முள்மூடி முடி சுமந்து
நீர் முதுகில் சிலுவைகொண்டு
கல்வாரி மலைமீது
நீர் தள்ளாடி நடந்தது ஏன்
பொல்லாத மானிடரை
நீர் இரட்சிக்க வந்தீரோ
பொல்லாத மானிடரை
நீர் இரட்சிக்க வந்தீரோ
கர்த்தாவே கதறுகின்றேன்
அந்தக் காட்சியை நினைக்கின்றேன்
கல்லான இதயங்களில்
கண்ணீர் வந்திடவில்லை ஐயா
இங்கு கல்லான இதயங்களில்
கண்ணீர் வந்திடவில்லை ஐயா
கண்கெட்ட குருடர்களும்
உமது கைதொட்டு சுத்தமாகினார்
குஷ்டம் வந்த ரோகிகளும்
உமது கைதொட்டு சுத்தமாகினார்
செத்தவரும் எழுந்திருந்து
தேவா உன் சத்தத்தைக் கேட்டனரே
அன்று செத்தவரும் எழுந்திருந்து
தேவா உன் சத்தத்தைக் கேட்டனரே
அத்தனையும் செய்த உம்மை
பின்பு சித்ரவதை செய்தது
ஏன் கர்த்தாவே கதறுகிறேன்
அந்தக் காட்சியை நினைக்கின்றேன்
கல்லடியும் கசையடியும்
வாய்ச் சொல்லடியும் ஏற்றது ஏன்
ஐயா உம் கண்ணான பிள்ளைகளுக்காய்
இவற்றைத் தாங்கித் தவித்தீரோ
இன்னும் நாம் உணரவில்லை
மண்ணில் நீதியும் நிலைக்கவில்லை