பேரின்பக் கன்மலையே என்னை
வாரி அணைத்துக் கொள்ளும்
பேரின்பக் கன்மலையே என்னை
வாரி அணைத்துக் கொள்ளும்
யாரையும் நம்பி விடேன் இந்த
நானில மீதினிலே
யாரையும் நம்பி விடேன் இந்த
நானில மீதினிலே
வேறு துணை இல்லையே
இளைப் பாறுதலைத் தாரும்
வேறு துணை இல்லையே
இளைப் பாறுதலைத் தாரும்
பேரின்பக் கன்மலையே என்னை
வாரி அணைத்துக் கொள்ளும்
தேசத்தை விட்டு வந்தேன் பிள்ளைப்
பாசத்தையும் பிரிந்தேன்
நேசத்தைத் தந்து என்னை இங்கு
மீட்டவரே வாரும்
ஆயனே இங்கு வந்து என்னை
ஆதரித்துக் கொள்ளும்
பேரின்பக் கன்மலையே என்னை
வாரி அணைத்துக் கொள்ளும்
வேதத்தில் மனம் லயித்தேன் உமது
போதனையில் திளைத்தேன்
என் மகனே என்று என்னை நீர்
கூப்பிட்ட குரல் கேட்டேன்
அந்நியன் என்றே என்னை கணமும்
தள்ளி விடாதேயும்
பேரின்பக் கன்மலையே என்னை
வாரி அணைத்துக் கொள்ளும்
அந்தி பகல் மறையும் அப்பா உன்
ஆறுதல் மறைந்திடுமோ
மந்திர மாயமெல்லாம் உமது
மலரடி கண்டிடுமோ
ஐயனே அழைக்கின்றேன் என்
அருகினில் வாருமையா
பேரின்பக் கன்மலையே என்னை
வாரி அணைத்துக் கொள்ளும்
பேரின்பக் கன்மலையே என்னை
வாரி அணைத்துக் கொள்ளும்
பேரின்பக் கன்மலையே …