Home பாடல்கள் செந்நீர் சிந்திடும் சிலுவை முன்னே

செந்நீர் சிந்திடும் சிலுவை முன்னே

செந்நீர் சிந்திடும் சிலுவை முன்னே
வந்து கண்ணீரைக் காணிக்கையாக்கிடுவேன்
மன்னிப்புத் தந்திடும் என் தேவனே
உம் மந்தையில் சேர்த்திடும் என் இயேசுவே

பாவத்தை உணர்த்திய பரிசுத்தரே-என்
பாரத்தை உம்மிடம் தந்துவிட்டேன்
ஞானத்தைத் தந்தென்னை ஆண்டுகொள்ள
என் நாதனே உம்மிடம் வந்துவிட்டேன்

செந்நீர் சிந்திடும் சிலுவை முன்னே
வந்து கண்ணீரைக் காணிக்கையாக்கிடுவேன்
மன்னிப்புத் தந்திடும் என் தேவனே
உம் மந்தையில் சேர்த்திடும் என் இயேசுவே

ஆதியில் வார்த்தையாய் ஆகி வந்து
எம்மை ஆட்கொண்ட தேவனும் நீரல்லவோ
நீதியின் பாதையில் எமை நடத்தி தினம்
காத்திடும் மேய்ப்பனும் நீரல்லவோ

செந்நீர் சிந்திடும் சிலுவை முன்னே
வந்து கண்ணீரைக் காணிக்கையாக்கிடுவேன்
மன்னிப்புத் தந்திடும் என் தேவனே
உம் மந்தையில் சேர்த்திடும் என் இயேசுவே