நல்ல நேரம் வந்து அழைத்தது
என்னைத் தேவனோடு இணைத்தது
நல்ல நேரம் வந்து அழைத்தது
என்னைத் தேவனோடு இணைத்தது
உள்ளம் தூய்மையோடு சிரித்தது
ஊமைக் கோபம் ஓடி மறைந்தது
உள்ளம் தூய்மையோடு சிரித்தது
ஊமைக் கோபம் ஓடி மறைந்தது
நல்ல நேரம் வந்து அழைத்தது….
தினம் இயேசு பாதம் நினைத்தது
மனம் மாறி நெஞ்சம் துதிக்குது
தினம் இயேசு பாதம் நினைத்தது
மனம் மாறி நெஞ்சம் துதிக்குது
நெஞ்சில் பாவம் ஓடி மறைந்தது
கர்த்தர் வார்த்தை நெஞ்சில் பதிந்தது
நெஞ்சில் பாவம் ஓடி மறைந்தது
கர்த்தர் வார்த்தை நெஞ்சில் பதிந்தது
நல்ல நேரம் வந்து அழைத்தது….
வார்த்தை தேவனாக இருந்தது
ஜீவ நாதமாக ஒலித்தது
வார்த்தை தேவனாக இருந்தது
ஜீவ நாதமாக ஒலித்தது
வானம் பூமி மாறிப் போனாலும்
தேவன் வார்த்தை என்றும் மாறாது
வானம் பூமி மாறிப் போனாலும்
தேவன் வார்த்தை என்றும் மாறாது
நல்ல நேரம் வந்து அழைத்தது….
அருள் வேதநூலைப் படித்திடு
இருள் நீங்கி ஞானம் அடைந்திடு
அருள் வேதநூலைப் படித்திடு
இருள் நீங்கி ஞானம் அடைந்திடு
கனிவோடு பேசும் மொழியிது
பணிவோடு தேடும் வழியிது
கனிவோடு பேசும் மொழியிது
பணிவோடு தேடும் வழியிது
நல்ல நேரம் வந்து அழைத்தது….
என்னைத் தேவனோடு இணைத்தது