Home பாடல்கள் அளவிட முடியா அன்பாலே

அளவிட முடியா அன்பாலே

அளவிட முடியா அன்பாலே
ஆண்டவரே எம்மை அழைத்தீரே
இகமதில் பாவங்கள் பறந்தோட
இயேசுவாய் மண்ணில் பிறந்தீரே

அல்லேலூயா தேவனுக்கே
அல்லேலூயா ராஜனுக்கே

பிறவியில் நாமும் பாவியன்றோ எம்
பிழைதனை நீரும் பொறுப்பீரே
பிறவியில் நாமும் பாவியன்றோ எம்
பிழைதனை நீரும் பொறுப்பீரே

பாவமில்லாத ஒரு உடல் எடுத்து எங்கள்
பாலகன் இயேசுவாய் வந்தவரே
பாவமில்லாத ஒரு உடல் எடுத்து எங்கள்
பாலகன் இயேசுவாய் வந்தவரே

அல்லேலூயா தேவனுக்கே
அல்லேலூயா ராஜனுக்கே

நீதியின் தேவன் நீரன்றோ வழி
மாறிடும் நமக்கிங்கு ஆயனன்றோ
நீதியின் தேவன் நீரன்றோ வழி
மாறிடும் நமக்கிங்கு ஆயனன்றோ
தூயவரே உம் கருணையினை நாம்
துதிக்கின்ற வரம்தனைத் தந்துவிடும்
தூயவரே உம் கருணையினை நாம்
துதிக்கின்ற வரம்தனைத் தந்துவிடும்

அல்லேலூயா தேவனுக்கே
அல்லேலூயா ராஜனுக்கே

எமக்காய் மரித்த தேவனல்லோ  நீர்
நமக்காய் உயிர்த்த தெய்வமல்லோ
எமக்காய் மரித்த தேவனல்லோ  நீர்
நமக்காய் உயிர்த்த தெய்வமல்லோ
பிறர்க்காய் வாழ்ந்திடு என்றவரே நல்ல
பேரின்பப் போதனை தந்தவரே
பிறர்க்காய் வாழ்ந்திடு என்றவரே நல்ல
பேரின்பப் போதனை தந்தவரே

அல்லேலூயா தேவனுக்கே
அல்லேலூயா ராஜனுக்கே