Home Blog

எங்கள் பாதைக்கு வெளிச்சம் ஐயா

எங்கள் பாதைக்கு வெளிச்சம் ஐயா
உமது ஜீவனுள்ள வார்த்தை
எங்கள் பாதைக்கு வெளிச்சம்
ஐயா உமது ஜீவனுள்ள வார்த்தை
வார்த்தையில் மாமிசமாய் எம்மை வந்து
காத்திட்ட இயேசு நாதா
வார்த்தையில் மாமிசமாய் எம்மை வந்து
காத்திட்ட இயேசு நாதா
பாவி என் பயணத்திலே
நல்ல ஒரு வழித்துணையாக வாரும்
பாவி என் பயணத்திலே
நல்ல ஒரு வழித்துணையாக வாரும்
எங்கள் பாதைக்கு வெளிச்சம் ஐயா
உமது ஜீவனுள்ள வார்த்தை

பாவிக்காய் பூமியிலே
அவதாரமே எடுத்து வந்தீர்
பாவிக்காய் பூமியிலே
அவதாரமே எடுத்து வந்தீர்
உலகின் ஜோதி என
உயிர்த்தெழுந்த தெய்வம் ஐயா
உலகின் ஜோதி என
உயிர்த்தெழுந்த தெய்வம் ஐயா
இயேசுவே மனதிரங்கி
எங்கள் நெஞ்சத்தை தூய்மை செய்யும்
இயேசுவே மனதிரங்கி
எங்கள் நெஞ்சத்தை தூய்மை செய்யும்

எங்கள் பாதைக்கு வெளிச்சம் ஐயா
உமது ஜீவனுள்ள வார்த்தை
எங்கள் பாதைக்கு வெளிச்சம்
ஐயா உமது ஜீவனுள்ள வார்த்தை
வார்த்தையில் மாமிசமாய் எம்மை வந்து
காத்திட்ட இயேசு நாதா
வார்த்தையில் மாமிசமாய் எம்மை வந்து
காத்திட்ட இயேசு நாதா
பாவி என் பயணத்திலே
நல்ல ஒரு வழித்துணையாக வாரும்
பாவி என் பயணத்திலே
நல்ல ஒரு வழித்துணையாக வாரும்
எங்கள் பாதைக்கு வெளிச்சம் ஐயா
உமது ஜீவனுள்ள வார்த்தை

ஆவியில் உறவாடி
எம்மை ஆதரித்தே நில்லும்
ஆவியில் உறவாடி
எம்மை ஆதரித்தே நில்லும்
ஆண்டவர் உம்மைவிட்டால்
அடைக்கலம் தருபவர் யார்
ஆண்டவர் உம்மைவிட்டால் எமக்கு
அடைக்கலம் தருபவர் யார்
தேவனே உம்மை அழைத்தால்
வந்து தேற்றியே அணைத்துக்கொள்ளும்
தேவனே உம்மை அழைத்தால்
வந்து தேற்றியே அணைத்துக்கொள்ளும்

எங்கள் பாதைக்கு வெளிச்சம் ஐயா
உமது ஜீவனுள்ள வார்த்தை
எங்கள் பாதைக்கு வெளிச்சம்
ஐயா உமது ஜீவனுள்ள வார்த்தை
வார்த்தையில் மாமிசமாய் எம்மை வந்து
காத்திட்ட இயேசு நாதா
வார்த்தையில் மாமிசமாய் எம்மை வந்து
காத்திட்ட இயேசு நாதா
பாவி என் பயணத்திலே
நல்ல ஒரு வழித்துணையாக வாரும்
பாவி என் பயணத்திலே
நல்ல ஒரு வழித்துணையாக வாரும்
எங்கள் பாதைக்கு வெளிச்சம் ஐயா
உமது ஜீவனுள்ள வார்த்தை

என் இயேசு நாதனுக்காய்

என் இயேசு நாதனுக்காய்
இனி நான் பாடுவேன்
என் இயேசு நாதனுக்காய்
இனி நான் பாடுவேன்
வாழ்வில் எல்லை இல்லா மகிழ்ச்சியுடன்
நான் ஆடுவேன் நான் ஆடுவேன்
என் இயேசு நாதனுக்காய்
இனி நான் பாடுவேன்

பின் தேடும் மாந்தருக்கு
அவர் விளக்காய் வந்தவர்
மனு குலம் வாழ அவதார
இறையும் ஆனவர்
மனு குலம் வாழ அவதார
இறையும் ஆனவர்
குறையாத தெய்வ அன்பில்
நிறைவானவர் இயேசு
எங்கள் மனக்கோயில் இருப்பிடத்தில்
நிலையும் ஆனவர் நிலையும் ஆனவர்
எங்கள் மனக்கோயில் இருப்பிடத்தில்
நிலையும் ஆனவர் நிலையும் ஆனவர்

என் இயேசு நாதனுக்காய்
இனி நான் பாடுவேன்

கண்பாடும் காதலுக்கு
அவர் உருவாயானவர்
சின்ன பாலகரின் உள்ளத்தையே
விரும்புகின்றவர்
சின்ன பாலகரின் இதயத்தையே
விரும்புகின்றவர்
தன் நலத்தை கண்டுமே
மனம் சகிக்காதவர் இயேசு
தன் நலத்தை கண்டுமே
மனம் சகிக்காதவர் இயேசு
இந்த மண்ணுலகம் கண்ட மனித
தெய்வம் ஆனவர்
இந்த மண்ணுலகம் கண்ட தெய்வம்
மனிதன் ஆனவர்

என் இயேசு நாதனுக்காய்
இனி நான் பாடுவேன்

முன்னோரின் வேதத்துக்கே
அவர் முதலாய் ஆனவர்
உலக முடிவினிலே
அவதாரம் செய்கின்றவர்
உலக முடிவினிலே
அவதாரம் செய்கின்றவர்
ஆதியிலே வார்த்தையோடு
மூலம் ஆனவர்
ஆதியிலே வார்த்தையோடு
மூலம் ஆனவர்
எங்கள் ஆண்டவராய் இயேசு அவர்
நெஞ்சில் வாழ்பவர்
எங்கள் ஆண்டவராய் இயேசு அவர்
நெஞ்சில் வாழ்பவர்

என் இயேசு நாதனுக்காய்
இனி நான் பாடுவேன்
என் இயேசு நாதனுக்காய்
இனி நான் பாடுவேன்
வாழ்வில் எல்லை இல்லா மகிழ்ச்சியுடன்
நான் ஆடுவேன் நான் ஆடுவேன்
என் இயேசு நாதனுக்காய்
இனி நான் பாடுவேன்

கல்லும் மலையுமே கடந்து

கல்லும் மலையுமே கடந்து சென்றே நான்
கடவுளைத் தேடுகையில் – ஒரு
முள் முடி சுமந்தே முதுகில் சிலுவைகொண்டு
இயேசு என்னை அழைத்தார் – அன்பின்
இயேசு என்னை அழைத்தார்

அல்லும் பகலுமே அலைந்து திரிந்து நான்
ஆலயம் போகையிலே – அந்த
அன்புத் தெய்வம் எந்தன் ….
தோளில் சுமந்து வந்தார்
அவர்தம் தோளினிலே சுமந்து வந்தார்

கல்லும் மலையுமே கடந்து சென்றே நான்
கடவுளைத் தேடுகையில் – ஒரு
முள் முடி சுமந்தே முதுகில் சிலுவைகொண்டு
இயேசு என்னை அழைத்தார் – அன்பின்
இயேசு என்னை அழைத்தார்

செல்லும் பாதை எது எனக்கு இனி என்று நான்
திரிந்திட்ட போதினிலே – ஒ
நில்லு மகனே என்று நேர்வழி காட்டிட
மேய்ப்பனாய் ஓடி வந்தார் – நல்ல
மேய்ப்பனாய் ஓடி வந்தார்

கல்லும் மலையுமே கடந்து சென்றே நான்
கடவுளைத் தேடுகையில் – ஒரு
முள் முடி சுமந்தே முதுகில் சிலுவைகொண்டு
இயேசு என்னை அழைத்தார் – அன்பின்
இயேசு என்னை அழைத்தார்

அன்பு கொண்டு உன்னை அணைக்கத் துடிக்கிறேன்
என்னை நீ மறவாதே என்று
ஆறுதல் கூறியே ஆண்டவர் இயேசு என்
அருகினில் ஓடி வந்தார்

கல்லும் மலையுமே கடந்து சென்றே நான்
கடவுளைத் தேடுகையில் – ஒரு
முள் முடி சுமந்தே முதுகில் சிலுவைகொண்டு
இயேசு என்னை அழைத்தார் – அன்பின்
இயேசு என்னை அழைத்தார்

சிலுவை நோக்கிப் பயணம் போகிறேன்

சிலுவை நோக்கிப் பயணம் போகிறேன்
நிலைமையுணர்ந்து மனமும் மாறினேன்
கொடுமைசெய்து பாவியாகினேன் – இன்று
மரித்து மீண்டும் உயிர்த்து வாழ்கிறேன்
இயேசுவோடு மரித்து மீண்டும் உயிர்த்து வாழ்கிறேன்
சிலுவை நோக்கிப் பயணம் போகிறேன்
நிலைமையுணர்ந்து மனமும் மாறினேன்

உலகம் என்னைப் பகைத்த போதும்
எனக்குப் பயம் இல்லை – என்
இயேசு ஒருவர் போதுமெனக்கு
இனிக் கவலை இல்லை
இயேசு ஒருவர் போதுமெனக்கு
இனிக் கவலை இல்லை

சிலுவை நோக்கிப் பயணம் போகிறேன்
நிலைமையுணர்ந்து மனமும் மாறினேன்
கொடுமைசெய்து பாவியாகினேன் – இன்று
மரித்து மீண்டும் உயிர்த்து வாழ்கிறேன்
இயேசுவோடு மரித்து மீண்டும் உயிர்த்து வாழ்கிறேன்
சிலுவை நோக்கிப் பயணம் போகிறேன்
நிலைமையுணர்ந்து மனமும் மாறினேன்

பாவி என்னையே தாவி வந்தவர்
மீட்டுக் கொண்டாரே – என்
பரமன் தயவு போதுமெனக்கு
இனிப் பயமே இல்லை
பரமன் தயவு போதுமெனக்கு
இனிப் பயமே இல்லை

சிலுவை நோக்கிப் பயணம் போகிறேன்
நிலைமையுணர்ந்து மனமும் மாறினேன்
கொடுமைசெய்து பாவியாகினேன் – இன்று
மரித்து மீண்டும் உயிர்த்து வாழ்கிறேன்
இயேசுவோடு மரித்து மீண்டும் உயிர்த்து வாழ்கிறேன்
சிலுவை நோக்கிப் பயணம் போகிறேன்
நிலைமையுணர்ந்து மனமும் மாறினேன்

தினமும் எனக்கு அவரின்
வசனம் கவசமாகுதே – இனிப்
பயணம் போகும் பாதை காட்ட
மேய்ப்பன் போதுமே – நல்ல
மேய்ப்பன் போதுமே
மேய்ப்பன் போதுமே – நல்ல
மேய்ப்பன் போதுமே

சிலுவை நோக்கிப் பயணம் போகிறேன்
நிலைமையுணர்ந்து மனமும் மாறினேன்
கொடுமைசெய்து பாவியாகினேன் – இன்று
மரித்து மீண்டும் உயிர்த்து வாழ்கிறேன்
இயேசுவோடு மரித்து மீண்டும் உயிர்த்து வாழ்கிறேன்
சிலுவை நோக்கிப் பயணம் போகிறேன்
நிலைமையுணர்ந்து மனமும் மாறினேன்

இயேசுவைத் தேடிடுவாய் மனமே

இயேசுவைத் தேடிடுவாய் மனமே
இயேசுவைத் தேடிடுவாய்
பாவத்தின் பிடியினின்று உன்னை
மீட்டெடுக்கும் தேவன் – அந்த தூயனாம் இயேசு

ஆவியானவர் எங்கு உண்டோ – அங்கு
விடுதலை உனக்கு உண்டு
ஆவியானவர் எங்கு உண்டோ – அங்கு
விடுதலை உனக்கு உண்டு
பாவியாகி நீ மரிப்பதினாலே
உனக்கென்ன சுகமுண்டு
பாவியாகி நீ மரிப்பதினாலே
உனக்கென்ன சுகமுண்டு

இயேசுவைத் தேடிடுவாய் மனமே
இயேசுவைத் தேடிடுவாய்

ஒரே ஒருதரம் மரிப்பதும் – பின்பு
நியாயத்தீர்ப்பினை அடைவதுமே
ஒரே ஒருதரம் மரிப்பதும் – பின்பு
நியாயத்தீர்ப்பினை அடைவதுமே
மனிதனுக்கென்றே வேதத்தில்
நியமிக்கப்பட்டே இருப்பதையுணர்ந்து
மனிதனுக்கென்றே வேதத்தில்
நியமிக்கப்பட்டே இருப்பதையுணர்ந்து

இயேசுவைத் தேடிடுவாய் மனமே
இயேசுவைத் தேடிடுவாய்

இயேசுவின்றி ஒரு தெய்வத்தினாலும்
இரட்சிப்புக் கிடைக்காது
இயேசுவின்றி ஒரு தெய்வத்தினாலும்
இரட்சிப்புக் கிடைக்காது
அவர் வார்த்தையை நம்பியே மனந்திரும்பு
மன்னிப்பு உனக்கு உண்டு
அவர் வார்த்தையை நம்பியே மனந்திரும்பு
மன்னிப்பு உனக்கு உண்டு

இயேசுவைத் தேடிடுவாய் மனமே
இயேசுவைத் தேடிடுவாய்

இயேசுவைத் தேடிடுவாய் மனமே
இயேசுவைத் தேடிடுவாய்

இயேசுவே !….ஊழியத்துக்காய் என்னை

இயேசுவே !….
ஊழியத்துக்காய் என்னை ஒப்படைக்கின்றேன் – இனி
ஜீவிக்கின்ற நாட்கள் எல்லாம் உமது
ஜீவிக்கின்ற நாட்கள் எல்லாம் உமது

வாலிபத்தில் எந்தன் நாட்களெல்லாம் – ஒரு
கேலிக் கூத்தைப் போலே ஆகிவிட்டதே
வாலிபத்தில் எந்தன் நாட்களெல்லாம் – ஒரு
கேலிக் கூத்தைப் போலே ஆகிவிட்டதே
 உமது ஜீவனுள்ள வார்த்தையினால் மீட்கப்பட்டதும்
என் நெஞ்சமேல்லாம் உந்தனையே தேடுதய்யா
உமது ஜீவனுள்ள வார்த்தையினால் மீட்கப்பட்டதும்
என் நெஞ்சமேல்லாம் உந்தனையே தேடுதய்யா

எங்களுக்காய் பாவந்தனை சுமந்துகொண்டு
நீர் பட்டதுயர் எந்நெஞ்சத்தையே வாட்டுதய்யா
எங்களுக்காய் பாவந்தனை சுமந்துகொண்டு
நீர் பட்டதுயர் எந்நெஞ்சத்தையே வாட்டுதய்யா
இனிக் கொஞ்ச நேரம் கூட வீணாக்கிடாமல்
உமது சந்தோஷத்தை மக்களுக்கு இசைத்திடுவேன்
இனிக் கொஞ்ச நேரம் கூட வீணாக்கிடாமல்
உமது சந்தோஷத்தை மக்களுக்கு இசைத்திடுவேன்

எம்மையெல்லாம் மீட்டெடுத்த கன்மலையே
உம்மை நன்றியுடன் ஸ்தோத்தரித்து துதித்திடுவோம்
எம்மையெல்லாம் மீட்டெடுத்த கன்மலையே
உம்மை நன்றியுடன் ஸ்தோத்தரித்து துதித்திடுவோம்
தந்துவிடும் பரிசுத்த வல்லமையை
அந்தத் தாலந்துகளால் உம்மை மகிமை செய்வோம்
தந்துவிடும் பரிசுத்த வல்லமையை
அந்தத் தாலந்துகளால் உம்மை மகிமை செய்வோம்

கல்லான இதயத்தை மெழுகாக்கி

கல்லான இதயத்தை மெழுகாக்கி – அதில்
ஞான ஒளி ஏற்றியெங்கள் இருள் நீக்கினீர்
கல்லான இதயத்தை மெழுகாக்கி – அதில்
ஞான ஒளி ஏற்றியெங்கள் இருள் நீக்கினீர்
பொல்லாத நினைவுகளைப் பொடியாக்கியே
உமது போதனையினால் எம்மைத் தெளிவாக்கினீர்
பொல்லாத நினைவுகளைப் பொடியாக்கியே
உமது போதனையினால் எம்மைத் தெளிவாக்கினீர்

தேவனே எங்கள் இயேசுவே
இயேசுவே  எங்கள் மேய்ப்பரே
தேவனே எங்கள் இயேசுவே
இயேசுவே  எங்கள் மேய்ப்பரே

அற்புதமாய் எம்மை உருவாக்கியே – உமது
ஆவியினைத் தந்தெமக்கு உயிரூட்டினீர்
அற்புதமாய் எம்மை உருவாக்கியே – உமது
ஆவியினைத் தந்தெமக்கு உயிரூட்டினீர்
கற்பனையினால் எம்மைக் களிப்பூட்டியே
நல்ல கர்த்தர் என்றே எமக்கு வழிகாட்டினார்
கற்பனையினால் எம்மைக் களிப்பூட்டியே
நல்ல கர்த்தர் என்றே எமக்கு வழிகாட்டினார்

தேவனே எங்கள் இயேசுவே
இயேசுவே  எங்கள் மேய்ப்பரே
தேவனே எங்கள் இயேசுவே
இயேசுவே  எங்கள் மேய்ப்பரே

பொல்லாத மனிதரைப் புனிதராக்கியே – நல்ல
சித்தமுடன் இரத்தத்தால் சுத்தமாக்கினீர்
பொல்லாத மனிதரைப் புனிதராக்கியே – நல்ல
சித்தமுடன் இரத்தத்தால் சுத்தமாக்கினீர்
குஷ்டம் வந்த ரோகியரைக் குணமாக்கியே
எந்தக் கஷ்டத்திலும் எங்களுக்கு பலமூட்டினீர்
குஷ்டம் வந்த ரோகியரைக் குணமாக்கியே
எந்தக் கஷ்டத்திலும் எங்களுக்கு பலமூட்டினீர்

தேவனே எங்கள் இயேசுவே
இயேசுவே  எங்கள் மேய்ப்பரே
தேவனே எங்கள் இயேசுவே
இயேசுவே  எங்கள் மேய்ப்பரே

கடலலையும் இரைகிறது இயேசு

கடலலையும் இரைகிறது இயேசு என்று தான்
அந்தக் காற்றுங்கூட வீசுவது இயேசு என்று தான்
கடலலையும் இரைகிறது இயேசு என்று தான்
அந்தக் காற்றுங்கூட வீசுவது இயேசு என்று தான்
மழையும் கூட பொழிகிறது இயேசு என்று தான்
மழையும் கூட பொழிகிறது இயேசு என்று தான்
இந்த மண்ணும் கூட சுழருவது இயேசு என்று தான்
இந்த மண்ணும் கூட சுழருவது இயேசு என்று தான்
கடலலையும் இரைகிறது இயேசு என்று தான்
அந்தக் காற்றுங்கூட வீசுவது இயேசு என்று தான்

மேகங்களும் ஓடுவது இயேசு என்று தான்
மேகங்களும் ஓடுவது இயேசு என்று தான்
மூங்கிலிலே வரும் இசையும் இயேசு என்று தான்
அந்த மூங்கிலிலே வரும் இசையும் இயேசு என்று தான்
மனமும் கூட துள்ளுவது இயேசு என்று தான்
மலரும் கூட அசைகிறது இயேசு என்று தான்
இந்த மலரும் கூட அசைகிறது இயேசு என்று தான்
கடலலையும் இரைகிறது இயேசு என்று தான்
அந்தக் காற்றுங்கூட வீசுவது இயேசு என்று தான்

உயிரினங்கள் வாழுவதும் இயேசு என்று தான்
உயிரினங்கள் வாழுவதும் இயேசு என்று தான்
பயிரும் கூட வளருவது இயேசு என்று தான்
அந்த பயிரும் கூட வளருவது இயேசு என்று தான்
நிலவு கூடத் தவளுவது இயேசு என்று தான்
இந்த நிலவு கூடத் தவளுவது இயேசு என்று தான்
மின்னல் கூட மின்னுவதும் இயேசு என்று தான்
இந்த மின்னல் கூட மின்னுவதும் இயேசு என்று தான்

கடலலையும் இரைகிறது இயேசு என்று தான்
அந்தக் காற்றுங்கூட வீசுவது இயேசு என்று தான்
கடலலையும் இரைகிறது இயேசு என்று தான்
அந்தக் காற்றுங்கூட வீசுவது இயேசு என்று தான்

உத்தமமான தெய்வம் – இயேசு

உத்தமமான தெய்வம் – இயேசு
உன்னதத்திலும் தெய்வம்
உத்தமமான தெய்வம் – இயேசு
உன்னதத்திலும் தெய்வம்
சத்தியமான தெய்வம் – சங்கடம்
காப்பதிலும் தெய்வம்
உத்தமமான தெய்வம் – இயேசு
உன்னதத்திலும் தெய்வம்

நித்தியமான தெய்வம் – நெஞ்சினில்
வாழுகின்ற தெய்வம்
நித்தியமான தெய்வம் – நெஞ்சினில்
வாழுகின்ற தெய்வம்
பத்திய வார்த்தையினால் – எங்களை
பாது காக்கும் தெய்வம்
பத்திய வார்த்தையினால் – எங்களை
பாது காக்கும் தெய்வம்

உத்தமமான தெய்வம் – இயேசு
உன்னதத்திலும் தெய்வம்

சிலுவையைச் சுமந்து வந்த – பாவச்
சிறையினை மீட்ட தெய்வம்
சிலுவையைச் சுமந்து வந்த – பாவச்
சிறையினை மீட்ட தெய்வம்
சீர் கெட்ட மானிடர்காய் – தன்னையே
ஒப்புக் கொடுத்த தெய்வம்
சீர் கெட்ட மானிடர்காய் – தன்னையே
ஒப்புக் கொடுத்த தெய்வம்

உத்தமமான தெய்வம் – இயேசு
உன்னதத்திலும் தெய்வம்

பரிசுத்த வார்த்தை தந்தே – எம்மை
மீட்க வந்த தெய்வம்
பரிசுத்த வார்த்தை தந்தே – எம்மை
மீட்க வந்த தெய்வம்
அசுத்த ஆவிகளை எம்மைவிட்டு
அகற்ற வந்த தெய்வம்
அசுத்த ஆவிகளை எம்மைவிட்டு
அகற்ற வந்த தெய்வம்

உத்தமமான தெய்வம் – இயேசு
உன்னதத்திலும் தெய்வம்

என் தேவனே என் தேவனே

என் தேவனே என் தேவனே
வந்தே எம்மைத் தடுத்தாளுமே
காலங்களை நாம் வீணாக்கினோம்
கர்த்தாவே இன்று உமை நோக்கினோம்
காலங்களை நாம் வீணாக்கினோம்
கர்த்தாவே இன்று உமை நோக்கினோம்
என் தேவனே என் தேவனே
வந்தே எம்மைத் தடுத்தாளுமே

கண்ணீருடன் இன்று கை கூப்பினோம்
எம் இயேசுவே கடைக் கண் பாருமே
கண்ணீருடன் இன்று கை கூப்பினோம்
எம் இயேசுவே கடைக் கண் பாருமே
செந்நீரையே எமக்காகச் சிந்த
செந்நீரையே எமக்காகச் சிந்த
நீர் வந்தீரென்றே விசுவாசிக்கின்றோம்
நீர் வந்தீரென்றே விசுவாசிக்கின்றோம்

என் தேவனே என் தேவனே
வந்தே எம்மைத் தடுத்தாளுமே

பாவங்களை அன்று நீர் சுமந்ததால்
பலி பீடங்களில் இன்று செந்நீர் இல்லை
பாவங்களை அன்று நீர் சுமந்ததால்
பலி பீடங்களில் இன்று செந்நீர் இல்லை
கலி காலங்களால் இன்று கண் மூடினோம்
கலி காலங்களால் இன்று கண் மூடினோம்
என் ஜீவனே மீண்டும் வரவேண்டுமே
என் ஜீவனே மீண்டும் வரவேண்டுமே

என் தேவனே என் தேவனே
வந்தே எம்மைத் தடுத்தாளுமே

வேதங்களில் என்றும் உம் நாமமே
ஜீவ நாதங்களும் உம் புகழ் பாடுமே
வேதங்களில் என்றும் உம் நாமமே
ஜீவ நாதங்களும் உம் புகழ் பாடுமே
பாவங்களும் இன்று பறந்தோடுமே
பாவங்களும் இன்று பறந்தோடுமே
வந்து வரம் தாருமே எம் நேசரே
வந்து வரம் தாருமே எம் நேசரே

என் தேவனே என் தேவனே
வந்தே எம்மைத் தடுத்தாளுமே
காலங்களை நாம் வீணாக்கினோம்
கர்த்தாவே இன்று உமை நோக்கினோம்
காலங்களை நாம் வீணாக்கினோம்
கர்த்தாவே இன்று உமை நோக்கினோம்
என் தேவனே என் தேவனே
வந்தே எம்மைத் தடுத்தாளுமே

Popular Posts

My Favorites

நான் தேவனுக்குப் பயப்படுகிறேன்

மார்ச் 30 "நான் தேவனுக்குப் பயப்படுகிறேன்." ஆதி. 42:18 இந்த வார்த்தைகளை யோசேப்பு, தன் சகோதரரைப் பார்த்துச் சொன்னான். தன் தகப்பனுக்குப் போஜன பதார்த்தங்களை அனுப்பும்போது இப்படிச் சொன்னான்;. கிpறஸ்தவ மார்க்கத்திற்கு விரோதமாக நடக்க நாம்...