தெய்வம் மீண்டும் திரும்பி வரும்
நாம் செய்கின்ற தீமைக்கு முடிவு தரும்
தெய்வம் மீண்டும் திரும்பி வரும்
நாம் செய்கின்ற தீமைக்கு முடிவு தரும்
வல்லமை கொண்டவர் வருகையிலே
இங்கு நன்மைகள் நடப்பது சத்தியமே
நால் வகை வேதமும் பொருள் கூறும்
இயேசு நாதனின் மகிமையே அதில் சேரும்
வானமும் பூமியும் உறங்கி விடும் தேவன்
வார்த்தையே ஜீவனாய் இறங்கி வரும்
தெய்வம் மீண்டும் திரும்பி வரும்
நாம் செய்கின்ற தீமைக்கு முடிவு தரும்
தேடிய செல்வங்கள் அழிந்து விடும்
தேவனை நாடிய உள்ளங்கள் உயிர்;த்து விடும்
இயேசுவின் வருகையில் இவை நடக்கும்
வேதம் சொல்லிய வார்த்தைகள் பலித்து விடும்
தெய்வம் மீண்டும் திரும்பி வரும்
நாம் செய்கின்ற தீமைக்கு முடிவு தரும்
நிட்சயம் கர்த்தரின் வருகை வரும்
உன் நித்திய வாழ்வுக்கு பதிலும் தரும்
பத்துக் கற்பனை வழிகளில் கருணை வரும்
நம் அப்பனின் சத்தியம் நிலைத்து விடும்
தெய்வம் மீண்டும் திரும்பி வரும்
நாம் செய்கின்ற தீமைக்கு முடிவு தரும்
தெய்வம் மீண்டும் திரும்பி வரும்
நாம் செய்கின்ற தீமைக்கு முடிவு தரும்
வல்லமை கொண்டவர் வருகையிலே
இங்கு நன்மைகள் நடப்பது சத்தியமே