருள் மூடியிருக்கிறது. எங்கெல்லாம் சுவிசேஷ ஒளி செல்கிறதோ, அங்கெல்லாம் அவ்விருள் மறைந்து விடுகிறது. பிசாசின் இருள் எங்கெல்லாம் இருக்கிறதோ, அவ்விடத்திற்கெல்லாம்...